பின்பற்றுபவர்கள்

24 மே, 2009

ஈழம் : கட்டாந்தரையில் புல் முளைக்கும் !

ஈழப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததாகக் கூறிக் கொண்டு வன்னி / முல்லைத் தீவு மக்களின் வாழ்வுரிமையை கீழே போட்டு புல்டவசரால் நசுக்கி இருக்கிறது இலங்கை இராணுவம் மற்றும் அதற்கு உதவிய இந்தியா உட்பட பலநாடுகள். திபெத் ஆக்கிரமிப்பையும் போராட்டக்காரர்களையும் நசுக்குவதை ஞாயப்படுத்த சீனா இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவி இருக்கிறது. இங்கு இந்தியாவில் சீன தாங்கி கம்யூனிச கட்சிகள் எதுவும் இதுவரை சீனாவுக்கு எதிராக மூச்சு விட்டது கிடையாது. காங்கிரசு அரசின் இலங்கை ஆதரவு வெளிப்படையானது, பாஜக தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. வழக்கமாக 'இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்' என்று இந்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவிற்கு ஈழத்தமிழர்கள் இந்துக்களாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னனியும் உண்டு, விடுதலைப் புலிகள் சாயிபாபாவை பல்வேறு சமயங்களில் விமர்சித்தவர்கள், சாயிபாபா பாஜக தொடர்பு நாடறிந்தது தான். அதற்கு மேல் அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கவும் வேண்டுமா ? பாரளுமன்றத்தில் வேறு பிரச்சனைகள் இல்லாதபோது ஓரிரு சமயங்களில் 'இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என்று பேசினார்கள். அதற்கு எந்த ஒரு அழுத்த்தையும் கொடுத்து போராடவே இல்லை. தேசிய கட்சிகள் அனைத்துமே ஈழப் பிரச்சனையில் தங்களால் முடிந்த அளவுக்கு சொந்தப் பகையை முடித்துக் கொள்ளவும், வெறும் அரசியலுக்காகவும் மட்டுமே பயன்படுத்தின. தமிழகத்தில் திமுக சார்ப்பு ஊடகங்கள் ஈழப் பிரச்சனை தேர்தல் தலைவலியாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தனது மீடியாக்களின் மூலம் காமடி திரைப்படங்களைப் போட்டு வெற்றிகரமாக செய்திகள் செல்லாவண்ணம் கவனமாக நடந்து கொண்டன.


(தமிழனாக பிறந்ததால் இந்த தண்டனையா ?, இனி தமிழனாக பிறக்காதீர்கள் குழந்தைகளே...)

இதோ எல்லாம் முடிந்துவிட்டதாக அறிவித்து இலங்கையில் வெற்றி அறிவிப்பு இட்டாகிவிட்டது. 30 ஆயிரம் பொதுமக்கள் அழிந்ததையும் பொருட்படுத்தாது அந்நாட்டு சிங்களர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள் என்றெல்லாம் தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. பார்க்கும் நமக்கே எரிச்சல் ஆகும் போது, அங்கே கொழும்பிலும், சிங்களர் பெரும்பாண்மையாக வசிக்க்கும் இடங்களில் வசிக்கும் தமிழர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பெரும் வேதனையை அடைந்திருப்பார்கள். வெற்றி வெற்றி என்றால் எது வெற்றி ? 30 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதா ? அல்லது அவர்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்ததா ? விடுதலைப் புலிக்கட்டுப்பாட்டு பகுதியில் கல்வி, மருத்துவம், வங்கிகள் அனைத்துமே அமைக்கப்பட்டு தனிநாடு போலவே தான் செயல்பட்டு இருந்தனர். அங்கிருந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் முற்றிலுமாகவே அழிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக எந்நேரம் போர் நடக்கும், என்கிற பீதியிலே வாழ்ந்தவர்கள், வாழ்க்கை என்றாலே போர் தானோ என்ற அளவில் சிறுகுழந்தைக்கும் மனதில் பதிந்தும், இனி குடும்பத்தில் ஒன்று அல்லது மேற்பட்டவர்களை இழந்தோ, தானே கை, கால் இல்லாமல் ஊனமுற்றோ இருப்பார்கள். இவைதான் இலங்கை அம்மக்கள் மீது கொண்ட வெற்றி என்பது அந்த நாட்டு சிங்கள குடிமகனுக்குத் தெரியாதா ? முல்லைப் பெரியார் பகையை வைத்துக் கொண்டும், சிங்களர்களுக்கு நேரடியாக உதவிய மலையாளிகளின் தலைமைகளை நினைத்தும் வெறுப்படையும் நாம் நாளை கேரளாவில் பூகம்பம் ஏற்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடிப்போமா ? ஆனால் அது போன்ற இழிசெயலைத்தான் சிங்களக் குடிமக்கள் செய்திருக்கின்றன. பிரபாகரனோ, விடுதலைப் புலிகளோ பாராசூட் வழியாக ஈழ மண்ணில் குதித்தவர்கள் அல்ல. பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு தமிழனும் பிரபாகரன்களாக உருவானால் ஈழப் பிரச்சனை சுற்றுப் புறச் சூழலால் உலகம் அழியும் வரை (உண்மையிலேயே அப்படி ஒன்று நடந்தால் நான் மகிழ்வேன், ஏனென்றால் எந்த ஒரு கொடுமையும் தொடந்து நடப்பதை இயற்கைக் கூட பொறுத்துக் கொள்வதில்லை) கூட நிகழும். இராமர் பாலம் பற்றிய கதைகளை புறக்கணித்தாலும் இலங்கை 'இராவண' தேசம் என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கோழைகளுக்கு வரலாற்றின் பின்குறிப்பில் கூட இடம் இருந்ததில்லை, கோழைகள் உண்ணுவதையும் பொருளீட்டளையும் தவிர்த்து சொந்த வாழ்கையிலும் கூட எதையும் சாதிப்பது இல்லை, தனக்கான பிரச்சனை இல்லாதவரை தலையிட வேண்டாம் என்று அமைதியாக இருப்பவர்கள் அனைவருமே கோழைகள் தான். எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாத இந்த கோழைத்தனம் தான் ஒரு இனத்தை இன்னொரு இனம் அடிமைப்படுத்த வழியாக அமைகிறது. இந்தியர் கோழைத்தனமே முகலாயர் படையெடுப்பு, வெள்ளைக்காரர் படையெடுப்பு என்பதாக வரலாறு. தமிழனின் கோழைத்தனம் தான் இராஜராஜனுக்கு பிறகு பிற மாநில மன்னர் ஆட்சி. இவை அனைத்துமே தான் பாதிக்கப்படவில்லை என்கிற பொறுப்பின்மையினாலும், சுயநலத்தினாலும் ஏற்பட்டவை, அதற்கு சாதகமாக எதிரிகள் வைக்கும் விலைக்கு விலைபோகுபவர்களின் சுயநலம், ஒரு ஆயிரம் பேரை அடிமைப்படுத்த அந்த கூட்டத்தில் ஒருவனை விலைபேசினாலே அவன் அனைவரையும் காட்டிக் கொடுத்துவிடுவான். ஆனாலும் விழித்துக் கொள்ளும் போது ஓரளவு மீண்டு வெளியே வரத்தான் செய்கிறார்கள். இது இயற்கை மற்றும் உலக நடப்பு. இன்றைய தேதியில் சுயநலம், இனநலம் ஓங்கி இருப்பதால் எந்த ஒரு வெற்றியும், தோல்வியும் உண்மையானதோ, நிலையானதோ அல்ல.




மேலும் படங்களுக்கு


முழுதுமாக உழுதுவிட்டு, தீவைத்துக் கொளுத்தினால் கூட நம்பிக்கை தூறலில் புற்கள் முளைப்பது இயற்கை. திடலாகிப் போன வன்னி, முல்லைத்தீவு மீண்டும் எழும். அதை எந்த ஒரு சக்தியாலும் முடக்கிவிடவே முடியாது.

3 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

வாழ்த்துக்கள்

பதிவர் சந்திப்பு குறித்தும் அறிய
விருப்பம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
வாழ்த்துக்கள்

பதிவர் சந்திப்பு குறித்தும் அறிய
விருப்பம்...
//

அன்பு நண்பரே,

பதிவர் சந்திப்பு குறித்து வெளிச்சப் பதிவர் திருவாளர் ஜோதிபாரதி பதிவிட்டு இருக்கிறார்

ttpian சொன்னது…

தமிழன் கருனானிதி மெல்ல இந்தியனாக மாறி,இப்போது இதாலிய பிரஜை!
வாழ்நாள் முழுவதும் உன்னை நம்பி ஏமாந்தேனே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்