
கணிணி தொழில் நுட்பத்தை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துவர்கள் பலர், அதில் அண்ணன் பாலு மணிமாறன் குறிப்பிடத் தக்கவர். புலம்பெயரும் தமிழர்கள் தமிழை தாய்மொழியாக எடுத்துச் சென்று பின்னர் பெற்றோர்களைப் போலவும், பெற்றக் குழந்தையைப் போலவும் பேணி காத்து, சீராட்டுவதால் குறிப்பிட்ட பலநாடுகளில் தமிழ் வளர்ச்சி கண்டுள்ளது, தேசிய அடையாள மொழியாகவும் வளர்ந்துள்ளது. தன் சிந்தனைகள் தோறும் தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதாக முயற்சி எடுப்போர் பலர், அண்ணன் பாலு மணி மாறன் சிங்கப்பூர் வந்த நாட்களாக தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை அமைத்தும், பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூல்களாகப் பதித்தும் கிட்ட தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சேவை ஆற்றிவருகிறார். இவரை நன்கு அறிந்திடாத சிங்கப்பூர் மலேசியா வாழ் எழுத்தாளர்களே இல்லை என்னும் சொல்லும் அளவுக்கு அனைவரிடமும் நல்ல செல்வாக்குப் பெற்றவர்.


சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய எழுத்துச் சேவைகள் பெரும்பாலும் தாள் (பேப்பர்) சார்ந்த திங்கள் (மாத), கிழமை(வார), நாள் வெளியிடுகளாகவே இருக்கிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்காவிட்டால் எழுத்துக்கள் பரவலான தமிழர்களை சென்று அடைய தடை என்னும் நிலை தான் உள்ளன. இன்றைய நாட்களில் கணிணி புழக்கம் பெருவாரியான தமிழர்கள் இடையே இருக்கின்ற காரணத்தில் தமிழ் இலக்கியத்தை கணிணி


நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கும் தமிழார்வளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மலர்விழி அவர்களால் திரையிசைப் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சி தங்கமீன் பற்றிய அறிமுக நிகழ்வென்றாலும் வாழ்த்திப் பேசவந்தவர்களின் நகைச்சுவைக்கும் இலக்கியச் சுவைக்கும் குறைவில்லாமல் இருந்தது. நிகழ்ச்சியின் நிறைவு மதிய வேலை என்பதால் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் சிறப்பு.
தங்க மீன் :
தங்கமீனை தற்போது திங்கள் (மாத) தொகுப்புகளாக துவங்கி இருக்கிறார், இருந்தாலும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய இலக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது அறிவிப்புகளில் வெளி இடுவதாக குறிப்பிட்டார். பின்னர் பயனர்களைப் பொருத்து திங்கள் இருமுறை அல்லது கிழமை (வார) இதழாக தொகுக்கப் போவதாகவும்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கமீனில் சர்சைப் புக்ழ் திரு சாரு நிவேதிதா மற்றும் திரு மாலன் ஆகியோய் கட்டுரைகள் எழுதித் தொடர்வதாகப் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் மலேசிய இலக்கிய ஆர்வளர்களின் கதை கவிதை மற்றும் கட்டுரைகள் இடம் பெறுவது போலவே தமிழகம் மற்றும் உலகத் தமிழ் ஆர்வலர்களின் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தங்கமீன் சார்பற்ற தகவல் மற்றும் இலக்கிய ஊடகமாகத் திகழும். சிங்கப்பூரில் இருந்து பல்வேறு தமிழ் சார்ந்த இணைய தளங்கள், வலைப்பதிவு திரட்டிகள் மற்றும் வலைப்பதிவுகள் இயங்கி வந்தாலும் முழுமையானதொரு இணைய இதழாக தங்கமீன் தவழ்ந்து வருவது இது தான் முதல் முறை. தங்கள் இலக்கிய கதை, கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை கள், நிகழ்வுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா மேலும் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் இணைய எழுத்தார்வளர்கள் தங்கமீனில் வெளியிட ஆக்கங்களை அனுப்பலாம்.
6 கருத்துகள்:
வாழ்த்துகள்
இனி தங்களின் எழுத்துகளை தங்கமீனிலும் இரசிக்கலாம் ...
தங்க மீனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாலு.மணிமாறன் சார் ....
வாழ்த்துகள்
நல்லதோர் அறிமுகம்.
தங்க மீனுக்கு வாழ்த்துகள்
அன்புடன்
சிங்கை நாதன்
தங்கமீனுக்கு வாழ்த்துகள்...
கருத்துரையிடுக