பின்பற்றுபவர்கள்

9 நவம்பர், 2010

கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !

விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?

1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.

இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்

1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.

கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.

2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!

எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்

3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?

இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.

4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?

ஆகமவிதி கோயி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கரையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.


இணைப்பு : இரண்டாவது பெரியாராக முழங்கிய கமல் (தினமலர்)

விஜய் தொலைகாட்சியின் காணொளி:

24 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

ha ha

ஹ ஹ
இவங்க எப்பவுமே இப்படிதான் .....

priyamudanprabu சொன்னது…

திரிசாவின் அம்மாவை கமல் நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டார் , என்பதையி "கமல் திரிசாவின் அம்மாவை வச்சிருக்கார்" என்ற பாணியில் எழுதியதுதான் தின மலம்

தருமி சொன்னது…

கமலின் அந்த பேட்டியும் இறுதியில் சொன்ன கவிதையும் நிரம்ப நன்றாக இருந்தன.

Unknown சொன்னது…

கருணாநிதியின் பாணியில் தினமலமும் தன்னைதானே கேள்வி பதில் சொல்ல ஆரம்பிச்சுருச்சு

Kodees சொன்னது…

உலகத்தில் அனேகமாக எல்லோரும் நாத்திகர்களே. என்ன - நாத்திகர்கள் கடவுளே இல்லை என்பார்கள், ஆத்திகர்கள்- தன் கடவுளைத்தவிர மற்றதெல்லாம் இல்லை என்பவர்கள். என்ன பெரிய வித்தியாசம்?

கோவி - இவர்களெல்லாம் தம் கருத்தில் உறுதியாக இருப்பவர்கள் - மறு பரிசீலனை என்பதெல்லாம் இவர்கள் அகராதியிலேயே கிடையாது. நீங்கள் என்ன வாதிட்டாலும் குறுக்கே புகுந்து பேசுபவர்கள். இவர்களுக்கு புரியவைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? Just leave it

ஜோதிஜி சொன்னது…

முக்கியமான அந்த காணொளி இணைப்பு தாங்களேன்.

ஜெகதீசன் சொன்னது…

//
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
//
ரிப்பீட்டேய்ய்ய்.

பெயரில்லா சொன்னது…

தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. //
அருமையான வரிகள்

பெயரில்லா சொன்னது…

இவங்க எப்பவும் உளறிகிட்டு இருக்கிறவங்கதான்

பெயரில்லா சொன்னது…

வோட்டு போட்டாச்சி

தறுதலை சொன்னது…

தனிப்பட்ட நம்பிக்கைகள் விடலைப் பருவ இச்சைகள் போன்றவை.

=====================
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள், நவ்-2010)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. //
அருமையான வரிகள்

5:35 PM, November 09, 2010//

உங்க பாராட்டு பாண்டேவுக்கு போய் சேரட்டும், தடிப்பாக உள்ளவை பாண்டே சொன்னதாக தினமலர் எழுதியுள்ளது, அதற்கு எதிர்வினை தான் நான் எழுதி இருக்கிறேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//tharuthalai said...
தனிப்பட்ட நம்பிக்கைகள் விடலைப் பருவ இச்சைகள் போன்றவை.

=====================
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள், நவ்-2010)

5:36 PM, November 09, 2010//

எங்கிட்டு இருந்திக இத்தனை நாளு ? :) வெல்கம் வெலகம் !

அறிவிலி சொன்னது…

///ஜெகதீசன்
//
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
//
ரிப்பீட்டேய்ய்ய்///

பரிசு கெடைச்சவுடன பார்ட்டி வெக்கணும்.

ராவணன் சொன்னது…

பார்ப்பன மதத்தைப் பற்றி எழுதலாம், அதற்கு அந்த பார்ப்பன அய்யங்கார் உதவியா?அந்த அய்யங்கார் வளர்ந்த விதம் சரியில்லை,அதனால் மதில்மேல் பூனையாக உள்ளார்.

இந்த அய்யங்கார் பகுத்தறிவுவாதி என்றால் காஞ்சி மடசுப்பிரமணிகூட பகுத்தறிவுவாதிதான்.

ஒலக மஹா நடிப்பு, அந்த அய்யங்காரின் பேச்சுக்கள்.

இனியா சொன்னது…

Good one kovi.Kannan!!!

ரிஷபன்Meena சொன்னது…

ஆனா பேட்டிய உட்கார்ந்து கேட்பதற்கு நிறைய பொறுமை மட்டும் பார்கிறவங்கள்க்கு இருக்கனும். வார்த்தை மேல வார்த்தையா வெளிவரும் ரொம்ப மெத்த படித்த பானியில் இருக்கும்

சுருக்கமா ரொம்ப அறுவையா அறுப்பாரு

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கமலின் கூற்றில் தவறாக எதுமில்லையே. இந்துவாவின்,,,வீண் சர்ச்சை.
இந்நிகழ்ச்சி பார்க்கக் கிடைக்கவில்லை.நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

பிரபு நன்றி,

தருமி ஐயா நிகழ்ச்சி நன்றாக இருந்தது, கமலுக்கு வயது ஆகி இருந்தது நன்றாக தெரிந்தது.

நந்தா சார், வாசகர் கடிதம் என்ற பெயரில் தினமலர் தனக்கு தானே பாணி கடிதத்தை எழுதிவருகிறது, கோவையில் இருந்து குப்புசாமி எழுதுகிறார் என்கிற கடிதமும், நெல்லையில் இருந்து நாச்சி முத்து எழுதுகிறார் என்கிற கடிதமும் அச்சு மாறாமல் அப்படியே இருக்கும் வெவ்வேறு பதிப்புகளில்.

கோடிஸ், யாருக்கும் புரிய வைக்க எழுதவில்லை. எண்ணப் பகிர்வு, சிலர் கருத்துகளை மாற்றுக் கோணத்தில் படிக்கும் போது மாற்றிக் கொள்வார்கள். நானும் அவ்வாறே பல கருத்துகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஜோதிஜி, காணொளியை தேடித்தான் எடுக்கனும், யாராவது இனிமேல் தான் யூடியுப் ஏற்றுவார்கள் என்று நினைக்கிறேன்

ஜெக்கு மற்றும் அறிவிலி நன்றி

இராவணன், திராவிட வியாபாரிகள் மன்னர்களாக மாறிவிட்டார்கள், அயங்காருக்குள் கொஞ்சம் அக்கப்போர் இருப்பது மட்டும் இமாலய தவறா ?

இனியா நன்றி !

யோகன் அண்ணா, வீடியோ இணையத்தில் கிடைக்கலாம், தேடிப்பார்த்து கிடைத்தால் அனுப்புகிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

காணொளி இடுகையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி !

தமிழ் திரு சொன்னது…

//3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.//

கமல் சொன்னதில் என்னை கவர்ந்த வரிகள் .... நம்முடைய நாத்திகம் ஆரிய வருணாசிரம கொள்கையை எதிர்த்து நம் சிறு தெய்வங்களை மீட்டு எடுப்பதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்

Unknown சொன்னது…

இந்த புண்ணாக்குகளுக்கு வேறு வேலையே கிடையாது ...

தின மலத்தின் இத்தகைய செயல்பாடுகளால்தான் நான் அதனை படிப்பதை நிறுத்தி வருடங்கள் ஆகிவிட்டன..

ராஜரத்தினம் சொன்னது…

என்னடா கொஞ்ச நாளா கோழி குப்பையை கிளராம இருக்குனு நினைச்சிட்ருந்தேன். அந்த குமலகாசனே தன் பொன்ணு பொட்டு வெச்சா அதை அழிக்கமாட்டேனு சொல்லுச்சு. நீங்க அந்த குமலை போய் சப்போர்ட் பண்ணி அதுக்கு ஒரு பதிவா? நீங்க ரொம்ப நல்லவன்னு யாராவது சொல்லிட்டாங்களா?

கிடுகுவேலி சொன்னது…

கமல் தெரிவித்த கருத்துக்களுடன் நான் நூறு சதவிகிதம் உடன்படுகிறேன். பாண்டே சொல்கிறார் - ”...தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று....” - அப்படியான அந்த ஆலயத்திற்கு செல்லும் எல்லா அடியவர்களையும் சமமாகத்தான் நடத்துகிறார்களா? பணக்காரன் ஏழை என்ற பேதம் பார்க்கவில்லையா? இதைத்தான் கமல் அந்த நிகழ்ச்சியில் கடாசினார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்