பின்பற்றுபவர்கள்

23 பிப்ரவரி, 2009

தகவல் அறியும் சட்டம் ... என்ன சொல்லுது ?

தகவல் அறியும் சட்டம் ஒன்று இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது, இதன் மூலம் பிறரது தனிப்பட்ட தகவல் தவிர்த்து அனைத்தையும் அறியலாம். எப்படி அந்த சட்டத்தைப் பயன்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதனைப் பயன்படுத்துவோர்கள் சிலரை அந்த சட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறதாம்.

பொழுது போகாத ஒருவர்,

'இந்திய இராணுவ வீரன் ஒரு மாதம் அருந்து மதுவின் அளவு என்ன ?.....என்று கேட்க அதற்கு பதிலாக

'ஒன்பது லிட்டர்' - என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதைப் படித்துவிட்டு இராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக புலம்புகிறார் கேள்வி கேட்டவர். ஐயோ... பாவம் நாட்டின் பொதுமக்களிடம் பெறப்படும் வரிப்பணத்தில் 75விழுக்காடு பாதுகாப்புக் காரணங்களுக்காக செலவிடப்படுகிறது என்பது இவருக்கு தெரியாது போலும்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம்

'இராணுவ வீரர்களால் வன்புணர்ச்சி (Rape) செய்யப்படும் சொந்த நாட்டு பெண்களின் எண்ணிக்கை எத்தனை ? பிற நாட்டு பெண்கள் எத்தனை ?' என்று கேள்வி கேட்டால் விடை கிடைக்குமா ? தெரியவில்ல்லை

***

ஒரு தமாசு,

தகவல் அறியும் சட்டத்தின் மூலம்,

சு.ஸ்வாமி மீது எத்தனை முட்டைகள் வீசப்பட்டது ? அதில் அழுகிய முட்டைகள் எத்தனை ? என்று தெரிந்து கொள்ள முடியும் என்று தான் நினைக்கிறேன்.

1 கருத்து:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:))))))))

இஸ்வாமி மேல அவ்வளவு காண்டா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்