பின்பற்றுபவர்கள்

6 ஜூன், 2007

ஐஏஎஸ் ஐபிஸ் கனவுகள் !

நான் கலெக்டர், ஐஜி, டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் கடும் முயற்சிக்குப் பின் அதனை சாதிக்கிறார்கள். இந்த சாதனையின் பலனாக அவர்களுக்கு கிடைத்த உயர்ந்தபதவிகளில் அமர்ந்து மக்கள் வரிப்பணத்தால் கிடைகும் ஐந்து இலக்க ஊதியத்தையும், அரசாங்க ஆடம்பர பங்களா, ஏவலாட்கள், காவலாட்கள் என்று அவர்களுக்கு அனைத்து வசதிகளுக்கும் கிடைக்கிறது. அமைச்சர்களுடன் உலக நாடுகளுக்கு உல்லாசப் பயணம், சைரன் வைத்த உயர்ரக கார் என சொகுசான வாழ்கையை ஓய்வு பெரும்வரை அனுபவிக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் இந்தியாவின் ஏழ்மையின் புள்ளிவிபரங்கள் அனைத்தும் தெரியும். சாதிப் பிரச்சனைகள் தெரியும் மற்றும் வாழ்வாதரமான அனைத்துப் பிரச்சனைகளும் தெரியும். இவற்றில் சிலவற்றை நேரிடையாகவே பார்த்து உணர்ந்தவர்கள். ஐந்தாண்டு இருக்கும் மக்கள் பிரதிநிதியைவிட மக்கள் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர்கள் அதிகாரிகள்தான். இவர்களில் பலர் தங்கள் பதவிகாலத்திலேயெ அதிகார துஷ்பிரயோகம் செய்து தனக்கு சாதமானவற்றை சாதிப்பவர்களாகவும், வேண்டியவர்களுக்கும், லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்துக்களை மலைப்போல் சேர்ப்பவர்களாகவுமே உள்ளனர்.

பதிவிகாலத்தில் தான் இவ்வாறு செய்கிறார்களா ? பதவி முடிந்தாலும் உயர் அதிகாரிகளாக இருந்த புகழ் இருகிறதே சாகும் முன் சாதிப்போம் என்று எதோ ஒரு கட்சியில் இணைந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் இத்தகைய அதிகாரிகள் இணைவது எதாவது ஒரு ஜாதிக் கட்சியாகவே இருக்கிறது. இப்பொழுது புதிதாக கட்சி தொடங்கிய விஜயகாந்த், சரத்குமார் கூட தங்கள் கட்சியில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கனிசமான அளவு இருப்பதாக பெருமையாகவே சொல்கிறார்கள். சாதி சங்களுக்கு தூண்டுதலாக இருந்து இயக்குபவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், நீதிபதிகள், கலைக்டர்கள் மற்றும் தேர்தல் (தேர்வாணைய) இயக்குனர் போன்றவர்களே.

எல்லோரும் படித்துவிட்டால் இந்தியா எங்கேயோ போகும் என்று பொதுவாக சொல்லுவதை நினைத்துக் கொண்டு இவர்களைப் பார்க்கும் போது நமக்கு நகைப்பாகவே இருக்கிறது. பதவிகாலத்திலேயே ஊழல் வழக்குகளில் சிக்கி 'நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கும் படித்தவர் பாரீர்' என்று துப்ப வேண்டி இருக்கிறது. உயர்ந்த கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் இவர்களின் குறுகிய எண்ணங்களினால் சமத்துவம் காணும் முயற்சியில் இந்தியா பின்னடைவில் முன்னனியில் இருக்கிறது.

உங்களுக்கு தெரிந்த உயர்அதிகாரி கூட ஒருநாள் சாதிக் கட்சிக்குள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வார் பாருங்கள். இவையே அவர்களின் சாதி(க்கும்) கனவு.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நூற்றுக்நூறு உண்மை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்