
அந்த அவலம்,
இன்றும் உடன்கட்டை தொடர்கிறதே ....
ஏன் இந்த நின்தனை ?
இராஜா ராம்மோகன்ராய்
தற்போது இல்லையென்று
துணிச்சலுடன் அந்த செயல்
இன்றும் தொடர்கிறதே !
புளு கிராஸ் மெம்பர்களே !
விழித்துக் கொள்ளுங்கள் ...
சனிப் பொணம் தனியாகப்
போகது என்று ...
தலை கீழாக கட்டப்பட்டு,
ஒரு கோழிக் குஞ்சு ...
விருப்பின்றி உடன் கட்டை
ஏறுகிறப் போகிறதாம் !
எதற்கு இந்த தண்டனை ?
என்ன அநியாயம் இது !
5 கருத்துகள்:
//சனிப் பொணம் தனியாகப்
போகது என்று ...
தலை கீழாக கட்டப்பட்டு,
ஒரு கோழிக் குஞ்சு ...
விருப்பின்றி உடன் கட்டை
ஏறுகிறப் போகிறதாம் !
//
சீரியஸான மேட்டரா அதே சமயம் நச்சுன்னு சூப்பராவும் எழுதி என்னை கலாய்க்க விடாமல் என் கைகளை கட்டிப் போடுவது ஏனோ?
//
நாமக்கல் சிபி @15516963 said...
சீரியஸான மேட்டரா அதே சமயம் நச்சுன்னு சூப்பராவும் எழுதி என்னை கலாய்க்க விடாமல் என் கைகளை கட்டிப் போடுவது ஏனோ? //
ஆமாங்க சிபி ... ஊரில் பார்த்திருக்கிறேன் ... இந்த பெருசுங்கல்லாம் சேர்ந்து கொண்டு இந்த கூத்தை அரங்கேற்றும்
உங்கள் கவிதையைப் படித்த போது அருட்பெருங்கடல் வள்ளலாரின் " வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
//கலை அரசன் said...
உங்கள் கவிதையைப் படித்த போது அருட்பெருங்கடல் வள்ளலாரின் " வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
//
சரியாக சொன்னீர்கள்...வள்ளலாரின் தாக்கமும் எனக்கு உண்டு
கோவி.கண்ணன் அய்யா,
கவிதை மற்றும் கருத்து அருமை.
1000 பெரியார் வந்தாலும் இவங்களை திருத்தமுடியாது......
கருத்துரையிடுக