பின்பற்றுபவர்கள்

12 அக்டோபர், 2009

தன்னாட்டுக்குள்ளே........

குற்றவாளிகள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்பார்கள், அவர்களை சந்திக்கச் செல்லும் அவர்களது உறவினர்கள் கம்பிக்கு வெளியே நிற்பார்கள், இவர்கள் செய்த குற்றம் என்ன ? சொந்த மண்ணிற்குள்ளேயே சிறை பிடிக்கப்பட்டு, கழிப்பிடம் முதல் தூங்கும் இடம் வரை எதையும் மறைவாக இல்லாமல் பலர் பார்க்க பகிர்ந்து கொள்ள வேண்டிய கொடுமை.

உலகமாம், ஐக்கிய நாடுகள் சபையாம் மசுராம்.........போங்கடா உங்க அமைப்பும் நீங்களும். ஆளும் வர்கத்திற்கு சூத்து கழுவி விடுவதைத் தவிர இவ்வமைப்புகள் எதையும் செய்தது கிடையாது. எவனாவது அனுஆயுதம் வைத்திருக்கிறான் என்று அமெரிக்கா சந்தேகமாக சொன்னால் அவனுடைய ஆடைய அவிழ்த்துப் பார்ப்பது, அம்மணமாக்குவது கூட ஞாயம் என்பது போல் நடந்து கொள்ளும் உலக அமைப்புகள்.......இவர்களெல்லாம் மக்கள் நலம், மனித உரிமை என்று என்ன மசுரைப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

அமுக்கி வைக்கப்படுபவன் ஆயுதத்தை கையில் எடுக்காமல் அடிமை ஆகவேண்டும் என்பதே உலக அரசியல் வாத அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. அதற்கு இவ்வமைப்புகள் யோக்கியமாக நடந்து கொண்டிருக்க வில்லை என்பதையும் வரலாறுகளே காட்டுகின்றன.

அமைதி வழி என்பதாக மயானப்பாதையையே காட்டுகிறார்கள்.

அண்ணாவிருது, நோபல் பரிசுக்கு பரிந்துரை, நோபல் பரிசு.....இதெல்லாம் யார் தாலிகளை அறுப்பதற்காகக் பரிந்துரைக்கப்படுகிறது கொடுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

வசதியான ஒரு இடத்தில் இருந்து கொண்டு உலக சமாதனமும், ஒற்றுமையும், ஞாயமும் பேசும் மயிரான்களும், மயிரான்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்

11 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உங்கள் கோபம் ஞாயமானதே... வார்த்தைகள் பலம் ரொம்பவே அதிகமாக இருக்கு...

கிடுகுவேலி சொன்னது…

வார்த்தைகளில்...இயலாமையின் வலி தெரிகிறது...எவரும் திரும்பிப் பார்க்காத ஏதிலி நிலை...ஆருமற்ற அனாதைகளாய் அம்மக்கள்....இறைவனும் இல்லையா?

அப்பாவி முரு சொன்னது…

+1 போட்டுட்டேன்...

(விளக்கம், முழு கருத்தோடும், வார்த்தைகளோடும் ஒத்துக்கொள்கிறேன்)

Unknown சொன்னது…

பார்க்கவே மிகவும் கஷ்டமா இருக்கு... ம்ம்ம்ம்... இப்படியெல்லாமா நடக்கும் :( மண்டபத்தின் அகதி முகமில் நமது அரசாங்கம் கூட அவர்களை சிறை கைதி போல்தான் நடத்திகிறது.

எப்ப இதற்கெல்லாம் விடிவு வருமோ

நையாண்டி நைனா சொன்னது…

அப்படி நச்சுன்னு ந(நா)டு மண்டையிலே அடிங்கோ...

பீர் | Peer சொன்னது…

நியாயமான கோபம். :(

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

என்னத்த சொல்றது கோவியார்!

வெறுப்பும், ஆற்றாமையும் தான் மிச்சம்!

விருந்தாளிகளை அனுப்பி விட்டு விட்டு நாம் வெந்து தனிந்து கொண்டிருக்க வேண்டியதுதான்!

எல்லாம் பிளான் பண்ணி நடாத்துரானுவ.

வருகிற செய்திகள் அதைதான் சொல்லுது.

நல்லா இருக்கட்டும்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கண்ணன் இதுதான் உலக நடப்பு !

நாம யாரை குறைசொல்லமுடியும் !!!

அவனவன் சுயநலத்தை தான் பாப்பானே தவிர , இதெல்லாம் அவனுகளுக்கு ஒரு தூசு !!

இதற்கு காலம்தான் பதில்சொல்லணும் !!!!

பித்தனின் வாக்கு சொன்னது…

இன்னமும் கருத்துக்களில் கோபம் கொப்பளிக்கின்றது. என்ன பண்ணுவது எப்பவும் சொல்லற நெண்டிச் சாக்கு கையறு நிலைதான்.
காலம் ஒரு சக்கரம் போல கீழ் இருக்கும் இவர்கள் மேலே போவார். மேலிருக்கும் அந்த ராஜா பஜ்ஜிகள் எல்லாம் மண்ணுக்குள் போகும். பொறுங்கள். காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்.

பித்தனின் வாக்கு சொன்னது…

// அவனவன் சுயநலத்தை தான் பாப்பானே தவிர , இதெல்லாம் அவனுகளுக்கு ஒரு தூசு !! //
அய்யே ஸ்டார்ஜன் இதுல கூட பாப்பானே நு எழுதுதாதிங்க அப்புறம் இதுக்கும் பாப்பான் தான் காரணம்னு சொல்லிருவாங்க. எல்லாம் பார்ப்பன பாசக்கார பசங்க.

Radhakrishnan சொன்னது…

வெறும் ஆதங்கங்களும், வார்த்தைகளில் தெறிக்கும் கோபங்களும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவதில்லை என்பதை தாங்கள் அறிந்தவரே.

இன்றைய உங்கள் கோபம் எத்தனை நாளைக்குத்தான் இருந்து தீரும்?

ஈழத் தமிழரின் நிலையைக் கண்டு பிற நாடுகள் நடக்கும் நிலை நமது முகத்தை சுளிக்கச் செய்வது போல், தங்களது எழுத்துகளும் இருக்க வேண்டாமென்பது எனது வேண்டுகோள். தவறு இருப்பின் மன்னிப்பீராக.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்