சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

1 ஜூன், 2012

ஷக்கலக்கா பேபி !

சீனமொழியை கற்றுக் கொள்ளும் எனது ஆர்வத்தில் கொஞ்சமும் தொய்வின்றி தொடர்ந்து கற்றுக் கொண்டுதான் வருகிறேன், சீனர்கள் மாண்டரின் மொழியில் பேசுவதில் ஏறக்குறையை 60 விழுக்காடு அவர்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு சீனமொழித்திறன் என்னுள் வளச்சி பெற்றுள்ளது. பேசுவது மட்டுமின்றி அம்மொழியை படிப்பதற்கும் கற்றுக் கொண்டால் ஒரளவும் முழுமை அடைய முடியும் என்று நினைத்து தற்பொழுது சீன எழுத்துகளையும் மனப்பாடம் செய்து வருகிறேன், சீன எழுத்துகளை மனப்பாடம் தான் செய்யமுடியும், ஏறக்குறையை 80,000 எழுத்துகளில் இன்றைக்கு செய்தித்தாளில் அல்லது அன்றாடம் எழுத்துப் புழக்கத்தில் பயன்படுபவை என்பதாக சுமார் 2000 சீன எழுத்துகள் வரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவை அனைத்தையும் சொல்குறியீடாக மனப்பாடம் செய்து கொண்டால் தான் சீன மொழியைப் படிக்க முடியும். சீன / கொரிய / ஜப்பானிய மொழியின் எழுத்துகள் தான் உலகிலேயே மிகுதியான எழுத்துகளைக் கொண்ட மொழி. கொரிய / ஜப்பானிய எழுத்துகளுக்கு சீனமொழி எழுத்துகளே அடிப்படை. இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பெரிய வேறுபாடு என்னவென்றால் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள வெறும் மூன்று மாதமே போதும் அதன் பிறகு தெரிந்ததை வைத்து நாம் மேலும் மேலும் குறிப்பிட்ட மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும், கூர்ந்த கவனிப்பும் ஆர்வமும் இருந்தால் ஆங்கிலம் உள்ளிட்ட மற்றொமொழிகள் பேச்சுவழக்காகவும் கற்றுக் கொள்ள முடியும், ஆனால் அவை அறிமுக மொழியாக கற்றுக் கொள்ளும் பொழுது ஓரளவு கற்றுக் கொள்ளவே ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகும்.

*****

இன்னிக்கு காலையில் சிங்கப்பூர் சீன வானொலி நிகழ்ச்சியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுவலகம் வந்தேன்,  ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் முதல்வன் படத்தில் சுஷ்மிதா சென் பாடும் பாடலாக வெளிவந்த ஷக்கலாக்க பேபி சைனீஸ் பாடல் வடிவில் ஒலிப்பரப்பானது. ஒரு தமிழன் இசையமைத்தப்பாடல் சீனமொழியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது பெருமையானது. சீனப்பாடலைக் காப்பி அடித்த ரஹ்மானின் இசை என்று யாராவது மாற்றி எழுதி இருக்கிறார்களா ? என்றுத் தேட, இணையத்திலும் அவ்வாறு இல்லை. இப்பொழுது தெரியவருவது போல் ஆண்டு தேதி வழக்குகள் முன்பு இல்லாததால் யாரை யார் காப்பி அடித்தார்கள் என்பதே தெரியாத நிலையில் உரியவருக்கானப் பெருமை என்பவையெல்லாம் வரலாறு எழுதுபவர்களின் கைகளில் தான் இருந்தது, பாட்டும் நானே பாடலும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே - என்கிற திருவிளையாடல் பாடலை இயற்றியவர் ஒரு இஸ்லாமியர் ஆனால் அது கண்ணதாசன் பாடல் என்று சொல்லப்படுகிறது. 'அசையும் பொருளும், இசையும் நானே.....' என்பது அப்பாடல்வரிகளில் ஒன்று இஸ்லாமியர்களின் இணை வைத்தல் பற்றிய கருத்து நாம் அறிந்தவை தான் என்பதால் ஒரு இஸ்லாமியர் கற்பனைக்கும் கூட அசையும் பொருள் எல்லாம் இறைவன் என்ற பொருள் தரும் (இறைவனுக்கு இணை வைக்கும்) வரிகளை எழுதி இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து, எனது கருத்து உண்மை இல்லை என்றாலும் கூட அதை ஒரு இஸ்லாமியர் எழுதினார் என்பதற்காக மற்ற இஸ்லாமிய பெருமைப்படும் வரிகளாக அதில் எதுவும் இல்லை என்பது அது குறித்து பெருமை பேசும் இஸ்லாமியருக்கான செய்தி. ஏ ஆர் ரஹ்மான் சம்பாதித்து போதும் இசை அமைப்பதை நிறுத்தலாம், இஸ்லாத்திற்கு துரோகம் செய்வதை ரஹ்மான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வாஹாபியர்களின் (கண்டனக்) குரலாக சுவனப்பிரியனே குரல் எழுப்பியுள்ளார். இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது என்கிற அடிப்படையில் அவர் ஏ ஆர் ரஹ்மானை ஏற்கனவே நிறைய சம்பாதித்திவிட்டார் இனி இஸ்லாமிய வளர்ச்சி பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துவிட்டு இசைக்க ரஹ்மான் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார் சுபி.


திரும்பவும் சக்கலக்கா பேபிப் பாடலுக்கு வருவோம் இந்தப் பாடல் சிங்கப்பூர் பாப் பாடகி ஒருவரால் பாடப்பட்டு ஆல்பமாக வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. யுடியூபில் இப்பாடல் காணொளியாகக் காணக்கிடைக்கிறது. சிலர் அப்பாடல் குறித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்தப்பாடல் முதல்வன் படத்துப் பாடல் பின்னர் ஏர் ரஹ்மானின் பாம்பே ட்ரீம்ஸ் இசைத் தொகுப்பில் (ஆல்பம்) இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார், விக்கிப்பீடியாவிலும் இந்தத் தகவல் உண்மை என்றே கட்டுகிறது, யூடியூபில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் ஒன்றில் இப்பாடல் கவனமாக ஏர் ரஹ்மான் பேரைத் தவிர்த்துவிட்டு மேற்கத்திய இசையில் பாம்பே ட்ரீம்ஸின் பாடல் பின்னர் முதல்வன் படத்தில் காப்பியடிக்கப்பட்டதாக ஒருவர் கருத்துவிட்டுள்ளார். பாம்பே ட்ரீம்ஸ் இசை அமைத்ததும் அதே தமிழனாக இருந்தாலும் அந்தப் பாடல் தமிழ் படத்தில் இடம் பெரும் முன் இந்திப்பாடலாக வந்ததுதான் என்பதாக மட்டம் தட்டியுள்ளனர். இப்படியெல்லாம் கூட தமிழனக்கு எதிர்ப்பு இருக்குமா ? வெறுப்பாக இருந்தாலும் வியப்பாகவும் இருக்கிறது. ஒரு தகவலை வெளி இடுபவர்கள் குறைந்தப்பட்சம் உண்மைத் தன்மை குறித்த எண்ணமே இல்லாமல் எழுதி-விடுகிறார்கள்.

நமக்கு தெரியும் அண்மைய காலத்திலேயே தமிழர்கள் குறித்த தகவல்கள் வரலாற்றில் திரிக்கப்படும் போது, நமக்கு தெரியாத காலத்தில் நடைபெற்றவற்றின் வரலாறுகளாகக் காட்டப்படுவதிலும் இருக்கும் உண்மைத் தன்மைகளை நாம் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம் என்பவை துரதிஷ்ட வசமானது :(

30 மே, 2012

கலவை 30/மே/2012 !

சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவில் கண்ணாடி கோவில் என்று ஒரு தனியார் (இராஜ காளியம்மன்) கோவில் உள்ளது, முழுக்க முழுக்க கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. சாலைக்கு தள்ளி 100 மீ தொலைவில் அமைந்திருக்கும் கோவிலை தொலைவில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன், இரண்டு வாரத்திற்கு முன் நண்பர்கள் இருவரின் விருப்பத்தினால் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஆன வண்ண வேலைப்பாடுகளால் இழைத்து வைத்திருக்கிறார்கள் கோவிலை. ஜோகூர் பாரு பகுதியின் அறிவிக்கப்படாத சிறிய சுற்றுலாத் தளம் போல் நிறைய பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர், அவர்களில் வெளி நாட்டினருக்கு 10 ரிங்கிட் நுழைவு கட்டணம் பெறப்படுகிறது. ஒரு மலேசிய இளம் சாமியார் அந்தக் கோவிலை உருவாக்கி அங்கு ஒரு ஆன்மிகக் குழுவை உருவாக்கி அந்த கோவிலில் அவர்களது ஆன்மிகம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்துகிறார். பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்திருந்தனர், ஆனால் மருவத்தூர் குரூப் கிடையாது. கோவிலுனுள் ஏசு, புத்தர், சாய்பாபக்கள் உள்ளிட்டோரின் வெள்ளை பலிங்கில் செய்த உருவச் சிலைகள் உள்புறச் சுற்றில் இருந்தன. ஜோகூர் செல்பவர்கள் ஒருமுறை சென்று பார்க்கலாம், அருகே இரயில் தண்டவாளம் கூட உண்டு.








*****

இரண்டு வாரத்திற்கு முன்பு சிங்கப்பூர் இலக்கிய வட்டம் சார்ப்பில் பட்டிமன்றம் நடந்தது, கண்ணகி மாதவி கற்பு பற்றிப் பேசாமல் கர்ணன் - கும்பகர்ணன் இவர்களில் தியாகி யார் என்று பேசிக் கொண்டு இருந்தனர். மகாபாரதம் முழுவதும் வந்து போகும் ஒரு பாத்திரத்தையும், இராமயணத்தின் இறுதியில் வரும் ஒரு பாத்திரத்தையும் ஒப்பிடுவதில் இருவருக்குமான ஒப்பிடத் தக்கப் போதிய தகவல் இல்லை என்பதால் கர்ணன் ஆதரவு மற்றும் கும்பகர்ணன் ஆதரவு இருவருமே கர்ணன் பற்றிய ஆதரவு எதிர்ப்பு விமர்சனங்களாகச் செய்து கொண்டு இருந்தனர். கடைசியாக தீர்ப்பை கர்ணனுக்கு ஆதரவாகச் சொல்லிவிட்டனர். கர்ணன் படம் மறு வெளியீடு செய்ததன் பலனோ. தலைப்புகளும் ஒப்பீடும் அபத்தமாக இருந்தாலும் பேச்சுகள் போரடிக்கவில்லை. என்னைக் கேடால் முதல்வர்களில் மோசமானவர் கருணாநிதியா, ஜெ-வா என்று பட்டிமன்றம் வைத்தால் பேச நிறைய தகவல்கள் இருக்கும்.

*****

இதுவும் இரண்டுவாரம் முந்தைய தகவல் தான், 2 வாரம் முன்பு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மோசமான சாலை விபத்து. 1.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி விலை உள்ள பெர்ராரி காரை மிக வேகமாக ஓட்டிவந்த ஒருவர் போக்குவரத்து விளக்கை மதிக்காமல் ஒரு வாடகைக் காரில் பலமாக மோத, பெராரி சொந்தக்காரர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார், வாடகை கார் ஓட்டுனர் வயது 52 மறுநாள் மருத்துவமனையில் இறந்து போனார், வாடகைக் காரில் பயணம் செய்த தற்காலிகமாக சிங்கப்பூரில் இருந்த ஜப்பானிய இளம் பெண் வயது 20 விபத்து நடந்த அரைமணி நேரத்தில் மாண்டு போனார், அந்த மோசமான விபத்தில் அந்த அதிகாலை நேரத்தைப் பயன்படுத்தி விபத்தில் சிக்கிய பெண்ணின் முனகளைப் பொருட்படுத்தாமல், அங்கேயே அவளது பொருள்களை ஒரு ஆடவர் திருடிச் சென்றாராம். சிங்கப்பூரில் கடந்தவாரம் முழுவதும் அந்த விபத்து பற்றி தான் எங்கும் பேச்சு. 1.4 மில்லியன் என்பது இந்திய ரூபாய் மதிப்புக்கு 5.88 கோடி. ஒரு நொடில் அவ்வளவு பணமும், மூன்று உயிர்களும் பாதிப்புக்கு உள்ளனது, விபத்தை நடத்தியவர் சீனாவில் இருந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்த ஒரு பணக்கார இளைஞன் (32 வயது) அவனுக்கு ஒரு 8 மாத கர்ப்பத்துடன் ஒரு மனைவியும், ஒரு 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்த விபத்து குடியினால் ஏற்பட்ட விபத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெராரி ஓட்டுனர் குடிந்திருந்தாராம்.


ஒரு நொடி விபத்தில் எப்படியெல்லாம் வாழ்கையே பறிபோகிறது என்பதைக் காட்டும் வீடியோ.

*****
நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் பற்றி முகநூல் மற்றும் சமூக இணையத் தளங்களில் சர்ச்சைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன, அந்த நிகழ்சியை நானும் பார்த்தேன், பவர் ஸ்டார் போலி கவுரவம் தெரிந்தது தான், நிகழ்ச்சியின் தலைப்பும் பேசு பொருளும் தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டு வந்திருந்தார். தான் அவமானப்படுத்தப் படுவோம் என்று கூட அவர் அறிந்திருக்கக் கூடும், கோபிநாத்தின் பேச்சுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. போலி கவுரவம் பற்றி பேசும் கோபிநாத் நடிகர் விஜயையும் அவருடைய அப்பாவையும் சிறப்பு விருந்தினராகக் கூட்டி வந்து அவர்களது கடந்த கால போலி கவுரவங்களையும் 'இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு இருப்பவர் உங்கள் விஜய்' பற்றிக் கேள்வி கேட்க முடியுமா ? 100 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தைப் புறக்கணித்த ஜெவின் போலி கவுரவம் பற்றி கோபிநாத்தினால் கேள்வி எழுப்ப முடியுமா ? முற்றிலும் தமிழில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு கோட் சூட் போட்டு நடத்திவரும் கோபிநாத்தின் கவுரவம் எத்தகையது ? அவரது உடைக்காகத்தான் நிகழ்ச்சி பேசப்படுகிறதா ? வேறொரு நிகழ்ச்சியில் பட்டிமன்றம் என்பது காலவதியான விவாத முறை என்றெல்லாம் கூட இவர் ஒருமுறை திருவாய் மலர்ந்திருந்தார், இவர் நடத்தும் நிகழ்ச்சி ரசிக்கப்படுகிறது என்பதற்காக பாரம்பரியமாக நடத்தி வரும் நிகழ்ச்சியை பற்றி காலவதியானவை, பழமையானவை என்று இவர் எந்த அடிப்படையில் பேசுகிறார் என்றே தெரியவில்லை, இன்றைக்கும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்திற்கென்றே பெரும் ரசிகர் கூட்டமே இருக்கின்றது. வளரும் நிலையில் கோபிநாத்தின் தான் தோன்றித்தனமான கருத்துகள் அவரின் வளர்ச்சிக்கு பின்னடைவே. கோபிநாத்தின் அத்தனை அவமானகரமான கேள்விகளுக்கும் கோபப்படாத பவர் ஸ்டார் இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் நுழைந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.

*****

இப்பெல்லாம் எங்க பையன் செங்கதிர் அடம் பிடிப்பதை நிறுத்த ஐபோன் கை கொடுக்கிறது ஆனாலும் அவன் மிகுதியாக அடம்பிடிப்பதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்துவிடுகிறது, ஒரு 20 நிமிடம் கையில் கொடுப்போம். தொடு திரையை நன்றாக கையாளுகிறான், பிடிக்காதவற்றை (பெரும்பாலும் ஐபோன் விளையாட்டுகளை) உடனேயே மூடிவிட்டு வேறொன்றை அழுத்தி எடுத்துக் கொள்கிறான், சிறிய குழந்தைகளும் பயன்படுத்தும் படி ஐபோன் அமைந்திருப்பது தான் அதன் வெற்றி என்றே நினைக்கிறேன், டாக்கிங் கலெக்சன் எனப்படும் பேசும் விலங்குகள், பறவைகள் ஆகிய விளையாட்டுகளை விரும்பி அதனுடன் பேசுகிறான். கண்ணுக்கு பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பதற்காக கொஞ்ச நேரத்தில் அவன் கையில் இருந்து பறித்து கையை வேகமாகச் சுழற்றி 'காக்காய் தூக்கிப் போய்விட்டது' என்று மறைத்துத்தான் பிடுங்க முடியும், அவ்வாறு செய்வதை கவனித்து வந்து ஐபோனுக்கு பெயர் 'காக்கா' என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான், எப்போதெல்லாம் போன் வேண்டுமோ அப்போது 'அப்பா காக்கா' என்று கேட்கிறான். செம அக்குறும்பாக இருக்கிறது. வேலைக்கு பிறகு மற்றும் வார இறுதிகளில் குழந்தையுடன் நல்ல பொழுது போக்கு.



28 மே, 2012

ஒரு இடைத்தேர்தலும் எதிர்கட்சி வெற்றியும் !


தமிழகத்தில் இந்தியாவில் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சியின் வெற்றி கணிக்க முடியாதது என்று சொல்ல ஒன்றும் இல்லை, கண்டிப்பாக ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் இதற்குக் காரணம் பணமழை மற்றும் வாக்களர்களுக்கு லஞ்சம் என்று சொல்லப்பட்டாலும், அடுத்து பொதுத் தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது என்பதும் பெரிதளவும் உண்மை. மீறியும் வாக்களித்தால் ஆளும் கட்சியின் சினத்துக்கு ஆளாகி தொகுதியின் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடும் என்று மக்கள் கருதுவார்கள், இப்படித்தான் ஆளும் கட்சிகள் வெற்றிபெறுகின்றன அத்தகைய வெற்றி நல்லாட்சி நடைபெற்றதற்கான வெகுமதி என்று ஆளும் கட்சி வெளியே பெருமையாகக் கூறிக் கொள்ளும், தொடர்ந்து இடைத்தேர்களில் இமாலய வெற்றி பெறும் எந்தக் கட்சியும் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு இல்லாததால் ஆளும் கட்சியின் தற்பெருமைகள் மிகவும் நாடகத்தனமானது என்பதை அரசியலே அறியாத வாக்காளர்களும் உணர்ந்து தான் உள்ளனர்.

இடைத்தேர்தல் என்பதே அரசின் பணவிரயமும், பொது மக்களின் நேரவிரயமும் தான் எதிர்கட்சியினரின் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தல் அந்தக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இழப்பு என்பதைத் தவிர வேறெதும் இழப்பு இல்லை. இடைத்தேர்தல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை, கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றி என்பவை கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தான், தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றிபெறுபவர்கள் இல்லை எனும் போது தேர்தல் ஆணையம் புதிதாக தேர்தல் நடத்தாமல் வெற்றிபெற்ற கட்சியினர் பரிந்துரை செய்யும் வெறொருவருக்கு பதவியைக் கொடுத்துவிடலாம். எல்லாவற்றையும் முறைப்படுத்த முயலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான விதிகளை அமைத்தால் நல்லது, கட்சி சார்பில் போட்டியிடும் வாக்களர் வெற்றி தனிப்பட்ட வெற்றியாக கருதப்படாது கட்சி விரும்பினால் எவரையும் மாற்றிக் கொள்ள முடியும் என்ற அறிவித்தல் இருந்தால் இடைத்தேர்தல் செலவுகள் பெரிதாகக் குறைக்கப்படும். இதில் இருக்கும் சிக்கல் குறிப்பிட்ட வெற்றிபெற்ற வேட்பாளரை கட்சி சுதந்திரமாக செயல்படவிடாமல் 'மாற்றிவிடுவேன்' என்கிற மிரட்டல் இருக்கும் என்பது உண்மை தான். தொகுதி மக்களுக்கே பிடிக்காதவரை கட்சி பரிந்துரைத்தாலும் அவர்களின் பதவிகாலம் ஐந்தாண்டுக்கு குறைவே தவிர பிடிக்காதவரை பரிந்துரைத்த கட்சியை மக்கள் மீண்டும் ஆதரிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தல்களை தவிர்க்க முடியும்.

******

சிங்கப்பூரில் சென்ற சனிக்கிழமை ஒரு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது, அந்த தொகுதி வழக்கமாக கடந்த 20 ஆண்டுகளாக எதிர்கட்சியே வெற்றிபெரும் தொகுதி. தொகுதியை வென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தை ஒழுங்கீனம் காரணமாக கட்சி அவரை பதவி விலகச் சொல்லியது. இதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. ஆளும் கட்சியின் பெரும் குறையான அந்தத் தொகுதியை மக்கள் அதிருப்தியின் காரணமாக வென்றுவிடமுடியும் என்று நம்பியது. ஆனாலும் வெறும் மூன்று விழுக்காட்டு வாக்குகளே ஆளும் கட்சிக்கு கூடுதலாக கிடைக்க எதிர்கட்சி அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.
இதெல்லாம் தமிழகத்தில் இந்தியாவில் நடக்க வாய்ப்பிருக்கிறதா ?

இடைத்தேர்தல் என்றாலே முதலமைச்சர், அமைச்சர், அரசு அலுவலர்கள் என அனைத்து அரசு எந்திரங்களும் ஆளும் கட்சிக்கு பம்பரமாகச் செயல்பட எதிர்கட்சி இடைத்தேர்தலில் வெல்வது கனவிலும் நடைபெறாத ஒன்று. சிங்கப்பூர் ஜெனநாயகம் பற்றி உலக நாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் பொது மக்களை பயமுறுத்தி அல்லது எதிர்கட்சியை முடக்கி தேர்தலில் வென்றுவிடலாம் என்று அவர்கள் முயற்சிப்பது கிடையாது காரணம் உண்மையான ஜனநாயகம் இருந்தால் ஆளும் கட்சி மீது எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை இருக்கும் என்று நினைக்கிறார்கள், இந்த நம்பிக்கை இல்லாமல் செயல்படும் தமிழக, இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வெறும் பிம்பங்களை ஏற்படுத்திவிட்டு அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வரிசையில் அமர்கிறார்கள், சில ஆளும் கட்சிக்கு அந்த வாய்ப்புக் கூட கிட்டாமல் போய்விடுகிறது.

மக்களாட்சியில் அரசு என்பது மக்களுக்கான சேவை நிறுவனங்கள் என்பதை மறந்து ஆளுமை செலுத்தும் மன்னராட்சி அமைப்பாகவும், அதன் பதவி இன்பங்கள், பிற் சலுகைகள், ஆட்சியில் இருக்கும் வரை விஐபி மதிப்பு இவைகளினால் ஆளுமைப் போட்டி என்ற அளவில் அரசியல் கட்சிகள் முனைந்து செயல்படுகின்றன. இவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது கிடையாது, பதவியில் இருக்கும் வரை தனிவிமானங்களில் நாடுகளைச் சுற்றிப் பார்த்து இராஜ மரியாதைகளைப் பெற்று சுகபோக வாழ்கை வாழ்ந்துவருகிறார்கள், இவர்களை ஒப்பிட மன்னர் ஆட்சி முறைகளே தேவலாம், அதில் அதிகார வர்க்கம் என்று ஒன்று தான் இருக்கும், ஆனால் மக்களாட்சியிலோ வருண பேதம் போன்று அடுக்கடுக்கான அதிகார அமைப்புகள். ஜென நாயகம் என்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அமைப்பிற்கெல்லாம் தலைமையானது என்று சொல்லும் படிதான் நடந்து கொள்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் மக்கள் ஆட்சிகள் நம்பிக்கையற்றவையாகும் காலம் தொலைவில் இல்லை.

ஜைனப்புக்கு இறை அச்சம் இல்லையாம் !


மணவிலக்கு என்பது மனித உரிமை. மனித பண்பு நலன் போற்றப்படுகின்ற சமூகத்தில் அவற்றைக் காப்பதற்கு மணவிலக்குகள் இன்றியமையாதவை. மனித திருமண பந்தம் என்பது விரும்பிய வாழ்க்கை என்பதைவிட வெறுக்கத் தக்க வாழ்கை இல்லை என்ற அளவில் அந்த பந்தம் அறுபடாமல் தொடர்கிறது, மண வாழ்க்கை வெறுப்பாகவும், சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தொடரும் போது வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மணவாழ்க்கை கசப்பாக இருந்தாலும் அவை தொடருகின்றன. வாரிசுகளுக்காக சகித்துக் கொள்ளுதல் என்பதில் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான், ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையும் இன்றியமையாதது என்பதில் வாரிசுகளின் நலன் இரண்டாம் இடத்திற்கு செல்லும் போது மணவிலக்குகள் நடைபெறுகின்றன. தனிமனித நலன் என்று பார்க்கும் போது இது தவறு இல்லை. பிரச்சனை முற்றும் போது பொறுக்கமுடியாமல் என்றோ ஒரு நாள் கொலை / தற்கொலை என்னும் போது பாதிக்கப்படாத வாரிசுகள் மணவிலக்கினால் பாதிக்கப்பட்டுவிடுவார்களா ? என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் மணவிலக்கு பற்றிய முடிவின் போது வாரிசுகள் பற்றிய கேள்விகள் பின்னுக்கு தள்ளப்படும்.

நண்பர் சுவனப்பிரியன் 'விவாகரத்தில் முதல் 10 இடத்தை பெற்ற நாடுகள்' என்று ஒரு பதிவை இட்டு அதில் இஸ்லாமிய நாடுகளின் பெயர்கள் இல்லை என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். முதலில் மணவிலக்கு செய்யப்படும் நாடுகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன என்பதை இவர் புரிந்து கொண்டு இருக்கிறாரா என்றே தெரியவில்லை, இரண்டாவதாக மணவிலக்கு குறைவாக உள்ள நாடுகளில் மணவிலக்கு செய்துவிட்டு தனித்து வாழும் ஒரு சூழல் இருக்கிறதா என்று இவர் ஆராய்ந்து பார்த்தாரா என்றும் தெரியவில்லை, இவர் குறிப்பிடும் சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் ஒரு பெண் தனித்து வாழவே முடியாத நிலையில் ஆணைச்சார்ந்து வாழும் வாழ்கை என்பதில் மணவிலக்குகள் நடைபெற சாத்தியமே இல்லை என்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணிகள் இருக்க முடியும் கணவன் நான்கு திருமணம் செய்து கொண்டாலும் தலையிட முடியாத நிலைதான் முதல் மனைவியின் நிலை. இதில் அவள் எங்கிருந்து மணவிலக்கை நினைத்துப் பார்ப்பாள் ? பொருளாதாரத்திற்கு ஆணைச் சார்ந்திருக்கும் அடிமைகளாக பெண்கள் இருக்கும் சமூகத்தில் மணவிலக்கு குறைவாக இருக்கும், ஆனால் கள்ளத் தொடர்புகள் உள்ளிட்ட மற்ற தற்சமூக சீர்கேடுகள் மிகுதியாக இருக்கும். வெளி உலகுக்கு கட்டுப்பட்டவர்களாக காட்டப்படுபவர்கள் கட்டி வைத்து தான் காட்டப்படுகிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்றா ?

கள்ளத் தொடர்புகள், நம்பிக்கை துரோகம், அடித்து துன்புறுத்தி (இஸ்லாம் கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று உரிமை வழங்கியுள்ளது, அந்த லேசாக என்பதைக் குறித்த அளவுகளையெல்லாம் பெண் பிள்ளைப் பெற்ற அப்பனைத் தான் கேட்கவேண்டும்) வைத்திருத்தல், கொலை, தற்கொலை இவற்றையெல்லாம் விட ஒத்துவரவில்லை என்றால் மணவிலக்கு பெற்று பிரிந்து போவதில் என்ன பெரிய தவறும், சமூகக் குற்றமும் இருக்க முடியும் ?

மணவிலக்கு என்பது சமூக சீர்கேடாகவும், மேற்கத்திய கலாச்சார நுழைவு என்று காட்டப்படுவதன் காரணம் என்ன ?

நடுத்தர வர்க்கம் என்னும் ஒரு போலி சமூகம் உருவாகாத காலத்தில் மணவிலக்குகள் மிகச் சாதாரணமானவையே, ஒரு ஆலமரத்தடியில் நாட்டமையின் தீர்ப்பாக 'வெட்டி விடுதல்' நடைபெறும். ஆண் மற்றும் பெண்ணுக்கு உழைப்பு இன்றியமையாததாக இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுதல் என்பது குடும்பம் என்னும் ஒரு அமைப்பில் இருவரும் வாழ்ந்து சந்ததிகள் பெருக்கிக் கொள்ளத்தான் என்பதன் புரிந்துணர்வு இருந்தது, ஒருவருக்கு ஒருவர் ஒத்துவரவில்லை என்றால் ஒரே நாளில் பிரிந்து போய்விடுவார்கள், அவர்களுக்கு மறுமணமோ, விரும்பியவருடன் வேறொரு வாழ்கையோ நடைபெற்று தான் வந்ததன. இன்றைக்கும் கிராமங்களில் இருந்து நீதிமன்ற வழக்காக மணவிலக்கு வழக்குகள் செல்வது கிடையாது. இன்றைக்கு நடுத்தரவர்கம் என்னும் போலி சமூக வர்க்கமும் உருவாகிய பிறகு மணவிலக்கு என்று பேசுவதே பாவம், கெடுதல், கலாச்சார சீர்கேடு என்பது போன்ற கருத்துகள் பரவலாகப்பட்டன. நடுத்தர வர்க்கத்து கனவுகள் தான் இன்றும் திரைபபட வடிவமாக முன்வைக்கபடுகின்றன, நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியில், தனி மனித உரிமை என முன்னேறி மேல் தட்டு நிலையை அடையும் போராட்டம் நடந்தே வருகிறது. தனக்கும் கீழாக இருக்கும் கீழதட்டு மக்களை பின்பற்றி மணவிலக்கு செய்து கொள்கிறார்கள் என்று சொல்வது கூட தம்மை தாழ்வானதாக்கிவிடும் என்று கருதும் நடுத்தரவர்க்கம், அதனை ஞாயபடுத்தி அதே சமயத்தில் பட்சாதாபம் ஏற்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து தம் சமூகத்தைக் கெடுத்துவருவதாக புலம்பிவருகிறது. ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி அந்த சமூகத்திற்கு பிற சுதந்திரங்களையும் சலுகைகளையும் வழங்கிவிடும் அவற்றில் ஒன்று தான் ஒத்துவராத திருமண பந்தங்களை விலக்கிக் கொள்ளும் உரிமை.

மணவிலக்கிற்கும் இறை அச்சத்திற்கும் என்ன தொடர்ப்பு ? அடி உதை வாங்கிக் கொண்டு திருமண பந்தம் தொடரப்பட வேண்டும் என்பது தான் இறை அச்சங்கள் சொல்லும் தீர்ப்பா ? வஹாபிய விளம்பர விளம்பி திரு சுவனப்பிரியன் இவ்வாறு தான் கூறுகிறார். அதாவது இறை அச்சம் மிக்க இஸ்லாமியர்களிடமும் இஸ்லாமிய நாடுகளிலும் மணவிலக்கு குறைவாம் நல்ல வேளை இல்லவே இல்லை, இஸ்லாம் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி என்று சொல்லாதவரை. இவர் வாதம் காலில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருக்கும் 'பீ' நாறாது, இருந்துவிட்டு போகட்டும். ஒருவேளை 'தலாக் தலாக் தலாக்' சொல்வது மணவிலக்கு ஆகாது என்று கருதுகிறாரோ.

இறை அச்சம் மணவிலக்கு வேண்டாம் என்று சொல்கிறதா ?

இஸ்லாமியர்களின் ஹதீது அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றும் அவர்களால் இஸ்லாமிய அன்னையர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜைனப்(ரலி), இவர் முகமதுவின் வளர்ப்பு மகன் ஜையதுவின்(ரலி) மனைவியாகவும் வாழ்ந்தார். பின்னர் மணவிலக்கு பெற்று முகமதுவிற்கே மனைவி ஆனார், அதை ஞாயப்படுத்த அல்லாவே தனிக் குரானெல்லாம் இறக்கி இருக்கிறார். அதில் கூட இறை அச்சம் இல்லாதால் ஜைனப் மணவிலக்கு பெற்று முகமதுவை மணந்து கொண்டார் என்று சொல்லபடவில்லை, பிறகு எப்படித்தான் சுவனப்பிரியர் மணவிலக்கிற்கும் இறையச்சத்திற்கும் முடிச்சுப் போடுகிறார் என்றே தெரியவில்லை, இதை ஒத்து ஓத நான்கு வகாபிகளின் பின்னூட்டம் அதில் என்னை இழுத்து நக்கல் வேறு அடித்து இருக்கிறார்கள்.

பட்டப் பகலில் பூனை கண்ணை மூடாவிட்டாலும் பூளோகத்தின் மறுபகுதி இருட்டாகத்தான் இருக்கும், 

Malaysian Muslim Divorce Rate Up: Muslim Couple Splits Every 15 Minutes



என்னைப் பொருத்த அளவில் இந்தத் தகவல் மலேசியாவில் மனித உரிமைகளை மதிப்பதில் வளர்ச்சி கண்டுவருகிறது. குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பில் இருப்பதால் அவர்களால் பொறுத்தமற்ற மணவாழ்கையை உதறிவிட முடிகிறது என்று கருதுகிறேன். 

பின்குறிப்பு : இதை நான் மதவாதமாகவோ , மதம் சார்பிலோ, அல்லது குறிப்பிட்ட மதத்தை தாக்க வேண்டும் என்றோ எழுதவில்லை, அடிப்படை வாதிகள் சமூகக் கருத்தை திணிக்கும் போது அவற்றிற்கு பதில் சொல்வது 1400 பழமை வாத சிந்தனைகளை நீர்த்துப் போக வைக்கும் என்கிற நம்பிக்கையால் எழுதுகிறேன். எனது இடுகைகளில் கண்டிப்பாக புதிய சிந்தனைகளுக்கு ஓரிருவரிகளாக வாய்பளிக்கும், இதை எதோ சுவனபிரியனுக்கு எழுதிய எதிர்பதிவாக நினைக்க வேண்டாம். சுவனப்பிரியன்கள் போன்றோர் வலைப்பதிவுகள் எழுதாமலும் இருப்போர், அவர்களும் ஆதரங்கள் இன்றி விவாதிக்கும் போது இதை எடுத்துச் சொல்லுங்கள். 

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயக்கப்பட்டால் மறுமணங்கள் எங்கு நிச்சயக்கப்படுகின்றன ?

25 மே, 2012

மேம்பட்டுவரும் திருநங்கைகள் சமூகம் !


ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் எனது வலைப்பதிவு பற்றி குறிப்பிட்டு இருந்த போது திருநங்கைகள் குறித்து நான் எழுதி இருந்ததன் வரிகள் இடம் பெற்றிருந்தன.  

"உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர், திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்"

கூத்தாண்டவர் திருவிழாவில் கூடும் திருநங்கைகளை கேலிப் பொருளாக பார்த்துவரவும், அவர்களிடம் சில்மிசம் செய்யவும் செல்வோர்கள் அதிகம். இத்தகைய அவமான அங்கீகாரம் தவிர இந்து மதம் சார்பில் திருநங்கைகளுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

திருநங்கைகள் குறித்த பல்வேறு தரப்பினர்கள் கூறும் கருத்துகள் கவனமாக படிக்கப்படுகிறது என்பதைத்தான் ஆனந்தவிகடனில் அந்த தகவல் இடம் பெற்றிருந்த போது தெரியவந்தது. பாதிரியார் ஆன திருநங்கை யார் அவர் பெயர் என்ன, எந்த சூழலில் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது  போன்ற தகவல்கள் அந்தப் பதிவை  எழுதும் போது எனக்கு கிடைக்கவில்லை, நேற்று விஜய் தொலைகாட்சியில் 'குற்றமும் பின்னனியும்' என்ற நிகழ்சியின் இரண்டாம் பாகமாக பாதிரியார் ஆன திருநங்கையைப் பற்றீய தகவல்களை, அவரது பேட்டியுடன் கொடுத்தனர், இவற்றைக் காட்டவேண்டிய நிகழ்ச்சியின் பெயர் சற்று உறுத்தல் என்பது தவிர்த்து, அது பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்பதால் அதில் அந்தத் தகவல் வந்திருந்தது பலரை அடைந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 'பாரதி ராஜா' என்ற பெயரில் ஆண் குழந்தையாகப் பிறந்து வழக்கம் போல் திருநங்கைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளால் தன்னை ஒரு பெண்ணாக நினைக்கத் துவங்கி பல்வேறு சிக்கல்கள், குடும்பத்தினரின் வெறுப்பு, கோபம் ஆகியவற்றை எதிர்நோக்கத் திறன் இல்லாமல் சென்னைக்கு வந்து பிற திருநங்கைகளுடன் சேர்ந்து கடை கேட்கும் (கை தட்டி பிச்சை எடுத்தல்) செய்து வந்தாராம், அதில் ஏற்பட்ட அவமானங்கள் 'எவ்வளவு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு இவ்வளவு அவமானமா ?' கூனிக் குறுகி தத்தளிக்கும் போது, சமூக ஆர்வலர் மூலமாக ஒரு கன்னியாஸ்திரி அறிமுகமாக அவர் வழியாக கிறிஸ்துவ சமய்ப் படிப்பைப் மதுரையில் தங்கிப் படித்துவிட்டு. அவரின் பரிந்துரையின் மூலமாக செங்கல்பட்டு கிறிஸ்துவ சமய ஆயர் என்னும் பதவியைப் பெற்று இறைப் பணி செய்துவருகிறார்.

நேற்று அவர் பேட்டியைப் பார்க்கும் போது அவருடைய கண்ணில் அதன் பெருமிதம் தெரிந்தது, மறைவாக பாலியல் தொழில் அதில் அடி உதை, பொய் வழக்கு, பாலியல் நோய், கடன், கொலைகள் என்பதாகத்தான் அவரைப் போன்ற மற்ற திருநங்கைகளின் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது என்பதைப் நினைக்க அவரது பெருமிதத்தின் மீதான பொருள் ஆழமாக விளங்கியது.

பாரதி பாதிரியாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாரதியை ஒரு பெண்ணாகவும், மதபோதகராகவும் பார்த்து மிகவும் மரியாதையாகவே நடத்துகின்றனர் என்பதையும் நிகழ்ச்சியில் காட்டினார்கள், 'என் தம்பி தனது திருமணத்திற்கு வரக்கூடாது என்று கூறினான், ஆனால் இன்றோ என் தலைமையில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன, இது எனக்கும் திருநங்கைகள் சமுகத்திற்கும் பெருமையானது' என்று கூறினார் பாரதி.

ஆண் உடல் வலிவும் பெண் மனமும் இருப்பதால் அவர்களால் பண்பாட்டு கலைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும். ஆனால் சமூகம் தான் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிவிட்டு தொடர்ந்து அவமானமும் படுத்துகிறது. ஆண் பெண் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இவர்களால் செய்ய முடியும், தலைமை ஏற்கவும் முடியும். அவர்களை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பது அவர்களுடைய பெற்றோர்களும், பின்னர் சமூகமும் தான். பாரதி மூலமாக திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கையும், பொதுமக்களுக்கு மாற்றுப் பார்வையும், அவர்களை சமூகத்தின் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் வாய்க்கும் என்றே தெரிகிறது, இது ஒரு நல்ல முன்னோட்டம். ஆனால் இதையும் மதப் பிரச்சாரத்திற்கு திருநங்கையை வளைத்த கிறிஸ்துவம் என்று தூற்றி அவர்களை இழிவுப்படுத்தத் தான் முயல்வர். ஏனென்றால் மதவெறி மனிதாபிமானங்களை என்றுமே மதித்தது இல்லை, இதைவீடக் கொடுமையானது இஸ்லாமிய சமூகம் திருநங்கைகள் முற்றிலுமாகவே நிராகரிக்கிறார்கள், வெறும் நம்பிக்கை தான் என்றாலும் ஆதாம் ஏவாள் இல்லாமல் தனித்து உருவாக்கப்பட்டது அவனுள் சரிபாதி பெண்மை இருந்தது, திருநங்கையாக இருந்தான் என்றாவது ஒப்புக் கொண்டால் திருநங்கைகள் பற்றிய தெளிவாவது கிடைக்கும். சிந்திப்பவர்களுக்கு இதில் நல் அத்தாட்சி இருக்கிறது என்று கூறி இதை நான் மத அரசியலாகத் தொடரவிரும்பவில்லை, 

தகவலின் சாரம் திருநங்கைகளை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே, அவர்கள் முன்னேற்றம் தொடர்வது சமூகம் தன்னை மாற்றிக் கொண்டு இருப்பதன் அடையாளமாகத் தெரிகிறது. ஆஷா பாரதி, நர்தகி நட்ராஜ், லிவிங்க் ஸ்மைல் வித்யா, சிஙகப்பூரில் ஒரு குமார், இப்படிக்கு ரோஸ் என்று திருநங்கைகள் பிரபலங்களாக வளர்ந்துவருகிறார்கள், அவர்களுக்கு மகுடம் வைத்தது போல் பாதிரியாராக பாரதி. தமிழ் சமூகம் நாட்டிலேயே முன்னோடியாக திருநங்கைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருப்பதால் பண்பாட்டு வளர்ச்சியில் நாம் முன்னோடி என்பது நமக்கு பெருமையானது. நல்வாழ்த்துகள்


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்