பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2009

கண்ணாமூச்சு (சிறுகதை) !

கிண்டி ரயில்வே பாலத்துக்கு முன்பாக ட்டிட்ரு.........ட்டிட்டிட்ரு ஒலியுடன் ஆட்டோவினுள் பயணித்துக் கொண்டிருந்தேன். வேகம் குறைந்தது ஆட்டோ......முன்பாக எட்டும் தொலைவுக்கு வாகனங்கள் நிறைந்து காணப்பட்டது, சாலையின் மறுபுறம் எதிர்திசையில் வாகனங்கள் விரைவாக பயணித்துக் கொண்டிருந்தன.

'என்ன எழவுடா இது.... இந்த கூட்டத்தில் எப்படி நேரத்துக்கு ப்ளைட்டைப் பிடிக்கப் போறோமோ' என்று நினைத்துக் கொண்டே..."கொஞ்சம் வேகமாகப் போப்..ப்பா"

"இன்னா சாரே...நானா போவமாட்டேன்னு சொல்றேன்....இம்மாம் ட்ராபிக் ஆகிப் போயி கிடக்குது...செத்த இரு" என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார் ஆட்டோ ஓட்டுனர்,

இருப்புக் கொள்ளாமல் மணியை அடிக்கடிப் பார்த்துக் கொண்டே..நகத்தைக் கடிக்க, சுற்றிலும் ஹாரன் சைரன் ஒலி..... புகை..பெட்ரோல் நாற்றம்.....அனைவர் முகத்திலும் எரிச்சல். திரும்பி வந்த ஆட்டோக்காரர்,

"சார்.....தந்திரன் பட சூட்டிங்காம்......ட்ராபிக் க்ளியர் ஆகாது போலருக்கு.....நான் உன்னை வேளச்சேரி வழியாக இட்னு போறேன்.....கூட ஒரு 200 போட்டுக் கொடுத்துடு"

'இதெல்லாம் கவர்மெண்டுல கேட்கவே மாட்டேங்களா...' தந்திரன் படப்பிடிப்புகாரர்களை சபித்துக் கொண்டே...

"உங்க காட்டுல தான்யா மழை....வேற வழி எப்படியோ சீக்கிரம் கொண்டு போய் விடு" என்றேன்

"இன்னா சார், நான் என்னமோ வேணுகினே ஒன்ணாண்ட துட்டு புடுங்கிற மாதிரி அலட்டிக்கிறே... எனக்கு வோணாம் சார்....எறங்கிப் போ"

'இதப்பாருடா...' என்று நொந்து கொண்டு......"சரி சரி போப்பா" என்றேன்

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து யூ டேர்ன் அடித்தவர் பெரிய சுற்றுக்கு பிறகு விமான நிலையத்தில் விட்டார். என்னைப் போலவே பலரும், பல வழிகளில் நேரம் தாழ்த்தியே வர....முனுகிக் கொண்டே விமான நிலையத்தில் அனுமதித்தார்கள்

*****

அங்கே சூட்டிங் ஸ்பாட்டில், உதவி இயக்குனர் மெதுவாக இயக்குனரிடம்

"டைரக்டர் சார்... ட்ராபிக் ஜாம்....சிஎம் கடுப்படிக்கிறாராம்....."

முகம் கருத்த இயக்குனர்

"யோவ்......இது என் வீட்டு படமாய்யா .... படம் நல்ல வரனுமா ? வேண்டாமா "

"சார் என்ன தான் இருந்தாலும், பொதுமக்கள் அவஸ்தை"

"என்னய்யா பண்ணுறது.....இரண்டு மணி நேரம் பர்மிசன் கேட்டோம்....ஆனால் நடிகை வர லேட் ஆகிவிட்டதேய்யா.....ஹிரோவே கடுப்பாக இருக்கிறார்......அவரிடம் போய் பேசு"

"சார்.....அவரிடமும் சிஎம் சார்ப்பாக பேசி இருக்காங்க போல....உம்முன்னு இருக்கார்"

"சரி சரி....செட்யூல் படி......இன்னும் 3 மணி நேரத்தில முடிஞ்சிடும்....ப்ரொடியூசர் ஆளுங்களிடம் சொல்லி சமாளிக்க சொல்லு"

"சரிங்க.....சார்.....என்னன்னு சொல்றது"

"எல்லாத்தையும் நானே சொல்லனுமாய்யா....நமக்கு காரியம் முடியப் போவுது, இனிமே இன்னொரு படத்துக்கு இங்கே இதே பாலத்தை நான் எந்த படத்திலும் காட்ட மாட்டேன்..."

"புரியுது சார்"

******

மறு நாள் காலை விமான நிலையத்தில் இருந்து திரும்பினேன். அதே பாலம் வழியாக, சீரான போக்குவரத்து, பாலத்தை விட்டு கிழே இறங்கிய ஆட்டோவில் இருந்தே பார்த்தேன்

வலது பக்கச் சுவற்றில்

"பொது இடத்தில் பகலில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்து, மக்கள் குறை போக்கிய மாபெரும் தலைவர் வாழ்க !" என்ற சுவரொட்டி, "இலங்கைத் தமிழர்களுக்கு நாளே நாளில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் வாழ்க !" என்று முன்பு ஒட்டப் பட்டிருந்த அதே இடத்தில் அதே சுவரொட்டி மீது ஓட்டப் பட்டு இருந்தது.

விமான நிலையத்தில் வாங்கிய அன்றைய ஆங்கில நாளிதழின் இரண்டாம் பக்கத்தில் இருந்த ஆங்கில செய்தி பாலத்தின் பெயரைக் குறிப்பிட்டு....பாலத்தில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த நிரந்தரத் தடை என்னும் அரசு தகவல்களுடன் நேற்றைய போக்குவரத்து நெரிசல் படத்துடன் செய்தியைப் படித்தேன்.

'அட உண்மையிலேயே நடவெடிக்கை எடுத்து இருக்கிறாங்க இல்லே' என்று நினைத்துக் கொண்டேன்.

பின்குறிப்பு : கதையும், நிகழ்வுகளும் 100 விழுக்காடு கற்பனையே !

10 கருத்துகள்:

Athisha சொன்னது…

தந்திரன் படம் பன் பிக்சர்ஸ் படம்தான!

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
தந்திரன் படம் பன் பிக்சர்ஸ் படம்தான!
//

மூன் பிச்சர் படம் !
:)

துளசி கோபால் சொன்னது…

pin குறிப்பு சூப்பர்.

200 விழுக்காடு கற்பனையேதான்!

நம்பிட்டேன்.:-)

ஜெகதீசன் சொன்னது…

:)

அப்பாவி முரு சொன்னது…

//"புரியுது சார்"//




"புரியுது சார்"

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-)))

நிஜமா நல்லவன் சொன்னது…

:))

செ.சரவணக்குமார் சொன்னது…

//பின்குறிப்பு : கதையும், நிகழ்வுகளும் 100 விழுக்காடு கற்பனையே !//

நம்பிட்டோம் தலைவரே.

வேடிக்கை மனிதன் சொன்னது…

//பின்குறிப்பு : கதையும், நிகழ்வுகளும் 100 விழுக்காடு கற்பனையே !//


நல்ல கதையா இருக்கே

"உழவன்" "Uzhavan" சொன்னது…

பின் குறிப்பு சூப்பர் :-)
ஞாயிறு அதிகாலையிலேயே சூட்டிங் ஜோரா நடந்திருக்கு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்