பின்பற்றுபவர்கள்

21 நவம்பர், 2011

விஜயகாந்த் சட்டசபைக்குச் செல்லாதது ஏன் ?


திமுகவுக்கு எதிராக அடித்த சட்டசபைத் தேர்தலில் 29 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமை தேமுதிகவிற்கு கிடைத்துவிட்டது, ஒரு ஆண்டு சென்றதும் தான் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வேன் என்று கூறி இருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனால் எதிர்பார்த்தப்படி உள்ளாட்ச்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியால் இருந்து கழட்டிவிடப்படவே உதிரிக்கட்சிகளைத் தேற்றிக் கொண்டு உள்ளாட்ச்சித் தேர்தலை சந்தித்தார் குறிபிட்டபடி எந்த ஒரு நகராட்ச்சிக் கூடக் கிடைக்காத விரக்தியில் இனி அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வதன் மூலமே மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும் என்று நினைக்கிறது தேமுதிக.

மற்றக் கட்சிகளைப் போன்று அரசியலில் நீண்டகாலம் இருந்த ஒரு தலைவரின் தோற்றுவிப்பாக தேமுதிக இருக்கவில்லை, திராவிடக்கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்ற எதிர்ப்பார்புகளாலும், ரஜினி போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படலாம் என்று நினைத்த மக்களின் எதிர்ப்பார்ப்பை மூலதனமாக வைத்து தேமுதிக துவங்கப்பட்டது, எதிர்ப்பார்ப்பிற்கும் மேலாக சுமார் 8 விழுக்காட்டினரின் வாக்குகளை தேமுதிக தக்க வைத்துள்ளது, இந்த வாக்குவிகிதம் சரியாமல் இருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிப்பதவிகள் உருவாக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு தேர்தலுக்கு வேலை பார்க்கும் அளவுக்கு தொண்டர்களை உருவாக்கி இருந்தது தேமுதிக. தமிழ்நாட்டின் எந்த மாவட்ட சட்டமன்ற தொகுதி என்றாலும் 10000 வாக்குகள் வரையிலும் தேற்றிவிடும் அளவுக்கு தேமுதிக வலுவாகவே உள்ளது.

அதிமுக - திமுக - அதிமுக - திமுக என்று மாறி மாறி வேறு வழியின்றி மக்கள் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சூழலில் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கும் தேமுதிக பொறுப்பான எதிர்கட்சியாகச் செயல்பட்டால் இந்த அதிமுக - திமுக சுழற்சியைத் தடுக்க முடியும் என்பது உண்மை தான். கருநாநிதி சரி இல்லை என்று தான் ஜெ -விற்கு மறு வாய்ப்பு வழங்குகிறார்கள், அதே போல் ஜெ சரி இல்லை என்றால் வேறு வழியின்றி கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்குறார்கள், கங்கு கொண்டிருக்கும் கொள்ளைக்கட்டையைவிட புகைந்து கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையால் தலை அதிகமாக தீய்ந்து போகாது என்றே நினைக்கின்றனர், ஆனால் புகைந்த கொள்ளிக்கட்டை தலையில் ஏறியதும் மீண்டும் கங்கு கொள்ளத் துவங்குறது என்பதை மட்டும் வாக்கு அளிக்கும் மக்கள் உணருவதில்லை.

இது போன்ற சூழலில் புதியதொரு கட்சி ஆட்சி அமைக்க பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதன் மூலம் தான் வளரமுடியும். ஏனெனில் தமிழ்நாட்டின் மையப் பிரச்சனைகளுக்கு இயக்கங்கள் தேவையற்றது தான் இன்றைய அரசியல், திராவிர இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பண்ணையார்களின் ஆண்டான் அடிமை முறையை ஒழிக்கவும், அதற்கு ஆதரவு கொடுத்த காங்கிரசினை எதிர்த்து துவங்கியது. ஆனால் இன்றைய சூழலில் திராவிட அரசியல் என்பதும் அது முன் வைத்த திராவிட அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டதால், தன்னல நோக்காகவும் குடும்ப அரசியலாகத் தொடர்வதால், இவற்றிற்கு மாற்றுத் தேடு வேறெந்த மையப் பிரச்சனையும் இல்லை, இருந்த ஒரே ஒரு ஈழப்பிரச்சனையையும் அரசியல்வாதிகள் விருப்பம் போல் விளையாடி ஒழித்துவிட்டார்கள், எனவே அனைத்து மக்களை மையப்படுத்திய பிரச்சனைகள் இல்லாத சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாற்றங்களின் விடையாக நிற்கிறது.

29 இடங்கள் சட்டமன்றத்தில் பிடித்திருப்பது தேமுதிகவிற்கு பலம் தான், ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகள் எழுப்பி குடைச்சல் கொடுத்துக் கொண்டு சட்டமன்ற செயல்பாடுகளின் கவனத்தைப் பெற்று மக்கள் செல்வாக்கப் பெற முடியும் என்று தேமுதிக நினைக்கிறது, அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப் பெற்றதன் மூலம் நேரடியாக சட்டமன்ற விவாதங்களில் தானும் பங்குபெறுவது விஜயகாந்த் தனக்கு பலவீனம் என்றே நினைக்கிறார். இதற்கு மாற்றாக வெளியில் இருந்தே ஆளும் கட்சியை கடுமையாகச் சாடி தேமுதிகவை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்.

இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்கள் கட்சித் துவங்கினால் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆபத்து தான், ஏனெனில் விஜயகாந்தை அரசியல்வாதியாகப் பார்த்து வருவது அல்ல இன்றைய வாக்குகள், அவருக்கு கிடைக்கும் வாக்குகளும் செல்வாக்கும் அவரைப் போன்று திரையில் இருந்துவரும் பிற நடிகர்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும், மற்றபடி விஜய் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.

விஜயகாந்து வரும்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவாரா என்பதெல்லாம் அதிமுக - திமுக கட்சிகளின் செயல்பாடு பொறுத்தது, விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே கூட ஏதாவது நடிகரைத் தூண்டிவிட்டு புதுக் கட்சித் துவங்கினால் தான், விஜயகாந்தை அடுத்த தேர்தலில் அவற்றால் சமாளிக்க முடியும்.

14 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விஜய்காந்த் மவுசு குறைஞ்சிடுச்சு சார்..

Kite சொன்னது…

இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்கள் கட்சித் துவங்கினால் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆபத்து தான், ஏனெனில் விஜயகாந்தை அரசியல்வாதியாகப் பார்த்து வருவது அல்ல இன்றைய வாக்குகள், அவருக்கு கிடைக்கும் வாக்குகளும் செல்வாக்கும் அவரைப் போன்று திரையில் இருந்துவரும் பிற நடிகர்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும், மற்றபடி விஜய் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.//

விஜயகாந்துக்கு வரும் வாக்குகள் அவருடைய சினிமா பின்னணியால் மட்டும் வருவதல்ல.
அப்படிப் பார்த்தால் சரத்குமார், கார்த்திக் ஆகியோரும் தேறியிருக்க வேண்டும்.

விஜயகாந்த்தின் பலங்கள்:
(1)சாதியை முன்னிறுத்தாமல் பொதுவான தலைவராக முன்னிறுத்திக் கொள்வது.
(2)தனக்கு அறிமுகமில்லாத தொகுதிகளிலும் தைரியமாகப் போட்டியிட்டு வெல்வது.
(3)கலைஞர் அல்லது ஜெ காலத்திற்குப் பிறகான காலத்தில் வெற்றிடம் ஏற்படும்போது அதை நிரப்பக் கூடியவர் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்திருப்பது.
(4)ஓயாத களப்பணி மற்றும் சலிக்காமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வது.
(5)பேச்சுத்தமிழில் பேசுவது.
(6)சரியான நேரத்தில் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்தது.
(7)தி.மு.க வில் தொண்டராக இருந்த அனுபவம்.
(8)பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன் போன்றோரைப் பக்கத்தில் வைத்திருப்பது.

பலவீனங்கள்:
(1)சில சமயங்களில் முதிர்ச்சி இல்லாமல் பேசுவது
(2)சமீப காலமாக 'நிதானம்' இல்லாமல் பேசுவது அதிகரித்திருக்கிறது. இது மக்களுக்கு அவர் மேலுள்ள நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

விஜய் எல்லாம் விஜயகாந்த்துக்குப் போட்டியே கிடையாது. விஜய்க்குக் களத்தில் இறங்கி வேலை பார்த்த அனுபவமோ, மக்கள் பிரச்சனைகள் குறித்து உருப்படியான கருத்துகளோ கிடையாது. இலங்கையில் போர் நிறுத்தத்தை நிறுத்தணும் என்று பேசியவர்தான் அவர்.

TBR. JOSPEH சொன்னது…

அதிமுகவுடன் இணைந்ததன் மூலம் 'நான் ஊழலுக்கு எதிரானவன்' என்று கூறி வந்ததை பொய் என்று நிரூபித்துவிட்டார். பிறகு உள்ளாட்சி தேர்ததலில் அதிமுக அவரை கண்டுக்கொள்ளாததால் இப்போது சீச்சீ இந்த பழம் புளிக்கிறது என்பதுபோல் பேச துவங்கிவிட்டார். இதை எந்த அளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.

நான் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே எழுதியிருந்தேன். தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று... ஜெயலலிதா மாறவேயில்லை என்று.. யார் கேட்டார்கள்?

கோவி.கண்ணன் சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் said...
விஜய்காந்த் மவுசு குறைஞ்சிடுச்சு சார்..//

செந்தில்குமார், அவர்
மேக்கப் போட்டாலும் எடுபடமாட்டாரா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சமீப காலமாக 'நிதானம்' இல்லாமல் பேசுவது அதிகரித்திருக்கிறது. இது மக்களுக்கு அவர் மேலுள்ள நம்பிக்கையைக் குறைத்துள்ளது.//

எதையும் திரைமறைவில் செய்வது தான் அரசியல்வாதிகளுக்கு அழகு :)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெயலலிதா மாறவேயில்லை என்று.. யார் கேட்டார்கள்?//

மக்களுக்கும் வேற வழித்தெரியல. கருணாநிதியே தொடர்ந்திருந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் தான் தொடர்ந்திருக்கும், போலிப்பத்திரப் பதிவு கண்டுகொள்ளப்படாமல் நடந்தேறியது, வீட்டுமனைகள் விண்முட்டும் அளவுக்குச் சென்றன

வவ்வால் சொன்னது…

கோவி,

//அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப் பெற்றதன் மூலம் நேரடியாக சட்டமன்ற விவாதங்களில் தானும் பங்குபெறுவது விஜயகாந்த் தனக்கு பலவீனம் என்றே நினைக்கிறார். இதற்கு மாற்றாக வெளியில் இருந்தே ஆளும் கட்சியை கடுமையாகச் சாடி தேமுதிகவை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்.//

இத மட்டும் எழுதி இருந்தா பதிவு சின்னதாயிடும் :-)) (கீச்சாகிருக்கும்)

உங்க கிட்டே கூட விசயகாந்து எதுவும் சொல்லலையா, போன்ல ஏதோ சொல்லி இருப்பார் ,அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கலாம்னு ஓடி வந்தேன்! :-))

தமிழக சட்டசபைல பாகிஸ்தான்காரங்க யாரும் இல்லையாம், அவங்க வந்தா தான் விசயகாந்து வருவாராம்! :-))

----------------------------------------

சிபி,
//விஜய்காந்த் மவுசு குறைஞ்சிடுச்சு சார்..//

நிறைய எலிய புடிச்சு விசயகாந்த்துக்கு பார்சல் அனுப்பலாமா? :-))

suvanappiriyan சொன்னது…

'விஜயகாந்த் சட்டசபைக்கு செல்லாதது ஏன்?'

விஜயகாந்தை இயக்க ஒரு டைரக்டர் சட்டசபையில் இல்லாததால்! :-)

ஜோதிஜி சொன்னது…

விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும்,

நீங்க தானா எழுதியது? விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருக்குதுன்னு நம்புறீங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி திருப்பூர் said...
விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும்,

நீங்க தானா எழுதியது? விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருக்குதுன்னு நம்புறீங்களா?

10:43 AM, November 22, 2011//

விஜயகாந்துக்கும் இல்லைன்னு தான் நம்பினேன், 8 விழுக்காடு வரை வாங்குறாரே :)

dondu(#11168674346665545885) சொன்னது…

இப்படியு இருக்கலாமோ, அதாவது ஜெயலிதா செய்தைப் போல தானும் செய்தால் தன் அடுத்த முறை முதல்வர் என விஜயகாந்த் நம்புகிறாரோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரிஷி சொன்னது…

//விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே கூட ஏதாவது நடிகரைத் தூண்டிவிட்டு புதுக் கட்சித் துவங்கினால் தான்//

உங்கள் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன். :-)

கோவி.கண்ணன் சொன்னது…

// dondu(#11168674346665545885) said...
இப்படியு இருக்கலாமோ, அதாவது ஜெயலிதா செய்தைப் போல தானும் செய்தால் தன் அடுத்த முறை முதல்வர் என விஜயகாந்த் நம்புகிறாரோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ஏதாவது சோதிட ஆலோசனையாகக் கூட இருக்கலாம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன். :-)//

நீங்கள் சிடுமுஞ்சி இல்லைன்னு புரிகிறது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்