பின்பற்றுபவர்கள்

6 மே, 2008

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு...1

மே 1 தொழிலாளர் நாள் விடுமுறை, வெள்ளிக் கிழமையும் விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் கிடைக்கும், என்ன செய்யலாம் ? டிபிசிடி ஐயர் கேட்டார், "நானு, நீங்க, பாரி அரசு, ஜெகதீசன் லங்காவிக்கு போவோமா ? "திருமணம் ஆன ஆளுங்க கூட வந்தால் எதையும் அனுபவிக்க முடியாது, நான் வரவில்லை" என்று சொல்லி கன்னிப் பசங்க கழண்டு கொண்டார்கள். உண்மையிலேயே பாரி.அரசு ஐயர்தான் லங்காவி சுற்றுலா போகலாம் என்று முடிவு செய்து சுழி போட்டவராம், பின்னர் கழண்டு கொண்டார்.

நானும், டிபிசிடி ஐயரும் இல்லச் சுற்றுலாவாக செல்லலாம் என்று முடிவெடுத்தோம். கடந்த ஆறு மாதத்தில் நான்காவது முறையாக அவரை அவரது இல்லத்தினரோடு சந்திக்கும் வாய்ப்பாக அது அமைந்துவிட்டது. ஏப்ரல் 30 இரவில் 10.30 மணிக்கு மலேசியா ஜோகூரில் முன்பதிவு செய்த பேருந்து பயணத்தின் ஊடாக மே 1 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பினாங்கு சென்று சேர்ந்தோம். டிபிசிடி பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு மதியம் 12 மணி அளவில் பினாங்கு மலைக்குச் செல்ல முடிவெடுத்து (அவருடைய 'சொந்த' காரிலேயே) கிளம்பினோம். மலைக்குச் செல்ல இழுவை இரயில் டிக்கெட் மாலை 5 மணி பயணத்துக்கு கிடைத்தது. மறுநாள் வெள்ளிக் கிழமை லங்காவி செல்ல கடல் பயணத்திற்காக பெரும் படகு (பெர்ரி) பயணச்சீட்டை ( ஒரு நபருக்கு சென்று வர 105 மலேசியா வெள்ளிகள்) முன்பதிவு செய்துவிட்டு, மதிய உணவுக்காக ஜார்ஜ் டவுன் என்னும் குட்டி இந்தியா பகுதிக்கு வந்தோம். வெஜிடேரியன் உட்லண்ட்ஸ் ஹோட்டல் இருந்து, அங்கு சென்ற போது பிற்பகல் 3 மணியை தொட்டு இருந்ததால், கிடைத்த உணவை உண்டுவிட்டு, பினாங்கு மலைக்குச் சென்றோம், சென்ற உடனேயே இழுவை இரயில் கிடைத்தது, அது ஒரு 15 நிமிட பயண நேரம், இரண்டு பயணமாக பாதி தொலைவில் மாற்றுகிறார்கள். மலை உச்சிக்குச் சென்றோம். ஏற்கனவே நானும், டிபிசிடியும், மேற்சொன்ன நண்பர்களும் சென்ற இடம் தான், என் மனைவியும், மகளும் பினாங்கு மலையைப் பார்க்கவில்லை, இந்த பயணம் அவர்களுக்கு


புதிய அனுபவமாக இருந்தது. சென்ற போது மாலை 5.30 ஆகி இருந்தது. அங்கு மலையில் மரங்களுக்கு இடையே கயிற்றுப்பாலத்தில் நடக்கும் (கனோப்பி வாக்) ஒரு இடத்திற்கு சென்றோம். சென்ற முறை பயணத்தில் நேரமின்மையால் செல்ல முடியாமல் போன குறை எனக்கு தீர்ந்துவிட்டது.

மலை பள்ளத்தாக்கில் உயரமான மரங்களுக்கு கிடையே சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கயிறு மற்றும் மரப்பலகையால் குறுகிய தொங்கு பாலம் அமைத்திருந்தார்கள், அதில் ஏறி நடக்க ஆரம்பித்த உடனேயே ஊஞ்சலில் நின்று கொண்டே நடப்பது போன்று இங்கும் அங்கும் அசையும், கீழே பார்த்தால் அடிவயிறு கலங்கும் அளவுக்கு பள்ளம், கூடவே கயிறு அறுந்தால் "அம்புட்டுதான்" என்ற பயமும் சேர பாலத்தை கடந்து மீண்டு வருவது ஒருவகையான சிலிர்ப்பு அனுபவம் என்றே சொல்லலாம், அந்த ஒற்றையடி பாலத்திலும் டிபிசிடி செல்ல மகளை ஒரு கையில் வைத்துக் கொண்டு மறு கை பிடிமானத்தில் நடக்க மிகவும் கடினமாக இருந்தது, அதன் பிறகு குழந்தையை கை மாற்றிக் கொண்டோம். என் மகளும், மனைவியும் முதலில் ஏறிச் சென்று விரைவாகவே கடந்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கயிற்றுப் பாலம் சம தளத்திலும் இல்லாது மேலும் கீழும் ஏற்ற இரக்கம், பலகை சரியாக பொருத்தியும், இறுக்கம் இல்லாமல் இருந்ததால் கால்களைப் பார்த்து பார்த்தே கடக்க வேண்டி இருந்தது.

ஒருவழியாக 200 மீட்டர் தொலைவை கடந்து வந்ததும். "ஆக என்ன ஒரு அனுபவம்" என்று நினைக்க வைத்தது. "இதுக்கெல்லாம் குடும்பத்தோடு ரிஸ்க் எடுக்கனுமா " என்ற கேள்வியும் மனசுக்குள் இருந்தது. அதன் பிறகு மலை உச்சியிலேயே சிறிது இளைப்பாறிவிட்டு, கிழே இறங்க ரயில் பயணச் சீட்டு இருந்தும், வாடகை ஜீப் ( 80 மலேசிய வெள்ளிகள்) வழியாக இறங்கலாம் என முடியும் செய்தோம், மாலை மணி 7 ஆகி போதிய வெளிச்சமாக இருந்தது.

நல்ல ஒரு வழிகாட்டியாக கிடைத்த சீன ஓட்டுனரின் ஜீப்பில் ஏறி ஒரு அரை மணி நேரப்பயணமாக கீழிறங்கி, இடையில் மூதாதையரின் (குரங்குகள்) தரிசனம் செய்துவிட்டு டிபிசிடியுன் கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்து 'சோர்'ந்தோம்.

திரும்பவும் லிட்டில் இந்தியாவில் இரவு சாப்பாடு முடித்துவிட்டு, வீடுவந்து சேர்ந்து மறுநாள் லங்காவி செல்ல எல்லாவற்றையும் எடுத்துவைத்ததுடன் அன்றைய பொழுது முடிந்தது.

இன்னும் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கும் டிபிசிடி ஐயரின் இடுகை இங்கே.

கடைசி இரு படங்கள் முன்பு சென்ற போது பினாங் மலை உச்சியில் இருந்து எடுத்தவை.

லங்காவி பயணம் தொடரும்... அதில் நமீதா பற்றிய சுவையார்வமான தகவல்கள் உண்டு .

1 கருத்து:

ஜெகதீசன் சொன்னது…

//
இன்னும் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கும் டிபிசிடி ஐயரின் இடுகை இங்கே.
//
எங்கே? :P

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்