பின்பற்றுபவர்கள்

12 ஆகஸ்ட், 2006

இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா ?

தனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.


நியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்தான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.

உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.

ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் !

இந்த ஆக்கத்திற்கு
ஊக்கமளித்த தொடர்புடைய சுட்டிகள் :
உறவுக்குக் கைகொடுப்போம்! - என்று கையை முதலில் கொடுத்த திரு எஸ்கே
பாகிஸ்தானுக்கு நன்றி - சொன்ன திரு சிவபாலன்

72 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அன்பு வேண்டுகோளை ஏற்று, இரவு 3 மணி என்பதையும் பார்க்காமல் பதிவிட்ட வேகம் நெகிழ வைக்கிறது, கோவியாரே!

அன்பின் மூலம் அனைத்தும் வசப்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

முழுப் பதிவும் உணர்ந்து எழுதப்பட்டது என்பது ஒவ்வொரு சொல்லிலும் தெரிகிறது.
அதிலும் குறிப்பாக,

//இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.//

என்பதுடன் நான் முழுதும் ஒத்துப் போகிறேன்.

புது உலகம் பிறக்கும் எனப் பயணிப்போம்!

பெயரில்லா சொன்னது…

//உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை//

முதலில் திருக்குரானை முழுமையாக படித்துப்பாருங்கள்.அப்போழுதுதான் உண்மை தெரியும்.திருக்குரான் தீவிரவாதம் பேசுவில்லையன்றால் ஏன் ஜிஹாத் என்ற வார்த்தை அதில் உள்ளது?இதை தாங்கள் விளக்கமுடியுமா?

பெயரில்லா சொன்னது…

GK,

//இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது //

சரியாக சொன்னீர்கள்.

நல்ல தொரு பதிவு.

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

பெயரில்லா சொன்னது…

//ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் //

சொல்வதென்ன அதுதான் உண்மை.

முஷ்ராப் குரான் வழி நடக்கும் உன்னதர் எல்லாம் அல்ல.

அமைதியாக இருப்பவர்களை பற்றி பேச்சே அல்ல தீவிராதிகளை பற்றிதான் பேச்சே. அத்தீவிரவாதிகளை பற்றி பேசும்போது அமைதியானவர்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் பற்றி பேச்சு ஏனென்றால் தீவிரவாதிகளும் முஸ்லிம் என்பதால்

கோவி.கண்ணன் சொன்னது…

//agner said... முதலில் திருக்குரானை முழுமையாக படித்துப்பாருங்கள்.அப்போழுதுதான் உண்மை தெரியும்.திருக்குரான் தீவிரவாதம் பேசுவில்லையன்றால் ஏன் ஜிஹாத் என்ற வார்த்தை அதில் உள்ளது?இதை தாங்கள் விளக்கமுடியுமா? //

இருக்கலாம் என்று நினைத்தீர்கள் என்றால்... போர்களத்தில் எழுதப்பட்ட கீதையும் சற்று நினைவுறுங்கள் ! போரில் சொந்தபந்தமோ பார்க்கப்படக் கூடாது போரைப் போராகத் தான் பார்க்கவேண்டு என்ற கீதையையும் நாம் புனித நூலாக இறைவன் வாக்காகத்தான் நினைக்கிறோம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said... அன்பு வேண்டுகோளை ஏற்று, இரவு 3 மணி என்பதையும் பார்க்காமல் பதிவிட்ட வேகம் நெகிழ வைக்கிறது, கோவியாரே!//

கைகள் பற்றுதலுடன் உறவுக்காக நீட்டப்படும் போது பற்றிக்கொள்வது
என்று எல்லா மதமும் சொல்கிறது !

இணைந்த கைகளாக இருப்பதில் எவருக்குத் தான் விருப்பம் இருக்காது
//முழுப் பதிவும் உணர்ந்து எழுதப்பட்டது என்பது ஒவ்வொரு சொல்லிலும் தெரிகிறது.
அதிலும் குறிப்பாக,
//
பாராட்டுக்கள் நெகிழ்சியாக இருக்கிறது

//புது உலகம் பிறக்கும் எனப் பயணிப்போம்! //
உங்கள் நம்பிகையில் நானும் இணைந்து கொள்கிறேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

சொல்வதென்ன அதுதான் உண்மை.

//Calgary சிவா said... முஷ்ராப் குரான் வழி நடக்கும் உன்னதர் எல்லாம் அல்ல.

அமைதியாக இருப்பவர்களை பற்றி பேச்சே அல்ல தீவிராதிகளை பற்றிதான் பேச்சே. அத்தீவிரவாதிகளை பற்றி பேசும்போது அமைதியானவர்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் பற்றி பேச்சு ஏனென்றால் தீவிரவாதிகளும் முஸ்லிம் என்பதால்//

சிவா... அவர்களே ... ஒருபக்கம் ஓசோவின் கருத்துக்களை நன்றாக எடுத்துவைக்கும் நீங்கள் ... எவரோ செய்யும் ஒட்டுமொத்தமாக இஸ்லாமிற்கு எதிரான துவேசங்களை ஆதரிக்கிறீர்களா ?... ஆச்சிரியமாக இருக்கிறது !

கருத்துக்களுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
GK,

சரியாக சொன்னீர்கள்.
நல்ல தொரு பதிவு.
நன்றாக எழுதியுள்ளீர்கள்.
//
சிபா ... ! கருத்துக்களுக்கு நன்றி !!!

பெயரில்லா சொன்னது…

//போரில் சொந்தபந்தமோ பார்க்கப்படக் கூடாது போரைப் போராகத் தான் பார்க்கவேண்டு என்ற கீதையையும் நாம் புனித நூலாக இறைவன் வாக்காகத்தான் நினைக்கிறோம் !

//
மும்பையில் நடந்தது போரா?

இரட்டை கோபுரங்களில் போர் வீரர்களாக தங்கியிருந்தார்கள்?

இந்திய பார்லிமெண்ட் போர்களமா?

லண்டன்/ஸ்பெயின் ரயில்களில் பயணம் செய்வது போர் வீரர்களா?

சவூதியில் ஆபிஸில் இருந்த என் நண்பரின் பொட்டில் துப்பாக்கியால் சுட்டு அவர் மூளை சிதறி இறந்தது போர் களமா?

ஆனால் அவர்களுக்கு இதுதான் ஜிஹாத் கண்ணபிரான் அவர்களே

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கும் எஸ்கேக்கும் கேட்கிறேன் அவர்கள் நாட்டிலுள்ள பின்லாடனையும் தாவூத் இப்ராகிமையும் பாகிஸ்தான் என் இன்னும் பிடிக்கவில்லை?

ஒசாமை விடுங்கள் பொந்துக்குள் பதுங்கி வாழும் மிருகம் அது.

சகல் வசதிகளுடன் பங்களாவில் குடி குட்டிகளுடன் வசிக்கும் இப்ராஹிம்க்கு என்ன கேடு?

அவர்களை பிடிக்கட்டும் நன்றி எல்லாம் அதற்கப்புறம் தான்

பெயரில்லா சொன்னது…

கோவிகண்ணன்,
ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டவில்லை.
தீவிரவாதம் செய்பவர்களை சாடுகிறேன்.
தீவிரவாதிகள் நான் சாடும் போது இஸ்லாமிற்கு எதிரானவன் என்று அமைதிப் புறாக்கள் சொல்கிறார்களே அவர்களை சாடுகிறேன்.

ஒஷோ குரானை பற்றிய கருத்துகளை எடுத்துவிட்டால் நம்மாட்கள் சாமி வந்து ஆடுவார்கள்

பெயரில்லா சொன்னது…

இதை இஸ்லாமியர்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

ஐயா.. முஸ்லிம் அல்லாதவர் சாத்தான் என்று சொல்லி அவர்களை முஸ்லிம் மதத்தைக் காப்பாற்ற கொல்லவேண்டும் என்பது தானே ஜீகாத்?

சரி ஏதோ ஒரு நாட்டில் தீவிரவாதி செய்கிறான் என்றால் சகல முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்களைக் கொல்லாதே என்று போராட்டங்கள். அப்போ முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களை ஆதரிப்பதனால் தான் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று ஒட்டுமொத்தமாக மற்றவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

முஸ்லிம் என்று போராடாமல் ஒரு மொழி சார்ந்தோ, நாடு சார்ந்தோ எதுவும் செய்வதில்லை. எந்தப் போராட்டமானாலும் "முஸ்லிம்" என்று தான் கூக்குரலிடுகிறார்கள். மற்றயவர்களுக்கு அது ஒரு வேற்றுமையை உண்டாக்குகிறது. நாங்கள் எல்லோரும் நாடு என்றோ மொழி என்றோ ஒற்றுமையாய் நிற்கிறோம், நீங்கள் மட்டும் மதம் என்று தனித்து நிற்கிறீர்கள். அப்போ எங்களுக்கும் உங்களுக்கும் ஏதோ ஒரு வேற்றுமை அகல விரிகிறது.


______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

பெயரில்லா சொன்னது…

"267 நாட்கள் பாகிஸ்தானிய ராணுவம் பங்களாதேஷில் வெறியாட்டம் ஆடியது.டாக்காவில் மட்டும் 1,00,000 பங்களாதேஷிகள் கொல்லப்பட்டனர்.குல்னா மாவட்டத்தில் 1,50,000 பேரும்,ஜெசோரில் 75,000 பேரும்,கோமிலாவில் 95,000 பேரும் சிட்டகாங்கில் லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.மொத்தமாக 18 மாவட்டங்களில் 12,47,000 ( 12.50 லட்சம்) பேர் கொல்லப்பட்டனர்.இது குறைந்த பட்ச கணக்குதான்.உண்மை கணக்கு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்."

பாக்டுடே இந்த இன அழிப்பை பற்றி மேலும் கூறுவதாவது...

"வங்கதேசத்தில் வாழ்ந்த 25 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இந்த இன அழிப்பு நடந்தது.ஒப்பிட்டால் நாஜி தளபதி ரோமல் 3,00,000 பேரை மட்டுமே கொன்றான்.ஸ்டாலின்,மாவோ ஆகிய கொலைகார அரசுகள் கொன்று குவித்தவர்களைவிட அதிக படுகொலைகள் செய்த அரசாக -யாகியாகான் அரசு விளங்கியது.." என கண்ணீர் வடிக்கிறது பாக்டுடே.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்துக்கு எல்லையே இல்லை.இதுவரை வரலாற்றில் நிகழ்ந்த கூட்ட கற்பழிப்புகளில் முதலிடம் வகிப்பது வங்கதேசத்தில் பாகிஸ்தானிய ராணுவம் நிகழ்த்திய கற்பழிப்புகள்தான் என ரேப் ஆப் நான்கிங் புத்தகத்தை எழுதிய ஐரிஸ் சாங் அதிர்ந்து போய் குறிப்பிடுகிறார்.ஜென்டெர்சைட் எனும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கும் இயக்கம் வங்கதேச கற்பழிப்புகளை பற்றி குறிப்பிடுவதாவது.

"..கூட்டம் கூட்டமாக சேர்ந்து வங்கதேச பெண்களை கற்பழிப்பது,அதன் பின் கொலை செய்வது பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சகஜமாகிவிட்டது.வங்கதேசத்தில் அவர்கள் நடத்திய கற்பழிப்புக்கள் ஜெர்மனி ரஷ்யாவில் உலகப்போரின்போது நடத்தியதற்கு சற்றும் குறைந்ததல்ல.கிட்டத்தட்ட 4,00,000 பெண்கள் கூட்டமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டனர்.(2 அல்லது 3 லட்சம் என்றும் தகவல்கள் உண்டு).."

இந்த கற்பழிப்புகளுக்கு எந்த வயது வித்யாசமும்,மத பாகுபாடும் இல்லையாம்.8 வயது குழந்தை முதல் 75 வயது மூதாட்டி வரை இந்த வேட்டை நாய்களால் குதறப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஜென்டெர்சைட்.பெண்களை கற்பழிப்பதோடு நிறுத்தாமல் அவர்களை ராணுவ முகாமுக்கு தூக்கிப்போய் வேண்டும்போது மீண்டும்,மீண்டும் பலாத்காரம் செய்வது நடந்தது என கண்ணீர் வடிக்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இந்த கற்பழிப்புக்களை கண்டு கண்ணீர் வடித்த வங்கதேசத்தந்தை முஜிபுர் -ரஹ்மான் கற்பழிக்கப்பட்ட பெண்கள் தேசபக்த வீராங்கனைகள் என அறிவித்து அவர்களை சமூகத்தில் இணைக்க முயற்சித்தார்.ஆனால் பழமையில் ஊறிய வங்கதேச ஆண்கள் அப்பெண்களை ஏற்றுக்கொள்ள முன்வரவே இல்லை என்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இது முழுக்க,முழுக்க பாகிஸ்தானிய சர்வாதிகாரியின் தூண்டுதலில் தான் நடந்தது என்கிறது ஜென்டெர்சைட்."30 லட்சம் பேரை கொல்லுங்கள்" என நேரடியாக அவர் உத்தரவிட்டாராம்.

பெயரில்லா சொன்னது…

//ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் //
ivargal than doondu, calgary siva, vagra shunkar nesa kumar, aravindan , malarmannan

பெயரில்லா சொன்னது…

மொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் என்று சொல்ல முடியாது. ஒட்டு மொத்தமாக எல்லா பார்ப்பனர்களும் அண்டச்சபிலிட்டி பார்ப்பார்கள். ஆனால் இஸ்லாம் என்ற மொத்த மதமும் தீவிரவாதிகள் இல்லை.

எனது இஸ்லாமும் தீவிரவாதமும் என்ற பதிவுக்கு கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தேன் நான்.

மதம் என்பது அவரவர் வழியில் சாமி கும்பிடப் பயன்படுத்துவதற்கு மட்டுமே.

பெயரில்லா சொன்னது…

கோவி கண்ணன்,

ஒரு விளக்கமும், ஒரு கேள்வியும்:

>>>> இருக்கலாம் என்று நினைத்தீர்கள் என்றால்... போர்களத்தில் எழுதப்பட்ட கீதையும் சற்று நினைவுறுங்கள் ! போரில் சொந்தபந்தமோ பார்க்கப்படக் கூடாது போரைப் போராகத் தான் பார்க்கவேண்டு என்ற கீதையையும் நாம் புனித நூலாக இறைவன் வாக்காகத்தான் நினைக்கிறோம் !<<<

கீதையைப் படிப்பவர்கள் எல்லாம் கீதை மட்டும்தான் உண்மை பேசும் நூல் என்று கூறிக்கொண்டிருக்கவில்லை.

கீதை ஏற்பட்டுவிட்ட போரில் கடமையைச் செய்ய தூண்டுவது. தீவிரவாதிகளோ போர்களை உருவாக்கும் கடமையை குரான் அளித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

தன்னுடைய குழு மட்டுமே சிறந்தது என்றும், உண்மையை போதிக்கிறது என்றும், எல்லாரும் தன்னுடைய மதத்திற்கு மாற வேண்டும் என்பது மாதிரியான கருத்துக்கள் உள்ள மதங்களால் வன்முறையே பெருகும். இதை புரிந்துகொண்டுள்ள இஸ்லாமியர்களை பாராட்டவும், புரிந்துகொள்ளாதவர்களை அடையாளம் காட்டுவதும்தான் நேர்மையானவர் செய்ய வேண்டியது. நீங்கள் தங்கள் நேர்மையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு.

என் கேள்வி:

குரானை முழுமையாகப் படித்திருக்கிறீர்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//என் கேள்வி:

குரானை முழுமையாகப் படித்திருக்கிறீர்களா? //

குரானை முழுமையாக படிக்கவில்லை ... அவற்றை முழுமையாக படித்த இஸ்லாமிய நண்பர்களை பெற்றுள்ளேன் ... அவர்கள் யாரும் கையில் வாள் வைத்துக்கொண்டு என்னை தலையை சீவிவிடுவதாக சொன்னதில்லை !

மட்டன் பிரியாணி வாங்கித்தருகிறேன் என்றுதான் சொல்வார்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
மொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் என்று சொல்ல முடியாது. ஒட்டு மொத்தமாக எல்லா பார்ப்பனர்களும் அண்டச்சபிலிட்டி பார்ப்பார்கள். ஆனால் இஸ்லாம் என்ற மொத்த மதமும் தீவிரவாதிகள் இல்லை.

எனது இஸ்லாமும் தீவிரவாதமும் என்ற பதிவுக்கு கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தேன் நான்.

மதம் என்பது அவரவர் வழியில் சாமி கும்பிடப் பயன்படுத்துவதற்கு மட்டுமே.
//

என்னங்க கருப்பு ... பார்பனர்களில் உயர்ந்த தனிமனிதர்களும் உள்ளனர். ஒரே தட்டில் பிராமன சகோதரர்கள் வீட்டில் உணவு உண்டு இருக்கிறேன். அவர்கள் சாப்பாட்டிற்கு முன் தான் தண்ணீர் வைப்பார்கள். சென்றவுடன் தண்ணீர் தெளிப்பவர்கள் அல்ல.

அதே போல் மோசமான பிராமனர்களையும் பார்த்திருக்கிறேன்.
ஒட்டுமொத்தமாக பிராமனர்களை தாக்குவது என்பதில் உடன்பாடு இல்லை. நீங்கள் கண்ட மனிதர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் போலும்.

அடுத்தவர்குடி கொடுப்பவர்கள் எல்லா சாதிகளிலும் உண்டு.

மற்றபடி உங்கள் இஸ்லாமிய பதிவில் வீச்சு கொஞ்சம் அதிகமாக இருந்ததால்
கருத்து சொல்ல முயலவில்லை... :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஐயா.. முஸ்லிம் அல்லாதவர் சாத்தான் என்று சொல்லி அவர்களை முஸ்லிம் மதத்தைக் காப்பாற்ற கொல்லவேண்டும் என்பது தானே ஜீகாத்?//

மனிதர்களை வேர் அறுத்துப்போட்ட மனுவை பலரால் உயர்ந்த வேதமாக காட்டபபடுவதை பற்றிய உங்கள் கருத்துக்களையும் சொன்னால் ஜிகாத் பற்றி தெளிவடைய எனக்கு அது வழிசெய்யும் சொல்வீர்களா ?

பெயரில்லா சொன்னது…

கண்ணன்,
இஸ்லாமிய தீவிரவாதிகள் மும்பை,டெல்லி நகரங்களைத் தாக்கப் போகிறார்களாம்...துரதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடந்துவிட்டால் நாம் எல்லாம் மிக வருந்துவோம்..என்ன ஒரு வித்தியாசம்...எனக்கு அவர்கள் மேல் கடும் கோபம் வரும்..நீங்கள் உங்கள் முஸ்லீம் நண்பர்கள் வாங்கித்தரும் மட்டம் பிரியாணியைத் சாப்பிட்டுவிட்டு "ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை குறை சொல்லாதே" என மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வீர்கள்...


//நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.//

அடேயப்பா,
நீங்கள் நெசமாவே இந்துவாக இருந்தால் பேசாமல் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள்.."எல்லா" தகுதியும், நல்ல "அறிவு வளமும்" உங்களுக்கு உள்ளது...

கோவி.கண்ணன் சொன்னது…

//புலிப்பாண்டி said... அடேயப்பா,
நீங்கள் நெசமாவே இந்துவாக இருந்தால் பேசாமல் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள்.."எல்லா" தகுதியும், நல்ல "அறிவு வளமும்" உங்களுக்கு உள்ளது... //

புலிப்பாண்டி அண்ணன் அவர்களே !
கருத்துக்களுக்கு நன்றி.

ஒரு மதத்துக்கு மாறிதான் அதைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்று மதம் மற்றுபவர்களுக்கும் ... நீங்கள் சொல்வதற்கும் வேறுமைகள் இல்லை !


//நீங்கள் நெசமாவே இந்துவாக இருந்தால் //

இந்துக்கள் எல்லோரும் இந்து வெறியர்கள், மதங்களை மதிக்காதவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ !

கீதை : மதங்கள் என் கலுத்தில் உள்ள மாலையின் மணிகள் போன்றவை ... என்னிடமே தோன்றி என்னிடமே அடங்குகிறது ! - கண்ணபிரான்

பெயரில்லா சொன்னது…

// பாகிஸ்தான் அரசின் இந்த செயல் //

கோவி,

மதங்களை பத்தி எதைவேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள் ஆனால் பாகிஸ்தானை பற்றி பேசி பாராட்டி தொலைக்காதீர்கள்.

உங்களுக்கு புன்னியமாக போகும்!

குண்டுவெடிப்பிலும், போர்களத்திலும் செத்த இந்தியர்களுக்கு அந்த மரியாதையையாவது கொடுங்கள்.நன்றி கெட்டவனாக இருப்பதை விட கேவலம் எதுவும் இல்லை என்று குரானில் சொல்லியிருக்கிறதாம்.

பெயரில்லா சொன்னது…

கோவி,

மதானிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தீவிரவாதிகளா?

கோவி.கண்ணன் சொன்னது…

// Samudra said... குண்டுவெடிப்பிலும், போர்களத்திலும் செத்த இந்தியர்களுக்கு அந்த மரியாதையையாவது கொடுங்கள்.நன்றி கெட்டவனாக இருப்பதை விட கேவலம் எதுவும் இல்லை என்று குரானில் சொல்லியிருக்கிறதாம். //

சமுத்திரா அவர்களே !
இந்த பதிவுக்கு இந்திய பாகிஸ்தான் போருக்கும் என்ன சம்பந்தம் ?

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் ஆகிரமிப்பு காஷ்மீருக்கு பஸ் விடுவதும் கூட இறந்த ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசே செய்யும் துரோகம் என்று கூறுவீர்களா ?

நான் பாகிஸ்தானை மடியில் தூக்கிக் கொண்டு கொஞ்சவில்லை. அவர்கள் எடுத்த தீவிரவாதத்திற்கான எதிரான நடவடிக்கையை பாராட்டியிருக்கிறேன் என்ற அளவில் மட்டும் கொள்ளலாம்!

இவர்களுடன் 60 ஆண்டுகளுக்கு முன் ஒரே தேசமகாகத்தானே இருந்துவந்தோம் !

அமெரிக்காவும் அனுகுண்டால் அழிந்த ஜப்பானும் கொஞ்சிக் கொண்டு நண்பர்களாக இப்பொழுது இல்லையா ? பகை பகையாக எப்போதும் இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வதில் உடன்பாடு இல்லை !

பெயரில்லா சொன்னது…

கோவி கண்ணன்,

அமேரிக்காவும் ஜப்பானும் இன்று கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றது என்றால் அதன் நிலை இரண்டாம் உலக்ப் போரின் போது இந்தியா பாகிஸ்தான் போல் இருந்தது அல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்.

ஜப்பானியர்கள் எண்ணன் தாங்கள் தான் சிறந்த இனம் என்பது. அதன் விளைவாக அவர்கள் ஹிட்லருடன் சேர்ந்தனர்.

பாகிஸ்தானின் ஆதார அடிவேரே இந்தியா மீது வெறுப்பு. இந்தியா என்கிற ஒரு நாடு இல்லை என்றால் பாகிஸ்தான் என்கிற ஒரு நாடு இல்லை. 60ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் உருவாகக் காரணம் இஸ்லாம் என்கிற மதம். அதன் ஆதார அடிவேர் காபிர்கள் மீது வெறுப்பு.

இதை உணராமல் இன்னும் பச்சை பிள்ளையாட்டம் இஸ்லாம் என்றால் தீவிரவாமா? என்று கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

நாஜி என்றால் தீவிரவாதம் தானே. ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் அத்தனை பேரும் நாஜிக்கள் என்று சொல்ல முடியுமா?
இல்லை, அது ஒரு political ideology.

அந்த ideology தான் தீவிரவாதம். இஸ்லாம் மதமாக இல்லாமல் ideolgy இஸ்லாத்தை பின்பற்றி நடப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லது potential திவிரவாதிகளே.

அந்த ideology ஐ தான் நாம் அழிக்க முயற்சிக்க வேண்டும். அந்த ideology னால் விதைக்கப் பட்ட விஷச் செடியே பாகிஸ்தான்.

பெயரில்லா சொன்னது…

கோவியார் அவர்களே!
மிகைத்து நிற்றலின் அரசியல் எழுத்தாகவும் ஊடகப் பிரச்சாரமாகவும் வன்முறையாகவும் மாறியுள்ள காலகட்டத்தில் புரிதலுடன் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

முன் முடிவுகளுடனும், பின்னணி குயுக்திகளுடனும், தன் இருப்பையும் தரப்பையும் தக்க வைக்க வேண்டிய காரணிகளால் மூளையை மூடிக்கொள்ளாமல் படிக்க இயலாதவர்களே "அவன் வேதம் வன்முறையை போதிக்கிறது" என்கிற வாசகத்தை வைத்திருக்கிறார்கள். இதை இந்து, முஸ்லிம் பாகுபாடில்லாமல் அனைவருக்குமாகவே சொல்கிறேன்.

ஒரு முஸ்லிமாக, நானும் உங்களை குர் ஆனைப் படித்தாராயும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இஸ்லாம் மீதான அவதூறுகள் பழிப்புகளை செய்பவர்கள் (இந்திய அளவில்) 90 சதத்துக்கும் மேலாக பிராமணர்களே இருப்பது ஏன்?


இந்தப்பதிவின் பின்னூட்டங்களே சாட்சி.

பெயரில்லா சொன்னது…

கோவில்,

இப்போது பிடிபட்ட தீவிரவாதிகளை பற்றிய தகவல்கள் அமெரிக்க உளவு நிறுவனங்களால பாக்.க்கு கொடுக்கபட்டு மேல்மட்ட அளவில் பிரஷர் கொடுத்த பின்னர் தான் பாகிஸ்தான் நடவெடுக்கை எடுத்தது.

இப்போது வெள்ளையர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டதால் முன்று மாதங்களில் ஒரு medium level தாக்குதல் இந்தியாவில் நடக்கும்...ஏனெனில் இப்போது பாகிஸ்தானை யாரும் கண்டிக்கமாட்டார்கள்.இதை எனக்கு சொன்னது ஒரு இரானுவ அதிகாரி.

இன்னும் நிறைய இந்தியர்களை சாகடிக்க போகிற நாட்டை எதற்க்கு பாராட்ட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.வெள்ளையனின் உயிர் என்ன இந்தியனின் உயிரைவிட மதிப்பு அதிகமா?

அய்யோ பகை,வெறுப்பு என்று holier than thou டயலாக் விடுவதைவிட்டு நிதர்சனங்களை மட்டும் பாருங்கள்.
எனக்கு பாகிஸ்தானிலும் நல்ல நன்பர்கள் உண்டு...

இந்தியா பிளவுபட்ட போது பாகிஸ்தான் Dar-ul-Islam என்றும் இந்தியா Dar-ul-Harb என்றும் அழைக்கபட்டது - இன்னும் அழைக்கபடுகிறது.Dar-ul-Harb என்றால் என்ன தெரியுமா?

800 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டுவிட்டு எப்படி சாதாரனமாக காபீர்களுடன் நாட்டை பகிர்ந்துகொள்வது என்று கேட்ட சர் சயீதை இன்னும் இந்தியாவில் கொண்டாடி கொண்டு இருக்கும் மக்களை பற்றி உங்கள் என்னம் என்ன?

மதானி பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லையா இல்லை கோவையில் எவன் செத்தால் நமக்கு என்ன என்று விட்டுவிட்டீர்களா?

பெயரில்லா சொன்னது…

//மனிதர்களை வேர் அறுத்துப்போட்ட மனுவை பலரால் உயர்ந்த வேதமாக காட்டபபடுவதை பற்றிய உங்கள் கருத்துக்களையும் சொன்னால் ஜிகாத் பற்றி தெளிவடைய எனக்கு அது வழிசெய்யும் சொல்வீர்களா//

மனு என்பது ஒட்டுமொத்த இந்துக்களின் வேதநூல் அல்ல.ஒருசில முட்டாள் இந்துக்களால் அது உருவாக்கப்பட்டது.அதை கட்டாயமாக படிக்கவேண்டும் என்றும் இல்லை.

மனுவை யார் உயந்த வேதமாக கருதுகிறர்களோ அவர்கள் இந்துவே அல்ல.ஆனால் திருக்குரானை அப்படி கூறமுடியுமா?

பெயரில்லா சொன்னது…

கோவி. கண்ணன்,

>>>குரானை முழுமையாக படிக்கவில்லை ... அவற்றை முழுமையாக படித்த இஸ்லாமிய நண்பர்களை பெற்றுள்ளேன்<<<

வெள்ளைக் காக்காய் மல்லாக்காய் பறக்கும் என்று சொல்பவர்களும் உண்டு.

எதையும் நேரடியாகப் படித்து, பகுத்தாய வேண்டும் என்பது பெரியோர் சொன்னது. குரானைப் படித்துப் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பல. படித்துத்தான் பாருங்களேன்.

>>>> மனிதர்களை வேர் அறுத்துப்போட்ட மனுவை பலரால் உயர்ந்த வேதமாக காட்டபபடுவதை <<<<

அது மட்டுமே உயர்ந்தது என்றோ, அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றோ எந்த ஹிந்துவும் சொன்னதில்லை. அந்த ஸ்ம்ருதி அதிகம் பின்பற்றப்படவுமில்லை. பல ஸ்ம்ருதிகளில் அதுவும் ஒன்று. ஸ்ம்ருதி என்றால் மாறுதலுக்கு உட்பட்டது. அதை உயர்வாகப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்பவரனைவரும் ஹிந்து மதத்தை எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த ப்ரக்ருதிகள் சொல்லுவதை தங்கள் போன்றவர்கள் நம்புவதற்குக் காரணம் ஹிந்து மதம் உண்மையில் என்ன சொல்லுகிறது என்று தெரியாததே.

கொஞ்சம் விஷயம் தெரிந்த ஹிந்துக்களோடும் பழகுங்களேன்.

>>>>நான் பாகிஸ்தானை மடியில் தூக்கிக் கொண்டு கொஞ்சவில்லை. அவர்கள் எடுத்த தீவிரவாதத்திற்கான எதிரான நடவடிக்கையை பாராட்டியிருக்கிறேன் என்ற அளவில் மட்டும் கொள்ளலாம்!<<<<

அப்படியே இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை அவர்கள் இஸ்லாமியர்கள் என்கிற காரணத்தாலேயே அப்பாவிகள் என்று கூறுபவர்களை கண்டிக்கவும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழக அரசு என்கவுண்டரில் பல ரௌடிகளைக் கொன்றது. அதில் கொல்லப்பட்ட ரௌடி ஒருவன் முஸ்லீம் என்பதாலேயே தமிழக அரசை கண்டிக்கும் இஸ்லாமியர்கள்தான் இந்தியாவில் அதிகம். இந்த வலைப்பதிவுகளிலும். இவர்கள் தங்களை நடுநிலையாளர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள்.

>>>>அமெரிக்காவும் அனுகுண்டால் அழிந்த ஜப்பானும் கொஞ்சிக் கொண்டு நண்பர்களாக இப்பொழுது இல்லையா ?<<<

இதற்குக் காரணம் ஸமுராய் என்கிற இனம் முற்றிலுமாக அழிந்ததுதான். வன்முறையை முன்வைக்கிற, தன்னுடைய இனம் மட்டுமே உயர்ந்தது, ஆளப் பிறந்தது என்று நினைக்கிற இனங்கள் இருக்கும்வரை நட்பு இல்லை. நான் உண்மையான நட்பை சொன்னேன். தாங்கள் நட்பு என்று நம்புவதை இல்லை.

வஜ்ரா ஷங்கர் அழகாய் சொன்னது போல நாஸிஸமும், இஸ்லாமிய தீவிரவாதமும் ஒன்றுதான்.

நாஸிஸத்தை எதிர்க்கிற ஜெர்மானியர்களைப் பாராட்டுங்கள். ஜெர்மானியர்கள் என்பதற்காக எதிர்க்கக்கூடாது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் ஹிட்லரின் காலத்தில் ஜெர்மனி முழுவதும் நாஸிஸத்தின் பிடியில் இருந்தது. இஸ்லாம் வெறி பிடித்தவர்களின் கையில் இருக்கிறது. இதனோடு ஒப்பிடும்போது மேலை நாடுகளின் கிருத்துவமும், இந்தியாவில் ஹிந்து மதமும் எவ்வளவோ விடுதலை அடைந்துள்ளது.

பெயரில்லா சொன்னது…

கோவி கண்ணனுக்கு

நன்றாக எழுதி உள்ளீர்கள். ஆனால் புரியும் மனபக்குவம் இஸ்ஸாலாமிய துவேசம் பேசும் ஆட்களிடம் எதிர்பார்க்க முடியாது அல்லவா. புரியும் மன பக்குவம் வரனும் என்றால் கீதையை போர் பற்றி என்ன சொல்லி உள்ளது என்று அவாள்கள் இனி ஒரு முறை படிக்க சொல்லுங்கள்.

அன்புடன்
அசலம் ஒன்

பெயரில்லா சொன்னது…

>>>>இஸ்லாம் மீதான அவதூறுகள் பழிப்புகளை செய்பவர்கள் (இந்திய அளவில்) 90 சதத்துக்கும் மேலாக பிராமணர்களே இருப்பது ஏன்? <<<

இது தங்களின் கற்பனை. சும்மா கைக்கு வந்தபடி 90 சதம் 232 சதம் என்றெல்லாம் எழுதுவது வாதத்தில் வென்றேயாகவேண்டுமென்பதற்காக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதையே காட்டுகிறது.

ஒருவேளை இஸ்லாமை எதிர்க்கிற எல்லாரும் ப்ராமணர்கள் என்று முடிவு கட்டிக்கொண்டு விட்டீர்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Muse (# 5279076) said... கொஞ்சம் விஷயம் தெரிந்த ஹிந்துக்களோடும் பழகுங்களேன். //

மியூஸ் அவர்களே !
கொஞ்சம் விஸயமும் அதோடு துவேஸமும் பாராட்டமல் நீங்கள் ஸொல்லும் படி எல்லோரையும் அரவணைக்கும் ஹிந்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை ... தெரிந்தால் ஒரு பட்டியலை இங்கே போடுங்களேன் !

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,

//உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது.//

முதலில் தங்களின் துணிச்சலான,நேர்மையான பதிவுக்கு நன்றி.

//இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டு மொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.//

"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாய் வளரும்" என்பது பழமொழி. ஆனால் சிலருக்கு ஊரார் பிள்ளையை தூற்றினால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற நல்லெண்ணத்தில், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றுவது குலத்தொழில்!

//முதலில் திருக்குரானை முழுமையாக படித்துப்பாருங்கள்.அப்போழுதுதான் உண்மை தெரியும்.திருக்குரான் தீவிரவாதம் பேசுவில்லையன்றால் ஏன் ஜிஹாத் என்ற வார்த்தை அதில் உள்ளது?இதை தாங்கள் விளக்கமுடியுமா?// - August 12, 2006 3:39 AM, agner said…

//ஐயா.. முஸ்லிம் அல்லாதவர் சாத்தான் என்று சொல்லி அவர்களை முஸ்லிம் மதத்தைக் காப்பாற்ற கொல்லவேண்டும் என்பது தானே ஜீகாத்?// - August 12, 2006 10:54 AM, CAPital said…

//இருக்கலாம் என்று நினைத்தீர்கள் என்றால்... போர்களத்தில் எழுதப்பட்ட கீதையும் சற்று நினைவுறுங்கள் ! போரில் சொந்தபந்தமோ பார்க்கப்படக் கூடாது போரைப் போராகத் தான் பார்க்கவேண்டு என்ற கீதையையும் நாம் புனித நூலாக இறைவன் வாக்காகத்தான் நினைக்கிறோம் !// - August 12, 2006 3:47 AM, கோவி.கண்ணன் said…

'ஜிஹாத்' என்ற அரபி வார்த்தையை முஸ்லிம்களோடு இணைத்து இஸ்லாத்தில் தீவிரவாதம் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'ஜஹதா' (முயற்சித்தல்) என்ற அரபி வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் ஜிஹாத். இது பல்வேரு அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளது. அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டம், தனிமனிதனின் மனோ இச்சைகளுக்கு எதிரான சுயப்போராட்டம் என்றும் சொல்லலாம்.

உதாரணமாக, நபித்தோழியர் பெண்களையும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றபோது, "பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே, பெண்களுக்கான ஜிஹாத்!" என்றார்கள். (பார்க்க: ஸஹீஹ் புகாரி 'ஹஜ்' மற்றும் ஜிஹாத் பற்றிய ஹதீஸ்கள்).

இன்னொரு சந்தர்ப்பத்தில் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஹிஜாத் என்று சொல்லியுள்ளார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி...) அவர்கள் அறிவிப்பதாவது, " ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், " உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?" என்றார்கள். அதற்கு அம்மனிதர் "ஆம்!" என்றார். "பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு" என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!" (புகாரி)

அக்கிரமக்கார அரசனின் முன் உண்மையை எடுத்துச் சொல்வதே மிகச்சிறந்த 'ஜிஹாத்' என்றும் நபிகளார் சொல்லியுள்ளார்கள். அதாவது இன்று நேபாளில் மாவோயிஸ்டுகள் செய்து கொண்டிருப்பதும், இலங்கை ஆட்சியாளர்க்க்கு எதிராக விடுதலை புலிகள் செய்து கொண்டிருப்பதும் ஜிஹாதே!அக்கிரமக்கார ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய போதிலும், போரில் ஈடுபடாத பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்,மத அறிஞர்கள் ஆகியோருக்கு துன்பம் விளைவிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளதோடு அச்செயலில் ஈடுபட்டவரை கொலைக்குற்றம் செய்தவராக இஸ்லாம் கருதுகிறது.

//அமைதியாக இருப்பவர்களை பற்றி பேச்சே அல்ல தீவிராதிகளை பற்றிதான் பேச்சே. அத்தீவிரவாதிகளை பற்றி பேசும்போது அமைதியானவர்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் பற்றி பேச்சு ஏனென்றால் தீவிரவாதிகளும் முஸ்லிம் என்பதால்// - August 12, 2006 3:42 AM, Calgary சிவா said…

தீவிரவாதிகளுக்கு மதமில்லை. இறைவன் படைத்த உயிரை அநியாயமாக கொல்ல எவனுக்கும் உரிமையில்லை. அவ்வாறு செய்பவன் முஸ்லிமாக இருக்கும்போது 'முஸ்லிம் தீவிரவாதி' என்றும் இந்துவாக இருந்தால் 'உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தர்' என்று வியாக்கியானம் பேசும் இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு வக்களத்து வாங்கும் சிலரைப்பற்றியும் கால்கரி சிவா அவர்கள் வாய் திறக்க வேண்டும்.

//தீவிரவாதிகளோ போர்களை உருவாக்கும் கடமையை குரான் அளித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.// - August 12, 2006 1:03 PM, Muse (# 5279076) said…

//மும்பையில் நடந்தது போரா?, இரட்டை கோபுரங்களில் போர் வீரர்களாக தங்கியிருந்தார்கள்?, இந்திய பார்லிமெண்ட் போர்களமா?,லண்டன்/ஸ்பெயின் ரயில்களில் பயணம் செய்வது போர் வீரர்களா?, சவூதியில் ஆபிஸில் இருந்த என் நண்பரின் பொட்டில் துப்பாக்கியால் சுட்டு அவர் மூளை சிதறி இறந்தது போர் களமா? ஆனால் அவர்களுக்கு இதுதான் ஜிஹாத் கண்ணபிரான் அவர்களே// - August 12, 2006 4:00 AM, Calgary சிவா said...

இவையெல்லாம் 'ஜிஹாத்' என்று சொன்னவர்கள் யாரய்யா? இவற்றில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் எவராவது, குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதால்தான் அவ்வாறு செய்தோம் என்று சொன்னார்களா?

முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதே உண்மையான ஒவ்வொரு இந்துவின் கடமை என்று கொக்கரிக்கும் தொக்காடியாக்களுக்கும், குஜராத்தில் இனச்சுத்திகரிப்பு செய்த மோடிக்கும் வேதம் குர்ஆனல்ல என்பதை கால்கரி சிவா உணரவேண்டும்.

//உங்களுக்கும் எஸ்கேக்கும் கேட்கிறேன் அவர்கள் நாட்டிலுள்ள பின்லாடனையும் தாவூத் இப்ராகிமையும் பாகிஸ்தான் என் இன்னும் பிடிக்கவில்லை? ஒசாமை விடுங்கள் பொந்துக்குள் பதுங்கி வாழும் மிருகம் அது. சகல் வசதிகளுடன் பங்களாவில் குடி குட்டிகளுடன் வசிக்கும் இப்ராஹிம்க்கு என்ன கேடு?//

அதானே! தாவூத் இப்றாஹிமை ஒப்படைத்தால்தான் பாகிஸ்தானுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை என்று சொல்லாமல் முஷரஃபை ஆக்ராவிற்கு அழைத்த வாஜ்பாய் அரசுக்கு என்ன கேடு? அல்லது ஜின்னாவின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து புகழ்ந்து பேச அத்வானிக்குத்தான் என்ன கேடு? இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சிவா!

//கீதையைப் படிப்பவர்கள் எல்லாம் கீதை மட்டும்தான் உண்மை பேசும் நூல் என்று கூறிக்கொண்டிருக்கவில்லை//, தன்னுடைய குழு மட்டுமே சிறந்தது என்றும், உண்மையை போதிக்கிறது என்றும், எல்லாரும் தன்னுடைய மதத்திற்கு மாற வேண்டும் என்பது மாதிரியான கருத்துக்கள் உள்ள மதங்களால் வன்முறையே பெருகும்.//- August 12, 2006 1:03 PM, Muse (# 5279076) said…

இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்கள் தாய் மதம் திரும்ப வேண்டும் என்றும், முஸ்லிம்கள் இந்துத்துவாவை வாழ்க்கை நேரியாகக் ஏற்க வேண்டும் என்றும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்கள் இந்தியாவின் அவமானச் சின்னங்கள் என்றும் சொல்வர்களைப் பற்றியும் அவர்களின் அஜெண்டா பற்றியும் என்ன சொல்லப் போகிறீர்கள் திரு.முயூஸ் அவர்களே?

//என் கேள்வி:குரானை முழுமையாகப் படித்திருக்கிறீர்களா?// - August 12, 2006 1:03 PM, Muse (# 5279076) said…

முயூசுக்கு என் கேள்வி:குரானை முழுமையாகப் படித்திருக்கிறீர்களா?

//ஏதோ ஒரு நாட்டில் தீவிரவாதி செய்கிறான் என்றால் சகல முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்களைக் கொல்லாதே என்று போராட்டங்கள். அப்போ முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களை ஆதரிப்பதனால் தான் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று ஒட்டுமொத்தமாக மற்றவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

முஸ்லிம் என்று போராடாமல் ஒரு மொழி சார்ந்தோ, நாடு சார்ந்தோ எதுவும் செய்வதில்லை. எந்தப் போராட்டமானாலும் "முஸ்லிம்" என்று தான் கூக்குரலிடுகிறார்கள். மற்றயவர்களுக்கு அது ஒரு வேற்றுமையை உண்டாக்குகிறது. நாங்கள் எல்லோரும் நாடு என்றோ மொழி என்றோ ஒற்றுமையாய் நிற்கிறோம், நீங்கள் மட்டும் மதம் என்று தனித்து நிற்கிறீர்கள். அப்போ எங்களுக்கும் உங்களுக்கும் ஏதோ ஒரு வேற்றுமை அகல விரிகிறது// - August 12, 2006 10:54 AM, CAPital said…

சக மனிதனுக்கு அநீதி இழைக்கப் பட்டால் கைகளால் தடுத்து நிறுத்துங்கள்; முடியாதவர்கள் வாயால் தடுத்துங்கள்; அதுவும் முடியாதவர்கள் மனதாலாவது வெறுத்து ஒதுக்குங்கள். சொன்னவர் முஹம்மது நபி. இதுதான் நண்பரே இஸ்லாம்! அதேசமயம் உங்களின் குற்றச்சாட்டில் நியாயமில்லை என்று சொல்வதற்கில்லை. தர்போதைய சூழலில் முஸ்லிம்களுக்கு பற்றியெரியும் தங்கள் வீட்டை அணைக்கவே நேரம் போதவில்லையெனும் போது பக்கத்து வீட்டு நெருப்பையும் அணைக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

பெயரில்லா சொன்னது…

நல்லடியார்,

>>>>இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்கள் தாய் மதம் திரும்ப வேண்டும் என்றும், முஸ்லிம்கள் இந்துத்துவாவை வாழ்க்கை நேரியாகக் ஏற்க வேண்டும் என்றும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்கள் இந்தியாவின் அவமானச் சின்னங்கள் என்றும் சொல்வர்களைப் பற்றியும் அவர்களின் அஜெண்டா பற்றியும் என்ன சொல்லப் போகிறீர்கள் திரு.முயூஸ் அவர்களே?<<<<<


"He who battles monsters must beware, lest a monster he become." --Friedrich Nietze

பெயரில்லா சொன்னது…

நல்லடியார்,

>>>>முயூசுக்கு என் கேள்வி:குரானை முழுமையாகப் படித்திருக்கிறீர்களா?<<<

படித்திருக்கிறேன்.

என்னிடம் இருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பின் பெயர் பின்வருமாறு:

The Meanings of the Glorious Quran
By
Muhammad Marmaduke Pickthall
Published by Nusrat Ali Nasri
1930

இங்கு நானிட்ட பின்னூட்டங்களையெல்லாம் முழுமையாகப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பெயரில்லா சொன்னது…

//
"He who battles monsters must beware, lest a monster he become." --Friedrich Nietze
//

muse,

இது தான் இன்று இஸ்லாத்தில் நடக்கின்றது. என் பதிவைப் பாருங்கள்.

அதில் சுட்டியுள்ள படத்தையும் காணுங்கள். 1:30 மணி நேரத் திரைப்படத்தில் ஒரு Ex பாலஸ்தீனிய தீவிரவாதி, தீவிரவாதியின் மகள் பேசும் பேச்சுக்களைக் கேளுங்கள்.

மிதவாதிகள் என்று சொல்லிக் கொண்டு தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் முகத்திரை கிழிவதையும் பார்க்கலாம்.

இஸ்லாமிசம் (இஸ்லாம் அல்ல - for political correctness) அடுத்தவர்கள் மேல் அவதூறு வீசியே முன்னேறி வந்துள்ளது. இன்று அந்த அவதூறுகளெல்லாம் இஸ்லாத்தின் அங்கமாகிவிட்டன என்பது துரதிர்ஷ்டவசமான உண்மை.

பெயரில்லா சொன்னது…

தாம் நடுநிலையாக சிந்திக்கும் மனப்பக்குவத்தை உடையவர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கும் நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்!


//தர்போதைய சூழலில் முஸ்லிம்களுக்கு பற்றியெரியும் தங்கள் வீட்டை அணைக்கவே நேரம் போதவில்லையெனும் போது பக்கத்து வீட்டு நெருப்பையும் அணைக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். - நல்லடியார்//

நன்றாக சொன்னீர்கள் நல்லடியார்!

பெயரில்லா சொன்னது…

//ஒருவேளை இஸ்லாமை எதிர்க்கிற எல்லாரும் ப்ராமணர்கள் என்று முடிவு கட்டிக்கொண்டு விட்டீர்களா?//
இணையத்தில் வெறிகொண்டு எதிர்ப்பவர்களில் 90 சதம் பார்ப்பனர்களே.

பெயரில்லா சொன்னது…

//ஹிந்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை ... தெரிந்தால் ஒரு பட்டியலை இங்கே போடுங்களேன் !//

'ஆசை'யில் 'ஸை'யைக் காணோம் ஸார். சை......

பெயரில்லா சொன்னது…

நல்ல அருமையான துணிச்சலான பதிவு. பதிவும் போட்டு வாங்கியும் கட்டிக் கொள்வோம் என்று தெரிந்து அழகாக விளக்கமும் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

பெயரில்லா சொன்னது…

விளங்கிக் கொள்ள மறுப்பவர்களிடம் எதுவும் சொல்லி புரிய வைக்கவா முடியும். கோவி. கண்ணண்.
அவாள்களுடைய நோக்கம் இஸ்லாத்தை தரக் குறைவாக ஏழுத பேச வேண்டும். இதெல்லாம் சூரியனைப்பார்த்து ,,,,,,,,,,,,,,, கதையாகத்தான் முடிகிறது.
இவர்களால் சொல்லப்படும்போது இன்னும் கூடுதலானவர்கள் குர்ஆனைப் படிக்கிறார்கள். விளங்குகிறார்கள். அவாள்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் போதெல்லாம் அவாளை எதிர்ப்பவர் எண்ணிக்கை மேலும் கூடுகிறது.
நாங்களும் எல்லா மக்களும் குர்ஆனைப் படியுங்கள் என்றே விரும்பி அழைக்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

//At August 12, 2006 5:28 PM, Muse (# 5279076) said…

>>>>இஸ்லாம் மீதான அவதூறுகள் பழிப்புகளை செய்பவர்கள் (இந்திய அளவில்) 90 சதத்துக்கும் மேலாக பிராமணர்களே இருப்பது ஏன்? <<<

இது தங்களின் கற்பனை. சும்மா கைக்கு வந்தபடி 90 சதம் 232 சதம் என்றெல்லாம் எழுதுவது வாதத்தில் வென்றேயாகவேண்டுமென்பதற்காக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதையே காட்டுகிறது.

ஒருவேளை இஸ்லாமை எதிர்க்கிற எல்லாரும் ப்ராமணர்கள் என்று முடிவு கட்டிக்கொண்டு விட்டீர்களா?//

பிராமணர்களில் நன்குணர்ந்த எத்தனையோ நல்லவர்கள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ரிப்பீட்டு, பிராமணர்களில் நன்குணர்ந்த எத்தனையோ நல்லவர்கள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை.

அதே சமயம், இஸ்லாமியருக்கு எதிராக மறைமுக அஜெண்டாவுடன் செயல்படுபவர்களில்; அவதூறு வாங்கி விற்பவர்களில் 90%க்கும் மேலாகவே பார்ப்பனர்கள் உள்ளனர் என்பதற்கு இணையமே சாட்சியளிக்கையில் மியூஸானந்த சிவாச்சாரிய ராகவ சங்கர ஜயகுமார ஸ்ரீநிவாஸ்கள்
இதை வீணாவேசமாக மறுத்தாலும் அவர்தம் மனசாட்சியால் மறுக்க இயலாது.

பெயரில்லா சொன்னது…

கண்ணன்!! தெளிவான சிந்தனை !!!

பெயரில்லா சொன்னது…

கோவிக் கண்ணன்!

நடு நிலையோடு எழுதிய பதிவு. உண்மைகளை சொன்னால் சிலருக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

//.திருக்குரான் தீவிரவாதம் பேசுவில்லையன்றால் ஏன் ஜிஹாத் என்ற வார்த்தை அதில் உள்ளது?இதை தாங்கள் விளக்கமுடியுமா? //

சிவபாலன்!

"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்" - குர்ஆன் 2 : 256

"இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக!பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக!அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்." - குர்ஆன் 9 : 6

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு" என முகம்மதே கூறுவிராக" - குர்ஆன் 109 : 6

மேற் கண்ட மூன்று வசனங்களும் கட்டாய மத மாற்றத்தை தடை செய்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் பாதுகாப்பு கோரினால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் விளங்குகிறோம்.மத மாற்றத்துக்காக போர்கள் கூடாது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

'நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!இல்லையேல் நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள்.' -குர்ஆன் 49 :6

இந்த வசனம் மூலம் விளங்குவது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினாலும் உடன் ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்று விளங்குகிறோம். முதலில் செய்தி உண்மைதானா அல்லது வதந்தியா என்று முதலில் ஆராய வேண்டும். அரசு மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலை வரும் போது மட்டும் தான் ஆயுதத்தை நாம் எடுக்கலாம்.



"தமது உடன்படிக்ககைளை முறித்து இத்தூதரை (முகம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் யுத்தத்தைத் துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா?" -குர்ஆன் 9 :13

உடன்படிக்ககைளையும் முறித்து அவர்களாகவே போரைத் துவக்கியுள்ள நிலையில் முஸ்லிம்களை போர்டச் சொல்லி குர்ஆன் கட்டளை இடுகிறது.

"உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" - குர்ஆன் 2 :190

போரில் வரம்பு மீறக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டனர் மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திரா விட்டால் மடங்களும் ஆலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாக துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்." - குர்ஆன் 22 :40

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக வீட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றுகின்றனர். அந்த அநியாயக் காரர்களை எதிர்க்க சொல்கிறது குர்ஆன். அடுத்து பள்ளிவாசல்களும் கோவில்களும் சர்ச்களும் பாதுகாப்போடு இருக்க பலப் பிரயோகமும் அவசியம் என்று சுட்டிக் காட்டப் படுகிறது.

"போரிலிருந்து விலகிக் கொள்வார்களானால் இறைவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்:" குர்ஆன் - 2 :192

போரிலிருந்து விலகிக் கொண்டவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் இதிலிருந்து விளங்குகிறது.

'எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொருப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!" என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவினமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இறைவனின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?" - குர்ஆன் 4 : 75

முதியோர்கள் பெண்கள் சிறுவர் போன்றவர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப் படக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் முஸ்லிம்களின் மீது போரை கடமையாக்கினான் இறைவன். அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

"முகம்மதே! அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! இறைவனையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்: அறிந்தவன்:" - குர்ஆன் 8 : 54

எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் போரை நிறுத்தி சமாதானத்தின் பக்கம் வர வேண்டும். தேவையற்ற உயிர்ப் பலிகள் தடுக்கப் பட வேண்டும் என்று இந்த வசனத்தில் கட்டளையிடுகிறான்.

நியாயமான நேரங்களில் நீங்களும் நானும் என்ன முடிவு எடுப்போமோ அதைத்தான் கட்டளையாக குர்ஆன் மக்களுக்கு இடுகிறது.இதில் வன்முறை எங்கிருந்து வந்தது?

பெயரில்லா சொன்னது…

//இஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது//

தீவிரவாதி என்பவன் தீவிரவாதியாக மட்டுமே பார்க்கப்படவேண்டும்.

இந்து என்றோ, இஸ்லாமியன் என்றோ, கிறிஸ்துவன் என்றோ பார்ப்பது மடமையானது.

நேருக்கு நேராய் யாரிடம் பிரச்சினையோ அவரிடம் போரிடாமல் அப்பாவி மக்கள், குழந்தைகள் என பொதுமக்களின் உயிரைப் போக்கும் தீவிரவாதம் என்பது ஒரு தனி மதம்.
அது ஒன்றுதான் உலகிலேயே ஒரு இழிவான மதம். தீண்டத்தகாத மதம்.

பெயரில்லா சொன்னது…

குரான் வசனங்களை மேற்கோள் காட்டி நல்ல விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் கவனப்ரியன். வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

இஸ்லாம் ஒரு தீவிரவாத மதமா என்று கேட்டிருக்கிறீர்கள்.
துரதிர்ஷ்டவசமாக அதன் விடை ஆமாம் என்பதுதான்

//நேருக்கு நேராய் யாரிடம் பிரச்சினையோ அவரிடம் போரிடாமல் அப்பாவி மக்கள், குழந்தைகள் என பொதுமக்களின் உயிரைப் போக்கும் தீவிரவாதம் என்பது ஒரு தனி மதம்.
அது ஒன்றுதான் உலகிலேயே ஒரு இழிவான மதம். தீண்டத்தகாத மதம்.//

அந்த மதத்தின் பெயர் இஸ்லாம்


http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/019.smt.html
Chapter 9: PERMISSIBILITY OF KILLING WOMEN AND CHILDREN IN THE NIGHT RAIDS
Book 019, Number 4321:
It is reported on the authority of Sa’b b. Jaththama that the Prophet of Allah (may peace be upon him), when asked about the women and children of the polytheists being killed during the night raid, said: They are from them.
அத்தியாயம் 9: இரவு நேர தாக்குதல்களில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது அனுமதிக்கப்பட்டது
புத்தகம் 019. எண் 4321: சாம் ஜாத்தமா அவர்கள் சொன்னார்: அல்லாவின் தூதர் பல தெய்வங்களை வணங்குபவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேர தாக்குதல்களில் கொல்வது பற்றி கேட்டபோது சொன்னார், “அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே”

(Tabari IX:69) Killing disbelievers is a small matter to us.

தபரி IX:69 : இஸ்லாமை நம்பாதவர்களை கொல்வது எங்களுக்கு சிறிய விஷயம்.

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

பெயரில்லா சொன்னது…

தங்களின் மேற்கோள் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. யாரோ போனாம் போக்கில் சொல்லிவிட்டுப் போனதையெல்லாம் இஸ்லாமியர்களின் வேதமாக எடுத்துக் கொள்ளமுடியாது. நபிகள் நாயகம் சொன்னதாக பலரும் அவரவர் விருப்பப்படி குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அதை ஹதீஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இது திரிக்கப்பட்ட தனக்குச் சாதகமான வகையில் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஏனெனில் குர்ஆன் ஒன்றுதான் உள்ளது, ஆனால் நபிகள் நாயகம் சொன்னதாக அழைக்கப்படும் ஹதீஸில் 24 வகை உள்ளது. இதிலிருந்தே தெரிய வேண்டாமா, இது "காக்கா கத்தியது" பின்னர் "கருப்பு கருப்பாக வாந்தியெடுத்தது" என்று மாறிப்போன மாதிரிதான்.

உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால், ஹதீஸ் இறைவனிடமிருந்து வந்து தேவ வசனமா என்று எந்த இஸ்லாமியரையாவது கேட்டுப் பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

//தர்போதைய சூழலில் முஸ்லிம்களுக்கு பற்றியெரியும் தங்கள் வீட்டை அணைக்கவே நேரம் போதவில்லையெனும் போது பக்கத்து வீட்டு நெருப்பையும் அணைக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.//
என்ன நல்லடியாரே..ரொம்ப நாளா காணோம்? அறுந்து போனதையெல்லாம் ஒட்டி எடுத்துட்டு வந்து பாவம் கண்ணன் கிட்ட ஓட்டி காமிக்கிறீங்களா?

கண்ணன் அவர்களே,
குரான் படிக்காவிட்டாலும் பரவாயில்லை..நேசகுமார், ஆரோக்கியம் ஆகியோரின் எழுத்துக்களைப் படித்துவிட்டு பின் உங்களது சொந்தக்கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு விவாதம் செய்யுங்கள்..(அவர்கள் எழுதியிருப்பது வெறும் அவதானிப்புகளோ, சொந்தக் கருத்துக்களைத் திணித்து எழுதிய கட்டுரைகளோ அல்ல..குரானின் வரிக்கு வரி விளக்கங்கள்..ஆதாரச் சுட்டிகளுடன் கூடிய மொழிபெயர்ப்புக்கள்..)

கவனியுங்கள்..குரானை நான் படிக்கவில்லை என்று வெளிப்படையாக நீங்கள் கூறியபின்னும் இங்கு இவ்வளவு இஸ்லாமியர்கள் உங்களுக்கு நன்றி கூறியும், உங்களை ஆதாரமாக வைத்தும் ஜல்லியடிக்க முயற்சிக்கின்றனர்..இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன அன்பரே?? சொல்லுங்கள் பார்க்கலாம்...

பெயரில்லா சொன்னது…

பின்னூட்ட தூற்றலாக என்ன வரும் என்று தெரிந்திருந்தும் துணிவுடன் பதியப்பட்ட நடுனிலையான பதிவு, பாராட்டுக்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் சொல்லாமல் நேர்மையான அனுகுமுறைக்கு நன்றி. மனிதம் வெல்லட்டும். சிங்கை இஸ்மாயில்

பெயரில்லா சொன்னது…

//உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு" என முகம்மதே கூறுவிராக" - குர்ஆன் 109 : 6//

அப்படியென்றால் இஸ்லாம் வேற்று மதத்தினரை காஃபிர்கள் என்று அழைப்பதின் மர்மம் என்ன?

யுதர்களை பற்றி மிக கேவலமாக திருக்குரானில் சித்தரிக்கப்பட்டுள்ளது.இதுதான், உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கா?

//உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" - குர்ஆன் 2 :190//

இஸ்லாம் அன்பான,அமைதியான மார்க்கம் என்ற கோஷம் இதிலே அடிப்பட்டுபோகிறது.மதம் என்பது கெட்ட வழியில் செல்லும் மனிதர்களை நல்வழிக்கு செல்வதற்க்காகதான்.ஆனால் இஸ்லாம் மதமோ மக்களை போர் செய்ய அழைக்கிறது.

பெயரில்லா சொன்னது…

இஸ்லாம் ஒரு தீவிரவாத மதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் என்பதை யாவரும் மறுக்க இயலாது. உலகில் நடைப்பெறும் முக்கிய குழப்பங்களுக்கு பெரும்பாலும் அடிப்படைக் காரணமாக அமைவது இஸ்லாமி தீவிரவாத தத்துவமே. மதங்கள் என்பது மக்களை பண்படுத்த வந்த கருவிகளே. ஆனால் இங்கே, மதத்தின் பெயராலேயே கொலைகள் அதுவும் பிரச்சனையில் சம்பந்தப்படாத அப்பாவிகளை தான் அதிகம் பாதிக்கிறது. அவர்களின் வேத நூல் இவற்றை நியாயப்படுத்துகிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதன் பெயரைச் சொல்லியே அனைத்து பாதகங்களும் நடப்பதை பார்க்கும் போது அதன் புனிதத்தைப் பற்றி சற்று சந்தேகம எழுவது இயற்கைதான். அதற்காக குறை கூறுபவர்களை கண்டிப்பதை விடுத்து குறை கூறக் காரணமானவர்களை திருத்தமுயற்சிப்பதே அம்மதத்தை சேர்ந்தவர்களின் கடமையாகும். ஆனால் இங்கு நடப்பதோ வேறு விதமாக இருக்கிறது. தீவிரவாத செயலை எதோ ஒரு புனித நிகழ்வாக கொண்டாடும் இஸ்லாமிய கூட்டத்தினரே உலகமெங்கும் மிக அதிகம். இது ஒரு சிலர் செய்யும் தீவிரவாதம் என்றாலும், அதை கொண்டாடும் அல்லது கண்டிக்காமல் இருக்கும் பெரும்பாலான இஸ்லாமியம் மற்றவர் கண்ணுக்கு ஒட்டுமொத்த தீவிரவாத சமயமாக தென்படுவது தவிர்க்க இயலாது. இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களை கண்டிக்கும் இஸ்லாமியர்கள் ஈராக்கில் ஒரு அப்பாவி வெள்ளையனை ஒரு இஸ்லாமிய தீவிரவாதி கதர கதர கழுத்தறுத்து கொள்வதை பார்த்து பேசாமலிருந்தவர்களே அதிகம் ( அதை மகிழ்ச்சியுடன் கண்டு களித்த இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பதும் உண்மை). நிச்சயமக இஸ்லாம் தீவிரவாத மதம் இல்லைதான். ஆனால் அது கோழையாக, அபாவிகளை கொல்லும் தீவிரவாதிகள் உறுவாகும் தொழிற்சாலையாக மாறியுள்ளது என்பதே தற்போதைய நிலைமை. அதை மாற்ற இஸ்லாமிய சகோதரர்கள் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கட்டும். அதுவரை உங்கள் மதத்தை எதோ வகையில் மற்றவர்கள் குறைத்துக் கூறுவதில் சற்றேனும் நியாயம் உள்ளது என்பதை மறுக்காதீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

புலிப்பாண்டி அண்ணன் அவர்களே ... தாங்கள் கடைசியாக போட்ட பின்னூட்டத்தை வெளியிடமுடியாததற்கு வருந்துகிறேன்.

அரோக்கியம் அவர்கள் பதிவில் போட வேண்டிய செய்திகளை இடம் மாறி போடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இஸ்லாம் மார்க்கத்தை உண்மையில் போற்றுபவர்களை அதன்வழி கண்ணியத்துடன் நடப்பவர்களைப் பற்றிமட்டும் தான் பேசுகிறோம்.

எவனோ கேடுகெட்டவன் பேட்டியெல்லாம் கொண்டு வந்து போடுகிறீர்கள் ... மண்ணிக்க வெளியிட முடியாததற்கு மீண்டும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பால்ய விவாகம் இந்தியாவிலும் நடந்து கொண்டிருந்ததையும் நினைவில் கொள்க !

பெயரில்லா சொன்னது…

நண்பர் திருவடியான் குரானில் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்.

குரானை எப்படி படிக்க வேண்டும் என்று முஸ்லீம்களுக்குத் தெரியும். அது மற்றவர்களுக்குத் தெரியாது.
எவ்வாறு முஸ்லீம்கள் குரானை படிக்கிறார்கள் என்று புரிந்தால்தான். அது தீவிரவாத மதமா அமைதி மதமா என்று தெரியும். «Ð ±ùÅ¡Ú ÓŠÄ£õ¸¨Ç ÅÆ¢¿¼òи¢ÈÐ ±ýÀÐ ÒâÔõ.

ஏன் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும்போது அமைதிவழியாகவும், பெரும்பான்மையாக இருக்கும்போது அழிவு வழியாகவும் இஸ்லாமை பார்க்கிறார்கள் என்பதும் புரியும்

இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள். இதில் குரான் வரிகள் மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இதனை படித்து முடிக்கும்போது சுவனப்பிரியன் போன்ற முஸ்லீம்கள் செய்வது என்ன என்று தெரியும். அதற்கும் ஒரு இஸ்லாமிய வார்த்தை இருக்கிறது.
படியுங்கள்.

இஸ்லாமின் இரண்டு முகங்கள் -அபுல் காஸெம்

பெயரில்லா சொன்னது…

கண்ணன் சார்,

தங்கள் இஸ்லாமுக்கு கலர் பூசும் முயற்சி முற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இதனால், பல நல்லிணக்கங்கள் ஏற்படுமானால் அது நிச்சயமாக வெல்கம்.

இந்த பதிவுக்கான தங்களின் குறிக்கோள் என்னவாக இருக்கும் என்று இரண்டு விதமாக யோசித்தேன்.

முதலாவது, தங்கள் குறிக்கோள் உண்மையை தெரிந்துகொள்வதானால், தங்கள் பலத்தர விமர்சனங்களை பதிலளிக்க முன் வர வேண்டும்.

மாறாக, இரண்டாவதாக, தங்கள் குறிக்கோள் பூச்சுவேலை செய்து "எம்மதமும் சம்மதம்" என்று ஏற்படுத்த முனைந்தால், அதற்கு தாங்களின் இந்த பதிவு ஒரு நல்ல முயற்சி.

ஆனால் என்ன! தற்போதைய நிலைமை இதற்கு சாதகமாய் இல்லை.

மீடியாக்களிலும் ஜனங்கள் மனத்திலும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது இஸ்லாம் என்கிற cult.

இந்த இஸ்லாமிய சட்டியிலிருந்து வீசும் "வாசனை" பத்திரிக்கைகளில் கொஞ்சம் தூக்கலாகவே அடிப்பதால், உள்ளே என்ன இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்குமோ என்று தோன்றுகிறது.

தை பிறந்து ட்ரை பண்ணி பாருங்கள். ஒரு வேளை, வழி பிறக்கலாம்.

நன்றி

பெயரில்லா சொன்னது…

என்னார் சொல்வது மிக அதிர்ச்சியாக உள்ளது...

:((

என் கருத்து :

எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் அல்ல...

அதேபோல் எல்லா பார்ப்பணரும் சாதி பார்க்கவில்லை...

தங்கமான நன்பர்கள் இருக்காங்க எனக்கு...

விடாது கருப்புவின் அனுபவங்கள் அவருக்கு அப்படியான ஒரு கருத்தை ஏற்ப்படுத்தி இருக்கலாம்...அதேபோல் தான் கால்கரியாரின் அரேபிய அனுபவங்கள் கசப்பானதாக இருக்கலாம்..

அதுக்காக - அப்துல் காதர் என்று ஒரு தீவிரவாதி ஆயா வீட்டில் பீடி பத்த வச்சான் என்பதற்க்காக எல்லாரும் தீவிரவாதிங்க... என்று சொல்லும் லொள்ளு பதிவை இப்போதுதான் பார்த்தேன்...

கொடியில் காய்ந்த துனியை திருடிக்கிட்டு ஓடிய பிட்பாக்கெட் கனேசன் ஒரு இந்து என்பதால் - அம்புட்டு பேரும் பிட்பாக்கெட்டு அப்படீங்கறது தப்புங்கன்னா...

பெயரில்லா சொன்னது…

Dear Mr.Kannan,
Thank you for your honesty to write this article.

Please read my essay regarding Islam & Terrorism in my blogspot
http://izzath.blogspot.com



REgards
Izzath

பெயரில்லா சொன்னது…

கண்ணன் சார்,

என்ன ஆச்சரியம்! யாரொருவரின் பின்னூட்டத்துக்கும் இல்லாத ஒரு மதிப்பை எனக்கு கொடுத்தது எனக்கு மிகவும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. ரொம்ப ரொம்ப நன்றி.

///
இந்து ஒருவர் எவரோ செய்யும் தவறுக்கு இந்துக்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா ?.....////

இந்து யாராவது நான் "இந்து மதத்தின் பேரால்" கொலை செய்தேன் என்று சொன்னால், அதற்கு ஒவ்வொரு இந்துவும் பொறுப்பு. அவ்வாறு ஒரு தீவிரவாதியும் இஸ்லாமைப்போல மத்த்தை முன்னிறுத்துவதில்லை. ஹிஜ்புல்லா என்றாலே "அல்லாவின் பார்ட்டி" என்றுதான் அர்த்தம். இது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் வெட்கக்கேடுதான்.

சானியாவின் ஜட்டிக்கு ஃபட்வா போடும் முல்லாக்கள், தீவிரவாதிகளுக்கு ஏன் போடவில்லை?

மேலும், பல இஸ்லாமிய அறிஞர்களும், தலிபான், லக்ஷரே-ஹிஜ்ப் முதலான ஈனர்களும் குரானை தானே சப்போர்ட்டாக காட்டுகிறார்கள்.

ஒவ்வொரு தற்கொலை படைக்காரனும் குரான் ஓதி வீடியோ எடுத்துக்கொண்டு ஏன் சாகிறான்? அதை பரப்பி ஏன் அவர்கள் அவர்களுக்கு தியாகி பட்டம் கட்டுகிறார்கள்? இவையெல்லாம், இந்து மத்த்தில் நடந்தால், அதற்கு இந்துக்கள் ஒவ்வொருத்தனும் பொறுப்புதான்.

////இங்கு வைக்கப்படும் விமர்சனங்கள் பல பதிவுகளில் வந்த புளித்துப் போன விசயங்கள்தான் அது எல்லோருக்கும் நன்றாக தெரியும் ! ////

எது புளித்துப்போன விஷயம்? விமர்சனங்கள் புளித்துப்போன விஷயம் என்றால், இஸ்லாமயிர்களின் இந்த பூச்சு வேலையும் புளித்துப்போன விஷயம்தானே?

நாளுக்குநாள் உலகம் முழுதும் பரவி வரும் தீவிரவாதம் தினசரி ப்ரம்மாண்டமாகி வருகிறதே, அது புளித்துப்போன விஷயமா?

முன்னெல்லாமாவது, தீவிரவாதம் ஒரு குறிப்பிட்ட பிரதேச பிரச்சனைக்ளுக்காக இருந்தது. இன்று ஒரு காரணமுமில்லாமல், Terror for terror sake என்று ஆனது ஏன்? இஸ்லாமிய தீவிரவாதம்தான் அதிகம் பரவி வருகிறது என்று உலகம் முழுதும் பயப்படுகின்ற இந்த வேளையில் தாங்கள் எப்படி பதைக்காமல் இப்படி சொல்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறது...

///இராமயணத்தில் சிறு அணிலின் முயற்சியும் போற்றப்பட்டது என்று நினைவு கொள்கிறேன் ////

இராமாயணத்தை அனாவசியமாக இழுக்க வேண்டாம். ஐயனின் வேலைக்கு துணை போனது அணில். அது பாராட்டு பெற்றது. ஐயனின் பேருக்கு எதிர்மறையாக ஆனது அனுமனின் கோரிக்கை (தேவியை தன் முதுகில் சுமந்து கரை சேர்ப்பதாக கேட்டது) இரண்டாவது, நிராகரிக்கப்பட்டது.

இதில் நீங்கள் எத்தனையாவது?

இதில் மேலும் நான் குறுக்கிட விரும்பவில்லை. தங்கள் கருத்துகளுக்கு நான் மிக மதிப்பு அளிப்பவன். தனிமெயிலில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜயராமன் said...
கண்ணன் சார்,

தங்கள் இஸ்லாமுக்கு கலர் பூசும் முயற்சி முற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். //

ஜயராமன் ஐயா ! மற்றவர்கள் போட்ட பின்னூட்டத்திற்கு நான் மறுமொழி இடவில்லை. காரணம் இருபக்க
மும் மறுமொழிகள் வந்து கொண்டிருக்கின்றன பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பூச்சு வேலையும் இல்லை ஏச்சு வேலையும் இல்லை. இந்து ஒருவர் எவரோ செய்யும் தவறுக்கு இந்துக்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா ? 'ஒரு இந்து வெறியன் பாதிரியார் குடும்பத்தையே உயிருடன் எரித்ததற்கு இந்துக்கள் எல்லோரும் தலை குனியுங்கள் ... உங்கள் மதம் கேவலமானது' என்று இரு கிறித்துவர் சொன்னால் உங்களாலும் என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது அல்லவா !

நான் தீவிரவாதிகளையோ, பாகிஸ்தானின் அடவடியையோ ஆதரித்து எழுதவில்லை! நம்பிக்கைகள் இரு நாட்டுக்கும் துளிர்க்க வேண்டும் என்று தான் வாஜ்பாய் அரசில் லாகூருக்கும் இந்தியாவுக்கும் பேருந்துகள் விடப்பட்டன .. நம் அத்வானியும் ஜின்னாவை காந்தியுடன் ஒப்பிட்டது போல் புகழ்ந்து வந்தார்.

முன்னோர்கள் காட்டிய வழியை நாமும் பின்பற்றலாம் என்று நினைத்திருந்த போது ... திரு எஸ்கே வைத்தக் கோரிக்கை போற்றக் கூடியதாக இருந்ததால் இந்தப் பதிவு எழுதினேன்.

கலர் பூசினேன் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் .. ஆனால் இது ரங்கோலி கலர்தான் இருமதமும் நாடும் ஒன்று சேருவதாக வாய்ப்பு வந்தால் நம் எல்லோரூமே கலர் பூசலாம் !

//இந்த பதிவுக்கான தங்களின் குறிக்கோள் என்னவாக இருக்கும் என்று இரண்டு விதமாக யோசித்தேன்.

முதலாவது, தங்கள் குறிக்கோள் உண்மையை தெரிந்துகொள்வதானால், தங்கள் பலத்தர விமர்சனங்களை பதிலளிக்க முன் வர வேண்டும். //

உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் ஒன்றைச் சொல்கிறேன் ...
இங்கு வைக்கப்படும் விமர்சனங்கள் பல பதிவுகளில் வந்த புளித்துப் போன விசயங்கள்தான் அது எல்லோருக்கும் நன்றாக தெரியும் ! அதுபற்றிய கேள்வி/பதில்களை பதிவுகளை நீங்கள் நிச்சயம் படித்திருப்பீர்க்ள் என்று நம்புகிறேன் !

//மாறாக, இரண்டாவதாக, தங்கள் குறிக்கோள் பூச்சுவேலை செய்து "எம்மதமும் சம்மதம்" என்று ஏற்படுத்த முனைந்தால், அதற்கு தாங்களின் இந்த பதிவு ஒரு நல்ல முயற்சி.//

இராமயணத்தில் சிறு அணிலின் முயற்சியும் போற்றப்பட்டது என்று நினைவு கொள்கிறேன் !

//ஆனால் என்ன! தற்போதைய நிலைமை இதற்கு சாதகமாய் இல்லை.

மீடியாக்களிலும் ஜனங்கள் மனத்திலும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது இஸ்லாம் என்கிற cult.//

அது ஒரு தோற்றம்தான் ... பெரிய உளவு அமைப்பை வைத்திருக்கும் இந்திய அரசே ஆக்கிரமிப்பு காஷ்மிருக்கு பேருந்து விட்டு நல்லிணக்கம் காண முயற்சிக்க்கும் போது ... வெறும் மேற்கத்திய மீடியா செய்திகளை வைத்து இஸ்லாமை விமர்சிப்பதில் ஒன்றுமே இல்லை!

//இந்த இஸ்லாமிய சட்டியிலிருந்து வீசும் "வாசனை" பத்திரிக்கைகளில் கொஞ்சம் தூக்கலாகவே அடிப்பதால், உள்ளே என்ன இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்குமோ என்று தோன்றுகிறது. //

இஸ்லாமிய சட்டியிலிருந்து பிரியானி வாசமும் வீசுகிறது ... கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் கலந்து கொள்பவர்களுக்கு இப்தார் விருந்தில் குறைவந்துவிடாது ! குறைவைக்க மாட்டார்கள்

//தை பிறந்து ட்ரை பண்ணி பாருங்கள். ஒரு வேளை, வழி பிறக்கலாம்.

நன்றி //

நிலவு தேய்ந்தாலும் வளராமலா இருக்கிறது ... நம்பிக்கைதானே வாழ்க்கை ... உலகம் !

உங்கள் வாழ்த்துக்களுக்கு
நன்றி திரு ஜெயராமன் அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜயராமன் said... இந்து யாராவது நான் "இந்து மதத்தின் பேரால்" கொலை செய்தேன் என்று சொன்னால், அதற்கு ஒவ்வொரு இந்துவும் பொறுப்பு.//

ஜெயராமன் ஐயா... !

எவனோ ஒரு மடையன் இந்து மதத்தின் பெயரால் நாம் எப்படி பொருப்பேற்றுக் கொள்ள முடியும் ?

நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை, அக்கரமத்துக்கு துணை போக என்னால் முடியாது :))


//சானியாவின் ஜட்டிக்கு ஃபட்வா போடும் முல்லாக்கள், தீவிரவாதிகளுக்கு ஏன் போடவில்லை? //

கோவிலுக்கு இப்படித்தான் செல்லவேண்டும் என்று நாமும் ஆகமவிதிகள் வைத்திருக்கிறோம் ... அவற்றை பெரும்பாலும் மதிக்கிறோம்! அவர்கள் மதத்தில் பெண்களுக்கான உடையென்று வைத்திருக்கிறார்கள். அதை வலியுருத்துகிறார்கள். பந்தாடும் சானியாவே மதக்கட்டுப்பாட்டை புறக்கணித்த போது ... மதம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியும் என்று எவ்வாறு கருதுகிறீர்கள் ?

பெயரில்லா சொன்னது…

கண்ணன் சார்,

என் பின்னூட்டத்தை காணோம். ஆனால், பதில் தெரிகிறது. இதை தொடர விரும்பவில்லை என்று சொன்ன பிறகும் மேலும் பதில் பொதுவாக நீங்கள் வைத்தது எனக்கு விளங்கவில்லை.

இருந்தாலும், தங்களின் பதில்கள் நல்ல நகைச்சுவையாக இருந்ததால் தங்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த பின்னூட்டம்.

தங்களின் "மத நல்லிணக்க" முயற்சி எந்தளவுக்கு சப்பைகட்டு கட்ட வைக்கிறது என்று பார்த்து ஆச்சரியம்?

சம்பந்தமில்லாமல் தாங்கள் பதில் சொல்லி எப்படியாவது சமாளிக்கிறீர்கள்...

/////

//ஜயராமன் said... இந்து யாராவது நான் "இந்து மதத்தின் பேரால்" கொலை செய்தேன் என்று சொன்னால், அதற்கு ஒவ்வொரு இந்துவும் பொறுப்பு.//

ஜெயராமன் ஐயா... !

எவனோ ஒரு மடையன் இந்து மதத்தின் பெயரால் நாம் எப்படி பொருப்பேற்றுக் கொள்ள முடியும் ?

=============

இந்து மத்த்தின் பேரால் நிகழும் அட்டூழியங்களுக்கு ஒவ்வொரு இந்துவும் தார்மீக பொறுப்பேற்றி அந்த கலங்கத்தை களைய வேண்டும் என்பதுதான் நான் சொன்னதன் பொருள். தீவிரவாத செயலுக்கு பொறுப்பேற்று சிறைக்கு போக வேண்டும் என்பதல்ல.

இது இஸ்லாமில் நடக்கவேண்டும். தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்க வில்லை என்று வெறுமனே மைக் போட்டு சொன்னால் போதாது.

லண்டன் ஏர்போர்ட் குண்டு வழ்க்கில் விசாரணையில் பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் பேரில் பணம் வசூல் செய்து அது தீவிரவாத்துக்காக உபயோகிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒரு சமுதாய அமைப்பில்லாமல் இது சாத்தியமா? இதில் இரண்டு பேர் சமீபத்தில்தான் இஸ்லாத்துக்கு மாறினார்களாம். இவர்களிடம் இஸ்லாத்தை பற்றி தீவிரவாதமாக சொல்லப்படவில்லை என்று சொல்கிறீர்களா?

////கோவிலுக்கு இப்படித்தான் செல்லவேண்டும் என்று நாமும் ஆகமவிதிகள் வைத்திருக்கிறோம் ... அவற்றை பெரும்பாலும் மதிக்கிறோம்! அவர்கள் மதத்தில் பெண்களுக்கான உடையென்று வைத்திருக்கிறார்கள். அதை வலியுருத்துகிறார்கள்.////

என்ன அபத்தம்? கோவிலுக்கு போகும்போது போடும் டிரஸ் வேறு. அதை இந்து மதம் டென்னிஸ் ஆடும்போது போட சொல்கிறதா? இது உளறல். மேலும், கோவிலுக்கு டிரஸ் என்று ஆகமத்தில் இல்லை. இதுவே அபத்தம். நீங்கள் சொல்ல வருவது என்ன?

இஸ்லாமியர்கள் டென்னிஸ் விளையாட மத உடை போட வேண்டுமா? இல்லை, இஸ்லாமியர்கள் டென்னிஸ் ஆடக்கூடாதா?

நன்றி

பெயரில்லா சொன்னது…

<<< கோவி.கண்ணன் said... பந்தாடும் சானியாவே மதக்கட்டுப்பாட்டை புறக்கணித்த போது ... மதம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியும் என்று எவ்வாறு கருதுகிறீர்கள் ? >>>

வாவ்... மிக அருமையான விளக்கம். நன்றி கோவி. கண்ணன் அவர்களே.

சமுதாயத்திற்கு கட்டுப்பட்ட மக்களுக்கே இந்த பத்வாக்களால் மதிப்பு இல்லாமல் போகும்போது, எதற்கும் கட்டுப்படாத தீவிரவாதிகளையா இந்த பத்வாக்கள் வழி நடத்தப்போகின்றது?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜயராமன் said...
கண்ணன் சார்,

என் பின்னூட்டத்தை காணோம். ஆனால், பதில் தெரிகிறது. இதை தொடர விரும்பவில்லை என்று சொன்ன பிறகும் மேலும் பதில் பொதுவாக நீங்கள் வைத்தது எனக்கு விளங்கவில்லை.
//

ஜெயராமன் சார்.. நீங்கள் ஆட்சேபித்ததை நீக்கிவிட்டு திரும்பவும் போட்டேன் ... அதனால் வரிசை மாறிவிட்டது !

பெயரில்லா சொன்னது…

//ஹிஜ்புல்லா என்றாலே "அல்லாவின் பார்ட்டி" என்றுதான் அர்த்தம். //

WHAT DOES IT MEAN FOR "SHIV SENA"?
WHAT DOES IT MEAN FOR "BAJRANGDHAL"?

ஒரு ஷிவ சேனாவின் குண்டர்கள் செய்த கலவரங்களுக்காக; சில பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் செய்த கற்பழிப்புகளுக்காகவும், கொடூர கொலைகளுக்காகவும் ஒட்டுமொத்த இந்துக்களையும் குறை சொல்வது எத்தனை அறிவீனமோ அத்தனை அறிவீனமே இஸ்லாமின் பெயரால் பயங்கரவாதம் புரிபவர்களை வைத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சொல்வதும்.


இஸ்லாம் பெயரில் தீவிரவாதம் செய்கிற வழி தவறியவர்களை ஒவ்வொரு சரியான முஸ்லிமும் கடுமையாகக் கண்டிக்கும் நிலையில் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக 'தீவிரவாதி'களாக மாற்றுவதன் பலனுக்காக யார் காத்துக் கிடக்கிறார்கள் என்பதை உண்மை அறியும் மனித உரிமை குழு அப்பட்டமாக ஆராய்ந்துச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் தலைமையகத் தாக்குதல் நாடகத்திலிருந்து அறியலாம்.

ஊடகத்தின் பலத்தால் உண்மையை ஒடுக்கி வைக்கிற சூழ்ச்சியும்; கற்பழிப்பையும் கொலையையும் 'தேசபக்த செயலாக' பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்துக்கொண்டே நியாயப்படுத்தவும் முனைந்தவர்களே முஸ்லிம்கள் மேல் ஒட்டுமொத்தமாக 'தீவிரவாத முத்திரை' குத்தவும் துடியாய் துடிக்கிறார்கள் என்பதிலிருந்து இதிலுள்ள அரசியல் விளங்காமலா போகும்?

(இப்போது ஒரு வேடிக்கையைப் பார்க்கலாம்: அதாவது, 'குத்தகை'தாரர்களிடமிருந்து கொப்பளித்து வரும் தேசபக்தியை. காலம், எல்லாம் காலத்தின் கோலம்).

பெயரில்லா சொன்னது…

//அவர்கள் நாட்டிலுள்ள பின்லாடனையும் தாவூத் இப்ராகிமையும் பாகிஸ்தான் என் இன்னும் பிடிக்கவில்லை?

ஒசாமை விடுங்கள் பொந்துக்குள் பதுங்கி வாழும் மிருகம் அது.

சகல் வசதிகளுடன் பங்களாவில் குடி குட்டிகளுடன் வசிக்கும் இப்ராஹிம்க்கு என்ன கேடு?

அவர்களை பிடிக்கட்டும் நன்றி எல்லாம் அதற்கப்புறம் தான் //

இதற்கு பாகிஸ்தானே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. இந்திய முஸ்லிம்களிடம் கேட்டுப் பலனில்லை.
ஒரு வேளை,அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்த திருவாளர் அரசியலாளருக்குத் தெரிந்திருக்கலாம்.
மேலும், அதே நியாய வெளிச்சத்தை நமது பக்கம் திருப்பினால் 'ரத்தம் ருசித்த' "மோடி" குழாமுக்கு நாம் இன்னும் நமது ஜனநாயக 'வழக்கமான' "ஒரு நாள் அடையாள தண்டனை" கூட கொடுக்கவில்லையே!

என்னைப்பொறுத்தவரை மோடியாக இருந்தாலும் பின்லேடனாக இருந்தாலும் ஒரே பார்வை தான் .

பெயரில்லா சொன்னது…

From Mr. izzath's blog:

இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்து கொண்டுஇருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு
இஸ்லாம் = பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் வெகுஜன ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தை பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாக செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன.
தற்கொலை தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக்கைதிகள் கொல்லப்படுவது, போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை ( சில மூடர்கள் விதி விலக்கு). உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத்துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்பு படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், பாக். கூலிப்படைகளால் நிற்க வைத்துக் கொல்லப்படும் காஷ்மீரி ஹிந்துவாகட்டும், வான் தாக்குதல் களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வலியும், வேதனையும், மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். காலம் காலமாக தொடரும் ஆக்கிரமிப்புகளும், திட்டமிட்ட அட்டூழியங்களும் தான் உலக தாதா அமெரிக்கா முதல் சிங்களப் பேரினவாத இலங்கை வரை உலுக்கியெடுக்கும் இன்றைய பயங்கரவாததின் ஆணி வேர். உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான தீவிரவாததாக்குதல்களில் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள் என்பது கசப்பான உண்மை. இதற்கு அடிப்படையான காரணம் தற்போதைய உலக சூழலில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகளும், படுகொலைகளும், அட்டூழியங்களும் பெரும்பாலும் நடப்பது இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான்.( உதாரணமாக பாலஸ்தீனம், செசன்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், காஷ்மீர்). எந்த இயக்கத்திலும் உறுப்பினராக இல்லாத பாலஸ்தீன இளம்பெண் ஒருவரின் கண் முன்னால் அவரது பெற்றோரும், சகோதரர்களும் துடிக்க துடிக்க இஸ்ரேலின் ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். இந்த வெறிச்செயலுக்கு பழி தீர்க்க வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளுக்காக மனித வெடி குண்டாக, தற்கொலை போராளியாக மாறுகிறாள் இந்த பெண். இதில் மதத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நியாயமான முறையிலான கோரிக்கைகள் ஏற்கப்படாதபோது போராட்டங்கள் நசுக்கப்படும்போது மனித உரிமைகள் மீறப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் ஆயுத போராட்டத்துக்கும் வன்முறைக்கும் தள்ளப்படுகிறார்கள்.( PLO, LTTE, HAMAS, IRA என நீள்கிறது இந்தப்பட்டியல்). ஊடகங்களாலும் அரசுகளாலும் பயங்கரவாதிகள் ஆக பார்க்கப்படும் இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் இந்தப் பிரச்னை பூமிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களால் போராளிகளாக போற்றப்படுகிறார்கள். ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் மத அடிப்படையில் பார்க்கப்படக்கூடாது. ஆக்கிரமிப்புகளுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக போராட முஸ்லீம்மாகவோ, ஹிந்துவாகவோ இருக்கவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த யாராக இருந்தாலும் கொல்லப்பட்டு வேரறுக்கப்படும்போது எதிர்த்துப்போராடுவார்கள். தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் ஆயுத போராட்டத்துக்கும் வன்முறைக்கும் தள்ளப்படுகிறார்கள். உலக அளவில் இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் தற்கொலை தாக்குதல்களும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கெதிராக நடத்தப்பட்ட மும்பை, கோவை குண்டு வெடிப்புகளும் மிகச்சரியான உதாரணங்கள். ஈழத்தில் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான LTTE ன் தற்கொலை தாக்குதல்களும், வடக்கு அயர்லாந்தில் IRA ன் தாக்குதல்களும், ஸ்பெயினில் தனி நாட்டுக்காக போராடும் ETA-ன் குண்டு வெடிப்புகளும், ஹிந்து பயங்கரவாதம், கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றா ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றது? ஈராக்கில் புஷ்ஷும், டோனி ப்ளேரும் நடத்தும் ஆக்கிரமிப்பு போரும், வான் தாக்குதல்களும், குண்டு வீசி குழந்தைகள் கொல்லப்படுவதும் கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றா கூறப்படுகிறது?ஆக இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் வன்முறைகள் தங்கள் சார்ந்த சமயங்களின் முத்திரை குத்தப்படாதபோது, மத அடையாளப்படுத்தப்படாத போது இஸ்லாமிய மக்களின் போராட்டங்கள் முஸ்லீம் பயங்கரவாதம் என்பதாக விஷ முத்திரை குத்தப்படுகிறது. இத்தகைய அவதூறுப்பிரச்சாரங்களையும், விஷக்கருத்துக்களையும் நடுநிலையாளர்களுடன் இணைந்து இஸ்லாமிய மக்கள் முறியடிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மேற்சொன்ன போராட்டங்கள் தவிர்த்து ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல் காய்தாவின் “உலகளாவிய இஸ்லாமிய அகிலம்” “(இஸ்லாமிய சர்வ தேசியம்)” என்கின்ற அதி விபரீதமான குறிக்கோளுக்காக எகிப்து, இந்தோனேஸியாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எல்லா முஸ்லீம்களாலும் முக்கியமாக சிறுபான்மை இந்திய முஸ்லீம்க வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று. (ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பது தனியாக கட்டுரையாக எழுதப் பட வேண்டிய விஷயம்) மதசார்பற்ற, ஜனநாயக அமைப்புமுறையின் அடித்தளத்துக்கு வேட்டு வைக்கும் இஸ்லாமிய சர்வ தேசியம் கோட்பாடு மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்தி வன்முறையை தூண்டி மதவெறிக்கு மக்களை காவு கொடுக்க வைக்கும் முயற்ச்சியாகும். இந்துத்வா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அகண்ட பாரதக் கனவின் இஸ்லாமிய வடிவமாக இருக்கும் அல் காய்தாவின் உலகளாவிய இஸ்லாமிய அகிலம் கோட்பாடு, ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையில் நம்பிக்கை கொண்ட உலகில் பல் வேறு நாடுகளில் வசிக்கும் முஸ்லீம் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.
அல் காய்தா போன்ற சிறு எண்ணிக்கையிலான மத அடிப்படை வாத இயக்கங்கள் கோடிக்கணக்கான உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகளும் அல்ல அவர்களின் சித்தாந்தங்களை பின்பற்றவேண்டிய கட்டாயமும் முஸ்லீம்களுக்கு இல்லை. இந்த இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு உலக முஸ்லீம்களின் அங்கீகாரமோ,ஆதரவோ இல்லாத போது இவர்களின் வன்முறை இஸ்லாமிய பயங்கரவாதம் என அழைக்கப்படக்கூடாது. ஏதோ முல்லா முஹமது ஒமரும், ஒசாமாவும் தான் உலக முஸ்லீம்களின் தலைவர்கள் போல மீடியாக்கள் ஒப்பாரி வைப்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இவர்களின் வன்முறை இஸ்லாமிய பயங்கரவாதம் என பொதுவான பதம் மூலம் தவறாக அடையாளப்படுத்தக்கூடாது. இவர்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய ர்களையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதற்கான வாய்ப்பை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. மத அடிப்படையிலான வன்முறை செயல்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல் வேறு நாடுகளில் இஸ்லாமிய மக்கள் மேல் மனித உரிமை மீறல்களுக்கும், தனி நபர்களை கண்காணித்து உளவு பார்ப்பதற்கும் வழி வகுத்தன. இப்போதைய சூழலில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டங்களும், அல் காய்தாவின் குண்டு வெடிப்பு தாக்குதல்களும் வெவ்வேறான நோக்கங்களுக்காக நடத்தப்படுபவை என பிரித்தரியப்படாமல் ஒட்டு மொத்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதாக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
பாலஸ்தீனம், செசன்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், இங்கெல்லாம் என்ன நடந்துகொண்டிருக்கின்றது, தினம் தினம் இம்மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன, மனித உரிமை மீறல்கள், வான் வழித்தாக்குதல்கள், மரணங்கள்,துயரங்கள் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டு ஏதோ பொழுது போக்கிற்காக இங்குள்ள இஸ்லாமிய மக்கள் தாக்குதல்களை நடத்துவது போல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளை பரப்புகின்றன. ஆனால் ஆக்கிரமிப்புகளும், படுகொலைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிரான மக்களின் எதிர்ப்புகளை மறைத்து விட்டு அடிப்படையான காரணங்களை மறைத்து விட்டு நுனிப்புல் மேய்கின்றார்கள் அல்லது செய்திகளை வடிகட்டி முஸ்லீம்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் ஊடகத்துறையில் உள்ளவர்கள். வாழ்வுரிமைப்போராட்டங்கள் ஏதோ சாதாரணமான சட்டம்- ஒழுங்கு பிரச்னையாக சித்தரிக்கப்படக்கூடாது.


அதிகரித்துவரும் இத்தகைய தாக்குதல்களின் ஊற்றுக்கண்களாக உள்ள கீழே பட்டியலிட்டுள்ள அடிப்படையான காரணங்கள் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும்
1.பாலஸ்தீனத்தில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் படுகொலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
2.செசன்யாவில் ரஷ்யாவின் அட்டூழியங்கள் முடிவுக்கு வருவது.
3.ஈராக் மேலாண ஆக்கிரமிப்பு விலக்கப்பட்டு அநியாயமான ஏகாதிபத்தியபோர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4.தீர்க்கப்பாடமல் இருக்கும் காஷ்மீர் பிரச்னை காஷ்மீர் மக்களுக்கு (இஸ்லாமிய + ஹிந்துக்கள்) நியாயமான ஏற்புடையதான சுமுகமான தீர்வு.

இடதுசாரி கம்யூனிச சித்தாந்தத்தை கண்டு அஞ்சிய மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுக்கு தற்போது இஸ்லாம் ஒரு மிகப்பெரிய சக்தியாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது. இஸ்லாத்தை எதிர்கொள்ள சதிகளும், மீடியாக்கள் மூலம் நடத்தப்படும் அவதூறுகளும், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அவர்களுக்கு தேவைப்படுகின்றது.உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் எதிர் கொள்ளும் இந்த அவலங்கள், மீடியாக்களின் அவதூறுகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால், இஸ்லாம் பயங்கரவாதத்தை போதிக்கும், ஆதரிக்கும் மார்க்கம் அல்ல என்பதை முஸ்லீம் அல்லாத ஏனைய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் அமெரிக்கா மற்றும் அதன் கைக்கூலிகளின் மக்கள் விரோத ,ஜனநாயக விரோத கொள்கைகள், ஆக்கிரமிப்புகள், படுகொலைகள், அட்டூழியங்களுக்கு எதிராகவும், அநியாயமான மக்கள் விரோத அரசுகளுக்கும், மத அடிப்படையில் வன்முறையை தூண்டும் இயக்கங்களுக்கு எதிராகவும் அகில உலகிலும் உள்ள உழைக்கும் இஸ்லாமிய மக்கள் புரட்சிகர, ,ஜனநாயக, மதசார்பில்லாத, மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்.

இந்தியாவில் பாப்ரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது, மும்பை, குஜராத் கோயம்புத்தூரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில் ஏராளமான முஸ்லிம்மகள் கொல்லப்பட்டது, இவை எல்லாம் இஸ்லாமிய இளைஞர்களை எதிர் தீவிரவாதத்தில் தள்ளிய முக்கியமான காரணங்கள். சரியான அரசியல் தலைமை வழி காட்டுதல் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதையே கொள்கையாகக்கொண்ட சுயநலம் பிடித்த அரசியல் கட்சிகள் ள் மூலமாக தங்கள் பிரச்னைகள் தீரும் என பாமர முஸ்லிம் மக்கள் நம்புகின்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இயக்கங்களின் தாக்குதல்களை முறியடிக்க அல் உம்மா, ஜிஹாத் கமிட்டி, SIMI, போன்ற எதிர் தீவிரவாத இயக்கங்களில் இணைந்து குண்டு வெடிப்புகள் நடத்துவதுதான் தீர்வு என குறைந்த எண்ணிக்கையிலான இஸ்லாமிய இளைஞர்கள் மிகத்தவறான வழியினை பின்பற்றுகிறார்கள். ஆக நிதர்சனம் என்னவென்றால் சிறுபான்மை எதிர் தீவிரவாத இயக்கங்களாலோ, அரசியல் கட்சிகளாலோ ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்கவோ, முறியடிக்கவோ முடியாது. மாறாக உழைக்கும் முஸ்லீம் மக்கள் இடதுசாரி, புரட்சிகர இயக்கங்கள், தலித் அமைப்புகள்,மனித உரிமை இயக்கங்கள்,ஜனநாயக, மதசார்பில்லாத சமுக நல இயக்கங்களுடன் ஒரு அணியில் திரண்டு நின்று தங்களை வேரறுக்க துடிக்கும் மத வெறியற்களை எதிர் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக மதவெறிக்கு எதிரான போராட்டத்தை சிறுபான்மை எதிர் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்து பரந்து பட்ட முஸ்லீம்கள் முன்னெடுத்துச்செல்லலாம். ஏனென்றால் பெரும்பான்மை மத வெறிக்கு எதிரான போராட்டமானது ஒன்று இரண்டு குண்டு வெடிப்புகளால் தீர்க்கப்படக்கூடிய பிரச்னை கிடையாது மேலும் வன்முறைக்கு எதிர் வன்முறை நிரந்தர தீர்வு அல்ல என்பதே உண்மை.
Thanks to: izzath.blogspot.com

பெயரில்லா சொன்னது…

//இவையெல்லாம் 'ஜிஹாத்' என்று சொன்னவர்கள் யாரய்யா? இவற்றில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் எவராவது, குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதால்தான் அவ்வாறு செய்தோம் என்று சொன்னார்களா?
//

சொன்னார்கள். உங்கள் அரேபியரிடையே புழங்கும் வீடியோக்களையும் சில தீவிரவாத இணயதளங்களையும் பாருங்கள் அவர்கள் இவ்வாறு தான் சொல்ல்கிறார்கள். அவர்களிடம் போய் நீர் முஸ்லிம் இல்லை என்று கூறும் கூறிப்பாரும் (வீ.பா. கட்டபொம்மன் ஸ்டைலில் படிக்கவும்). சும்மா முழு ஆட்டையும் பிரியாணியில் மறைக்கும் முயற்ச்சி வேண்டாம்

முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதே உண்மையான ஒவ்வொரு இந்துவின் கடமை என்று கொக்கரிக்கும் தொக்காடியாக்களுக்கும், குஜராத்தில் இனச்சுத்திகரிப்பு செய்த மோடிக்கும் வேதம் குர்ஆனல்ல என்பதை கால்கரி சிவா உணரவேண்டும்.

ஆம் அவர்கள் மனிததன்மை இல்லாதவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை

பாகிஸ்தானிலிருந்தும், பங்காளாதேஷ் இவற்றில் இன சுத்தி செய்தவர்க்கும் உங்கள் வேதம் குர்ரான் இல்லை என்று சொல்லுங்கள்

அப்படியே காஷ்மீரில் இனசுத்திரிப்புகளை செய்துக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளின் வேதமும் குரான் இல்லை என சொல்லுங்கள்

இன சுத்திகரிப்பு இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் மேலைநாட்டினரை நண்பராக கொண்டிருக்கும் அரபு நாடுகளின் வேதம் குரான் இல்லை என சொல்லுங்கள்.

அப்படியே உங்கள் இனம் தவிர உலகில் வேறு இனங்களும் உண்டு என்பதையும் அறியவும்

//உங்களுக்கும் எஸ்கேக்கும் கேட்கிறேன் அவர்கள் நாட்டிலுள்ள பின்லாடனையும் தாவூத் இப்ராகிமையும் பாகிஸ்தான் என் இன்னும் பிடிக்கவில்லை? ஒசாமை விடுங்கள் பொந்துக்குள் பதுங்கி வாழும் மிருகம் அது. சகல் வசதிகளுடன் பங்களாவில் குடி குட்டிகளுடன் வசிக்கும் இப்ராஹிம்க்கு என்ன கேடு?//

அதானே! தாவூத் இப்றாஹிமை ஒப்படைத்தால்தான் பாகிஸ்தானுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை என்று சொல்லாமல் முஷரஃபை ஆக்ராவிற்கு அழைத்த வாஜ்பாய் அரசுக்கு என்ன கேடு? அல்லது ஜின்னாவின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து புகழ்ந்து பேச அத்வானிக்குத்தான் என்ன கேடு? இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சிவா!

ஆம் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம்
(அதுசரி செத்தா சமாதி வைக்க மாட்டிங்க என சொன்னீங்க ஜின்னா என்னா ஸ்பெசலா?)

அப்படியே இமாம் என்ற கோமாளி சொன்ன 800 வருடங்கள் ஆண்ட நாம் மீண்டும் ஆளுவோம் என்ற ஆணவ வார்த்தைகளையும் சேர்த்தே எதிர்ப்போம் வாருங்கள். இந்தமாதிரி எல்லாம் பேசவேண்டும் என்று குரானில் சொல்லவில்லை அதனால் நீர் முஸ்லிமே இல்லை என இமாமிடம் போய் சொல்வோம்.

அதுசரி நான், தவறு செய்த அரேபியர்களைத்தானே திட்டினேன் வலைப்பதிவில் உள்ள எல்லா இந்திய-தமிழ் முகமதியர்கள் வந்து என்னை ஏசினேர்களே( இது எந்த பக்கதிலே உள்ள வசனங்கோ (கவுண்ட மணி ஸ்டைல் படிக்கவும்)) அதுக்கு என்ன அர்த்தம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said ...
கோவிக் கண்ணன்!கீழே நான் பட்டியலிடும் சில சம்பவங்கள... கோவிக் கண்ணன்!

கீழே நான் பட்டியலிடும் சில சம்பவங்கள் எந்த மதத்தில் நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆரோக்கியம், கால்கரி சிவா, புலிப் பாண்டி,ஜெயராமன்,சமுத்ரா போன்ற விபரம் அதிகம் தெரிந்தவர்களிடம் கேட்டு எனக்கு விளக்கம் அளித்தால் நானும் தெரிந்து கொள்வேன். //

திரு சுவனப்பிரியன் உங்கள் பின்னூட்டத்தில் கேட்கப்பட்ட சர்சைக் குறிய கேள்விகளை தயவு செய்து உங்கள் பதிவில் போட்டு கேளுங்கள்.

புலிப்பாண்டி அண்ணனும் இதுபோல் சில சர்சைக்குறிய விசயங்களை எழுதியிருந்தார் அவருக்கும் வருத்தம் தெரிவித்து பின்னூட்டத்தை நிறுத்தினேன் பார்த்திருப்பீர்கள் !

நான் இந்தப் பதிவை இட்டதற்குக் காரணம் எல்லோரும் ஒருவரை புரிந்து கொள்ளவேண்டு மென்பதற்காகத்தான்.
ஆனால் அதைவிட்டு இங்கு மதசர்சைகள் அதிகமாகிக் கொண்டே போவது வருத்தமளிக்கிறது.

புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் !

nagoreismail சொன்னது…

என் போன்ற முஸ்லீம்களை புரிந்து கொண்டதற்கும் மற்றவர்களுக்கு புரிய வைக்க முற்பட்டதற்குமே உங்களுக்கு வாழ்நாள் பூரா மட்டன் பிரியாணி சமைத்து (கடையில் வாங்கி அல்ல) கொடுக்கலாம். குடி வாசனை இல்லாத திராவிடனை சோம பானம் என்ற பெயரில் குடிகாரனாக்கி தன் கையில் இருந்த ஆடு மாட்டை திராவிடனிடம் கொடுத்து விட்டு திராவிடன் கையிலிருந்த ஆட்சி அதிகாரத்தை வாங்கி ஒற்றுமையா இருந்த மக்களுக்குள் மனுதர்மம் அது இதுன்னு தர்மத்துக்கு புளுகி பிரித்து வைத்தார்கள். சோமபானத்தில் பிரிந்தோம் நாம், வாருங்கள் மட்டண் பிரியாணியில் ஒன்று சேர்வோம். மனதார நன்றி வாழ்த்துக்கள். அ.முஹம்மது இஸ்மாயில்

மருதநாயகம் சொன்னது…

உண்மையான பதிவு. வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

நாகூர் இஸ்மாயில், மற்றும் மருதநாயகம் அவர்களே நன்றி !

//என் போன்ற முஸ்லீம்களை புரிந்து கொண்டதற்கும் மற்றவர்களுக்கு புரிய வைக்க முற்பட்டதற்குமே உங்களுக்கு வாழ்நாள் பூரா மட்டன் பிரியாணி சமைத்து (கடையில் வாங்கி அல்ல) கொடுக்கலாம். //

மட்டன் பிரியாணி ... :)
நான் சுத்த சைவம் ... சன்மார்க்க வள்ளலார் வழிநடப்பவன். பிரியாணி அதுவும் வாழ்நாள் முழுவதும் பிரியாணி ... நன்றி !
:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்