கோவியார் கூற்று !

மதத் தீவிரவாதங்கள் , பழமை வாதங்கள் மறுக்கப் படமால் ஆன்மிகம் பேசுவது பொருளற்றது, பயனற்றது.

மதம் என்பது இறை நம்பிக்கை அல்ல... அது பிரிதொரு மத நம்பிக்கையின் நாத்திகக் குறியீடு





முதல் சுற்றில் வாக்குகள் அளித்து கரையேற்றிவீட்டஅனைத்து பதிவுலக உறவுகளுக்கும் நன்றி, அடுத்தச் சுற்றிற்கும் உங்கள் பொன்னான வாக்குகளை,

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

யாதும் நாடே யாவரும் பாரீர் - 1

பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

என்ற இடுகைகளுக்கு பிடித்து இருந்தால் போடுங்கள் ! நன்றி !!

சாம்பார் வடை கேட்ட - பிடித்த திரைப்படங்கள் !

Thursday, November 22, 2007

சாம்பார் வடை பிடித்த படங்களை பற்றி எழுதச்சொன்னார், வாழ்நாளில் இதுவரை ஆயிரம் படங்களாவது பார்த்திருப்பேன். ஆனால் மனதில் நிற்பவை மிகச்சில தான். சேமித்து வருங்கால இளையர்களுக்கு காண்பிக்க சிறந்த படமாக நான் கருதுவதில் சிலவற்றை இங்கு தருகிறேன். இந்த படங்கள் என் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது.

தில்லானா மோகனாம்பாள் : நடிகர் திலகமும், நாட்டிய பேரொளியும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்ந்திருப்பார்கள். கதைக்கு பொருந்தமான பாடல்கள், வசனங்கள், பாலைய்யா, நாகேஷ், மனோரமாவின் நடிப்பு அப்பப்பா எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன ?'பாடல் ஆல் டைம் பேவரிட். சிறந்த திரை காவியம்

திருவிளையாடல் : ஏபிநாகராஜனின் நல்ல தமிழ், அதில் அவர் நக்கீரராகவும் நடித்திருப்பார், கவியரசு கண்ணதாசனின் காலத்தை வென்ற பாடல்கள், சிவாஜியின் சூப்பர் நடிப்பு, இன்றும் யாராவது எதாவது நாடகம் எழுதினால் திருவிளையாடலின் பாதிப்பின்றி எழுத முடியாது என்றே நினைக்கிறேன். சிறந்த பக்தி படம்

ஒளவை சண்முகி : ஜொள்ளு, லொள்ளு ஜெமினியும் கமலும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதிலும் 'ருக்கு ருக்கு' பாட்டுக்கு கமலஹாசன் காலைமடக்கிப் போட்டு உட்கார்ந்திருக்கும் அழகுக்கு சுத்திப் போடலாம், 100 % ஐயர் மாமியாகவே கலக்கி இருப்பார். தரமான நகைச்சுவை படம்

முதல்மரியாதை : நடிகர் திலகத்தின் நடிப்பும் இளையராஜாவின் இசையும் பாரதி ராஜாவின் இயக்கமும் ஒன்றை ஒன்று போட்டி போடும். பூங்காற்று திரும்புமா ? என்று கேட்டாலும் தெவிட்டாது. உணர்ச்சி காவியம்

கர்ணன் : புராணக் கதையில் அதிகம் புகழப்படும் கர்ணன் பாத்திரத்தை படைப்பும், படைக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பும், படத்தில் உள்ள பாடல்களும் ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. அதுவும் ஆயிரம் கரங்கள் நீட்டி அனைக்கின்ற தாயே போற்றி' - கண்ணுக்கு தெரியும் கடவுள் சூரியனை போற்றும் பாடல் கேட்கும் போது எனக்கு சிலிர்க்கும். சிறந்த இதிகாச படம்

அஞ்சலி : இந்தப்படம் குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம், மூளை வளர்ச்சி குறைவுற்றோர்களை அரவணைத்துச் செல்ல குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க இந்த படம் மிகச் சிறப்பான படம், மணி ரத்தினம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படமென்றால் அஞ்சலிதான். பெரியவர்கள், குழந்தைகளுக்கான சிறந்த படம்

இன்னும் பத்து படங்களுக்கு மேல் இருக்கிறது, இதுக்குமேலே எழுதினால் பட்டியல் நீளும் !

நன்றி சாம்பார் வடை அவர்களே.

ஆட்டத்துக்கு அழைக்கனுமா ? என் பேச்சை தட்டாதவர்களைத் தானே அழைக்க முடியும் ?
:)

இவர்கள் தான்
ஆத்திகம் (விஎஸ்கே ஐயா)
சுப்பையா வாத்தியார் ஐயா

கூடல் குமரன்
டிபிசிடி ( அரவிந்த்)
பாரி.அரசு
ஜெகதீசன்
வல்லி அம்மா
சுல்தான் ஐயா

8 கருத்துக்கள்:

  • நாகை சிவா
     

    எல்லாமே சூப்பர் படங்கள் :)

    சிக்கலாரை முதலில் கூறியதில் மிக்க மகிழ்ச்சி :)

    நலம் தானா.. பாடல் நம்ம ஆல் டைம் பேவரிட் ல ஒன்னு ;)

  • ஜோ / Joe
     

    அருமையான தேர்வுகள்!

  • கோவி.கண்ணன்
     

    //ஜோ / Joe said...
    அருமையான தேர்வுகள்!
    //

    ஜோ,

    இதை எழுதிவிட்டு உங்களைத்தான் நினைத்தேன். நான்கு படம் நடிகர் திலகம் படம் வந்துவிட்டதே, நிச்சயம் வந்து பாராட்ட்டுவீர்கள் என்று நினைத்தேன். நம்புங்க !

    சினிமாவை சுறுக்கினால் சிவாஜியும் கமலும் தான் இருக்காங்க.

    :)

  • கோவி.கண்ணன்
     

    //நாகை சிவா said...
    எல்லாமே சூப்பர் படங்கள் :)

    சிக்கலாரை முதலில் கூறியதில் மிக்க மகிழ்ச்சி :)

    நலம் தானா.. பாடல் நம்ம ஆல் டைம் பேவரிட் ல ஒன்னு ;)
    //

    சிவா,

    நம்ம ஊர் படத்தில் வருமே. :)

  • வீர சுந்தர்
     

    //சினிமாவை சுறுக்கினால் சிவாஜியும் கமலும் தான் இருக்காங்க.\


    ha..ha.ha.. Good one!

  • Sambar Vadai
     

    நன்றி கோவி.கண்ணன்

    உங்கள் பட லிஸ்டில் உள்ள் அனைத்தும் (அஞ்சலி தவிர) எனது லிஸ்டிலும் உள்ளது. தில்லானா மோகனாம்பாளும், திருவிளையாடலும் தான் நான் முதலில் சேகரித்த டிவிடி/சிடிக்கள்.

    லக்கிலுக் குறிப்பிட்டது போல சினிமா என்பது பொழுதுபோக்கு என வைத்துக் கொண்டாலும் ரசிப்பதிலும் நல்லவையை (பலரும் நல்லது என ரசிக்கும் படங்கள்/காட்சிகள்) ரசிக்கக் கற்றுக் கொடுத்தால் வாரிசுகளும், சந்ததியினருக்கும் நாம் விட்டுச் செல்வது பின்னாளில் பயன் தரலாம்.

    முதல் மரியாதை பாடல்களில் வைரமுத்துவின் வரிகளும், பின்னணி இசையும், சிவாஜியின் நடிப்பும் பாரதிராஜாவின் இயக்கமும்.. அடடா.!

    >> இன்னும் பத்து படங்களுக்கு மேல் இருக்கிறது

    மேலும் படங்கள் நினைவுக்கு வரும்போது, சேமித்துவைத்து பதியவும். இவ்வாறு பதியப்படும் பதிவுகளில் சுட்டியை தொகுத்து எனது பதிவில் வழங்க உள்ளேன்.

    கலந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

  • TBCD
     

    சத்தியமாக நிச்சயமாக என்னுடைய 101வது பதிவு இது தான்.

  • சுல்தான்
     

    நான் பதிவிட்டிருக்கிறேன் ஜிகே

பதிவு பார்வைகள்

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP