பின்பற்றுபவர்கள்

4 மே, 2006

தேர்தல் முடிவு 5:

முன்பு எழுதிய தேர்தல் முடிவு 1 முதல் 4 வரை என்ற வலைப் பக்கங்களில், முடிவு 1ம் 2ம் சாத்தியக் கூறுள்ள பதிவுகள், இப்படியும் நடக்கவேண்டும் என்று ஆதங்கத்தில் தேர்தலில் நிர்பவர்களுக்காக முடிவு 3ம், 4ம் எழுதப்பட்டது. சரி விசயத்துக்குள் வருவோம்

அலைகள் வீசாத தேர்தல் உண்டா ? இல்லை என்றுதான் சொல்லவேண்டும், ஆனால் அலைகள் எப்போதும் ஒருபக்கமாகவே வீசியிருக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்பே பெரிய அலை சுனாமி வடிவத்தில் வீசியதால், இந்த தேர்தலில் அலை வழுவிழந்து காணப்பட்டாலும், இரு கூட்டணிக் கட்சிகள் பக்கமும் வீசுகிறது.

வயதான தமிழ் காவலருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தும் வீசும் அலை, வாரிசு அரசியல் என்ற எதிர்காற்றில் திருப்பி அனுப்பபட்டு எதிர்கட்சி பக்கமாகவும் வீச வைக்கிறது.

கூட்டணி கட்சிகளின் பலம் திமுகவிற்கு இருப்பது போல், சந்தற்ப வாத அரசியல் என்ற குற்றச்சாட்டு அதிமுக அணிக்கு ஏற்பட்டு இருப்பதை யாராலும் முழுவதும் மறுக்க முடியாது. அதிமுக ஐந்தாண்டு காலம் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் இப்படி கூட்டணிக்காக கதவை திறந்து வைத்திருக்க வேண்டியிருந்திருக்காது என்பதை அவர்களும் உணர்ந்துள்ளனர், பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.

கருணாநிதியின் இலவச அறிவிப்புகள் ஏழை எளிய மக்கள் எவரையும் கவரவில்லை என்று எந்த பத்திரிக்கைகளும் இது வரை சொல்லவில்லை அதனால் ஏழை மக்களின் பெருவாரியான வாக்குகள் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்க வாய்பு இருக்கிறது.

சினிமா படம் பார்த்துவிட்டு ஓட்டு போடுவது என்பது எம்ஜிஆருக்கு பின் குறைந்திருப்பதாலும், அப்படி ஓட்டு போடுபவர்கள் இன்னும் சினிமா விசுவாசிகளாகத்தான் இருப்பார்கள், அதன்படி தே.மு.தி.க விற்கு கிடைக்கும் ஓட்டுகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் ஓட்டுகள். கார்திக் பிரிக்கும் தேவரின ஓட்டுகளாலாலும் அதிமுகவிற்கு பின்னடைவு.

வைக்கோவிற்கு கிடைக்க வேண்டிய குறிப்பிட்ட சாதி ஓட்டுகள் இந்த முறை பிரிந்து தே.மு.தி.க விற்கு கிடைக்கும். திருமாவளவன் அதிமுக கூட்டணியில் உள்ளதால் வடமாவட்டங்களில் தோற்றாலும் அதிக வாக்கு விகிதம் இருக்காது.

சென்ற 2001ல் நடந்த தேர்தலில், மதிமுக பிரித்த ஓட்டுகளால் திமுக தோல்வியை தழுவியதே, அதே நிலைமை அதிமுக கூட்டணிக்கு தேமுதிக கட்சியால் ஏற்படப் போகிறது. தேர்தல் முடிவுக்கு பின்பு அதிமுக-மதிமுகவினர், தேமுதிக எங்கள் கூட்டணியில் இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்வார்கள்.

திமுக கூட்டணியின் பெரிய பலம் அது காங்கிரஸ¤டன் கூட்டணி வைத்திருப்பது தான், காங்கரசுடன் கூட்டணி கட்சிகளே இதுவரை ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பா.ம.க கூட்டணி, மற்றும் சிறுபாண்மையினர் ஆதரவு.

இப்பொழுது செய்தி : மே 11. கடந்த மே 8ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணி 167 இடங்களை கைப்பற்றியது. இதன்படி திமுகாவிற்கு 98 இடங்களும் (முஸ்லிம் கட்சிக்கும் சேர்த்து), காங்கிரஸ¤க்கு 31 இடங்களும், பமகாவிற்கு 23 இடங்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 15 இடங்களும் கிடைத்தது. திமுகாவிற்கு பெரும்பண்மை கிடைக்காத நிலையில் அதன் தலைவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அதன் தோழமை கட்சிகளை கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

மே. 12. கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்ததால் தனது மகன் ஸ்டாலின் எதிர்காலத்தில் முதல்வர் ஆவதற்கு கூட்டணி கட்சிகள் குறுக்கே நிற்காது என்று கருதியே கருணாநிதி கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தெரிவித்தார்.

மே. 13. திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று 5வது முறையாக தமிழ முதல்வர் பதவியை ஏற்றார். அமைச்சர்கள் யார் என்பதும், இலாக்காக்களும் இரு நாட்களில் முடிவு செய்யப்படுவதாகவும், காங்கிரஸ¤ம், பா.ம.கவும் அமைச்சர் அவையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆசை இருக்கு தாசில் பண்ண!
அதிர்ஷ்டம் இல்லையே என்ன பண்ண?

அய்யோ பாவம்!

உங்களுக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியலை??

பெயரில்லா சொன்னது…

கோவி கலக்கி விட்டீர்கள்.... உண்மையிலேயே நடக்கப்போவது இது தான்...

பெயரில்லா சொன்னது…

கோவி....

அசத்திட்டீங்கலே!!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

நன்மனம் அவர்களுக்கு,
கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று 100% நம்பினேன். அதுதான் நடந்துள்ளது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்