பின்பற்றுபவர்கள்

6 ஜூலை, 2011

குறி சாமியார் குப்பு சாமி (வெ.ஆ.மூர்த்தி - ஸ்பெசல் ) !

சாமியார் பிஸ்னஸ் நல்லாப் போகுதுன்னு நல்லாத் தெரிஞ்ச வெண்ணிற ஆடை மூர்த்தி சாமியார் வேசம் கட்டிவிட்டார். குன்றத்தூர் மலையடிவாரத்தில் குத்துக்கல்லாட்டாம் குந்திக்கிண்டு இருக்கும் அவரிடம் மக்கள் குறி கேட்க வர்றாங்க.
பக்கதில் 'குன்றத்தூர் குறிசாமியார் குப்புசாமி' ன்னு பெயர் பலகை இருக்கு.





வெ.ஆ.மூர்த்தி : ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பூ.....ப்ர்ர்ர்ர்ர்ர்பூ.....(உதடால ஊதி .......ஒருபயலையும் காணுமெ.......) என்று சிந்திதபடி இருக்கிறார்

50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தொப்பையோடு அவரிடம் வருகிறார்

'வணக்கம் சாமி.......நான் புவனகிரி புஷ்பநாதன் மகன் புண்ணிய கோடி'

வெ.ஆ.மூர்த்தி : (ரொம்பவும் தெரிஞ்சவரிடம் பேசுவது போல) வா....புண்ணியக் கோடி..உன்னப் போலா ஆளுக்காகத்தான் ஒத்த குச்சியோட உட்கார்ந்து குறிபார்த்து குறிபார்த்து சொல்லிக்கிட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி யாருகூடேயும் ஓடிட்டாளா ?

பு.கோ : ஹிஹி..... அட ஆமாம் சாமி அது எப்படி உங்களுக்குத் தெரியும் ?

வெ.ஆ மூர்த்தி : அதான் மூதேவி உன் மூஞ்சப்பார்த்தாலே தெரியுதே......உன்கிட்ட இவ்வளவு நாளு அவ இருந்ததே கஷ்டம்

பு.கோ : ஹி ஹி, இப்ப நான் ஓடிப் போன பொண்டாட்டி திரும்பி வருவாளான்னு கேட்க வரல, அடுத்து எனக்கு கல்யாணம் ஆகுமான்னு பார்த்துச் சொல்லுங்க

வெ.ஆ.மூர்த்தி : டம்பி........நான் சொல்றேன்ன்னு தப்பா நெனச்சுக்காதெ, வெட வெடன்னு ஆடுற ஒன்கிட்ட இன்னொருத்தி வந்தாலும் அவ கட கடன்னு ஓடிப்போவான்னு தான் ஒன் நாடி சொல்லுது......ம்கூம்.....உன் வாயெல்லாம் ஓவரா நாறுது......கொஞ்சம் தள்ளி உட்காரு.

பு.கோ : அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா ?

வெ.ஆ மூர்த்தி : ம்கூம் கல்யாணம் ஆகாது ஆனா இன்னொன்னு சொல்லுவாங்களே... கருமாதி அது ஆகும்...எந்த குறிகாரன் இல்லாட்டி குறிகாரியிட்ட கேட்டாலும், குடிகாரங்கிட்ட கெட்டாலும் அதான் சொல்லுவான், காத்தால எழுந்து நெதம் பல்லு வெளக்கு.......கல்யாணம் ஆகாட்டியும் எவன் கூடவோ ஓடிப் போன ஒம்பொண்டாட்டி திரும்பி வந்தாளும் வருவா ?

பு.கோடி பெருமூச்சு விட்டபடி எஸ்கேப் ஆகிறார்

வெ.ஆ மூர்த்தி : டேய் டேய் குறிக்கேட்டதுக்கு எதாவது கொடுத்துட்டுப் போடா........தொங்க தொங்க நாக்கு வரண்டு போய் குந்திகினு இருக்கேன்......இப்படி ஏமாத்திட்டுப் போறானே பாவி இவன் உறுப்படுவானா ?

**********

அடுத்ததாக இன்னொருவர்

கும்பிடுறேன் சாமி, நான் கொருக்குப்பேட்ட கோபாலு

வெ.ஆ.மூர்த்தி : வா கோபாலு உட்காரு கோபாலு, உனக்கு என்ன பிரச்சனை ? நல்லா ஓடிக் கிட்டு இருந்த பிஸ்னஸ் இப்ப சொம்மா ஆடிக்கிட்டு இருக்கா ?

கொ.கோ : ஆமாம் சாமி, பார்டனர் என்னை மோசம் செஞ்சுட்டான், அவனுக்கு செய்வன வெக்கனும்

வெ.ஆ.மூர்த்தி : டம்பி நான் சொல்றேன்ன்னு தப்பா நினக்காதே அதிகமா கைவென வைக்கிறவனும் செய்வென வெக்கிறவனும் அத்தாலாயே சாவான்.

கொ.கோ : செய்வின தெரியும் அது என்ன சாமி கைவின ?

வெ.ஆ.மூர்த்தி : இதெல்லாம் வெவரமா கேளு, அதிகமா கைய நீட்டுறவன் யாராலாவது அடிவாங்கியே சாவான்னேன் நான் சொல்றது சரிதானே ?

கொ.கோ : அப்ப நான் என்ன தான் தொழிலு செய்றது ?

வெ.ஆ.மூர்த்தி : டம்பி கைத் தொழில் சரி இல்லைன்னா கலைத்தொழில் எதாவது செஞ்சுப் பொழச்சிக்கலாம், உன் ரேகைப்படி உனக்கு கூத்து வரும். ஆடிப் பொழச்சுக்கோ..... சினிமாவில் சேரு....நல்லா வருவே

கொ.கோ : அப்ப நான் வாரன் சாமி

வெ.ஆ.மூர்த்தி : நீ வார்றது இருக்கட்டும், காத்தாலேர்ந்து நாஷ்டா இல்லாமல் நட்டுகிட்டு இருக்கேன், துட்டக் கொடுத்து எங்கேயாவது போய் தொல

******

அடுத்து ஒரு 30 வயது தக்க பெண் வருகிறாள்

சாமி வணக்கம்,

வெ.ஆ.மூர்த்தி : நீ ஆதம்பாக்காம் ஆளவந்தான் மக அன்னக்கிளி தானே.........?

'இல்லை அது எங்க அக்கா.......நான் வண்ணக்கிளி'

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா ....அப்ப உங்க அப்பாவுக்கு ஒரு சின்ன வீடும் இருக்கா ?

வ.கிளி : நாசமாப் போச்சு.....போய் வாயைக் கழுவுங்க சாமி......எங்கப்பாவுக்கு இரண்டு வீடு இல்ல ஒரே வீடு தான், அவ என் கூடப் பொறந்த அக்கா

வெ.ஆ.மூர்த்தி : தப்பா நெனச்சுக்காதம்மா....உங்கப்பா அந்தக்காலத்து ஆளேச்சேன்னு கேட்டேன், இப்ப ஒனக்கு என்ன கொற ?

வ.கிளி : அத ஏன் கேட்கிறிங்க....எங்க ஊட்டுக்காரர் இராவைக்கு 12 மணிக்கு மேல பூனை மாதிரி வந்து படுத்துக்கிறார்.....காத்தால அஞ்சுமணிக்கெல்லாம் வெளியே போய்டுறார்......எங்கே என்னை கைவிட்டுவாரோன்னு பயமா இருக்கு ?

வெ.ஆ.மூர்த்தி : அவனுக்கு சின்ன வீடு இருக்கான்னு குறிபார்க்கனும், அதானே ?

வ.கிளி : அந்த கண்றாவி புடிச்சவனுக்கு நான் கிடச்சதே பெருசு, அது மோரக்கட்டைக்கு இன்னொருத்தி சிக்குவாளாக்கும்

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.......தப்பா நெனச்சுக்காதே ஒருவேளை ஒன் மோரக்கட்டையைப் பார்க்க புடிக்காமல் தான் ராவொடு வந்துட்டுப் போறானோ......

வ.கிளி : ம்கும்......இரண்டு புள்ளையை பெத்திருக்கேனாக்கும்.....புடிக்கமாலா இருக்கும்....

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா....உங்க வீட்டுல டிவி ஓடுதா ?

வ.கிளி : அதான் என்னேரமும் ஓடுது சாமி, இன்னிக்கு சீரியல் கீரியல் எதுவும் கிடையாது அதான் இந்தப்பக்கமா குறிகேட்க வந்தேன்.....நேத்திக் கூட செல்லம்மா சீரியலில் அஞ்செலி பொண்ணை அரஸ்ட் செஞ்சப்ப எழவெடுத்த கரண்டு பட்டுன்னு போச்சு, அதுக்குப் பெறகு என்ன ஆனதோ மனசு பட்டு....பட்டுன்னு அடிச்சுகுது

வெ.ஆ.முர்த்தி : பாப்பா மறுபடியும் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே, கார்த்தாலேர்ந்து ரா வரைக்கு முழுச்சு முழுச்சு மூதேவியாட்டாம் மெகாசீரீயல் பார்த்துக்கிட்டே இருந்தீன்னா....எப்பேர்பட்ட மவராசனாக இருந்தாலும் வீட்டுப்பக்கமே ஒரு எட்டுக்கூட வந்துட்டுப் போவமாட்டான், டிவிய அணைச்சிட்டீன்னா அவன் வருவான் வந்து அவனே லைட்ட அணைப்பான்

வ.கிளி : போங்க சாமி எனக்கு வெட்கமா இருக்கு

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.....வந்ததே வந்த...... அவுத்துக் கொடுத்துட்டு நல்லா முடிச்சுப் போட்டுட்டு போ.....சுத்திலும் பூறா களவானிப் பசங்க பார்த்துட்டா அப்படியே அமுக்கிடுவானுங்க.

வ.கிளி : ...ங்ஙெ.............!

வெ.ஆ.மூர்த்தி : அட சில்லரையையும் சுறுக்கு பையையும் பத்தரம்னு சொன்னேன்

*******

பின்குறிப்பு : வெண்ணிற ஆடை ரசிகர்களுக்காக இந்த புனைவு நகைச்சுவை. இதை இன்னும் கொஞ்சம் தூக்கலாக எழுத முடியும் ஆனால் சுவை ரசபாசமாகிடும், அதாவது நாரசம்...ஆபாசம்!

6 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

muthal vadi

பித்தனின் வாக்கு சொன்னது…

ithu kalam blog thana?. illai naan thappa vanthuttana. cinema elllam irukku. enna achunna.

DR சொன்னது…

தள, உங்க வலைப்பதிவை யாரோ ஹேக் பண்ணிட்டாங்காண்ணு நினைக்குறேன்.

கொஞ்சம் உஷாரா இருங்க தல...

R.Gopi சொன்னது…

ஹா...ஹா...ஹா... கலகலவென சிரித்து ரசித்தேன்...

ஆனாலும், இரு இடங்களில் நீங்கள் “டம்பி” என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்... அதை மாற்றி “தம்ப்ரி” என்று எழுதியிருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும் தல...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இதை நகைச்சுவையா என்னால் எடுக்க முடியலை.. மிக வக்கிரமாக இருக்கு..- இது என் கருத்து..


இந்த பதிலை வெளியிட வேண்டாம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//எண்ணங்கள் 13189034291840215795 said...
இதை நகைச்சுவையா என்னால் எடுக்க முடியலை.. மிக வக்கிரமாக இருக்கு..- இது என் கருத்து..


இந்த பதிலை வெளியிட வேண்டாம்..

11:20 AM, August 19, 2011//

வெளியிடாமல் இருக்க நீங்கள் தவறாக எதுவும் சொல்லவில்லை, நான் குறிப்பிட்ட தனிமனிதர்களை வைத்து தரக்குறைவாக குறிப்பிட்டு இங்கு காமடி எழுதவில்லை, வெ.ஆ மூர்த்தி எப்படிப் பேசுவார் என்று மட்டும் தான் உள்ளது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்