பின்பற்றுபவர்கள்

6 ஜூலை, 2006

உடன்கட்டை !!!



அந்த அவலம்,
இன்றும் உடன்கட்டை தொடர்கிறதே ....
ஏன் இந்த நின்தனை ?

இராஜா ராம்மோகன்ராய்
தற்போது இல்லையென்று
துணிச்சலுடன் அந்த செயல்
இன்றும் தொடர்கிறதே !

புளு கிராஸ் மெம்பர்களே !
விழித்துக் கொள்ளுங்கள் ...

சனிப் பொணம் தனியாகப்
போகது என்று ...
தலை கீழாக கட்டப்பட்டு,
ஒரு கோழிக் குஞ்சு ...
விருப்பின்றி உடன் கட்டை
ஏறுகிறப் போகிறதாம் !

எதற்கு இந்த தண்டனை ?
என்ன அநியாயம் இது !

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//சனிப் பொணம் தனியாகப்
போகது என்று ...
தலை கீழாக கட்டப்பட்டு,
ஒரு கோழிக் குஞ்சு ...
விருப்பின்றி உடன் கட்டை
ஏறுகிறப் போகிறதாம் !
//

சீரியஸான மேட்டரா அதே சமயம் நச்சுன்னு சூப்பராவும் எழுதி என்னை கலாய்க்க விடாமல் என் கைகளை கட்டிப் போடுவது ஏனோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாமக்கல் சிபி @15516963 said...
சீரியஸான மேட்டரா அதே சமயம் நச்சுன்னு சூப்பராவும் எழுதி என்னை கலாய்க்க விடாமல் என் கைகளை கட்டிப் போடுவது ஏனோ? //
ஆமாங்க சிபி ... ஊரில் பார்த்திருக்கிறேன் ... இந்த பெருசுங்கல்லாம் சேர்ந்து கொண்டு இந்த கூத்தை அரங்கேற்றும்

பெயரில்லா சொன்னது…

உங்கள் கவிதையைப் படித்த போது அருட்பெருங்கடல் வள்ளலாரின் " வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கலை அரசன் said...
உங்கள் கவிதையைப் படித்த போது அருட்பெருங்கடல் வள்ளலாரின் " வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
//
சரியாக சொன்னீர்கள்...வள்ளலாரின் தாக்கமும் எனக்கு உண்டு

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

கவிதை மற்றும் கருத்து அருமை.

1000 பெரியார் வந்தாலும் இவங்களை திருத்தமுடியாது......

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்