சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

சிங்கையில் செல்பேசி கட்டண அதிர்ச்சி !

Thursday, December 22, 2011

ஊடக வாசிப்பாளர்களிடையே நேற்றைய பரபரப்பு செல்பேசி வாடிக்கையாளரின் ஒருவரின் மாத சந்தா (Monthly Mobile Phone Bill) பற்றியது, சிங்கப்பூரில் இருந்து தைவான் சென்று திரும்பியவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி செல்பேசி கட்டண வடிவில். அவர் பயன்படுத்திய 'டேட்டா ரோமிங்' கணக்குகளைக் கூட்டி '$349,243' சிங்கப்பூர் வெள்ளிக்கு செல்பேசி நிறுவனம் கட்டண ஓலை அனுப்பி இருந்ததாம். $349,243 இந்தத் தொகைக்கு சிங்கப்பூரில் 4 அறைவீடு ஒன்றையோ Luxury Car ஒன்றையோ வாங்க முடியும்.

செல்பேசி நிறுவனம் தவறு நேர்ந்துள்ளதாக எதுவும் கூறவில்லை, மாறாக அவர் பயன்படுத்திய அலைபேசி வசதிகளுக்கு அந்தக்கட்டணம் சரியானதே என்றே கூறுகிறதாம். வாடிக்கையாளர் பேரதிர்ச்சியுடன் உள்ளார்.

பொதுவாகவே செல்பேசி நிறுவனங்கள் மாத வாடிக்கையாளர்களுக்கு வசதி என்ற பெயரில் 'ஆட்டோ ரோமிங்' சேவையை அலைபேசி எண்ணுடன் இணைத்துவிடுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு அது பற்றிய போதிய தெளிவு இல்லை என்றால் நாடு திரும்பியதும் இது போன்ற அதிர்ச்சி தான் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் போது உள்நாட்டு அலைபேசியையும் எடுத்துச் சென்று அந்த அலைபேசியில் பேசுவதைவிட (Voice Roaming) அதன் வழியாக இணையத்தை (Data Roaming) பயன்படுத்துவதற்கு கட்டணங்கள் மிக மிக அதிகம்.

$349,243 - ரூபாயில் 1,39,69,720 /- இந்த அளவு கட்டணம் கட்ட வேண்டி இருக்கும் என்று நினைக்க மயக்கம் வருமா வராதா ?

நான் பக்கத்தில் உள்ள மலேசியா ஜோகூருக்குச் சென்றாலே சிங்கப்பூர் குடிநுழைவைத் கடக்கும் முன்பே 'Air Plane Mode' அமைத்துவிட்டுச் செல்வேன், அதன் பிறகு எந்த அழைப்பும் வராது, தமிழகத்திற்கு வந்தால் அங்குள்ள அலைபேசிச் சேவையைத் தான் பயன்படுத்துவேன். அவசரத்திக்கு தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் ? குடும்ப உறுப்பினர் தவிர்த்து வேறு யாருக்கும் மிக மிக அவசரம் என்று தொடர்பு கொள்ள ஒன்றும் இல்லை, குடும்ப உறுப்பினர்களுக்கு நான் எங்கு இருப்பேன் எப்போது திரும்புவேன் என்பது தெரியும், அதிகமாக ஒரு அரைநாள் தொடர்பு இல்லாமல் போகும், நாம் சென்ற இடத்தில் இருந்து உடனே திரும்ப அரைநாள் / இரண்டு மணி நேரம் ஆகும் என்ற நிலையில் அரை நாள் தொடர்பில்லாமல் இருப்பதால் ஒன்றும் கெட்டுவிடாது என்றே நினைக்கிறேன். அப்படியும் தொடர்பில்லாமல் இருக்க விருப்பம் இல்லை என்றால் அங்குள்ள கட்டண சேவையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குடும்பத்தினரை தொடர்பு கொள்ளலாம், இதைவிட எளிய / பாதுகாப்பான வழி குடும்பத்தினரை மட்டுமே தொடர்பு கொள்ள தனி அழைப்பு எண் வைத்துக் கொள்ளுதல், அது 'ரோமிங் கட்டணத்திற்கு உட்பட்டது' என்றாலும் வரும் அழைப்புகளுக்கு மட்டும் தான் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

வெளிநாடுகளுக்கு அலைபேசியுடன் செல்லும் முன் டேட்டா ரோமிங்க் வசதியை பூட்டிவிட்டு அல்லது அணைத்துவிட்டு செல்லுங்கள். அப்படியும் இண்டர்நெட் வசதி தேவை என்னும் போது உங்கள் அலைபேசியில் 'Wi-Fi' வசதி இருந்தால் எங்கு அவை இலவச இண்டர்நெட்'Wi-Fi' வழியாகக் கிடைக்கிறதோ அங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐபோன், ஆண்டராய்ட் வகை ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இண்டர்நெட் பயன்படுத்தாலும் அந்த வகை போன்கள் நாம் அதில் வைத்திருக்கும் அப்ளிகேசன் ப்ரோகிராம் வசதிகளுக்கான இண்டர்நெட் தொடர்புகளை எப்போதுமே இணைத்துக் கொண்டு இருக்கும், உதாரணத்திற்கு 'இருக்கும் இடம் (லொகெசன்)' மற்றும் 'வானிலை' ஆகியவை எப்போதும் இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும், இவை ரோமிங்கில் இருந்தாலும் பயன்பாட்டில் தான் இருக்கும், அவற்றை தடுக்க 'டேட்டா ரோமிங்' வசதியை முன்கூட்டியே நிறுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் அம்பேல் தான்.

அவர் வெளிநாட்டில் இருக்கும் போது பயன்படுத்தி டேட்டா அளவு 1.4 GB, உள்நாட்டில் 12 GB வரை பயன்படுத்த தனிக்கட்டனம் இல்லை, அது மாதச் சந்தாவுடன் இணைந்து கொடுக்கப்படும்.
1.4 GB ரோமிங்க் பயன்படுத்தியற்குத்தான் $349,243 , செல்பேசி நிறுவனம் அது எங்களுக்கு சேரவேண்டிய கட்டணம் என்றாலும் அவற்றை நாங்கள் வெளிநாட்டில் இவர் பயன்படுத்திய போது அங்குள்ள நிறுவனங்களில் சேவையைத்தான் நாங்கள் இவருக்கு திருப்பிவிடுகிறோம், அந்த நிறுவனங்களின் கட்டணம் அந்த அளவுக்கானது எங்களுக்கு வேறு வழியில்லை என்று கைவிரித்துவிடும்

மேலே $349,243 கட்டணத்தை வாடிக்கையாளர் கட்டவில்லை என்றால் என்ன ஆகும் ? அலைபேசி நிறுவனத்திடம் இருந்து வழக்கறிஞரின் ஓலை வரும், நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள், வாடிக்கையாளர் சொந்த வீடு வைத்திருந்தால் விற்று கட்டணத்தைக் கட்டும்படி அறிவுறுத்தப்படுவார். செல்பேசி நிறுவனம் மனது வைத்தால் கட்டணத்தில் விழுக்காடுகளைக் குறைக்கலாம், மற்றபடி 100 - 500 வெள்ளிகளை மட்டுமே செலுத்தி அவரால் அதிலிருந்து மீண்டுவர முடியாது.



இந்த வாடிக்கையாளர் ஒரு தன்னிலை மறந்த மடையனாக இருக்க வேண்டும், இவர் 1.4GB க்கு டேட்டா ரோமிங்க் பயன்படுத்தியதன் காரணம் ஆன்லைன் மூவி, ஆபாசத் தளங்கள் மற்றும் ஆன் லைன் விளையாட்டு எதோ ஒன்றில் மூழ்கி இருக்க வேண்டும், வேலை விசயமாகவோ சுற்றுலாவிற்கோ சென்றிருந்தால் கூட உட்கார்ந்து போனை நோண்டிப் புண்ணாக்கிக் கொண்டதற்கு நம்மால் ஐயோ பாவம் என்று மட்டுமே சொல்லமுடியும்

*****

செல்பேசித் துறையில் முன் அனுபவம் எதுவுமே இல்லாத ராசாவிற்கு வேண்டப்பட்ட நிறுவனங்களோ ஏன் போட்டிப் போட்டுக் கொண்டு 2ஜியை ஏலம் எடுத்தது ? அவற்றை வாங்கி பெருத்த லாபத்திற்கு விற்கலாம், அவற்றை நல்ல விலைக்கு வாங்குபவர்க்கள் வாடிக்கையாளரை மொட்டை அடிக்க முடியும் என்று நன்கு தெரிந்ததால் தான், 50 பைசாவுக்கு அழைப்புக் கிடைக்கிறது என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் இது போன்று சொல்லப்படாத, சொல்லமுடியாத ஆயிரம் கதைகள் இருக்கலாம்

இணைப்பு: சுட்டி

5 கருத்துக்கள்:

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP