பின்பற்றுபவர்கள்

2 மே, 2012

சுவனப்பிரியன் சுவனாநந்தாவாக மாற இருந்தாரா ?

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் நித்தியா நந்தாவால் இந்து மதம் பாழ்பட்டுவிட்டது இனி என்ன செய்யப் போகிறீர்கள் இந்து நண்பர்களே ? என்ற கேள்வி கேட்டு என்னையும் இன்னும் சிலரையும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதில் சென்றப் பதிவில் சொல்லியாகிவிட்டது, இந்தப் பதிவில் அதையே பேச ஒன்றும் இல்லை, இருந்தாலும் சுவனப்பிரியரின் அந்த ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நித்தியாநந்தாவின் கடந்த கால ஆன்மிக வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரைத்தான் ஒரே இந்து நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக் கொண்டும் தன்னையும் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் பக்தராக இணைத்துக் கொண்டு தன் பெயரை சுவனாநந்தா என்று மாற்றிக் கொள்ள இருந்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது, இடையில் ரஞ்சிதா - நித்தியாநந்தா கசமுசா நடந்த பிறகு தனது ஒரே நம்பிக்கையும் வீழ்ந்துவிட தனது கவனத்தை வஹாபிய பிரச்சாரங்களில் சுவனப்பிரியன் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடும், பின்னர் நித்தி போனால் சுத்தி என்று மதுரை ஆதினத்தின் பக்கம் சுவனம் கவனம் திருப்பி இருந்த வேளையில் தான் நித்தி அங்கும் நுழைய இந்து மதம் முற்றிலும் சீரழிந்துவிட்டது இனி ஒருவராலும் அதனை சீர்படுத்த முடியாது என்றே வெகுண்டெழுந்திருக்கிறார், இவரே இந்து மதத்திற்கு இறுதி இறைத்தூதர் ஆகி இருக்கலாம். அதைவிடுத்து பின்ன என்ன சார் ? அவர் அன்றாடம் வஹாப்பிய மார்க்கத்தில் வடிவது தேன் என்றும் பிற மதங்களில் வடிவது வேப்பெண்ணை என்றே பிரச்சாரம் செய்த வேளையில் வேப்பெண்ணையில் எலிப்புளுக்கை இருந்தால், எருக்கம்பால் கலந்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று அவர் போய் இருக்க வேண்டியது தானே ? எதற்கு இவருக்கு அப்படி ஒரு அக்கரை இருந்திருக்க வேண்டும், ஒரு வேளை சுவனாநந்தா ஆக இருந்த முயற்சிச் தோற்றதால் எழுந்த ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஆகியவை தான் அவரை அவ்வாறு எழுது வைத்தது என்று கொள்ளலாமா ?

சென்ற பதிவில் நான் கேட்டிருந்த எந்த ஒரு கேள்விக்கும் அவரால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை, ஜைனைப் திருமணம் உலக நடைமுறைக்கு எதிராக இருந்ததால் தானே அல்லாவால் அந்தத் திருமணத்தை தற்காத்து குரான் வசனாமாகப் பேச முடிந்தது என்று கேட்டால் அவரிடம் பதிலே இல்லை, மாற்றான் மனைவியை பெண்டாள்வதே மாபெரும் குற்றம் என்பதை மையக் கருத்தாக வைத்து சம்பூர்ண இராமயணம் முதல் கம்பராமயணம் வரை இங்கே படைக்கப்பட்டு அவற்றை (மாற்றன் மனைவியை கவர்வது) குற்றமாக பார்க்கும் எங்கள் சமூகத்திற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று கேள்வியை முன் வைத்ததற்கும் பதில் சொல்லாமல் தசரதன் அறுபதாயிரம் மனைவியைக் கட்டவில்லையா ? அதை ஒப்பிட எங்கள் சமயத் தலைவர் செய்தது அற்பம் சொற்பம் என்று தொடர்பற்று பதில் சொல்லி இருக்கிறார். மாற்றான் அல்லது மகனுடைய மனைவியை தாரமாக்கிக் கொள்வதும் ? பல தார திருமணம் ஒன்றா ? தவிர தறுதலை அப்பன் தசரதனுக்கு மகன் அவ்வாறு இல்லை என்று முரண்பட்ட வேறுபட்ட வழியைக் காட்டுவது தானே இராமயணம், நான் இங்கே இராமனின் புகழ்பாடவோ இராமயணத்தை இந்திய நம்பிக்கைக் குரிய வேதம் என்று முன்னிலைப் படுத்தவோ நான் இதைக் கூறவில்லை, இராமயணத்தில் எனக்கும் பல விமர்சனங்கள் உள்ளன. தசரதன் 60 ஆயிரம் மனைவிகளை உடையவன் என்பதால் இங்கே யாரும் அவனைப் போற்றுவதும் இல்லை.

இளம் வயது திருமணங்கள் பிற சமூகங்களில் திருட்டுத்தனமாக நடக்கிறது என்று நாம் ஒப்புக் கொண்டாலும் உங்கள் மதத்தில் இன்றும் அவ்வாறு நடப்பதை தடுக்கும் சரியத் சட்டம் எதுவும் இல்லையே ? உங்கள் மத வழிகாட்டல் காலத்திற்கும் பொருத்தமானது என்று எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள், அவற்றை எதிர்க்கும் சட்டங்களையும் உங்களவர்கள் எதிர்க்கிறார்களே என்று கேட்டால் எந்த பதிலும் இல்லை. இவர் அபத்தமாக சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அவர்களுக்கு 6 வயதில் திருமணம் செய்து ஒருவருக்கு சொந்தமாக்குவது தான் நல்வழி என்று எங்கள் மதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்திருக்கிறது, அதைப் பின்பற்றினால் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் தொடராது என்று கூறாமல் விட்டது நமக்கு ஆறுதல்.

திரு சுவனப்பிரியன் தொடர்ந்து இஸ்லாத்தில் சாதி இல்லை என்று பிரச்சாரம் செய்யவும் இந்திய சமயங்களை தூற்றவும் பல்வேறு நாளிதழ்களில் இடம் பெறும் சாதி கலவரம் குறித்து எடுத்துப் போட்டு கருத்துரைக்கிறார், பகவத் கீதையைப் போலவே கோத்திரங்களையும் மனிதப் பிரிவுகளையும் படைத்ததாகப் குரானில் (அல்லா) பறைசாற்றுவது வேறு தகவல், தவிர இவர்களது சியா - சுன்னி வகுப்பு / இன வாதக் கலவரங்களும் அதன் பொருட்டு நடக்கும் அன்றாட மசூதி குண்டுவெடிப்புகளும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாளிதழ்களில் செய்தி ஆகிறது, இது குறித்துக் கேட்டால் இஸ்லாமியத் தவறு இஸ்லாத்தின் தவறு இல்லை என்றே கூறுவார். பின்பு இஸ்லாமிய சட்டங்கள் எவருக்காக எழுதப்பட்டது ? யார் பின்பற்றுகிறார்கள் என்று கேட்டால் பதிலும் வராது, யாரும் பயன்படுத்தாத / நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று நல்லத் திட்டம் என்று கூறினால் அது திட்டம் என்ற அளவில் மட்டுமே, அதைப் பயன்படுத்தி யாரும் பயன்பெற்றிருந்தால் அவற்றைப் பற்றி எதேனும் புகழ்ச்சியாகக் கூற முடியும். தூரத்து பச்சை பார்க்க அழகாக இருக்கும், அழகு என்ற அளவில் அதை ரசிகலாம், ஆனால் நுகர முடியாது, அது போன்றதே இவர்கள் புகழ்ந்து பேசும் சட்டங்கள் யாவும், அவர்களே அதை மதித்து நடக்காத போது அது குறித்து இவர்கள் பிரச்சாரம் செய்வதால் ஏதேனும் பலன் உண்டா ?

  • 1) ஷேக்
  • 2) சையது
  • 3) தக்னி முஸ்லிம்
  • 4) அன்சார்
  • 5) தூதுகோலா
  • 6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
  • 7) மாப்பிள்ளா
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(நன்றி அஸ்மா)

இந்திய சாதிகள் தலித்துகளை மிகவும் தாழ்வாக நடத்துகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை தான். அவர்கள் இஸ்லாமுக்கு மாறி ஒன்றும் மேம்படவில்லை, என்பதை ரசூல் போன்றவர்கள் எழுதியுள்ளனர். ஏழைக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் எந்த மதமும் இறங்காது, மாறாக இந்திய சாதிகளில் பார்பனர்களை ஓரங்கட்டி பல சாதிகளும் வளர்ந்துள்ளன, ஒரு வன்னியனிடமோ, நாடாரிடமோ சென்று நீங்கள் பார்பனரைவிட தாழ்ந்தவரா ? என்று கேட்டால் செருப்பைக் காட்டி மறுப்பார்கள். ஒரு ஷியா முஸ்லும் சுன்னி முஸ்லாமாகவோ, சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமாக மாற வழியே இல்லாத உங்கள் மார்க்கத்தில் நீங்கள் சாதியைக் கடந்தவராக பிரகனப்படுத்துவது எவ்வாறு ? உங்களது தலித் மதமாற்றம் பித்தலாட்டம் என்பதால் தான் அம்பேத்கார் பெளவுத்த மதத்திற்கே மாறினார். 

இஸ்லாம் மறுமண மற்றும் பெண்களுக்கான சொத்து உரிமையைத் தந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், அந்த உரிமை அரேபிய பாலைவனங்களில் ஏற்கனவே இருந்தது முகமதுவிற்கு அல்லாவின் வஹி கிடைப்பதற்கு முன்பே அவர் விதவையாக இருந்த கதீஜாவை மணந்துள்ளார், கதீஜாவிற்கும் தந்தைவழி சொத்துகள் இருந்ததால் அவரால் ஒரு வியாபாரியாக இருந்திருக்க முடிந்திருந்தது, என்று நண்பர்கள் சிலர் பதிலும் சொல்லி இருக்கின்றனர், ஏற்கனவே இருந்த நடைமுறையை சட்டமாக்கி இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்,. அதுவும் நடைமுறையில் இருக்கிறதா ? என்று கேட்டால் பழையபடி இஸ்லாமியரின் தவறுகள் இஸ்லாமிய சட்டத்தவறுகள் இல்லை என்றே பதில் வரும். நாகூர் நிலவரம் நமக்கு ஓரளவு தெரியும் என்றாலும் கீழக்கரையில் கூலித் தொழிலாளிக்கும் 10 லட்சம் வரதட்சனைக் கொடுத்தால் தான் இஸ்லாமிய பெண்களுக்கு திருமணங்கள் நடக்கும் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது, இவர்களைக் கேட்டால் பெண்ணுக்கு மகர் கொடுப்பது தான் இஸ்லாத்தின் வழக்கம் என்பார்கள், இந்த வழக்கத்தைப் பின்பற்றுபவர் யார் ? இவர்களின் வரதட்சனை வழக்கத்தை மகருக்கு மாற்றும் முயற்சியில் தான் இருக்கிறோம் என்பார்கள், அதை முதலில் இஸ்லாமியர்களிடம் செய்யாமல் அதை பிரச்சாரம் ஆக்குவது ஏன் ? தவிர தந்தை வழிச் சொத்துரிமையும், வரதட்சனைக் கேட்பவர்களுக்கான தண்டனையும் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டச் சூழலில் அதில் இந்தியர்களுக்கு இஸ்லாத் புதிதாக பரிந்துரைக்க என்ன இருக்கிறது ? தவிர அதைப் பின்பற்ற வேண்டியவர்கள் இஸ்லாமிய ஆண்கள் அல்லவா ?

இவரின் நண்பர்கள் மிகவும் அபத்தவாத சிந்தனையாக

"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..!நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?

போரில் அகதியான அடிமைப் பெண்ணை (வலக்கரம் சொந்தமாக்கிக் கொள்ள என்று அவர்களுக்குள்ளேயே புரியாதபடியெல்லாம் எழுதிவார்கள்) அடிமையை விருப்பம் போல் அனுபவிக்கலாம் என்பதே இவர்களுக்கு ஹதீதியா குரானிய வழிகாட்டால், இந்த சிந்தனையில் சற்று மாற்றி இவர்களுக்கு ஏற்பாக இருக்கும் பலதார மறுமணத்தை ஈழ விதவைகளுக்கு இவர்கள் பரிந்துரைக்கிறார்கள், விதவைகளுக்கான மறுவாழ்வு இளைஞர்கள் மனவுவந்து அவர்களை மணக்க வேண்டும் என்பது தான் பொதுவான பரிந்துரை அன்றி அவர்களில் பலரையும் மணந்து கொள்ளுங்கள் என்பது அபத்தவாத மூளையற்ற சிந்தனையின் பரிந்துரையாக இருக்க முடியும், தவிர ஒரு இளைஞனின் வருமானம் நிரந்தரமாக இருக்க முடியாத இன்றைய சூழலில் பல பெண்களை மணந்து எவ்வாறு காப்பற்ற முடியும் ?, இதற்கும் மாற்றாக அந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் தனியார் நிறுவனமும், அரசு நிறுவனங்களும் முன்னுரிமை தரவேண்டும் என்று பரிந்துரைப்பது தான் நல்வழி. அப்படியென்றால் அவளுக்கு ஆண் துணையோ ? ஆண் இன்பமோ தேவை இல்லையா ? என்று கேட்டால் சொல்ல அறுவெறுப்பாக இருந்தாலும் பல தாரம் மணம் செய்து கொண்ட பெண்களின் பாலியல் வேட்கை என்றோ ஒருநாள் வந்து போகும் கணவரால் தீர்ந்துவிட்டதா ? என்று கேட்டு அது குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவை குறித்த பரிந்துரைகள் கடுமையான கண்டனத்துகுரியது ஆகும், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உடல் சுகத்திற்காக ஈடுபடுகிறார்கள் என்கிற கருத்துகள் புறந்தள்ளக் கூடிய நிலையில், அவர்களை பல தார மணத்தில் ஈடுபடுத்தலாம் என்று சொல்வது குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதே. அவர்களுக்கு மாற்று நல்ல வேலையும், விதவையை மணக்க வரும் இளைஞர்களும் அன்றி வேறெந்த தீர்வும் சிறப்பானதாக இருக்க முடியாது.

இதையெல்லாம் விட அரேபிய நாடுகளில் இன்றைய தேதிக்கு போரில் (ஈராக் தவிர்த்து) விதவையாக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் ? சவுதி உள்ளிட்ட மன்னர் பரம்பரைகள் விதவைகளைத்தான் மணந்து விதவை நல்வாழ்வு என்கிற ரீதியில் முழக்கப்படும் இஸ்லாமிய தீர்வைச் செயல்படுத்துகிறார்களா ? மன்னர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் விதவையான பிறகு அவர்களுக்கு மறுமணம் நடப்பில் உள்ளதா ? மன்னர்களைவிடுத்துப் பார்த்தாலும் அரேபிய ஷேக்குகள் பண ஆசைக் காட்டி இந்திய ஹைத்ராபாத்தில் மணந்து கொண்டு பின்னர் மோகம் தீர்ந்ததும் கைவிட்டு செல்லும் பெண்களில் எத்தனை பேர் விதவைகள் ? அவர்கள் முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டே பின்னர் மறுமணம் செய்து கொடுக்கப்படுகிறார்களா ?  நீங்கள் பெருமையானதாகக் கூறும் முத்தலாக்கை குறிப்பிட்ட காலங்களில் முறையாக செய்து மணவிலக்கு பெற்றுக் கொண்டோர் எத்தனை பேர் ? யாருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைமுறைப்படுத்தாத மேலும் ஒரு இஸ்லாமிய சட்டமாகத்தான் அவை பெயரளவில் தான் இருக்கிறது. அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தும் கண்காணிப்பை நீங்கள் செய்துவருகிறீர்களா ? உங்களையெல்லாம் ஈழ விதவைகளுக்கு பலதார மறுமணம் பரிந்துரைக் கேட்டு உங்களிடம் ஒப்பாறி வைத்தவர் யார் ? அவர்களுக்கு உங்கள் மதத்தினர் பல தாரமணத்தில் செய்யும் தில்லுமுல்லுகள் தெரியுமா ? இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத உங்களின் பரிந்துரைகளில் மதவெறியும், மதப்பிரச்சாரமும் அன்றி வேறெதுவும் தென்படவில்லை. பணம் படைத்தவனின் மேம்பட்ட காம இச்சைகான வடிகால் என்பதைத் தவிர்த்து பல தார மணத்தில் பெண்களுக்கான தீர்வு என்ன ? காசு இருக்கும் போது அவளை மணந்து அவளுக்கு ஒரு வயிற்றுப் பிள்ளையை / களைக் கொடுத்துவிட்டு, அவர்களை தெருவில் விட அவர்கள் சமூகக் குற்றவாளியாகும் நிலையைத் தான் ஏற்படுத்தும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் ?  உங்கள் பலதார மண பரிந்துரையில் முதல் மனைவியின் விருப்பம் பற்றி ஏதேனும் வழிகாட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா ? எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு எண்ணற்ற மனைவிகள் இருப்பதை பெருமையாகக் கருதுவாளா ? எந்த ஒரு இந்தியத் தகப்பனும் தன் மகள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படப்போவதை பெருமையாகக் கூறிக் கொள்வானா ? பணக்காரனுக்கு  சலுகைக் கொடுத்து வளைந்து கொடுக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் பணக்காரன் பலமனைவிகளை மணந்து கொள்ளலாம் (பெண்களை பணயம் வைக்கலாம்) என்ற உங்கள் மதப்பரிந்துரைகளுக்கும் வேறுபாடுகள் என்ன ?

திருவாளர் சுவனப்பிரியன் அவர்களே, நீங்கள் அடிக்கடி அரைகுறையாக கூவும் குரானுக்கு மாற்றான மேம்பட்ட வசனம் இவ்வுலகில் எழுதப்படவில்லை என்கிற கூற்றை யாரும் மறுக்கவே இல்லை என்று மார்தட்டிவருகிறீர்கள்.  இவற்றை பலர் கேட்டு நகைத்துச் சென்றதால் உங்களுக்கு உரிய பதில் கிடைக்காமல் போய் இருக்கும்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று என்றோ ஐய்யன் திருவள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சமமாகவே கருதப்படவேண்டும் என்கிற வழிகாட்டல் தான் அது, பெண்களையே மனிதனாக மதிக்கத் தெரியாத உங்களுக்கு பிற உயிர்களும் சமமாக மதிக்கப் பரிந்துரைப்பதில் ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும் உங்களுக்கு சுட்டிக் காட்டவே விரும்புகிறேன், எந்த ஒரு உயிரையும் கொன்று போடும் உரிமை உங்களுக்கு கிடையாது, உணவுக்காகக் கொல்லுவதையும் என்பெயரில் (அல்லாவின் பெயரில்)  செய்யுங்கள் என்கிற வழிகாட்டலும் பிற உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து மறைமுகமாக இருப்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கமாட்டீர்கள், அதை நேரிடையாக வெளிப்படையாகவே 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி எல்லா உயிர்களும் மதிப்பில் ஒன்றே என்றார் ஐய்யன் திருவள்ளுவர், இதற்கு நேரிடையான வசனத்தை உங்கள் மார்க்கத்தில் இருந்து எடுத்துக்காட்டி முடிந்தால் அதைப்பரப்ப முயற்சி செய்யுங்கள்.

நானும் இதுவரை யாரும் சொல்லாத வசனம் ஒன்றை உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன், இதைவிட சிறந்த வசனம் உங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தால் கொண்டுவாருங்கள்.

நீங்கள் உங்கள் உடன்பிறந்தாளுக்கு , மகளுக்கு செய்ய விரும்பாததைப் பிற பெண்களுக்கு பரிந்துரைக்காதீர்கள்

உங்களுக்கு இதற்கான விளக்கம் ப்ராக்கெட் போட்டால் தான் புரியும் என்பதால்,

நீங்கள் உங்கள் உடன் பிறந்தாளுக்கு (அக்காள் மற்றும் தங்கைகளுக்கு) , மகளுக்கு செய்ய விரும்பாததை (பலதார அல்லது சிலதார மணத்தை) பிற பெண்களுக்கும் (பல தார அல்லது சில தார திருமணத்தை) பரிந்துரைக்காதீர்கள்

********

இதை எப்படி முடிக்கிறது ? தென்னை மரம் , பசுமாட்டுக் கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது.

இஸ்லாமின் கொள்கைகள் சிறப்பாக இருந்தும், நடைமுறையில் பயன்படுத்த முடியாது என்பதால் தான் சுவனப்பிரியன் சுவனநந்தாவாக மாற இருந்து நித்தி - ரஞ்சிதா கசமுசாவால் கெட்டுவிட்டதா ? என்றே நினைக்கத் தோன்றுகிறது. சுவனப்பிரியன் விரும்பினால் தாய் மதம் திரும்பலாம், அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனுக்கு பூணூல் அணிவித்து தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.

போங்க சார், ஐந்து வேளைத் தொழுகையை சிறப்பாக செய்யுங்கள், நீங்கள் விரும்பும் சுவனக் கன்னிகைகள் உங்களுக்கு காத்திருக்கிறார்கள், அதைவிடுத்து தேவையற்ற சர்சைகளாக கொள்ளர் தெருவில் துருப்பிடித்த ஊசியை விற்றுக் கொண்டு உங்கள் நேரங்களை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், 'தீர்ப்பு நாள் சமீபமாக, உள்ளது அதற்கான அத்தாட்சிகளை அல்லா தொடர்ந்து வெளிப்படுத்துக் கொண்டுள்ளான், இந்த இனிய பிறவியை, வீண் விவாதங்களில் வீனாக்கலாமா ?'

பிகு : நான் இஸ்லாமிய மதத்தை நான் இங்கு இழிவு படுத்தும்படி எதையும் எழுதவில்லை,  அவர்களின் நடைமுறைகளில் உள்ளவற்றைச் சுட்டியுள்ளேன், தவிர உலகில் 20 விழுக்காட்டினரின் நம்பிக்கை என்பதை உணர்ந்துள்ளதால், அவர்களது வழிகாட்டி முகமதுவையோ, குரானையோ நான் போற்றாவிட்டாலும் தூற்ற நினைத்தது இல்லை, உங்க பாணியில் சொல்ல வேண்டுமென்றால் நான் இஸ்லாத்தைக் குறை கூறவில்லை, இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

உங்களில் (தமிழக / இந்திய இஸ்லாமியர்கள்) பெரும் விழுக்காட்டினர் ஒரே திருமணத்தில் நம்பிக்கைக் கொண்டு நிலைத்திருப்பதும் உங்கள் மதம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடு இல்லை, அது இங்கேயே வழிவழிவரும் பண்பாடு அல்லது தனிமனித ஒழுக்கம் சார்ந்தவையே, அரபு நாடுகளில் அவ்வாறு இல்லாது பெண்கள் போகப் பொருளாக்குவது கண்டு உங்கள் அறிவுரைகளை பண்பாடுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

இன்ஷா அல்லா, 'இவர்களுக்கு சாந்தியும் சமாதனமும் என்னேரமும் கிட்டினால் இவர்கள் சிந்தனை இறை நாட்டம் தவிர்த்து தேவையானவற்றதில் மூக்கு நுழைக்காது. 

நாடூவீர் ஏக இறைவன் !

உங்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டுவதும், பாறைமுன் திருக்குறள் அறத்துப் பால் விளக்கவுரை பேசுவதும் ஒன்றே என்பது தெரியும், இருந்தாலும் உங்கள் நச்சுப் பிரச்சாரங்களில் என்னையும் இழுத்தால் இதனை பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதினேன், உங்கள் மீது எங்கேயாவது தனிப் பட்ட தாக்குதல் இருந்தால் குறிப்பிடவும்.

64 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

:)
+1

dondu(#11168674346665545885) சொன்னது…

//அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனை தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.//
:)))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//:)))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார், என்ன நகைப்பு ? சுவனப்பிரியனின் நட்புக்காக அதைக் கூட செய்யமாட்டீர்களா ? நான் வேண்டுமானால் பூணூல் செலவுக்கு ஸ்பான்ஸர் செய்கிறேன்.
:)

dondu(#11168674346665545885) சொன்னது…

நான் நகைத்ததன் அர்த்தம் இதுதான். ஏற்கனவேயே சுவன்ப்பிரியரின் இஸ்லாமிய தரப்பு வாதங்கள் இசுலாத்தின் அபத்தங்களை அதிகரித்துக் காட்டி அவரை இசுலாத்தின் அனுகூல சத்ருவாக காட்டி வருகிறது.

இந்த அழகில் நான் பொழுதுபோகாமல் அவரை இந்து மதத்துக்கு இழுக்க எண்ணுவேனா? பெருச்சாளியை கட்டுச்சாத மூட்டையில் கட்டுவது போல அல்லவா இருக்கும் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) சொன்னது…

சுவனப்பிரியர் கீழ்கண்ட பதிவுக்கு சென்று பின்னூட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

http://pagadu.blog.com/2011/10/19/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீனு சொன்னது…

ஆடு நெனஞ்சு-fying, Why ஓநாய் அழுது-fying? ;)

ராசின் சொன்னது…

சுவனப்பிரியன்கள் கவனிக்க வெண்டிய‍‍௧/ஆனால் கவனிக்க மொகாத கருத்துகலள்.அருமை!!!

Kodees சொன்னது…

கோவி!, எனக்கும் இந்து மதத்தின் பேரில் பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை. ஆனால் மற்ற மதத்தவர்கள் - ஏதோ தங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது என்று பேசும் போது வரும் எரிச்சல் - மிகச்சரியாக இந்தப் பதிவில் வெளிப்பட்டுள்ளது.

kannan சொன்னது…

திரு. கண்ணன். உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். இந்த பதிவை திரு.சு.பி பேர் போடாமல் எழுதி இருந்தாலும் நன்றாக இருந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.


kannan from abu dhabi
http://samykannan.blogspot.com/

மாசிலா சொன்னது…

ஒருத்தர திட்டி எழுதரதற்கு இவ்ளோ நீட்டு பதிவா!

இந்த பதிவுக்கு பின்னூட்டம் எழுத உண்மையில் எனக்கு விருப்பம் இல்ல. இருந்தாலும் மெனக்கெட்டு படிச்ச மரியாதைக்கு நான் எதையாவது எழுதியே ஆகனும்ங்கிறது என் கோட்பாடு.

நீங்க குறிப்பிட்டு இருக்கும் சு.பி.யின் அந்த பதிவின் தலைப்பை தமிழ்மணத்தில் பார்த்த வேகத்தில ஒரே தாண்டு தாண்டி எட்ட ஓடிட்டேன். நீங்க இந்த பதிவுல என்னதான் அப்படி முக்கியமா சொல்லுவீங்கன்னு பாத்தாக்கா ... அட, இதுல ஒன்னுமே இல்லன்னு ஒரே வெசனமா போயிடுச்சி. நேரம் வீனாயிடுச்சேன்னு கொஞ்சம் கவல. பரவயில்ல சார், அடுத்த முற உள்ள வர்ரதுக்கு முன்ன கொஞ்சம் யோசிப்பேன்.

யாராக இருந்தாலும் அனைத்து தமிழர்களின் ஒற்றுமைக்கு பாடுபடுங்க. பிரிவினை வேண்டாம்.

பகிர்வுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//. அட, இதுல ஒன்னுமே இல்லன்னு ஒரே வெசனமா போயிடுச்சி//

பொட்ட புள்ளைங்களை ஒருத்தனுக்கே கட்டிக் கொடுங்கன்னு அவிங்க சொல்றது கூட உங்களுக்கு வெவகாரமாகத் தெரியவில்லை என்றால் நீங்க இதையும், இனிமேலும் படிப்பதே வேஸ்டு தான் சார்.

பேசாமல் மார்கம் இல்லே மூர்க்கம் எதிலாவது சேர்ந்து சேவை செய்ய முடியுமான்னு முயற்சி செய்து தமிழர்களை ஒன்று இணைங்க
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சீனு கூறியது...
ஆடு நெனஞ்சு-fying, Why ஓநாய் அழுது-fying? ;)//

அவரு ஆடு நனைவதற்காக அழவில்லை, மாறாக அரேபிய ஒட்டகத்திற்கு தீணி தேடுகிறார்

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த அழகில் நான் பொழுதுபோகாமல் அவரை இந்து மதத்துக்கு இழுக்க எண்ணுவேனா? பெருச்சாளியை கட்டுச்சாத மூட்டையில் கட்டுவது போல அல்லவா இருக்கும் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அதென்னவோ சரிதான் அவர்கள் வஹாபிய பிரச்சாரம் செய்து 'இஸ்லாம் என்றால் 1600 ஆண்டுகள் பழைமையானதே' என்ற பழமைவாத பிரச்சாரம் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் நெளிய வைப்பதைப் பார்க்கும் போது நமக்கே பரிதாபமாகத்தான் இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//ராசின் கூறியது...
சுவனப்பிரியன்கள் கவனிக்க வெண்டிய‍‍௧/ஆனால் கவனிக்க மொகாத கருத்துகலள்.அருமை!!!//

அவரு கவனித்து இருந்தால் அவர்கள் மதத்தில் ஆயுதம் தூக்கும் நான்கு இளைஞர்களை நல்வழிக்கு திருப்பி இருப்பார்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Kodeeswaran Duraisamy கூறியது...
கோவி!, எனக்கும் இந்து மதத்தின் பேரில் பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை. ஆனால் மற்ற மதத்தவர்கள் - ஏதோ தங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது என்று பேசும் போது வரும் எரிச்சல் - மிகச்சரியாக இந்தப் பதிவில் வெளிப்பட்டுள்ளது.//

நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

// Kodeeswaran Duraisamy கூறியது...
கோவி!, எனக்கும் இந்து மதத்தின் பேரில் பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை. ஆனால் மற்ற மதத்தவர்கள் - ஏதோ தங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது என்று பேசும் போது வரும் எரிச்சல் - மிகச்சரியாக இந்தப் பதிவில் வெளிப்பட்டுள்ளது.//

நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

// Samy Kannan கூறியது...
திரு. கண்ணன். உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். இந்த பதிவை திரு.சு.பி பேர் போடாமல் எழுதி இருந்தாலும் நன்றாக இருந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.


kannan from abu dhabi
http://samykannan.blogspot.com///

சுபி பேரு போடாமல் எழுதினால் இன்னொரு நாள் யாரோ ஒருவர் திரும்பிப் படிக்க இவரு ஏன் இதை எழுதினார் என்று நினைக்கத் தோன்றும்

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். முன்பே பதில் கொடுத்திருந்தாலும் புதியவர்களுக்காக பதில் நீளமாக இருந்ததால் பதிவாகவே இட்டுள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_02.html

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த வசனத்தின் படி நாளை மறுமையில் இறைவன் கோவிக் கண்ணனைப் பார்த்து 'வேதங்களையும் தூதர்களையும் சிறந்த அறிவாற்றலையும் வசதி வாய்ப்புகளையும் தந்திருந்தும் என்னை உரிய முறையில் வணங்கவில்லையே ஏன்?' என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம் அதற்கவர் 'இறைவா! சுவனப்பிரியன் பல ஆண்டுகள் இணையத்தின் மூலம் தொடர்பில் இருந்தார். பல பின்னூட்டங்களால் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஒரு முறை கூட 'இது தவறு! இது சரி' என்று என்னிடம் சொன்னதில்லை. உண்மைகளை தெரிந்து கொண்டே மறைத்து விட்டார். அவர் உரிய முறையில் சொல்லியிருந்தால் நானும் உன்னை வணங்க வேண்டிய முறையில் வணங்கியிருப்பேன்' என்று என் மீது வழக்கு தொடர்ந்தால் நான் மாட்டிக் கொள்ளக் கூடாது அல்லவா! அதற்கான முன்னேற்பாடுதான் இது போன்ற பதிவுகள்.//

அப்படியெல்லாம் எனக்கு துர் அதிர்ஷம் வாய்க்காது. அப்படியே வாய்தால் பின்லேடனின் அல்கொய்தா வகையறாக்கள், தவ்ஹீது ஆட்கள் மற்றும் நாற்றம் பிடித்த (நறுமணம் விரும்பும் என்ற பொருளில் வாசிக்கவும்) செண்ட் அடித்துக் கொள்ளும் அரபுக்களுடன் சுவனத்தை பகிர்ந்து கொள்வதை விட நான் நரகத்தையே கொடுக்க்ச் சொல்லுவேன். உங்க சொர்கத்தில் நித்திய கன்னிகைளா ? எனக்கு வேண்டாம் சாரே. நீங்களே அனுபவியுங்கள் தவிர நித்தி ஆசிரமத்திற்குச் சென்றால் ஒருவேளை அந்த வாய்ப்பு உங்களுக்கு இன்றே கூட கிட்டலாம்

Mathuran சொன்னது…

அவர் அன்றாடம் வஹாப்பிய மார்க்கத்தில் வடிவது தேன் என்றும் பிற மதங்களில் வடிவது வேப்பெண்ணை என்றே பிரச்சாரம் செய்த வேளையில் வேப்பெண்ணையில் எலிப்புளுக்கை இருந்தால், எருக்கம்பால் கலந்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று அவர் போய் இருக்க வேண்டியது தானே///

சூப்பரா சொன்னிங்க.... இவங்களுக்கு தங்கட மதம் மேலயே நம்பிக்கை இல்ல.. அதுதான அடுத்த மதங்கள்ள இருக்கிற குறைபாடுகளை பெரிதுபடுத்து தங்கள உயர்வா காட்ட முயற்சிக்கிறாங்க

Mathuran சொன்னது…

சென்ற பதிவில் நான் கேட்டிருந்த எந்த ஒரு கேள்விக்கும் அவரால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை//

இவர்களை நன்றாக உற்று கவனியுங்கள். எந்த இடத்திலும் ஏனையவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லமாட்டார்கள். நாம் ஒன்று கேட்டால் திரும்ப எங்களிடம் 4 கேள்வியும் பத்து இணைப்புகளும் தந்து திசை திருப்பி விடுவார்கள். காரணம் சுய சிந்தனையுடன் தெளிவாக இருந்தால்தான் கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியும். மதத்தை புத்தகத்தில் படித்துவிட்டு அதையே போகுமிடமெல்லாம் ஒப்புவிப்பவர்களால் மதத்தை பற்றிய எதிர்மறையான கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியாது

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃதசரதன் அறுபதாயிரம் மனைவியைக் கட்டவில்லையா ? அதை ஒப்பிட எங்கள் சமயத் தலைவர் செய்தது அற்பம் சொற்பம் என்று தொடர்பற்று பதில் சொல்லி இருக்கிறார்.ஃஃஃஃ

தசரதன் என்ன உங்கள் நபி போல் இறை தூதர் என்ன கொண்டாடுகிறோம்..

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஎன 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஃஃஃஃ

தகவலுக்கு நன்றி அண்ணே..

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃ பெண்ணுக்கு மகர் கொடுப்பது தான் இஸ்லாத்தின் வழக்கம் என்பார்கள், இந்த வழக்கத்தைப் பின்பற்றுபவர் யார் ?ஃஃஃஃ

அது அழகான பெண்ணுக்கு மட்டுமே..

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃபெண்களையே மனிதனாக மதிக்கத் தெரியாத உங்களுக்கு பிற உயிர்களும் சமமாக மதிக்கப் பரிந்துரைப்பதில் ஏற்புடையதாக இருக்காது. ஃஃஃஃ

ஐயோ உண்மையெல்லத்தையும் சொல்லித் தொலைக்கிறாரு....

ம.தி.சுதா சொன்னது…

அண்ணே நம்ம ஊரிலும் சரவேடி ஆரம்பம்..

வவ்வால் சொன்னது…

கோவி,

கலக்கல் கட்டுரை, நான் பேச நினைப்பதெல்லாம் நீங்க பேசிட்டிங்கன்னு சொன்னா ,ஏன் நினைச்சுக்கிட்டே இருந்த எழுத வேண்டியது தானேனு கலாய்க்க மாட்டிங்களே :-))

பூமிக்கும் ,பிரபஞ்சத்துக்குமே வித்தியாசம் தெரியாத அறிவு சீவி அவர் ,அவருக்கு எல்லாம் பதில் சொன்னா நேர விரயம் என்பதாலே நீங்க கூட முடிக்கும் போது

//உங்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டுவதும், பாறைமுன் திருக்குறள் அறத்துப் பால் விளக்கவுரை பேசுவதும்//

இப்படி சொல்லிட்டிங்க அதுவே என் கருத்தும் என்பதால் சு.பிரியனை பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.

இது போன்ற மத வெறியர்களை புறக்கணிப்பதே நல்லது.

பொதுவாக மதவாத மூட நம்பிக்கைகளை விமர்சிக்க வேண்டும், வெறியர்களை புறக்கணிக்க வேண்டும் ஏன் எனில் அவர்கள் இது போன்ற செருப்படி பதிவுகளையும் ஆனந்தமாக ரசிக்கும் முத்திப்போன நிலையில் இருக்கிறார்கள்.

அக்கப்போரு சொன்னது…

கோவியார் - புனிதங்கள் என்பவை போதிக்கப்பட்டவையே. அவற்றுள் சிறந்தவை, மிகச்சிறந்தவை என்று எவையுமில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் இருக்கும் சிறுமைகளை ஒப்புக்கொள்ளவேண்டி வரும் என்பதால் ஆராயவே கூடாது என்பார் ஒரு சாரார். மற்றொரு சாராரோ நீங்கள் கேளுங்க நாங்கள் பதிலளிக்கிறோம் என்று சொல்லிவிட்டு பதில் சொல்லாமல் சப்பைக் கட்டு கட்டுபவர்கள்.

இப்போதைய பதிவுலகில் இசுலாமியர்களின் செயல்பாடுகள் இசுலாமை மிகக் கேவலமாக காட்டுகின்றன.

மற்றபடி இந்த மதுரை ஆதீனத்தை பல வருடங்கள் முன்னரே செருப்பால் அடிக்க வேண்டியது ( சாதிகள் பற்றி ஒரு உதாரணம் கூறியதால் ). நண்பர் தடுத்து விட்டார். அதன் பிறகு நேரில் சந்திக்கவில்லை.(இந்த வரி முந்தைய பதிவிர்கானது கோவி Sir)

அக்கப்போரு சொன்னது…

dondu(#11168674346665545885) சொன்னது…
நான் நகைத்ததன் அர்த்தம் இதுதான். ஏற்கனவேயே சுவன்ப்பிரியரின் இஸ்லாமிய தரப்பு வாதங்கள் இசுலாத்தின் அபத்தங்களை அதிகரித்துக் காட்டி அவரை இசுலாத்தின் அனுகூல சத்ருவாக காட்டி வருகிறது.

//////டோண்டு சார் முதல் தடவையாக உங்கள் கருத்து ஒத்துப் போகிறது.

dondu(#11168674346665545885) சொன்னது…

சுவனப்பிரியரின் இப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம்:

பார்க்க:http://suvanappiriyan.blogspot.in/2012/05/blog-post_02.html

///என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.///

----யாரால்..?

மாநில அரசால்..! இஸ்லாமால் அல்லவே...!//
அப்படியா, சாதிப் பெயர்களை அளித்தது இசுலாமியர்கள்தானே. அந்தரத்திலிருந்தா எடுத்து கொடுத்தது அரசு? இப்பிரிவினர் இசுலாமியரிடம் இல்லை என்பதா உங்கள் புரிதல்?

சாதிகள் தவிர்க்க முடியாதவை என நான் சொன்னதுதானே இங்கும் நடந்திருக்கிறது? அதை ஏற்றுத்தானே இசுலாமியரும் இப்போது இவ்வாறு நடந்து கொள்கின்றனர்?

அந்த 7 சாதிகளிலும் 1) தக்னி முஸ்லிம் 2) தூதுகோலா 3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் 4) மாப்பிள்ளா
என்ற நால்வர்தானே பிற்படுத்தப்பட்டவராக காணப்படுகின்றனர் என்பதும் நிஜம்தானே. அவர்கள் நிலைக்கு உங்கள் சமூகத்தில் யார் பொறுப்பாம்?

அப்புறம் என்ன இழவுக்கு இசுலாத்தில் சாதி இல்லை என ஒப்பாரி வைக்கிறீர். ஆக இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?

//நீங்கள் இது போன்ற அரசு ஆணைக்கு அடிபணிய தயாரா..? உங்கள் ஐயங்கார் சாதியை விட்டொழிக்க தயாரா..? பூணூலை அறுத்து எறிய தயாரா..? சாதி வர்ணாசிரமத்தை விட்டொழிக்க தயாரா..? சாதிக்கு எதிராக பதிவு எழுத தயாரா..?//
அட அவ்வளவுதானா உமது புரிதல்? எங்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே, அது இல்லாமலே தலை நிமிர்ந்து முன்னேறுகிறோமே. என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?

டோண்டு ராகவன்

வவ்வால் சொன்னது…

கோவி,

//1) ஷேக்
2) சையது
3) தக்னி முஸ்லிம்
4) அன்சார்
5) தூதுகோலா
6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
7) மாப்பிள்ளா//

நான் இதனை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே சுட்டிக்காட்டி கேட்டிருந்தேன், ஆனால் எல்லாம் பின்னூட்டங்களில் பேசுவதால் இப்போ எந்தப்பதிவில் என சொல்ல முடியவில்லை.

அப்போது மரைக்காயர் என்பது ஜாதி அல்ல மரக்கல நாயகர் என்பது கப்பல் கேப்டன் அது செய்த வேலையை குறிக்கும் என சொல்லி தப்பிவிட்டார்கள்.

இப்போது அரசு கணக்கெடுப்பு என்றதும் ஜாதி என்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அரபியாவில் 64 வகையான இனக்குழு /ஜாதி இருக்கு , குரைஷி ,அப்பாசிட்,உம்மயாத் எல்லாம் அப்படியானது தான்.

சு.பிரியன் போனப்பதிவில் ஜைனப் குரைஷி என்பதால் முகம்மதின் வளர்ப்பு மகனை கட்டிக்கொள்ள சம்மதிக்கவில்லை என அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் அப்போதே சுட்டிக்காட்டணும் என நினைத்தேன் விட்டுப்போச்சு.

இஸ்லாமியர்களின் ஜாதி எல்லாம் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என நினைப்பு வெளியில் தெரியாத வரையில் அவங்க ஜாதியில்லாத உத்தமர்கள் என சொல்லிப்பாங்க, இப்போ பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது எல்லாம் பூனையாரின் திருவிளையாடல் போல :-))

சார்வாகன் சொன்னது…

அருமை சகோ,

சொல்ல நினைத்த‌தை சொல்லிவிட்டிர்கள்
நம்ம சகோக்களும் சுமார் 5+ வருடங்களாக பதிவு எழுதி மகுடத்தில் ஏற்றி விள்க்கம் சொல்லி,பிற மதங்களை தாககியும் ஒன்றும் பலன் இல்லையே.எல்லா பக்கங்களிம் இருந்து எதிர்ப்பை சம்பாதித்தது தவிர.

அவர்கள் சொல்ல்லும் பொய்கள் அவர்களாலேயே வெளிவருவது இன்னொரு நகைச்சுவை.

1.(இஸ்லாமில்) சாதி இல்லை ஆனால் (முஸ்லிம்களிடம்) உண்டு.

2.பல தார மணத்தை ஆதரித்து பதிவிடுவேன் .ஆனால் என் வீட்டு பெண்களுக்கு செய்ய மாட்டேன்.ஊருக்குத்தான் உபதேசம்.

3.பிறமதங்களை விமர்சிப்பார்கள்,அவர்களை விமர்சித்தால் பொங்கி விடுவார்கள்.

4.விரித்தான்,பிரித்தான் ,கிழித்தான்,ஒட்டினான்,வெட்டினான் என்றால் அறிவியல் கொண்டு வரும் ந்கைசுவைதான் பலரையும் குஷிப்படுத்திய ஒரே விடயம்.

5.சவுதி அரசுதான் உலகின் தலை சிறந்த அரசு.அவர்களின் பெண்களுக்கு ஓட்டுரிமை இன்மை,ஊர்தி ஓட்டும் உரிமை இன்மை என்பதை இந்தியாவிலும் இஸ்லாமிய பெண்களுக்கு நடைமுறைப் படுத்த ஏன் நம் சகோக்கள் போராட்டம் நடத்துவது இல்லை?

6. இன்னும் கல்லெறிந்து கொல்லுதல் ,தலை வெட்டிக் கொல்லுதல் போன்ற காட்டு மிராண்டித்தனங்களை ஆதரிப்பவர்கள் நாகரிக சமுதாயத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

ஏன் இஸ்லாமியர் பெரும்பான்மை நாடுகளில் வன்முறை தலை விரித்து ஆடுகிற‌து என்றால் இதனால்தான்!!!!!!!!!!!!

அப்புறம் இவர்களுடன் விவாதித்தால் ஒருவருக்கு பதில் சொன்னால் இன்னொருவர் வந்து நீ எப்படி இஸ்லாமை பற்றி கூறலாம் ,அவன் கேட்டால் அவனுக்கு மட்டும் பதில் சொல் என்று சொல்லும் அழகே அழகு!!!!!!!

கொடுமை!!!!!!!!!!!!

நன்றி

suvanappiriyan சொன்னது…

திரு டோண்டு ராகவன்!

//சாதிகள் தவிர்க்க முடியாதவை என நான் சொன்னதுதானே இங்கும் நடந்திருக்கிறது? அதை ஏற்றுத்தானே இசுலாமியரும் இப்போது இவ்வாறு நடந்து கொள்கின்றனர்?

அந்த 7 சாதிகளிலும் 1) தக்னி முஸ்லிம் 2) தூதுகோலா 3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் 4) மாப்பிள்ளா
என்ற நால்வர்தானே பிற்படுத்தப்பட்டவராக காணப்படுகின்றனர் என்பதும் நிஜம்தானே. அவர்கள் நிலைக்கு உங்கள் சமூகத்தில் யார் பொறுப்பாம்?//

சமூக அமைப்பில் ஒருவரை அடையாளப் படுத்திக் கொள்வதற்காக குடும்ப பெயர் தொழில்பெயர் மொழி பெயரை வைத்து ஒருவரை அழைத்துக் கொள்வது எல்லா நாட்டிலும் உள்ள ஒரு வழமை. குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர்கள் என்றும் மரக்கலங்கள் போட்கள் செய்து வியாபாரம் செய்தவர்கள் மரைக்காயர் என்றும் உருது மொழி பேசுபவர்கள் தக்னி என்றும் புரோகித தொழிலை செய்தவர்கள் லெப்பை என்றும் முன்பு முஸ்லிம்கள் வழக்கு மொழியில் சொல்லி வந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குள் எவருமே தீண்டாமையை கடைபிடிப்பதில்லை. திருமண உறவு வைத்துக் கொள்வதிலும் எந்த தடங்கலும் இல்லை. குர்ஆனிலோ ஹதீஸிலோ இது போன்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. பள்ளியில் தொழும் போதும் தோளோடு தோள் ஒட்டி இன்று வரை சகோதரர்களாகத்தான் பழகி வருகின்றனர்.

ஆனால் இந்து மதத்திலோ ஸ்மிருதிகளில் ஒவ்வொரு வருணத்தானுக்கு என்ன தொழில் என்றும் அவனது தகுதி என்ன என்றும் நிர்ணயிக்கப்பட்டு அது இன்று வரை வேத பாட சாலைகளில் பயிற்று விக்கவும் படுகிறது. தீண்டாமை இந்து மதத்தில் வணக்கத்தலங்களில் எந்த அளவு கடை பிடிக்கப்படுகிறது என்பதை சமீப காலம் வரை நாம் பார்த்து வருகிறோம். எனவே இஸ்லாமிய பிரிவுகளுக்கும் இந்து மத வர்ண பேதங்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். இதை தெரிந்து கொண்டே நீங்கள் மறுக்க கூடாது.

//அப்புறம் என்ன இழவுக்கு இசுலாத்தில் சாதி இல்லை என ஒப்பாரி வைக்கிறீர். ஆக இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?//

நாங்கள்தான் முஸ்லிம்கள் அனைவரையுமே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கச் சொல்லி போராடி வருகிறோமே! அரசாங்கமாக சிலரை மேலாக்கியும் சிலரை கீழாக்கியும் வகைபடுத்தியுள்ளது. இது தவறு என்றும் இதை மாற்ற வேண்டியும் இன்றும் போராடி வருகிறோம்.

//என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?//

இதுதான் இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள வித்தியாசமே! இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்து மதத்தில் தீண்டாமை ஒழியப் போவதில்லை என்பதை உங்களின் பின்னூட்டமே காட்டிக் கொண்டிருக்கிறது.

dondu(#11168674346665545885) சொன்னது…

மேலே குறிப்பிட்ட சுவனப்பிரியனின் அதே பதிவில் நான் இட்ட இன்னொரு பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது.

//ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது.//

//ஆனால் அவர்கள் தங்களுக்குள் எவருமே தீண்டாமையை கடைபிடிப்பதில்லை. திருமண உறவு வைத்துக் கொள்வதிலும் எந்த தடங்கலும் இல்லை.//

இரண்டையும் நீங்கள்தான் கூறுகிறீர்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதிகள் இருந்தே தீரும்.

பை தி வே, உங்கள் குடும்பத்தினர் சென்சஸ் சமயத்தில் எந்த சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? சாதி இல்லை எனக் கூற தில் இருக்கா? அவ்வாறு கூறிவிட்டால், பல முசல்மான்களது கோபத்துக்கு ஆளாக நேரிடுமே? எதுக்கும் யோசித்து சூதனமா நடந்துங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan சொன்னது…

சகோ சார்வாகன்!

1.(இஸ்லாமில்) சாதி இல்லை ஆனால் (முஸ்லிம்களிடம்) உண்டு.

திரு டோண்டுவுக்கு கொடுத்த பதிலில் இந்த கேள்விக்கான பதில் இருக்கிறது.

//2.பல தார மணத்தை ஆதரித்து பதிவிடுவேன் .ஆனால் என் வீட்டு பெண்களுக்கு செய்ய மாட்டேன்.ஊருக்குத்தான் உபதேசம்.//

பலதார மணம் என்பது ஒரு அனுமதிதானே யொழிய அது கட்டாய கடமை அல்ல என்ற அரிச்சுவடி பாடத்தை இன்னும் விளங்காமல் இருப்பது ஆச்சரியம்.

3.பிறமதங்களை விமர்சிப்பார்கள்,அவர்களை விமர்சித்தால் பொங்கி விடுவார்கள்.

இணையத்தில் அதிகமாக விமரிசிக்கப்பட்டது இஸ்லாம்தான். அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறிக் கொண்டுதானே இருக்கிறோம்.

4.விரித்தான்,பிரித்தான் ,கிழித்தான்,ஒட்டினான்,வெட்டினான் என்றால் அறிவியல் கொண்டு வரும் ந்கைசுவைதான் பலரையும் குஷிப்படுத்திய ஒரே விடயம்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்னும் 20 வருடங்களில் இஸ்லாமிய மயமாகப்போவது நீங்கள் கூறிய குர்ஆனின் வசனங்களைக் கொண்டே. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்வது நடக்கிறதா இல்லையா என்று......

5.சவுதி அரசுதான் உலகின் தலை சிறந்த அரசு.அவர்களின் பெண்களுக்கு ஓட்டுரிமை இன்மை,ஊர்தி ஓட்டும் உரிமை இன்மை என்பதை இந்தியாவிலும் இஸ்லாமிய பெண்களுக்கு நடைமுறைப் படுத்த ஏன் நம் சகோக்கள் போராட்டம் நடத்துவது இல்லை?

சவுதி அரசுதான் இஸ்லாமிய சட்டங்களை உரிய முறையில் பயன்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது என்று வேண்டுமானால் சொல்லியிருப்பேன். பெண்கள் கருப்பு உடைக்கு மாறியது: வரதட்சணை ஒழிக்கப்பட்டது: தர்ஹா வணக்கம் பிசுபிசுத்துப் போனது: மூடப் பழக்கங்கள் ஒழிக்கப்பட்டது: புரோகிதம் ஒழிக்கப்பட்டது: என்று மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் பொறுங்கள். அனைத்து முஸ்லிம்களுமே குர்ஆன் ஹதீதின் படி வாழும் முறையை நம் காலத்திலேயே தமிழகத்தில் பார்க்கலாம்.

6. இன்னும் கல்லெறிந்து கொல்லுதல் ,தலை வெட்டிக் கொல்லுதல் போன்ற காட்டு மிராண்டித்தனங்களை ஆதரிப்பவர்கள் நாகரிக சமுதாயத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

நேற்று கூட ஒரு சிறுமியை கல்லூரி கட்டடம் கட்டுவதற்காக நரபலி கொடுக்கப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நம் தங்கத் தமிழகத்தில்தான். இத்தகைய காட்டுமிராண்டிகள் இன்றும் உலகத்தில் இருக்கும் போது அது போன்ற சட்டங்கள் அவசியம் இருந்தே ஆக வேண்டும். சவுதியில் இப்படி ஒரு கொலையை செய்து விட்டு மனிதன் வெளியில் நடமாட முடியுமா? திமுக பெரிய இடத்துக்கும் இந்த கொலையில் தொடர்பு உண்டாம். முதலில் அங்கு சென்று உங்களின் உபதேசத்தை ஆரம்பியுங்கள். :-)

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

//ஒரு ஷியா முஸ்லும் சுன்னி முஸ்லாமாகவோ, சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமாக மாற வழியே இல்லாத உங்கள் மார்க்கத்தில் நீங்கள் சாதியைக் கடந்தவராக பிரகனப்படுத்துவது எவ்வாறு ?//

ஷியா சன்னி பிரிவு என்பது பிறப்பால் வந்தது அல்ல. யார் அரசு அமைப்பது என்பதில் போட்டியில் உருவான அமைப்பே இந்த இரு அமைப்புகளும். அந்த காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் சரிவர இல்லாததால் செய்திகள் சென்று கால தாமதமானது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எகிப்திலிருந்து வந்த சில நயவஞ்சகர்கள் பிரிவுக்கு தூபம் போட்டார்கள். அதில் சிலர் பலியாகி விட்டனர். குi;ஆனிலோ ஹதீஸிலோ இந்த இரண்டு பெயரையும் உங்களால் பார்க்க முடியாது. எனக்கு தெரிந்தே இரண்டு ஷியாக்கள் சன்னிகளாக தங்களை மாற்றிக் கொண்டதை பார்த்துள்ளேன். குர்ஆனை சரியாக விளங்கியவன் பிரிவுகளில் இருக்க மாட்டான்

//சுவனப்பிரியன் விரும்பினால் தாய் மதம் திரும்பலாம், அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனுக்கு பூணூல் அணிவித்து தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.//

திரு டோண்டு ராகவன் மேல் உங்களுக்கு அப்படி என்ன சார் கோபம். என்னை அவர் சாதியில் சேர்த்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்று கண்டிஷன் வைப்பேன். கோவில்களில் பிராமணர்களுக்கு தனி மரியாதை செய்வதை கண்டிப்பேன். குப்பனையும் சுப்பனையும் அக்ரஹாரத்துக்குள் கூட்டி வந்து எனது பிள்ளைகளோடு விளையாட விடுவேன்: புஹாரி பிரியாணியை வாரா வாரம் சமைத்து அக்ரஹாரம் முழுவதும் முகல் பிரியாணி மணத்தை பரப்புவேன்: தெருவுக்கு ஒரு சாமி: சாதிக்கு ஒரு சாமி என்ற நிலையை மாற்றி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நிலைக்கு அக்ரஹாரத்தை மாற்ற முயற்ச்சிப்பேன். 'ஒனக்கு ஏன் ஓய் இந்த வேண்டாத வேலை.. முசல்மானை அக்ரஹாரத்துக்கு கூட்டி வந்து நாஸ்தி பண்ணிட்டேளே....' என்று அவாள் இவாளை பிடித்து உலுக்கும் போது சுவனப்பிரியன் அக்ரஹாரத்திலிருந்து எஸகேப்.....:-).

Unknown சொன்னது…

டோண்டு
நீங்கள் சுவன பிரியனை ..வஹ்ஹாபி ,,மரைக்காயர் .லெப்பை என எப்படி சொல்லி அழைத்தாலும் அவர் கோவபடமட்டார் ..அவர் முஸ்லீம் அவ்வளவு தான் ...
நம்ம கோவிகண்ணனை உங்கள் வேதத்தில் சொல்லியது போல் சூத்திரன் (இதற்க்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அவரிடம் சொல்லவும் )என்று அழைத்து பாருங்கள் ..

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சுவனன்,

1.சாதி என்பதே தவிர்க்க இயலாத விடயம் என்பதை ஒத்துக் கொள்வது போல் இருக்கிறது.சாதி = இனக்குழு என்பதுதானே உங்கள் விளக்கம்.
இதையும் உருவாக்கியது அல்லாஹ் என்றே குரான் கூறுகிறது.

முஸ்லிம்கள் கல்வியில்,பொருளாதார ரீதியில் பின்த‌ங்கி இருந்தாலும் அவர்கள் பெருமிதம் உடைய சம்த்துவம் தரும் மதத்தை சார்ந்தவ்ர்களாக இருப்பதால் இட ஒதுக்கீடு தேவையில்லை . அல்லா சுவனத்தில் காஃபிர் சிலை வணங்கிகளான இந்துக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே உங்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை நியாயம் ஆகும்.

எங்கள் தவறுகளை ஒத்துக் கொண்டு அதனை எதிர்கால்த்தில் சீராக்க முயற்சிக்கிறோம்.உங்களுடையது 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாவால் முழுமையாக்கப்பட்டது.

2. ஹி ஹி பலதாரமணத்தை ஆதரித்தாலும் அதனை உம் வீட்டு பெண்களுக்கு செய்ய மாட்டீர் ஏன் எனின் அது கேவல்மான‌து என்பதாலதானே.சரி இதனை மறைக்க கட்டாயமிலை என குரான் கூறுவதாக் கூறுகிறீர் அதனையும் பார்க்கலாம்!
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

இதில் என்ன கூறுகிறது?"இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ" திருமணம் செய்யுங்கள் நன்னான்கென்றால் 16 அல்லவா!!!
சரி அது கிடக்கிறது.அனைத்து மனைவிகளிடம் நியாய‌மாக் நடக்க முடியாதவர்கள் மட்டும் ஒரு மனைவி அல்லது அடிமைப்பெண்ணை வைத்து போதுமாக்கி (கொடுமை!!!!!!!!!!) கொள்ள வேண்டும்.

நம் தமிழ் இஸ்லாமிய பதிவர்கள் எவராலும் முடியாத விடயம் இது.ஹி ஹி அனைத்து மனைவிகளிடமும் நியாயமாக் நடக்கும் மனிதர்கள் சவுதியில் நிறைய இருப்பது அறிய முடிகிறது.

நீங்கள் உங்கள் குடும்பத்தில் அடைபிடிக்காத நடைமுறைகளை பிறருக்கு பரிந்துரைப்பதால்தான் பிரச்சினை !!!!!!.

10+ திரும்னம் செய்த முகமதுவும் அவர் மருமக்கன் இன்னொரு திரும்னம் செய்ய முற்பட்ட போது தடுத்த நகைச்சுவை விடய்ம் ஞாபக்த்திற்கு வருகிறது.

“ஊருக்குத்தான் உபதேசம் “

பல்தாரமனம் கட்டாயமில்லை என்பதால் ஒரு விளக்கம்.

இதே போல் கட்டாயமில்லாத விடயங்கள் ஏராளமாக் உண்டு ஒரு எ.கா
குரானில் 5 வேளை தொழுகை,சுன்னத் செய்வது குறிப்பிடபட வில்லை ஆகவே அதுவும் கட்டாயமில்லை.

நாம் உங்களை குற்றம் சாட்டவில்லை.ஒவ்வொரு மதத்திலும் உள்ள சர்ச்சைக்குறிய விடயங்கள் போல் இஸ்லாமிலும் உள்ளது.ஆகவே இஸ்லாம் மட்டுமே சரியானது,பிற மதங்களை விட உயர்ந்தது என்னும் பெருமிதப் பிரசாரத்தை தவிர்க்கவே வேண்டுகிறோம்.

உங்கள் கொள்கை உங்கள்க்கு,எங்கள் கொள்கை எங்களுக்கு
இந்த குரான் 109 அத்தியாயத்தில் காஃபிர்கள்க்கு பதில் முஸ்லிம்கள் என்று போட்டு பார்ப்பதுதான் எங்கள் பதில்
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

நன்றி

kumar சொன்னது…

*** நம்ம கோவிகண்ணனை உங்கள் வேதத்தில் சொல்லியது போல் சூத்திரன் (இதற்க்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அவரிடம் சொல்லவும் )என்று அழைத்து பாருங்கள் ..***

என்ன சகோதரரே இதற்க்கு கூடவா அவருக்கு அர்த்தம்
தெரியாமல் இருக்கும்?
நவீன பார்ப்பனர்கள் என்ற
வார்த்தை தெரியுமா? பிறப்பால் தலித் ஆக இருப்பார்கள்
இசைமேதை இளையராஜாவைப்போல.
ஆனால் பின்னாளில் வசதி வாய்ப்பு வந்ததும்
எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் அதே
அன்னாரைப்போலவே.தேனியிலோ,போடியிலோ
தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் கலவரம்
வெடிக்கும்போது பாரதிராஜா என்ற தேவர் கூப்பிடுவார்
இளையராஜா என்ற தலித்தை வா நாம் இருவரும்
இனைந்து ஒற்றுமையை உருவாக்குவோம் என்று.
அப்போது பொங்கி எழுவார் இளையராஜா என்கிற நவீன
பார்ப்பனர்.என்னிடம் கலக்காமல் இவர் எப்படி
பத்திரிகைக்கு பேட்டி அளிக்கலாம் என்று.
பிரச்னை அதுவல்ல.என் சாதி அநேகமாக
மறக்கப்பட்டுவிட்ட ஒன்று.அதை ஏனடா இப்போது
வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துகிறாய் என்பதுதான்
இங்கே ஆத்திரம் வர காரணம்.

சார்வாகன் சொன்னது…

நண்பர் சுவனன்

விளக்கம் கொடுப்பது,நியாயப்படுத்துவது உங்களுக்கு மட்டுமே கைவந்த கலை ,இஸ்லாமியர்களின் தனியுடமை என நினைக்க கூடாது.அனைவராலும் முடியும்.

கல்லெறிந்து கொல்லுதல்,தலை வெட்டுதல்,கை கால் வெட்டுதல் போன்றவை சவுதி இரான் அரசுகள் செய்பவை.

நரபலி கொடுத்தவன் செய்தது இந்திய சட்ட விரோதம்

ஆக்வே இரண்டையும் ஒப்பிட முடியாது!!!!!

வேண்டுமானால் உங்கள் மதத்தை சேர்ந்த குற்றவாளிகளுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஷாரியா தண்டனை வழங்கலாம என்றால் மாட்டேன் என்று சப்பைக் கட்டு கட்டுவீர்கள் என்பதும் அனைவரும் அறிவோம் .

முஸ்லிம் பெண்களுக்கு ஓட்டு,ஊர்தி ஓட்டுதல் இரண்டையும் உலக் முழுதும் சவுதியை பின் பற்றி தடுக்க ஊக்குவிக்கிறோம்.

இல்லையெனில் சவுதியிலும் பெண்கள்க்கு ஓட்டுரிமை,ஊர்தி ஓட்டுட்ம் உரிமைக்கு குரல் கொடுங்கள்.

இரட்டை வேடம் போடாதிர்கள்.

உங்கள் மதத்தை சீர்படுத்த முயலுங்கள்.எங்களுக்கு தேவையில்லை
&&&&&&&&&&&

உங்கள் மத பிரச்சாரம் செய்ய உங்கள்க்கு உரிமை உண்டு என்றாலும் அதில் பிற மதங்களை நீங்கள் விமர்சிப்பதால் மட்டுமே எதிர்வினைகள் வருகின்றன.

ஆகவே இஸ்லாமிய பதிவர்கள் பிற மத&இறை மறுப்பாளர்கள் மீதான விமர்சனங்களை நிறுத்தினால் எதிர் வினைகளும் நின்றுவிடும்.

இதில் நமக்கு பிடித்த நகைச்சுவை மிகுந்த‌ மத அறிவியல் .பரிணாம எதிர்ப்பு பதிவுகள் அடங்காது.போட்டுத் தாக்குங்கள்.நாங்களும் போட்டுத் தாக்குகிறோம்.

இவை இரண்டும் வராமல் போர் அடிக்கிறது ஏற்பாடு செய்யவும்.

நன்றி

? சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
R.Puratchimani சொன்னது…

இறைத்தூதர் கோவியார் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்கிறார். வாழ்த்துக்கள்

வேகநரி சொன்னது…

இஸ்லாமில் சாதிகள் உண்டு என்ற உண்மையை சொன்னதிற்காக அஸ்மா என்பவரின் பதிவுக்கு மைனஸ் வாக்கும் குத்தியுள்ளார்கள். பிளஸ் 5மட்டுமே. ஏக இறைவன் உங்களுக்கு அது தருவான் இது தருவான் என்ற புகழ்பாடும் பின்னோட்டங்களுமில்லை.

//இறைத்தூதர் கோவியார் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்கிறார்//
நண்பர் புரச்சிமணி, இந்த இறைத்தூதரை நான் ஏற்க்க தயார். இவர் பாலியல் கொடுமைகள் செய்தவரில்லை. ஒரு மனைவியோடு நியாயம வாழ்பவர்.
இஸ்லாமிய மதவெறி, இஸ்லாமிய மதப்பிரச்சாரத்திற்கெதிரான மதுரன், ம.தி.சுதாவின் பணிகள் அருமையாக இருக்கிறது.

? சொன்னது…

//புஹாரி பிரியாணியை வாரா வாரம் சமைத்து அக்ரஹாரம் முழுவதும் முகல் பிரியாணி மணத்தை பரப்புவேன்//

அக்ரஹாரத்தில் சமத்துவம் வளர்க்கும் ஆர்வம் புரிகிறது. அதுக்கு முன்னால் நீங்கள் கோவா விண்டலூ சமைத்து அதன் மணத்தை உங்கள் வீட்டில்/ தெருவில் பரப்பி சமத்துவம் வளர்க்கலாமே? அது திராவிடர் விரும்பும் உணவு அல்லவா?

கோவி.கண்ணன் சொன்னது…

//kumar சொன்னது…
*** நம்ம கோவிகண்ணனை உங்கள் வேதத்தில் சொல்லியது போல் சூத்திரன் (இதற்க்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அவரிடம் சொல்லவும் )என்று அழைத்து பாருங்கள் ..***//

அது கிடக்கட்டம், பார்பனர்களைப் பொறுத்த அளவில் நீர்கூட சூத்திரன் தான். இப்ப பொருள் நல்லா விளங்கும் என்று நினைக்கிறேன்,

அது சரி முசல்மான்களெல்லாம் எப்போது குமார் என்று பெயர் வைத்துக் கொள்ளத் துவங்கினார்கள். அதிசயமாக இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தவனத்தான் கூறியது...
//புஹாரி பிரியாணியை வாரா வாரம் சமைத்து அக்ரஹாரம் முழுவதும் முகல் பிரியாணி மணத்தை பரப்புவேன்//

அக்ரஹாரத்தில் சமத்துவம் வளர்க்கும் ஆர்வம் புரிகிறது. அதுக்கு முன்னால் நீங்கள் கோவா விண்டலூ சமைத்து அதன் மணத்தை உங்கள் வீட்டில்/ தெருவில் பரப்பி சமத்துவம் வளர்க்கலாமே? அது திராவிடர் விரும்பும் உணவு அல்லவா?//

சுவனப்பிரியன் பன்றி இறைச்சி போட்டால் கலந்து கொள்வார், ஆனா ஒரு கண்டிசன் அத சாப்பிட்ட பிறகு நாலு பேர் அவரது வஹாபியிசத்துக்கு மாறனும். அல்லாவுக்காக எதையும் செய்வார் சுபி.

கோவி.கண்ணன் சொன்னது…

//thequickfox கூறியது...
இஸ்லாமில் சாதிகள் உண்டு என்ற உண்மையை சொன்னதிற்காக அஸ்மா என்பவரின் பதிவுக்கு மைனஸ் வாக்கும் குத்தியுள்ளார்கள். பிளஸ் 5மட்டுமே. ஏக இறைவன் உங்களுக்கு அது தருவான் இது தருவான் என்ற புகழ்பாடும் பின்னோட்டங்களுமில்லை. //

இவங்க நம் கண் முன் ஆடும் தாண்டவங்களைப் பார்க்கிறோம், இஸ்லாமிய ஆட்சியில் இந்தியா எப்படி இருந்தது என்று ஓரளவாவது கற்பனை செய்ய இவர்கள் செயல்பாடுகள் உதவுகிறது, நன்றி சொல்லுங்கள், அவர்களுக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//முஸ்லிம் பெண்களுக்கு ஓட்டு,ஊர்தி ஓட்டுதல் இரண்டையும் உலக் முழுதும் சவுதியை பின் பற்றி தடுக்க ஊக்குவிக்கிறோம்.

இல்லையெனில் சவுதியிலும் பெண்கள்க்கு ஓட்டுரிமை,ஊர்தி ஓட்டுட்ம் உரிமைக்கு குரல் கொடுங்கள்.

இரட்டை வேடம் போடாதிர்கள்.
//

சார்வாகன், இவர்கள் போற்றும் சவுதியை நண்பர் மூ.மாலுக் காலுக்கு கீழே போட்டு நசுக்கியுள்ளார். இவங்க ஜம்பமெல்லாம் வரட்டு வேதாந்தம் என்பது ஏற்கனவே தெரிந்தது தானே.
http://vilambi.blogspot.com/2012/04/blog-post_12.html

கோவி.கண்ணன் சொன்னது…

// R.Puratchimani கூறியது...
இறைத்தூதர் கோவியார் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்கிறார். வாழ்த்துக்கள்//

இறைத்தூதர், குறைத்தூதர்( நான் என்னைச் சொன்னேன்), மார்க்கம், மூர்க்கம்னு ரொம்ப கொலவெறியாக போய் கொண்டு இருக்கிறது ஐயோ நான் இந்த ஆட்டைக்கு வரல

கோவி.கண்ணன் சொன்னது…

//Unknown கூறியது...
டோண்டு
நீங்கள் சுவன பிரியனை ..வஹ்ஹாபி ,,மரைக்காயர் .லெப்பை என எப்படி சொல்லி அழைத்தாலும் அவர் கோவபடமட்டார் ..அவர் முஸ்லீம் அவ்வளவு தான் ...
நம்ம கோவிகண்ணனை உங்கள் வேதத்தில் சொல்லியது போல் சூத்திரன் (இதற்க்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அவரிடம் சொல்லவும் )என்று அழைத்து பாருங்கள் ..//

அட அவர் பாஷையில் நீங்களும் சூத்திரன் தான், உங்க பாஷையில் நானும் காஃபிர் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குப்பனையும் சுப்பனையும் அக்ரஹாரத்துக்குள் கூட்டி வந்து எனது பிள்ளைகளோடு விளையாட விடுவேன்: //

சுபி சார், முதலில் குப்பனையும் சுப்பனையும் என்று சொல்வதை நிறுத்துங்கள், உங்களுக்கு அவர்கள் அவ்வளவு கேவலமாகப் போய்விட்டார்களா ?

முடிந்தால் அவர்கள் விரும்பும் பன்றி இறைச்சியை அவர்கள் உண்ணுவதை அது மலத்தை தின்றதால் அல்லா எங்களுக்கு விலக்கிவிட்டான் என்று கூறி அவர்கள் உணவில் மலம் கலக்காதீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//பலதார மணம் என்பது ஒரு அனுமதிதானே யொழிய அது கட்டாய கடமை அல்ல என்ற அரிச்சுவடி பாடத்தை இன்னும் விளங்காமல் இருப்பது ஆச்சரியம்.//

அப்படி செய்கிறவன் அரிச்சுவடி படிச்சுட்டு தான் அவ்வாறு செய்கிறானா ? அடேங்கப்பா. கட்டாயக் கடமை ன்னு இருந்தால் நீங்கள் நினைப்பதைவிட உங்க மதம் வேகமாக பரவும். உங்களுக்கு அந்த ஆதங்கம் இருக்க வேண்டுமெ

கோவி.கண்ணன் சொன்னது…

// திருமண உறவு வைத்துக் கொள்வதிலும் எந்த தடங்கலும் இல்லை. குர்ஆனிலோ ஹதீஸிலோ இது போன்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. பள்ளியில் தொழும் போதும் தோளோடு தோள் ஒட்டி இன்று வரை சகோதரர்களாகத்தான் பழகி வருகின்றனர்.//

முதலில் சவுதியில் எத்தனை சவுதியர்கள் எகிப்து போன்ற ஆப்பிரிக்க நாட்டு கருப்பர்களை முஸ்லிம் என்பதால் மணந்து கொள்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் தந்துவிட்டு கதை அளக்கலாமே சார். உங்க தோளோடு தோள் சேர்த்து தொழவருகிறவன் உங்கள் உறவினர் பெண்களை மணக்க முன்வருவானா என்று கேட்டுச் சொல்லுஙகள் ? உடனே பண்பாடு, பழக்கவழக்கமெல்லாம் வேறு, என்று சொல்லாதீர்கள், உங்கள் மதத்தைத் தாண்டி பண்பாடே இல்லை என்று நம்புவர் நீங்கள்

vivek kayamozhi சொன்னது…

ஒரு நித்யானந்தா வை வைத்து எம் மதத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. "அஹம் பிரம்மாஸ்மி " - - நானும் கடவுள், நீயும் கூட எனும் உயர்ந்த கோட்பாடு எமக்கு சிறு வயது முதலே கர்ப்பிக்கப்பட்டுள்ளது."நீட்டலும்,மழித்தலும் வேண்டாம் , உலகம் பழித்தது ஒழித்துவிடின் " என்பதே துறவியர்க்குரிய லட்ச்சணம். இன்னும் பல உயர்ந்த கருத்துக்களையும்,சிந்தனைகளையும் கொண்டுள்ள என் மதம்
'கடவுள் மறுப்பு "சுதந்திரத்தையும் எமக்கு அளித்துள்ளது, தயவு செய்து" சு.பி" போன்ற உளறல்களுக்கெல்லாம் படித்து பதில் சொல்வது " தெருவில் போகும் விபச்சாரிக்கு ஒழுக்க உபதேசம் செய்வதற்கு ஒப்பாகும்". அவள் விபச்சாரத்தில் கண்ட சுகத்தால் அதை விட்டுவிட மனமின்றி உங்கள் குடும்பத்தைப்பற்றி சத்தம் போட்டு நீங்கள் கூசி ஓடும்படி ஒப்பாரி வைத்து நாடகமாடுவாள். நல்லோர்க்கு அழகு அவளை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிவிட வேண்டியதுதான்.

navidmum சொன்னது…

//சவுதி அரசுதான் இஸ்லாமிய சட்டங்களை உரிய முறையில் பயன்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது என்று வேண்டுமானால் சொல்லியிருப்பேன்.//


சகோ சுவனப்ரியன் , சவுதியில் தான் ஷரியத் சட்டத்தை follow பண்ணுகிறார்கள் என்று சத்தியம் செய்கிரிர்களே , ஒரு அப்பாவியை 18 வருடம் அடிமை போல வேலை வாங்கி விட்டு வெறும் பிச்சை காசு 85000 ரியால் குடுத்து ஊருக்கு அனுப்பிடார்களே. அந்த அடிமை
முதலாளிக்கு ஏதாவது ஷரியத் படி தண்டன்னை கேடைசுதா? உலகத்துல வேற எங்கு இருந்தாலும் இது போன்ற கொடுமை பெரிய பிரச்சினை யா இருக்கும். ஆனா சவுதில இதலாம் சாதரணம். உயிரோட வந்த வரைக்கும் சந்தோசம்.
இந்த லட்சணத்துல நீங்க என்னடான சௌதிய பத்தி ஓவரா உதார் விடரிங்க.

//kumar சொன்னது…
*** நம்ம கோவிகண்ணனை உங்கள் வேதத்தில் சொல்லியது போல் சூத்திரன் (இதற்க்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அவரிடம் சொல்லவும் )என்று அழைத்து பாருங்கள் ..***//

அது கிடக்கட்டம், பார்பனர்களைப் பொறுத்த அளவில் நீர்கூட சூத்திரன் தான். இப்ப பொருள் நல்லா விளங்கும் என்று நினைக்கிறேன்//

திரூ கண்ணன் கோவி, நீங்கள் என்ன தான் சமாளிசாலும் அவர் கேட்ட கேள்வில அர்த்தம் இல்லாமலில்லை உங்களால பதில் சொல்ல முடியவில்லை என்பதும் உண்மை தான்.

innnoru vishayam egyptil karupargal adhiga alavu kidayathu.

கோவி.கண்ணன் சொன்னது…

//திரூ கண்ணன் கோவி, நீங்கள் என்ன தான் சமாளிசாலும் அவர் கேட்ட கேள்வில அர்த்தம் இல்லாமலில்லை உங்களால பதில் சொல்ல முடியவில்லை என்பதும் உண்மை தான்.

innnoru vishayam egyptil karupargal adhiga alavu kidayathu.//

நான் பார்பனர்களை பிராமணர் என்று சொல்வது கிடையாது, எனவே பார்பனர் கொடுக்கும் சூத்திரப் பட்டமும் எனக்கு செல்லாது, முசல்மான்கள் உங்களை காஃபிர் என்று தான் சொல்லுவார்கள். நீங்கள் என்ன இறை நம்பிக்கையற்றவரா ? ஒவ்வொருவரும் பிறரை மட்டம் தட்ட எதோ ஒரு எழவை வைத்திருப்பார்கள், இதுல எவன யோக்கியம் என்று சொல்ல முடியும் ?

நான் எங்காவது பார்பனரை பிராமணர் என்று சொல்லி இருந்தால் சுட்டவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//vivek kayamozhi கூறியது...//

வஹாபிகள் மிகவும் மதவெறியோடு தான் நடந்து கொள்கிறார்கள், போகிற போக்கைப் பார்த்தால் இவர்களில் ஒருவர் கூட தற்கொலையாளியாக மாறி எங்காவது குண்டு வைப்பார் என்கிற அச்சமும், வருத்தமும் உண்டு, அவர்கள் கொஞ்மேனும் தெளிவடைய மாட்டார்களா என்கிற நப்பாசை தான்.

suvanappiriyan சொன்னது…

கோவி கண்ணன்

//திரூ கண்ணன் கோவி, நீங்கள் என்ன தான் சமாளிசாலும் அவர் கேட்ட கேள்வில அர்த்தம் இல்லாமலில்லை உங்களால பதில் சொல்ல முடியவில்லை என்பதும் உண்மை தான்.// :-))))))))

//நான் பார்பனர்களை பிராமணர் என்று சொல்வது கிடையாது, எனவே பார்பனர் கொடுக்கும் சூத்திரப் பட்டமும் எனக்கு செல்லாது, முசல்மான்கள் உங்களை காஃபிர் என்று தான் சொல்லுவார்கள். நீங்கள் என்ன இறை நம்பிக்கையற்றவரா ? ஒவ்வொருவரும் பிறரை மட்டம் தட்ட எதோ ஒரு எழவை வைத்திருப்பார்கள், இதுல எவன யோக்கியம் என்று சொல்ல முடியும் ?//

ஹா...ஹா..ஹா... பார்ப்பணர் என்றால் என்ன? பிராமணர் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கொஞ்சம் சொல்லுங்களேன். :-)

அடுத்து 'காஃபிர்' என்ற சொல் அசிங்கமான வார்த்தையோ அருவருப்பான வார்த்தையோ அல்ல. 'இறை மறுப்பாளன்' என்ற தமிழ் வார்த்தையை அரபி படுத்தினால் 'காஃபிர்' என்ற பொருளைக் கொடுக்கும். முஸ்லிமாக இருந்த ஒருவன் ஏக இறைவனை மறுத்து நாத்திகத்துக்கு சென்றால் இஸ்லாமிய பார்வையில் அவனும் 'காஃபிரே'. ஆனால் 'சூத்திரன்' என்பதை வேத புத்தகங்களிலேயே ஏற்றி வைத்திருக்கிறீர்கள். இன்று வரை வேத பாடசாலைகளிலே பயிற்று வித்தும் வருகிறீர்கள். இவ்வாறு இருக்க 'காஃபிரும்' 'சூத்திரனும்' எவ்வாறு ஒன்றாக முடியும்?
//எனவே பார்பனர் கொடுக்கும் சூத்திரப் பட்டமும் எனக்கு செல்லாது//,

உங்களுக்கு இந்த பட்டத்தை கொடுத்த உங்கள் மதம் உங்களின் அனுமதியை கேட்பதில்லை சார். நீங்கள் அனுமதித்தாலும் அனுமதிக்கா விட்டாலும் பிராமணர்கள் பார்வையில் நீங்கள் சூத்திரன்தான். ஏனெனில் வேதத்தின் ஸ்மிருதிகள் அதைத்தான் சொல்கிறது. இன்று வரை அந்த சட்டங்களை போற்றி பாதுகாத்தும் வருகிறீர்கள்

//வஹாபிகள் மிகவும் மதவெறியோடு தான் நடந்து கொள்கிறார்கள், போகிற போக்கைப் பார்த்தால் இவர்களில் ஒருவர் கூட தற்கொலையாளியாக மாறி எங்காவது குண்டு வைப்பார் என்கிற அச்சமும், வருத்தமும் உண்டு, அவர்கள் கொஞ்மேனும் தெளிவடைய மாட்டார்களா என்கிற நப்பாசை தான்.//

இப்படி ஒரு ஆசை வேறு இருக்கிறதா? மாலேகானிலும் ஹைதராபாத்திலும் நீங்களே குண்டு வைத்து கொண்டு முஸ்லிம்களை கைது செய்த விபரம் தெரியாதா? நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரே வந்ததால் உண்மை வெளி வந்தது. அவரையும் பாகிஸ்தானிய கூலிகளை வைத்து தீர்த்து கட்டியாகி விட்டது. ஆரிய மூளை அல்லவா! எதையுமே கச்சிதமாக செய்து முடிக்கும்.

தற்கொலையையும் அப்பாவிகளை கொல்வதையும் இஸ்லாம் தடுப்பதால் இதனை மேற்கொள்ளும் எவனும் வஹாபியாக இருக்க மாட்டான். ஆர் எஸ் எஸ்ஸாக வேண்டுமானால் இருக்கலாம்..
?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹா...ஹா..ஹா... பார்ப்பணர் என்றால் என்ன? பிராமணர் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கொஞ்சம் சொல்லுங்களேன். :-)
//

அல்லாஹூ அக்பர் என்று சொல்லி ஆடு அறுப்பதற்கும், அதையே சொல்லி மனிதனின் கழுத்தை அறுப்பதற்கும் உள்ள வேறுபாடு அளவுக்கு இருக்கும்.

உங்களுக்கு வேண்டுமானால் ஒரு டயலாக் போடுகிறேன்.

அல்கொய்தா தற்கொலையாளி 1 : உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டம், நீங்கள் சொன்ன இடத்தில் குண்டு வைத்துவிட்டேன், நாளைக்கு 10 மணிக்கு குழந்தைகள் முதியவர் வரை மொத்தம் 100 பேராவது சாய்வாங்க, நம்மைப் பார்த்து அரசாங்கம் நடுங்கும்.

அல்கொய்தா தற்கொலையாளி 2 :
உங்களின் மீது சாந்தியும் அமைதியும் நிலவட்டம், உலகத்தில் அமைதி வளரட்டும், நன்று செய்தீர்கள், இறைவன் நாடினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும், இன்ஷா அல்லா

//அடுத்து 'காஃபிர்' என்ற சொல் அசிங்கமான வார்த்தையோ அருவருப்பான வார்த்தையோ அல்ல. '//

அடேங்கப்பா, நாகூர் (நாவூர்) பக்கம் வாருங்கள், உங்க காதில் எத்தனை காஃபீர் விழுது, அப்படி திட்டு வாங்கினவ இறைமறுப்பாளனா ? மாற்றுமத இறை நம்பிக்கையாளனா ? ன்னு பார்த்துச் சொல்லுங்க,

போங்க சார் நீங்க விற்கும் ஊசி துருப்புடிச்சது.

//உங்களுக்கு இந்த பட்டத்தை கொடுத்த உங்கள் மதம் உங்களின் அனுமதியை கேட்பதில்லை சார். நீங்கள் அனுமதித்தாலும் அனுமதிக்கா விட்டாலும் பிராமணர்கள் பார்வையில் நீங்கள் சூத்திரன்தான். ஏனெனில் வேதத்தின் ஸ்மிருதிகள் அதைத்தான் சொல்கிறது. இன்று வரை அந்த சட்டங்களை போற்றி பாதுகாத்தும் வருகிறீர்கள்//

உங்களுக்கு மாற்று மதத்தினர் காஃபிர் போல அவர்களுக்கு சூத்திரன், கேட்பவன் செருப்பால் அடிக்கும் வரை ரகசியமாக சொல்லிக் கொள்ளலாம் இல்லையா ?

//இப்படி ஒரு ஆசை வேறு இருக்கிறதா? மாலேகானிலும் ஹைதராபாத்திலும் நீங்களே குண்டு வைத்து கொண்டு முஸ்லிம்களை கைது செய்த விபரம் தெரியாதா? நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரே வந்ததால் உண்மை வெளி வந்தது. அவரையும் பாகிஸ்தானிய கூலிகளை வைத்து தீர்த்து கட்டியாகி விட்டது. ஆரிய மூளை அல்லவா! எதையுமே கச்சிதமாக செய்து முடிக்கும்.
//

ம் ஏன் நிறுத்திட்ட்டிங்க, அதனுடன் கூடவே ஆப்கான், ஈரான் பாகிஸ்தான் நாடுகளிலும் ஆர் எஸ் எஸ் காரங்க தான் குண்டு வைக்கிறாங்க என்று உங்கள் (ஜனைப் மண விளக்கம் போல்) இட்டுக் கதைகளை பிட்டு வையுங்களேன். ஆர் எஸ் எஸ் கோஸ்டிகள் பற்றி நீங்கள் பாடம் நடத்தத் தேவை இல்லை, அவற்றை நாங்களே துப்பித்தான் வருகிறோம், முடிஞ்சா தற்கொலையாளிகளை திருத்த முயற்சி செய்யுங்கள்.

சிரிப்புசிங்காரம் சொன்னது…

என்ன எழுதுறதுன்னெ தெரியல...எவ்ளோ விஷயம் எழுதியிருக்கீங்க..நிறய நண்பர்களுக்கு அனுப்பியிருக்கேன்..

சிரிப்புசிங்காரம் சொன்னது…

என்ன எழுதுறதுன்னெ தெரியல...எவ்ளோ விஷயம் எழுதியிருக்கீங்க..நிறய நண்பர்களுக்கு அனுப்பியிருக்கேன்..

வேகநரி சொன்னது…

//அது சரி முசல்மான்களெல்லாம் எப்போது குமார் என்று பெயர் வைத்துக் கொள்ளத் துவங்கினார்கள். அதிசயமாக இருக்கு//

இதை நான் வேறு இடங்களிலும் கவனிச்சிருக்கேன்.இறைதுதர் குமார் என்ற பெயரை பாவிக்க அனுமதித்திருக்கார் போல.

நல்லடியார் சொன்னது…

கோவி.கண்ணன்,

எல்லாவற்றையும்விட, இந்தத் திருமண உறவில் குறைகாண்பதாக இருந்தால் நான்கு மனைவிகளுள் ஒருவரேனும் குறைகண்டிருக்கக்கூடும். ஆனால், அத்தகைய நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. சக்களத்திகளே விரும்பிச் சகித்துக் கொண்டிருந்த உத்தம நபியின் உன்னத இல்லற வாழ்வைக் குறைசொல்லும் தகுதி யாருக்கும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லடியார் கூறியது...
கோவி.கண்ணன்,

எல்லாவற்றையும்விட, இந்தத் திருமண உறவில் குறைகாண்பதாக இருந்தால் நான்கு மனைவிகளுள் ஒருவரேனும் குறைகண்டிருக்கக்கூடும். ஆனால், அத்தகைய நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. சக்களத்திகளே விரும்பிச் சகித்துக் கொண்டிருந்த உத்தம நபியின் உன்னத இல்லற வாழ்வைக் குறைசொல்லும் தகுதி யாருக்கும் இல்லை.//

முகமது நான்கு கட்டினாரா, நாற்பது கட்டினாரா ? என்று விவாதித்து நான் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை, எந்த ஒரு பணக்காரன் அல்லது பதவியில் உள்ளவன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உடையவனாக இருந்தால், அவனுடைய மனைவிகளிடையே ஒருவருக்கொருவர் பேச வாய்ப்போ / உரிமையோ கிடைத்திருக்காது என்பதே உண்மை. பிறகு எப்படி சக்காளத்தி சண்டையெல்லாம் வரும் என்று தெரியவில்லை, அவர்களைப் பொருத்த அளவில் அவர்கள் 10 உடன் 11.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்