பின்பற்றுபவர்கள்

19 ஜூலை, 2010

கலவை 19/ஜூலை/2010 !

நாட்டு நடப்பு : கடலுக்கு விலை பேசி வித்துருக்கானாம் ஒரு ரெட்டி, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனும் அவனிடம் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிவிட்டு இப்போது பேந்த பேந்த விழிப்பதாக செய்திகளில் காட்டுகிறார்கள். நிலம் வாங்குவதில் பத்திரப்பதிவு, பட்டா என எத்தனையோ அரசு சார்ந்த செயல்முறைகளுக்கு பிறகே நிலங்கள் கைமாறுகிறது, ரெட்டியைச் சொல்லிக் குற்றமில்லை, உடந்தையாக இருக்க்கும் அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் இவர்களையெல்லாம் என்ன செய்வது ? ஒரு தெலுங்குகாரன் சென்னாப் பட்டினத்திலேயே (தெலுங்கர்கள் சென்னையை அவங்க ஊரும்பாங்க) அமர்ந்து தமிழர்களுக்கு பட்டை நாமம் போட்டிருப்பதை என்னச் சொல்வது ? ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி, உலகத்தாருக்கு இளிச்சவாயன் தமிழன் போல. தமிழனை எவன் எவனோ கொள்ளையடிக்கையில் மஞ்சள் தமிழர் & பேமிலி அடித்தால் மட்டும் தப்பா ? போலிக் காவல்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்ததாக நேற்றைய சன் செய்தியில் பார்த்த போது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பற்றி சன் செய்திகள் தமுக்கு அடிப்பதையும், அம்மாவை ஆசைத்தீர செய்திகளில் காட்டுவதைப் பார்க்கும் போதும், மாறன் சன்ஸ் குறித்து 'என்னவோ திட்டம் இருக்கு........' முத்துப்படப் பாடல் நினைவு வந்தது.

மதிப்பெண் பட்டியல் முறைகேடுகள் : படிப்பை விலைப் பேசலாம் (paid seat), மதிப்பெண் பட்டியலையே விலை பேசிப் பெற்றிருக்கிறது ஒரு கூட்டம், இதற்கும் அரசு அலுவலர்களில் மாவட்ட ஆட்சியர் உட்பட உடந்தையாம். நல்லா படிச்சா நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்னு சொல்லி சொல்லி படிக்க வைத்தப் பெற்றோர்களின் நிலையும் மதிபெண் பெற்ற மாணவர் நிலையும் கவலைக்கிடமாகுது. இவர்களைப் போல் ஒரு சிலர் குறுக்கு வழியில் மதிப்பெண் பட்டியலை திருத்திப் பெறுவதால் நல்ல மதிப் பெண் பெற்ற மாணவர் நிலை ? 40ற்கும் மேற்பட்டவர் பிடிபட்டு இருக்கிறார்கள், சாதிவேறுபாடு இல்லாமல் அந்த 40ல் அனைத்து சாதியினருமே அடக்கம் ஆகி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இதில் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்ற பெயரில் மாணவர்களை தண்டிப்பதைக் காட்டிலும் அவர்களின் பெற்றோர்களையும், உடந்தையான அரசு அலுவர்களையும் தண்டிப்பதே முறையாகும், மாணவர்களுக்கு முறைகேடுகளுக்கு எதிரான தண்டனை விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மேலும் அரசு அலுவலர்களின் முகவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களை அணுகி தூண்டில் போட்டு இருக்க வேண்டும், அதில் பேராசைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளை சிக்க வைத்து இருக்கிறார்கள். பெற்றோரும் அரசு அலுவர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் செய்த குற்றத்திற்கு மாணவர்கள் பலியாகுவது அவர்களின் எதிர்காலத்தை கேள்வியாக்குவதுடன் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட வழி அமைத்துவிடும், மாணவர்களை மன்னித்து மற்றவர்களை தண்டிப்பது தான் ஞாயமானது.

ஊழல் :
ஸ்பெக்டரம் ராசாவைக் குறிவைத்து சு.சாமி காய் நகர்த்திவரும் வேளையில் இந்திய அளவில் மற்றொரு அரசியல்வாதி மீது ஊழல் குற்றச் சாட்டுகள் துவங்கி இருக்கின்றன. 11 ஆயிரத்து 412 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் புகார், நிதிஷ்குமார் மீது விழுந்திருக்கிறது. எப்போதும் அழுக்காகவே தெரியும் அவரது ஜிப்பாவில் இப்படி ஒரு கறை - என்பதாக ஜூவி செய்தி வெளி இட்டு இருக்கிறது. 2020ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ, உலகப் பணக்காரர்களில் வரிசையில் பில்கேட்ஸ், புருனே சுல்தான் போன்றோர்களை இந்திய அரசியல்வாதிகள் பின்னூக்கு தள்ளிவிடுவார்கள் போலும். ஒருபக்கம் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி ஆப்ரிக்க நாடுகளைப் பின்னுக்குத்தள்ள ஊழல்வாதிகள் உலக பணக்காரர்களாகிவருகின்றனர்.

அரசியல் : ஜெ முன்னதாக தேர்தல் பரப்புரையைத் துவங்கிவிட்டார், கூட்டணிகான தூதுகள் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன, இதற்கிடையே தமிழக காங்கிரஸ் ஆட்கள் (ஈவிகேஸ் இளங்கோவன்) கூட்டணிக்கட்சிகளிடம் 110 சட்டமன்ற தொகுதிகள் கேட்பதாகவும், கார்த்திக் சிதம்பரம் போன்றோர் இளைஞர் காங்கிரசு தொண்டர்கள் 11 லட்சம் வரையில் இருப்பதால் பாராளுமன்ற தொகுதிக்கு இரண்டு வீதம் 80 தொகுதிகள் வரையில் கேட்கலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறதாம். 111 கூடக் கொடுக்கலாம். தமிழக காங்கிரசு இலங்கையில் கட்சி துவங்கினால் இராஜபக்சேவை ஓரங்கட்டி ஆட்சி அமைக்கும் அளவுக்கு சிங்களர்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறது, அங்கு தனியாகவே ஆட்சி அமைக்கலாம், இவர்கள் தமிழகத்தில் கூட்டணிக்கு 78, 110 என பேரம் பேசுவது வியப்பு தான். காத்திருக்கும் ஜெ, ஒருவேளை காங்கிரசுடன் கூட்டு சேரும் போது ஈழத்தாய் இலங்கையா அது எங்கே இருக்கிறது என்பார். அண்ணாவின் ஆட்சி காமராசர் ஆட்சின்னு பேசிவரும் அரசியல்வாதிகள் தன்னோட ஆட்சி அமைய ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும் என்று தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.

*****

இந்த செய்தியைப் படித்த போது கொஞ்சம் எரிச்சலும் சிரிப்பும் வந்தது,1.5 லிட்டர் தண்ணீரில் குளித்துக்காட்டி தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஊட்டினாராம் ஒரு இளைஞர். நல்ல வேளை குளிப்பதற்கான தண்ணீர் பயன்பாட்டுடன் விட்டுவிட்டார்கள், 100 மிலியில் முகம் கழுவலாம், 50 மிலியில் கால் கழுவலாம் என்பதாக செய்துகாட்டாமல்.....என்ன எரிச்சல் என்றால், நாட்டில் சாயப்பட்டரைகளின் கழிவு கலப்பினால் வீணாகும் குடிநீர் மற்றும் ஆலைக் கழிவுகளினால் வீணாகும் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் நிறுவனங்களால் அபகரிக்கப்படும் குடிநீர் இவற்றையெல்லாம் எதிர்காமல் 1.5 லிட்டரில் குளிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பது என்ன மாதிரியான விழிப்புணர்வு என்று தெரியவில்லை. இதற்கு பதிலாக வெளிநாடுகளைப் போல் திஸ்யூ பேப்பர் எனப்படும் (மை) உரிஞ்சு தாள்களைப் பயன்படுத்த இவர்கள் பரிந்துரைக்கலாம், குளிப்பதற்கு பதிலாக ஈரத் தூண்டால் துடைத்துக் கொள்ளலாம், கால் கழுவ (குழூக்குறி) பேப்பர்களைப் பயன்படுத்தலாம்னு அரசே விளம்பரங்கள் மூலம் தண்ணீர் சிக்கனம் குறித்து அறிவிக்கலாமே.

3 கருத்துகள்:

தருமி சொன்னது…

மாணவர்களுக்கு முறைகேடுகளுக்கு எதிரான தண்டனை விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, //

அதனால் ...?

கூண்டோடு கைலாசம்தான் சரி இந்த மாதிரி ஆளுகளுக்கு ........ அப்பன் அரசு தொடர்பான வேலைகளில் இருந்தால் அப்பனுக்கும் சீட்டு .. மவனுக்கு சீட்டு .....

தருமி சொன்னது…

அப்பனுக்கும் சீட்டு .. மவனுக்கும்
சீட்டு .....வீட்டுக்கு அனுப்பணும்னு சொல்ல வந்தேன். நீங்க சீட்டு கொடுத்து அனுப்பணும்னு நினச்சிக்காதீங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

// தருமி said...

அப்பனுக்கும் சீட்டு .. மவனுக்கும்
சீட்டு .....வீட்டுக்கு அனுப்பணும்னு சொல்ல வந்தேன். நீங்க சீட்டு கொடுத்து அனுப்பணும்னு நினச்சிக்காதீங்க!//

இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டம் அம்பு மழையில் உங்கள் பின்னூட்டத்தைக் தவறாகப் புரிஞ்சுக் கொள்ளப் போகிறேன்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்