பின்பற்றுபவர்கள்

19 ஜனவரி, 2009

போர் நிறுத்தம் மன்மோகன்சிங் உறுதி !

கலைஞர் : மிஸ்டர் சிங், எங்க கூட்டணிக் கட்சிகளின் போர் நிறுத்த கோரிக்கை என்ன ஆச்சு ?

சிங் : அதைப் பரிசீலித்து தான், இந்திய கிரிக்கெட் அணியை இலங்கை அனுப்புறோம்

கலைஞர் : அவங்க பேச்சு வார்த்தை நடத்தப் போறாங்களா ?

சிங் : கலைஞர் ஜி, அவங்க பேச்சு வார்த்த நடத்த போகலை, விளையாடப் போறங்க, இவங்க அதிரடி கிரிக்கெட் ஆட்டத்தை இலங்கை இராணுவம் அவ்வப்போது போரை நிறுத்திவிட்டு பார்ப்பாங்க.

கலைஞர் : சோனிய ஜி வாழ்க.


பின்குறிப்பு : இலங்கையில் நடக்கும் தமிழின துடைத்தொழிப்பை இந்தியா கண்டுகொள்ளவில்லை, இலங்கையுடன் இந்திய உறவு உறுதிப்பட்டு கிடக்கிறது என்று உலக நாடுகளுக்கு காட்டவே இந்த இலங்கை - இந்திய கிரிக்கெட் ஆட்டம் இந்த வேளையில் நடக்கிறது. சிங்களர்களுக்கு உற்சாகம் தர இந்திய அணியை அனுப்பும் சோனிய காங்கிரஸ் கட்சியும், அவர்தம் தமிழக கூட்டணி கட்சிகளும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

:(

ஜெகதீசன் சொன்னது…

ஹிம்ம்ம்...
:((

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஒ! இப்படியும் யோசிக்கலாமோ?

இருக்கும்,
நடக்கும்,
நிறுத்தம் இருக்கும்,
கொஞ்சம் பொறுப்போம்,
மேனன் செம்மீனும், சிறி லங்கா நண்டும் சாப்பிட்டுட்டு வரட்டும். பிரதமர் உணர்வுகளைப் புரிந்து கொண்டார்.

kuma36 சொன்னது…

தமிழனின் கஷ்டங்களும் கண்ணீரும் ஒரே விளையாட்டா போச்சு!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
காலம் தான் பதில் சொல்லவேண்டும்

Kumky சொன்னது…

தலைப்ப பார்த்து வந்தா...ஓ ஹோ..
பதவிகளுக்காக காலடியில் விழுந்துகிடக்கும் அடிவருடிகள் இருக்கும்வரை., எந்த சிங்ஜிக்களுக்கும் சோஜிக்களுக்கும் வட இந்திய பெரு முதலைகளுக்கும் தமிழனின் உயிர்...--யிருக்குத்தான் சமானம்.

Kumky சொன்னது…

ஆளை கொல்ல அந்தப்பக்கம் ஆயுதம்....இந்த பக்கம் பொழுது போக கிரிக்கெட்...வாழ்க நமது சனநாயக அரசுகள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பிரதமர் நாத்தழுதழுக்க கூறியதைக்கேட்டு கண்கள் பனித்தது..இதயம் இனித்தது

Sathiyanarayanan சொன்னது…

சனவரி 26 ஆம் தேதி அதாவது குடியரசுத் தினத்தன்று நாம் நம் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி இந்தியாவைப் புறக்கணிக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்

நசரேயன் சொன்னது…

வாழ்க சோனியாஜி

கோவி.கண்ணன் சொன்னது…

என்னுடன் சேர்த்தே வயிற்றெரிச்சல் பட்ட அனைவருக்கும் நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்