பின்பற்றுபவர்கள்

29 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் (Louvre Museum, Zurich and interlaken) - 7

மனித உடல் பற்றி பல்வேறு மனித இனங்களிலும் பல்வேறு கருத்துகள், உணர்வுகள் இருக்கின்றன. ஒரே பாலினர் முன்பு மற்றொருவர் நீச்சல் குளங்களில் அமைந்த பொதுக் குளியல் அறைகளில் நிர்வாணமாக குளிப்பது மேலை நாடுகளில் இயல்பான ஒன்று ஓரின சேர்கையாளர்கள் தவிர்த்து வேறு எவரும் கிளர்ச்சி அடைவது இல்லை. நிர்வாண உடல் மீது அருவெறுப்பு பார்வை நம் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். உடலியல் காரணங்களினால் மருத்துவர் தவிர்த்து மற்றொருவர் முன் நிர்வாணமாக நிற்பது நம் இந்தியர்களால் இயலாத ஒன்று, அந்த அளவுக்கு நிர்வாண உடல் பற்றிய சமூக சிந்தனைகள் வெகு இயல்பானதாக இருக்கவில்லை என்பதே காரணம்.

நிர்வாண உடல் வெறுக்கத் தக்கது, அருவெறுப்பானது, அசிங்கமானது அல்ல....மற்ற இயற்கைகளைப் போலவே.....மனித உடலும் ரசிக்கத் தக்கது என்று நினைத்தே ஐரோப்பாவில் அங்கங்கே சிலைகள் நிர்வாணமாகவே வடிக்கப்பட்டு இருக்கின்றன. பார்பதற்கு நமக்கு கண் கூசும், அவர்களுக்கு அது ரசிக்கத்தக்க காட்சி. நம்முடைய பொது சமூக சிந்தனைகள் நிருவாண உடல்களைப் பார்க்க தடை விதித்து அவற்றை பொதுவில் வைக்காவிட்டாலும் நம் ஆண்களில் 90 விழுக்காட்டினர் நீலப்படங்களை ரசித்துப் பார்க்கிறார்கள், மற்றவர்களை வாய்ப்புக் கிடைக்காதவர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம், அவை மிகக் குறைவு. எனவே நிர்வாண உடல் மீதான நம் சிந்தனைகள் என்பது நம் சமூகத்தின் பொதுக்கட்டுப்பாட்டைச் சார்ந்தது, தனிமனித மன சார்புள்ளது அல்ல என்றே நினைக்கிறேன்.

ஐரோப்பியர்கள் தனிமனித எண்ணங்களும், சமுக எண்ணங்களும் ஒன்று என்பதாக அத்தகைய நிர்வாண காட்சிகளை பொதுவில் வைக்கத் தயக்கம் காட்டவில்லை. அவர்களது தனிமனித, பொதுச் சமூக சிந்தனைகள் நேர்மையான செயல், நம்முடைய பொதுச் சமூக சிந்தனைகள் போலியாக கட்டமைக்கப்பட்ட, திணிக்கப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன், இவற்றையும் மீறி நம் கோவில் கோபுரங்களில் இடம் பெற்ற அது போன்ற அந்தக் காட்சிகள் நமக்கும் அனுமதிக்கப்பட்ட ஒன்று, நம் சமூகத்தின் வழக்கமாகவும் இருந்திருக்கிறது என்பதை நாமும் புரிந்து கொள்வதே இல்லை, நிர்வாண உடல் மீது நமக்கு அருவெறுப்பு ஏற்பட்டது எப்போது என்பது சரியாக விளங்கவில்லை.

*****

22/அக்/2009 வியாழன் பாரிஸ் பயணத்தின் மூன்றாம் மற்றும் நிறைவு நாள், விடுதி முன்பதிவு படி அன்று கிளம்பவேண்டும். காலை 11:15க்குள் 'செக் அவுட்' செய்யும் படி விடுதி நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது. அன்று காலை 8 மணிக்கு எழுந்து கொண்டோம். உடமைகளை எடுத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு கிளம்ப 9 மணி ஆகியது, அன்று காலையும் விடுதியின் காலை உணவு ரொட்டித் துண்டுகளை விழுங்கிவிட்டு, வேறெங்கு சென்று வரலாம் என்று பாரிஸ் வரைபடத்தைத் தேடினால் 'இந்திய கேட்' போன்ற Arc de Triomphe எனப்படும் நுழைவாயில் இருக்கும் மிடம் வரைபடத்தில் தேர்ந்தெடுத்தோம். அந்த இடம் நிறைய சாலைகள் சந்திக்கும் இடம் என்றும் பாரிஸ் வந்த அன்றே அழைத்துப் போவதாக யோகன் அண்ணா சொல்லி இருந்தார். அன்று நேரம் போதவில்லை என்பதால் அந்த திட்டத்தை அன்று கைவிட்டுவிட்டோம்.

கிளம்பும் அன்று அங்கு சொல்ல முடிவெடுத்து சுரங்க இரயில் நிலையம் சென்று பயணச் சீட்டுகளை வாங்கினோம். சுரங்க நிலைய வழித்தடங்கள் ஓரளவுக்கு புரியும் நிலைக்கு பழகி இருந்தது. வழித்தடங்களைப் படிக்கும் போது louver museum போகும் வழியில் ஒரு நிலையத்தின் அருகில் இருப்பதைக் குறித்துக் கொண்டோம். இரு வழித்தடங்கள் மாறி மாறி Arc de Triomphe இருக்கும் Charles de Gaulle என்ற நிலையத்திற்குச் சென்றோம். நெப்போலியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமாம். கூகுள் வரைபடப் படி 12 சாலைகள் அங்கே சந்தித்தன. கூகுள் Street View வில் அனைத்து சாலைகளிலும் நீங்கள் கணிணி வழியாக பயணிக்கலாம் ஒரு சாலையின் நடுப்பகுதிக்குச் சென்று படம் எடுத்தேன். அங்கு காலை 10 மணி ஆகி இருந்தது.

சென்ற வழியிலேயே திரும்பி louver museum இருக்கும் நிலையத்திற்கு வந்தோம். மிகப் பெரிய இரு கட்டிடங்கள், அதற்கு நடுவே கண்ணாடியால் கட்டப்பட்ட பிரமீடு போன்ற நுழைவாயிலுக்குள் நுழைந்தால் அந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைய பெரியவர்களுக்கு 10 Euro நுழைவுச் சீட்டும், சிறுவர்களை இலவசமாகவும் அனுமதிக்கிறார்கள்.


அங்கு செல்லும் போது மணி 10:15 இன்னும் 1 மணி நேரத்திற்குள் விடுதிக்குத் திரும்ப வேண்டிய சூழலில் வெறும் 45 நிமிடங்கள் தான் இருந்தது. மனைவியின் விருப்பப்படி நேராக மோனோலிசா ஓவியம் அமைக்கப்பெற்ற கூடத்திற்குச் செல்வதாக வழியைப் பார்த்துக் கொண்டே சென்றோம்.

போகும் வழியில் அமைந்த கூடத்தில் பிரான்ஸ்/பாரிசின் தனிப்பட்ட அடையாளமான நிர்வாண சிலைகள் பல இருந்தன. அந்த உருவங்களின் பெயர்களைக் கூட படிக்க நேரமில்லை.



கூடங்களின் உள் மேல் கூரைகள் ப்ரஞ்சுகாரர்களின் கலைத்திரனை நினைக்க வியக்க வைத்தது.




ஒரு கூடத்தின் மையத்தில் ஒருவர் அமர்ந்து ஓவியம் வரைந்து கொண்டு இருந்தார், அதை அடுத்து இருந்த இணைப்புக் கூடத்தில் மோனோலிசா ஓவியம் இருந்தது. அதன் அருகில் செல்ல முடியாமல் தடுப்புகளை அமைத்திருந்து சற்று தொலைவில் இருந்தே பார்க்க அனுமதித்து இருந்தனர்.

யாரோ விசமி தேநீரை ஊற்றிவிட்டாராம் ஒருமுறை அதிலிருந்து யாரையும் மிக அருகில் நெருங்க விடுவதில்லை என்று எங்கேயோ படித்த தகவலை மனைவி சொல்லக் கேட்டேன்.

வண்ண ஓவியங்கள் பல நிறைந்த கூடங்கள் பல இருந்தன. ஏசு கிறித்துவின் வாழ்க்கை வரலாறுகளை வண்ணத்தில் வடி(வமை)த்து வைத்திருந்தினர். அடுத்த கூடத்தில் எகிப்து தொடர்பான கண்காட்சிகள் இருந்தன.

எகிப்து பழங்குடி ஒருவரின் சிலை....காயத்ரி மந்திரம் சொல்கிறாரான்னு தெரியலை :)

விரைவாகவே அதைப் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். விடுதிக் கட்டணம் 2 நாட்களுக்கு 225 euro.

சரியாக 11:30க்கு விடுதியைவிட்டு வெளியேறி மீண்டும் Gare Du Nord நிலையத்திற்கு வந்து, CDG விமான நிலையம் செல்லும் இரயில் புறப்படும் இடம் ஆகியவற்றை கேட்டு அறிந்து கொண்டு, அதன்படி RER வழித்தடம் B குறியீடு கொண்ட தொடர்வண்டிக்கு பயணச் சீட்டு எடுத்துவிட்டு மகளையும் மனைவியையும் அங்கே உட்கார வைத்துவிட்டு இந்திய உணவகங்கள் தேடினேன். ஒரு ஈழத்தவர் வழி சொன்னார். இந்திய கடைகள் நிறைந்த ஒரு பகுதியில் இந்திய உணவகங்கள் பல இருந்தன. இங்கு மதிய உணவிற்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வர மணி பகல் 1:00 மணி ஆகியது.

தொடர்வண்டி நிலையத்தினுள் பெட்டியுடன் நுழைய தனி வழி வைத்திருக்கிறார்கள், அதில் பயணச் சீட்டு போடும் போது திறக்க அடம் பிடித்தது, பின்பு நிலைய உதவியாளர் உதவி செய்தார். ஒருவழியாக 10 நிமிட காத்திருத்தலுக்கு பிறகு தொடர் வண்டி வர CDG விமான நிலையத்தில் இறங்கினோம். பயணச்சீட்டை வெளியேறும் வழியில் நுழைத்தால் கதவு திறக்கவே இல்லை, 20 நிமிடப் போராட்டம், அங்கு உதவிக்கு யாரும் இல்லை, விமானத்தைப் பிடிக்க இன்னும் ஒரு மணி நேரம் தான் இருந்தது என்கிற அழுத்தம் வேறு. பாரிசில் குறிப்பாக ஆப்ரிக்கர்கள் பயணச்சீட்டு வாங்காமல் யாராவது நுழைவாயிலில் பயணச் சீட்டு செலுத்தி நுழையும் போது அப்போது திறந்து கொள்ளும் கதவு வழியாக விரைவாக வெளி ஏறிவிடுவார்கள், அதைப் பார்த்து இருந்த நான் அப்படியே வெளி ஏறிவிட்டேன். மனைவிக்கும் மகளும் ஒரு வெள்ளைக்கார பெண்மணியும், இன்னொரு வெள்ளைக்காரரும் வெளியேற உதவி செய்தனர்.

பாரிஸ் புறநகர் வெளி



அங்கிருந்து இணைப்பு பேருந்து வழியாக 2G விமான முனையத்தை அடைந்தோம். மற்ற விமான நிலைய நடவெடிக்கைகளை முடித்துக் கொண்டு, மதிய உணவை அங்கேயே உண்டுவிட்டு விமானச் சோதனைகளைக் கடந்து ஏர்-பிரான்ஸ் விமானத்திற்குள் செல்ல, 3:15க்கு விமானம் மேலே பரந்தது. சிறிய ரக விமானம் தான், 120 இருக்கைகள் இருந்தன. பாதிக்கும் மேல் நிரம்பவில்லை.




ஒருமணி நேரம் சில நிமிடங்களில் சுமார் மாலை 4:30 மணிக்கு சுவிஸர்லாந்து ஜூரிக் அடைந்தது.

சுவிஸில் 'Interlaken' தங்குவதற்கு ஏற்ற இடம் என்று சில விடுதி முகவரிகளை பதிவர் மகேஷ் முன்பே கொடுத்திருந்தார். அதன் படி Interlaken - Backpakers Villa வில் முன்பதிவு செய்திருந்தோம். ஜூரிக் லிருந்து 'Interlaken' 100+ கிமி தொலைவு. அங்கு எப்படி செல்வது, ஸ்விசில் பார்க்கும் இடங்கள் எவை என்று தெரியாமல் ஜூரிக் வரை வந்துவிட்டோம். 'ஸ்விசில் எதோ உயரமான மலைக்குச் சென்று வருவது நன்றாக இருக்குமாம், அங்கு செல்லுங்கள்' என்று பதிவர் இராம் குறிப்பு சொல்லி இருந்தார். விமானநிலையத்திலேயே தொடர்வண்டி நிலையமும் இருந்ததால் அங்கு சென்று 'Interlaken' செல்ல பயணச் சீட்டு கேட்கும் போது 'உயரமான மலை' பற்றிக் கேட்டோம். 'அப்படி என்றால் டூரிஸ்ட் நிறுவனத்தை அனுகுங்கள்' என்று அறிவுறுத்தினார்கள். அதுவும் அருகிலேயே இருந்தது. அவர்களிடம் விவரம் கேட்க 'ஸ்விஸ் பாஸ்' எனப்படும் மூன்று நாட்களுக்கான போக்குவரத்து அடையாள அட்டையுடன் மலைக்குச் சென்றுவரும் இரயில் கட்டணமாக நபர் ஒன்றுக்கு (99 CF$ for Half price Pass + மூன்று நாள் பயணத்துக்கான Train Ticket 110 CF$) மொத்தமாக ஒருவருக்கு 210 ஸ்விஸ் ப்ராங் பெற்றுக் கொண்டு, வழிகள் குறிப்பு மற்றும் தொடர்வண்டி பயண அட்டவணைகளைக் கொடுத்தார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் பயணத்தால் இலவசமாம்.

அவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டோம், இரயில் நேரடியாக 'Interlaken' செல்லாது.

இடையில் 'Bern' என்ற நகரத்தில் வழித்தடம் மாறி வேறொரு தொடர்வண்டியில் பயணித்தால் தான் 'Interlaken' செல்ல முடியும், அப்படி மாறி மாறி பயணம் செய்து 'Interlaken ost' என்னும் 'Interlaken' கிழக்கு நிலையத்தை அடையும் போது இரவு 8 மணியை நெருங்கி இருந்தது. இங்கும் லேசான மழைத்தூரல்... அங்கே உள்ள நகர வரைபடத்தைப் பார்த்து தங்கும் விடுதியின் வழிகளைக் கண்டுபிடித்து, அங்கும் கடுங்குளிர் ஆனால் ஏற்கனவே குளிர் பழகி இருந்ததால் தெரியவில்லை. பெட்டிகளை இழுத்தபடி விடுதிக்கு சுமார் 1 கிமி தொலைவுக்கு நடந்தே அடைந்தோம். அங்கு மற்ற நடைமுறைகளை முடித்துவிட்டு விடுதி அறைக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு, அது என்ன உயரமான மலை ? என்கிற விவரங்களைப் படிக்கும் போது நாளை செல்லப் போகும் இடம் Jungfraujoch - Top of the Europe என்கிற விவரம் தெரிந்தது.

இந்த இடுகையில் எழுதியது அனைத்தும் சென்ற வாரத்தில் இதே வியாழக்கிழமை முழுவதுமாக பாரிசிலும், ஸ்விசிலும் நடந்த சுற்றுப் பயண நிகழ்வின் தொகுப்பு.

19 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

பிரிச்சி மேய்ஞ்சி இருக்கீங்க ? இந்த schedule prepare பண்ணி கொடுத்தது யாரு ? இன்டர்நெட்ல ப்ளாக் தவிர இது எல்லாமும் research பண்ணமுடியும் ? Infopoint ல queue ல நிக்கவேண்டாம் !!

சவுத் இந்தியாவுலேந்து ஐரோப்பா வரும் அனைவரும் பாலோவ் செய்யும் வரைமுறை :)- Beautiful places.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\நிர்வாண உடல் பற்றிய சமூக சிந்தனைகள் வெகு இயல்பானதாக இருக்கவில்லை என்பதே காரணம்.\\

இது சரியான காரணம்தான்..


\\நிர்வாண உடல் மீது நமக்கு அருவெறுப்பு ஏற்பட்டது எப்போது என்பது சரியாக விளங்கவில்லை\\

அருவெறுப்பு என நான் நினைக்கவில்லை, எதிர்பாலினரால் ’பாதிக்கப்பட்டு’ விடுவோமோ என்ற பயம்தான் காரணம் என நினைக்கிறேன் :))

பயத்திற்கு காரணம் நாம் இவ்விசயத்தில் இயல்பாக இல்லை என்பதே..

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
பிரிச்சி மேய்ஞ்சி இருக்கீங்க ? இந்த schedule prepare பண்ணி கொடுத்தது யாரு ? இன்டர்நெட்ல ப்ளாக் தவிர இது எல்லாமும் research பண்ணமுடியும் ? Infopoint ல queue ல நிக்கவேண்டாம் !!

சவுத் இந்தியாவுலேந்து ஐரோப்பா வரும் அனைவரும் பாலோவ் செய்யும் வரைமுறை :)- Beautiful places.
//

நெடுந்தொலைவு விமான, இரயில் பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை வாங்கியது, ஈபிள் கோபுரம், டிஸ்னி லேண்ட் பார்க்கச் செல்வது, மூன்று நாடுகளுக்கும் செல்வது என்பதைத் தவிர்த்து பிற இடங்களைப் பார்த்ததெல்லாம் அவ்வப்போது முடிவு செய்து கொண்டு சென்ற இடங்கள் தான்.

சுற்றுலா செல்லும் முன் இணையத்தில் எந்த விவரங்களையும் தேடவில்லை, சென்று வந்த பிறகு பார்த்தால் மூன்று நாடுகளிலும் சென்று வந்த இடங்களில், விடுதிகள் உட்பட 80 விழுக்காடு இடங்கள் Google Street View லேயே இருப்பது தெரிந்தது...இதை முன்கூட்டியே பார்த்து சென்றிருக்கலாமே என்று நினைத்தேன்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//இடம் பெற்ற அது போன்ற அந்தக் காட்சிகள் நமக்கும் அனுமதிக்கப்பட்ட ஒன்று, நம் சமூகத்தின் வழக்கமாகவும் இருந்திருக்கிறது என்பதை நாமும் புரிந்து கொள்வதே இல்லை, நிர்வாண உடல் மீது நமக்கு அருவெறுப்பு ஏற்பட்டது எப்போது என்பது சரியாக விளங்கவில்லை.//

என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் :)

//எகிப்து பழங்குடி ஒருவரின் சிலை....காயத்ரி மந்திரம் சொல்கிறாரான்னு தெரியலை//

அவர் சொல்ல வாய்ப்பில்லை. காரணம் அவருக்கு பூணுல் இல்லை ;)

வடுவூர் குமார் சொன்னது…

நன்றாக இருக்கு பயணக்குறிப்புகள்.

மலைநாடான் சொன்னது…

கோவி!. சுவிஸ் வந்திருந்தீர்களா? தொடர்பு கொண்டிருந்தால் சந்தித்திருக்கலாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மலைநாடான் said...
கோவி!. சுவிஸ் வந்திருந்தீர்களா? தொடர்பு கொண்டிருந்தால் சந்தித்திருக்கலாமே.
//

நீங்கள் அங்கிருக்கும் விவரம் எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் கண்டிப்பாக தொடர்பு கொண்டு இருப்பேன்.

CA Venkatesh Krishnan சொன்னது…

ஐரோப்பா டூருக்கு இப்போதே பிளான் பண்ணிவிட்டேன்!! (நன்றி: கோவி.கண்ணன்)

அப்பாவி முரு சொன்னது…

//ஒரே பாலினர் முன்பு மற்றொருவர் நீச்சல் குளங்களில் அமைந்த பொதுக் குளியல் அறைகளில் நிர்வாணமாக குளிப்பது மேலை நாடுகளில் இயல்பான ஒன்று ஓரின சேர்கையாளர்கள் தவிர்த்து வேறு எவரும் கிளர்ச்சி அடைவது இல்லை//

ஓ, நீங்களும் நீச்சல் குளங்களுக்கு போயிருக்கீங்களா? இங்கிருக்கும் சைனீஸ் பெருமக்களில் பாதிக்கும் மேலானோர் குட்டையான, ஒல்லியான ஒருவமைப்பினர் தான். அதனால் தானோ என்னவோ, சின்னப் பிள்ளையாட்டம் அம்மணக் கட்டையா குறுக்கும் நெடுக்குமா திரியுவாங்க. . .

அப்பாவி முரு சொன்னது…

\நிர்வாண உடல் பற்றிய சமூக சிந்தனைகள் வெகு இயல்பானதாக இருக்கவில்லை என்பதே காரணம்.\\


அந்த சிந்தனை இல்லாமலா, சிரவன் சிலையை நிர்வாணமாக அமைத்தார்கள். ஆன்மீகத்தில் வெற்றியே "மகாநிர்வாணம்" தானே.

ஆசையை கட்டுப்படுத்தலின் (அ) அதற்கும் மேலான ஆசை இன்மையின் உச்ச பட்ச வெளிப்பாடு, "மகா நிர்வாணம்"

பித்தனின் வாக்கு சொன்னது…

நம்வர்கள் நிர்வானத்தை ஆதரித்தார்கள், ஆனால் எப்போது மாறியது என்றுதான் எனக்கும் தெரியவில்லை. கஜிரேகே சித்திரங்கள். ஒரிசா சூரியனார் கோவில் சிற்பங்கள் ஆகியன அந்த உண்மையை உணர்த்தும். நம்மவர்கள் நிர்வானமும் காமமும் முக்கியம் இல்லை ஆனாலும் வாழ்வின் ஒரு பங்கு என்று மட்டும் சொன்னார்கள். ஆனால் உங்களைப் போன்று முன்னேர்கள் என்ன சொன்னாலும் அது மூட நம்பிக்கை என்று கருதியதால் காமம் முக்கியமாகி இந்தியாவின் ஜனத்தொகை அதிகம் ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் மாதிரி இரசிக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிற்க இடம் இல்லாமல் இருக்கும்.

ஒரு இரகஸ்யம் சொல்லட்டா, நம்ம ஆளுக நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது, நிர்வானமா பார்த்தா பத்து நிமிடத்தில் அலுத்து விடும். அதுவே மூடி மறைச்சால் பார்க்கும் ஆர்வம் தூண்டும், நம்ம ஆளுக எல்லாம் ஆர்வக் கேளாறுகள்.
அடிக்கடி நிர்வானமா பார்க்கின்றதால் தான் அடிக்கடி ஆளுகளை அவனுக மாத்தறானுக, என்பது என் நினைப்பு.

ஒரு சின்ன உதாரனம் நீங்க ஒரு இரண்டு ஆங்கில நீலப் படங்கள் பார்த்தால் மூன்றாவது பார்க்கத் தோன்றாது. ஆனால் எவ்வளவு மலையாளம் அல்லது பிற படங்களைப் பார்த்தாலும் போரடிக்காது, நளினமும் இலைமறைவும் அதில் இருக்கும்.
இரண்டு ஆங்கிலப் படங்களை வீட ஒரு அரைமணி நேர பிட் ரொம்ப திரில் ஆக இருக்கும். இதை அனுவஸ்தர்கள் உணர்வார்கள்.

எனக்கு மகா நிர்வாணம் பத்தி எல்லாம் தெரியாது. நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
பயத்திற்கு காரணம் நாம் இவ்விசயத்தில் இயல்பாக இல்லை என்பதே..
//

சரிதான்

கோவி.கண்ணன் சொன்னது…

///எகிப்து பழங்குடி ஒருவரின் சிலை....காயத்ரி மந்திரம் சொல்கிறாரான்னு தெரியலை//

அவர் சொல்ல வாய்ப்பில்லை. காரணம் அவருக்கு பூணுல் இல்லை ;)//

ஸ்வாமி, எகிப்து நாகரீகம் 3000 ஆண்டுக்கும் மேல், பூணூல் மக்கி அறுந்து விழுந்திருக்காதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நன்றாக இருக்கு பயணக்குறிப்புகள்.
//

மிக்க நன்றி அண்ணன்

கோவி.கண்ணன் சொன்னது…

//இளைய பல்லவன் said...
ஐரோப்பா டூருக்கு இப்போதே பிளான் பண்ணிவிட்டேன்!! (நன்றி: கோவி.கண்ணன்)
//

வாழ்த்துகள் இளையப் பல்லவன் சார்.

செலவைத் தவிர மற்றவையெல்லாம் இனிய அனுபவங்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...


ஓ, நீங்களும் நீச்சல் குளங்களுக்கு போயிருக்கீங்களா? இங்கிருக்கும் சைனீஸ் பெருமக்களில் பாதிக்கும் மேலானோர் குட்டையான, ஒல்லியான ஒருவமைப்பினர் தான். அதனால் தானோ என்னவோ, சின்னப் பிள்ளையாட்டம் அம்மணக் கட்டையா குறுக்கும் நெடுக்குமா திரியுவாங்க. . .
//

ம்கும்...மீசை இல்லாத கொஞ்சம் பெரிய பிள்ளைகள்

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
\நிர்வாண உடல் பற்றிய சமூக சிந்தனைகள் வெகு இயல்பானதாக இருக்கவில்லை என்பதே காரணம்.\\


அந்த சிந்தனை இல்லாமலா, சிரவன் சிலையை நிர்வாணமாக அமைத்தார்கள். ஆன்மீகத்தில் வெற்றியே "மகாநிர்வாணம்" தானே.

ஆசையை கட்டுப்படுத்தலின் (அ) அதற்கும் மேலான ஆசை இன்மையின் உச்ச பட்ச வெளிப்பாடு, "மகா நிர்வாணம்"
//

எனக்கு தெரிந்த மகாநிர்வாணம் மிகப் பெரிய மகாவீரர் சிலை (கோமதீஸ்வரர்)அம்மணமாக நிற்பது தான், அங்கே ஜெயின் சாமியார்களும் அப்படியே நிற்பார்களாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
நம்வர்கள் நிர்வானத்தை ஆதரித்தார்கள், ஆனால் எப்போது மாறியது என்றுதான் எனக்கும் தெரியவில்லை. கஜிரேகே சித்திரங்கள். ஒரிசா சூரியனார் கோவில் சிற்பங்கள் ஆகியன அந்த உண்மையை உணர்த்தும். நம்மவர்கள் நிர்வானமும் காமமும் முக்கியம் இல்லை ஆனாலும் வாழ்வின் ஒரு பங்கு என்று மட்டும் சொன்னார்கள். ஆனால் உங்களைப் போன்று முன்னேர்கள் என்ன சொன்னாலும் அது மூட நம்பிக்கை என்று கருதியதால் காமம் முக்கியமாகி இந்தியாவின் ஜனத்தொகை அதிகம் ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் மாதிரி இரசிக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிற்க இடம் இல்லாமல் இருக்கும். //

போச்சுடா சாமி. முன்னோர்கள் சொல்லியபடி நடந்ததாகச் சொல்லிக்கொள்பவர்கள் பிள்ளைகளை பெற்றுப் போடவில்லையா ? அவ்வ்வ்
ஏழை பார்பனன் குசேலனுக்கு 27 குழந்தைகள் சாமியோவ்
:))

//ஒரு இரகஸ்யம் சொல்லட்டா, நம்ம ஆளுக நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது, நிர்வானமா பார்த்தா பத்து நிமிடத்தில் அலுத்து விடும். அதுவே மூடி மறைச்சால் பார்க்கும் ஆர்வம் தூண்டும்,
ஒரு சின்ன உதாரனம் நீங்க ஒரு இரண்டு ஆங்கில நீலப் படங்கள் பார்த்தால் மூன்றாவது பார்க்கத் தோன்றாது. ஆனால் எவ்வளவு மலையாளம் அல்லது பிற படங்களைப் பார்த்தாலும் போரடிக்காது, நளினமும் இலைமறைவும் அதில் இருக்கும்.
இரண்டு ஆங்கிலப் படங்களை வீட ஒரு அரைமணி நேர பிட் ரொம்ப திரில் ஆக இருக்கும். இதை அனுவஸ்தர்கள் உணர்வார்கள்.
//

ஆகா ! தனிப்பட்ட உங்க ரகசியம் இப்படி அம்பலப்படுத்துகிறீர்களே !
:)

cheena (சீனா) சொன்னது…

பாரீஸ் - பயணக்கட்டுரை உதவியாக இருக்கும் - அடுத்த முறை நாங்கள் பாரிஸ் செல்லும் போது.

நல்ல படங்கள் நல்ல கட்டுரை நல்ல மறுமொழிகள் - ஓம்காருக்கும் கோவியாருக்கும் நடக்கும் செல்லச் சிணுங்கல்கள் - குறும்புகள்

அத்தனையும் படித்து ரசித்தேன்

ந்ல்வாழ்த்துகள் கோவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்