பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2022

FeTNA வாங்கிய குட்டு

FeTNA எனப்படும் வட அமெரிக்க தமிழ் சங்கம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது, இந்த அமைப்பு அங்குள்ள தமிழர்களுடன் இணக்கமாக இருக்கவும் தாய் தமிழ்நாட்டுடன் தொடர்பை காக்கவும் உருவாக்கப்பட்டது, தொண்டு நிறுவனமாகவும் செயல்படுகிறது, அங்கு நடைபெறும் ஆண்டுவிழாக்களில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தமிழறிஞர்களை, திறனாளர்களை அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பயணத்திற்கான அவர்களது முழுச் செலவையும் ஏற்று, அழைத்து பேச வைப்பது, நிகழ்ச்சி படைப்பது வழக்கம். இது அங்கு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும், இணைய தளமும் செயல்படுகிறது.

அங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் கல்வெட்டு என்கிற பலூன் மாமா என்ற நண்பர் அண்மையில் அந்த இணைய தளத்தை பார்வையிட்ட போது அதிர்ச்சி அடைந்தார். நண்பர் முற்போக்கானவர், தமிழ் அறிவியல் என்ற பெயரில் அந்த அமைப்பு வெளியிட்ட நூல் இணைய பக்கத்தில் இருக்க, அதைப் படித்தும் மிகுந்த கவலைக்குள்ளானார். 

வாட்சப் பார்வேர்டுகளாக வரும் இந்து புராணக் கதைகளை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் கற்பனையாக எழுத்தப்பட்டவை தமிழ் அறிவியல் என்ற பெயரில் புத்தகமாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை படிக்கும் அங்குள்ள இளையர்களுக்கு எந்த ஒரு ஆய்வும், அறிவியில் அமைப்புகளில் சான்றிதழோ பெற்றிருக்காத வெறும் கற்பனையாக எழுதப்பட்ட இந்த சோடிப்புகள் இளையோர் மூளையை மழுங்கடிக்கவோ செய்யும். அதை விரும்பியவர்கள் படிக்கட்டுமே உங்களுக்கென்ன ? என்று கேட்டால், ‘இந்து அறிவியல்’ என்ற பெயரில் எதையாவது கடை விரித்தால் யாரும் கேட்கப் போவதில்லை, ஆனால் ‘தமிழ் அறிவியல்’ என்ற பெயரில் இந்து புராணக் கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசி கடைவிரிப்பது கண்டனத்துக்கு உரியதே. இதே போல நாங்களும் தமிழர்கள் தமிழில் மொழியில் எழுதப்பட்ட சீறாப் புராணத்திலும் (இஸ்லாமிய நூல்), தேம்பாவனியிலும்  (கிறித்துவ நூல்) அறிவியல் உள்ளது, அதையும் ‘தமிழ் அறிவியல்’ என்றே கருத வேண்டும் என்று கூறினால், அந்த நூலை எழுதியவர்கள் ஏற்பார்களா ? தமிழமைப்புகள் மதச் சார்பு அற்ற அமைப்புகள் அதில் கள்ளத் தனமாக ஒரு மதம் சார்நத நம்பிக்கையை நுழைப்பது ஏற்கத் தக்கதல்ல.

நண்பர் கல்வெட்டு அதை கவனத்திற்கு கொண்டுவர, நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் அந்த அமைப்புத் தலைமைகளில் ஒருவரான பாலா சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க, அந்த நூலை இணையத் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க நடவெடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். 


தாய்த் தமிழ் ஒன்று, தமிழர்கள் பின்பற்றும் மதங்கள் வேறு வேறு. இந்த புரிதல் இல்லாமல் தமிழுடன் மதம் சார்ந்த (சொந்த) வாட்சப் குப்பையை தமிழ் மீது கொட்டுவது கண்டிக்கத் தக்கதே. விரைந்து செயல்பட்டோருக்கு பாராட்டுகள்



கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்