காலத்தில் தேட...

கலவை 01/அக்/2009 !

Thursday, October 01, 2009

கலவைப் பதிவுப் போட்டு கிழமை ஆச்சு.

வாரத்துக்கு தமிழில் கிழமைங்கிறது உங்களுக்கு தெரியுமா ?

இந்தியில் கூட கிழமையை வாரம் என்றே குறிப்பிடுவார்கள், சோமவார்...சுக்ரவார்.....நாம திங்கள் கிழமை, செவ்வாய் கிழமை....ன்னு எழுதுகிறோம், கிழமைகளின் ஏழு நாட்களைக் குறிக்க வாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதற்கு சரியான தமிழ்ச் சொல் கிழமை தான். சனிக்கிழமைக்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா ? காரி கிழமை. மற்ற தமிழ் சொற்கள் பற்றி தெரிய வேண்டுமென்றால் முகவை இராம் குமாரிடம் கேளுங்க. அவருதான் சுத்த தூய தமிழில் பேசுவார் :)

வார்த்தைக்கு வார்த்தைன்னு பயன்படுத்தும் வார்தை வட சொல்தான், ஆறாம் நூற்றாண்டுக்கு பின் தமிழில் இடைநுழைந்தச் சொல்லில் அடிக்கடி பயன்படும் சொல் 'வார்த்தை', ஒரு வார்த்தைக் கேளுங்கன்னு சொல்லுகிறோம். ஒரு சொல் கேளுங்களேன் என்று சொல்லிப் பாருங்கள், வார்த்தைச் ஜாலங்களுக்கு உள்ள அதே பொருள் சொற் சிலம்பத்திலும் உண்டு.

கலவைப் பதிவில் தமிழைப் பற்றியா ? நான் இன்று இந்த இடுகையை எழுதக் காரணமே ஸ்வாமி ஓம்கார் தான். ( நிரம்ப > ரொம்ப) நீண்ட நாளாச்சே கலவை எழுதி என்று இன்று காலை நினைத்துக் கொண்டு இருந்தேன். மனசில நினச்சதைச் சொல்லும் மகான் போல 'கலவை போட்டு நீண்ட நாளாச்சே' ன்னு அவரும் உரையாடியில் வந்து கேட்டார். ஸ்வாமிக்கு எதிர்காலம், புதிர்காலம், கனவுல நினைப்பது, மனசுல நினைப்பதெல்லாம் தெரிய தொடங்கி இருக்கு போல. அடுத்து யாருடைய கனவிலாவது வருவார். (ஸ்வாமி ஓம்கார் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார் )

*****

இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதான்னு தெரியல ? நோபல் பரிசுக்காக அன்னை சோனியா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறதாம். கருணாநிதி தனக்குத் தானே அண்ணா விருது எடுத்தும் கொடுத்தும் கொள்வது போல் நோபல் பரிசும் காங்கிரசு கையில் இருந்தால் சோனியாவுக்கும், காங்கிரசில் கைகோர்க்கப் போகும் ரோஜாவுக்கும் கூடக் கொடுக்கலாம். வதை முகாம் வரை கொண்டுவந்துவிட்ட தமிழர்களின் 'அமைதி'க்கு பாடுபட்ட அமேதி நாயகிக்கு நோபல் பரிசு மட்டும் தானா ? தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தற்காப்பதற்கும், சுரணை அற்றும் இருப்பதற்கும் இந்திய அரசுக்கு ஒலக நாடுகள் எதுவும் விருது கொடுக்கலையா ? மன்மோகனுக்கு ஒபாமா விருது கிடைத்திருக்காமே ! உங்களுக்கு தெரியுமா ? விருது வாங்கலையோ விருது ! உலக சீசன் போல.


*****

ஒரு ரூபாய் நடத்துனர் சில்லரையாக தர முடியவில்லை என்று கைவிரித்தால் குதிக்கும் பொதுமக்கள் டாஸ்மார்க் கடைகளில் 5 லிருந்து - 10 வரை கூடுதலாக கொடுக்கும் போது வெறும் முனகல் சில இடங்களில் சரக்கைப் பார்த்த மனநிறைவில் சென்றுவிடுகிறார்களே ஏன் ? மனத்தெளிவோடு இருப்பதற்கும், மன உந்துதலோடு இருக்கும் போது மனித மனம் செயல்படும் விதம், சண்டை இடுவது, விட்டுக் கொடுப்பது.....எல்லாம் இடம் பொருள் ஏவல் பார்த்து தானோ. சரக்கு வில்லை சில்லரைத் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய வட்டம் செய்யப்படுகிறதாம்.

போதை பார்டி 1 : மனைவி மேல இருக்கிற வெறுப்புல, கோவத்துல தான் நான் அடிக்கடி குடிக்கிறேன்
போதை பார்டி 2: மனைவியை ஞாபகபடுத்தி பயமுறுத்தாதே அடிச்சதும் இறங்கிடுப்போறது.

17 கருத்துக்கள்:

  • அத்திவெட்டி ஜோதிபாரதி
     

    விருது
    எடுத்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

    குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!

    தூங்காதே தம் பி தூங்காதே!

  • அத்திவெட்டி ஜோதிபாரதி
     

    அண்ணா விருது!

    உளியின் ஓசை படத்திற்கு வசனகர்த்தா விருது!

    தமிழினத் தலைவர் விருது!

    முத்தமிழ் அறிஞர் விருது!

    ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • கோவி.கண்ணன்
     

    //ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துகள்!//

    :)

    எடுத்துக் கொண்ட என்று இருக்க வேண்டும்

  • ஸ்வாமி ஓம்கார்
     

    //ஸ்வாமிக்கு எதிர்காலம், புதிர்காலம், கனவுல நினைப்பது, மனசுல நினைப்பதெல்லாம் தெரிய தொடங்கி இருக்கு போல.//

    இணையத்தில ஒருத்தர் என்னை பத்தி அற்புதங்களை எழுதிட்டார்...

    வாங்க லைன்ல நில்லுங்க எல்லாருக்கும் வரம் தரேன் :)

  • ஜெரி ஈசானந்தா.
     

    /வதை முகாம் வரை கொண்டுவந்துவிட்ட தமிழர்களின் 'அமைதி'க்கு பாடுபட்ட அமேதி நாயகிக்கு நோபல் பரிசு மட்டும் தானா ?//
    சரியான போடு.

  • ஸ்வாமி ஓம்கார்
     

    வடமொழி - தமிழ் மொழி
    ------------------------
    வாரா - கிழமை
    நட்சத்திரா - நாள்
    க்ரஹ(கிரகம்) - கோள்
    திதி - மதிநாள்
    கரணம் - அரைமதிநாள்.
    மேற்கண்ட ஐந்தையும் காட்டுவது..
    பஞ்சாங்கம் - நாள் காட்டி

  • ஜெகதீசன்
     

    //
    தூயத் தமிழில்
    //
    ஏன் இப்படிக் கொல்றீங்க???
    "தூயத் தமிழ்" இல்லை "தூய தமிழ்" தான்

    :(((

  • Barari
     

    kalaizar viruthai eduththu kondaalu -koduththu kondaalum avarukku antha irukkaththane seikirathu goviyaar avarkale athai marukka mudiyumaa?

  • நையாண்டி நைனா
     

    present sir.

    இத்தனை நடந்தும் அமைதியா இருக்கும் எங்களை யாரும் விருதுக்கு பரிந்துரை செய்யாரோ... ?

  • அத்திவெட்டி ஜோதிபாரதி
     

    நையாண்டி நைனா


    present sir.

    இத்தனை நடந்தும் அமைதியா இருக்கும் எங்களை யாரும் விருதுக்கு பரிந்துரை செய்யாரோ... ?//

    நான் பரிந்துரை செய்யுறேன்!

    நையாண்டி நைனா ஐயாவுக்கு “ஆட்டோ விருது” அளித்து சிறப் பிய்யுங்கள்!

    அவருடைய படைப்புகளை நாட்டுடைமை ஆக்குங்கள்!

    :P

  • நிகழ்காலத்தில்...
     

    //அடுத்து யாருடைய கனவிலாவது வருவார்.//

    அவர் கனவில் எல்லாம் வரமாட்டார்.

    நினைத்தால் நேரிலேயே வந்துவிடுவார்

    அவருடைய கனவில் யாராவது வந்தால்தான் அது ஆச்சரியம் :))


    பார்ட்டி 1,2 இரண்டுமே நீங்கள்தானா !!! :)))))))))))))))))))))))

  • T.V.Radhakrishnan
     

    கோவிக்கு இலை விருது விரைவில் கிடைக்க வாழ்த்துகள்

  • அத்திவெட்டி ஜோதிபாரதி
     

    T.V.Radhakrishnan said...
    கோவிக்கு இலை விருது விரைவில் கிடைக்க வாழ்த்துகள்//

    இது சரியில்லை ஐயா!

    கோவி விமர்சகர் அதனால் அவருக்கு முள் விருது கொடுக்கலாம்!

    அதுதானே இரண்டு இலைக்கும் நடுவில் இருக்கும்! :)

  • கோவி.கண்ணன்
     

    //T.V.Radhakrishnan said...
    கோவிக்கு இலை விருது விரைவில் கிடைக்க வாழ்த்துகள்
    //

    வாழை இலை போட்டு யாராவது விருந்து வைத்தால் மகிழ்ச்சி அடைவேன். மற்ற படி இலை விருதா நோ நோ.

  • அப்பாவி முரு
     

    எனக்கு நான் என்ன விருது குடுத்துக்கிறது?

  • பித்தனின் வாக்கு
     

    நல்லா இருக்கு, நிறைய தமிழ் சொற்களை அறிமுகப் படுத்துகிறிர்கள்.

  • மங்களூர் சிவா
     

    :))))

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP