பின்பற்றுபவர்கள்

2 ஜூலை, 2006

படகில் பயணம் ...



படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
என்னுள் எழும் எண்ணம்,
படகுகள் பலவிதம் !
ஒவ்வொன்றும் ஒருவிதம் !


அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள்,
அமைதி நடுக்கடலுக்குள் துணிந்து செல்லும் படகுகள்,
ஆற்றில் இலக்கு தெரிந்து சீராக செல்லும் படகுகள்,
அக்கரையும், இக்கரையும் மட்டுமே தெரிந்த பரிசல் படகுகள்,
அனைத்துக் கரைகளையும் அறிந்த பெரும் படகு என கப்பல்கள் !
ஆழமூழ்கி எழுந்து நிற்கும் நீர்மூழ்கிக் படகு கப்பல்கள் !

ஆனால் எந்த படகானாலும், அவை
உடைந்து உருக்குலைந்து போகும் போது,
ஒரு நாள் கரைக்குத் திரும்பியதும்,
வெம்தணலில் எறிந்து போகும் கட்டைகளே !

படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
நெடுந்தூரப் பயணத்தின் ஊடாக

எதாவது படகின் வழி என் பயணம்
தொடர்கிறது என்றும் எண்ணிக் கொள்வேன் !

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மரணம் மற்றும் பிறப்பின் சாயல் உள்ள கவிதை இது. (வாழ்க்கை ?!)




சகபயணி
பச்சோந்தி

பெயரில்லா சொன்னது…

நல்ல கவிதை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Chameleon - பச்சோந்தி said...
மரணம் மற்றும் பிறப்பின் சாயல் உள்ள கவிதை இது.
//
இது போட்டிக்காக எழுதியது அல்ல... அதற்கு வேறொரு கலவையை தாயார்படுத்தி விட்டேன்.
பயண நண்பருக்கு வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜயராமன் said...
நல்ல கவிதை.
//
வாங்க ஜயராமன் சார்... கெட்டப்ப மாத்திட்டிங்களா ? கேமரா பேட்ரி வேலை செய்யவில்லை என்று கேள்விப் பட்டேன் பின் எப்படி ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்