உங்கள் எழுத்து வளம் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நல் வாய்ப்பு

உங்கள் எழுத்து வளம் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நல் வாய்ப்பு
மணற்கேணி - 2009

காலத்தில் தேட...

விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன் !

Saturday, February 23, 2008

விடாது கருப்பு குழுமத்தைக் கலைத்ததாக அந்த பதிவில் ஒரு அறிவிப்பு வந்திருந்தது அதைத் தொடர்ந்து, விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை அக்குழுவினர் அந்த பதிவில் வெளி இட்டு இருக்கிறார்கள். எனக்கும் விடாது கருப்பு குழுவிற்கும் ஆன தொடர்புகள், அதனால் என்னைப் பற்றி மறைமுகமாக எழுந்த சர்சைகள், எனக்கும் சில நண்பர்களுக்கு ஏற்பட்ட மனக் கசப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டு, விடாது கருப்பு குழுவின் இடுகைகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் பாராட்டையும் தெரிவித்திருக்கின்றன. விருப்பப்பட்டவர்கள் அங்கு சென்று படிக்கலாம்.

யார் யாருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்று பார்த்தோ, எதிர்காலத்தில் அவர்களுக்குள் சண்டைவந்தால் நாம் யார்பக்கம் நிற்பது என்றெல்லாம் நினைத்து எவரும் எவருடனும் பழகமுடியாது. நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள், நாளை மீண்டும் நண்பர்களாகக் கூட ஆகலாம். நானும் எவரது சொத்தையும் களவாடுவதற்கோ, கருத்துக்களில் காழ்புணர்வு கொண்டோ உள்நோக்கத்துடன் பழகவில்லை. அதையெல்லாம் மீறி என்னைத் தூற்றுபவர்கள் இருந்தால் தாராளமாக தூற்றுங்கள்.

"தூற்றூவர் தூற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் கோவி.கண்ணனுக்கே"

10 கருத்துக்கள்:

லக்கிலுக் 1:14 PM, February 23, 2008  

:-)

செந்தழல் ரவி 2:39 PM, February 23, 2008  

நீங்கள் ரொம்ப நல்லவர் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்...!!!

RATHNESH 4:44 PM, February 23, 2008  

நண்பரே,

கலீல் ஜிப்ரானின் கீழ்க்கண்ட வரிகளைத் தான் சொல்லத் தோன்றுகிறது:

Your pain is the breaking of the shell that encloses your understanding

Much of your pain is self-chosen

It is the bitter portion by which the physician within you heals your sick self

Therfore trust the physician and drink his remedy in silence and tranquillity.

ஜெகதீசன் 5:30 PM, February 23, 2008  

என்னதான் நடக்குது... ஒன்னுமே புரியல...........
:((

கோவி.கண்ணன் 8:35 PM, February 23, 2008  

//லக்கிலுக் said...
:-)
//

லக்கி,
புன்னகையின் பொருள் யாதோ ?

எல்லாம் அவன் செயலா ?
:)

கோவி.கண்ணன் 8:37 PM, February 23, 2008  

//RATHNESH said...
நண்பரே,

கலீல் ஜிப்ரானின் கீழ்க்கண்ட வரிகளைத் தான் சொல்லத் தோன்றுகிறது:

Your pain is the breaking of the shell that encloses your understanding

Much of your pain is self-chosen

It is the bitter portion by which the physician within you heals your sick self

Therfore trust the physician and drink his remedy in silence and tranquillity.

4:44 PM, February 23, 2008
//

ரத்னேஷ்,

சரிதான், இவை யாவும் திட்டமிட்டு செய்யவில்லை. 'சாதுக்களிடமும்', 'அடியார்களிடமும்' பழகியும் எனக்கு கெட்ட பெயர்தான்.

கோவி.கண்ணன் 9:06 PM, February 23, 2008  

//செந்தழல் ரவி said...
நீங்கள் ரொம்ப நல்லவர் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்...!!!
//
வெளிப்படையாக பேசி
மிக நல்லவரிடம் பாராட்டுப் பெற வேண்டும் என்று தான் காத்திருந்தேன். பலமுறை வாழ்த்தி இருக்கிறீர்கள், அதற்கும் சேர்த்து மிக்க நன்றி !

ரொம்ப நல்லவன் 12:09 AM, February 24, 2008  

//விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன் !//

நல்லவரே ரொம்ப ரொம்ப நல்லவரே விடாது கருப்பு குழுமமா? அட கண்றாவி அதுல எழுதுற ஒரே ஆளு உங்க தோஸ்த்து மூர்த்தின்னு தெரியாதா? யோவ் உன் வயசுக்கு இதேல்லாம் தேவையா?? மூர்த்தில் மேல இந்தியாவில் சைபர் க்ரைம் கேஸ் எவ்வளவு இருக்குன்னு தெரியுமா?
தூ

tamilan 4:04 PM, February 08, 2009  

விடாது கருப்பு, லக்கிலுக் போன்ற 'தமிழர்கள்' அவர்களின் தமீழ் மீது உள்ள வெறுப்பைப் பார்த்தால் அவர்களும் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த இந்தி அல்லது தெலுங்கு காரர்கள் போல் உள்ளனர். தமிழ் நாட்டு OBC பட்டியலில் பலர் அவ்வாறு உள்ளனர். இடஒதுக்கீடு பெற்றுக்கொண்ட இந்தி தெலுங்கு மொழிகளி உரையாற்றிக்கொண்டு.

tamilan 4:05 PM, February 08, 2009  

விடாது கருப்பு, லக்கிலுக் போன்ற 'தமிழர்கள்' அவர்களின் தமீழ் மீது உள்ள வெறுப்பைப் பார்த்தால் அவரும் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த இந்தி அல்லது தெலுங்கு காரர் போல் உள்ளது. தமிழ் நாட்டு OBC பட்டியலில் பலர் அவ்வாறு உள்ளனர். இடஒதுக்கீடு பெற்றுக்கொண்ட இந்தி தெலுங்கு மொழிகளி உரையாற்றிக்கொண்டு.

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP