பின்பற்றுபவர்கள்

21 மே, 2008

சென்னை சந்திப்பு சுவையார்வ தகவல்களுடன் சற்றுவிரிவாக.....

மே 18 ஆம் தேதி மாலை 5.10க்கு நான் எனது நண்பரின் காரில் சென்னை மெரீனா கடற்கரையை அடைந்த போது....காந்தி சிலைக்கு சற்று தொலைவில் கானா உலகநாதனின் நேரடியாக கலந்து கொண்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு கடற்கரை முகாம் நடந்து கொண்டிருந்தது...அதன் அருகில் காரை நிறுத்தினோம். பிறகு காந்தி சிலை நோக்கி வந்தோம்... பாலபாரதியும் லக்கி லுக்கும் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தனர்....அருகில் சென்றதும்....பாசப்பிணைப்பில் கட்டித்தழுவிக் கொள்ள....மெதுவாகக் கேட்டேன்......'என்னய்யா ? மொகமெல்லாம் வெளிறி இருக்கு ....?' 'அண்ணே.... அங்கப்பாருங்கண்ணே போலிஸ் குவிஞ்சு இருக்கு.....நம்மளத்தான் போட்டுத்தள்ள வந்திருங்காங்கப் போல இருக்கு...ஆனா எப்ப அவங்களோட டிரஸ்சை கழட்டுவாங்கன்னு தெரியல'....என்றார். 'அவங்க எதுக்கு டிரஸ்சை கழட்டனும் நம்மைத்தானே கழட்டுவாங்க ...?' வியப்புடன் கேட்டேன். அண்ணே அங்கப்பாருங்க எல்லாம் டிராபிக் போலிஸ் அந்த டிரஸ்ஸில் என்கவுண்டர் பண்ண முடியாதில்லே ? என்றார்....'உனக்கு லொள்ளாப்போச்சுய்யா...' - என்றேன். ஆமாம்...! முதல் நாள் லக்கிப்பதிவில் பின்னூட்டமாக வலைப்பதிவாளர் சந்திப்பில் கலந்து கொள்பவர்களை போலிஸ் என் கவுண்டரில் சுடப்போவதாக எச்சரிக்கை வந்ததாம். யாரோ கிரைம் ப்ராஞ்சில் வேலைப்பார்க்கும் நல்லுள்ளம் தான் அந்த தகவல் அனுப்பி இருக்கவேண்டும். அடப்பாவிகளா குருவி விமர்சனம் மோசமாக இருந்ததை போட்டுத் தாக்கி எழுதியது தவிர்த்து ஒரு குருவிக்கூட துரோகம் நினச்சதில்லையே.... நமக்கு என்கவுண்டரா ? இது எதோ வெளிநாட்டு சதியாக இருக்கும் மறந்துடுவோம்....என்று சொல்லிவிட்டு காந்தி சிலை அருகில் வந்தோம்....'தல இந்தவாரம் எல்லோரும் ஊருக்கு போய்டாங்க.....அனேகமாக நாம 3 பேர்தான் சந்திப்பு நடத்துவோம் போல இருக்கு.....டோண்டு சார் வந்தால் தான் கே ஆர் அதியமான் வருவாராம்...என்று லக்கி சொல்லிவிட்டு.... போனில் அவர் பெயர் குறிப்பிடாமல் வாழ்த்துச் சொன்னதாக பதிவில் எழுதிடுவோம் என்றார் லக்கி.....அதன் பிறகு லிவிங் ஸ்மைல் வரப்போகும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். நீண்ட நாளாக நான் ஆவலுடன் சந்திக்க நினைத்திருந்தவர்களில் அவரும் ஒருவர் என்பதால் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சந்திப்புக்கு எங்கள் மூவரைத்தவிர்த்து முதலில் வந்தவர் முரளிகண்ணன். அவரவர் (பரஸ்பரம்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே லிவிங் ஸ்மைல் வந்தார். லிவிங் ஸ்மைலை நானும் புன்னகையால் வரவேற்று அவரருகில் அமர்ந்து கொண்டேன்....அன்பாக என்னைப்பற்றி குடும்பம், வேலை எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்து கொண்டார். எங்கள் ஊர் நாகப்பட்டினத்திற்கு வந்திருக்கிறேன் என்றார். ஒரு விழிப்புணர்வு திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றுகிறாராம். ஒரு சமூக போராளியாக இருந்தாலும்...அதற்குரிய எந்த முகபாவமும் இல்லாதாது மிக இயலபாக நம் வீட்டில் இருக்கும் ஒரு தங்கையைப் போலவே இருந்தார்.

அடுத்து நமது இராமகி ஐயா வந்தார்.....அவர் எழுத்துக்களை வாசித்து தான், நான் தூய தமிழில் எழுதுவதற்கான ஆர்வம் கொண்டிருந்தேன் என்பதால்....ஒரு ஆசானை நேரில் சந்தித்த மகிழ்ச்சிகிடைத்தது. அதன் பிறகு டாக்டர் புரூனோ வர, பின்னர் கேஆர் அதியமானும்... அவரைத்தொடர்ந்த சற்றும் எதிர்பாராவிதமாக திரு டோண்டு இராகவனும் வந்தார்கள். திரு டோண்டு இராகவனுக்கு பலரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். இவர்தான் கோவி.கண்ணன் என்று பாலபாரதி சொல்ல முகமலர்ச்சியுடன் கட்டியணைத்து நட்பு பாராட்டினார் திரு டோண்டு. 'உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிறேன்' என்றார்.

பின்னர் கேஆர் அதியமான் என்னிடம் நேரில் பார்பதற்கு இளமையாக இருக்கீறீர்கள் என்றார். பின்னர் ஜோதிடம் பற்றி பேசினார். எனது பிறந்தநாள் பற்றிக் கேட்டார். சொல்ல அவருக்கு வியப்பு. அவருக்கும் எனக்கும் ஒரே நாளில் பிறந்த நாள், ஆனால் என்னைவிட ஒருவயது சிறியவர். எனது சாதகத்தில் இருந்த கட்டங்களையெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தேன். உங்க சாதப்படி எதோ ஒரு மகாயோக ( புதன்?) படி நான் வெளிநாடு சென்றதாகவும். அது இல்லாதாவர்களுக்கு வாய்ப்புகிடைக்காது என்றார். அந்த காலத்தில் கைதிகளாக பலர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே விடப்பட்டனர். ஆஸ்திரேலியாவே கைதிகளால் உருவாயிற்று...அவர்களுக்கு அந்த யோகமெல்லாம் இருந்திருக்கலாம் ?என்றேன். இருக்கலாம் என்றார். நன்கு அறிமுகமான நண்பரைப் போன்ற உணர்வில் அவருடன் சில மொக்கைகளை போட்டுக் கொண்டிருக்கும் போதே தருமி ஐயா வந்தார். அவரை சென்னையில் சந்திக்க முடியாவிட்டாலும் மதுரை சென்றாவது சந்திக்க நினைத்திருந்தேன். அவர் சென்னையில் இருப்பதை முன்பே தெரிவித்திருந்தார். ஆனாலும் சந்திப்புக்கு வருவார் என்று நினைத்திருக்கவில்லை. அவர் வந்ததும் இராமகி ஐயா வந்ததைப் போலவே இன்ப அதிர்ச்சிதான்

அதன்பிறகு ஜ்யோவ்ராம் சுந்தர்...வளர்மதி ஆகியோர் வந்தார்கள். சற்றும் புரியாதமாதிரி எழுதினாலும் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடியவர்களே என்று நேரில் பார்க்கும் போது புரிந்தது. வளர்மதி சிறுவயதுக் காரர். ஜ்யோவ்ராம் சுந்தர் சற்று வயதுக்கு மீறிய தோற்றத்தில் இருந்தார். நேற்றியில் பெரிய குங்குமம் பொட்டு வைத்தால் பக்திப்பழமாக தெரிவது போன்ற தோற்றம். மிகவும் கலகலப்பான மனிதர். இவரும் வளர்மதியும் டிபிசிடிக்கு நண்பர்கள்.

டாக்டர் ப்ரூனோ பார்பதற்கு படு ஸ்மார்ட்...அடுத்து மருத்துவ வேடம் போடப்போகும் நடிகர்கள் இவரை 'இமிடேட்' செய்யலாம். அந்த அளவுக்கு தொழில் சார்ந்த தோற்றம் நடவடிக்கை பொறுமை தெரிந்த்தது. டாக்டர் ப்ரூனோ டோண்டுவிடம் எதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு டோண்டு சமீபத்தில் 1926ல் ஜெர்மனியில் என்று எதோ ஒரு சமீபகதையை சொல்ல...நேரில் சமீபகதை கேட்கும் பாக்கியம் பெற்றேன். அதைப்பற்றி டோண்டு அவர் பதிவில் எழுதி இருக்கிறார். நையாண்டி நைனா என்ற எனது பதிவர் நண்பர் டாக்டர் ப்ரூனோவை விசார்த்ததாக சொல்லச் சொன்னதை அவரிடம் சொன்னேன். அதற்கு டோண்டு 'நையாண்டி நைனா' என்ற பதிவர் நிசமாகவே இருக்காரா ? என்று கேட்டார். ஆமாம் இருக்கார்.... எனக்கு நண்பர் தான் என்றேன். 'அப்படியா நான் சும்மா கி.அ.அ.அ அனானி போல சும்மா பின்னூட்டத்துக்காக போட்டுக் கொள்ளும் பெயர் போல நினைத்துவிட்டேன்' என்று கி.அ.அ.அ அனானி ரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார். 'நீங்க எதும் தப்பா எடுத்தகலையே...உங்களிடம் எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை' என்றார். 'உங்களிடமும் எனக்கு எதும் இல்லை. எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். உங்களுக்கு தெரிந்ததை நீங்க எழுதுறிங்க..வெற என்ன விரோதம் இருக்க முடியும் ?' என்றேன். இல்லே ...'உங்களுக்கு பின்னூட்டம் போட்டால் சிலர் என்னை கலாய்கிறாங்க' என்றார். 'உங்க பதிவில் பின்னூட்டத்தில் வராத கலாய்பா...நாங்கெளெல்லாம் பெருசா எடுக்குறோமா ?' லூசில் விடுங்க என்றேன்.

மற்றொமொரு சுந்தர் இன்னும் ஒரு பதிவர் ஆகியோருடன் உரையாடினேன். இடையில் அனைவருக்கும் நா வரட்சி ஏற்பட குளிர்ந்த மினரல் பாட்டில் தண்ணீரை வாங்கிவந்து கொடுத்தேன். பிறகு சிங்கையில் இருந்தே தயாராக வாங்கிவைத்த சாக்லேட்டுகளை கொடுத்தேன். பிறகு விடைபெறும் நேரம். டோண்டு 'எனது கார்' வந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லும் போது என்னைப் பார்த்து 'எனது' என்பதை சற்று அழுத்தம் கொடுத்துச் சொல்லிவிட்டு விடைப்பெற்றார். எனக்கும் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்தின் நேரம் நெருங்கவே சுமார் 8 மணி அளவில் விடைபெற்றேன்.

பாலபாரதியும் லக்கியும் நிகழ்ச்சி முடியும் வரை சற்று டென்சனாகவே இருந்தார்கள். லக்கி அடிக்கடி கழண்டு விழும் டவுசரை இறுக்கி பிடித்தபடி நின்றார். போலிஸ் பயமா என்று தெரியவில்லை. போலிஸ் டவுசரை கழட்டுவதற்கு வசதியாக பெல்ட் அணியாமல் வந்திருந்தார். :) இடையே இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து நிகழ்ச்சியை பற்றி புகைப்படமும் நேருமுகமும் எடுத்தார்கள். உமா கண்ணன் என்ற இளம் பெண் நிருபர் பேட்டி எடுத்தார். லக்கி பாலபாரதி எனக்கு முன்னமே அறிமுகமானவர்கள் மேலும் நெருங்கியவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு நன்றி சொல்வது கூட அவர்களிடம் என்னை தொலைவாக நினைக்க வைத்துவிடும் என்பதால் தவிர்கிறேன். மற்றபடி சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் சந்தித்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வந்திருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் பல புதியவர்களுடன் சந்திப்போம்.

புகைப்படங்களும் பதிவர்களும்:












தீவிர கலந்துரையாடல்கள்

19 கருத்துகள்:

TBCD சொன்னது…

நான் இல்லாது போனேனே என்று வருத்தமாகயிருக்கிறது.

அதிரடி வீரர் கலங்கினார் என்று ஒரு வளரும் இளம் அரசியல்வியாதி..சீ சீ..அரசியல்வாதியயை இப்படி தூற்றலாமா...

ஃஃஃஃஃ

கடற்கரை காற்று என்பதால் திசை மாறி அடித்திருக்கலாம்... (சும்மா...ஒரு உள்குத்து...)

கிரி சொன்னது…

//அடப்பாவிகளா குருவி விமர்சனம் மோசமாக இருந்ததை போட்டுத் தாக்கி எழுதியது தவிர்த்து ஒரு குருவிக்கூட துரோகம் நினச்சதில்லையே.... //

ஹா ஹா ஹா

கோவிக்கண்ணன் சிங்கையிலும் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடத்துங்க ... :)

துளசி கோபால் சொன்னது…

கிரி,

சிங்கை வலைப்பதிவர் சந்திப்புகள் பலமுறை நடந்துருக்கு.

நான் வரும்போது தகவல் தருவேன்:-)))

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல கவரேஜ். மாற்று கருத்து உள்ளவர்களுடன் விவாதிக்க பதிவர் சந்திப்புகள் நல்ல களம் (அதியமான் மற்றும் டோன்டு)

Great சொன்னது…

லக்கி அன்று மடிப்பாக்கம் அவதாரத்தில் இல்லாமல் இலைக்காரன் அவதாரமாக இருந்கிருப்பார். அதனால் திம்மிகளின் அரசாங்க போலீஸைப் பார்த்து பயந்திருப்பார்.

நையாண்டி நைனா சொன்னது…

/*நையாண்டி நைனா என்ற எனது பதிவர் நண்பர் டாக்டர் ப்ரூனோவை விசார்த்ததாக சொல்லச் சொன்னதை அவரிடம் சொன்னேன். அதற்கு டோண்டு 'நையாண்டி நைனா' என்ற பதிவர் நிசமாகவே இருக்காரா ? என்று கேட்டார். ஆமாம் இருக்கார்.... எனக்கு நண்பர் தான் என்றேன். 'அப்படியா நான் சும்மா கி.அ.அ.அ அனானி போல சும்மா பின்னூட்டத்துக்காக போட்டுக் கொள்ளும் பெயர் போல நினைத்துவிட்டேன்' என்று கி.அ.அ.அ அனானி ரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார்.*/

என்னை பதிவர் வட்டத்தில் ஒரு சிறு புள்ளியாக அறிமுக படுத்திய உங்களுக்கு ( திரு. கோவி.கண்ணன்) நன்றி.
நையாண்டி செய்தே ஓட்டி விடலாம் என்று இருந்த என்னை, "காலமும்", சில "பயணங்களும்" சீரிய சிந்தனை நோக்கி இழுக்கின்றதே...

நையாண்டி நைனா சொன்னது…

மும்பையில் யாரேனும் பதிவர்கள் இருக்கிறீர்களா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

கிரி சொன்னது…

துளசி கோபால் said

/சிங்கை வலைப்பதிவர் சந்திப்புகள் பலமுறை நடந்துருக்கு.

நான் வரும்போது தகவல் தருவேன்:-)))//

நான் வலைப்பதிவு மற்றும் சிங்கப்பூர் க்கு புதியவன் அதனால் தெரியவில்லை. நீங்க வரும் போது கண்டிப்பா சொல்லுங்க மறந்துடாதீங்க.

மாயவரத்தான் சொன்னது…

//மும்பையில் யாரேனும் பதிவர்கள் இருக்கிறீர்களா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

//

அமீர்கானை கேட்கவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
நான் இல்லாது போனேனே என்று வருத்தமாகயிருக்கிறது.

அதிரடி வீரர் கலங்கினார் என்று ஒரு வளரும் இளம் அரசியல்வியாதி..சீ சீ..அரசியல்வாதியயை இப்படி தூற்றலாமா...

ஃஃஃஃஃ

கடற்கரை காற்று என்பதால் திசை மாறி அடித்திருக்கலாம்... (சும்மா...ஒரு உள்குத்து...)
//

டிபிடிசி அண்ணே,
நீ எதுக்கு வருத்தப்படுறேன்னு எனக்கு புரியலைடா.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...

ஹா ஹா ஹா

கோவிக்கண்ணன் சிங்கையிலும் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடத்துங்க ... :)
//

கிரி,

பாரி.அரசுவும், ஜெகதீசனும் இருக்காங்க ஏற்பாடு பண்ணச் சொல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
கிரி,

சிங்கை வலைப்பதிவர் சந்திப்புகள் பலமுறை நடந்துருக்கு.

நான் வரும்போது தகவல் தருவேன்:-)))

12:32 PM, May 21, 2008//

துளசி அம்மா,

வரும் முன் தகவல் கொடுங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
நல்ல கவரேஜ். மாற்று கருத்து உள்ளவர்களுடன் விவாதிக்க பதிவர் சந்திப்புகள் நல்ல களம் (அதியமான் மற்றும் டோன்டு)
//
முரளி கண்ணன்,

உங்களை முதன்முறை சந்தித்ததும் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Great said...
லக்கி அன்று மடிப்பாக்கம் அவதாரத்தில் இல்லாமல் இலைக்காரன் அவதாரமாக இருந்கிருப்பார். அதனால் திம்மிகளின் அரசாங்க போலீஸைப் பார்த்து பயந்திருப்பார்.
//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Great said...
லக்கி அன்று மடிப்பாக்கம் அவதாரத்தில் இல்லாமல் இலைக்காரன் அவதாரமாக இருந்கிருப்பார். அதனால் திம்மிகளின் அரசாங்க போலீஸைப் பார்த்து பயந்திருப்பார்.
//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// நையாண்டி நைனா said...
என்னை பதிவர் வட்டத்தில் ஒரு சிறு புள்ளியாக அறிமுக படுத்திய உங்களுக்கு ( திரு. கோவி.கண்ணன்) நன்றி.
நையாண்டி செய்தே ஓட்டி விடலாம் என்று இருந்த என்னை, "காலமும்", சில "பயணங்களும்" சீரிய சிந்தனை நோக்கி இழுக்கின்றதே...
//

நைனா,

உங்களிடம் நல்ல விவாத கட்டுரைகள் வரவேண்டும்...நிறைய பேசுகிறீர்கள் குறைவாக எழுதுகிறீர்கள்.. இனிமேல் நிறைய எழுதுங்கள்.

மும்பையில் எனக்கும் டிபிசிடி, ஜெகதீசனுக்கு 'அர்சனை' செய்யும் பதிவர் பாலச்சந்தர் என்ற பெயரில் இருக்கிறார். அவரை சந்திச்சு அவரோட 'மன' நலம் விசாரிங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயவரத்தான்... said...

அமீர்கானை கேட்கவும்
//

மாயவரத்தான் சார்,
அவருக்கு அமிதாப்பச்சனை நல்லா தெரியுமாம்.(விவேக் ஒரு படத்தில் தனக்கு ஐஜியை நல்லா தெரியும் என்பார்)

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

நைனா..

http://anbathavan.blogspot.com/

http://madhiyalagan.blogspot.com/

இவர்கள் இருவரும் மும்மபியில் இருக்கிறார்கள். ஆனால்.. தொடர்ந்து வலைப்பதிவதில்லை. என் நண்பர்களே! நமக்கு டெல்லியிலும் ஆட்கள் உண்டு! :))

புருனோ Bruno சொன்னது…

//அவர்களுக்கு அந்த யோகமெல்லாம் இருந்திருக்கலாம்//

அப்படினா அது யோகமில்லை, தோஷம்

நமக்கு உள்ளதெல்லாம் சந்தோஷமும் ஜலதோஷமும் தான் :) :) :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்