பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2014

பாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் !

செத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழுது தான் நாமும் அதுபற்றி பேசமுடியும். பாலு மகேந்திரா மறைவை ஒட்டி அவரது அருமை பெருமைகளை கூறி, கூடவே பாலா போன்ற சிறந்த இயக்குனர்களை உருவாக்கி இருக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் எவரும் பாலுமகேந்திராவின் பெண்கள் மீதான பித்தை இலைமறை காய்மறையாக மட்டுமே கூறிவிட்டு வானளவில் புகழ்கிறார்கள். 

சமுக இணைய தளங்கள் இல்லாத பொழுது பொது மக்களின் கருத்து இவை என்று அரசியல்வாதிகளையோ, திரைகலைஞர்களையோ, சாமியார்களையோ, மதவாதிகளையோ, சாதிவெறியர்களையோ போய் சேராது. ஊடகங்கள் பெரிதாக எதையும் கண்டிக்காது, தகவல் என்ற அடிப்படையில் தான் எதையும் அவர்களால் எழுத முடியும். ஆனால் தற்பொழுது நிலைமையே மாறிவிட்டது, இணையத்தை / சமூக இணைய தளங்களை பயன்படுத்துபவர்கள் சில விழுக்காட்டினர்கள் என்றாலும் அவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்களிடமும் அவர்களால் ஒன்றை விவாதம் செய்து பொதுவான பார்வையை மாற்றிவிட முடிகிறது. ஒரு எழுத்தாளரின் கருத்து கதைவழியாக பல வாசகர்களை அடைவதைப் போல் சமூக இணையத் தளங்களில் எழுதுபவர்கள் வெளியில் பலரிடமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எனவே சமூக இணையதளங்கள் என்பவை சக்திமிக்க ஊடகங்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து தான் அரசியல்வாதிகள் உள்ளிட்ட போலி சாமியார் உள்பட அனைவரும் அதன் வழியாகவும் கடைவிரித்திருக்கிறார்கள். 

பாலுமகேந்திரா என்கிற தனிப்பட்ட மனிதன் எப்படி திரைக்கு வெளியே நடந்து கொண்டார் என்பது எனக்கு முக்கியம் இல்லை, அவரது படைப்புகளை தான் நான் ரசிக்கிறேன், புகழ்கிறேன் என்று உங்களால் ஒதுங்க முடிந்தால் தனது படைப்புகளின் மூலம் கிடைத்த புகழ் செல்வாக்கு ஆகியவற்றை பெண்கள் மீது வீசும் வலையாகப் பயன்படுத்தி கொண்டதற்கு நீங்களும் தான் பொறுப்பாகிறீர்கள். நிறை குறை அற்றவர் யார் ? குறைகளைப் பேசவேண்டாமே ? என்று எல்லோரும் மவுனித்தால் பிறகு செத்தால் கூட நம்மை தூற்ற ஆட்கள் உண்டு என்று தவறு செய்யும் முன் எவரும் உணரவே மாட்டார்கள்,

ஒருவரின் மரணித்தின் பிறகு அவரின் இழிசெயல்களை தூற்றுவதன் மூலம் தான், அவரைப் போன்று தவறு செய்ய துணிபவர்களுக்கு நாம் அதை நினைத்துப் பார்த்து தவிர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

பாலுமகேந்திராவால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள்  'என்மகள் ஷோபா' என்று தொடராக ராணி வார இதழில் ஒரு கண்ணீர் காவியமாகவே அதனை எழுதி, சில ஆண்டுகளில் சோகம் தாங்காமல் தற்கொலையும் செய்து கொண்டார் ஷோபாவின் தாயார். ஷோபாவின் மறைவிற்கு பிறகும் பல நடிகைகளின் தொடர்புகள் இருப்பதையும் செய்தி இதழ்கள் எழுதிவந்தன. நடிக்க வரும் பெண்களின் இயலாமையை படுக்கைக்கு பகடையாக பயன்படுத்திக் கொண்டதை அவருடைய தொழில் திறமைகள் அனைத்திற்குமான சன்மானமாக எடுத்து கொண்டு போற்றப்படவேண்டும் ?

தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று இவர் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஒருவர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது, ஆனால் ஏமாற்றி, இயலாமையைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடி அவர்களின் வாழ்க்கையையே கெடுத்தவர் என்ற முறையில் நம்மால் விமர்சனம் செய்யாமல் தூற்றாமல் இருக்க முடியவில்லை. இந்த துறையில் இவரைப் பொன்ற தவறான நபர்களிடம் திறமை இருக்கும் பொழுது பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.  நாலு இயக்குனர்களை உருவாக்கியது சாதனை என்றால், நான்கு நடிகைகளிடம் நடந்து கொண்டவிததை தூற்றவும் தான் வேண்டும். இவரிடம் வாய்ப்பு கேட்க வந்து எத்தனை பெண்கள் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் பெண்மையையும் இழந்து சென்றார்களோ.

திறமையாளனின் பொறுக்கித்தனங்கள் சகித்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற பொதுப் புத்தியில் எனக்கு உடன்பாடு இல்லை.

சிறுவயதில் 'என்மகள் ஷோபா' தொடரை படித்தவன் என்ற முறையில் பாலுமகேந்திராவின் மரணம் என்னைப் பொருத்த அளவில் இன்னும் சில மவுனிகாக்கள் வலையில் வீழும் முன் 'ஒழிஞ்சான்'

மேலும் துப்பியவர்களின் இணைப்பு :
சோபாவை கொன்றது ஏன்? ஒலகப் படைப்பாளி பாலு சேர். 

207 கருத்துகள்:

207 இல் 1 – 200   புதியவை›   புத்தம் புதியவை›
அன்புடன் நான் சொன்னது…

நேர்மையான பகிர்வு

Unknown சொன்னது…

இவர் காமெராமூலம் படம் பிடித்ததை ஆஹோ ,ஓஹோ என்பவர்கள் ...காமெரா பின்னால் இருந்த காமக் கண்ணை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவதை ஒப்புக் கொள்ள முடியாதுதான் !
த ம 3

M.Mani சொன்னது…

ஆம். இறந்தவர்களைக் குறித்த விமர்சனங்களை ஒதுக்குவது பாசாங்குத்தனமானது. ஒழுக்கக்கேடான திறமை போற்றப்படவேண்டியதில்லை.
ஷோபா தற்கொலை சிலகாலம் பின்னர் செய்தித்தாள்களால் மறக்கப்ட்டது.

வருண் சொன்னது…

15 வ்யதுப் பொண்ணு மேலே இந்த எருமை மாட்டுக்குக் காதலாம்!

காப்பிஅடிக்கிறவன் தான் கலைஞனாம்!

ஆம்பளைங்க உலகம் இது!

எருமைக்கெல்லாம் ஒப்பாரி வைப்பாணுக!

"அப்பாடா செத்தானே!" னு கொண்டுபோயி பொதைக்கிறதை விட்டுப்புட்டு. இவங்க சுத்தி வச்ச ஒப்பாரியை எல்லாம் படம் படமா போட்டு அழு அழு அழுறாணுக!

வேகநரி சொன்னது…

//ஒருவரின் மரணித்தின் பிறகு அவரின் இழிசெயல்களை தூற்றுவதன் மூலம் தான், அவரைப் போன்று தவறு செய்ய துணிபவர்களுக்கு நாம் அதை நினைத்துப் பார்த்து தவிர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்//
அருமையான கருத்து.

raajsree lkcmb சொன்னது…

பாலு மகேந்திரா செய்தது மிக பெரிய தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு ஐயம்.

எனக்கு தெரிந்த வரையில் தமிழக பதிவர்கள் மறைந்த தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பற்றி இந்த அளவு தூற்றியதில்லை. அவர்கள் எல்லாம் தவறே செய்யாத உத்தமர்களா? எந்த பெண்ணின் வாழ்க்கையிலும் விளையாடியதில்லையா? நான் இலங்கையில் இருப்பதால் தெரிந்து கொள்ள கேட்கிறேன்.

செல்வநாயகி சொன்னது…

Very good post. Thanks to varun and selvan. As thamilachchi said it has to be applied for others too.

பெயரில்லா சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள பதிவர்கள் அனைவரையும் தான் தூற்றுகின்றோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி தொட்டு அனைவரையும் விமர்ச்சிக்கும் ஆரோக்கிய பாதையில் தான் நாம் இருக்கின்றோம். வார்த்தை வருணனைகள், வெற்று துதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஒருவரை முழுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்தும் ஆரோக்கிய போக்கு நம்மிடையே வளர்ந்து வந்துள்ளது.

அவர் இருந்தாலும் இறந்தாலும் சமூக பொதுவாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய அனைத்து மனிதர்களையும் நாம் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய வேண்டும், அதனால் மட்டுமே வருங்காலத்தில் இத்தகையோர் செய்த தவறுகளை மற்றவர்களும் செய்யாதிருப்பார்கள்.

பின் குறிப்பு: பாலு மகேந்திரா இலங்கையில் பிறந்தாலும் கடந்த 50 வருடம் இந்தியாவில் தான் வாழ்ந்தவர், இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதால் நாம் வந்தாரையும் நம்மில் ஒருவராகவே கருதி விமர்சிக்கின்றோம். அவ்வளவு தான்.

பிரமிளை போல பாலுவையும் தமிழ்நாட்டுக்காரனாகவே நினைக்கிறோம்.

சில புலம் பெயர் ஈழத்தமிழர்கள் கெளம்பி வந்திடப் போறாய்ங்க. எப்படி எங்காள விமர்ச்சிக்கலாம் நொய் நொய் என.. ஹிஹி.

வேகநரி சொன்னது…

// பாலு மகேந்திரா இலங்கையில் பிறந்தாலும் கடந்த 50 வருடம் இந்தியாவில் தான் வாழ்ந்தவர், இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதால் நாம் வந்தாரையும் நம்மில் ஒருவராகவே கருதி விமர்சிக்கின்றோம். அவ்வளவு தான்.//
சரியா சொன்னிங்க சகோ.இந்த நபரை பற்றி எனக்கு சரியாகவே தெரியாது. உங்க பதிவு மூலமே விபரமா அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இவர் ஒரு குழந்தையை பாலியல் கொடுமை செய்யும் குற்றவாளி. முன்பிருந்த முதல்வரால் அநியாயத்துக்கு காப்பாற்றுபட்டிருக்கிறார். உங்க பதிவுக்கு பின்னோட்டமிட முடியல.மாசிலாமணி எப்படி போட்டார் என்று தெரியல்ல!
பின்னோட்டம் போட முடியாம இருப்பதே நல்லது. அல்லது புலம் பெயர் ஈழ தமிழர்கள் எங்க ஆளைபற்றியா எழுதிறாய் தூக்கடா பதிவை என்று வந்திடுவாங்க.

வவ்வால் சொன்னது…

கோவி,

இந்த விமர்சனம் சரியானதே,ஆனால் நீங்க உங்களை விமர்சித்தால் தாங்கிக்க மாட்டிங்களே அது எப்படி ?

# பகுத்தறிவ பேசிக்கிட்டே சிங்கப்பூர்ல காவடி தூக்குவதை பெருமையா பேசிக்கலாம்னா , பெண்களை அனுபவிப்பதும் பெருமையாக பேசிக்கொள்ல தக்க வீர சாகசமே , சோழ மன்னர்களைப்பற்றி இப்படித்தான் "வீரசாகசமா" பாட்டெல்லாம் எழுதி வச்சிருக்காங்க, மன்னன் வீதில உலா போனால் அவனைப்பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் "நீர் வடியுமாம்" என்ன எழவுனு குலோத்துக்கங்கன் வீதியுலா போல படிச்சு பாரும் :-))

#கம்பர் கூட எழுதி இருக்கார் "ராமனை" பார்த்ததும் சீதைக்கு நெகிழ்ந்து மேகலை தெறித்து விழுந்துவிட்டதாம்" இது என்னானு தமிழறிஞர்கள் தான் ஆய்ந்து அறீஞ்சு சொல்லணும் :-))


எனவே தான் பாலுமகேந்திரா "மன்னராட்சி" செய்திருக்கார் போல அவ்வ்!

# பாலுமகேந்திரா "ஈழத்தமிழர்' அல்ல இந்திய இலங்கை தமிழர் ,அப்படித்தான் நான் படிச்சேன், அங்கே குடியுறிமை பிரச்சினை என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு வந்தார்.

ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கணும் என நாம்டம்ளர் போன்றோர் இன்னும் கோரிக்கை வைக்கிறாங்கனா, பாலு மகேந்திரா மட்டும் எப்படி ஈழத்தமிழராக இருந்து குடியுரிமை வாங்கினாராம் என கேட்கலாமே!!!

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

***எனக்கு தெரிந்த வரையில் தமிழக பதிவர்கள் மறைந்த தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பற்றி இந்த அளவு தூற்றியதில்லை. ***

பலியாடு ஷோபா ஒரு மலையாளி! பாலு மகேந்திரா ஒரு தமிழ் இயக்குனர். ஆக இப்போ நாங்க ஷோபாவுக்கு அநியாயம் நடந்ததுனு சொன்னா, தமிழின துரோகிகளாகிட்டோமோ???!

//***அவர்கள் எல்லாம் தவறே செய்யாத உத்தமர்களா? ***

***எந்த பெண்ணின் வாழ்க்கையிலும் விளையாடியதில்லையா?***//

எதுக்கு இப்போ பொங்கி எழுறீங்க? இங்கே இதை எல்லாரும் ஒரு ஆண் பெண் பிரச்சினையாத்தான் பார்க்கிறோம். நீங்க பெண்தானே? இல்லைனா ஆண், பெண் பெயரில் சுத்துறீங்களா? உங்களை மாரிப் பெண்களாலேதான் இப்படி பெண்கள் பலியாகுறாங்க! பெண்ணடிமைத்தனம் வளருது!

***நான் இலங்கையில் இருப்பதால் தெரிந்து கொள்ள கேட்கிறேன்.***

உங்க விலாசம் எல்லாம் தேவையில்லாதது இணையதள உலகில் இருந்துகொண்டு நான் கிராமம், இலங்கை, அமெரிக்கானு எதுக்கு அட்ரெஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு??

ஊர்சுற்றி சொன்னது…

//# பாலுமகேந்திரா "ஈழத்தமிழர்' அல்ல இந்திய இலங்கை தமிழர் ,அப்படித்தான் நான் படிச்சேன், அங்கே குடியுறிமை பிரச்சினை என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு வந்தார்.//

இல்லை. அவர் ஈழத்தமிழர். மட்டக்களப்பில் பிறந்தவர். அவரது தந்தை மட்டக்களப்பின் புகழ்பெற்ற சென்.மைக்கல் கல்லூரி ஆசிரியர்.
முதலில் லண்டன் சென்று பிஎஸ் முடித்து பின்னர் இந்தியா வந்து புனேயில் சினிமா படித்தார்.
எப்படி இந்திய குடியுரிமை எடுத்தார் என்பது யாரும் அறியாதது.

காரிகன் சொன்னது…

பாலு மகேந்திரா என்றாலே ஷோபா நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியாது. ஷோபா போன்ற திறமையான நடிகையின் வாழ்க்கை சட்டென மொட்டிலேயே கருகியதன் பின்னாலிருக்கும் நபர் இங்கே ஒரு மகா கலைஞன் என்று கொண்டாடப்படுகிறார். இருக்கட்டும். ஆனால் அவரை தமிழின் மிகச் சிறந்த படைப்பாளி என்று ஒரு வண்ணம் பூசுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அத்தனை பாராட்டுகளுக்கும் இவர் தகுதியானவர்தானா என்ற கேள்வி சிலருக்கு எழுவதை யாரும் தடுக்கமுடியாது- இலங்கை தமிழர் ஈழத்துக்காரர் என்று வேறு பக்கம் திசை திருப்பவேண்டாம். பாலு மகேந்திரா இலங்கையில் பிறந்தவர் என்பதே அவர் மரணத்துக்குப் பின்தான் பலருக்குத் தெரியும்.(அவர் ஒரு கிருஸ்துவர் என்று தெரிகிறது. எனவே மதத்தை வைத்து சிலர் கொடி பிடிக்கலாம்.) பாலு வின் பெண் மோகம் இணையத்தில் விவாதிக்கப்படுவது அவருடைய மறுபக்கத்தின் எதிர்வினையே. பெரியார், அண்ணா, எம் ஜியார், ஏன் காந்தியார் கூடத்தான் இங்கே விமர்சிக்கப்படுகிறார்கள். அருமையான துணிச்சலான கட்டுரை எழுதியதற்குப் பாராட்டுக்கள்.

முகவை மைந்தன் சொன்னது…

காறித்துப்பிய சுட்டியில் இருந்து ஓரளவு புரிந்து கொண்டேன். அது பொறுக்கித் தனமல்ல. சூழலைக் கையாளத் தெரியாத கோழைத்தனம். சோபா தற்கொலைக்கான காரணமும் ஓரளவு விளங்கிக் கொள்ள முடிகிறது. எனக்கு இது தொடர்பாக பாலு மகேந்திரா மேலிருந்த வெறுப்பு விலகி விட்டது.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
priyamudanprabu சொன்னது…

Follow..:)

ஊர்சுற்றி சொன்னது…

//தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை உட்பட பலர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர். //

செல்வாவின் மகன் சந்திரஹாசன் 1987 இற்கு முன்னரே இந்தியா சென்றுவிட்டார். அவரின் மகள் 1987 ஜூலைக்கு முன்னர் இந்தியாவில் பிறந்திருந்தால் அவர் இந்திய குடிமகள் ஆகலாம்.ஆனால் அவர் பிறந்தது 1980 இல் கொழும்பில் என நினைக்கிறேன். ஒருவேளை அவர் ஒரு இந்திய ஆணைத்திருமணம் செய்திருந்தால் அவர் குடியுரிமை பெற்றிருக்கலாம்.அல்லது 12 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் அவர் குடியுரிமை கோரி இருக்க வாய்ப்புண்டு.

சந்திரஹாசனின் மகள் அவர். அவர் இந்திய ஆதரவாளர் குடியுரிமை பெறுவது இலகுவாக இருந்திருக்கும். அதேபோல இந்திய ஆதரவு அரசியல்வாதி வரதராஜப்பெருமாளின் மகள்கூட குடியுரிமை பெற்றுள்ளார். ஆனால் இவர்களிடம் கேட்டால் எப்படி பெற்றோம் எனச் சொல்ல மாட்டார்கள்.

அண்மையில் அமெரிகாவில் ஒரு ஐடி கம்பனி இந்தியத்தமிழரைச் சந்தித்திருந்தேன். அவரின் மனைவி ஒரு ஈழத்தமிழர். அகதியாக இந்தியாவில் நீண்டகாலம் வாழ்ந்துள்ளார். அவரின் சகோதரி ராணுவத்தால் கொல்லப்பட்டவர். கணவருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. மனைவிக்கு எக்ஸிற் விசா (இப்படி ஒரு பம்மாத்து விசா உண்டு) எடுப்பதில் சிக்கல். அமெரிக்காவுக்கு போக வேண்டுமா? ஆம் என்றால் பாஸ்போட்டில் மீண்டும் இந்தியா வரமுடியாது என ஸ்ராம்ப் குத்தப்படும். நடப்பது நடக்கட்டும் என அமெரிக்கா வந்து விட்டனர். கணவனுக்கு வேலைக்காலம் முடிந்து இந்தியா போகவேண்டிய நிலமை. மனைவி போக முடியாது. கணவனின் அடுத்த நியமனமோ கொழும்புக்கு. இந்தியாவும் இல்லை இலங்கையும் இல்லை.

ஒருமாத காலத்தில் அப்பெண்ணுக்கு அமெரிகாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஒரு வருடத்தில் நிரந்தர வதிவிட அனுமதி (கிரீன் காட்) கிடைக்கும். கணவரும் ஒரு வருடத்தில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுவிடுவார்.
இந்தியா ஐநா அகதிகளுக்கான ஜெனீவா உடன்படிக்கையில் ஒப்பந்ததில் இன்றுவரை கைச்சாத்திடவில்லை.

தமக்கு விரும்பிய பெரிய இடத்து ஆட்களுக்கு குடியுரிமை வழங்குவார்கள் அது மட்டுமே!

வவ்வால் சொன்னது…

ஊர்ச்சுற்றி,

என்னத்த ஊரச்சுத்தி பார்த்திங்க, இலங்கை தமிழர் ,ஈழத்தமிழர் என இலங்கை மக்களிடையே இருக்க பிரிவினை தெரியாதா?

200 வருடம் முன்னரே போய் அங்கே பிறந்து வளர்ந்திருந்தாலும் ஒரு தமிழன் ஈழத்தமிழன் ஆக முடியாதாம், அவன் இலங்கைத்தமிழனாம் ,இதை நான் சொல்லலை சோ கால்ட் ஈழத்தமிழர்கள் தான் சொல்றாங்க.

பாலுமகேந்திரா மட்டக்கிளப்புல பொறந்து பட்டயவே கிளப்பி இருந்தாலும் அவர் ஈழத்தமிழர் அல்ல, இலங்கை தமிழர்கள் வகையில தான் வருவார்.

ஈழத்தமிழர்கள் என இணையத்தில் அறியப்படும் மக்கள் இப்பக்கூட கவனமாக "ஈழத்தமிழர் பாலுமகேந்திரா" என சொல்லாமல் தவிர்ப்பதை படிக்கவேயில்லையா?

# 1948 இல் இலங்கை டொமினியனாக சுதந்திரம் அடைந்த போது , வெள்ளையர்கள் காலத்தில் இலங்கையில் குடியேறிய தமிழர்களுக்கு குடியுரிமை இல்லைனு சட்டத்தினை போட்டுவிட்டது, அவர்களை இந்தியா திரும்ப அழைக்க வேண்டும் என சொல்லிவிட்டது, அதனை நேரு மறுத்துவிட்டார்,எனவே இலங்கையில் இருந்து வருவோருக்கு குடியுரிமை இல்லை என்ற நிலை , இது லால்பகதூர் சாஸ்திரி - பிரேமதாசா ஒப்பந்த காலம் வரையில் நீடித்தது. அவ்வொப்பந்தப்படி 9.5 லட்சம் பேருக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்தியா ஒத்துக்கொண்டது,அதன் பின்னரே இலங்கையில் இருந்து வந்தால் குடியுரிமை அளிக்கப்பட்டது.

குடியேற்றம் இந்திரா காலம் வரையில் தொடர்ந்தது. அதன் பின்னர் நிறுத்தப்பட்டது. அப்படி குடியுரிமை வாங்கக்கூட இலங்கை வெளியுறவு அமைச்சகத்தில் பதிவு செய்து இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்.எனவே பாலு மகேந்திரா வந்தமா இந்தியராக ஆனோமா என்றெல்லாம் ஆகி இருக்க முடியாது,அதுவும் சாஸ்திரி ஒப்பந்தத்துக்கு முன்!

# 1966 இல் புனே ஃபில்ம் இண்ஸ்டிட்யுட்ல பாலுமகேந்திரா சேர்ந்திருக்கார், எனில் அவர் அதுக்கு முன்னர் 10 ஆண்டு இந்தியாவில் வசித்தாரா என்ன? முதலில் இப்படி ஒரு 10 ஆண்டு விதியெல்லாம் இல்லை.

சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தால் மட்டுமே அவர் இந்திய குடியுரிமை வாங்கி இருக்க முடியும், குடியுரிமை இல்லாமல் புனே இண்ஸ்டிட்யூட்ல அட்மிஷன் கிடையாது.
---------------------------------
# இக்பால்,

நீங்க தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சாரா :-))

வெள்ளைக்காரன் கூட இந்திய குடியுரிமை எளிதாக வாங்கிடலாம், ஆனால் பர்மா, இலங்கை,பாகிஸ்தான் ,பங்க்ளாதேஸ் போன்ற நாட்டில் இருந்து குடியுரிமை வாங்கனும் என்றால் சில விதிகள் இருக்கு, அதுக்கு மத்திய வெளியுறவு துறை மற்றும் உள்துறை இரண்டும் ஒப்புதல் கொடுக்கணும்.

செல்வாக்கிருக்குமானால் 24 மணி நேரத்தில் குடியுரிமை கிடைக்கும், அதை எல்லாம் பொது விதியாக சொல்லக்கூடாது.

# persons of indian origin - PIO என பதிவு செய்து அடையாள அட்டை வைத்திருந்தால் தான் தற்காலத்தில் இந்திய வம்சாவளியினர் கூட இந்திய குடியுரிமைக்கோர முடியும், நீங்க சொல்கிற 10 ஆண்டு கதையெல்லாம் செல்லாது, ஏன் எனில் 6 மாதம் மேல அயல்நாட்டினர் இந்தியாவில் வசிக்கவே முடியாது,அப்புறம் எப்படி 10 ஆண்டு வசிக்க முடியும்?

அப்படி நீண்ட நாள் வசிக்க என முன்னரே சிறப்பு விசா அனுமதி வாங்கியிருக்கணும், நியூட்ரல் சிட்டிசன் என அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் வசிக்கனும்,அதன் பின்னர் குடியுரிமை கோரலாம்.அப்படி வாங்கிட்டு வர இலங்கை, போன்ற நாடுகளுக்கு அனுமதியில்லை, வந்தால் அகதியா வரணும் இல்லைனா 6 மாதத்தில் நாட்டை விட்டு போகனும்!

குறைந்த பட்சம் இந்திய வம்சாவளிப்பெற்றோர் என ஆதாரம் காட்டி ஐந்து ஆண்டுகள் குடியுரிமை இல்லாமல் நியுட்ரல் சிட்டிசனாக இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும்,அதன் பின்னரே குடியுரிமை கோரலாம்.

அகதி ஸ்டேட்டசில் இருந்தால் அதுவும் கடினம், ஏகப்பட்ட விதிகள் இருக்கு இந்தியாவில்.

----------------

இலங்கை தேயிலை தோட்டங்களில் இப்பவும் குடியுரிமை இல்லாமலே சில லட்சம் பேரு இருக்காங்க, அவங்களுக்கு குடியுரிமை இல்லை ஆனால் வாக்குரிமை கொடுத்திருக்காங்க அவ்வ்!

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்ட ஆதரவளித்து மாற்றுகருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, பாலுமகேந்திரா இலங்கைக்காரரா தமிழ்நாட்டுக்காரா என்பதெல்லாம் இதை எழுதும் பொழுது நான் நினைக்கவில்லை.

பொறுக்கித்தனங்களை பிறந்த ஊர் பார்த்து தான் விமர்சனம் செய்யவேண்டும் என்றால் தெருவைத் தாண்டி ஏன் வீட்டைத் தாண்டி பிறரின் தவறுகளை கண்டிக்கும் /சுட்டிக்காட்டும் உரிமை எவருக்கும் இல்லை.

பலருடைய இரத்ததில் ஓவியம் வரைபவனின் ஓவியத் திறமைதான் போற்றப்பட வேண்டும் என்பது போல் பலர் நினைக்கிறார்கள்.

ஊர்சுற்றி சொன்னது…

//என்னத்த ஊரச்சுத்தி பார்த்திங்க, இலங்கை தமிழர் ,ஈழத்தமிழர் என இலங்கை மக்களிடையே இருக்க பிரிவினை தெரியாதா?//

பிரச்சினை அதுவல்ல. தமிழர்களைப் பிரித்து அடையாளப்படுத்துவது என்றால் அவர்கள் ஈழத்தமிழர்(வட கிழக்கு) மலையகத்தமிழர் எனவே பிரிப்பார்கள். மலையகத்தமிழர் இந்தியாவில் இருந்து தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள்.

பாலுமகேந்திரா எப்படி இந்திய குடியுரிமை பெற்றார் என்பதற்கு, சுத்துமாத்துச் செய்து பெற்றார் எனச் சொல்வீர்களாயின் எனக்கு பிரச்சினையே இல்லை.
இல்லையில்லை பூங்கோதை பெற்றார், அவர் பெற்றார் இவர் பெற்றார் என செல்வாக்குமிகுந்தோரை உதாரணம் காட்டுதல் சரியானதல்ல.

புனே திரைப்படக்கலூரியில் வெளிநாட்டவர் கற்பதைப்பற்றி 1980களில் கேள்விப்பட்டிருக்கிறேன். 1983 இல் ஈழத்தமிழ் மானவகளுக்கு எம்.ஜி.ஆர் 50 மருத்துவக்கலூரி அனுமதிகள் வழங்கினார். அப்போது எனது நண்பர்கல் சிலர் திரைப்படக் கல்லூரியில் சேர முயன்றனர். அவர்களை யாரும் “பரிந்துரை” செய்யாததால் முயற்சி வெற்றி அழிக்கவில்லை. பரிந்துரை செய்திருந்தால் கிடைத்திருக்கும். பின்ன்னர் அமெரிக்காவில் நான் புனே திரைப்படக்கல்லூரியில் கற்ற ஒரு பீகார் காரரிடம் சினிமாபற்றிய பாடம் எடுக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தான் வெளிநாட்டு மானவர்கலை அங்கு சந்தித்ததாகவும் அவர்கள் அரசியல் செல்வாக்கு (மொஸ்கோ, சீன, அணிசேரா நாடு கலாச்சார பரிவர்த்தனை) உள்ளோர்களின் உரவினர்கள் என பேச்சு அடிபட்டதாயும் சொன்னார்.

ஊர்சுற்றி சொன்னது…

//ஈழத்தமிழர்கள் என இணையத்தில் அறியப்படும் மக்கள் இப்பக்கூட கவனமாக "ஈழத்தமிழர் பாலுமகேந்திரா" என சொல்லாமல் தவிர்ப்பதை படிக்கவேயில்லையா?///

அவரே சொல்றதில்லை, இதில நீங்க வேற !
கேட்டால் அது ஒரு கனாக்காலம், நினைத்தால் கண்ணீர் வரும், கடமை தவறி விட்டேனோ என கைகள் நடுங்கியது, மேலிடத்தில் இருந்து ஆணை வந்தது எனப்பல பல கதைகள் சொல்ல்வார்.

சொல்லப்போனால் வரும் ஜூலையில் அவர் அமெரிக்கா வருவதாய் இருந்தது (ஃபெட்னா 2014) வந்து குறும்பட இயக்கம் பற்றிய பட்டறை நடத்துவார் எனவும் சொன்னார்கள். இதையெல்லாம்விலாவாரியாய் கேட்கலாம் என்றுதான் இருந்தேன். விதி விளையாடிவிட்டது.

வேகநரி சொன்னது…

சொல்லப்போனால் வரும் ஜூலையில் அவர் அமெரிக்கா வருவதாய் இருந்தது (ஃபெட்னா 2014) வந்து குறும்பட இயக்கம் பற்றிய பட்டறை நடத்துவார் எனவும் சொன்னார்கள். இதையெல்லாம்விலாவாரியாய் கேட்கலாம் என்றுதான் இருந்தேன். விதி விளையாடிவிட்டது.

ஈழத்து சீமான் உறவே,
தங்க தமிழ் ஊர்சுற்றியே,
நல்லா தான் கதை இருக்குங்க.

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

//. தமிழர்களைப் பிரித்து அடையாளப்படுத்துவது என்றால் அவர்கள் ஈழத்தமிழர்(வட கிழக்கு) மலையகத்தமிழர் எனவே பிரிப்பார்கள். மலையகத்தமிழர் இந்தியாவில் இருந்து தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். //

அப்போ மலையகத்தை தவிர வேற எங்கேயும் தமிழர்கள் குடியேறலையா?

வியாபாரம், பிரிடீஷ் அரசுப்பணி என பலர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறினார்கள்!

இப்படி மழுப்பிட்டு இருப்பதற்கு...

#//இல்லையில்லை பூங்கோதை பெற்றார், அவர் பெற்றார் இவர் பெற்றார் என செல்வாக்குமிகுந்தோரை உதாரணம் காட்டுதல் சரியானதல்ல.//

அதை சொன்னவன் நானல்ல ,சொன்னவனை பார்த்து சரியல்லனு சொல்லிட்டு போங்க அவ்வ்!

#//1983 இல் ஈழத்தமிழ் மானவகளுக்கு எம்.ஜி.ஆர் 50 மருத்துவக்கலூரி அனுமதிகள் வழங்கினார்.//

அடிச்சு விட அளவேயில்லையா?

இன்று வரையிலும் தமிழக அரசின் பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரியில் வெளிநாட்டினர் நேரடியாக சேர முடியாது, மத்திய அரசின் "கலாச்சார கல்வி பரிவர்த்தனை" கோட்டாவில் தான் சேர முடியும்.

தனியார் மருத்துவ ,பொறியியல் கல்வி நிலையங்களில் மட்டும் 15% வெளிநாட்டினர் சேரலாம்.

தமிழ்நாட்டில் என்று இல்லை இந்தியா முழுக்க அதான் நிலை!

போன ஆண்டு கூட முகாமில் இருந்து நிறைய மதிப்பெண் எடுத்திருப்பதால் மருத்துவக்கல்லூரியில் இடம் கொடுக்க வேண்டும் என ஜூனியர் விகடன் வழியாக ஒரு மாணவர் அரசுக்கு கோரிக்கை வச்சார்.

எம்ஜிஆர் காலத்தில் அப்படி அனுமதி கொடுத்திருப்பார் எனில் சட்ட மன்றத்துல தீர்மானம் போட்டு தான் கொடுத்திருக்க வேண்டும், அப்படி செஞ்சாரானு எனக்கு தெரியாது.

#// அவர் தான் வெளிநாட்டு மானவர்கலை அங்கு சந்தித்ததாகவும் அவர்கள் அரசியல் செல்வாக்கு (மொஸ்கோ, சீன, அணிசேரா நாடு கலாச்சார பரிவர்த்தனை) உள்ளோர்களின் உரவினர்கள் என பேச்சு அடிபட்டதாயும் சொன்னார்..//

இப்ப மட்டும் ஏன் செல்வாக்குல சேர்ந்தவர்களை கணக்கு காட்டுறிங்க?

மாணவர் பரிவர்த்தனை என்ற பெயரில் பல நாடுகளுக்கிடையே அனுப்பி படிக்க வைக்கலாம், ஆனால் அதெல்லாம் அந்தந்த நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்களால் நிரப்பப்படுவது.

ஒவ்வொரு காமன்வெல்த் நாட்டிலும் இந்தியாவில் இருந்து கல்வி உதவித்தொகையுடன் போய் மருத்துவம் முதல் பல துறையில் படிக்க ஆண்டு தோறும் அப்ளிகேஷனை கேட்கிறார்கள்,ஆனால் அதெல்லாம் சாமான்யனுக்கு கிடைப்பதேயில்லை ,யாருக்கு இடம் கொடுக்கிறாங்கனு யாருக்குமே தெரியாது அவ்வ்!

1966 இல் பாலுமகேந்திரா இலங்கை குடியுரிமையுடன் புனேயில் சேர்ந்து படிக்க வேண்டுமானால் , இலங்கை வெளியுறவுத்துறையில் செல்வாக்கா இருந்தால் மட்டுமே முடியும்.

ஈழத்தமிழராக இருந்து இந்திய குடியுரிமை வாங்கிட்டார்னு சொன்னால் அதுக்கு நேரடியாக வழியே இல்லை,இலங்கை வாழ் இந்திய தமிழர்கள் மீள் குடியேற்ற திட்டத்தில் (சாஸ்திரி ஒப்பந்தம்) வந்தால் மட்டுமே சாத்தியம்!

# ஆனால் ரொம்ப சிம்பிளாக , கிராமநிர்வாக அதிகாரி, தாசில்தார் என விண்ணப்பித்து நேட்டிவிட்டி சான்று வாங்கி இந்தியராகிடலாம், காசு கொடுத்தாப்போதும் அவ்வ்!

1990 வரைக்கும் இப்படி ஏமாத்தினாங்கனு தான் குறைந்தது 10,+1,+2 என மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் படிச்சிருக்கணும், என அரசு உத்தரவு போட்டது!!!

இதிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலக்கு உண்டு! அப்பா எந்த மாநிலத்தில் கடைசியா வேலைப்பார்த்தாரோ ,அம்மாநில கோட்டா செல்லும்!

#//அவரே சொல்றதில்லை, இதில நீங்க வேற !//

மத்தவங்க சொல்வதில்லை அவரும் சொல்வதில்லை!

ஊர்சுற்றி சொன்னது…


//ஈழத்து சீமான் உறவே,
தங்க தமிழ் ஊர்சுற்றியே,
நல்லா தான் கதை இருக்குங்க.//

வேகநரி,
இதோ ஃபெட்னா 2014 இன் இணையத்தளத்தில் பாலுமகேந்திரா இறப்பதற்கு முன்னர் வந்த செய்தியின் சுட்டி !
இப்போது நீக்கிவிட்டார்கள்.
FeTNA 2014 - Balu Mahendra
www.fetna2014.com/special-guests/artists/item/25-balumahendra.html‎
Balu Mahendra (born 20 May 1939 in Batticaloa, Sri Lanka) is an Indian filmmaker, screenwriter, editor and cinematographer. Born and brought up in Sri...

ஊர்சுற்றி சொன்னது…

//வியாபாரம், பிரிடீஷ் அரசுப்பணி என பலர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறினார்கள்!

இப்படி மழுப்பிட்டு இருப்பதற்கு...//

அப்படி ஸ்ரீலங்காவில் இருந்தோர் இந்தியா திரும்பி விட்டனர் (ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம்) இப்போது இருப்போர் இந்திய வம்சாவழித்தமிழர் என அழைக்கப்படுகின்றனர்.

ஊர்சுற்றி சொன்னது…

இந்த அனுமதி கிடைத்து மருத்துவப்படிப்பை முடித்த மானவர்களில் இரண்டு பேரை எனக்குத்தனிப்பட்ட விதத்தில் தெரியும். இவர்களை விட யாழ் எம்பி யோகேஸ்வரனின் மருமகன் மற்றொருவர்.
எவ்வாறாயினும் கீழே உள்ள செய்தியைப் படியுங்கள். விடுதலை இதழில் வந்தது.

”...கலவரத்தால் பாதிக்கப்பட்டு, ஈழத்தில் மருத்துவக் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த 100-க்கும் அதிகமான மாணவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உடனடியாகக் கல்வியைத் தொடர, முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். அப்போது உத்தரவிட்டார்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஈழ அகதிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 20 இடங்களும், விவசாயக் கல்லூரியில் 10 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 40 இடங்களும், பாலிடெக்னிக்கில் 40 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர அரசு கலைக் கல்லூரிகளிலும் ஏராளமாக ஈழத்தமிழ் அகதிகள் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்....”
http://viduthalaidaily.blogspot.com/2011/08/1992.html

ஊர்சுற்றி சொன்னது…

//அப்படி செஞ்சாரானு எனக்கு தெரியாது.//

அப்போ ஏன் அடுச்சு விடுகிறேன் என கதை விட வேண்டும்?
நான் என்ன சொன்னே எம்ஜிஆர் செய்தார் என்றுதானே. சட்டமன்ரத்தில் தீர்மானித்தாரா இல்லை தாந்தோன்றித்தனமாக தீர்மானித்தாரா என நான் எங்கேயாவது சொன்னேனா?

ஊர்சுற்றி சொன்னது…

/மத்தவங்க சொல்வதில்லை அவரும் சொல்வதில்லை!//

அவரே சொல்லாதபோது ஏன் மத்தவங்க சொல்லவேண்டும்?

குட்டிபிசாசு சொன்னது…

வவ்வால் & ஊர்சுற்றி,

நான் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது (1997) "Srilankan refugee" என்று ஒரு கோட்டா இருந்ததாக நினைவு. தெரிந்தவர்கள் யாராவது சரி பார்த்துச் சொல்லவும்.

பெயரில்லா சொன்னது…

ஊர்ச்சுற்றிக்கு- எக்சிட் விசா பற்றி கூறுகின்றேன் கேளுங்கள். இலங்கையில் இருந்தோ ( எந்த நாட்டில் இருந்தோ ) டூறிஸ்ட் விசாவில் வந்து விசா காலாவதியான பின்னும் ஓவர் ஸ்டேயில் இருந்து பின்னர் நாட்டை விட்டு வெளியேற விரும்புவோர் ஓவர் ஸ்டேவுக்கான தண்டத் தொகையை அபராதம் செலுத்திவிட்டு அவர் இங்கு ஓவர் ஸ்டே செய்த காலத்தில் வசித்த பகுதியில் எந்த விதக் குற்ற்மிழைக்கவில்லை என என் ஓ சி வாங்கி லோக்கல் எப் ஆர் ஆர் ஓ அலுவலகம் ஊடாக வெளியுறவுத் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். பல இலங்கைத் தமிழர்கள் ஓவர் ஸ்டே செய்து கொண்டு தாமும் அகதி தான் எனக் கூறிக் கொள்வதன் குழப்பம். ஓவர் ஸ்டே செய்வோர் அகதிகளாக கருதப்பட மாட்டாது, அதனால் தான் கல்வி இட ஒதுக்கீடுகளில் கூட வாய்ப்பளிக்கப்படுவதில்லை. முகாமிலோ வெளியிலோ அகதி என்ற கேட்டகரிக்கும் பதிவு செய்து ஆவணம் செய்வோர் மட்டுமே அகதியாக கருதப்படுவார்கள். தாங்கள் சொன்ன அப் பெண்ணுக்கும் இது தான் நிகழ்ந்திருக்கும். இந்தியர் ஒருவரை மணக்க ஓவர் ஸ்டே விசா அல்லாது அவர் பக்கத்து நாடு ஒன்றுக்கு போய் டூறிஸ்ட் விசா பெற்று பின்னர் வந்து மணந்து பதிவு செய்து ஸ்பொசல் விசா பெற்றிருந்தால் எக்சிட் விசா எடுக்க வேண்டியதில்லை. 7 ஆண்டு வசித்த பின் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் ( பாகிஸ்தான், சீன மக்கள் மட்டும் சிறப்பு பிரிவுக்குள் வருவர் ).

பெயரில்லா சொன்னது…

இது எல்லாம் தெரிஞ்ச வவ்வாலுக்கு. 6 மாச விசாக் கெடு டூறிஸ்ட் விசாவில் வருவோருக்கு தான், அதுக்கு மேல் உடனிடியாய றினீய்வு செய்ய முடியாது. இரண்டு மாதம் இடைவெளி இருக்க வேண்டும். இந்தச் சட்டம் மும்பை தீவிரவாத தாக்குதல்களுக்கு பின் அண்மையில் தான் வந்தது அதற்கு முன் அப்படி கிடையாது 6 மாதத்துக்கொரு முறை டூரிஸ்ட் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம், அவ்வாறு செய்து தமிழகத்தில் வசித்த பல வெளிநாட்டினர் உண்டு. அவ்வாறு 10 ஆண்டுகள் வசித்து குடியுரிமை பெற்ற பல இலங்கைத் தமிழர்கள் உண்டு. அடுத்து 6 மாதத்துக்கு மேல் வசிக்க முடியாது என்று எவன் சொன்னான், கல்வி விசா, வேலை வாய்ப்பு விசா, பொது சேவக விசா, தொழில் விசா, வாழ்க்கைத் துணைவர் விசா போன்றவைகள் 6 மாதத்துக்கு மேலும் கொடுக்கப்படும். 2 மாத இடைவெளி எல்லாம் தேவை இல்லை, இது சார்க் நாட்டவருக்கு பொருந்தும். அனைவரும் 6 மாதத்துக்கு மேல் தங்கும் பட்சத்தில் லோக்கல் அயலகத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தமிழக முகாமில் இருப்போர் சிறப்பு பிரிவுக்குள் வருவார்கள் மேற்சொன்ன விசா நடைமுறைகள் அவர்களுக்கு கிடையாது காரணம் முகாமில் இருப்போர் முறையான ஆவணங்கள் இன்றி விசா இன்றி சட்டவிரோதமாய் நுழைந்தவர்கள் ஆகையால் மனிதாபிமான அடிப்படையில் சிறப்பு பிரிவுக்குள் இடப்பட்டுள்ளனர். பன்னாட்டு அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால் ஐரோப்பிய மேற்குலக நடைமுறைகள் இங்கில்லை. ஆனால் குடியுரிமை பெற இயலாது என்றில்லை அதற்கான வழிமுறைகளை இலங்கைத் தமிழர்கள் அறியாமல் உள்ளனர்.

பெயரில்லா சொன்னது…

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை ஈழத்தமிழர்கள் என்றோ இலங்கைத்தமிழர்கள் என்றோ அழைப்பதில்லை. இந்தியத் தமிழர்கள் என்றே இலங்கை அரசு பதிவேடு கூறுகின்றது. அரசியல் மட்டத்தில் மலையகத் தமிழர்கள் எனக்கூறுவர். இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தான் இந்தியத் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகையில் 9 லட்சம் பேர்கள் இவர்கள். இவர்களில் 75% மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் வசிக்கின்றனர். கணிசமானோர் கொழும்பு, வவுனியா மாவட்டங்களில் வசிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் இவர்களே பெரும்பான்மை மக்கள். இலங்கையில் மிகுந்த வறுமையில் வாழும் மக்களும் இவர்களே. பலருக்கு முறையான குடியுரிமை ஆவணங்கள் வழங்கப்படாது கடந்த ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. இலங்கையில் புகழ்பெற்ற நடேச்சய்யர், முத்தையா முரளிதரன், நடிகரும் அரசியல்வாதியுமான மனோ கணேசன், ஆறுமுகம் தொண்டமான் முதலியோர் இச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் சிலர் தமிழ் பகுதிகளான வவுனியா மற்றும் மட்டகளப்பில் குடியேறி விட்டதால் இலங்கைத் தமிழர்களாக மாற்றமடைந்துள்ளனர்.

பெயரில்லா சொன்னது…

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழக அரசு மருத்துவ, பொறியியல் மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் தலா 20 இடங்கள் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இவற்றில் 18 இடம் முகாமில் உள்ளோருக்கும் 2 இடம் முகாமுக்கு வெளியே உள்ளோருக்கும் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை 2001- ஜெயலலிதா ஆட்சி வரை நீடித்தது. ஈழத்தாய் எனப்படும் ஜெயலலிதா அதனை நீக்கி பெரும் உபாகர உபத்திரம் செய்து ஏழை ஈழத்தமிழ் அகதிகள் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டார். இந்த ஒதுக்கீடு இருந்த வரை பல இலங்கைத் தமிழ் மாணவர் மருத்துவ மற்றும் பொறியியல் கல்வியை பெற கூடியதாக இருந்தது. தற்சமயம் கலை அறிவியல் பல்கலைகழங்களான சென்னை பல்கலைகழகம் உட்பட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவருக்கு இட ஒதுக்கீடு உண்டு. தமிழகத்தில் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ரேசன் கார்ட் மற்றும் மருத்துவ காப்பீட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள முகாம்களை மூடி விட்டு இந்தியாவிலே வாழ விரும்பும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் அதை ஈழத்தாய் ஜெயலலிதாவும் வைகோவும் செய்வாரக எதிர்ப்பார்க்கலாம்?

? சொன்னது…

பூனா இன்ஸ்டியூட்டில் மொத்த இடத்தில் 2 இடங்கள் என்ஆர்ஐ அல்லது வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னோரு இடம் Indian Council for Cultural Relations ஸ்காலர்ஷிப் பெறும் வெளிநாட்டு மாணவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பட்டம் பெற்ற பாலுமகேந்திராவுக்கு 1060களில் வெளிநாட்டு கோட்டாவில் சீட்டு கிடைத்தது ஆச்சர்யமில்லை!

வவ்வால் சொன்னது…

இக்பால்,

//அடுத்து 6 மாதத்துக்கு மேல் வசிக்க முடியாது என்று எவன் சொன்னான், கல்வி விசா, வேலை வாய்ப்பு விசா, பொது சேவக விசா, தொழில் விசா, வாழ்க்கைத் துணைவர் விசா போன்றவைகள் 6 மாதத்துக்கு மேலும் கொடுக்கப்படும்//

எதுக்கு இந்த அவசரம்?

கண்ணாடி பழசாப்போயிடுச்சுனு நினைக்கிறேன், நல்ல பவர் கண்ணாடி வாங்கி மாட்டுங்கோ :-))

//அப்படி நீண்ட நாள் வசிக்க என முன்னரே சிறப்பு விசா அனுமதி வாங்கியிருக்கணும்//

இப்படி சொல்லிவிட்டு தான் டூரிஸ்ட் விசா பத்தி ஆறுமாசம்னு சொன்னேன்.

மேலும் உங்களின் கனிவான கவனத்திற்கு "டூரிஸ்ட்" விசாவில் இருந்து கொண்டு அதை வேறு காலக்கெடுவிற்கான விசாவா மாற்ற முடியாது, மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட நாட்டிற்கு ஒரு முறை போய்விட்டு வரணும்!

# குடியுரிமை கோரி விண்ணப்பித்த நாளில் இருந்து "12 ஆண்டுகள்" அல்லது விதிகளின் படியான ஆண்டுகள் தான் கணக்கு, மாணவர் விசாவில் 4 ஆண்டுகள் இருந்தேன் இன்னும் மிச்சம் ஆண்டுகள் இருந்தால் இருந்துவிட்டால் குடியுரிமை என சொல்லவும் முடியாது.

அதாவது குடியுரிமையை எந்த விசாவில் வசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுதே கேட்டு விண்ணப்பிக்கணூம், விசா காலத்தில் எத்தனை ஆண்டுகள் கழியியுதோ அதெல்லாம் கணக்கிலே வராது.

இந்தியாவில தான் சட்டம்லாம் வளையும், அமெரிக்காவில் வளையுதாமா?

எச்.1பி ல 3 வருசம் இருந்துட்டு விண்ணப்பித்தால் அந்த மூன்று ஆண்டு கிரீன் கார்ட் பீரியடுக்கான காலத்துல வரவே வராது.

எந்த நாடாக இருந்தாலும் குடியிரிமைக்கு முன்னரே விண்ணப்பிக்கணும், அந்த பீரியட்டில் வரும் ஆண்டுக்கணக்கை தான் சொல்றாங்களே ஒழிய , மற்ற விசாவில் இருந்த ஆண்டை வச்சு கொடுப்பதல்ல குடியிரிமை.

அரசியல் நிலைப்பாடு கருதி 24 மணிநேரத்தில் கூட குடியுரிமை கிடைக்கும் ,அதை எல்லாம் சொல்லாதிங்கன்னா , அமைச்சர் பேத்தி ,பொண்ணுனு பேசிட்டு.

# உலக சதுரங்க சேம்பியன் பாபி பிஷரே குடியுரிமை இல்லாம அகதியா அலைய வேண்டியதா போச்சு. அந்தக்கதைய என்னோட பதிவில் கூட சொல்லியிருக்கேன்.

# //ஆனால் குடியுரிமை பெற இயலாது என்றில்லை அதற்கான வழிமுறைகளை இலங்கைத் தமிழர்கள் அறியாமல் உள்ளனர்.//
பாருங்க,

//அகதி ஸ்டேட்டசில் இருந்தால் அதுவும் கடினம், ஏகப்பட்ட விதிகள் இருக்கு இந்தியாவில்.//

பெறுவது கடினம் எனதான் சொன்னேன், முதல் காரணம் அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்நாட்டின் குடிமகன் என காட்ட ஏதேனும் ஒரு ஆவணம் சமர்ப்பிக்கணும், குறைந்த பட்சம் ரேஷன் போல ஏதோ ஒன்று!

அவசரத்துல ஓடி வரும் பலரிடம் ஆவணங்களே இருப்பதில்லை அப்புறம் எங்கே இருந்து விண்ணப்பிக்க?

இலங்கைல போட்ட குடியுரிமை சட்டப்படி ஒருத்தரோட தாத்தா இலங்கையில் பொறந்தார்னு/வசித்தார்னு சான்று காட்ட சொன்னதால் தானே பல இந்திய இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பிரச்சினை ஆச்சு!
----------------------

வவ்வால் சொன்னது…

ஊர்ச்சுற்றி,

எம்ஜிஆர் காலத்தில் எப்படி அனுமதி வழங்கினார்னு தெரியலை ,ஆனால் இருக்கும் விதியை சொன்னேன்.எம்ஜிஆர் அவராக வழங்கியது ,அவர் காலத்தில் அவர் நினைச்சதெல்லாம் செய்வார் கேட்க யாருக்கும் தைரியம் கிடையாது அவ்வ்!

புலிகளுக்கு நிதியாக முதலில் கவர்ண்மெண்ட் வங்கி கணக்கு பேரில செக்கு(டிடி) கொடுத்தாராம், மத்திய அரசு அதன் சட்ட சிக்கலை சொன்ன பின்னரே , அதனை வாங்கிக்கிட்டு சொந்த பணத்தில் கொடுத்தார்னு படிச்சேன்.

அது மாதிரி ஏதோ செய்துள்ளார் ,அதனால் 92 இல் அந்த சலுகைய எடுத்துட்டாங்க ,இன்று வரையில் கொடுக்கலை, நடுவில மஞ்சத்துண்டு கூட ஆட்சிக்கு வந்தார் ஏன் செய்யலை? ஏன்னா சட்டத்தில் இடமில்லை, குறைந்த பட்சம் சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேற்றனும்., அப்புறம் ஜனாதிபதிக்கு அனுப்பனும் என பல சிக்கல், மஞ்சத்துண்டு "தமிழினத்தலைவர்"னு சொல்லிக்கிறாரே அவர் ஆட்சியில் செய்ய வேண்டியது தானே, வீரமணி இந்த கோரிக்கை 19 ஆண்டா அப்படியே இருக்குனு சொல்லுறார்னு சுட்டி போட்டிங்க, ஏன் நடுவாலா மஞ்சத்துண்டு ஆட்சியில் இல்லவேயில்லையா?

# இப்போ எனக்கு ஒன்னு புரியலை, 1966 இல் இலங்கையில் உள்நாட்டு போரே இல்லை, மேலும் எம்ஜிஆர் படிக்க இடம் கொடுத்தது எல்லாம் தமிழ் நாட்டில வெகு பிற்காலத்தில், ஆனால் 66 இல் மத்திய அரசு கல்வி நிலையத்தில் படிச்சதுக்கு ஏன் இதை எல்லாம் உதாரணம் காட்டுறிங்க.

மத்திய கல்வி நிலையத்தில் படிக்க இந்தியராக இருக்கணும் அல்லது கல்வி கலாச்சார பரிவர்த்தனையில் வரணும்.

பாலு மகேந்திராவுக்கு அப்போ 26-27 வயசு தான் ,எனவே 10-12 ஆண்டுகள் இந்தியாவில் வசித்து குடியுரிமை வாங்கினார்னு சொல்ல முடியாது.

இப்போ சொல்லுங்க அதன் அடிப்படையில் புனேயில் படிச்சிருப்பார்னு?

என்னோட அவதானிப்பாக "இந்திய இலங்கை தமிழர்" ஆக சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்கலாம்னு சொன்னேன்,சரியான காரணத்தோடு மறுக்கவும்.

#//இப்போது இருப்போர் இந்திய வம்சாவழித்தமிழர் என அழைக்கப்படுகின்றனர்.//

இந்திய இலங்கை தமிழர் என சொன்னால் அப்போ என்ன அர்த்தமாம்?

அதன் பொருள் இந்திய வம்சாழி இலங்கை தமிழர் என்பது தானே?

சும்மா வெட்டியா வார்த்தைய மாத்திப்போட்டு அப்படியில்லைனு பேசிட்டு இருப்பது உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ?

#//அவரே சொல்லாதபோது ஏன் மத்தவங்க சொல்லவேண்டும்?//

நீங்க தானே "ஈழத்தமிழர்"னு சொல்லிட்டு வந்தீங்க அவ்வ்!
----------------------

குட்டிப்பிசாசு,

87-92 வரையில் தான் அப்படி இருந்தது என ,ஊர்ச்சுற்றி போட்ட சுட்டியில் காட்டுது, 97 இல் இல்லை என கி.வீரமணி சாட்சியாக சொல்லலாம்!

அப்பாடா நான் சொன்னால் இல்லைனு இக்பால் சொல்வார் , வீரமணிய சாட்டியாச்சு :-))

வவ்வால் சொன்னது…

அடடா நாம பின்னூட்டம் போட்ட சைக்கிள் கேப்ல இன்னொருத்தர் ஒரு தகவலை சொல்லி இருக்கார்.


# NRI என்று தானே நானும் சொல்கிறேன், அதாவது "இந்திய இலங்கை தமிழர்" ஆனால் ஈழம் என்றால் வேறுப்பொருளாம்.

அப்பொழுதெல்லாம் அயல்நாட்டு மாணவர்களுக்கு நேரடி அட்மிஷன் இல்லைனு நினைத்தேன்,(இப்பவும் தமிழ்நாட்டில் NRI admission உண்டு ,அயல்நாட்டு அனுமதியில்லை ,கலாச்சார பரிவர்த்தனை உண்டு)அயல்நாட்டு மாணவராக சேர்ந்திருப்பின் ,அதற்கான கட்டணம் மிக அதிகம் ,சரி அதையும் கட்டியிருக்கலாம். ஆனால் படிச்சதோடு இல்லாமல் தொடர்ந்து இங்கேயிருந்து பணியும் புரிந்திருக்கிறார் ,குடியுரிமை இல்லாமல் சாத்தியமேயில்லை.

எனவே எப்படி குடியுரிமை வாங்கினார் என்பதற்கு விளக்கமிலையே!!!

பெயரில்லா சொன்னது…

வவ்வால் - பாலூ மகேந்திரா இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் கிடையாது என்பது தான் நானறிந்த வரையிலான தகவல். பாலுவோடு பணியாற்றி இந்தியாவில் வசிக்கும் ஒரு இலங்கைத் தமிழ் கேமராமேன் ஊடாக பெற்ற தகவல். நீங்க என்ன சொல்ல வறீங்க என்றால் இந்தியாவில் குடியுரிமை வாங்க இலங்கையர் ஒன்று தாத்தா வழி இந்தியராக இருந்திருக்க வேண்டும், அல்லது பெரிய புளியங்கொம்பாக இருந்திருக்க வேண்டும் என்று. அது தவறு! இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முறையாக சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை வாங்கலாம், வாங்கிய பல நடுத்தர இலங்கைத் தமிழர்களை அறிவேன். முறையான ஆவணங்கள் இல்லாதோர் இந்தியா மட்டுமில்லை உலகில் எங்கும் குடியுரிமை பெற இயலாதுப்பா. கனடா ஐரோப்பாவில் குடியுரிமை வாங்கியுள்ள பல இலங்கைத் தமிழர்கள் இலங்கை பாஸ்போர்ட் ஐடி கார்ட் சமர்பித்தே வாங்கியுள்ளனர், எதுவுமில்லாமல் யாரும் எதுவும் செய்ய இயலாது. தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாத இலங்கை அகதிகளுக்கு ஆவணங்களை பெற்றுத் தர ஓபர் அமைப்பு செயல்பட்டு வருகின்றது. முகாமில் உள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வாங்க உள்ள இடர்பாடுகளே அச்சம் மற்றும் பொருளாதார சிக்கல் தில்லிக்கும் சென்னைக்கும் லோக்கல் காவல் நிலையத்துக்கும் அலைய வேண்டி இருக்கும், அதனை எளிமைபடுத்த வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

இந்தியாவில் டூறிஸ்ட் விசாவில் தொடர்ந்து வசித்து குடியுரிமை வாங்கி உள்ளார்கள். வெள்ளையர்கள், இலங்கையர்கள் வாங்கியதை நான் அறிவேன். கல்வி விசாவில் வந்த காலம் குடியுரிமை கணக்கில் வருவதில்லை, பொது சேவக விசா, வேலை விசா, வாழ்க்கைத் துணைவர் விசாவில் உள்ளோருக்கு அவர்கள் வந்த வசித்த காலம் முழுதையும் குடியுரிமை கணக்கில் காட்டலாம். வவ்வால் உங்களுக்கு விடயங்கள் தெரியலை என்றால் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டு எழுதுங்கள் ஏனெனில் இப்படி பலர் குழப்பி பயம் காட்டுவதால் தான் குடியுரிமை பெறுவதில் சிக்கல்களை இலங்கைத் தமிழ் அகதிகள் சந்திக்க வேண்டி இருக்கு

பெயரில்லா சொன்னது…

இலங்கை அகதிகளுக்கான கல்விக் கோட்டா 92 வரையும், பின்னர் 96 முதல் 2001 வரை இருந்தது. ஈழத்தாய் ஜெயா அம்மணி தான் எம்.ஜீ.ஆரின் அரசாணையை காலாவதி பண்ணியது. அதன் பின் தான் இலங்கை அகதி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் சிக்கலானது. இந்த சிக்கல் இன்றளவும் நீடிக்கின்றது. சென்னைப் பல்கலை கழகமும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் தொடர்ந்து இலங்கை அகதிகளுக்கு இட ஒதுக்கீடும் கட்டணத் தொகை குறைவாக கட்டவும் அனுமதித்துள்ளது. தனியார் கல்விச்சாலைகளில் காசு கொடுத்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் கற்க தடை ஏதுமில்லை, அவர்கள் +12 தமிழகத்தில் படிச்சிருந்தாலே போதுமானது, என் ஆர் ஐ கோட்டா எல்லாம் இலங்கைத் தமிழருக்கோ இலங்கை - இந்தியத் தமிழருக்கோ, மலேசிய சிங்கப்பூர் தமிழருக்கு பொருந்தாது. தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அகதிகள் என்ற கேட்ட்கரிக்குள்ளும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டின் அயல்நாட்டு கேட்டகரிக்குள்ளும் தான் வருவார்கள். இலங்கை தமிழ் அகதி மாணவர்களுக்கு உதவி ஆற்றியவன் என்ற வகையில் இந்த தகவல்களை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

? சொன்னது…

Citizenship act 1955-ன் படி ஒரு விலக்கு உண்டு.

//Provided that, if in the opinion of the Central Government, the applicant is a person who has rendered distinguished service to the cause of science, philosophy, art, literature, world peace or human progress generally, it may
waive all or any of the conditions specified in the Third Schedule.//

அதாவது மூன்றாவது ஷெட்யூல்படி ஒரு வருடம் இந்தியாவில் தங்கிய பின்பு குடியுரிமைக்கு விண்ணப்பித்து 14 வருடம் இந்தியாவில் தங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு ஒருவர் கலைத்துறையில் புகழ்பெற்றவர் என கருதினால் அவருக்கு மூன்றவது ஷெட்யூல் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளித்து உடனடியாக குடியுரிமை வழங்க முடியும். பாலுமகேந்திரா காமராமெனாக மாறியதும் இந்த சட்டபிரிவுப்படி குடியுரிமை (யாராவது கேரள பெரிய மனிதர் மூலம்) வாங்கியிருக்கலாம்.

தற்போது அமெரிக்காவில் இந்த போன்ற பிரிவில் விண்ணப்பித்தால் ஒரே மாதத்தில் பச்சை அட்டை வாங்க முடியும். ஆனால் அன்று பச்சை அட்டை போன்ற அனுமதி அட்டை இந்தியாவில் இல்லாத காரணத்தால் நேரடி குடியுரிமைதான்.

raajsree lkcmb சொன்னது…

அடடா.... ஒரு சந்தேகம் கேட்கப் போய் விசா தொடக்கம் குடியுரிமை வாங்குவது எப்படி என்பது வரை தெரிந்து கொண்டேன், அனைவருக்கும் நன்றி.

கோவி அய்யா, பாலு மகேந்திராவின் பொறுக்கித்தனங்களை நியாயப்படுத்துவதோ அவர் தான் மிக சிறந்த படைப்பாளி என்று சொல்வதோ எனது நோக்கமல்ல.

நீங்கள் சொல்வது போல் பொறுக்கித்தனம் செய்யாதவன் திறமை மட்டுமே போற்றத்தக்கது என்றால், விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர்த்து சினிமாவில் யாருமே போற்றத்தக்க கலைஞன் இல்லை என்பதையாவது ஏற்றுக் கொள்கிறீர்களா ?

வவ்வால் சொன்னது…

இக்பால்,

// வவ்வால் உங்களுக்கு விடயங்கள் தெரியலை என்றால் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டு எழுதுங்கள் ஏனெனில் இப்படி பலர் குழப்பி பயம் காட்டுவதால் தான் குடியுரிமை பெறுவதில் சிக்கல்களை இலங்கைத் தமிழ் அகதிகள் சந்திக்க வேண்டி இருக்கு//

நீங்க எந்த நாட்டு நடைமுறையை அறிந்து சொல்கிறீர்கள் என அறியேன், கடைசில கனடால இப்படினு முடிச்சிறாதிங்க அவ்வ்!

நான் முதலில் பின்னூட்டமிடும் போது தான் ,கொஞ்சம் தோராயமாக சொன்னேன்,அப்புறம் இந்திய குடியுரிமை சட்ட இணைய தளத்தினை பார்த்தாச்சு:-))

அப்புறம் விவரமும் சிலரிடம் கேட்டாச்சு, குடியுரிமைக்கு விண்ணப்பித்த காலத்திலிருந்து தான் கணக்கென சொன்னார்கள், வாழ்க்கை துணை விசா தகவல் அறியவில்லை, மற்றவை எல்லாம் நான் சொன்ன கணக்கே.

ஃபிரான்ஸ் குடியுரிமை உள்ளவர்களுக்கு இந்தியாவில் பிறந்த குழந்தையை இங்கேயே சில காலம் படிக்க வச்சுட்டு ,ஃபிரான்ஸ் அழைத்து சென்ற போது குடியுரிமை அளிக்க மறுத்த சம்பவத்தினையும் நேராக கேட்டுள்ளேன், ஒரு ஆண்டுக்குள் ஃபிரான்ஸ் தூதரகத்தில் குழந்தை பிறப்பை பதிவு செய்யணும்.

புதுவையில் குடியுரிமை பற்றி பலருக்கும் மிக நன்றாக தெரியும், ஏகப்ப்பட்ட கதைகளை சொல்லக்கேட்டுள்ளேன்.

எவ்வளவு சீக்கிரமாக பதிவு செய்கிறோமோ அவ்வளவு நல்லது.

# முகாம்களில் இருப்பவர்கள் ,கண்டிப்பாக முகாம்களில் இருக்கணும் என்றே கிடையாது, உள்ளூர் தொடர்பு முகவரி ஒன்றை அளித்துவிட்டு வெளியில் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் குடியிருக்கலாம், பலரும் அதைக்கூட செய்வதில்லை, ஆனால் முகாமில் வசதியில்லை ,எங்களை அரசு வதைக்குது என போலியாக புலம்பல் தான்!

ரொம்ப காலமாக அவர்களின் பிரச்சினைகளை அறிவேன் ,எல்லாம் அவங்க சொன்னது தான். நடைமுறை என்னனு கூட தெரியாது.

வவ்வால் சொன்னது…

இக்பால்,

//நீங்க என்ன சொல்ல வறீங்க என்றால் இந்தியாவில் குடியுரிமை வாங்க இலங்கையர் ஒன்று தாத்தா வழி இந்தியராக இருந்திருக்க வேண்டும், அல்லது பெரிய புளியங்கொம்பாக இருந்திருக்க வேண்டும் என்று. அது தவறு! இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முறையாக சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை வாங்கலாம், //

நிதானமா என்ன சொல்லி இருக்கேன்னு படிச்சிட்டு பதிலை சொல்லவும்.

1966 இல் அட்மிஷனுக்கு வந்ததும் குடியுரிமை வாங்கி இருக்க முடியாது என்று தான் சொல்லி இருக்கேன்.

உடனே குடியுரிமை வாங்கணும் என்றால் கண்டிப்பாக புளியங்கொம்ப்பாக தான் இருக்கணும்!


விண்ணப்பித்து 12 ஆண்டுகள் நியுட்ரல் குடிமகனாக வசிக்க வேண்டும். மிக வேகமாக 5 ஆண்டுகளில் வாங்க அப்பா/அம்மா இந்திய வம்சாவழினு காட்டணும்.

66 இல் வரும் போதே குடியுரிமையில் வந்தார் என்றால் அது சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாகவே இருக்க முடியும் என சொல்லி இருக்கேன்.

நீங்க என்னடானா காலையில் அப்ளிகேஷன் போட்டு மாலையில் குடிமகன் ஆகிடலாம்னு பேசிடு இருக்கிங்க.

முகாம்களில் இருப்பவர்கள் வந்தது முதல் விண்ணப்பிக்காமல் இருப்பதால் உடனே குடியுரிமை பெற முடிவதில்லை, மேலும் குறைந்த பட்ச ஆவணங்களும் இல்லை.

இவ்ளோ பேசுறிங்களே ,இலங்கையில இன்னும் சில லட்சம் தமிழர்கள் குடியுரிமை இல்லாம இருக்காங்களே அதை பத்தி ஒன்னுமே சொல்லக்காணோம்?

இந்த ஈழத்தமிழர்கள் என்னிக்காவது அதைப்பத்தி பேசி இருப்பங்களா? இல்லை ஈழ அனுதாபினு சொல்லிக்கிறவங்களாவது பேசியிருப்பாங்களா?

வருண் சொன்னது…

***அடடா.... ஒரு சந்தேகம் கேட்கப் போய் விசா தொடக்கம் குடியுரிமை வாங்குவது எப்படி என்பது வரை தெரிந்து கொண்டேன், அனைவருக்கும் நன்றி.

கோவி அய்யா, பாலு மகேந்திராவின் பொறுக்கித்தனங்களை நியாயப்படுத்துவதோ அவர் தான் மிக சிறந்த படைப்பாளி என்று சொல்வதோ எனது நோக்கமல்ல.

நீங்கள் சொல்வது போல் பொறுக்கித்தனம் செய்யாதவன் திறமை மட்டுமே போற்றத்தக்கது என்றால், விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர்த்து சினிமாவில் யாருமே போற்றத்தக்க கலைஞன் இல்லை என்பதையாவது ஏற்றுக் கொள்கிறீர்களா ? ***

எல்லாரையும் விமர்சிச்சுக்கிட்டுதான் இருக்கோம். உங்களைப் போல் ஒரு சிலருக்கு மட்டும்தான் பொறுக்கி பாலு ம்கேந்திராவி பொறுக்கினு சொன்னால் பொத்துக்கிட்டு வருது. ஆனால் நான் இதுக்காக கேட்டேன் அதுக்காக கேட்டேன்னு சபை கட்டு வேற!

என்ன வேணும் உங்களுக்கு?

தரங்கெட்டுப்போன கிழத்தமிழன் சத்தியராஜ்!

http://timeforsomelove.blogspot.com/2014/01/blog-post_18.html

போயி வாசிச்சுப் பார்க்கவும். எங்களுக்கு பாலு ம்கேந்திரா மேல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கெடையாது- உங்களுக்கு இருக்கிற "அன்பை"ப் போல! புரிஞ்சுக்கோங்க!

பெயரில்லா சொன்னது…

வவ்வால் பாலு இங்கே வரும் போது கண்டிப்பா குடியுரிமையோடு வந்திருக்க மாட்டாரு. கல்வி விசா அப்புறம் டூரிஸ்ட் விசா அப்புறம் சினிமாவில் கேமராமேனை வேலை செஞ்சாதல வேலை விசா எடுத்திருப்பாரு போல, அப்போ எல்லாம் இதை எல்லாம் எவன் பார்த்தான் பத்து வருடத்துக்கு விசா குத்தி கொடுதிருக்கலாம், பாலு எம்ஜி ஆர் அபிமானி வேற, அப்போ ஈழப்பிரச்சனையே தமிழ் தீவிரவாதிகளோ ராஜிவ் கொலையே ஏதுமில்லை. கவிஞர் பிரமிள் கூட இலங்கைத் தமிழர் கடைசி வரைக்கும் இந்திய குடிமகனாய் மாறி செத்துப் போனார். காசி ஆனந்தன் குடும்பத்தவர் பலருக்கும் இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாம். நல்லா கவனிச்ச வரைக்கும் இலங்கையின் கிழக்குத் தமிழர்கள் தான் அதிகமா இந்திய குடியுரிமை பெறுவதில் ஆர்வமா இருந்திருக்காங்க, நானறிந்த வரை.. அது ஏன் எனத் தெரியவில்லை. இலங்கையில் இன்னும் 1 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமையும் ஆவணங்கள் கொடுக்கப்படவில்லையாம். அது குறித்து பேசவோ போராடவோ இங்குள்ள நாம் டம்ளர் முதல் தமிழ் தொங்கிகளுக்கு வரை மனம் வரவில்லை, இவர்களுக்கு டாலர்கள் பவுண்டுகளில் மொய் வச்சாதான் வாயும் ஆசன வாயும் தொறக்கும் தமிள் கிமிள் உணர்வு எல்லாம் ஒன்னியும் கெடயாது.

? சொன்னது…

இசெ சொன்னது சரிதான்

ஒரு வருடம் இந்தியாவில் தங்கிய பின்பு குடியுரிமைக்கு விண்ணப்பித்து 14 வருடம் இந்தியாவில் தங்க வேண்டும். என்று தவறாக நானும் எழுதிவிட்டேன். விசா பெற்று 11 வருடங்கள் + 12 மாதங்கள் தொடர்ச்சியாக இருந்த பின் விண்ணப்பிக்க வேண்டும்.

பாலு மகேந்திர ஏற்கனவே இங்கிலாந்தில் படித்தவர், இலங்கை பாஸ்போர்ட் இல்லாம் எப்படி இங்கிலாந்து போயிருப்பார்? இதனால் இலங்கை குடியுரிமை இல்லா இந்திய தமிழர் என இந்தியாவுக்குள் நுழையும் வாய்ப்பில்லை. எனவே இலங்கை குடியுரிமை உள்ளவர் என யூகிக்க முடிகிறது.

(வெளிநாட்டு மாணவர் கோட்டாவில்) 1966-ல் படிக்க வந்தார். 1974 கேரள மாநில அரசு விருது பெற்றுள்ளார். ஆகவே இடைபட்ட காலத்தில் கலையில் சிறந்தவர் என்ற அடிப்படையில் நிபந்தனையற்ற உடனடி குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

? சொன்னது…

//இலங்கையில் இன்னும் 1 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமையும் ஆவணங்கள் கொடுக்கப்படவில்லையாம்.//

எஞ்சியிருக்கும் அனைத்து மலையகவாசிகளுக்கும் - சுமார் 1.6 லட்சம் பேருக்கு தொண்டைமான் முயற்சியில் 2003-ல் இலங்கை குடியுரிமை வழங்கபட்டது என்றல்லாவா படித்தேன்.

வவ்வால் சொன்னது…

//ஒரு வருடம் இந்தியாவில் தங்கிய பின்பு குடியுரிமைக்கு விண்ணப்பித்து 14 வருடம் இந்தியாவில் தங்க வேண்டும். என்று தவறாக நானும் எழுதிவிட்டேன். விசா பெற்று 11 வருடங்கள் + 12 மாதங்கள் தொடர்ச்சியாக இருந்த பின் விண்ணப்பிக்க வேண்டும்.
//

கண்ணாடிப்பார்ட்டிங்க நெறைய இருக்காங்களே அவ்வ்!

12 வருசம் ஆகும்னு சொன்னது அடியேன், மேலும் இப்ப சொல்லுறதும் தப்பான வகையே,

முதல் வருடத்தில் விண்ணப்பிச்சுட்டு 11 வருடம் +12 மாதம் தொடர்ச்சியா இருக்கணும், இல்லைனா இந்திய வம்சாவழினு காட்டி 5 ஆண்டுகளில் பெறலாம்.

ஆனால் எதா இருந்தாலும் ஆரம்பத்தில் விண்ணப்பிக்கனும், 10 வருடம் இல்லீகலாக/அகதியாக இருந்துட்டு விண்ணப்பிச்சால் ,விண்ணப்பிக்கும் தேதியில் இருந்து தான் கணக்கு துவங்கும்.

இது பொது விதி, ஆனால் விதி விலக்கு கொடுக்க அரசுக்கு உரிமை இருக்கு! அப்படியான விதி விலக்கு சாமானியனுக்கு கிடைக்காது.

அமெரிக்க கிரீன் கார்டுக்கும் இப்படித்தானாம் , விண்ணப்பிக்கும் முன் இருந்த நாள் கணக்கில் சேராது, விண்ணப்பிச்ச பின் வேலை மாறினால் மீண்டும் விண்ணப்பிக்கனுமாம், அப்புறம் ஆண்டுக்கணக்கு புதிய விண்ணப்பத்தின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கும் , கேள்விப்பட்டதை சொன்னேன்.

இந்தியாவில் மட்டும் விண்ணப்பிக்கும் முன்னரே இருந்து ஆண்டு கணக்கில சேர்ப்பாங்கனு எப்படி பேசிட்டு?

இத்தனைக்கும் இந்திய குடியுரிமை பெற்று விட்டால் அவர் ஜனாதிபதி,பிரதமர் என எப்பதவிக்கும் போட்டியிலாம், அமெரிக்காவில பொறக்காம குடியுரிமை மட்டும் வாங்கினா சனாதிபதி ஆக முடியாது, ஏன் அதை கேள்விக்கேட்கிறது அவ்வ்!
-------------------

இக்பால்,

//இலங்கையில் இன்னும் 1 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமையும் ஆவணங்கள் கொடுக்கப்படவில்லையாம். அது குறித்து பேசவோ போராடவோ இங்குள்ள நாம் டம்ளர் முதல் தமிழ் தொங்கிகளுக்கு வரை மனம் வரவில்லை, இவர்களுக்கு டாலர்கள் பவுண்டுகளில் மொய் வச்சாதான் வாயும் ஆசன வாயும் தொறக்கும் தமிள் கிமிள் உணர்வு எல்லாம் ஒன்னியும் கெடயாது.//

அதே, நானும் பல முறை ஈழ உணர்வாளர்களிடம் கேட்டாச்சு , உடனே ஓடிருவாங்க :-))

# ஈழப்பிரச்சினையின் உண்மையான வரலாற்றினை எழுதினால் பலப்பேரின் முகமூடி கிழியும், ஓரளவுக்கு தெரியும் ஏன் பலரின் வயத்தெரிச்சலை கொட்டிக்கணும் என பேசுவதில்லை.

#// கவிஞர் பிரமிள் கூட இலங்கைத் தமிழர் கடைசி வரைக்கும் இந்திய குடிமகனாய் மாறி செத்துப் போனார். காசி ஆனந்தன் குடும்பத்தவர் பலருக்கும் இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாம்.//

இந்தியாவில் 92 வரைக்கும் கெடுபிடியாக இல்லை, காலத்தில் விண்ணப்பிக்கனும் ,சராசரியா அந்த ஆண்டுகள் இருக்கணும், அவ்ளோ தான்.

மேலும் "ஸ்பெஷன் ரெபெரன்ஸில்" விண்ணப்பிச்சால் காரியம் சித்தியாகும்!!!

# திபெத் அகதிகளுக்கு ,ஏன் நேபாளிகளுக்கு எல்லாம் விசா,பாஸ்போர்ட் கெடுபிடியே இல்லை, அவர்கள் கல்லூரிகளில் படிக்க ஓபன் கோட்டாவில் விண்ணப்பிப்பார்கள், அனுமதி கொடுக்க மத்திய அரசாணை இருக்காம். இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் படிக்கலாம், மத்திய அரசின் சில கல்வி நிலையங்கள் மட்டும் விதி விலக்கு.

இந்திய ராணுவத்தில் கூர்க்க ரெஜிமெண்ட் என்றே இருப்பதை கவனிக்கவும். இதெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே இருப்பது.

நேபாளத்துக்கு இந்தியர்கள் போகவும் பாஸ்போர்ட் ,விசா தேவையில்லை, விசா ஆன் அரைவல் போல ஒரு ஸ்கீம் இருக்கு, போய்ட்டு வரலாம்.

பிரச்சினை இல்லை என உள்துறை அமைச்சகம் நினைப்பவர்களுக்கு கட்டுப்பாடில்லை.

ரகுநந்தன் சொன்னது…

//இவர்களுக்கு டாலர்கள் பவுண்டுகளில் மொய் வச்சாதான் வாயும் ஆசன வாயும் தொறக்கும் தமிள் கிமிள் உணர்வு எல்லாம் ஒன்னியும் கெடயாது.//

என்ன சொல்றீங்க இக்பால்?

1985 இல் எல்லா குடியுரிம இல்லாத (பறிக்கப்பட்ட) இந்திய வம்சாவழித்தமிழருக்கும் குடியுரிமை கொடுக்கப்பட்டுவிட்டது. இது ஈழப்போரின் மரைமுக விழைவுகளில் ஒன்று. ஈழப்போராட்டத்தில் மலையக தமிழர் இணைவதை தடுக்கவேண்டுமாயின் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கவேண்டும் என தொண்டமான் அவர்கள் ஜே.ஆர் அரசை மிரட்டி பணியவைத்தார்.
(இவர் தனது அரசியலில் சிக்கல் வரும்போது பிரபாகரன் ஆண்டவனால் அனுப்பப்பட்டவர் எனச் ஸ்ரேற்மன்ற் விடுவார். தனது காரியம் முடிந்தவுடன் எதுவும் பேசமாட்டார்)பின்னர் பிரேமதாசா அரசில் இக்குடியுரிமை வழங்கல் முழுமை பெற்றது.
விடயம் முழுமையாக அறியாமல் வந்து விட்டார் மொய்..ஆசனவாய் என அலம்பல் பேச்சு பேசிக்கொண்டு!
In 1984-85, to stop India intervening in Sri Lankan affairs, the UNP government granted citizenship right to all stateless persons. The late Savumiamoorthy Thondaman was instrumental in using this electoral strength in improvement of the socioeconomic conditions of Hill Country Tamils.

ஊர்சுற்றி சொன்னது…

வவ்வா,
//பெற்றவராக இருக்கலாம்னு சொன்னேன்,சரியான காரணத்தோடு மறுக்கவும்.///

சுப்பரான வாதத்திறன். நீங்கள் “இருக்கலாம்” என்பீர்கள் அதை தீர்க்க மற்ரவன் ஆதாரத்துடன் வரவேண்டும். அருமை அப்பு அருமை.
தலைகீழாகத் தொங்குமாம் வவ்வால் கேட்டால் ஆதாரம் கொண்டு வா என்னுமாம்!

வவ்வால் சொன்னது…

ரகுநந்தன்,

இந்த செய்தியைப்பாருங்க,

//In accordance with a 1964 agreement with India, Sri Lanka granted citizenship to 230,000 "stateless" Indian Tamils in 1988. Under the pact, India granted citizenship to the remainder, some 200,000 of whom now live in India. Another 75,000 Indian Tamils, who themselves or whose parents once applied for Indian citizenship, now wish to remain in Sri Lanka. The government has stated these Tamils will not be forced to return to India, although they are not technically citizens of Sri Lanka.//

http://www.fact-index.com/d/de/demographics_of_sri_lanka.html

இது 1988 இல் இருந்தே 75,000 தமிழர்கள் குடியுரிமை இல்லாமல் இருக்காங்கனு சொல்கிறது!

நீங்க 85 லவே எல்லாருக்கும் கொடுத்தாச்சுனு சொல்லுறிங்க.

அவர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை மட்டும் கொடுத்துட்டு ,நில உரிமை ,குடியுரிமை கொடுக்காமல் வச்சிருப்பதாக சமீபத்தில கூட படிச்சேன்.
-----------------------

ஊர்சுற்றி,

இல்லைனு மறுப்பவர்கள் தான் எப்படினு சொல்லனும்.

இந்திய இலங்கை தமிழர்கள் என இல்லைனு சொல்லிட்டு இந்திய வம்சாவழி தமிழர்கள்னு மொக்கையா விவாதம் பேசும் போதே இப்படியா அவ்வ்!

வவ்வால் சொன்னது…

ரகுநந்தன்,

இந்த செய்தியைப்பாருங்க,

//In accordance with a 1964 agreement with India, Sri Lanka granted citizenship to 230,000 "stateless" Indian Tamils in 1988. Under the pact, India granted citizenship to the remainder, some 200,000 of whom now live in India. Another 75,000 Indian Tamils, who themselves or whose parents once applied for Indian citizenship, now wish to remain in Sri Lanka. The government has stated these Tamils will not be forced to return to India, although they are not technically citizens of Sri Lanka.//

http://www.fact-index.com/d/de/demographics_of_sri_lanka.html

இது 1988 இல் இருந்தே 75,000 தமிழர்கள் குடியுரிமை இல்லாமல் இருக்காங்கனு சொல்கிறது!

நீங்க 85 லவே எல்லாருக்கும் கொடுத்தாச்சுனு சொல்லுறிங்க.

அவர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை மட்டும் கொடுத்துட்டு ,நில உரிமை ,குடியுரிமை கொடுக்காமல் வச்சிருப்பதாக சமீபத்தில கூட படிச்சேன்.
-----------------------

ஊர்சுற்றி,

இல்லைனு மறுப்பவர்கள் தான் எப்படினு சொல்லனும்.

இந்திய இலங்கை தமிழர்கள் என இல்லைனு சொல்லிட்டு இந்திய வம்சாவழி தமிழர்கள்னு மொக்கையா விவாதம் பேசும் போதே இப்படியா அவ்வ்!

*** சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
? சொன்னது…

//கண்ணாடிப்பார்ட்டிங்க நெறைய இருக்காங்களே அவ்வ்!12 வருசம் ஆகும்னு சொன்னது அடியேன், மேலும் இப்ப சொல்லுறதும் தப்பான வகையே,//

ஐயா சொன்னதுக்கு மாற எவன் என்ன சொன்னாலும் தப்பான வகைத்தான் இருக்குன்னு தெரியுஞ்சாமி. இருந்தாலும் ஐயாதான் சொன்னீகன்னு தெரியாம பேசிட்டேன்.பெரியமனசு பண்ணுங்க சாமி!

நான் சொல்ல வந்தது.... குடியுரிமை வேண்டும் என விண்ணப்பித்த பிறகு வருடக்கணக்கில் இருக்கனும் என நானும் உங்களைப் போல சொன்னது தவறு. விண்ணப்பிக்கும் முன்புதான் 12 வருடம் இருக்க வேண்டும்.

இந்திய அரசின் http://indiancitizenshiponline.nic.in இணையதளம் தெளிவாக விண்ணப்பிக்கும் தேதிக்கு முன்பு 12 வருடம் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்கிறது

3. By Naturalisation (section 6):
Citizenship of India by naturalization can be acquired by a foreigner (not being an illegal migrant) who is ordinarily resident in India for twelve years (throughout the period of twelve
months immediately preceding the date of application
and for eleven years in the aggregate in
the fourteen years preceding the twelve months) and fulfils other qualifications as specified in
third schedule to the act, 1955.

குடியுரிமைக்கு விண்ணிப்பிக்கின்றீர்களே இல்லையோ, 180 நாளுக்கு மேல் தங்க விரும்பும் எவரும் இந்தியா வந்த பொறவு 14 நாட்களுக்குள் Foreigners Regional Registration Office (FRRO) அல்லது லோக்கல் போலிசு superintendent அலுவலகத்தில் பதிவு செய்து, ரெசிடன்ட் அட்டை அல்லது LTV (long term visa) பெறவேண்டும். குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர் அல்லது சும்மா தங்குபவர் இரு வகையறா ஆட்களும் இவ்வாறு கட்டாயம் பதிவு செய்யவேண்டும். விருப்பமுள்ளவர் குடியுரிமை விண்ணப்பிக்கும் போது valid Residential Permit/LTV காட்டி விண்ணப்பிக்க வேண்டும் - இந்த டாக்குமென்ட் அவர்கள் இந்தியாவில் மொத்தம் தங்கியிருந்த ஆண்டுகளுக்கு அத்தாட்சியாகும்.

? சொன்னது…

//அமெரிக்க கிரீன் கார்டுக்கும் இப்படித்தானாம் , விண்ணப்பிக்கும் முன் இருந்த நாள் கணக்கில் சேராது, விண்ணப்பிச்ச பின் வேலை மாறினால் மீண்டும் விண்ணப்பிக்கனுமாம், அப்புறம் ஆண்டுக்கணக்கு புதிய விண்ணப்பத்தின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கும் , கேள்விப்பட்டதை சொன்னேன்.
இந்தியாவில் மட்டும் விண்ணப்பிக்கும் முன்னரே இருந்து ஆண்டு கணக்கில சேர்ப்பாங்கனு எப்படி பேசிட்டு?
இத்தனைக்கும் இந்திய குடியுரிமை பெற்று விட்டால் அவர் ஜனாதிபதி,பிரதமர் என எப்பதவிக்கும் போட்டியிலாம், அமெரிக்காவில பொறக்காம குடியுரிமை மட்டும் வாங்கினா சனாதிபதி ஆக முடியாது, ஏன் அதை கேள்விக்கேட்கிறது அவ்வ்!//

அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணபிக்க பச்சை அட்டை எனும் நிரந்தர தங்கும் அட்டை பெற்ற பிறகு வசிக்கும் காலம் மட்டும் கணக்கில் எடுத்துகொள்ளப்படும். இந்தியாவிலும் அதேதான். ஆனால இந்தியா வந்த உடனேயே எந்த விசாவில் இருந்தாலும் பதிவு செய்து தங்கும் அட்டை பெறலாம். அதுக்கு பெயர் ஏற்கனவே சொன்னது போல ரெசிடன்ட் பர்மிட். அமெரிக்காவில் எல்லா ஆட்களுக்கும் இந்தியாவைப் போல் கொடுக்கமாட்டார்கள். அதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும், தகுதியிருப்பின் கிடைக்கும்.

ஆனால் வேறு விசா வாங்காமல் நேரடியாக பச்சை பெற்று அமெரிக்காவில் நுழையவும் முடியும். உங்கள் குடும்பத்தினர் அமெரிக்க குடிமகனாக இருந்தாலோ அல்லது நீங்கள் சிறப்பு தகுதி பெற்றிருந்தால் அல்லது கீரின்கார்டு லாட்டரி அடித்தால் (இந்தியருக்கு தகுதியில்லை) நேரடியாக பச்சை அட்டை பெற்று சொல்ல முடியும்.

ஆனால் நீங்கள் வேலை செய்யும் கம்பனி ஸ்பான்சர் செய்தால் மட்டுமே வேலை மாறினால் புது கம்பனி மூலம் விண்ணபிக்க வேண்டும். உங்களையே நீங்கள் செல்ப் ஸ்பான்சர் செய்தால் வேலை போனாலும் பிரச்சனையில்லை, ஆனால் அதுக்கு சிறப்பு தகுதிகள் தேவை!

அமெரிக்க குடியுரிமை வாங்கியவர் , சனாதிபதி ஆக முடியாது, நம்மள மாதிரி எல்லோரும் இளிச்சவாயனுகளா என்ன? ஆனால் மாநில கவர்னராக இருக்கலாம். ஆஸ்திரிய நாட்டில் பிறந்த ஆர்னால்ட் ஸ்வாசர்நெகர் கலிபோர்னியா கவர்னராக இருந்த போது அவரை சனாதிபதி ஆக்க சட்டத்தை மாற்றலாம் என்று முயன்றார்கள். ஆனால் என்ன காரணத்தாலே அது நடக்கவில்லை. இதையெல்லாம் நான் கேட்டால் ஊரைப் பாக்க அனுப்பிவிடுவார்கள் ஏனெனில் இன்னமும் நான் இந்திய குடிமகன்தான்.

ரகுநந்தன் சொன்னது…

//நீங்க 85 லவே எல்லாருக்கும் கொடுத்தாச்சுனு சொல்லுறிங்க.//

நீங்கள் சொல்லுவோர் ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்ததின் படி இந்தியா செல்ல விண்னப்பித்து விட்டு போகாமல் இருந்தோர் பற்றியது. இந்தியா திரும்பிய மக்களில் பலர் தமது உறவினர் நண்பர்களை இந்தியாவில் தொழில்வாய்ப்பு இல்லை அங்கு வரவேண்டாம் என்றும் மலையகத்தில் தொடர்ந்து இருக்கும்படியும் சொல்ல பலர் போகாமல் இருந்தனர். இவர்களின் நிலை இழுபறி ஆகியது. அவர்களையும் 2004 அளவில் பதிவு செய்து குடிமக்கள் ஆக்கினர்.

ஆங்கிலத்தில் கொப்பி அண்ட் பேஸ்ற் போட்டால் மட்டும் போதாது அதைப் படிச்சும் பார்க்க வேணும்! மீண்டும் படிங்க. அப்படியும் புரியவில்லை என்றால்....

ஐநா அகதிகள் ஆணையமே வெளியிட்ட செய்தியைப் பாருங்கள்.
http://www.unhcr.org/3fcf59c62.html

ஊர்சுற்றி சொன்னது…

//இந்திய இலங்கை தமிழர்கள் என இல்லைனு சொல்லிட்டு இந்திய வம்சாவழி தமிழர்கள்னு மொக்கையா விவாதம் பேசும் போதே இப்படியா அவ்வ்!//

இந்திய வம்சாவழித்தமிழர் என்பதற்கும் இந்தியத் தமிழர் என்கின்ற சொற்பதத்துக்கும் இலங்கையில் தெளிவான வேறுபாடு உண்டு.

ஈழத்தமிழர் - இலங்கையை பூர்வீகமாய் கொண்டவர்கள்
மலையகத்தமிழர் (இந்திய வம்சாவழித்தமிழர்) - பிரித்தானிய அரசால் தேயிலை/ரப்பர்/கொக்கோ/கோப்பி தோட்டங்களில் வேலைக்கு கொண்டுவரப்பட்டோர்.
இந்தியத்தமிழர் - வியாபாரம் செய்ய வந்த இந்தியத்தமிழர்கள் (கொழும்புச் செட்டியார்கள்)

வவ்வால் சொன்னது…

//ஐயா சொன்னதுக்கு மாற எவன் என்ன சொன்னாலும் தப்பான வகைத்தான் இருக்குன்னு தெரியுஞ்சாமி. இருந்தாலும் ஐயாதான் சொன்னீகன்னு தெரியாம பேசிட்டேன்.பெரியமனசு பண்ணுங்க சாமி!

நான் சொல்ல வந்தது.... குடியுரிமை வேண்டும் என விண்ணப்பித்த பிறகு வருடக்கணக்கில் இருக்கனும் என நானும் உங்களைப் போல சொன்னது தவறு. விண்ணப்பிக்கும் முன்புதான் 12 வருடம் இருக்க வேண்டும்.

இந்திய அரசின் http://indiancitizenshiponline.nic.in இணையதளம் தெளிவாக விண்ணப்பிக்கும் தேதிக்கு முன்பு 12 வருடம் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்கிறது //

# அய்யா அமெரிக்க சட்ட ஆலோசகர் வார்த்தைக்கு வார்த்தை சரியா சொல்லணும்னு எதிர்ப்பார்க்கிறிங்க ,இல்லைனா தப்பா சொன்னதா தான் ஆகிடும், எனவே நாம தப்பாவே சொல்லிட்டோம் ,மன்னிச்சு!

ரெசிடெண்ட் பெர்மிட்டை தான் ,குடியுரிமை வாங்குறவங்களுக்கு மட்டும்னு நினைச்சு ,குடியுரிமைக்கு முன்னரே விண்ணப்பிக்கணும்னு சொல்லிட்டேன் , இனிமே கவனமா சொல்லிடுறேனுங்க சாமி அவ்வ்!

அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு ரெசிடெண்ட் பெர்மிட் வாங்குவது சிக்கல் ,எப்படி எனில் அவர்கள்(குடியுரிமை கோறுபவர்கள் அனைவருமே) "பொருளாதார ரீதியாக தங்களை தாங்களே பராமரித்து கொள்ளக்கூடியவர்கள்" என சான்று காட்டணும்!

நான் என்ன சொல்ல வரேன்னு இன்னும் புரியலைனா , எதாவது "குடியுரிமை விண்ணப்பத்தாரர்கள்" சமர்ப்பிக்கும் சான்றாவணங்களை தான் காட்டணும் அவ்வ்.

ஸ்டூடண்ட் விசா வாங்கவே ,படிக்க ,சோறு தின்ன எல்லாம் பண வசதி இருக்குனு பேங்க் ஸ்டேட்மெண்ட் காட்டணும்னு விதி இருக்கு என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். எனவே அதே காரணம் இங்கும்.

அகதிகள் முகாமில் இருப்பவர்களிடம் விசா இல்லை எனவே லாங்க் டெர்ம் விசாவிற்கு விண்ணப்பிக்க இயலாது.

மேலும் பொருளாதார ஆதாரமில்லை எனவே ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கும் விண்ணப்பிக்க இயலாது, எனவே குடியுரிமை கோரியும் விண்ணப்பிக்க இயலாது!

# அகதிகள் முகாமில் உள்ள வரையில் மாதந்தோறும்,குடும்ப தலைவருக்கு ரூ 1500, தலைவிக்கு 1000, மற்ற மணமாகாத அடல்ட் எனில் 1000 ரூ ,சிறார்கள் எனில் 500 ரூ என உதவித்தொகை வழங்கப்படுகிறது.

குடியுரிமைக்கு விண்ணப்பித்தால் இத்தொகை வழங்கப்படாது, மேலும் குடியுரிமை பெற்றதும் வழங்கப்படாது, ஏன் எனில் இந்தியாவில் எந்தக்குடிமகனுக்குமே அரசு இப்படி உதவி தொகை வழங்கும் வழக்கமில்லையே!!!

எனவே அரசே முடிவு எடுத்து குடியுரிமை வழங்கினால் தான் அகதிகள் முகாமில் இருப்பவர்கள் குடியுரிமை பெறுவது எளிதாகும்.

# அகதிகளுக்கு இந்தியா என்ன செய்தது என புலம்புவர்கள், இந்தியாவில் இருப்பவனுக்கே அரசாங்கம் எதுவும் செய்வதில்லை என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள், மேலும் இந்த அளவுக்கு செய்வதே இந்தியா போன்ற நாடுகளில் பெரிய விடயம்.
-------------------------------------

வவ்வால் சொன்னது…

ரகுநந்தன்,

//ஆங்கிலத்தில் கொப்பி அண்ட் பேஸ்ற் போட்டால் மட்டும் போதாது அதைப் படிச்சும் பார்க்க வேணும்! மீண்டும் படிங்க. அப்படியும் புரியவில்லை என்றால்....//

அய்யா ஆங்கிலமேதை,எனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது,தமிழ் மட்டுமே படிக்க தெரிஞ்ச அப்பிராணி,ஏன் இப்படி ஆங்கில மோகம் கொண்டு ,தமிழ் மட்டுமே படிக்க தெரிந்தவர்கள் மீது "தனி மனித" தாக்குதல்(இப்பவே நாம சொல்லிடனும் ,இல்லைனா நம்மளப்பார்த்து சொல்லுவாய்ங்க) செய்கிறீர்கள் அவ்வ்!

ஏம்ப்பா முதலில் 1985 இல் என்பீர்கள் ,எதாவது சுட்டிக்கொடுத்தால் 2004 என்பீர்களா?

தெரியாமத்தான் கேட்கிறேன் ,1964 இல் சாஸ்திரி ஒப்பந்த்தின் படி பதிவு செய்துவிட்டார்கள் என்பதற்காக 2004 வரையில் 30 ஆண்டுகளாக ஏன் குடியுரிமை கொடுக்கலை,அது தப்பில்லையா?

அவர்கள் எல்லாம் வெள்ளைக்காரன் காலத்தில் இலங்கைக்கு போய் அங்கேயே பொறந்து வளர்ந்தவர்கள், ஆனால் குடியுரிமை இல்லைனு தொறத்துவீங்க, ரொம்ப போராடினால் 2004 இல் தான் கொடுப்பீங்க, ஆனால் நீங்களாம்(ஈழத்தவர்கள்) எங்கே போனாலும் 3 ஆண்டில குடியுரிமை கொடுக்கணும்னு சட்டம் பேசுவிங்க, என்ன கொடுமை சார் இது?

உங்க கணக்குப்படியே 2004 இல் கொடுத்தாங்கன்னு வச்சுப்போம், ஆனால் அப்படி இருக்குனு 2004 க்கு முன்னர் கூட எவன் தமிழ்நாட்டில் வாய தொறந்தான் சொல்லுங்க?

எல்லாருக்கும் குடியுரிமை அளிக்கப்பட்டதா என இப்பவும் சொல்லிட முடியாது , வெளியில் வராமல் கூட பல தகவல்கள் இருக்கலாம்.
----------------------

ஊர்சுற்றி,

//ஈழத்தமிழர் - இலங்கையை பூர்வீகமாய் கொண்டவர்கள்
மலையகத்தமிழர் (இந்திய வம்சாவழித்தமிழர்) - பிரித்தானிய அரசால் தேயிலை/ரப்பர்/கொக்கோ/கோப்பி தோட்டங்களில் வேலைக்கு கொண்டுவரப்பட்டோர்.
இந்தியத்தமிழர் - வியாபாரம் செய்ய வந்த இந்தியத்தமிழர்கள் (கொழும்புச் செட்டியார்கள்)//

யே யப்பா முடியலடா சாமி , என்னா காமெடி ...என்னா காமெடி அவ்வ்!

இலங்கை பக்கமே எட்டிப்பார்க்காத நானும் இந்திய தமிழர் தானே அப்போ இலங்கைல இருக்க இந்திய தமிழருக்கும் எனக்கும் என்ன பேருல வித்தியாசம் ?

இலங்கைல இருந்தால் "இலங்கை இந்திய தமிழர்" என சொல்ல வேண்டாமோ?

ஆப்ரிக்கன், அமெரிக்காவில் உள்ள ஆப்ரிக்கன் "ஆப்ரோ-அமெரிக்கன்" இந்த வித்தியாசமாச்சும் தெரியுமா?

# இலங்கைக்கு வியாபாரம் செய்ய வந்தாலே "நேரா செட்டியார் ஜாதில" சேர்த்துடுவிங்களா அவ்வ்!

பாவம் இலங்கையில ,ரெட்டியார் ,முதலியார் , வன்னியர் ,தலித் யாருமே வியாபாரம் செய்ய முடியாது போல அவ்வ்!

ஊர்சுற்றி சொன்னது…

//இலங்கை பக்கமே எட்டிப்பார்க்காத நானும் இந்திய தமிழர் தானே அப்போ இலங்கைல இருக்க இந்திய தமிழருக்கும் எனக்கும் என்ன பேருல வித்தியாசம் ?//

நாம் இலங்கையில் இருக்கும் தமிழரின் வகைப்படுத்தல் பற்றிப் பேசுகிறோம் என நினைக்கிறேன். இல்லையா வவ்வால்?

//இலங்கைல இருந்தால் "இலங்கை இந்திய தமிழர்" என சொல்ல வேண்டாமோ?//

அதைத்தான் “இந்திய வம்சாவழி” என இலங்கை அரசியல்/சமூக மட்டத்தில் சொல்கிறார்கள். உங்களுக்கு புதிய சொல்லாடல் அறிமுகப்படுத்த விருப்பம் என்றால் அதைச் செய்யுங்கள். ஏன் செய்யவில்லை என என்னைக்கேட்கவேண்டாம்.

//ஆப்ரிக்கன், அமெரிக்காவில் உள்ள ஆப்ரிக்கன் "ஆப்ரோ-அமெரிக்கன்" இந்த வித்தியாசமாச்சும் தெரியுமா?//

ஆம். முதலில் அவர்களை "நிகர்- Nigger" என அழைத்தனர். அவர்கள் எதிர்த்தபோது “பிளக் அமெரிக்கன்ஸ்-Black Americans” என்றார்கள். அதுவும் பிடிக்காமல் போக African Americans என்கிறார்கள். அதற்கும் ஈழ/இந்திய வம்சாவழி தமிழர் விவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

//# இலங்கைக்கு வியாபாரம் செய்ய வந்தாலே "நேரா செட்டியார் ஜாதில" சேர்த்துடுவிங்களா அவ்வ்!//

உங்க ஊர்ல எல்லாமே “ஜாதி” கண்னாடி போட்டு பார்க்கிரீங்க. காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் !
இந்த லட்சணத்தில அமெரிகால என்ன சொறாங்க தெரியுமோ என கதை அளப்பு!

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

நீங்க ஊரை மட்டுமில்ல ,வார்த்தைகளையும் சுத்தி சுத்தி வருவீங்க போல அவ்வ்!

"synonyms" இணைச்சொல் என்றால் என்னனு எப்பவாது நேரமிருப்பின் படிச்சு தெரிந்துக்கொள்ளவும்!

பூவ பூனு சொல்லலாம்,மலர்னு சொல்லலாம், புய்ப்பம்னு சொல்லலாம் அவ்வ்!

//உங்க ஊர்ல எல்லாமே “ஜாதி” கண்னாடி போட்டு பார்க்கிரீங்க. காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் !
இந்த லட்சணத்தில அமெரிகால என்ன சொறாங்க தெரியுமோ என கதை அளப்பு!//

இலங்கையில் இருப்பவர்கள் தான் ஜாதிய புடிச்சுட்டு தொங்குறாங்க, வியாபாரம் செய்தால் கூட அது இந்த ஜாதியென முடிவுக்கட்டுறது நீங்க தான் நானில்லை.

தமிழ்நாட்டுல பெரியாரின் கொள்கைகளின் தாக்கம் அதிகம்.

மேலும் ஈழப்பிரச்சினையில் தோல்வி கிட்ட ஒரு காரணம் ,ஜாதிய பற்றுனு ஊரு உலகத்துக்கே தெரியும்.

உண்மையில் சுமார் 2 லட்சம் அளவுக்கு தான் ஈழப்பிரச்சினையில் பங்குக்கொண்டதே, மற்றவர்கள் எல்லாம் ஏன் பங்குபெறவில்லை என்பதற்கு என்ன விளக்கம் அளிப்பீர்களோ :-))

போங்க போய் இனிமேலாச்சும் எதாவது உருப்படியா கத்துக்குங்க,இன்னும் பழம் பஞ்சாங்கமாவே இருந்தா எப்பூடி?

ஊர்சுற்றி சொன்னது…

//..பூவ பூனு சொல்லலாம்,மலர்னு சொல்லலாம், புய்ப்பம்னு சொல்லலாம் அவ்வ்!
..//

இவ்வளவு விவாததுக்குப் பின்னர் ஈழத்தமிழனும், இந்தியத்தமிழனும், இந்திய வம்சாவழித்தமிழனும்...எல்லாம் ஒண்ணுங்கிறீங்க/
அப்போ விவாதத்துல் நீங்களாய் ஆரம்பிச்சு வச்சது என்னப்பு?

//இலங்கையில் இருப்பவர்கள் தான் ஜாதிய புடிச்சுட்டு தொங்குறாங்க, வியாபாரம் செய்தால் கூட அது இந்த ஜாதியென முடிவுக்கட்டுறது நீங்க தான் நானில்லை.//

நீங்கதான் செட்டியார் எந்றால் அது சாதி என வரிந்து கட்டிக்கொண்டு வந்தது. இணைச்சொல் கதை விட்டது அப்பு. நானில்லை. போய் எனது பின்னூட்டத்தையும் உங்கள் பின்னூட்டத்தையும் படிச்சுப்பாருங்க. இலங்கையில் பெரிய பணக்காரர்களை செட்டியாரே என அன்பாக அழைக்கும் பழக்கம் கூட உள்ளது.

//மேலும் ஈழப்பிரச்சினையில் தோல்வி கிட்ட ஒரு காரணம் ,ஜாதிய பற்றுனு ஊரு உலகத்துக்கே தெரியும்.//
அட...புதிசாயிருக்கே?

//உண்மையில் சுமார் 2 லட்சம் அளவுக்கு தான் ஈழப்பிரச்சினையில் பங்குக்கொண்டதே, மற்றவர்கள் எல்லாம் ஏன் பங்குபெறவில்லை என்பதற்கு என்ன விளக்கம் அளிப்பீர்களோ :-))//

நீங்கள் ஆதாரம் இல்லாமல் கேள்விப்பட்டேன், அறிந்துகொண்டேன் எனச் சொல்வீர்கள் நான் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் ஆக்கும்.

இந்த 2 லட்சம் பேருக்கு எதிராகவா உலகமே திரண்டது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ஜப்பான், மாலைதீவி, பாகிஸ்தான், தாய்லாந்து....அடடா?

வேகநரி சொன்னது…

//கோவி.கண்ணன் சொன்னது
பின்னூட்ட ஆதரவளித்து மாற்றுகருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி//
கோபியின் இந்த வழிகாட்டலை புலம் பெயர்ந்த ஈழத்துகாரர்களும் அவர்கள் வழிகாட்டலில் செயல்படும் தமிழகந்தவங்களும் கவனத்தில் எடுக்க வேண்டியது. கோவி.கண்ணன் மாதிரி வேறு கருத்து தெரிவிப்பபவங்களுக்கு நன்றி எல்லாம் தெரிவிக்க தேவையில்லைங்க.
ஆனா வேறு ஒரு கருத்து தெரிவிப்பவங்களை கொலை செய்ய வேண்டும் என்று கொலை வெறி கூடாது.

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர்

இலங்கையில் உள்ள அந்தனை தமிழர்களும் இந்திய வம்சாவளிகள் தான். இந்தியாவில் இருந்து போனவன் தான். இதை அமெரிக்கனும் பலநாடுகளில் இருந்து குடியேறிய கனடாகாரனும் கூட மறுக்க மாட்டான்.
இதில் ஒரு பகுதி ஆங்கிலேயர் காலங்களில் இலங்கைக்கு கொண்டு செல்லபட்டவங்க, மற்றவங்க தாங்களா போனவங்க.
இதைவிட சில நுற்றண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு குடிபெயர்ந்து போனவங்க. இவர்களில் யாழ்பாணத்தில் குடியேறியவர்கள் தங்களை கிரீடம் கொண்ட தலையுடன் பிறந்தவர்கள் மற்ற தமிழங்க இந்திய வம்சாவளிகள் கீழானவர்கள் என்பது தமிழகத்திலே உள்ள சாதி அமைப்ப மாதிரியே ஒரு கொடிய சாதி அமைப்பு.

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

உங்களுக்கு தமிழ் சரியா புரியாதோ? அது சரி சின்ன வயசில் சிங்களத்தை படிச்சு வளர்ந்தா இப்படித்தான் புரிஞ்சுக்க தோன்றும் அவ்வ்!

//இவ்வளவு விவாததுக்குப் பின்னர் ஈழத்தமிழனும், இந்தியத்தமிழனும், இந்திய வம்சாவழித்தமிழனும்...எல்லாம் ஒண்ணுங்கிறீங்க/
அப்போ விவாதத்துல் நீங்களாய் ஆரம்பிச்சு வச்சது என்னப்பு?//

நான் சொன்னது இந்திய வம்சாவழி என்பதும் "இலங்கை இந்திய தமிழன்" என்பதும் ஒன்று என,அதுக்கு தான் பூ ,மலர் உதாரணம்.

இலங்கையில இருக்க உங்கள போல சிலர் தான் ஈழத்தமிழர் வேற , இந்தியாவில் இருந்து வந்தவங்க வேறனு சொல்வதால் தான் அதையும் சொன்னேன், ஒருக்கா நான் என்ன சொன்னேன் என்பதை படியும்.

இதுக்கு மேலயும் மொக்கை போடுவேன் என்றால் போடுங்க,நான் பதிலுக்கு போட்டால் அப்பாலிக்கா அழக்கூடாது சொல்லிட்டேன்!

பதிவ எழுதுனவர் அலறிடுவாரேனு தான் அடக்கி வாசிக்கிறேன் ,இல்லைனா இன்னேரம் துண்டைக்காணோம் துணியக்காணோம்னு ஓட வச்சிருப்பேன் அவ்வ்!

# //நீங்கதான் செட்டியார் எந்றால் அது சாதி என வரிந்து கட்டிக்கொண்டு வந்தது.//

செட்டியார் என்றால் ஜாதியல்லனு நீர் நிருபித்தால் உமக்கு 1000 பொற்காசு இல்லை எனினும் 1000 ரூவாத்தர தயார் , ரெடியா?

// இணைச்சொல் கதை விட்டது அப்பு. நானில்லை. //

இணைச்சொல் என சொன்னது , வம்சாவழி, இலங்கை இந்திய தமிழர் என்பதற்கு, தமிழே ரொம்ப தடுமாற்றம் போல இருக்கு அவ்வ்.

//இலங்கையில் பெரிய பணக்காரர்களை செட்டியாரே என அன்பாக அழைக்கும் பழக்கம் கூட உள்ளது.//

நாசமா போச்சு ,அப்புறம் ஏன் "யாழ் வேளாளர்" என பீற்றிக்கிறாங்க, பணக்கார வேளாளர் எல்லாம் செட்டியார்னே சொல்லிக்கலாமே அவ்வ்!

தமிழ் நாட்டில இருந்து தான் எல்லாமே அதாவது சோ கால்ட் "ஈழத்தமிழர்களே" போயிருக்கணும், எனவே தமிழ் நாட்டில் என்ன பாவிக்கிறாங்கனு முதலில் தெரிந்து கொள்ளவும்.

//அட...புதிசாயிருக்கே? //

புரியலைனா புதுசா தான் இருக்கும்.

//நீங்கள் ஆதாரம் இல்லாமல் கேள்விப்பட்டேன், அறிந்துகொண்டேன் எனச் சொல்வீர்கள் நான் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் ஆக்கும்.

இந்த 2 லட்சம் பேருக்கு எதிராகவா உலகமே திரண்டது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ஜப்பான், மாலைதீவி, பாகிஸ்தான், தாய்லாந்து....அடடா?//

உலகம் எங்கே இருந்து திரண்டது :-))

எல்லாம் நீங்களா தான் சொல்லிக்கணும் அவ்வ்.

அது சரி அமெரிக்காவும் திரண்டதுனு சொல்லுறிங்களே ,அப்படியாப்பட்ட அமெரிக்காவில அதை எதிர்த்து போராடினிங்களா, ஆனால் அங்கே உட்கார்ந்துக்கிட்டு பொழைப்பை மட்டும் வெட்கமே இல்லாம நடத்துவீங்களா?

எதா இருந்தாலும் இந்தியாவ மட்டும் குறை சொல்லுவிங்க, ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ்,கனடா, ஜெர்மனி எல்லாம் என்ன செய்தாலும் குடியுரிமை குடுக்கிறாங்க,நல்ல வருமானம் கிடைக்குது எனவே ஒன்னும் சொல்லாம ஒட்டிக்கிட்டு இருப்பிங்க :-))

ஏன்யா உயிர் பொழைக்க ஓடுறவனுக்கு அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,இங்கிலாந்துனு விசா ,விமான டிக்கெட் வாங்கலாம் நேரம் இருக்குதாமா?

இல்லைனா இனக்கலவரம் என்னிக்கு எத்தினி மணிக்கு வரும்னு முன்னாடியே தெரிஞ்சு எல்லா ஏற்பாடும் செய்து வைத்தீங்களா?

நான் ஆரம்பிச்சா ,ஆதிலே இருந்து உருவி எடுத்து அடிப்பேன் , எதுக்கும் யோசனை பண்ணிட்டு ஆரம்பிக்கவும்.

ஊர்சுற்றி சொன்னது…

//நான் சொன்னது இந்திய வம்சாவழி என்பதும் "இலங்கை இந்திய தமிழன்" என்பதும் ஒன்று என,அதுக்கு தான் பூ ,மலர் உதாரணம்.//

அமெரிக்க நீக்கிரோக்கள் தம்மை கறுப்பர்கள் என அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் பெயர் மாற்ரம். இந்திய வம்சாவழியினர் எங்கே எதிர்ப்புத்தெரிவித்தனர்?
உங்களுக்கு விருப்பம் என்றால் அவர்கல் என்ன செய்ய முடியும்?

அடிப்படை லொஜிக் தெரியாமல் வந்து விட்டார் பூ, புய்ப்பம் என முடிச்சுப்போட்டுக்கொண்டு!

//செட்டியார் என்றால் ஜாதியல்லனு நீர் நிருபித்தால் உமக்கு 1000 பொற்காசு இல்லை எனினும் 1000 ரூவாத்தர தயார் , ரெடியா?//

இலங்கையில் உள்ள தமிழர்களைப் பற்றிப்பேசுகிறோம். இந்தியத்தமிழர்களை அல்ல.

//நாசமா போச்சு ,அப்புறம் ஏன் "யாழ் வேளாளர்" என பீற்றிக்கிறாங்க, //

யார் பீத்திக்கிட்டது?
நான் இங்கே சொன்னேனா?
எங்கேயோ எவனோ சொல்லுவான். அவனைக்கேட்கவேண்டியதை இங்கே வந்து ஏன் அரிப்பெடுக்க வேண்டும்?

//பணக்கார வேளாளர் எல்லாம் செட்டியார்னே சொல்லிக்கலாமே அவ்வ்!//

அதான் சொன்னேனே! பணக்காரர்களை செல்லமாக செட்டியாரே என விழிக்கும் பழக்கம் உண்டு. சிங்களவர்கள் தமிழ் ப் பணக்காரர்களை “முதலாளி” என அழைப்பார்கள்!

//அது சரி அமெரிக்காவும் திரண்டதுனு சொல்லுறிங்களே ,அப்படியாப்பட்ட அமெரிக்காவில அதை எதிர்த்து போராடினிங்களா, ஆனால் அங்கே உட்கார்ந்துக்கிட்டு பொழைப்பை மட்டும் வெட்கமே இல்லாம நடத்துவீங்களா?
//
ஆஹா....இவர் தலைகீழாக நிற்கிறார் என்றுபார்த்தால் கண்னை மூடிக்கொண்டும் நிற்கிறார் என்று தெரிகிறது. அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள்..இன்றுவரை தொடரிஉம் போராட்டங்கள் பற்றிய அறிவு அவ்வளவுதான் போலிருக்கு!

//ஏன்யா உயிர் பொழைக்க ஓடுறவனுக்கு அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,இங்கிலாந்துனு விசா ,விமான டிக்கெட் வாங்கலாம் நேரம் இருக்குதாமா?//

இன்னொருவன் வாங்கி வச்சு ஏர்போட்டில் லஞ்சம் கொடுத்து செட்டப்பண்னி வச்சிருப்பான் என்றெல்லாம் கேள்விப்படவில்லையா?

பகலில் தலைகீழாக தூங்கினால் இந்தச்சிக்கல்தான்!

//நான் ஆரம்பிச்சா ,ஆதிலே இருந்து உருவி எடுத்து அடிப்பேன் , எதுக்கும் யோசனை பண்ணிட்டு ஆரம்பிக்கவும்.//

அதுதான் பாலுமகேந்திரா இந்திய வம்சாவழி என நிரூபித்த லட்சணம் கண்டோமே?
இந்த கட்டுரையின் தலைப்பு பாலுமகேந்திரா பற்றியது. அதற்கு இன்னும் புரூஃப் இல்லை. அஙே கேல்விப்பட்டேன், அவர்சொன்னார்..இவர் சொன்னார் பதில். ஆனால் தன்னைப்பற்றி எடுத்து விடும் பீலா இருக்கே. இதில் அடக்கி வாசிக்கிறார்ராம். விட்டால் எரிச்சுப்போடுவாராம்.

ஊர்சுற்றி சொன்னது…

///நான் ஆரம்பிச்சா ,ஆதிலே இருந்து உருவி எடுத்து அடிப்பேன் , எதுக்கும் யோசனை பண்ணிட்டு ஆரம்பிக்கவும்.//

அதுதானே...ஒரு தலைப்புக்குள் நின்று விவாதம் செய்ய வழி தெரியதோரே ஆதி முதல் அந்தம் வரை ஓடி திசை திருப்புவது!
பாலுமகேந்திரா ஈழத்தமிழர் இல்லை என்றவர்...சினிமாக்கல்லூரியில் எப்படி அட்மிசன் எடுத்தார் எனவும் பின்னர் அங்கிருந்து எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரி அனுமதி வழங்கவில்லை எனவும் பின்னர் அப்படி அறியவில்லை எனவும் பின்னர் ஏன் அமெரிக்கர்கள் போல இந்திய வம்சாவழியினரை அழைப்படில்லை எனவும் பூ..புய்ப்பம் என கதை அளந்து பின்னர் இலங்கையில் செல்லமாக “செட்டியார்” என அழைப்பதை சாதியமாய் திரித்து கதை விட்டவர் சொல்கிறார் கேளுங்கள். கேட்டால் இலங்கை பற்றிய செட்டியார் சொற்பதத்தை வசதியாக இருந்து இந்தியாவோடு இனைத்து சலஞ்ச் விடுகிறார். 1000 பொற்காசு வேறாம்.
இந்த லட்சணத்தில் எச்ச்சரிக்கை வேறு !!!

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

//இந்திய வம்சாவழியினர் எங்கே எதிர்ப்புத்தெரிவித்தனர்?
உங்களுக்கு விருப்பம் என்றால் அவர்கல் என்ன செய்ய முடியும்?//

ஈழத்தமிழர் என்றும் ,இலங்கை இந்தியத்தமிழர் என்றும் வேறுபாடு அதாவது இந்திய வம்சாவழித்தமிழர் என்று வேறுபாடு காட்டுகிறார்கள் என்பதை சொல்லத்தான் அந்த பெயரைப்பயன்ப்படுத்தினேன்,ஆகவே ஈழத்தமிழர் ,இந்திய வம்சாவழித்தமிழர் என வேறுபாடு இல்லையா? நீங்க என்னமோ பெயரை சொல்ல எதிர்ப்பானு பேரை மட்டும் புடிச்சுக்கிறிங்க,அதை ஏன் சொன்னாங்கனு யோசிக்க திறனில்லையா? இல்லை மறந்து போச்சா?

இப்பவும் இலங்கை குடியுரிமைப்பெற்றவர்கள் எல்லாம் ஒரே "தமிழர்" என்றா சொல்ல வருகிறீர்கள்? அப்படி இருக்குமானால் சந்தோஷமே அவ்வ்!

அடமாக இலங்கை இந்திய தமிழர்கள் என்பது தவறு என சொல்வதானால் ,ஈழத்தமிழர்கள் என சொல்வதும் தவறு அப்படி எவனுமே இல்லை,எல்லாமே இந்தியாவில் இருந்து போன "இந்திய வம்சாவழித்தமிழர்கள்" தான், ஈழத்தில் எங்கே இருந்து தமிழன் தனியா மொளைச்சான்?

அப்படி மொளைச்சான் எனில்,தமிழ் நாட்டில் இருப்பவர்களை பார்த்து தொப்புள் கொடி உறவே என எதன் அடிப்படையில் சொல்லிக்கிறிங்க?

தமிழக தமிழன் தமிழ்நாட்டிலேயே தோன்றியவன்,அவனுக்கு ஈழத்தில மொளைச்ச தமிழனுக்கும் எவ்வகை உறவு?

//இலங்கையில் உள்ள தமிழர்களைப் பற்றிப்பேசுகிறோம். இந்தியத்தமிழர்களை அல்ல.//

ஏன்யா ,செட்டியார்கள் எல்லாம் வாணிபம் செய்ய இந்தியாவில் இருந்து வந்தவர்கள்னு சொன்னது நீர் தானே? அப்போ இந்தியாவில் இருந்து வந்து வாணிகம் செய்ய வந்தவங்கலாம் செட்டியார்னு எதுக்கு பேசினீர்?

இந்திய தமிழர்களிடையே செட்டியார்னா ஜாதி எனில் அவங்க இலங்கைக்கு வந்த பின்னரும் அதையே தானே சொல்லனும்?

என்னமோ இப்ப மட்டும் இலங்கை தமிழர்களை பத்தி பேசினோம்னு சொல்லிக்கிட்டு? மாட்டிக்கிட்டதும் நழுவறதா :-))

//எங்கேயோ எவனோ சொல்லுவான். அவனைக்கேட்கவேண்டியதை இங்கே வந்து ஏன் அரிப்பெடுக்க வேண்டும்?//

எங்கேயோ எவனோ , செட்டியார்னா பணக்காரன்னு சொன்னால் இங்கே வந்து ஏன் அரிப்பெடுக்க வேண்டும் :-))

//ஆஹா....இவர் தலைகீழாக நிற்கிறார் என்றுபார்த்தால் கண்னை மூடிக்கொண்டும் நிற்கிறார் என்று தெரிகிறது. அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள்..இன்றுவரை தொடரிஉம் போராட்டங்கள் பற்றிய அறிவு அவ்வளவுதான் போலிருக்கு!//

அமெரிக்காவில் நடத்தின போராட்டங்களை தான் கண்டோமே, புதுப்படங்களை வாங்கி தியேட்டரில் போட்டு பார்ப்பது தானே :-))

அமெரிக்க அரசு "விடுதலைப்புலிகளை" தடை செய்த இயக்கமாகவே" வைத்திருந்தது அதனை நீக்கி இருக்க வேண்டாமா?

இல்லை வழக்காவது போட்டிங்களா?

இந்தியாவில் வீணாப்போன வைக்கோ இன்னிக்கும் தடை நீக்க என வழக்கில் கலந்துக்கிட்டு இருக்கார்.

அமெரிக்காவில் அத்தகைய வழக்கு நடைப்பெறுகிறதா? விவரம் அளிக்கவும்.

#//இன்னொருவன் வாங்கி வச்சு ஏர்போட்டில் லஞ்சம் கொடுத்து செட்டப்பண்னி வச்சிருப்பான் என்றெல்லாம் கேள்விப்படவில்லையா?//

இன்னொருவன் வாங்கி வச்சால் அதுக்கு பேரு கள்ளப்பாஸ்போர்ட் அல்லது விசா. அதுவும் கூட முன்னரே பணம் கொடுத்து செய்து இருக்கணும்,அப்படி எனில் பிரச்சினை வரப்போகுது, இனக்கலவரம் நடக்கப்போகுது,என்னிக்கு எப்போனு எல்லாம் தெரிஞ்சி தான் அட்வான்ஸ் புக்கில் ஏற்பாடு செய்தீங்களா :-))

#//அதுதான் பாலுமகேந்திரா இந்திய வம்சாவழி என நிரூபித்த லட்சணம் கண்டோமே?//

அப்போ நீங்களே சொல்லுங்க, 1966 இல் இனக்கலவரமே நடக்காத சூழலில் இந்தியாவில் படிச்சு ,இங்கேவே வேலை செய்து , இந்திய அரசின் விருதை குடியுரிமை பெறாமலே வாங்கிட்டாரா?

1974 இலேயே விருது வாங்கி இருக்கார் , 8 ஆண்டுகளில் குடியுரிமை கிடைக்க வேண்டும் எனில் என்ன வழி?

அதுவும் 66-69 மாணவர் விசா என்பது குடியுரிமைக்கே கணக்கில் இல்லை,அப்போ 5 ஆண்டுகளில் குடியுரிமை வாங்கி இருக்கார். அவரை கலையில் சிறந்தவர்னு கருதி கொடுத்தாலும், அந்த அளவுக்கு பேர் வாங்க முதல் விருது வாங்கினப்பின் தான் என சொல்லலாம், ஆனால் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியே குடிமகனாக இருக்கணும் :-))

அவரே ஈழத்தமிழர்னு ஒரு இடத்திலும் சொல்லிக்கலை,ஆனால் பேர்ப்பெற்ற சினிமாக்காரர் என்றதும் ஈழத்தமிழர் ஆக்கிட என்னமா துடிக்கிறீங்க :-))

நீங்க பாலுமகேந்திரா ஈழத்தமிழர் என என்ன லட்சணத்தில் நிருபிச்சிங்க :-))

ஊர்சுற்றி சொன்னது…

//வேறுபாடு காட்டுகிறார்கள் என்பதை சொல்லத்தான் அந்த பெயரைப்பயன்ப்படுத்தினேன்,//

அட நீங்க பயன் படுத்தினீங்களா? நான் என்னமோ அந்த மக்களை அப்படி அழைக்கணும் என நீங்க ஒற்ரைக்காலில் நின்றதாக அல்லவா நினைத்து உங்களுடன் வம்புக்கு வந்து விட்டேன்!
சாரிங்க!
“..இலங்கைல இருந்தால் "இலங்கை இந்திய தமிழர்" என சொல்ல வேண்டாமோ?
...” என நீங்க கேட்டதாய் நினைத்து விட்டேன்!

//எங்கேயோ எவனோ , செட்டியார்னா பணக்காரன்னு சொன்னால் இங்கே வந்து ஏன் அரிப்பெடுக்க வேண்டும் :-))//

”செட்டியார்” என அன்பாக அழைப்பதை தலைகீழாக தொங்கிக்கொண்டு சாதிக்கண்னால் பார்க்க நினத்தவர்களுக்குச் சொன்ன பதில் !

//அமெரிக்காவில் அத்தகைய வழக்கு நடைப்பெறுகிறதா? விவரம் அளிக்கவும்.//

வழக்குத்தாக்கல் செய்து. தோல்வி அடைந்து. மேன்முறையீடு செய்து பகுதி வெற்றி அடைந்து. அத்தீர்ப்பு குர்திஷ் இன போராளிக்குழு மற்றும் புலிகளுக்கு மட்டும் திருத்தி எழுதப்பட்டு அதுவும் திருப்தி இல்லாமல் மீண்டும் மேன்முறையீடு செய்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றத்துக்கு கருத்துச் சொல்லும் அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது !
தெரியாவிட்டால் கதை அளக்க வேண்டாம்!

//அமெரிக்க அரசு "விடுதலைப்புலிகளை" தடை செய்த இயக்கமாகவே" வைத்திருந்தது அதனை நீக்கி இருக்க வேண்டாமா?//

ஸ்ரீலங்காவில் இந்தியாவில் போல் போலி கேசில் உள்லே போடுவதோ தேர்தல் காலத்தில் விடுதலை செய்வது போன்றதோ அல்ல அமெரிக்க நீதித்துறை.
வழக்கு தற்போது சுப்பிரீம் கோட்டில் காத்திருக்கிறது. இது அமெரிக்க அரசியல் உரிமை போராட்ட உரிமை பற்றிய வழக்கு. காலம் எடுக்கும்.


//இந்தியாவில் வீணாப்போன வைக்கோ இன்னிக்கும் தடை நீக்க என வழக்கில் கலந்துக்கிட்டு இருக்கார்.//

நாமும்தான். வழக்கு அமெரிக்க அதி உயர் நீதிமன்றத்தில் உள்ளது!

//இன்னொருவன் வாங்கி வச்சால் அதுக்கு பேரு கள்ளப்பாஸ்போர்ட் அல்லது விசா. //

ஆமா. அகதியாய் போனவன் அப்படித்தான் போக நினைப்பான். சொந்த பாஸ்போட்டில் போனால் ஏர்போட்டில் பிடிபடுவானல்லவா?

மேலும் அகதி என்பவன் உயிர்பிழைக்க ஓடியவன். அவன் தலையில் குண்டு விழும்போதுதான் எழுந்து ஓடவேண்டும் என எங்கே இருக்கு. தேவை என்றால் ஐநா அகதி ஆணையத்தின் விதிகளைப்படிக்கவும்.

//என்னிக்கு எப்போனு எல்லாம் தெரிஞ்சி தான் அட்வான்ஸ் புக்கில் ஏற்பாடு செய்தீங்களா :-))//
கலவரம் வந்த பின் பாதிக்கப்பட்டவன் ஒழிந்திருப்பான், இன்னொருவன் அவனுக்கு பாதுகாப்புக் கொடுத்து மிகுதி வேலைகல் செய்வான். இதெல்லாம் நான் சொல்லி இவருக்குத் தெரிய வேண்டி இருக்கு!

//இந்திய அரசின் விருதை குடியுரிமை பெறாமலே வாங்கிட்டாரா?//
அதை நீங்கதான் கண்டு பிடிச்சு சொல்லணும்?
அவருக்கு குடியுரிமை எப்படிக்கிடைத்தௌ எபது புதிராகவே இருக்கிறது. அவர் இந்தியத்தமிழர் என்பதால் கிடைத்தது என யாராவது ஆதாரம் சொல்லலாமே? அதை விடுத்து அப்படி இருக்கலாம் என்பதெல்லாம் ஆதாரம் இல்லை!
இவ்வளவு பேசுகிரீர்களே. இந்தியாவில் தானே இருக்கிறீர்கள்?
பாலுமகேந்திரா எப்படி இந்திய குடியுரிமை பெற்ரார் என வெறும் ஊகத்தில் பேசாமல் அறிந்து எழுதலாமே?

//பேர்ப்பெற்ற சினிமாக்காரர் என்றதும் ஈழத்தமிழர் ஆக்கிட என்னமா துடிக்கிறீங்க :-))//

நீங்கதானே ஈழத்தமிழர்கள் என இணையத்தில் அறியப்படும் மக்கள் இப்பக்கூட கவனமாக "ஈழத்தமிழர் பாலுமகேந்திரா" என சொல்லாமல் தவிர்ப்பதை படிக்கவேயில்லையா? எனச்சொன்னது? அப்புறமா தலைகீழாய் “துடிக்கிறீங்க” என்றால் என்ன அர்த்தம்? ஓ...வெளவால் இல்லையா அதுதான்!

இங்கு யாரும் துடிக்கவில்லை அவர் மட்டக்களப்பில் அமிர்தகழியில் பிறந்தவர். இந்தியக்குடியுரிமை பெற்றாரா இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியது. ”அப்படித்தான் நான் படிச்சேன்” எனச் சொன்னது யார். எங்கே படிச்சீங்க?
நான் சொன்னது போல யூலையில் அமெரிக்கா வருவதாய் இருந்தது இதன்போது பல ஐயப்பாடுகல் நீங்கி இருக்கு, ஆனால் இறந்து விட்டார்!

//நீங்க பாலுமகேந்திரா ஈழத்தமிழர் என என்ன லட்சணத்தில் நிருபிச்சிங்க :-))///

பாலுமகேந்திரா ஈழத்தமிழர் மட்டக்களப்பில் அமிர்தகழியில் பிறந்தவர் காசி ஆனந்தனின் சக மாணவர் நண்பர் மேலும் அவர் சிங்கலம் மட்டும் சட்டத்தை எதிர்த்து சிக்கலில் மாட்டியவர் என அறியப்பட்டவர்.
ஆனால் அப்படி இல்லை அவர் இந்தியத்தமிழர் என நீங்கள் வாதிடுவீர்கலாயின் அதை நிரூபிக்கும் இலட்சணம் உங்களுக்குரியது எனக்கல்ல.
அப்படித்தான் படிச்சேன், அவர் செய்தாரா என எனக்குத்தெரியாது என்பது போன்ற பதில்கள் பூ..புய்ப்ப்பம் என அடுக்கப்படும் சொல்லாடல்கள் எல்லாம் விவாதம் இல்லை.

இதில் சலஞ், எச்சரிக்கை தனி ரகம்.

ஊர்சுற்றி சொன்னது…

//என்னிக்கு எப்போனு எல்லாம் தெரிஞ்சி தான் அட்வான்ஸ் புக்கில் ஏற்பாடு செய்தீங்களா :-))//

1983 கலவரத்தில் அந்த நாளோ அடுத்த நாளோ அமெரிக்க இங்கிலாந்து விசா எடுத்து அவசர் அவசரமாக வந்தோர் பலரை எனக்குத் தெரியும். மேலும் இதேபோல கியூபா, வியட்நாமில் இருந்து வந்தோரைக்கூட அறிந்து வைத்திருக்கிறேன். பாலஸ்தீனர்கள் ஒன்றிரண்டல்ல பல பல் பேரை எனக்குத் தெரியும்.

ஊர்சுற்றி சொன்னது…

//இல்லை வழக்காவது போட்டிங்களா?//

வழக்குப் போட்டது ஒரு குரூப் இன்னொரு குரூப் ராஜாங்க அமைச்சின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாவது தடையை நீக்கவேண்டும் என முயன்று மாட்டி ஜெயில் தண்டனை அனுபவித்தனர். அதில் ஈடுபட்ட மூன்று பேர்வரை தப்பியோடி அமெரிக்காவர முடியாமல் இந்தியாவில் உள்ளனர். இதெல்லாம் தெரியது போல். ஒரு வேளை அப்படி ஏதும் படிக்கவில்லையோ?
தலைகீழாக தொங்குதல், கண்னைமூடி கதை விடுதல், நான் அறியவில்லை, படிச்சேன் எனவும் சலஞ், எச்சரிக்கை விடுவதையும் விட்டு கண்னைத்திறந்து அறிய முயலுங்கள்!

ஊர்சுற்றி சொன்னது…

//ஏன்யா ,செட்டியார்கள் எல்லாம் வாணிபம் செய்ய இந்தியாவில் இருந்து வந்தவர்கள்னு சொன்னது நீர் தானே? அப்போ இந்தியாவில் இருந்து வந்து வாணிகம் செய்ய வந்தவங்கலாம் செட்டியார்னு எதுக்கு பேசினீர்?//

அப்படித்தான் அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் இலங்கையில் பணக்காரர்கள் செட்டியார்கள் என செல்லமாக அறியப்பட்டனர். ஒரு ஜாதியாக அல்ல. சொல்ல வந்த கருத்தை மாற்றி பூ...புய்ப்பம் என திரித்தல் நல்லதல்ல.

ரகுநந்தன் சொன்னது…

//ஈழத்தில் எங்கே இருந்து தமிழன் தனியா மொளைச்சான்?//

விடாதீங்க வெளவால் இவங்களை இப்படித்தான் கேக்கணூம்!
ஆபிரிக்காவில் இருந்து மனித இனம் புறப்பட்டு உலகில் குடியேறியது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதெப்படி இந்தியன் எனச் சொல்லலாம் என ஆபிரிக்கன் கேட்பது இவர்களின் காதுகளில் விழாது வெளவால். கேளுங்க நல்லாய் கேளுங்க. நல்லகாலம் நீங்கள் வெளவாலாய் இருப்பதால் சில விடயங்கள் உங்களுக்கு புரிகிறது!
மனித இனமே ஒரே இனம் ஒரே உறவு என உலகில் மனிதாபிமானிகள்
சொல்கிறார்கள். அதை எல்லாம் விடுத்து இவர்களோ இந்தியன் ஆபிரிக்கன் என்கிறார்களே? கேளுங்க வெளவால் கேளுங்க!

ஊர்சுற்றி சொன்னது…

வேகநரி.
//இதைவிட சில நுற்றண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு குடிபெயர்ந்து போனவங்க. இவர்களில் யாழ்பாணத்தில் குடியேறியவர்கள் //

இலங்கையி தமிழர்கள் கிறிஸ்துவுக்கு முன் 2ம் நூற்றாண்டில் (ஏறக்குறைய 2300 ஆண்டுகள்) இருந்து வாழ்கிறார்கள். இது உங்களுக்கு சில நூற்றாண்டுகளா? சுப்பர்!
ஆதாரம்.....
http://www.ejvs.laurasianacademy.com/ejvs0801/ejvs0801.txt


வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி!

நல்லாவே சுத்தி வர்ரீங்க ,சுத்துங்க,சுத்துங்க :-))

#ஈழத்தமிழர் என ஏன் குறிப்பிட்டுக்கொள்ளவில்லை,அப்படினா ,இந்திய இலங்கை தமிழராக இருக்க வேண்டும் என கூறுவது தர்க்க ரீதியாக பொருந்தி வருவது கூட புரியலைனா என்ன செய்ய?

#செட்டியார்னா ஜாதியல்லனு நீங்க சொன்னால் சரிதான் ,ஹி...ஹி அப்போ நீங்க அமெரிக்காவில் இருக்கிங்க அப்போ பணக்காரர் ,எனவே நீங்க ஒரு செட்டியார் ,என்ன சரியா சொல்லிட்டனா அவ்வ்!

caste discrinimantion and social justice in srilanka:an overview

by

kalinga tudor silva

p.p.sivapiragasam

paramsothi thanges


மேற்கண்ட சிறிய மின்னூல் இணையத்தில் கிடைக்கிறது,தேடிப்படித்துப்பார்க்கவும், இலங்கையின் ஜாதிய வெறி என்னனு தெரியும்.

இன்னும் நிறைய நூல்கள் இருக்கு,

an account of island of ceylon by Rober percival,

படிச்சா இலங்கையின் கலாச்சாரம் என்னனு தெரிய வரும் :-))

இலங்கையில ஜாதியமே இல்லைனு சொல்வது தயிர் சாதத்தில் டைனோசர் முட்டைய மறைக்கிறாப்போல இருக்கு அவ்வ்!


அப்பா என்பதை சித்தப்பா என அழைப்பார்களோ , "ஈழ சொல்லாடல்களை இனிமே ஊர்சுற்றியிடம் தான் கேட்டு தெரிஞ்சி வச்சிக்கணும்!

#//ஆனால் அப்படி இல்லை அவர் இந்தியத்தமிழர் என நீங்கள் வாதிடுவீர்கலாயின் அதை நிரூபிக்கும் இலட்சணம் உங்களுக்குரியது எனக்கல்ல.//

இப்பவும் சொல்கிறேன் ,முதலில் நான் ஒன்றை சொல்லி இருக்கும் போது அது தவறுனு சொல்லும் நீங்கள் தான் நிருபிக்கணும்,இப்போ நீங்க முதலில் சொல்லி இருந்தால் நான் நிருபிப்பேன்.

#//1983 கலவரத்தில் அந்த நாளோ அடுத்த நாளோ அமெரிக்க இங்கிலாந்து விசா எடுத்து அவசர் அவசரமாக வந்தோர் பலரை எனக்குத் தெரியும். //

ஹி...ஹி லட்சக்கணக்கான ஈழத்தவர்கள் விசா எடுத்துக்கிட்டு அடுத்த நாளே கிளம்பிட்டாங்களா அவ்வ்!

ஐரோப்பா,அமெரிக்கா,கனடாவில் எல்லாம் தொப்புள் கொடி உறவை தேடி போனார்களோ அவ்வ்!

உயிர் பிழைக்க எனில் ஏன் அவ்ளோ தூரம் போகணும்?

//ஒரு வேளை அப்படி ஏதும் படிக்கவில்லையோ?//

அதான் உங்கக்கிட்டேயே விவரம் கொடுங்கள்னு கேட்கிறாங்களே,தெரியலைனு தானே கேட்கிறாங்க. இந்தியா மட்டுமே துரோகம் செய்துவிட்டது என்று மட்டுமே இணையத்தில் பேசிக்கிறாங்க, ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் செய்த துரோகத்தினை இத்தனை நாளா யாரும் பேசாததால் தான் அப்படி நினைத்துவிட்டேன். அப்போ இனிமேல் அமெரிக்காவையும் திட்டி எழுதுவீங்க, உங்களைப்போன்ற நேர்மையானவர்கள் கண்டிப்பாக அமெரிக்காவையும் திட்டுவீங்கனு எனக்கு தெரியும்!

ஊர்சுற்றி சொன்னது…

//நல்லாவே சுத்தி வர்ரீங்க ,சுத்துங்க,சுத்துங்க :-))//

அப்படியா?

பாலுமகேந்திரா ஈழத்தில் பிறந்தவர் ஆனால் அவரை இந்திய வம்சாவழி எனச் சொன்னவர் நிரூபிக்க முடியாமல் அப்படித்தான் எங்கோ படிச்சேன் என்றார்.

பின்னர் புனே சினிமாக்கல்லூரியில் படித்ததால் அவர் இந்திய குடியுரிமை பெற்ரவர் என்றார். புனேயில் வெளிநாட்டவர் படிக்க இடம் உண்டு என்று தெரியவர அதை விட்டு அடுத்த கிளைக்குத்தாவினார்.

எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரியில் ஈழாகதிகளுக்கு ஆசனங்கள் ஒதுக்கினார் எனச் சொல்ல வர அப்படி எல்லாம் கிடையாது என்றார். ஆதாரம் கொடுக்க ஒருவேளை அவர் தன்னிச்சையாக செய்தார் என்றார். அது இன்றும் கொடுக்கப்படுகிறது என ஆதாரம் கொடுக்கப்பட அடுத்த ரோட்டுக்கு ஓடினார்.
அந்த ரோட்டு அமெரிக்க கறுப்பினம் பற்ரியதாய்ய் இருந்தது. அமெரிகாவில் இருக்கே ஏன் இலங்கையில் இருக்கலாம் தானே என்றார். அது அமெரிக்கரின் விருப்பம் அப்படி இந்திய வம்சாவழி மக்கள் கோரிக்கை வைக்கவில்லையே எனச் சொல்ல வர ...பூ...புய்ப்பம் எல்லாம் ஒன்றே என லொஜிக் ஒன்று சொன்னார்.

அடுத்ததாக இலங்கையில் செட்டியார் எனும் சொல் பெரும் வியாபாரிகளை செல்லமாக் அழைக்கும் பெயராகத் திரிபடைந்து விட்டது எனச் சொல்ல வர தமிழ் நாட்டில் இருப்பதால் அங்கேயும் இருந்தாக வேண்டும் இன்னொரு அருமையான லொஜிக்கல் மரம் தாவினார்.
அந்த நேரத்தில் செட்டியார்கள் என ஒரு சாதி இல்லையென என நிரூபிக்க முடியுமா என 1000 பொற்காசு பரிசு அறிவித்தார்.
இலங்கையில் செட்டியார் சொல்லாடல் பற்றிப்பேசினால் இவரோ இந்தியாவில் இல்லையா என்றார்?
பின்னர் பாலுமகேந்திரா ஈழத்துக்காரர் என்பதனை ஈழப்போரில் இணைத்து அதனை வசதியாக அப்படியே புலிகளில் முடிந்து அமெரிகாவில் ஏன் புலிகள் தடை வழக்கு போடாமல் சினிமா பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என கேட்டார். (பாலுமகேந்திரா => ஈழம் => ஈழப்போராட்டம் =>புலிகள்).

இதில் வழக்குதொடுத்திருந்தால் ஆதாரம் கொடு என வேறு கதை விட்டுப்பார்த்தார்.
அதற்கும் பதில் சொல்லப்பட்டது. வழக்கு விவகாரத்தை அப்படியே சட்டிசுட்டதடா கைவிட்டதடா என போட்டுவிட்டு இப்போது இல்லங்கையில் சாதி இருக்கே என வருகிறார். இத்தனைக்கும் இலங்கையில் சாதி இல்லையென்று இங்கு யாரும் வாதிடவில்லை. விவாதம் எல்லாம் பாலுமகேந்திரா ஈழத்தவரா என்பது பற்றியதே!

இதில் நான் சும்மா ஆளில்லை ஆதியில் இருந்து எடுத்து விடுவேன். கேள்வி கேட்டு அழவைப்பேன். எதற்கும் இரண்டு முறை யோசித்து எழுது என எச்சரிக்கை வேறு விட்டார்!

இப்போது பாலுமகேந்திரா, புனே கல்லூரி, மருத்துவ அனுமதி, செட்டியார், சாதி எல்லாம் விட்டு அப்பா = சித்தப்பா என அப்பாவுக்குத் தாவுகிறார். விட்டால் என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா...என்ன உறவு தெரியுமா என அபூர்வராகங்கள் வசனத்தை அறிந்திருக்கிறாயா என வருவாரோ?

தொப்புள்கொடிஉறவு என்கிறோமே அப்படி என்றால் ஒரே தொப்புள் கொடியில் பிரந்து அதனை அறுத்து பிறந்தவுடனேயே ஈழம் போனவர்கள்தா எல்லோரும் என அருமையான மெடிக்கல் லொஜிக்குடன் வருவாரோ?

ஓ...மறந்து விட்டேன் அகதியாய் எப்படி ஓடினாய் என கேட்டாரே ஒரு கேள்வி கேட்டார் பாருங்க. அதை ஒருவரும் அடிக்க முடியாது !

இப்படி ஒன்றுக்குமே லொஜிக்கலான பதில் சொல்ல முடியாதவர். பாய்ந்துபாய்ந்து அங்கே ஓடி இங்கே ஓடி முடிச்சுப்போடுபவர் சொல்கிறார்....”நல்லாவே சுத்தி வர்ரீங்க ,சுத்துங்க,சுத்துங்க :-))” என !!!!

ஊர்சுற்றி சொன்னது…

//அப்போ இனிமேல் அமெரிக்காவையும் திட்டி எழுதுவீங்க, உங்களைப்போன்ற நேர்மையானவர்கள் கண்டிப்பாக அமெரிக்காவையும் திட்டுவீங்கனு எனக்கு தெரியும்!//

இது அடுத்த பாய்தல் பிளேட்டை திருப்பி போடுதல்....

”அமெரிக்க அரசு "விடுதலைப்புலிகளை" தடை செய்த இயக்கமாகவே" வைத்திருந்தது அதனை நீக்கி இருக்க வேண்டாமா?

இல்லை வழக்காவது போட்டிங்களா?”
எனக்கேட்டவர் அமெரிக்காவை எதிர்ப்பீங்க திட்டுவீங்க என சொல்கிறார்?

சினிமா இறக்குமதி செய்து விசிலடிச்சிட்ட்ருந்தீங்க எனச் சொன்னவர் வழக்கு போட்டோம் என அறிந்தவுடன் தலைகீழாய் மாறி அமெரிக்காவைத் திட்டுவீங்க என்கிறார் :)

ஊர்சுற்றி சொன்னது…

//இலங்கையில ஜாதியமே இல்லைனு சொல்வது தயிர் சாதத்தில் டைனோசர் முட்டைய மறைக்கிறாப்போல இருக்கு அவ்வ்!//

எப்படி ஈரைபேனாக்கி பேனை பெருமாள் ஆக்கிறீங்க எனத்தெரியுதா?

நான் எப்போ சொன்னேன் இலங்கையில் ”ஜாதியமே” இல்லை என? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?

இதில் ”டைனசோர் முட்டை” என தலைகீழாகத் தொங்குவதை விட தனக்கும் ஏதோ அதிகம் தெரியும் என காண்பிக்க முயல்கிறாரா?
இல்லை பாலுமகேந்திரா, புனே கல்லூரி, எம்ஜிஆர் மருத்துவ அனுமதி, செட்டியார் சொற்பதம் என இன்னும் பல திசைதிருப்பல் பாய்ந்தோடல்கள் போல டைனசோருக்கு பாய்கிறார்?

அமெரிக்காவில் ஏன் வழக்குப்போடவில்லை...டைனசோர் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டபோது அமெரிக்கா இருந்திச்சா? அமெரிக்க கறுப்பர்களை ஏன் செட்டியார் என அழைக்க முடியாதா? என மரத்துக்கு மரமும் ரோட்டுக்கு ரோட்டும் தாவல் அருமையாய் இருக்கு!

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

//எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரியில் ஈழாகதிகளுக்கு ஆசனங்கள் ஒதுக்கினார் எனச் சொல்ல வர அப்படி எல்லாம் கிடையாது என்றார். ஆதாரம் கொடுக்க ஒருவேளை அவர் தன்னிச்சையாக செய்தார் என்றார். அது இன்றும் கொடுக்கப்படுகிறது என ஆதாரம் கொடுக்கப்பட அடுத்த ரோட்டுக்கு ஓடினார்.//

1966 இல் பாலு மகேந்திரா படிச்சதுக்கும் 1983-87 காலத்துல எம்ஜிஆர் இடம் கொடுத்ததுக்கும் என்ன சம்பந்தம் இருந்தது என அதை உதாரணம் காட்ட வந்தீர்கள் என அப்போவே கேட்டேன் ,அதுக்கு பதிலே சொல்லாமல் ,எம்ஜிஆர் இடம் கொடுத்தாரே என சம்பந்தமே இல்லாமல் இன்னும் தாவிக்குதிச்சுக்கிட்டு இருக்கின்ங்களே?

எம்ஜிஆர் இடம் கொடுத்தது தன்னிச்சையான ஒன்றாக இல்லை எனில் இப்பவும் மருத்துவக்கல்லூரியில் அகதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாமா?

அந்த காலத்தில் எம்ஜிஆர் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை செய்தார் பின்னர் நிறுத்தியாச்சு,இப்ப வரைக்கும் மருத்துவக்கல்லூரியில் இடமில்லை,அதுக்கு போராடுங்க ,சும்மா ,1966 இல் நடந்ததுக்கு 83 ஐ சம்பந்தமே இல்லாமல் உதாரணம் காட்டிக்கொண்டு அவ்வ்!

# இப்படி சொல்லுறிங்க,

//உங்க ஊர்ல எல்லாமே “ஜாதி” கண்னாடி போட்டு பார்க்கிரீங்க. காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் !//

//அப்படித்தான் அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் இலங்கையில் பணக்காரர்கள் செட்டியார்கள் என செல்லமாக அறியப்பட்டனர். ஒரு ஜாதியாக அல்ல. //

இப்படி சொல்வது எதை வச்சு, இலங்கையில் ஜாதியமே இல்லாத சமூகம் இருப்பதான பாவனையா எனக்கேட்டால்,நான் எப்போ அப்படி சொன்னேன் என இப்போ பல்டி அடிச்சால் எப்படி?

நான் கேட்டதெல்லாம் இதான் வியாபாரம் செய்றவங்க எல்லாம் செட்டியார்னு சொல்லிடுவிங்களா? ஏன் வியாபாரத்தினை கூட ஜாதியப்பெயரால் அழைக்கிறிங்க என்பது ,அதுக்கு நேரா பதில் சொல்ல துப்பில்லாமல்,என்னமோ தமிழ்நாட்டில் எல்லாம் ஜாதிய வெறியர்கள் போல பேசினிங்க, உங்க வரலாற்றை பாருங்க என ஆதாரம் காட்டியதும்,பம்முறிங்க அவ்வ்!

//நான் எப்போ சொன்னேன் இலங்கையில் ”ஜாதியமே” இல்லை என? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்? //

அப்போ என்ன எழவுக்கு ,தமிழகத்தில தான் செட்டியார் என்றால் ஜாதி என எடுத்துக்கொள்கிறார்கள் என சொன்னீங்க. ஜாதிய வகைப்பாடுகளை பின்ப்பற்றாத சமூகத்தில் இருப்பவர் தான் "அதை சொல்ல இயலும்". உங்க ஊருல அது ஜாதினே தெரியாத போல என்னமா வளைச்சு வளைச்சு ,பணக்காரன், வியாபாரினு கதைய உட்டிங்க :-))

வியாபாரம் செய்யவரும் தமிழர்கள் எல்லாம் எப்படி செட்டியார்னு மட்டுமே குறிப்பிட்டீர்கள்,எதன் அடிப்படையில், பதிலை சொல்லுங்க.

//இது அடுத்த பாய்தல் பிளேட்டை திருப்பி போடுதல்....

”அமெரிக்க அரசு "விடுதலைப்புலிகளை" தடை செய்த இயக்கமாகவே" வைத்திருந்தது அதனை நீக்கி இருக்க வேண்டாமா?

இல்லை வழக்காவது போட்டிங்களா?”
எனக்கேட்டவர் அமெரிக்காவை எதிர்ப்பீங்க திட்டுவீங்க என சொல்கிறார்?//

நீங்க அமெரிக்காவை இழுக்கலைனா நான் ஏன் கேட்கப்போறேன்.

அமெரிக்காலாம் ஈழப்போரில் கலந்துக்கிட்டது என்பதாக கதைய விட்டிங்க,அப்போ திட்ட வேண்டாமா? ஏன்னா இணையத்தில இந்தியாவை மட்டும் தானே உங்க ஆட்கள் விமர்சிக்கிறாங்க :-))



நீங்களே சொல்லுறிங்க,அமெரிக்கா ,ஃபிரான்ஸ்,இங்கிலாந்து ,ஜப்பான் என உலக நாடுகளை எல்லாம் ஈழத்துல சண்டைப்போட்டாப்போல சொல்லுறிங்க,ஆனால் திட்டும் போது மட்டும் இந்தியாவை மட்டுமே திட்டுறாங்க, ஏன் இந்த ஓர வஞ்சனை :-))

ஊர்சுற்றி சொன்னது…

//அந்த காலத்தில் எம்ஜிஆர் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை செய்தார்///

அப்பாடா ...இப்போதுதான் சரியான இடத்துக்கு வந்திருக்கீங்க!

சோபா இறந்தபோது மிகவும் பிரச்சினைக்குள்ளானார் பாலுமகேந்திரா. அவரைக்கைது செய்ய வேண்டும் எனக்கோரிக்கை எழுந்த போது கைதுசெய்ய சட்டரீதியான ஒரு வழியும்
இருக்கவில்லை. அவர் ஈழத்தவர், விசா முடிந்து தங்கி இருக்கிறார் எனத் தெரிய வர அந்த வழியையாவது பின்பற்றி கைது செய்ய நெருக்குதல் கொடுக்கப்பட்டது. பாலுமகேந்திரா இந்த விசா குற்ரச்சாட்டை மறுக்கவேயில்லை.
அந்தக்காலங்களில்தான் பாலுமகேந்திரா மட்டக்களப்பில் பிறந்தவர் என்கின்ற செய்தி எமக்கே தெரிய வந்தது.
பின்னர் அந்த விசாமுடிந்தும் தங்கி இருக்கும் சிக்கலான விடயம் அமுக்கப்பட்டது.
இந்தச் செய்தி தொடர்ந்தும் பத்திரிகைகளில் வராமல் எம்ஜிஆர் கவனித்துக்கொண்டார் என்றார்கள்.
அதற்கப்புறம் இன்றுவரை அவர் எப்படி இந்தியாவில் தங்கி இருக்கிறார் என்ற விடயம் யாருக்கும் தெரியாத ஒன்று. அவர் இந்தியக் குடிமகானாயிருப்பார் என்றால் அது மிக மிக செல்வாக்கானோரின் கைங்கரியமாய் இருக்கும்! அதுதான் நான் சொல்ல வந்தது!



அப்புறம் சோபாவின் தாயார் டெல்லிவரை பிரச்சினையை எடுத்துச் சென்றது (இந்திரா காந்தியைக்கூட சந்தித்தார் என நினைக்கிறேன்)எம்ஜிஆர் பாதுகாப்பில் இருந்த பாலுமகேந்திராவின் மயிரை யாரும் புடுங்க முடியாமல் போனது ஒருவாறு தப்பித்த பாலுமகேந்திரா குமுதம் இதழில் தனக்கும் சோபாவுக்குமான உறவை எழுதியது , மனமுடைந்த சோபாவின் தாயாரே தற்கொலை செய்து கொண்டது எல்லாம் தனிக்கதை.


ஊர்சுற்றி சொன்னது…

//நான் கேட்டதெல்லாம் இதான் வியாபாரம் செய்றவங்க எல்லாம் செட்டியார்னு சொல்லிடுவிங்களா? //

செட்டியார்கள் என்ற சொற்பதம் இலங்கையில் எப்படிப் பயன்பாட்டில் இருக்கிறது என
நான் சொன்னதை கவனமாய் படிங்க!

“..இந்தியத்தமிழர் - வியாபாரம் செய்ய வந்த இந்தியத்தமிழர்கள் (கொழும்புச் செட்டியார்கள்)”

வியாழன், 20 பிப்ரவரி, 2014 4:10:00 பிற்பகல் GMT+8

உதாரணமாக தமிழ்நாட்டில் எல்லா ஈழவிடுதலை இயக்கங்களுமே புலிகள் எனவே அறியப்பட்டனர்!
உடனே புலிகளுக்கு தோலில் வரிகல் இல்லையே எப்படி அவர்கள் புலிகள் ஆவார்கள்? காட்டில் வாழாமல் எப்படி ஊருக்குள் திரிகிறார்கல். புலி என்றால் ஏகே-47 எப்படி கையாள்வார்கள் என உங்கலைப்போல என்னால் கேட்க முடியாது!

ஊர்சுற்றி சொன்னது…

//நான் எப்போ சொன்னேன் இலங்கையில் ”ஜாதியமே” இல்லை என? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்? //

அப்போ என்ன எழவுக்கு ,தமிழகத்தில தான் செட்டியார் என்றால் ஜாதி என எடுத்துக்கொள்கிறார்கள் என சொன்னீங்க. ..//

சொன்னது மட்டுமல்ல செட்டியார் ஜாதி அல்ல என நிரூபித்தால் 1000 பொற்காசு பரிசும் அறிவித்திருந்தீரே?

கொஞ்சம் திருப்பி படிங்க வளவால்!
////செட்டியார் என்றால் ஜாதியல்லனு நீர் நிருபித்தால் உமக்கு 1000 பொற்காசு இல்லை எனினும் 1000 ரூவாத்தர தயார் , ரெடியா?//

ஊர்சுற்றி சொன்னது…

//நான் கேட்டதெல்லாம் இதான் வியாபாரம் செய்றவங்க எல்லாம் செட்டியார்னு சொல்லிடுவிங்களா? ஏன் வியாபாரத்தினை கூட ஜாதியப்பெயரால் அழைக்கிறிங்க என்பது //

தமிழ்நாட்டில் ஈழவிடுதலைப்போராளிகளையெல்லாம் புலிகள் என்பதுபோல என வைத்துக்கொள்ளுங்களேன். தென்நாட்டுக்காரனை எல்லாம் மதராசி என்பார்களே அதுபோல இருக்குமோ? அமெரிக்காவில் எல்லா இந்தியர்களும் சாதிவெறியர்கல், பெண்னடிமை வாதிகள் என்பார்களே அதுமாதிரி இருக்குமோ?

ஊர்சுற்றி சொன்னது…

//நீங்க அமெரிக்காவை இழுக்கலைனா நான் ஏன் கேட்கப்போறேன்.
//

ஆஹா...அருமை அருமை!


அமெரிகாவில் தமிழர் சினிமா இறக்குமதி செய்தது மட்டும்தான் தெரிந்திருக்கிரது பாவம் இவர் ஏதோ நினைத்துக் கேள்வி கேட்டார் இப்போ வந்து கதை விடுகிறார். அமெரிகாவை முன்னுதாரனம் காட்டி “ இலங்கை இந்திய தமிழர்” என அழைகாததேன் என பொங்கி எழுந்தவர் இப்போ நீதான் இழுத்தாய் என்கிரார்!

ஊர்சுற்றி சொன்னது…

//நீங்களே சொல்லுறிங்க,அமெரிக்கா ,ஃபிரான்ஸ்,இங்கிலாந்து ,ஜப்பான் என உலக நாடுகளை எல்லாம் ஈழத்துல சண்டைப்போட்டாப்போல சொல்லுறிங்க,ஆனால் திட்டும் போது மட்டும் இந்தியாவை மட்டுமே திட்டுறாங்க, ஏன் இந்த ஓர வஞ்சனை :-))///

இப்போ ஓரவஞ்சனைக்கு வந்தாச்சா?

எல்லா நாடுகளிலும் ஈழத்தமிழர் (தற்போது இந்தியத்தமிழரும் இனைந்துள்ளனர்) அந்தட்ந்த அரசுகளுக்கு எதிராகக் குற்ரம் சுமத்திக்கொண்டே இருக்கிரார்கள்.
நீங்கள் தலைக்கீழாக தொங்கி பகலில் தூங்கி இரவில் வரும் கொசிப் செய்திகளை படித்தால் இதுதான் நிலை!
அமெரிக்காவில் அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு வரை சென்றார்கள்.
அண்மையில் நோர்வே அரசையும் அதன் சிறப்புத்தூதுவர் எரிக் சொல்ஹைமையும் குற்றம் சாட்டி நடந்த போராட்டத்தால் சமாதான கால தலைவர் ஐரோப்பிய யூனியன் (நாடுகளின் பட்டியல் தெரியும் என நினைக்கிறேன்)புலிகலைத்தடை செய்தது தவறு என பகிரங்கமான ஒப்புதல்.
அதைவிட இங்கிலாந்து தமிழர் அழிப்பில் உடந்தை என குற்றம் சாட்டப்பட்ட அறிக்கை அயர்லாந்தில் வெளியிடப்பட்டது.
இன்றும் கூட (Feb 26) ஐரோப்பிய யூனியனின் EU Court of Justice இல் புலிகளின் தடை தவரு என்ற வழக்கு விவாததுக்கு எடுக்கப்பட்டது.
மேலும் அமெரிக்காவில் தொடர்ந்தும் எடுக்கப்பட்ட பிரச்சாரங்கல் போராட்டங்களினால் அமெரிக்க செனற்றில் S.Res. 348 விவாதத்துக்கு வருகிறது...இப்படிப் பல பல. இதெல்லாம் நீங்கள் அறியமுயல மாட்டீர்கல். அமெரிக்க , ஐரோப்பிய தமிழ்ச் சினிமா கூட்டத்துடன் சல்லாபம் செய்வது உலக அறிவை கொண்டுவராது!
இனிமேலாவது இந்த சினிமாக்கூட்டத்தை விட்டு வெளியே வாருங்கல். தலைக்கிழாக தொங்கி பகலில் துயில்வதை தவிருங்கல். ஊகத்தின் அடிப்படையில் கருதுச் சொல்லாதீர்கள்.
மிக மிக முக்கியமாக பதிலுக்கு பதில் போட்டு “ அப்பாலிக்கா அழக்கூடாது சொல்லிட்டேன்” எனச் சொல்லி அழப்பண்னிடாதீங்க..சரியா?

பாலுமஹேந்திரா குடியுரிமையில் அடுத்தது என்ன அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் ஆபிரகாம் லிங்கன் செய்தது சரியா என்கின்ர வாதமா இல்லை சுதந்திரப்போரில் ஜோஜ் வோஷிங்ரன் டெலவெயர் நதியைக்கடந்தது சரித்திர முக்கியம் வாய்ந்ததா இல்லையா என்கின்ர வாதமா இல்லை பிரான்ஸ் ஐரோப்பிய யூனியனில் சேர்ந்ததற்கு பாண்டிச்சேரி மக்களின் சம்மதம் பெரப்பட்டதா என மரம் விட்டு மரம் பாய்வோமா?

ஊர்சுற்றி சொன்னது…

//ஆனால் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியே குடிமகனாக இருக்கணும் :-))//

இதோ தகுதி விதி...

அதாவது விருதுக்கானவர் இந்தியாவில் வாழ்பவராகவும் வேலை செய்பவராகவும் இருந்தால் போதுமானது குடியுரிமை பெற்ரவராய் இருத்தல் அவசியமில்லை. கூட்டுத்தயாரிப்பாயின் மட்டுமே அக்கூட்டுத்தயாரிப்பாலரில் ஒருவர் இந்திய பிரஜை ஆக இருக்க வேண்டும்!

Only those persons whose names are on the credit titles of the film and are normally
residing and working in India will be eligible for the Awards. In the case of co-productions
involving a foreign entity, the following conditions should be fulfilled:
(i) At least one of the co-producers must be an Indian entity.
(ii) The Indian entity should be registered in India or be a citizen of India.
(iii) The title of the film should be registered as an Indian film title.
(iv) The Director should be an Indian citizen. The cast and technicians should be
predominantly Indian nationals.
(v) The negative should be available with the right holder in India to strike prints.
(vi) The applicant should have the right for sanctioning participation of the film in
festivals in India and abroad as an Indian entry as well as special expositions of Indian
cinema organized by the DFF.

வருண் சொன்னது…

****அப்புறம் சோபாவின் தாயார் டெல்லிவரை பிரச்சினையை எடுத்துச் சென்றது (இந்திரா காந்தியைக்கூட சந்தித்தார் என நினைக்கிறேன்)எம்ஜிஆர் பாதுகாப்பில் இருந்த பாலுமகேந்திராவின் மயிரை யாரும் புடுங்க முடியாமல் போனது ***

அப்படிங்களா?

ஷோபா தற்கொலை செய்து கொண்டு இறந்ததுக்குத்தான் ஆதாரங்கள் இருந்தன. அதுதான் நடந்தது.

அதற்கு pedophile பாலு மகேந்திராவிடம் நம்பி ஏமாந்தது காரணம். மனம் உடைந்து தற்கொலை செய்ததுக்குக் காரணம் பாலு மகேந்திரா. மற்றபடி பாலு மகேந்திராவை இதில் ஃப்ரேம் பண்ண முடியாது.அதனால்தான் பாலு மகேந்திரா தப்பித்தார்.

இதில் எம் ஜி ஆர் அவர் மயிரைப் புடுங்க விடாமல் பார்த்துக் கொண்டார் என்பது உளறல்!! தொடர்ந்து இதுபோல் மயிரு மண்ணாங்கட்டினு உளறாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.

உங்க நாட்டில் பிறந்த ஒரே காரனத்துக்காக சில கேவலமான என்ன ஜன்மத்துக்கும்கூட வக்காலத்து வாங்குவ்துதான் உங்க "தனித்துவமா?"

ஈழத்தமிழர்கள் எல்லாருமே 100% யோக்கியர்களா என்ன?? உங்க ஊரில் திருடன், கொலைகாரன், கற்பழிக்கிறவன்னு ஒரு பயகூடக் கெடையாதா?? தெளிவுபடுத்தவும்!

ஈழத்தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்த நாயி, "pedophile" பாலு மகேந்திராவுக்காக வாய்கிழிய கத்துறீங்கனு எனக்கு விளங்கவில்லை!

ஊர்சுற்றி சொன்னது…

//ஈழத்தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்த நாயி, "pedophile" பாலு மகேந்திராவுக்காக வாய்கிழிய கத்துறீங்கனு எனக்கு விளங்கவில்லை!//

நாந்தான் சொன்னேனே இந்த ஆள் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன் படுத்தியே இந்தியாவில் தங்கினார் என்று. இல்லையில்லை அவர் “இந்திய வம்சாவழி” காரர். இந்தியாவுக்கு மீண்டு வந்தவர் எனச் சொன்னது நானில்லை.
நான் எங்கே அவருக்கு வக்காலத்து வாங்கினேன். செய்தியில் வந்தவற்றைச் சொன்னேன். சிலவிடயங்கலை ஆதாரத்துடன் சொன்னேன். நீங்கள் தான் அவரை "pedophile" எனச் சொல்லியது.
சொல்லபோனால் நீங்கள் "pedophile" என கத்துவதை விட்டு அவர் மீது ஒரு வழக்குத்தாக்குதல் செய்திருக்கலாமே?
"pedophile" எனத்தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் அதைச் சொல்ல அவர் இறக்கும் வரை பொறுத்ததேன்? அதைக்கூட சொந்த பதிவில் எழுத வக்கில்லை அடுத்தவனின் பதிவில் பின்னூட்டமாய் இட்டதேன்!

சொந்த பதிவில் எழுத மறந்து பின்னர்தான் மனதில் வரவே பின்னூட்டத்தில் "pedophile" சொல்லாடல் பாவிக்கப்பட்டதேன்? தலைப்பில் "pedophile" எனச் சொல்லி இருக்கலாமே?

பரவாயில்லை இன்னும் காலம் கடந்து போகவில்லை
கிழிங்க அவர் முகமூடியை அவர் "pedophile" என்பதற்கான ஆதாரங்களை வையுங்கள். இந்திய பத்திரிகையில் எழுதுங்கள். நான் வேண்டாமென்றா சொன்னேன்.
சொல்லப்போனால் அவரை "pedophile" என நிரூபித்து அவருக்கு கிடைத்த அத்தனை தேசிய விருதுகளையும் பறித்தெடுங்களேன் யார் வேண்டாமென்று சொன்னார்கள்??
செய்யுங்கள் வருண்..செய்யுங்க...ஆவலுடன் காத்திருக்கிறேன்!
ஈழத்தில் பிறந்து இந்தியாவில் விருதுகள் வாங்கி, பல பெண்களுடன் சல்லாபம் நடத்திய இவர் யாழ் நூலக எரிப்பின் 25ம் ஆண்டில் எடுக்கப்பட்ட டொக்கியூமென்றியை கண்டு கண்கலங்கினேன் கைகள் நடுங்கியது என கதை விட்டதையும் எழுதி இருந்தேனே படிக்கவில்லையா?
(புதன், 19 பிப்ரவரி, 2014 3:25:00 முற்பகல் GMT+8)
இதை எல்லாம் நானும் கேள்வி கேட்க இருந்தேன் (ஜூலை 2014 இல்) அதற்குள் இறந்து விட்டார் என சொல்லி இருந்தேனே கவனிக்கவில்லையா? அதற்கு ”வேகநரி” என்பவருக்கு ஆதாரம் கூட கொடுத்திருந்தேனே. பின்னூட்டம் எழுத முன்னர் கொஞ்சம் கருத்துகலையும் படிச்சிட்டு வாங்க வருண்!

//தொடர்ந்து இதுபோல் மயிரு மண்ணாங்கட்டினு உளறாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.//

என்ன இப்படிச் சொல்றீங்க வருண் வெளவால் பதிலுக்கு பதில் போட்டால் அப்பாலிக்கா அழக்கூடாது சொல்லிட்டேன் என ஏற்கனவே அவர் எச்சரித்து இருக்கிறார்!
நான் அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது இதில் நீங்கள் வேறு.

போங்க போய் பாலுமகேந்திரா ஒரு "pedophile" எனத் தலைப்பிட்டு ஒரிஜினல் பதிவாய் போடுங்க. சொந்த பதிவிலேயே பின்னூட்டத்தில் ஒழிந்து "pedophile" எனச் சொன்னவர் அடுத்தவன் பதிவில் வந்து இன்னொருவனுக்கு எச்சரிக்கை விடுறார் !

ஊர்சுற்றி சொன்னது…

//ஈழத்தமிழர்கள் எல்லாருமே 100% யோக்கியர்களா என்ன?? உங்க ஊரில் திருடன், கொலைகாரன், கற்பழிக்கிறவன்னு ஒரு பயகூடக் கெடையாதா?? தெளிவுபடுத்தவும்!//

என்ன வருண் இப்படிச்சொல்லிட்டீங்க!
கொலைகாரன் என இலங்கை அரசால் அமெரிக்காவுக்கு ஒப்புதலாக (விக்கிலீக்ஸ் ஆதாரம்) சொல்லப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா இருக்கிறாரே. அவர்தாங்க மன்மோஹன் சிங் உடன் கைகுலுக்கிய படம் எல்லாம் வெளிவந்ததே பாக்கலியா?
http://www.asiantribune.com/node/2019

ஊர்சுற்றி சொன்னது…

அதுசரி “எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு தட்டிக்கழித்தது” என உங்க சொந்தப்பதிவில் இன்னொருவர் பின்னூட்டமாய் 10 நாட்களின் முன்னர் சொல்லியபோது இன்றுவரை வராத கோபம் “மயிர்” எனச் சொன்னபோது 6 மணித்தியாலத்தில் பொத்துக்கொண்டு வந்துவிட்டதா அருண்?

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

சின்ன வயசிலவே சிங்கள ஆர்மி மண்டையில அடிச்சதுல சித்தபிரமை வந்திடுச்சோ அவ்வ்!

# எம்ஜிஆர் செய்தால் கேட்க ஆளில்லைனு ஆரம்பத்துலவே சொல்லிட்டேன் அவ்வ்!

அது இப்பத்தான் புரிஞ்சிருக்கு :-))

//அவர் ஈழத்தவர், விசா முடிந்து தங்கி இருக்கிறார் எனத் தெரிய வர அந்த வழியையாவது பின்பற்றி கைது செய்ய நெருக்குதல் கொடுக்கப்பட்டது. பாலுமகேந்திரா இந்த விசா குற்ரச்சாட்டை மறுக்கவேயில்லை.
அந்தக்காலங்களில்தான் பாலுமகேந்திரா மட்டக்களப்பில் பிறந்தவர் என்கின்ற செய்தி எமக்கே தெரிய வந்தது.
பின்னர் //

உங்களுக்கே தெரிய வந்துச்சுச்சா,அப்பாடா நான் கூட ,பாலு மகேந்திராவும், நீங்களும் மாமன்,மச்சான் உறவா இருக்கும் அதான் இந்த மாரி புடிவாதாமா பினாத்துறிங்கனு நெனைச்சுட்டேன் அவ்வ்!

ஏங்க உங்களுக்கே நியாமா இருக்கா, கேள்விப்பட்டேன்,தெரிய வந்தது எனப்பேசிக்கொண்டு ,அவர் ஈழத்தவர் தான்னு அடிச்சு சொல்லிக்கிட்டு சண்டைப்பிடிக்கிறிங்களே,நானும் அதானே சொன்னேன் ,அவர் இலங்கை இந்தியத்தமிழர்னு படிச்சேன்னு,அதுக்கு மட்டும் ஏன் இந்த குதி குதிச்சிங்க?

ஆக மொத்தம் உங்களுக்கும் என்ன உண்மைனு தெரியாது,ஆனால் அடுத்தவன் எப்பவோ படிச்சதா சொன்னால் "ஆதாரம் எங்கேனு" எல்லாம் தெரிஞ்சாப்போல குதிப்பீங்க அவ்வ்!

#//இந்தியக் குடிமகானாயிருப்பார் என்றால் அது மிக மிக செல்வாக்கானோரின் கைங்கரியமாய் இருக்கும்! அதுதான் நான் சொல்ல வந்தது!//

இதான் சொல்ல வந்தீங்களா? நீங்க என்னமோ எல்லா ஆதாராத்துக்கும் போட்டோ காப்பி வச்சிக்கிட்டு சுப்பிரமணிய சாமி போல ஆதாரம் இருக்குனு பூச்சாண்டி காட்டுறதா நினைச்சுட்டேன் அவ்வ்!

செல்வாக்கினால் குடிமகனாயிருப்பார்னு தான் ஆரம்பத்துலவே சொன்னேனே பார்க்கலையோ?

இக்பால் செல்வனே அதுக்கு தானே என்னோட விவாதம் செய்தார், மேல போய் படிச்சு பாருங்க!

#// normally
residing and working in India will be eligible for the Awards//

இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இந்தியாவில் வசிக்க "பதிவு" செய்திருக்கணும். சும்மா ஏதோ ஒரு விசாவில் வந்துட்டு விசாக்காலம் முடிஞ்சு போனவர்கள் அல்ல.

இந்தியாவில் வசிக்க பதிவு செய்து 12 ஆண்டுகள் ஆச்சுனா குடியுரிமை கோரலாம்னு அவ்ளோ விரிவா பேசினமோ அதெல்லாம் படிக்கலையோ?

//கொஞ்சம் திருப்பி படிங்க வளவால்!//

நீங்களும் கொஞ்சம் திருப்பி படிங்க ஊர்ச்சுற்றி,

//உங்க ஊர்ல எல்லாமே “ஜாதி” கண்னாடி போட்டு பார்க்கிரீங்க. காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் !//

//அப்படித்தான் அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் இலங்கையில் பணக்காரர்கள் செட்டியார்கள் என செல்லமாக அறியப்பட்டனர். "ஒரு ஜாதியாக அல்ல". //

இப்படி சொன்னதால் தான் உங்களுக்கு பரிசு கொடுக்கலாம்னு கேட்டேன் :-))

இப்பவும் இலங்கையில ஜாதியே இல்லைனு நிருபிச்சுட்டு அந்த பரிசை தட்டிச்செல்லலாம் அவ்வ்!

தொடரும்...

வவ்வால் சொன்னது…

தொடர்ச்சி...

#//உதாரணமாக தமிழ்நாட்டில் எல்லா ஈழவிடுதலை இயக்கங்களுமே புலிகள் எனவே அறியப்பட்டனர்!//

ஹி..ஹி அதே போல தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் என தனியா யாருமில்லை,எல்லாருமே "இந்தியாவில் இருந்து ஏதோ ஒருக்காலத்துல இலங்கைக்கு போன தமிழர்கள்" என்று தான் அறியப்படுகிறார்கள்.

எனவே தமிழ்நாட்டுப்பக்கம் வந்தால் " ஈழத்தமிழர்கள் என்பவர்கள் இலங்கையிலே முளைச்சு வந்தவங்க" ஆனால் "இந்திய வம்சாவழி தமிழர்கள்" எல்லாம் டீ எஸ்டேட்ல அடிமையா இருக்காங்கனு பேசிப்புடாதிங்க,அப்புறம் இப்படியாப்பட்டவங்களுக்கா தமிழ்நாட்டில போராடினோம்னு வெட்கப்படும் நிலைக்கு ஆளாகிடுவாங்க அந்த அப்பாவி தமிழர்கள் அவ்வ்!

இந்திய வம்சாவழித்தமிழர்களுக்கு குடியுரிமை கூட இல்லைனு துரோகம் செய்தவர்கள் தான் உங்களைப்போன்ற ஈழத்தவர்கள்னு அப்பாவி தமிழர்களுக்கு இன்னமும் தெரியாது.

ஆமாம் எனக்கு ஒரு டவுட் ,மலையகத்தமிழர்கள் பெரும்பாலும் அகதிகளாக வெளிநாட்டுக்கு போகவே இல்லையே , ஏன் சிங்கள இனவெறி தாக்குதல் அவர்கள் மீது நடக்கவேயில்லையா?

//அமெரிகாவில் தமிழர் சினிமா இறக்குமதி செய்தது மட்டும்தான் தெரிந்திருக்கிரது பாவம் இவர் ஏதோ நினைத்துக் கேள்வி கேட்டார் இப்போ வந்து கதை விடுகிறார். அமெரிகாவை முன்னுதாரனம் காட்டி “ இலங்கை இந்திய தமிழர்” என அழைகாததேன் என பொங்கி எழுந்தவர் இப்போ நீதான் இழுத்தாய் என்கிரார்!//

அய்யா நீர் சொன்னதுக்கு தானே பதிலாக கேட்டேன்,அமெரிக்கா எல்லாம் ஈழப்போரில் கலந்துக்கொண்டது என சொன்னது நீர் தானே ,அதான் ஏன் எதிர்ப்பு காட்டலையானு கேட்டேன்.

அங்கே அப்படிப்பேசினோம்,இங்கே இப்படி பேசினோம் கதையெல்லாம் ஏன் ,தமிழ்ப்படிக்க தெரியும் தானே, தமிழ் வலைப்பதிவுகளில் இந்தியாவை மட்டும் தான் திட்டி எழுதுறாங்க சில புரட்சிப்புண்ணாக்குகள்,அதை வைத்து தான் நான் பேச முடியும்.

# பாலுமகேந்திரா பேர்ப்பெற்ற சினிமாக்காரர் என்பதால் "ஈழத்தவர்' என காட்டிக்கொள்ள பெருமுயற்சி செய்தீர் ,அடுத்து அர்னால்டு ஸ்வாஷ்னேகர் ,ஏஞ்சலினா ஜூலி ஆகியோர் கூட கண்டியில் பிறந்த ஈழத்தவர் என கேள்விப்பட்டேன் என ஆரம்பியுங்கள் ,காசாப்பணமா நீங்க கேள்விப்பட்டால் அது உண்மையாகவே இருக்கும் :-))

வருண் சொன்னது…

***நீங்கள் தான் அவரை "pedophile" எனச் சொல்லியது.
சொல்லபோனால் நீங்கள் "pedophile" என கத்துவதை விட்டு அவர் மீது ஒரு வழக்குத்தாக்குதல் செய்திருக்கலாமே?
"pedophile" எனத்தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் அதைச் சொல்ல அவர் இறக்கும் வரை பொறுத்ததேன்? அதைக்கூட சொந்த பதிவில் எழுத வக்கில்லை அடுத்தவனின் பதிவில் பின்னூட்டமாய் இட்டதேன்!

சொந்த பதிவில் எழுத மறந்து பின்னர்தான் மனதில் வரவே பின்னூட்டத்தில் "pedophile" சொல்லாடல் பாவிக்கப்பட்டதேன்? தலைப்பில் "pedophile" எனச் சொல்லி இருக்கலாமே?

பரவாயில்லை இன்னும் காலம் கடந்து போகவில்லை
கிழிங்க அவர் முகமூடியை அவர் "pedophile" என்பதற்கான ஆதாரங்களை வையுங்கள். இந்திய பத்திரிகையில் எழுதுங்கள். நான் வேண்டாமென்றா சொன்னேன்.
சொல்லப்போனால் அவரை "pedophile" என நிரூபித்து அவருக்கு கிடைத்த அத்தனை தேசிய விருதுகளையும் பறித்தெடுங்களேன் யார் வேண்டாமென்று சொன்னார்கள்??
செய்யுங்கள் வருண்..செய்யுங்க...ஆவலுடன் காத்திருக்கிறேன்!***

இங்கே என்ன நடக்குது?

நீங்க ஏன் இங்கே வந்து இந்தத் தளத்தில் வாதிடுறீங்க?

கொஞ்சம் யோசிக்கிரீங்ளா?

நீங்க ஏன் செய்ண்ட் லுயிஸ் போயி பாலும்கேந்திராவிடன் குசலம் விசாரிக்கலாம்னு இருந்தீங்க? அப்படி என்ன அவர் மேலே அக்கறை?? அதுவும் ஒரு "Pedophile" மேலே? அதுக்குள்ள போயி சேர்ந்துட்டானேனு எதுக்கு இந்த வருத்தம்? ஒரு pedophile செத்தால் இப்போ என்ன???

நீங்க ஷோபா ங்கிர ஒரு உயிர் பலியானதுக்கு காரணமானவனையும், அவன் கலைத்திறனையும் ஏன் போட்டு மெச்சுறீங்க?

இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

உங்களுக்குப் புரியுதோ இல்லையோ எமக்குப் புரிகிறது.

----------

பாலு எழவுவீட்டில் "செத்து தொலைகிறான் விடு"னு பதிவெழுத ஆரம்பிச்சதே அடியேன் தான்.

அது அவர் உங்க சொந்தம், எங்க சொந்தம் இல்லை, என்பதற்காக அல்ல!

இதெல்லாம் உங்களுக்குப் புரியாது!

சும்மா வந்துட்டு இப்படி எழுதியிருக்கலாம்ல அப்படி எழுதிய்யிருக்கலாம்லனு வெதண்டாவாதம் வேற!

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

எழுத்துப்பிழைகள அதிகமாக இருந்ததால் என் முந்திய பின்னூட்டம் அகற்றப்படுகிறது

***//ஈழத்தமிழர்கள் எல்லாருமே 100% யோக்கியர்களா என்ன?? உங்க ஊரில் திருடன், கொலைகாரன், கற்பழிக்கிறவன்னு ஒரு பயகூடக் கெடையாதா?? தெளிவுபடுத்தவும்!//

என்ன வருண் இப்படிச்சொல்லிட்டீங்க!
கொலைகாரன் என இலங்கை அரசால் அமெரிக்காவுக்கு ஒப்புதலாக (விக்கிலீக்ஸ் ஆதாரம்) சொல்லப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா இருக்கிறாரே. அவர்தாங்க மன்மோஹன் சிங் உடன் கைகுலுக்கிய படம் எல்லாம் வெளிவந்ததே பாக்கலியா?
http://www.asiantribune.com/node/2019 ***

நான் ஆசியதிரிபூன் எல்லாம் வாசிப்பதில்லை. அதை தொடுப்பாகக் கொடுக்கிற யாரையும் நம்புவதில்லை.

நீங்க ஆறறிவு உள்ள மனுசந்தானே?

உங்களைச் சுற்றி உங்க சொந்த பந்தங்களிலேயே, கொலைகாரன், பொறுக்கி, பாலுவின் நகல்கள் எல்லாரையும் பார்க்கலாம். அதேபோல் என்னைச் சுற்றி உள்ள என் சுற்றத்தார் என் தமிழ்மக்களிலும் நான் அதுபோல் பொறுக்கிகளையும், கொலைகாரனையும். பெடோஃபைல்களையும் பார்க்கிறேன்.

இதையெல்லாம் ஏற்றுக்க ஒரு திறந்த மனது வேணும். அவ்ளோதான். இனவெறி, மொழிவெறி எல்லாம் பிடிச்சு அலைபவர்களுக்கு அந்த ஆறாவது அறிவு வேலை செய்வதில்லை.

அதான் போயி இதுபோல் ஒண்ணுக்கத்த தொடுப்புகளை கொடுத்து உண்மையை விட்டுப்புட்டு எதையாவது வீம்புக்குச் சொல்ல வில்லங்கம் பண்ணுறது- உங்களைப் போல!

வேகநரி சொன்னது…

//இலங்கையி தமிழர்கள் கிறிஸ்துவுக்கு முன் 2ம் நூற்றாண்டில்//
இலங்கையில் தோன்றிய ஒரு பூர்வீக குடிகள் தாங்கள் என்று சொல்ல அப்படி ஒரு ஆசை. எமது அதிஷ்டம் இவர்கள் பேசும் பாஷை தமிழகத்தின் தமிழாக இருப்பதால் தப்பினோம். அல்லது எங்களை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்.
//சமாதான கால தலைவர் ஐரோப்பிய யூனியன் (நாடுகளின் பட்டியல் தெரியும் என நினைக்கிறேன்)புலிகலைத்தடை செய்தது தவறு என பகிரங்கமான ஒப்புதல்.//
ஒபாமா ரகசிய ஒப்புதல் கொடுக்கல்லையா! சமீபத்தில் யுத்தம் பற்றி விசாரணை செய்ய இலங்கை சென்ற ஐநாவின் முக்கிய அம்மையார் விடுதலைப் புலிகள் என்பது பல்வேறு உயிர்களை இரக்கமற்ற முறையில் அழித்த கொலைகார அமைப்பாகும் என்று சாட்டிபிக்ற் கொடுத்தார்.

பக்ரு பாபா சொன்னது…

உங்களவையலுக்கு வேற வேலப் பிழைப்பு இல்லையோ. பாலு மகேந்திரா ஒரு மட்டகளப்பான், அவன நீங்க எத்தனை முறை ஏசினாலும் பேசினாலும் வெளிநாட்டுல இருக்கிற எங்கட யாழ்ப்பாணத்து சனங்களுக்கு கோபமே வரா. வேண்டுமெண்டால் ஆராவது யாழ்ப்பாணத்தானை ஏசிப் பாருங்கோ, இப்ப இங்க நீங்கள் இருந்தபாடில்லை.

இலங்கையில எங்களைப் பொறுத்தவரைக்கும் சிங்களவனுக்கு முந்தி வந்தவை எங்கட யாழ்ப்பாணத்து சனம் மட்டும் தான். நீங்கள் சொல்லுறது போல மட்டகளப்பான, சோனகன, தோட்டக்காட்டுச் சனங்கள் எல்லாம் இந்தியாவில இருந்து வந்தவை, அதனால தான் அவங்கட பக்கம் நாங்கள் போறதும் இல்ல, அவையலும் இந்தப் பக்கம் வாரதும் இல்ல, எங்கட ஆட்கள் தனி நாடு கேட்கேக்கில்ல, அடிபட ஆள் குறைவா இருந்தவ, சிங்களவன் வத வத என பிள்ளையலை பெத்ததாலயும், இந்தியாவில இருந்து வந்த ஆட்களை எல்லாம் சிங்களவன் மாமன் மச்சனனாய் ஏற்றுக் கொண்டதாலயும் அவயிண்ட தொகைக் கூடிப் போச்சு, அதனால தான் நாங்கள் எங்கட கொள்கையில இருந்து கொஞ்சம் விலக்கி எல்லா இந்திய வடக்கத்தையானையும் மட்டகளப்பானயும், தோட்டக்காட்டு கள்ளத்தோணிகளையும் அடிபட சேர்த்துக் கொண்டோம் , அவங்கள் அடிபடுற வரைக்கும் நாங்கள் உப்பிடியே லண்டன், பரிஸ், ரொறண்ரோ என ஊர் சுற்றிப் பார்க்க போனனாங்கள், பிறகு பிள்ளயலை படிக்க வைக்கவும், கொஞ்ச நாள் தனிநாடு எடுக்கிற வரைக்கும் அப்பிடியே இருந்திட்டு இவயல் அடிபட்ட ஆட்களுக்கு காசு அனுப்பிக் கொண்டும் இருந்தம், இவயல் அடிபட அடிபட தானே, அதச் சாக்குச் சொல்லி இங்க அசியுல் கேட்கலாம், அப்படித் தான் ஒரு பத்து லட்சம் பேர் யாழ்பாணத்தால கிளம்பி கொழும்பு பக்கம் போய் சிலர் மட்ராசுக்கு போய் அது வழியா கள்ள பாஸ்போர்ட் எடுத்தொண்டு இங்க வந்தனாங்கள்.

வன்னியில இருக்கிறவைக்கும் நாங்கள் தான் காசு கொடுத்தனாங்கள், இல்ல எண்டால் அங்க என்ன இருக்கு, வெறும் நுளம்புக்கடியும், காட்டு மிருங்கங்களும் எங்களால அங்க வாழ ஏலாது, பிறகு அடிபட ஆட்கள் வேண்டி சோனக பெடியலையும் தோட்டக்காட்டானயும் கூப்புட்டோம், ஆனால் எங்கட கெடுபிடு தாங்கேலாம சிங்களவனே மேல் என அவை அங்கால போயிட்டனம்,

பக்ரு பாபா சொன்னது…

மிச்சம் மீது இருந்தவன் மட்டக்களப்பான் மட்டும் தான். ஆனா அவங்களுக்கு ஒரு குணமுண்டு, படிப்பறிவு இல்லாத ஆட்கள் தானே, அப்பப்போ அவயிக்கு வேண்டியத கொடுத்தாத்தான் அடிபட வருவினம், இல்ல எண்டல் முரண்டு பிடிச்சுக் கொண்டு நிப்பினம், அப்படித்தான் 2001-ம் ஆண்டு வெளிநாட்டுப் பக்கம் பேச்சுவார்த்தைக்கு போன போது, அட வெளிநாட்டுல எல்லாம் யாழ்ப்பாணத்து சனம் நல்லா காரும் வீடுமாய் வாழுது, எங்கட சனம் மட்டும் இங்க கிடந்து வாடுது, எங்கட ஆட்களையும் ஏஜென்சி மூலமாய் வெளிநாட்டுக்கு அனுப்புங்கோ எண்டு சொன்னவ, இவையலும் வெளிநாட்டுக்குப் போன தனிநாடு ஆருக்குத்தான் மிஞ்சும், அதனால எங்கட தலவர் நீங்க வன்னிக்கு வாங்கோ, உங்கள வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறம் எண்டு சொல்ல, ஓம் ஓம் என தலையாட்டிக் கொண்டு கடைசி நேரத்தில, எங்கட ஆட்களை நம்புறதுக்கு சிங்களவனையே நம்பலாம் என மட்டக்களப்பானும் அங்காலப் போய்ச் சேர,

அடிபட ஆளில்லாம, வன்னியில கட்டாய பயிற்சி எல்லாம் கொடுத்துப் பார்த்தம் இருக்கிற ஒன்றரை லட்சம் சனத்தை வச்சுக் கொண்டு அதுலயும் பாதி பேர் வயசு போனதுகள், மீதி இளசுகள் என்ன செய்ய, யாழ்ப்பாணத்துலயும் கொழும்புலயும் இருக்கிற எங்கட ஆட்களை வந்து அடிபடுங்கோ எண்டு சொல்ல, நாங்கள் உதுக்கு வர மாட்டம், நாங்கள் வெளிநாட்டுக்கு போகோணும் எண்டுச் சொன்னனாங்க, என்ன செய்ய, வேறு வழியில்லாம ராஜதந்திரம் ராஜந்தந்திரம் எண்டு சொல்லிக் கொண்டு வெளிநாட்டுல கிடைச்ச காசை எல்லாம் அங்க உள்ள எங்கட ஆட்களே பாங்க் லொக்கருக்குள் வச்சுக் கொண்டினம் தலவரும் காத்திருந்து காத்திருந்து நம்ம ஏற்றிக் கொண்டு போக கப்பல் வருது கப்பல் வருது எண்டு இழவு காத்த கிளியாக கிடந்து பஞ்சாய் நெஞ்சு வெடிச்சு செத்தது தான் மிச்சம்.

பக்ரு பாபா சொன்னது…

எங்கட யாழ்ப்பாணத்து சனத்த தவிர மிச்சம் உள்ள எல்லாரும் இந்தியாவில இருந்து தான வந்தவ, பாருங்கோ, வவுனியா பக்கம் உள்ள ஆட்கள் புதுக்கோட்டை பக்கம் இருந்தும், மன்னாருல உள்ளவ ராமநாட்டுப் பக்கம் இருந்தும், புத்தளம் நீர்கொழும்புல உள்ள ஆட்கள் தூத்துக்குடி பக்கம் இருந்தும், மட்டக்களப்பான எல்லாம் கேரளாவில இருந்தும், தோட்டக்காட்டான் எல்லாம் திருச்சி, சேலம் பக்கம் இருந்தும், சிங்களவன் எல்லாம் ஒரிசா வங்காளப் பக்கம் இருந்தும் வந்தவ..

எந்தப் பக்கம் இருந்தும் வராம இங்க வாழ்ந்த ஒரே ஆட்கள் யாழ்ப்பாணத்தான் மட்டும் தான். அது கூட தீவுப்பக்கம் உள்ள ஆட்கள் கூட கொஞ்சம் இந்தியாக் கலப்புண்டு, எங்கட குடா நாட்டுல உள்ள ஆட்கள் மட்டும் தான் சுத்தமான ஆட்கள்.

எங்களிட்ட தானே சோழ ராசா கூட வந்து தண்ணி வாங்கிக் குடிச்சவ, கீரிமலையில கூட உங்கட ராணி வந்து போனவா தானே.

வருண் சொன்னது…

பக்ரு பாவா: நீங்கள் ஒரு சிங்களவன் தமிழ் கத்துக்கொண்டு வந்து எங்களுக்குள் பிரிவு உண்டாக்க முயல்வது புரிகிறது. :)

இந்த நாடகம் எல்லாம் தேவையே இல்லை! நாங்க என்னைக்கு ஒற்றுமையா இருந்தோம்? நாங்களே அடிச்சுக்கிட்டுச் சாவோம், நீர் போயி வேறு வேலையைப் பாரும்!

பக்ரு பாபா சொன்னது…

//இந்த நாடகம் எல்லாம் தேவையே இல்லை! நாங்க என்னைக்கு ஒற்றுமையா இருந்தோம்? நாங்களே அடிச்சுக்கிட்டுச் சாவோம், நீர் போயி வேறு வேலையைப் பாரும்!//

என்ன தம்பி உப்பிடி சொல்லிப் போட்டீங்கள், எங்கட ஆட்கள் எண்டைக்கு தம்பி ஒண்டாய் இருந்திருக்கினம், ஆனாலும் என்னப் பார்த்து சிங்களவன் எண்டுச் சொல்லிப் போட்டீங்களே, பிறகு ஆர் தான் எனக்கு அறுபதாம் கலியாணத்துக்கு பெண் தருவினம், பாருங்கோ, சிங்களத்திய கேட்டா ஒருத்தியும் யாழ்ப்பாணத்து ஆட்களை கலியாணம் முடிக்க தயங்கினம், எங்க மூண்டு மாசத்துல விட்டுக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிப் போயிடுவானோ எண்டு தான். :)))

ஊர்சுற்றி சொன்னது…

//இங்கே என்ன நடக்குது?
நீங்க ஏன் இங்கே வந்து இந்தத் தளத்தில் வாதிடுறீங்க?
கொஞ்சம் யோசிக்கிரீங்ளா?//

நான் சொந்த தளம் நடத்துவதில்லை.
சொந்த தளத்தில் “peophile" என தலைப்பிட்டு எழுதி இருக்கலாமே? அப்படி எழுதாமல் அடுத்தவன் தளத்தில் ஏன் கொட்டவேண்டும்?

//நீங்க ஏன் செய்ண்ட் லுயிஸ் போயி பாலும்கேந்திராவிடன் குசலம் விசாரிக்கலாம்னு இருந்தீங்க? அப்படி என்ன அவர் மேலே அக்கறை?? அதுவும் ஒரு "Pedophile" மேலே? அதுக்குள்ள போயி சேர்ந்துட்டானேனு எதுக்கு இந்த வருத்தம்? ஒரு pedophile செத்தால் இப்போ என்ன???//

குசலம் விசாரிக்க நான் போக இருந்தேன் என எங்கே சொன்னேன் காட்டுங்கள் பார்க்கலாம்? நான் அவரிடம் கேட்க இருந்தவை ..
1) அவர் எந்த நாட்டின் பாஸ்போட் வைத்திருக்கிறார்?
2) சோபாவின் இறப்பின்போது இந்தியாவில் ஓவெர் ஸ்ரே (Over stay) எனச் சொல்லப்பட்டவர் எப்படி தப்பினார்?
3) ஈழபிரச்சினைபற்றி ஒரு சினிமா எடுக்க இருந்ததாயும் அது “மேலிட” எச்சரிக்கையால் கைவிடப்பட்டதாயும் சொல்லி இருந்தார். அந்த ”மேலிடம்” யார்? சினிமாவிம் மையக்கரு என்னவாய் இருந்திருக்கும்? (மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றிய அல்லது யாழ் நூலக எரிப்பு பற்றியது என கேள்விப்பட்டேன்)
4) யாழ் நூலக எரிப்பு பற்றி சோமிதரன் எடுத்த ஆவணப்படம் தனது கைகளில் தரப்பட்டபோது கைகள் நடுங்கி கண்கள் கலங்கி தனது கடமையில் இருந்து தவறிய உணர்வு ஏற்பட்டது எனச் சொன்னார். அப்படி என்ன “கடமையில்” இருந்து தவறினார்?
இவையே எனது கேள்விகளாய் இருந்திருக்கும். நான் சொன்னது போல் விதி விளையாடி விட்டது.

நீங்களாகவே ஏதோ குசலம், குஞ்சம் என கற்பனை செய்து கொண்டு ......!

//நீங்க ஷோபா ங்கிர ஒரு உயிர் பலியானதுக்கு காரணமானவனையும், அவன் கலைத்திறனையும் ஏன் போட்டு மெச்சுறீங்க?//

என்கே இவர் கலைத்திறன் பற்றி நான் “மெச்சினேன்”? காட்டுங்க பார்க்கலாம்?

//சும்மா வந்துட்டு இப்படி எழுதியிருக்கலாம்ல அப்படி எழுதிய்யிருக்கலாம்லனு வெதண்டாவாதம் வேற!//

நான் சொன்னதைச் செய்யலாமே?
அவர் pedophile என ஒரு பொது நல வழக்கு போட்டிருக்கலாமே? ஏன் இறந்தவுடன் வசவு? இவ்வளவுகாலம் அவர் தேசிய விருதெல்லாம் வாங்கினாரே (நான் கொடுக்கவில்லை இந்தியா கொடுத்து அவருக்கு வக்காலத்து வாங்கியது)
இப்போகூட காலம் தாழவில்லை..வழக்குப் போடுங்க pedophile என நிரூபியுங்க. விருதுகளப் பறியுங்க. நானும் உங்களோடு சேர்ந்து சந்தோசப்படுவேன். செய்வீங்களா வருண்?

//பாலு எழவுவீட்டில் "செத்து தொலைகிறான் விடு"னு பதிவெழுத ஆரம்பிச்சதே அடியேன் தான்.//

அடியேன் ஏன் ஒரு “pedophile செத்து தொலைகிறான் விடு" என எழுதவில்லை. தலைப்பை விடுங்க கட்டுரையிலேயே அச்சொல்லாடல் இல்லையே?
இடையில் இன்கிலீசெல்லாம் எடுத்து விட்டிருக்கிறீங்க I have never seen such a casual/natural acting with any other actress! ..Bullshit. "சிக் பர்சனாலிட்டி" எல்லாம் விடும்போது pedophile மட்டும் ஞாபகம் வரலியா?

ஊர்சுற்றி சொன்னது…

//நான் ஆசியதிரிபூன் எல்லாம் வாசிப்பதில்லை. அதை தொடுப்பாகக் கொடுக்கிற யாரையும் நம்புவதில்லை.//

நல்ல வசதியான பதில் இல்லையா வருண்?

//அதேபோல் என்னைச் சுற்றி உள்ள என் சுற்றத்தார் என் தமிழ்மக்களிலும் நான் அதுபோல் பொறுக்கிகளையும், கொலைகாரனையும். பெடோஃபைல்களையும் பார்க்கிறேன்.//

ஓ...அதானா எந்த ஆதாரமும் இல்லாமல் அடுத்தவனையும் குற்ரம் சாட்டுகிறீர்கள்? சுற்றுச்சூழல் தான் ஒரு மனிதனை ஆக்குகிறது உண்மைதான் என்பதற்கு இன்னோர் ஆதாரம் நீங்கள்!

//இதையெல்லாம் ஏற்றுக்க ஒரு திறந்த மனது வேணும்.//
ஆனால் “நான் ஆசியதிரிபூன் எல்லாம் வாசிப்பதில்லை. அதை தொடுப்பாகக் கொடுக்கிற யாரையும் நம்புவதில்லை
அவ்ளோதான்.” சுப்பரான திறந்த மனது!!
// இனவெறி, மொழிவெறி எல்லாம் பிடிச்சு அலைபவர்களுக்கு அந்த ஆறாவது அறிவு வேலை செய்வதில்லை. //

அதான் பாலுமகேந்திரா இறக்கும் வரை பொறுத்திருந்து சொந்தப்பதிவிலும் சொல்லாமல் அடுத்தவன் பதிவில் சொன்னீர்களாக்கும்! ஆறாவது அறிவு சுப்பராய்த்தான் வேலை செய்யுது?

நன்றாய் வேலை செய்யும் ஆறாவது அறிவினை உபயோகித்து பாலுமகேந்திரா ஒரு pedophile என நிரூபித்து அவரின் “தேசிய” விருதுகளை பறிக்க முடியாதா வருண்?

ஊர்சுற்றி சொன்னது…

//ஒபாமா ரகசிய ஒப்புதல் கொடுக்கல்லையா! //
வேகநரி,

ஒப்புதல் கொடுத்தது பில் கிளின்ரன். அமெரிக்கா என்றால் ஒபாமா மட்டுமே மனதில் வரும் போல் இருக்கிறது? வேகநரி கொஞ்சம் ஆறுதல்நரியாய் சிந்தியுங்கள்!

//சமீபத்தில் யுத்தம் பற்றி விசாரணை செய்ய இலங்கை சென்ற ஐநாவின் முக்கிய அம்மையார் விடுதலைப் புலிகள் என்பது பல்வேறு உயிர்களை இரக்கமற்ற முறையில் அழித்த கொலைகார அமைப்பாகும் என்று சாட்டிபிக்ற் கொடுத்தார்.//

அதுக்கென்ன இப்போ? அமெரிக்க நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்கு அதுபற்றியதல்ல. அமெரிக்க அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றியது. தேவை என்றால் இணையத்தில் கிடைக்கும் படித்துப் பாருங்கள். வேகமாய் படிக்காமல் ஆறுதலாய் கிரகித்து படியுங்கள்!


ஊர்சுற்றி சொன்னது…

//சின்ன வயசிலவே சிங்கள ஆர்மி மண்டையில அடிச்சதுல சித்தபிரமை வந்திடுச்சோ அவ்வ்!//

நல்லகாலம் சித்தப்பிரமையில் நான் தலைகீழாக தொங்குவதும் இரவில் துயில் கொள்வதும் நடக்கவில்லை. தப்பினேன் பிழைத்தேன்!

//ஏங்க உங்களுக்கே நியாமா இருக்கா, கேள்விப்பட்டேன்,தெரிய வந்தது எனப்பேசிக்கொண்டு//

பின்னர் அவரே ஒப்புக்கொண்டார். அப்புறம்தான் நம்பினேன். அதுமட்டுமல்ல அழியாத கோலங்கள் கதையே அமிர்தகழியில் நடந்த தனது கதை என வேறு சொல்லி இருந்தார். அக்கதையில் ரகு இறந்து போனது உண்மை நிகழ்வின் வெளிப்பாடு எனவும் சொல்லி இருந்தார்.

//அய்யா நீர் சொன்னதுக்கு தானே பதிலாக கேட்டேன்,அமெரிக்கா எல்லாம் ஈழப்போரில் கலந்துக்கொண்டது என சொன்னது நீர் தானே ,அதான் ஏன் எதிர்ப்பு காட்டலையானு கேட்டேன்.//

அமெரிக்காவில் நீக்ரோக்களை ஆபிரிக்க அமெரிக்கர்கள் என அழைக்கிறார்கள் தெரியுமா என கதை விட்டது யார்? அதற்குப்பதில் எழுதியதற்கு சினிமா கூட்டம் வழக்குப்போடாத கூட்டம் எனச் சொன்னது யாருங்க?

//திட்டி எழுதுறாங்க சில புரட்சிப்புண்ணாக்குகள்,அதை வைத்து தான் நான் பேச முடியும்.//

அதான் சொல்லிட்டீங்களே “புரட்சிப் புண்ணாக்குகள்” என. அவர்களை வைத்து ஏன் மற்றவர்களை எடை போடவேண்டும்?

//அடுத்து அர்னால்டு ஸ்வாஷ்னேகர் ,ஏஞ்சலினா ஜூலி ஆகியோர் கூட கண்டியில் பிறந்த ஈழத்தவர் என கேள்விப்பட்டேன் என ஆரம்பியுங்கள் ,காசாப்பணமா நீங்க கேள்விப்பட்டால் அது உண்மையாகவே இருக்கும் :-))//

ஆஹா...உங்களிடம் எதிர்பார்த்தது தான். என்னடா அமெரிக்க மரத்தில் இருந்து அடுத்த மரம் தாவலையே என பார்த்தேன்.

கண்டி “ஈழத்தில்” வராதுங்க! ஏன் ஒரு “புரட்சிப் புண்ணாக்கு” களும் உங்களுக்குச் சொல்லலியா?
கண்டி வடகிழக்கில் இல்லைங்க. நடுவில் இருக்குங்க. ஈழம் என்பது மணிரத்தினம் படம் மாதிரி இல்லை. அதில்தான் மாங்குளம் யாழ்ப்பானத்தில் இருக்கும். மாங்குளத்தில் நிலமெல்லாம் பொலிஷ் பண்ணிய வீட்டில் ஒரு சிங்களவர் இருப்பாருங்க !!

ஊர்சுற்றி சொன்னது…

//ஆக மொத்தம் உங்களுக்கும் என்ன உண்மைனு தெரியாது,ஆனால் அடுத்தவன் எப்பவோ படிச்சதா சொன்னால் "ஆதாரம் எங்கேனு" எல்லாம் தெரிஞ்சாப்போல குதிப்பீங்க அவ்வ்!
//

வெளவால்,

இங்கே பிரச்ச்சினை என்னவென்றால், பாலுமகேந்திரா தன்னை மட்டக்களப்பில் இருக்கும் அமிர்தகழி என்கின்ற கிராமத்தில் பிரந்தவர் என்றும் காசிஆனந்தன், கனேசலிங்கன் போன்றோர் தனது நண்பர்கள் எனவும் சொல்லி இருந்தார். இதுவரை தான் இந்தியப்பிரஜை ஆகிவிட்டேன் எனச் சொல்லவில்லை. இவரின் over stay பிரச்சினையை வைத்தாவது நாடுகடத்தலாம் என இவரின் போட்டியாளர்கள் முயன்று பார்த்தனர். எம்ஜிஆர் ஆதரவினால் ஒரு மயிரையும் (வருண் கோவிக்ககூடாது) புடுங்க முடியவில்லை!
ஈழம் என்பது வடகிழக்கு மாகானங்கள். கண்டி இதில் வராது. அத்துடன் இதுவரை ஆனல்ட் சுவாட்சினாகரோ அஞ்ஜலினா ஜோலியோ அப்படி சொன்னதும் கிடையாது.

//# எம்ஜிஆர் செய்தால் கேட்க ஆளில்லைனு ஆரம்பத்துலவே சொல்லிட்டேன் அவ்வ்!

அது இப்பத்தான் புரிஞ்சிருக்கு :-))//

அந்தக் கேட்க ஆளில்லாத ஆதரவாலேயே அவர் ஈழத்தில் பிறந்திருந்தும் இந்தியாவில் இந்தியனாய் நடமாடுகிறார் என்பதே எனது கருத்து. புரிகிரதா?

ஊர்சுற்றி சொன்னது…

/# பாலுமகேந்திரா "ஈழத்தமிழர்' அல்ல இந்திய இலங்கை தமிழர் ,அப்படித்தான் நான் படிச்சேன், அங்கே குடியுறிமை பிரச்சினை என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு வந்தார்.//

அப்படி என்ன குடியுரிமைப்பிரச்சினை?
நீங்கள் சொன்னது போல “ஸ்ரீமா-சாஸ்திரி” ஒப்பந்ததில் வந்திருந்தால் அவரின் இந்தியக்குடியுரிமைக்கு ஏன் எம்ஜிஆர் செல்வாக்குத் தேவை?
ஸ்ரீமா-சாச்திரி ஒப்பந்தத்தில் வந்தவர்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லாம குடியுரிமை கிடைத்ததே!
எனது கேள்வி எல்லாம் பாலுமகேந்திரா ஏன் செல்வாக்கு மிக்கவர்கலிடம் போய் இந்திய குடியுரிமை பெறவேண்டும்.
பதில் இலகு...ஈழத்தவரான இவர் தனது செல்வாக்கினாலேயே இந்தியாவில் தொடர்ந்து இருக்கும் வழிவகை பெற்றார். அது இந்திய பிரஜா உரிமை ஆக இருக்கலாம் அல்லது இந்திய விசேட பயணச் சீட்டாக(Travel document) இருக்கலாம். ஆனால் அவர் இந்தியா வந்த பின்னர் இதுவரை வெளிநாடு ஒன்றுக்கு சென்றதாய் நான் அறியவில்லை. இம்முறை அமெரிக்கா வந்திருந்தால் அறிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.

//#// normally
residing and working in India will be eligible for the Awards//

இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இந்தியாவில் வசிக்க "பதிவு" செய்திருக்கணும். சும்மா ஏதோ ஒரு விசாவில் வந்துட்டு விசாக்காலம் முடிஞ்சு போனவர்கள் அல்ல.//

அவ்வளவுதான். பதிவு “குடியுரிமை” ஆகாது. இந்திய பிரஜையும் ஆக்காது. ஆகவே இவர் வெறும் பதிவில் இருந்திருக்கிறார்.

//இந்தியாவில் வசிக்க பதிவு செய்து 12 ஆண்டுகள் ஆச்சுனா குடியுரிமை கோரலாம்னு அவ்ளோ விரிவா பேசினமோ அதெல்லாம் படிக்கலையோ?//

இந்த பதிவில் நான் இட்ட முதலாவது பின்னூட்டம் செவ்வாய், 18 பிப்ரவரி, 2014 6:32:00 முற்பகல் GMT+8 க்கு.
மீண்டும் அதைப் படிச்சுப்பாருங்க. முக்கியமா ”மட்டக்களப்பு”..”யாரும் அறியாதது”
என்பதனை மீண்டும் மீண்டும் படிங்க. இலைனா கொஞ்சம் சத்தம் போட்டுப் படிங்க. அத்துடம் நீங்கள் எழுதிய “இந்திய இலங்கை தமிழர் ,அப்படித்தான் நான் படிச்சேன், அங்கே குடியுறிமை பிரச்சினை என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு வந்தார்” என்பதையும் படிங்க!!!

குடியுரிமைப் பிரச்சினை உள்ளவர் லண்டனுக்கு எப்படிப்போனார், இந்தியாவுக்கு எப்படி வந்தார். இலங்கையில் குடியுரிமைப்பிரச்சினை உள்ளவர்கள் ஒரு சிறுதுண்டு காணிகூட வாங்க முடியாது அதை விடுங்க ஒரு தேசிய அடையாள அட்டை கூட அவர்களுக்கில்லாமல் இருந்தது இதில் இவர் எப்படி பாஸ்போட் எடுத்தார் லண்டன் போனார் இந்தியா வந்தார்?

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

//பின்னர் அவரே ஒப்புக்கொண்டார். அப்புறம்தான் நம்பினேன். அதுமட்டுமல்ல அழியாத கோலங்கள் கதையே அமிர்தகழியில் நடந்த தனது கதை என வேறு சொல்லி இருந்தார். அக்கதையில் ரகு இறந்து போனது உண்மை நிகழ்வின் வெளிப்பாடு எனவும் சொல்லி இருந்தார்.//

ம்ம் அப்புறம்?

பாலு மகேந்திரா ,அமெரிக்கா வந்தால் தான் ஏதோ கேட்பேன்னு "வருண் மாமா"க்கிடே சொல்லுறிங்க,அப்புறம்,அவரே ஒப்புக்கொண்டார்,நம்பினேனு சொல்றிங்க, என்ன தான் உங்க கணக்கு?

பாலுமகேந்திரா பத்தி ஒரு மண்ணும் தெரியாது ,இவங்களை கிளறிவிட்டு விஷயம் தெரிஞ்சிக்கலாம்னு வந்தீங்களா அவ்வ்!

#//அமெரிக்காவில் நீக்ரோக்களை ஆபிரிக்க அமெரிக்கர்கள் என அழைக்கிறார்கள் தெரியுமா என கதை விட்டது யார்? //

அய்யா சாமி,அது மொழியியல் வழக்கினை உதாரணம் காட்ட சொன்னது, அமெரிக்காவில் இருக்கீரேனு அமெரிக்க உதாரணம்.

// “புரட்சிப் புண்ணாக்குகள்” என. அவர்களை வைத்து ஏன் மற்றவர்களை எடை போடவேண்டும்?//

புண்ணாக்குகளின் எண்ணிக்கை தானே அதிகமா இருக்கு,அதனை மக்கள் நம்பிடுறாங்க, நீங்க புண்ணாக்கு வகையில வரலையோ? அப்போ பருத்திக்கொட்டை வகையா அவ்வ்!

#//கண்டி “ஈழத்தில்” வராதுங்க! ஏன் ஒரு “புரட்சிப் புண்ணாக்கு” களும் உங்களுக்குச் சொல்லலியா?//

யெப்பா அடுத்த கண்டுப்பிடிப்பில் இறங்கிட்டாரு அவ்வ்!

கண்டி கதிர்காம முருகனை ஈழத்தமிழர்கள் கும்பிடுறாங்க போல, தெனாலி படத்தில "ஈழத்தமிழ் பாசை" பேசிக்கொண்ண லோகநாயகர் ,கண்டினு கதிர்காம முருகன்னு வேல் வச்சிட்டு சொல்லுவாரேனு சொன்னேன் , சினிமால வரத சொன்னாத்தானே உங்களுக்குலாம் சட்டுனு புரியும் :-))

#//அவ்வளவுதான். பதிவு “குடியுரிமை” ஆகாது. இந்திய பிரஜையும் ஆக்காது. ஆகவே இவர் வெறும் பதிவில் இருந்திருக்கிறார். //

அய்யா ,எம்சிஆர் ஆதரவில் ஓவர் ஸ்டே செய்தாருன்னும் சொல்லுறிங்க, பதிவு செய்தால் தான் விருதுனு சொன்னால், பதிவு செய்திருப்பார் என்பதையும் "ஆமாம்" போடுறிங்க,எதாவது ஒன்ன சொல்லுங்கோ!

#//குடியுரிமைப் பிரச்சினை உள்ளவர் லண்டனுக்கு எப்படிப்போனார், இந்தியாவுக்கு எப்படி வந்தார். இலங்கையில் குடியுரிமைப்பிரச்சினை உள்ளவர்கள் ஒரு சிறுதுண்டு காணிகூட வாங்க முடியாது//

இதெல்லாம் நீங்க தான் கண்டுப்பிடிக்கணும் :-))

#//அதை விடுங்க ஒரு தேசிய அடையாள அட்டை கூட அவர்களுக்கில்லாமல் இருந்தது//

தவளை தன் வாயால் கெடும்!

அப்போ இலங்கையிலே தேசிய அடையாள அட்டை இல்லைனு சொல்லுறிங்களே ,அப்புறம் எப்படி "ஈழத்தவராக" இருக்க முடியும்?
----------------------------

#//அப்படி என்ன குடியுரிமைப்பிரச்சினை?//

உண்மையில நீங்க ஈழத்தவர் தானா?

அங்கே என்ன குடியுரிமை பிரச்சினைனே தெரியாதா?

இல்லை எப்படி சாஸ்திரி ஒப்பந்தத்துல இந்தியா அனுப்ப தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டாங்க அல்லது நிர்ப்பந்திக்க பட்டாங்கனு தெரியாதா?

ஶ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் உருவானதும் பலருக்கும் வெளியேற சொல்லி நிர்ப்பந்தம் ,இலங்கை மற்றும் ஈழத்தமிழர்களாயே வழங்கப்பட்டது,இது வரலாறு!

எனவே 64 க்கு முன்னர் பாலுமகேந்திராவுக்கு எப்பிரச்சினையும் இருந்திருக்காது,எனவே இங்கிலாந்தெல்லாம் போய் வந்திருப்பார், 64க்கு பின்னர் ,படிப்படியாக நெருக்குதல் உருவான,அக்காலத்தில் இந்தியாவில் படித்து வந்தார் அப்படியே இங்கே தங்கிட்டார்.

மிக எளிதாக ஒப்பந்தத்தில் வந்தவராக பதிவு செய்திருப்பார்.

அவர் , குடியுரிமை பிரச்சினையிலே இந்தியாவில் இருந்திருப்பார், பாஸ்போர்ட் கூட வச்சிருந்துக்க மாட்டார்னு நினைச்சிட்டு பேசுறிங்க, அவர் இந்தியாவில் வருமான வரிக்கட்டியிருக்கார், அதுக்கு பான் கார்ட் பெற ,குடியுரிமை ஆவணங்களாக ஏதேனும் காட்டியிருக்கனும்,எனவே குடியுரிமை இல்லாமல் எல்லாம் வாழவில்லை. அதனை இலங்கை இந்திய தமிழர் என்றப்பெயரில் பெற்றிருக்க வேண்டும் என்பதே நான் சொன்னது.

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

சுத்தி சுத்தி பேசிட்டே இருங்க,ஆனால் சரியான உண்மைய மட்டும் ஏத்துக்கவே மாட்டிங்க அவ்வ்!

நீங்களே விருது வாங்க தேவையான தகுதினு போட்டது,

//iv) The Director should be an Indian citizen. The cast and technicians should be
predominantly Indian nationals.//

பாலுமகேந்திரா 1977 இல் கோகிலா என்ற கனடப்படத்தினை இயக்கி,ஒளிப்பதிவு செய்துள்ளார், அதற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.
http://en.wikipedia.org/wiki/Kokila_(film)

தேசியவிருதுக்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக இயக்குனர் இந்திய குடிமகனா இருக்க வேண்டும், என்பதை இனி மறுக்க இயலாது,எனவே 77 லேயே அவர் குடியுரிமை பெற்றவராகத்தான் இருக்க வேண்டும். அப்புறம் எங்கே இருந்து உங்க ஓவர் ஸ்டே கதை முளைச்சது?

நான் சொல்லும் "இலங்கை இந்திய குடிமகன்" என்ற வழியில் குடியுரிமைப்பெற்றிருக்கலாம் என்பது பொருந்தி வருவதை உணரவில்லையா?

வருண் சொன்னது…

***//நான் ஆசியதிரிபூன் எல்லாம் வாசிப்பதில்லை. அதை தொடுப்பாகக் கொடுக்கிற யாரையும் நம்புவதில்லை.//

நல்ல வசதியான பதில் இல்லையா வருண்?***

இதிலென்ன வசதி இருக்கு? உங்க சகலை பாலு மகேந்திரா பெடோஃபைல்க்கு வக்காலத்து வாங்க எந்தக் குப்பையையாவது கிளறி அள்ளிட்டு வந்து கொட்டுவீங்க. நாங்க சிங்களவன் செய்தியைதியையெல்லாம் நம்பணும்?

ஏன்னா யோக்கியன் "ஊர் சுற்றி" சொல்றாரு அதனால?

நான் உங்களையே நம்பவில்லை! சிங்களவன் செய்தியை நம்பணும்?

சரியான காமெடியனா இருப்பீங்க போல!

வருண் சொன்னது…

***1) அவர் எந்த நாட்டின் பாஸ்போட் வைத்திருக்கிறார்?
2) சோபாவின் இறப்பின்போது இந்தியாவில் ஓவெர் ஸ்ரே (Over stay) எனச் சொல்லப்பட்டவர் எப்படி தப்பினார்?
3) ஈழபிரச்சினைபற்றி ஒரு சினிமா எடுக்க இருந்ததாயும் அது “மேலிட” எச்சரிக்கையால் கைவிடப்பட்டதாயும் சொல்லி இருந்தார். அந்த ”மேலிடம்” யார்? சினிமாவிம் மையக்கரு என்னவாய் இருந்திருக்கும்? (மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றிய அல்லது யாழ் நூலக எரிப்பு பற்றியது என கேள்விப்பட்டேன்)
4) யாழ் நூலக எரிப்பு பற்றி சோமிதரன் எடுத்த ஆவணப்படம் தனது கைகளில் தரப்பட்டபோது கைகள் நடுங்கி கண்கள் கலங்கி தனது கடமையில் இருந்து தவறிய உணர்வு ஏற்பட்டது எனச் சொன்னார். அப்படி என்ன “கடமையில்” இருந்து தவறினார்?
இவையே எனது கேள்விகளாய் இருந்திருக்கும். நான் சொன்னது போல் விதி விளையாடி விட்டது.***

நான் குசலம் விசாரிக்கிறதுனு சொன்னது இதைத்தான். நீங்களும் உங்க சகலையும் மாத்தி மாத்தி ஊட்டிவிட்டுக்கிறதை இல்லை!

உங்க பாலிஸி இதுதான்..

உங்க சகலை, பொறுக்கியா இருந்தாலும், பச்சை குழந்தையை வன்புணர்வு செஞ்சாலும் உங்களுக்கு சகலைதான். அதனால அந்த நாய்க்கு உருகுவீங்க, வக்காலத்து வாங்குவீங்க? உங்க வணடவாள்மதான் வெட்ட வெளிச்சமாகிக்கிட்டே இருக்கே!

வருண் சொன்னது…

***நான் சொன்னதைச் செய்யலாமே?
அவர் pedophile என ஒரு பொது நல வழக்கு போட்டிருக்கலாமே? ஏன் இறந்தவுடன் வசவு? ***

உங்க சகலையை ஏசிப்புட்டான் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன்னு அழுதழுது ரொம்பத்தான் ஒப்பாரி வைக்கிறீங்க பாவம்!

***இவ்வளவுகாலம் அவர் தேசிய விருதெல்லாம் வாங்கினாரே (நான் கொடுக்கவில்லை இந்தியா கொடுத்து அவருக்கு வக்காலத்து வாங்கியது)
இப்போகூட காலம் தாழவில்லை..வழக்குப் போடுங்க pedophile என நிரூபியுங்க. ****

You are already defending your brother-in-law Balu-pedophile-mahendhra. :)

ஆமா நிரூபிக்க முடியாததெல்லாம் பொய் என்றும் நம்பும் அப்பாவித் தமிழனா நீங்க? அய்யோ பாவம்!

***விருதுகளப் பறியுங்க. நானும் உங்களோடு சேர்ந்து சந்தோசப்படுவேன். செய்வீங்களா வருண்?***

அதெல்லாம் பெரிய விருதா என்ன? விடுங்க! உங்க சகலை கொண்டுபோயி பகவானிடம் பெருமியாகக் காட்டட்டும்!

பதினைந்து வயதுப் பொண்ணு படுக்கையில் எப்படி இருந்தாள்னும் பகவனிடம் சொல்லி இன்னொரு விருதும் வாங்கலாம்!

என்ன் பெரிய விருது வாங்கிப்புட்டாரு அதை பறிக்க? நாங்க கொடுக்கிற இந்த "பெடொஃபைல்" (pedophile) விருதையெல்லாம் விட பெரிய விருதா என்ன அது?!!

வருண் சொன்னது…

****//அதேபோல் என்னைச் சுற்றி உள்ள என் சுற்றத்தார் என் தமிழ்மக்களிலும் நான் அதுபோல் பொறுக்கிகளையும், கொலைகாரனையும். பெடோஃபைல்களையும் பார்க்கிறேன்.//

ஓ...அதானா எந்த ஆதாரமும் இல்லாமல் அடுத்தவனையும் குற்ரம் சாட்டுகிறீர்கள்? சுற்றுச்சூழல் தான் ஒரு மனிதனை ஆக்குகிறது உண்மைதான் என்பதற்கு இன்னோர் ஆதாரம் நீங்கள்!****



ஊர் சுற்றி!!!

நீங்க எப்போதாவது பெண்கள் ஆண் மிருகங்கள் (நம்மைச் சுத்தி இருக்கிறதுக்ளதான் பேசிப் பார்த்து இருக்கீங்களா?


கண்ணிருந்து குருடனா வாழும் உமக்கு ..இது ஒரு ஈழ சகோதரியின் அனுபவம்.

/// ஆனால் அதற்கு 12 வருடங்களுக்கு முன் நடந்தது. எனக்கு 11 1/2 வயதிருக்கையில். Abu Dhabi யில் ஒரு 5 மாதங்கள் தங்கியிருந்தோம். அப்போது ஒரு நாள் நாம் இருக்கும் apartment இருந்த கட்டிடத்தின் பக்கத்தில் இருக்கும் இன்னொரு கட்டிடத்தில் இருக்கும் எமது குடும்ப நண்பரின் வீட்டிற்கு எதற்கோ செல்லும் போது. நான் lift இல் நுழைந்து போக வேண்டிய மாடி இலக்கத்தை அழுத்தியதும், அவசரமாக உள்ளே வந்தவன். சில நொடிகளுக்குப் பின் sexually assaulted me. நான் போக வேண்டிய மாடி வந்ததும், lift திறக்க எத்தனிக்க முன், அது மூடும் பட்டனை அழுத்தி வேறு மாடி இலக்கங்களை அழுத்தினான். I stood there incapable of doing anything while some creep violeted me in the most personal way. அதற்கு மேலும் போயிருக்கலாம். கண் முழுக்கக் கண்ணீர் முட்டிக் கொண்டு கன்னத்தில் வழிய, அப்படியே விட்டு விட்டு சென்று விட்டான். அப்போது யாரிடமும் சொன்னதில்லை. ஏனென்று இன்னும் தெரியவில்லை. முதன் முதலில் சொன்னது, கிட்டத்தட்ட 11 வருடங்கள் கழித்து என் அந்நேரத்தில் வருங்காலத் துணைவனிடம்.///

ஊர்சுற்றி சொன்னது…

//ம்ம் அப்புறம்?//

எந்த பாசஸ்போட்டில் வந்தார் என தெரிய வரும் இல்லையா?
//இவங்களை கிளறிவிட்டு விஷயம் தெரிஞ்சிக்கலாம்னு வந்தீங்களா அவ்வ்!//

ஆமாம் தெரிஞ்சுதே நன்றாக.

//அய்யா சாமி,அது மொழியியல் வழக்கினை உதாரணம் காட்ட சொன்னது, அமெரிக்காவில் இருக்கீரேனு அமெரிக்க உதாரணம்.//

அப்புரன் ஏன் கேட்டீங்க இந்திய வம்சாவழியினரையும் அப்படி அழைக்கலாமே என? அழைக்கப்படுவதும் ஏற்பது அம்மக்களின் விருப்பம். அவர்கள் “இந்திய வம்சாவழி” என அழைப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வளவே!

//கண்டி கதிர்காம முருகனை ஈழத்தமிழர்கள் கும்பிடுறாங்க போல, தெனாலி படத்தில "ஈழத்தமிழ் பாசை" பேசிக்கொண்ண லோகநாயகர் ,கண்டினு கதிர்காம முருகன்னு வேல் வச்சிட்டு சொல்லுவாரேனு சொன்னேன் , சினிமால வரத சொன்னாத்தானே உங்களுக்குலாம் சட்டுனு புரியும் :-))//

மதுரை மீனாட்சி, சிதம்பரம் சிவபெருமானையும் கும்புடுறாங்க. அப்போ ஈழத்தில் வருமா சிதம்பரம். அது மட்டுமா சிதம்பரத்தில் ஈழத்தவருக்கு சொந்தமாகவே மடம் கூட உண்டு!
தென்னாலி என்கின்ர ஒரு குப்பையை ஈழ புவியியல் அமைப்பு அறிய எடுத்துக்கொண்டதில் தெரிகிறது உங்கள் அறிவு!!!

//அய்யா ,எம்சிஆர் ஆதரவில் ஓவர் ஸ்டே செய்தாருன்னும் சொல்லுறிங்க, பதிவு செய்தால் தான் விருதுனு சொன்னால், பதிவு செய்திருப்பார் என்பதையும் "ஆமாம்" போடுறிங்க,எதாவது ஒன்ன சொல்லுங்கோ!//

ஓவர் ஸ்ரே செய்தவரை ஒருவாறு சுத்துமாத்துப் பண்ணி “பதிவு” செய்தார்கள்!

//#//அதை விடுங்க ஒரு தேசிய அடையாள அட்டை கூட அவர்களுக்கில்லாமல் இருந்தது//

தவளை தன் வாயால் கெடும்!

அப்போ இலங்கையிலே தேசிய அடையாள அட்டை இல்லைனு சொல்லுறிங்களே ,அப்புறம் எப்படி "ஈழத்தவராக" இருக்க முடியும்?//

ஏங்க வெளவால் சொல்லுறது புரிய கஸ்ரமா?
1) பாலுமகேந்திரா “ஸ்ரீமா-சாஸ்திரி” ஒப்பந்தப்படி இந்தியா வந்திருப்பாராயின் அவர் இந்தியா வந்தபின்னரே ல்ண்டன் போயிருக்க முடியும். காரனம் அவர்கள் இந்தியா செல்ல மட்டுமே இந்திய அரசு ஒழுங்குகள் செய்தது.
2) அவர் லண்டன் சென்றபடியால் அவருக்கு இலங்கைக்கடவுச்சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும் என அனுமானிக்கலாம். அவர் “ஸ்ரீமா-சாஸ்திரி” ஒப்பந்தப்படி இந்தியா செல்லும் ஆளாக பதிவு செய்திருப்பாராயின் அவருக்கு “அடையாள” அட்டை கூட வழங்கப்படிருக்காது.
ஈழத்தவர் எல்லோருக்கும் ஆட்பதிவுத்திணைக்களத்தால் வழங்கப்படும் “தேசிய அடையாள அட்டை” பெறமுடியும். இதை சொன்னால் ஈழத்தில் அடையாள் அட்டையே இல்லையா என வருகிறீரே?
ஆகவே கடவுச்சீட்டுடன் லண்டன் போய் படித்து இந்தியா வந்து படித்ததால் அவர் ஈழத்தவராய் இருக்கவேண்டும்.
லொஜிக் புரியாவிட்டால் சொல்லுங்கள் மீண்டும் விளக்குகிறேன்.

//#//அப்படி என்ன குடியுரிமைப்பிரச்சினை?//

உண்மையில நீங்க ஈழத்தவர் தானா?

அங்கே என்ன குடியுரிமை பிரச்சினைனே தெரியாதா?//

பாலுமகேந்திராவுக்கு அப்படி என்ன குடியுரிமைப்பிரச்சினை?
அவர் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்ததில் நிர்ப்பந்திக்கப்பட்டாரா?


//மிக எளிதாக ஒப்பந்தத்தில் வந்தவராக பதிவு செய்திருப்பார்.//

பொய் சொல்லித்தானே பதிவு செய்திருப்பா? அதைத்தான் நானும் சொல்கிறேன்.
இவர் சுத்துமாத்து, செல்வாக்கு போன்றவற்றால் குடியுரிமை எடுத்திருக்கலாம் அதன்படி பார்த்தால் இவர் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தப்படி கொடுக்கப்பட்ட சலுகையை குடியுரிமை பெறப்பயன் படுத்தி இருக்கிறார். இவர் ஈழத்தமிழர் அந்த சலுகையை தவறாகப்பயன் படுத்தி உள்ளார்!

ஊர்சுற்றி சொன்னது…

தொடர்ச்சி...
//நீங்களே விருது வாங்க தேவையான தகுதினு போட்டது,

//iv) The Director should be an Indian citizen. The cast and technicians should be
predominantly Indian nationals.//

ஆங்கிலம் புரியாவிட்டால் கேட்கலாம்தானே. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லையே?

கவனமாகப் படியுங்கள். கீழே என்ன சொல்லி இருக்கிறது என்ப்பாருங்கள். அதாவது கூட்டுத்தயாரிப்பு படங்களுக்கே இந்த விசேட பிரஜை விதி!
கவனமாகப் படிக்கவும். அதாவது கூட்டுத்தயாரிப்புக்கு மட்டுமே கீழ்கண்ட விதிகள். கோகிலா கூட்டுதயாரிப்பா?

In the case of co-productions
involving a foreign entity, the following conditions should be fulfilled:
கூட்டுத்தயாரிப்பாயின் மட்டுமே அக்கூட்டுத்தயாரிப்பாலரில் ஒருவர் இந்திய பிரஜை ஆக இருக்க வேண்டும்!

ஊர்சுற்றி சொன்னது…

//நான் குசலம் விசாரிக்கிறதுனு சொன்னது இதைத்தான். நீங்களும் உங்க சகலையும் மாத்தி மாத்தி ஊட்டிவிட்டுக்கிறதை இல்லை!
//

அண்ணை ஈழத்தில் குசலம் விசாரிப்பது என்றால் எப்படி இருக்கீங்க, மனைவி சுகமா, பிள்லைங்க படிக்கிறாங்களா என்பது போல. இந்தியாவில் அப்படி இல்லை எனத் தெரிகிரது!

ஊர்சுற்றி சொன்னது…

//உங்க சகலை, பொறுக்கியா இருந்தாலும், பச்சை குழந்தையை வன்புணர்வு செஞ்சாலும் உங்களுக்கு சகலைதான். அதனால அந்த நாய்க்கு உருகுவீங்க, வக்காலத்து வாங்குவீங்க? உங்க வணடவாள்மதான் வெட்ட வெளிச்சமாகிக்கிட்டே இருக்கே!//

நானுங்கலைத்திரும்ப திரும்ப கேட்பதெல்லாம் நான் எங்கே இவருக்கு வக்காலத்து வாங்கினேன், உருகினேன்?
இவர் ஈழத்தில் இருந்து இந்தியா வந்து பொய்சொல்லி குடியுரிமை பெற்றிருப்பார். தனது செல்வாக்கினைப் பயன்படுத்து கடவுச்சீட்டு எடுத்திருப்பார். எம்ஜிஆரின் அரவ்ணைப்பில் கொலைக்கேசில் இருந்து தப்பித்திருப்பார். இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதில் இருந்து தப்பித்திருப்பார். இதில் எங்கே வக்காலத்து, உருகுதல் உள்லது.
ஒரு வேளை இந்தியாவில் இப்படி பொய்ச்னார், செல்வாக்கைப் பயன் படுத்தினார் எனச் சொல்வது உருகுதலோ?

ஊர்சுற்றி சொன்னது…

//அதெல்லாம் பெரிய விருதா என்ன? விடுங்க! உங்க சகலை கொண்டுபோயி பகவானிடம் பெருமியாகக் காட்டட்டும்! //

அட செய்யமாட்டீங்களா?
வெறும் கதை விடுதல்தானா?
ஈழத்தில் இருந்து இந்தியா சென்று பொய் சொல்லி, செல்வாக்கைப்பயன்படுத்திய ஒரு “pedophile" ஐப்பற்றி வெறும் கதை விடுதல் மட்டுமா?
ஐயையோ வருண்...உங்களை ஏதோ பெரிய லெவலில் நினைத்திருந்தேனே?
எனது தவறுதான் சொந்தப்பதிவிலேயே எழுத முடியாமல் அடுத்தவனின் பதிவில் வந்து பின்னூட்டம் இட்டவரிடம் வழக்குப்போட்டு முகமூடியைக்கிழி விருதைப்பறி என கேட்டது கொஞ்சம் அதிகம் தான். மன்னித்துக்கொள்ளுங்க வருண்!

ஊர்சுற்றி சொன்னது…

//கண்ணிருந்து குருடனா வாழும் உமக்கு ..இது ஒரு ஈழ சகோதரியின் அனுபவம்.//

இது ஒரு கிரிமினலின் வேலை. அப்பெண் விரும்பினால் அந்த ஆளப்பற்றி வழக்குத்தாக்கல் செய்யலாம் இல்லையா?
ஆனால் இங்கே கூறப்படுவது பாலுமகேந்திரா பற்றி. அவரைப்பற்ரி உயிருடன் இருக்கும் போது நீங்கள் ஏன் எழுதவில்லை. உங்களுக்கு நடக்கவில்லை என்பதாலா?
எனது கோரிக்கை எல்லாம் இப்படிப்பட்ட அபலைப்பெண்கள் போன்று சோபாவையும் கைவிடாதீர்கல். உங்களுக்கு அவர் pedophile எனத்தெரிந்திருக்கிரது. அவரைன் முகமூடியைக் கிளியுங்கள். இப்படியான pedophile கள் இனிமேலும் சமுகத்தில் விருதுகள் செல்வாக்குகள் பெறக்கூடாது. செய்யுங்கள் வருண்...செய்யுங்கள்.

வருண் சொன்னது…

ஊர்சுற்றி!

****இது ஒரு கிரிமினலின் வேலை. அப்பெண் விரும்பினால் அந்த ஆளப்பற்றி வழக்குத்தாக்கல் செய்யலாம் இல்லையா?***

You STILL DON'T GET IT, right? Even after reading a girl's testimony?? எந்த அளவுக்கு அந்தப் பெண் பயந்து நடுங்கி இருக்கிறாள்னு தெரிந்தும், நீர் சட்டம், மண்ணாங்கட்டின்னு பேசிட்டு இருக்குறீர்??

A teenager will get scared and she would not even know whether to tell anybody or not.

* Can't you SEE THAT??

* Can't you see the confusion and trauma such innocent kids go through?

Dont talk about any fucking law here. It is not about law or punishment. I am talking about MEN ANIMALS who live with us and around us and attacking the INNOCENT TEENAGERS.

Get that in your "dead-brain"!

ஊர்சுற்றி சொன்னது…

//You STILL DON'T GET IT, right? Even after reading a girl's testimony?? எந்த அளவுக்கு அந்தப் பெண் பயந்து நடுங்கி இருக்கிறாள்னு தெரிந்தும், நீர் சட்டம், மண்ணாங்கட்டின்னு பேசிட்டு இருக்குறீர்??//

நீங்களும் அப்படி பயந்து நடுங்கிக்கொண்டா இருக்கிறீர்கள். அந்தப் பயத்தினாலா சொந்த பதிவில் எழுதப் பயந்து அடுத்தவன் பதிவில் வீர வசனம்?
அந்தப்பெண் அபுதாபியில் இருந்தார் அங்கே பெண்களுக்கு உரிமையே இல்லை. பயந்து நடுங்கினார் நீங்கள் என்ன ச்வூதியிலா இருக்கிறீர்கள் வருண்?
ஏன் பாலுமகேந்திரா இரக்கும் வரை பயந்து நடுங்கிக்கொண்டா இருந்தீர்கள்? இறந்த பின்னரும் நடுக்கம் தீராமல் இருந்து சொந்தப் பதிவிலேயே எழுத பயந்து நடுங்கி அடுத்தவனின் பதிவில் வசனம் ....இங்கிலீசில் எழுதினால் பயம் தெளியுமா? இல்லை வீரம் வந்தது பொல ஒரு தோற்ரத்தை ஏற்படுத்தவா?

//* Can't you see the confusion and trauma such innocent kids go through?

Dont talk about any fucking law here. It is not about law or punishment. I am talking about MEN ANIMALS who live with us and around us and attacking the INNOCENT TEENAGERS.

Get that in your "dead-brain"!//

சட்டத்தைப்பறிப் பேசவேண்டாமா?
சட்டத்தைப்பற்றியோ தண்டனை பற்றியோ பேச வேண்டாமா?
அப்போ தானே வாய்க்கு வந்த படி கிசு கிசு பேசலாம். சட்டம் பற்றியோ தண்டனை பற்றியோ பேசாமல் விட்டால் நீங்கள் கதறி அழும் pedophile கள் தொடர்வார்கள். அதனைத்தடுக்க முயலாமல் இரவிரவாக பின்னூட்டம் இடுவதி எந்த பயனுமில்லை.
ஒப்பாரிவைப்பது ஒன்றுக்கும் ஆகாது. இன்னும் காலம் கடந்து போகவில்லை. பாலுமகேந்திராவின் முகமூடியை கிழிக்க அரிய சந்தர்ப்பம். தவறவிடாதீர்கள்!

ஊர்சுற்றி சொன்னது…

//A teenager will get scared and she would not even know whether to tell anybody or not.

//

வருண் நீங்களும் ஒரு பதின்மவயதுக்காரரா?
உங்களுக்கும் பாலுமகேந்திரா பற்றி புகார் கொடுக்க பயமா?

ஊர்சுற்றி சொன்னது…

//Dont talk about any fucking law here. It is not about law or punishment. I am talking about MEN ANIMALS who live with us and around us and attacking the INNOCENT TEENAGERS. //

என்னது fucking law பற்றிப்பேச வேண்டாமா?
உண்மைதான் பேசினால் உங்கள் pedophile குற்ரச்சாட்டு எடுபடாது. ஏன் தெரியுமா pedophile என்பவர் 11 வயதுக்குட்பட்டவருடன் பாலியல் குற்றம் இழைத்திருக்கவேண்டும். சில நாடுகளில் அது 13 வயதாய் இருக்கிறது.
அண்ணை வருண் சோபா பாலுமகேந்திராவை திருமனம் செய்யும் போது 11 வயதா? 13 வயதா?
தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்வீர்களா?

ஊர்சுற்றி சொன்னது…

//பதினைந்து வயதுப் பொண்ணு படுக்கையில் எப்படி இருந்தாள்னும் பகவனிடம் சொல்லி இன்னொரு விருதும் வாங்கலாம்! //


பதினைந்து(??) வயதில் படுக்கையில் இருந்தவரை ‘பகவான்’ பார்த்துக்கொண்டு இருந்தாரா?
வருண் pedophile எனச் சொல்ல பயந்து நடுங்கினாரென்றால் பகவானும் பயந்து நடுங்கினாரா?
அல்லது படுக்கையறைச் சல்லாபங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாரா?

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

வாரும்,ஊரெல்லாம் சுத்தி முடிச்சியளா?

நீர் ஏன் இப்படி பினாத்திட்டு திரியிறீர்னு புரியுது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,நாடுவிட்டு அலையும் நிலையில் பலருக்கும், உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு சித்தபிரமை பிடிக்கும் என்பார்கள், இதில் ஆமி வேறு அடிப்பின்னியதில் கலங்கியிருக்கும்.

கவலைப்படாதிங்க இதெல்லாம் குணமாக்க கூடிய பாதிப்புகள் தான், தமிழ்நாட்டில் ஏர்வாடினு ஒரு ஊர் இருக்கு,அங்கே போனால் மொட்டையடிச்சு ,காலில் சங்கிலிக்கட்டிவிட்டு, பழுக்க காச்சின இரும்பு ராடால் ரெண்டு தொடையிலும் சூடுப்போடுவாங்க,அப்புறம் ஒரு ஆறுமாசத்துக்கு உப்பு,புளி,காரமில்லாமல் ஒரு வேளைக்கு மட்டும் பத்திய சோறு போடுவாங்க ,அவ்ளோ தான் சித்தபிரமைலாம் போயிடும், சேதுங்கிற பையனுக்கு கூட இப்படித்தான் ஆச்சு, ஈழ மைந்தர் பாலுமகேந்திராவோட சிஷ்யப்புள்ள பாலா அண்ணைதான் ஏர்வாடில வச்சு குணமாக்கினார் :-))

நீங்க வந்தீங்கனா என் சார்பாக ஏர்வாடிக்கு பஸ் டிக்கெட் எடுத்து அனுப்பி வைக்கிறேன்,எப்படி வழி தெரியாத ஊருல ஏர்வாடிக்கு போறதுன்னு கஷ்டப்படவே வேண்டாம்!

# /அதை விடுங்க ஒரு தேசிய அடையாள அட்டை கூட அவர்களுக்கில்லாமல் இருந்தது//

அடையாள அட்டை இல்லைனு உளறிட்டு இப்போ என்னமா மழுப்புறீர் அவ்வ்வ்!

//பாலுமகேந்திரா “ஸ்ரீமா-சாஸ்திரி” ஒப்பந்தப்படி இந்தியா வந்திருப்பாராயின் அவர் இந்தியா வந்தபின்னரே ல்ண்டன் போயிருக்க முடியும். காரனம் அவர்கள் இந்தியா செல்ல மட்டுமே இந்திய அரசு ஒழுங்குகள் செய்தது.
2) அவர் லண்டன் சென்றபடியால் அவருக்கு இலங்கைக்கடவுச்சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும் என அனுமானிக்கலாம். அவர் “ஸ்ரீமா-சாஸ்திரி” ஒப்பந்தப்படி இந்தியா செல்லும் ஆளாக பதிவு செய்திருப்பாராயின் அவருக்கு “அடையாள” அட்டை கூட வழங்கப்படிருக்காது.
ஈழத்தவர் எல்லோருக்கும் ஆட்பதிவுத்திணைக்களத்தால் வழங்கப்படும் “தேசிய அடையாள அட்டை” பெறமுடியும். இதை சொன்னால் ஈழத்தில் அடையாள் அட்டையே இல்லையா என வருகிறீரே?//

அய்யா குழப்பவாதி, ஶ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் 64 இல் நடந்தது, பாலு மகேந்திரா லண்டன் போனது 63 இல் ,எனவே அவர் இலங்கை இந்திய தமிழராக இருந்தாலும் ,அவ்வொப்பந்தத்துக்கும் அதுக்கும் சம்ம்பந்தமே இல்லை.

# இலங்கை கடவு சீட்டில் தான் போயிருக்க வேண்டும்,ஆனால் வித்தியாசமாக "தேசிய அடையாள அட்டையே" இல்லை என்றதால், ஈழத்தவர் என சொல்லிக்கொண்டு எப்படி இல்லைனு சொல்றிங்கனு தான் கேட்டேன்.நீர் அடையாள அட்டையே இல்லைனு ஏன் உளறினீர்?

அவர் அப்போ இலங்கை கடவுச்சீட்டிலும் கோல்மால் செய்தாரா?

# அப்புறம் கேள்விப்பட்டதாக முதலில் சொல்லிவிட்டு ,பின்னர் அவரிடம் கேட்டேன் சொன்னார்,நம்பினேன் என நேரடியாக பேசியது போலவும் சொன்னீரே எனக்கேட்டேன் ,பதிலே சொல்லக்காணோம்?

#//இவர் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தப்படி கொடுக்கப்பட்ட சலுகையை குடியுரிமை பெறப்பயன் படுத்தி இருக்கிறார்//

நானும் இதைத்தானே சாமி ஆரம்பத்தில இருந்து சொல்கிறேன்.

ஆனால் நீர் ஈழத்தவர் ,ஆனால் இப்படி மாத்தி சொல்லி இருப்பார் என இப்போ புதுக்கதைய ஆரம்பிக்கிறீர்.

முதலில் ஓவர் ஸ்டே என்றீர்,அப்புறம் இப்படி மாத்தி சொல்லி வாங்கியிருப்பார் என ஆரம்பிக்கிறீர்,நேரத்துக்கு ஒரு கதையா அவ்வ்!

#//ஆங்கிலம் புரியாவிட்டால் கேட்கலாம்தானே. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லையே?//

லார்டு லபக்கு தாஸ் ,ஆங்கிலத்தில் அடுத்த ஷேக்ஸ்பியரே நீர் தான் போதுமா!

போய் நல்லா கண்ணாடிய தொடைச்சுப்போட்டு படியும், இந்திய தயாரிப்பு ,அல்லது அயல்நாட்டு கூட்டு தயாரிப்பு எதுவாக இருந்தாலும் இயக்குனர் "இந்தியராக இருக்கணும்" என்று தான் போட்டிருக்கு.

அயல்நாட்டு கூட்டுத்தயாரிப்பில் தான் ஒரு தயாரிப்பாளர் இந்தியராக இருக்கணும்,நிறுவனம் இந்தியாவில் பதியப்பட்டிருக்கணும் என கூடுதல் விதி,மற்ற எல்லா விதியும் ,இரு வகைக்கும் ஒன்றே.

கூட்டுத்தயாரிப்புக்கே இயக்குனர் இந்தியராக இருக்கணும் என விதி இருந்தால், இந்திய தயாரிப்புக்கு மட்டும் அயல்நாட்டு இயக்குனரா வைக்க சொல்லுவாங்க.

இயக்குனரை தவிர மற்றவர்களில் அயல்நாட்டினர் இருக்கலாம்,ஆனால் இயக்கம் கண்டிப்பாக இந்தியராக இருக்க வேண்டும்.

''Among them, there is a direct requirement for the makers of a film, and particularly the director, to be Indian nationals.[6] ''

http://en.wikipedia.org/wiki/National_Film_Awards#cite_ref-eligibility_6-1

தெளிவாக அது புரியலைனா ,விக்கியில் இருப்பதையும் பாரும்.

எனவே 1977 இல் குடியுரிமை வாங்கி இருக்கணும், ஓவர் ஸ்டே கதை எல்லாம் ஓவரான கதை!

வவ்வால் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வவ்வால் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

//உங்கள் pedophile குற்ரச்சாட்டு எடுபடாது. ஏன் தெரியுமா pedophile என்பவர் 11 வயதுக்குட்பட்டவருடன் பாலியல் குற்றம் இழைத்திருக்கவேண்டும். சில நாடுகளில் அது 13 வயதாய் இருக்கிறது.//

கண்டிப்பா முத்தி போச்சு அவ்வ்!

இந்தியாவில் நடந்த சம்பவத்துக்கு இந்திய சட்டத்தினை பாரும்.

2013 க்கு முன் வரையில் 18 வயது ,உடலுறவுக்கொள்ள தக்கது, இப்பொழுது 16 ஆக குறைத்துள்ளார்கள்.

எனவே அக்காலத்தில் 18க்கு முன்னர் உறவு வைத்திருந்தாலே "சிறுமியுடன்" பலவந்தமாக உறவுகொண்டதாகவே கருதப்படும்,குற்றமே.

http://timesofindia.indiatimes.com/india/Govt-fixes-age-of-consent-at-16-in-new-anti-rape-law/articleshow/18962205.cms

ஊர்சுற்றி சொன்னது…

//கண்ணிருந்து குருடனா வாழும் உமக்கு ..இது ஒரு ஈழ சகோதரியின் அனுபவம்.//

இந்த “ஈழ சகோதரி” தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவனை திருமணம் செய்து வாழ்ந்தாரா?
அல்லது அவனின் திரைப்படங்களில் நடித்தாரா?
இந்தப்பெண் தனது இயலாமையினால் (இஸ்லாமிய நாடொன்றில்) ஒன்றும் தெரியாத பருவத்தினாலும் விலகிச் சென்றார்.
ஆனால் சோபா பாலுமகேந்திரா திருமணமானவர் எனத் தெரிந்தும் இரண்டு மூன்று வருடங்கள் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்தாரே?
சிரித்துச் சிரித்து பேட்டி எல்லாம் கொடுத்திருந்தாரே?
முத்துப்பற்கள் தெரிய ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தாரே?
ஒரு வேளை பாலுமகெந்திரா இறந்த பின்னர் அடுத்தவன் பதிவில் பின்னூட்டம் இடலாம் என நினைத்திருந்தாரோ?

ஊர்சுற்றி சொன்னது…

//எனவே அக்காலத்தில் 18க்கு முன்னர் உறவு வைத்திருந்தாலே "சிறுமியுடன்" பலவந்தமாக உறவுகொண்டதாகவே கருதப்படும்,குற்றமே.

http://timesofindia.indiatimes.com/india/Govt-fixes-age-of-consent-at-16-in-new-anti-rape-law/articleshow/18962205.cms//

அது pedophile ஆகாது பாலியல் துஷ்பிரயோகம்!
pedophile என்றால் என்ன?

செய்தியில் என்ன சொல்லப்படுள்ளது?
அமைச்சரவை வயதெல்லையை 16 ஆக குறைக்க ஒப்புதல் அளித்திருப்பதாக!
இந்தியாவில் 1892 இல் 12 வயதாக இருந்தது, பின்னர் சுதந்திரம் அடைந்த போது 15 ஆகவும் 1980களில் 16 ஆகவும் மாறியது. 2012 இலேயே 18 ஆக்கப்பட்டது. அதனையும் 16 ஆக குறைக்கவே அமைச்சரவை முற்பட்டுள்ளது.
அதாவது சோபா திருமணம் செய்தபோது வயதெல்லை 16 !
சோபாவுக்கு அப்போது வயதென்ன?
அவருக்கு 16 வயதிலும் குறைவு என்றால் அத்திருமனத்துக்கு எப்படி அனுமதி கிடைத்தது? ஏன் அவரை பொலிஸ் பிடிக்கவில்லை?

ஊர்சுற்றி சொன்னது…

//இந்தியாவில் நடந்த சம்பவத்துக்கு இந்திய சட்டத்தினை பாரும்.//

தலைகீழாக தொங்கிக்கொண்டு பார்த்தால் அப்படித்தான் தெரியும்.

சோபா திருமணம் செய்தது 1978 இல் 1982 இலேயே வயதெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டது அதுவரை 15 வயதே எல்லை!

ஊர்சுற்றி சொன்னது…

//போய் நல்லா கண்ணாடிய தொடைச்சுப்போட்டு படியும், இந்திய தயாரிப்பு ,அல்லது அயல்நாட்டு கூட்டு தயாரிப்பு எதுவாக இருந்தாலும் இயக்குனர் "இந்தியராக இருக்கணும்" என்று தான் போட்டிருக்கு.//

சொன்னாப்போதுமா?

In the case of co-productions (கூட்டுத்தயாரிப்பாக இருக்கும் பட்சத்தில்)
involving a foreign entity, the following conditions should be fulfilled:(கீழ்வரும் விதிகள் திருப்திப்படுத்தப்படல் வேண்டும்)

(i) At least one of the co-producers must be an Indian entity.
(ii) The Indian entity should be registered in India or be a citizen of India.
(iii) The title of the film should be registered as an Indian film title.
(iv) The Director should be an Indian citizen. The cast and technicians should be
predominantly Indian nationals.

ஊர்சுற்றி சொன்னது…

//எனவே அக்காலத்தில் 18க்கு முன்னர் உறவு வைத்திருந்தாலே "சிறுமியுடன்" பலவந்தமாக உறவுகொண்டதாகவே கருதப்படும்,குற்றமே.//

எக்காலத்தில்? கச்தூரிபாய் காலத்திலா அல்லது சோபாகாலத்திலா?

கஸ்தூரிபாய் காலத்தில் - 12 வயது
சோபா காலத்தில் -15 வயது !

ஊர்சுற்றி சொன்னது…

வழக்குப்போட்டியா...சினிமா பார்க்கும் கூட்டமே என கேட்ட கேள்விக்கு அடுத்த பதில்!

இதோ இன்று வந்த இத்தாலிய நாட்டு மேல்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு..

கடந்த 2008 யூன் மாதம் சர்வதேச பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், 2011 ல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம மருத்துவம் நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால், இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும், அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை 27-02-2014 மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

பேரை பேசாம கதை சுற்றினு மாத்திடும் அவ்வ்!

//The Child Marriage Restraint Act of 1929[edit]
The Child Marriage Restraint Act, also called the Sarda Act,[8] was a law to restrict the practice of child marriage. It was enacted on 1 April 1930, extended across the whole nation, with the exceptions of the states of Jammu and Kashmir, and applied to every Indian citizen. Its goal was to eliminate the dangers placed on young girls who could not handle the stress of married life and avoid early deaths. This Act defined a male child as 21 years or younger, a female child as 18 years or younger, and a minor as a child of either sex 18 years or younger. The punishment for a male between 18 and 21 years marrying a child became imprisonment of up to 15 days, a fine of 1,000 rupees, or both. The punishment for a male above 21 years of age became imprisonment of up to three months and a possible fine. The punishment for anyone who performed or directed a child marriage ceremony became imprisonment of up to three months and a possible fine, unless he could prove the marriage he performed was not a child marriage. The punishment for a parent or guardian of a child taking place in the marriage became imprisonment of up to three months or a possible fine.[9] It was amended in 1940 and 1978 to continue raising the ages of male and female children.[8]//

http://en.wikipedia.org/wiki/Child_marriage_in_India

//Child Marriage Restraint Act 1929 popularly known as the Sarda Act after its sponsor Rai Sahib Harbilas Sarda to the British India Legislature in India was passed on 28 September 1929, fixed the age of marriage for girls at 18 years and boys at 21 years. It came into effect six months later on April 1, 1930 and it applies to all of British India, not just to Hindus.[1][2][3] It was a result of social reform movement in India. The legislation was passed by the British Indian Government.//

1930 லவே 18 வயசுனு நிர்ணயிச்சாச்சு.

ஷோபாவுக்கு 1978 இல் 16 வயசு தான், பிறந்தது 1962. இறப்பு 1980.

--------------------------

#//(iv) The Director should be an Indian citizen//

இங்கிலீசும் தெரியாம,தமிழும் தெரியாம ஏன்யா உசுர எடுக்கீர்?

அதான் இயக்குனர் இந்தியராக இருக்கணும்னு போட்டிருக்கே,அதையே படிச்சு பார்க்காம மீண்டும் சொல்லிக்கிட்டு.

மேலும் கோகிலா திரைப்படம் இந்திய தயாரிப்பு,நீர் ஏன் வெளிநாட்டு தயாரிப்பு போலவே பேசிட்டு.

வெளிநாடோ ,உள்நாடோ இயக்குனர் இந்த்ய குடிமகனா இருந்தால் தான் படத்தை பரிசீலனைக்கே எடுத்துப்பாங்க.

எத்தினி தடவை மூக்கு உடைஞ்சாலும் வலிக்கலையேனு வரீரே, ரொம்ம்ப்ப நல்லவர்ர்ர்!

வேகநரி சொன்னது…

தமிழகத்திற்கு கிறிஸ்தவ ஆலயம் ஒன்ற வணங்க வந்த கிறிஸ்தவ இலங்கையர்களை சீமான் வைகோ ஆதரவாளர்கள் அடித்து உதைத்து அனுப்பினாங்க. கொடுமை என்னன்னா அவங்களுடன் வந்த இலங்கை தமிழர்களையும் கிறிஸ்தவமத தமிழர்களையும் சேர்த்து அடித்தார்கள். இது மாதிரியே கருத்து தெரிவிங்க வரும் பக்ரு பாபா போன்றவர்களை சிங்களவன் என்று முத்திரை குத்துவது துரத்துவது நியாயம் அற்றது என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர வேண்டும்.
ஈழம் என்று வெளிநாடுகளில் உள்ள ஈழ விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் சிலர் எழுதும் கருத்துகளையே திரும்ப படித்து நாம் மனபாடம் செய்து வருகிறோம். அதை பின்பற்றிய தமிழக பாடத்திட்டத்தின்படியே தமிழ் வலைதளங்களில் கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்து கொண்டிருக்கிறோம்.
எந்த ஒரு இலங்கைத்தமிழரும் இதற்கு மாற்றாக பேசுறது இல்ல கருத்து சொல்றது இல்ல.
ஏன் என்று எப்போவாது இது பற்றி சிந்தித்து இருக்கோமா?
திரு பக்ரு பாபா தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.நன்றி சார்.

ஊர்சுற்றி சொன்னது…

//#//(iv) The Director should be an Indian citizen//

இங்கிலீசும் தெரியாம,தமிழும் தெரியாம ஏன்யா உசுர எடுக்கீர்?

அதான் இயக்குனர் இந்தியராக இருக்கணும்னு போட்டிருக்கே,அதையே படிச்சு பார்க்காம மீண்டும் சொல்லிக்கிட்டு.//

வவ்வால்,

இந்த நான்காவது விதியானது கூட்டுத்தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவாகப்போட்டிருக்கு. இங்கிலீஸ் படிக்கும் போது எல்லாவற்ரையும் சேர்த்துப்படிக்க வேண்டும்.

அதனால்தான் முதலிலேயே தேசிய விருதுக்கு தெரிவுசெய்யப்படுபவர் இந்தியாவில் “வாழ்பவர் அல்லது பதிவு” செய்தவர் ஆக இருக்க வேண்டும் என முதலில் சொல்லி கூட்டுத்தாயாரிப்பாயின் கீழ்வரும் விதிகள் எனச் சொல்லி இருக்கு! !

வெளவால்...வெளவால்.....

ஊர்சுற்றி சொன்னது…

//2013 க்கு முன் வரையில் 18 வயது ,உடலுறவுக்கொள்ள தக்கது, இப்பொழுது 16 ஆக குறைத்துள்ளார்கள்.

எனவே அக்காலத்தில் 18க்கு முன்னர் உறவு வைத்திருந்தாலே "சிறுமியுடன்" பலவந்தமாக உறவுகொண்டதாகவே கருதப்படும்,குற்றமே.///

உடலுறவு என்பது Age of Consent இல் அடங்கும் இல்லையா வெளவால்?
அதற்கு ஏன் திருமணச்சட்டத்தை துணைக்கு அழைக்க வேண்டும்.
கீழே உள்ளதைப் படிக்கவும்..

India's age of consent for sex is 18 under the Criminal Law (Amendment) Act, 2013.[23]
In 1892, the marital rape and subsequent death of a 11 year-old girl, caused the age of consent to be raised from 10 to 12. In 1949, it was raised to 15 after agitation from women groups about the adverse effect of early pregnancy. In 1982, it was again raised to 16.[24] In 2012, the Protection of Children from Sexual Offences Bill raised the age to 18.[25] Although, the Criminal Law (Amendment) Act, 2013 initially sought to lower the age to 16, but it was set at 18 due to political pressure.[26]

உடனே முதல் வரியில் 18 என இருக்கே உனக்கு இங்கிலீஸ் தெரியுமா என வரவேண்டாம்.
அது இன்றைய வயதெல்லை.

சோபா திருமனம் செய்யும் போது 1978! மேலே உள்ளதை மீண்டும் படித்தால் 1978 இல் உடலுறவு வயதெல்லை என்ன என தெரிய வரும். தலைகீழாக நின்று படித்து விடாதீர்கள். 61 ..81 போல தெரிந்துவிடும்


ஊர்சுற்றி சொன்னது…

வேகநரி,
//ஈழம் என்று வெளிநாடுகளில் உள்ள ஈழ விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் சிலர் எழுதும் கருத்துகளையே திரும்ப படித்து நாம் மனபாடம் செய்து வருகிறோம். /

அதாவது பரவாயில்லைங்க. கதிர்காமம் கண்டியில் இருக்கு என சினிமாவில் பார்த்து அதை நம்பும் கூட்டம் இருக்கே!
அங்கே முருகன் இருக்கார் அவரை தமிழர் வழிபடுகிறாங்க. அதனால் கதிர்காமம் இருக்கும் கண்டி ஈழத்தில் தான் இருக்கணும் என எடுத்து விடும் கூட்டம் இருக்கே!
இதை நம்பிடாதீங்க வேக நரி.
கண்டி மத்திய ஸ்ரீலங்காவிலும் கதிர்காமம் தென் ஸ்ரீலங்காவிலும் (அதுவும் மஹிந்தாவின் இடத்துக்கு அருகிலும்) இருக்கு. ஈழம் என்பது வடக்கும் கிழக்கும் மட்டுமே. வடகிழக்கை பிரிக்கவேண்டும் என்பதற்கே இந்தப்பாடு படுத்திறான் சிங்களவன். இதில் கதிர்காமத்தையும் கண்டியையும் கேடால் என்ன பண்னப்போறாங்களோ?

இந்த சினிமா பார்த்து “
சினிமா பார்த்து கண்டி கதிர்காமம் வேல் என எழுதுவதை எல்லாம் நம்மவேண்டாம் வேகநரி.
இதில ” சினிமால வரத சொன்னாத்தானே சட்டுனு புரியும்” கூட்டம் ஈழத்தமிழரை ஒரு வழி பண்ணுறதென்னே முடிவெடுத்திட்டாங்க போல!!!!!!

//கண்டி கதிர்காம முருகனை ஈழத்தமிழர்கள் கும்பிடுறாங்க போல, தெனாலி படத்தில "ஈழத்தமிழ் பாசை" பேசிக்கொண்ண லோகநாயகர் ,கண்டினு கதிர்காம முருகன்னு வேல் வச்சிட்டு சொல்லுவாரேனு சொன்னேன் , சினிமால வரத சொன்னாத்தானே உங்களுக்குலாம் சட்டுனு புரியும் :-))//

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

//இந்த நான்காவது விதியானது கூட்டுத்தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவாகப்போட்டிருக்கு. இங்கிலீஸ் படிக்கும் போது எல்லாவற்ரையும் சேர்த்துப்படிக்க வேண்டும். //

அப்படி எங்கே போட்டிருக்கு,கண்டிப்பாக கூட்டுத்தயாரிப்பில் இவ்விதிகளை மீறக்கூடாது என்றப்பொருளில் தான் போட்டிருக்கு.

அப்படி எனில் அது இந்திய,கூட்டுத்தயாரிப்பு இரண்டுக்குமே பொருந்தும்.

# இந்தியராக அல்லது NRI ஆக இருக்க வேண்டும்(அதுவும் சில விதிகளுக்குட்பட்டு) இது தான் விதி.

இயக்குனர் இந்தியராக இருக்க வேண்டியதில்லை என ,இந்திய தயாரிப்புக்கான துணை விதிகளை காட்ட முடிந்தால் பேசவும், கூட்டுத்தயாரிப்பில் பூர்த்தி செய்ய வேண்டிய துணைவிதிகளை வைத்துக்கொண்டு அது ,இந்தியாவுக்கு அல்லனு இன்டைரக்டாக பேச வேண்டாம்.

ஏற்கனவே விக்கியில் தெளிவாக போட்டிருப்பதை காட்டியும் இப்படி பேசினால் எப்படி?

#//சோபா திருமனம் செய்யும் போது 1978! மேலே//

1978 இல் 16 வயது,அப்போ திருமண சட்டத்தின் படி குற்றமில்லையா?

//1978 இல் உடலுறவு வயதெல்லை என்ன என தெரிய வரும். தலைகீழாக நின்று படித்து விடாதீர்கள். 61 ..81 போல தெரிந்துவிடும்//

திருமண சட்டத்தினை மீறிவிட்டு உடலுறவு எல்லை படி எப்படி சரினு சொல்லுறிங்க?

அப்போ திருமணம் செய்யாமல் உடலுறவு மட்டும் கொண்டார் என சொல்கிறீர்களா?

இவரு தான் ரொம்ப நேரா படிக்கிறவராம் அவ்வ்!

முதியோர்க் கல்வில சரியா சொல்லி தர்ரலையோ அவ்வ்!

#//இந்த சினிமா பார்த்து “
சினிமா பார்த்து கண்டி கதிர்காமம் வேல் என எழுதுவதை எல்லாம் நம்மவேண்டாம் வேகநரி.
இதில ” சினிமால வரத சொன்னாத்தானே சட்டுனு புரியும்” கூட்டம் ஈழத்தமிழரை ஒரு வழி பண்ணுறதென்னே முடிவெடுத்திட்டாங்க போல!!!!!!//

ஆமாம் தெரியாமத்தான் கேட்கிறேன் அந்த படம் வந்தப்போ இதையெல்லாம் சொல்லுறது, எல்லாம் தெரிஞ்ச லோகநாயகர் படத்தில தானே வந்தது ,இத்தினிக்கும் அந்த படத்தினை வெளிநாட்டு உரிமை வாங்கி ஓட வச்சது எல்லாம் " ஈழ தமிழர்கள்" தானே அவ்வ்!

தமிழ்நாட்டில ஒரு ஊர் பேரு சொன்னால் எங்கே இருக்குனு தெரியுமா?

கண்டி தமிழர்கள் வாழும் இலங்கைப்பகுதினு தான் இங்கே நம்பிட்டு இருக்கோம்,அது சிங்களவர்கள் பிரதேசமா?

பக்ரு பாபா என்பவர் "மட்டக்களப்பு" கூட ஈழமில்லை என்கிறார், உங்க பாசையில ஈழம் என்ற பகுதியாக எதை சொல்வீங்க?

நானும் அட்லாஸ் வெளியிட்ட இலங்கை மேப்பெல்லாம் பார்த்துவிட்டேன் "ஈழம்" என ஒரு பிரதேசத்தையும் குறிக்கவேயில்லை.

ஈழம் என அதிகாரப்பூர்வமாக குறிக்கப்படாத ஒரு பிரதேசத்தையே புடிச்சுக்கிட்டு "ஈழம்"னா தெரியுமானு துள்ளுங்க.

வருண் சொன்னது…

ஊருசுத்தி:

சட்டத்தைவிட்டுப்புட்டு குழந்தைகள் உணர்வுகளை கவனிச்சுத் தொலைய்யானு "ஈழத்தமிழா!" னு கெட்டவார்த்தை சொல்லி திட்டிப் பார்க்கச் சொன்னாலும் நீர் கண்ணை மூடிக்கொண்டு உன் சகல யோக்கியன் என்பதுபோலவே, , "நீ அப்படி செய்யலாம்ல, பிடிச்சு உள்ள போட வேண்டியதுதானே, பெடொஃபைல்னு பதிவெழுத வேண்டியதுதானே?" வக்காலத்து வாங்கிட்டு வெதண்டாவாதம் பண்ணிட்டு திரிகிறீர்.

ஏற்கனவே மணமான உன் சகலை ஷோபாவை சும்மா "வச்சுக்கமட்டும்" தான் செய்வேன், ஊரறிய கல்யாணம் எல்லாம் பண்ணமாட்டேன்னு (ஒருவேளை ஷோபாவுக்கு கல்யாணம் செய்யும் வயதாகலை என்கிற காரணத்தாலேயோ என்னவோ) சொன்னதால அவ தற்கொலை பண்ணிட்டா. அவ செத்ததுக்கப்புறம் என் மனைவி, காதலினு கதை எழுத ஆரம்பிச்சுட்டான் உன் சகலை. (to save his ass- to protect himself from the "possible murder accusation case")

அவ அம்மாவும் "என் மகள் ஷோபா"னு ஒப்பாரி வச்சுப் போராடிப் போராடி தோற்று தற்கொலை பண்ணி செத்துட்டா..

ரெண்டுபேரும் செத்தப் பொறவு என்ன எழவைச் செய்ய முடியும்?

அதுவும் பெண் உணர்வுகளை உணராத மதிக்காஹ "ஈழத்தமிழன்" உன்னை மாதிரிஆண்மிருகங்கள் ஆண்டு கொண்டு இருக்கும் உலகில்???

ரெண்டுபேரும் போயி சேர்ந்த பொறவு, இப்போ நான் எங்கே போயி உன் சகலைய பிடிச்சு உள்ள போடுறது?

That's IMPOSSIBLE after all that. So now cut the BULLSHIT, OK?

வருண் சொன்னது…

***இது மாதிரியே கருத்து தெரிவிங்க வரும் பக்ரு பாபா போன்றவர்களை சிங்களவன் என்று முத்திரை குத்துவது துரத்துவது நியாயம் அற்றது என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர வேண்டும்.
ஈழம் என்று வெளிநாடுகளில் உள்ள ஈழ விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் சிலர் எழுதும் கருத்துகளையே திரும்ப படித்து நாம் மனபாடம் செய்து வருகிறோம். அதை பின்பற்றிய தமிழக பாடத்திட்டத்தின்படியே தமிழ் வலைதளங்களில் கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்து கொண்டிருக்கிறோம். ***

வேவு நரி!

திடீர்னு ஒரு ப்ரஃபைல், ஒரு தளம் ஆரம்பிச்சு, ஒரு ஐடெண்டிட்டியை உருவாக்கி வந்துள்ள "பக்ரு பாபா" யோக்கியன் என்றும், ஒரிஜினல் தமிழன் என்று நீர் சான்றிதழ் வழங்குவதைப் பார்த்தால் "பக்ரு பாபா" வை உமக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்து இருக்கணும்?

அப்படியா?

இந்த இணையதள உலகில் யார் வேணா யாரா வேணா வரலாம் என்பது உமக்குத் தெரியாதா?

"பக்ரு பாபா வை அடிச்சுத் தொரத்தினேன் அது இதுனு சும்மா "பொய் குற்றச்சாட்டு" வித்து எதையாவது சொல்லப் படாது, ஆமா.

ஊர்சுற்றி சொன்னது…

//சட்டத்தைவிட்டுப்புட்டு குழந்தைகள் உணர்வுகளை கவனிச்சுத் தொலைய்யானு "ஈழத்தமிழா!" னு கெட்டவார்த்தை சொல்லி திட்டிப் பார்க்கச் சொன்னாலும் நீர் கண்ணை மூடிக்கொண்டு உன் சகல யோக்கியன் என்பதுபோலவே, , "நீ அப்படி செய்யலாம்ல, பிடிச்சு உள்ள போட வேண்டியதுதானே, பெடொஃபைல்னு பதிவெழுத வேண்டியதுதானே?" வக்காலத்து வாங்கிட்டு வெதண்டாவாதம் பண்ணிட்டு திரிகிறீர்.//

குழந்தைகளின் (17 வயதுக் குழந்தை சோபா)உணர்வுகளை கவனிச்சதால்தான் சட்டம் வந்தது. அந்தச்சட்டம் இயற்றப்பட்டது துஷ்பிரயோகத்தை அறிந்து தடுக்க. உங்களைப்போல் அடுத்தவனின் இணயத்தளத்தில் பின்னூட்டம் போட்டு ஆறுதல் அடைய அல்ல!
அதைச் செய்யுங்க. 80 ம் ஆண்டில் ஒரு ”குழந்தை” இரந்துவிட்டது அதை நினைத்து இன்னும் அழுகிறாராம்? ஆனால் ஒரு விதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டாராம்.

//.."ஈழத்தமிழா!" னு கெட்டவார்த்தை சொல்லி திட்டிப் பார்க்கச் ..//

ஈழமா அது எங்கெ இருக்கு . வெளவால் உலக வரைபடம் எல்லாம் தேடிப்பார்துவிட்டாரே?

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

உம் மரமண்டைக்கெல்லாம் உம்னோட 15 வயது பொண்ணை ஒரு 40 வயது கிழம் ஆளு படுக்கையில் வைத்து (அவள் விருப்பத்துடன் தான்... காதல்) அனுபவித்தால்தான் புத்தி வரும்.

அப்போ வந்து குய்யோ முறையோணு கத்திட்டு மெண்டலாகி அலைவ!

Dont worry, it can happen! Just wait. You are not dead yet. You are yet to see the life!

You are the best example to show "eazaha tamils" are the most selfish and self-centered people in the world.

If you don't understand others problems or feelings why do you expect everybody to cry for your problems, selfish MORON?

ஊர்சுற்றி சொன்னது…

//"நீ அப்படி செய்யலாம்ல, பிடிச்சு உள்ள போட வேண்டியதுதானே, பெடொஃபைல்னு பதிவெழுத வேண்டியதுதானே?" வக்காலத்து வாங்கிட்டு வெதண்டாவாதம் பண்ணிட்டு திரிகிறீர்.//

ஈழத்தமிழன் பதிவு எழுதி ஒப்பாரிவைத்து திரிவதில் மட்டும் நிற்பதில்லை. எங்கெங்கு சட்டங்கள் இருக்கிறதோ அங்கங்கெல்லாம் நீதி கேட்பான். தற்போதைய உதாரணம் ஐ.நா மனித உரிமை ஆணையம்!
வேண்டுமென்றால் அந்த “ஈழச்சகோதரிக்கு” ஒரு பின்னூட்டம் எழுதி ஒப்பாரிவைக்கவா அல்லது சட்டத்தில் இருக்கும் வழிவகைகளைப் பயன்படுத்தி "pedophile" களுக்கு தண்டனை வாங்கித்தரவா எனக்கேளும். பதிலை பின்னூட்டமாய் இடவும். அந்த “ஈழச்சகோதரியின்” வலைப்பூ சுட்டி தெரியுமா இலாவிட்டால் இதோ கீழே!!!
http://annatheanalyst.blogspot.com/2013/01/1.html


ஊர்சுற்றி சொன்னது…

//அப்போ வந்து குய்யோ முறையோணு கத்திட்டு மெண்டலாகி அலைவ!//

//Dont worry, it can happen! Just wait. You are not dead yet. You are yet to see the life!//

ஏனென்றால் உங்களைப்போல 1978 இல் நடந்ததைப் பார்த்து ஒன்றும் செய்யாமல் 2014 வரை பாலுமகேந்திரா இறக்கும் வரை பொறுத்திருந்து பின்னர் கூட சட்டத்தில் இருக்கும் வழிவகைகளைப்பின்பற்றாமல் வெறும் பின்னூட்டம் மட்டுமே இட்டாலொன்றுமே நடக்காது. இந்த “குய்யோ முறையோ” என கத்துவது தொடரும். நிறுத்த வேண்டுமா நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இன்னும் 45 வருடங்களின் பின்னரும் அடுத்தவனின் பின்னூட்டத்தில் வந்து “குய்யோ முறையோ” என அவலம் தொடரும். உண்மையான மனிதன் இதை அனுமதிக்க மாட்டான் !

ஊர்சுற்றி சொன்னது…

//You are the best example to show "eazaha tamils" are the most selfish and self-centered people in the world.//

ஈழத்தமிழன் ஐ.நா வரை போவான் அதற்கு மேலும் போவான். ஆனால் சிலர் அடுத்தவன் பதிவில் வந்து “குய்யோ முறையோ” பின்னூட்டம் இடுவார்கள். இன்னும் சிலரோ சொந்த வலைப்பூ இருந்தும் கூட அடுத்தவன் பதிவில் வந்து “குய்யோ முறையோ” பின்னூட்டம் விடுவார்கள்!

ஊர்சுற்றி சொன்னது…

//If you don't understand others problems or feelings why do you expect everybody to cry for your problems, selfish MORON?//

அதனால்தான் சொல்கிறேன் இனிமேலும் இப்படி ஒன்று நடக்காமல் இருக்கவேண்டுமாயின் குற்றவாளி முகமூடியைக்கிழியுங்கள், அவனுக்கு சமூகத்தில் கொடுக்கப்பட்ட விருதை பரியுங்கள், அவ்விருதால் வந்த சமூக அந்தஸ்த்தை உடையுங்கள்! அவன் இறக்கும் வரை (35 வருடங்கள்) பொறுத்திருந்து குய்யோ முறையோ என அதுவும் சொந்த வலைப்பூ இருந்தும் அடுத்தவன் வலைப்பூவில் வந்து ஒப்பாரி வைக்காதீர்கள்.

ஊர்சுற்றி சொன்னது…

//பக்ரு பாபா" வை உமக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்து இருக்கணும்?//

இரண்டு பேரும் ஒன்றுதான் !

ஊர்சுற்றி சொன்னது…

//ரெண்டுபேரும் போயி சேர்ந்த பொறவு, இப்போ நான் எங்கே போயி உன் சகலைய பிடிச்சு உள்ள போடுறது? //

நீங்க 35 வருசம் ஒண்ணும் பண்ணாம இருந்தீங்க. அதனால்தான் உள்ள போட முடியலை!
பரவாயில்லை பாலுமகெந்திரா விட்டுச் சென்ற விருதுகள் பட்டங்கள் போன்றவற்றை மீழப்பெற வேண்டும் ஏனென்றால் அவர் ஒரு pedophile என போராடுங்கள்.

வருண்,
ஒரு விடயம் தெரியுமா?
அமெரிக்காவின் புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் உதைபந்தாட்ட குழு உபபயிற்சியாளர் ஒருவர் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை அறிந்தும் அதுபற்றி நடவடிக்கை எடுக்கத் தவறிய முதன்மைப்பயிற்சியாளரின் பதவி, ஊக்கத்தொகை, ஓய்வூதியம் எல்லாம் பறிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அவரின் தலைமையின் கீழ் அக்கல்லூரி பெற்ற அத்தனை வெற்றிகழும் பதிவுகளில் இருந்து அழிக்கப்பட்டன. அவரின் சிலை அகற்றப்பட்டது. அப்படி நிகழ்ந்து இரு வாரங்களில் அவர் புற்று நோயால் இறப்பின் விளிம்பில் இருந்தும் கூட யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இத்தனைக்கும் இவர் கல்லூரிகளிடையேயான போட்டிகளில் அதி உச்ச வெற்றிகளுக்குச் சொந்தக்காரர். தொலைக்காட்சி வானொலி சமூக இணையம் எங்கு அவர் பெயர் நாறடிக்கப்பட்டது.

அப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு பாலுமகேந்திரா இறந்த பின்னர் வந்து யாரைக்கைது செய்ய என்கிறீகளே?
ஆனானப்பட்ட லெனின் , ஸ்ராலின் போன்றோர்கள் பற்றி இருந்த விம்பம் தகர்க்கப்பட்டுவிட்டது. இப்போதும் காலம் கடக்கவில்லை. செயலை ஆரம்பியுங்கள். சட்டத்தை துணைக்கெடுங்கள். பாலுமகேந்திராவின் பெயரை நாரடியுங்கள். இது குற்ரம் புரிய நினைக்கும் பலருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !!!

ஊர்சுற்றி சொன்னது…

இவ்வாறு செய்தால் பல “ஈழச்சகோதரிகள்” காப்பற்ரப்படுவார்கள்.

ஈழத்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட முகமறியாச் சகோதரிகளுக்காக சட்டத்தில் உள்ள வழிகளைப்பயன் படுத்தி நியாயம் கேட்டதால்தான் ஈழச்சகோதரிகளின் துயரம் இன்று உலகறிகிறது. ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த தயார்கொள்கிறது. அதை விடுத்து 35 வருடம் பொறுத்திருந்து ராஜபக்சாவும், கோத்தபாயாவும் இறந்து மரண ஊர்வலம் வரும் போது அடுத்தவன் பதிவில் (சொநத பதிவு இருந்தும்கூட!) பின்னூட்டம் விடும் கூட்டமல்ல நாம்!

வேகநரி சொன்னது…

//இந்த இணையதள உலகில் யார் வேணா யாரா வேணா வரலாம் என்பது உமக்குத் தெரியாதா?//
தெரியும்.ஈழமென்று கதை சொல்லி திரியும் ஊர்சுற்றி கதைகளையும் கேட்கிறோமே. தமிழகத்தில் ஜாதி வெறியிருக்கு என்றா உண்மையை ஏற்றுக்கிறோம். இலங்கையில் இருக்கும் ஜாதி வெறியை சொன்னா ஏன் பார்க்க மறுக்கணும்.

வருண் சொன்னது…

****அந்த “ஈழச்சகோதரியின்” வலைப்பூ சுட்டி தெரியுமா இலாவிட்டால் இதோ கீழே!!!***

அட அட அட! நான் கொடுத்த "பதிவிற்கு" எனக்கே நீர் தொடுப்பு கொடுக்குறீரா?

I did not give the link on purpose as she was 11-year old when she was attacked by that "animal"!

Only idiots like you would go and tell her that "she should have taken that to police and all that bullshit"

உன் மரமண்டைக்கு இதெல்லாம் புரியாது!

இப்படியே மூளைவளராமலே ஒரு நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாவு!

ஆமா, அடுத்தவன் பதிவில் பின்னூட்டமிடுறனு குற்றச்சாட்டு வைக்கிற நீ என்ன மயிரை எழுதி கிழிச்சுப் புட்ட? ஏதாவது தொடுப்புக் கொடு! நீ என்னத்தை எழுதிக் கிழிச்சு இருக்கிறனு பார்க்கலாம்!

BTW, when I checked your profile, it seems like you are also another anonymous guy barking in others blogs as the ONLY JOB!!! Not even have blog to share your original-fucking-thoughts!!

நீ என்னவோ பதிவு பதிவா எழுதி கிழிச்சுப்புட்டங்கிறமாரி பேசிட்டு திரிகிற??

மெண்டலா நீ??

ஊர்சுற்றி சொன்னது…

//அட அட அட! நான் கொடுத்த "பதிவிற்கு" எனக்கே நீர் தொடுப்பு கொடுக்குறீரா?

I did not give the link on purpose as she was 11-year old when she was attacked by that "animal"!

Only idiots like you would go and tell her that "she should have taken that to police and all that bullshit"

உன் மரமண்டைக்கு இதெல்லாம் புரியாது! //

எனக்கு புரியாவிட்டால் பரவாயில்லை. அந்தப் பெண்ணிடம் (அவரது வலைப்பூ பின்னூட்டத்தில்) இனிமேல் இப்படியான செயல்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனக்கேளுங்கள். அந்தப்பதிலை இங்கே இடுங்கள் எனத்தான் கேட்டேன். 1)அந்தப்பெண்ணிடம் 35 வருடங்கள் பொறுத்து பின்னூட்டம் இடுதலுடன் நிற்க வேண்டுமா?

2) அல்லது சட்ட உதவியை நாடி இப்பிரச்சினை இனிமேலும் (கவனிக்க இனிமேலும்!) நடைபெறாமல் இருக்கச் செய்ய உழைக்க வேண்டுமா?
எனக்கேளுங்கள். பதிலை அவர் பின்னூட்டத்தில் இடுவார்.

மர மண்டையா இல்லையா என்பதனை அப்போது தீர்மானிக்கலாம்!


//Only idiots like you would go and tell her that "she should have taken that to police and all that bullshit"//

நான் இதனைத்தடுக்க நடவடிக்கை எடுப்பேன். பின்னூட்டம் இடுவதுடன் நிற்கமாட்டேன். அதுவும் 35 வருடங்கள் பொறுத்து பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்தபோது ஒன்றும் செய்யாமல் இருந்து பின்னர் அவரின் அம்மா தற்கொலைசெய்து கொண்டபோதும் வாளாவிருந்து பின்னர் பாலுமகேந்திரா இறக்கும் வரை வாய்மூடி மெளனியாய் இருந்து சொந்த வலைப்பூவில் pedophile என குற்ரம் சாட்ட மறந்து அடுத்தவரின் வலைப்பூவில் வந்து வீரம் காட்டுவோனல்ல நான் !

இதற்கெல்லாம் பதில் இல்லாமல் ஈழத்தை இழுத்து “ஈழச்சகோதரி” சென்ரிமெண்டை கொட்டி கதை விடல் விளையாட்டு நான் செய்ய மாட்டேன்! அதனை அந்த ஈழச்சகோதரியும் விரும்பமாட்டார்.

ஈழத்தில் கிருசாந்தி குமாரசாமி கொலை செய்யப்பட்டபோது நாம் சும்மா இருக்கவில்லை அந்த ராணுவ மிருகம் இறந்து போகும் வரை ஈகலைக்கவில்லை, மாறாக மனித உரிமை அமைப்புகளின் படியேறி அந்த பாதகச்செயலை உலகறியச்செய்தோர் நாம். அத்துடன் நின்றுவிடவில்லை இன்றுவரை தொடர்கிறது போராட்டம்.

//ஆமா, அடுத்தவன் பதிவில் பின்னூட்டமிடுறனு குற்றச்சாட்டு வைக்கிற நீ என்ன மயிரை எழுதி கிழிச்சுப் புட்ட? ஏதாவது தொடுப்புக் கொடு! நீ என்னத்தை எழுதிக் கிழிச்சு இருக்கிறனு பார்க்கலாம்!//

இந்த ”எழுதிக்கிழிக்கும்” வேலை நான் செய்வதில்லை. 35 வருடம் பொறுத்திருந்து எல்லோரும் பரலோகம் போய்ச் சேர்ந்த பின் கதை விடுவதில்லை. எழுதிக்கிழிப்பது இலகு. மாற்ரம் தரும் செயற்பாடே தேவை!

//Not even have blog to share your original-fucking-thoughts!!//

ஆமா...இவரின் ஒரிஜினல் சிந்தனை பாருங்க......
1) 18 வயதுப் பெண் திருமணம் செய்து கொண்டார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.
2) அவர் தற்கொலை செய்தார்.ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்!
3) அவரின் அம்மா தற்கொலை செய்தார். அமைதி!
4) அந்த மனிதர் அடுத்தடுத்து பெண்களை தேடினார். கப்சிப்!
5) அந்த மனிதர் இறந்தார்...சீறிக்கிழம்பியது வீரம்..பெண்கள் பாதுகாப்பு சிந்தனை...ஈழச்சகோதரி மீது கரிசனை.

வவ்வால் சொன்னது…

ஊர்ச்சுற்றி,

//இந்த ”எழுதிக்கிழிக்கும்” வேலை நான் செய்வதில்லை. 35 வருடம் பொறுத்திருந்து எல்லோரும் பரலோகம் போய்ச் சேர்ந்த பின் கதை விடுவதில்லை. எழுதிக்கிழிப்பது இலகு. மாற்ரம் தரும் செயற்பாடே தேவை!
//

அப்போ என்ன எழவுக்குய்யா ,ஈழத்தமிழன் தான் பாலுமகேந்திரானு நிருவ இந்தப்படாத பாடு படுறீர்?

ஆகமொத்தம் ஆள் கொஞ்சம் பிரபலம்னா , அவன் ஈழத்தமிழன்னு சொல்லிக்க ,கொலைக்காரனா இருந்தாலும் ஓடி வருவீர்?

நீர் சொன்னா ஐநா சாகசம் எல்லாம் , முள்ளி வாய்க்காலுக்கு முன்னமே ஏன் நடக்கலை?

ஏன் எனில் புலிகள் இருந்தவரையில் மனித உரிமை மீறல்னுலாம் பேசிட்டு போனாலே , புலிகளின் மனித உரிமை மீறலும் கிளப்பப்ப்படும் என்பதால் மூடிக்கிட்டு இருந்திங்களா?

இப்போ ஒரு கொலை இயக்கத்தினை விட இன்னொருத்தன் செய்துவிட்டான் என்பதால் ,அவனே பெரிய கொலைகாரன்னு சொல்ல வசதியா இருக்கு!

இத்தாலி கதையெல்லாம் , முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே வந்திருந்தால் பயனுண்டு, எல்லாம் முடிஞ்ச பின்னர் தான் வருது.

உமக்கு வரலாறு தெரியலைனா சொல்லுறேன், யாசர் அராபத் எல்லாம் இருக்கும் போதே ஐநாவில் போய் பேசி,நோபல் பரிசே வாங்கிட்டார்.

இங்கே எல்லாம் முடிஞ்ச பிறகு தான் ,ஐநாவே பேச ஆரம்பிக்குது!

போயா போய் புள்ளக்குட்டிங்கள கவனி,சும்மா கொலைக்காரன் , பொம்பள பொறுக்கியெல்லாம் ஈழத்தமிழன்னு வக்காலத்து வாங்கிட்டு அலைய வேண்டாம்.

உம்மோடு வெட்டியா பேசிட்டு இருப்பதால் பலனில்லை, நான் ஒரு ஈழம்ப்பற்றி பதிவு போடுறேன், அப்போ தெரியும் உண்மைகள்!

வருண் சொன்னது…

****ஆமா...இவரின் ஒரிஜினல் சிந்தனை பாருங்க......
1) 18 வயதுப் பெண் திருமணம் செய்து கொண்டார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.***

என்ன ஒரு மொள்ளமாரித்தனம்!!!கொஞ்சம் கொஞ்சமா வயதை ஏற்றிக் கொண்டு வந்து ஷோபாவை (18 வயதாக்கி) மேஜராக்கி விட்டீராக்கும்?

இதிலிருந்தே உன் யோக்கிய லட்சணம் தெரியுது.

ஷோபா இறக்கும்போது வயது 17 என்றுதான் சொல்லப்படுகிறது. உன் சகல அவளோட உறவு கொண்டது 15-17 (கோகிலா, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும்) வயதில் ..அவள் வைர மோதிரத்தை முழுங்கிட்டேன், டாய்லெட்ல கழுவி எடுத்தேன்னு சொல்லியிருக்கான் இந்த "பெடோ ஃபைல்" -உன் சகலைதான்!

அப்புறம் எப்படி 18 னு (ஏதோ எழுத்துப் பிழை விடுவதுபோல) வெட்கமில்லாமல் எழுதுற??

I know what you are doing by manipulating the "age" CAREFULLY pretending as if you did that as "carelessly"! You are full of shit!!

You are trying too hard to save your b-in-law, balu-pedophile-mahendhra's ass!

You think everybody here are IDIOTS like you to overlook your "manipulations" when you are wrting Shoba's age???

ஊர்சுற்றி சொன்னது…

//அப்போ என்ன எழவுக்குய்யா ,ஈழத்தமிழன் தான் பாலுமகேந்திரானு நிருவ இந்தப்படாத பாடு படுறீர்?

ஆகமொத்தம் ஆள் கொஞ்சம் பிரபலம்னா , அவன் ஈழத்தமிழன்னு சொல்லிக்க ,கொலைக்காரனா இருந்தாலும் ஓடி வருவீர்?//

//ஈழத்தமிழர்கள் என இணையத்தில் அறியப்படும் மக்கள் இப்பக்கூட கவனமாக "ஈழத்தமிழர் பாலுமகேந்திரா" என சொல்லாமல் தவிர்ப்பதை படிக்கவேயில்லையா?//

இந்த இரண்டையும் நீங்கதான் எழுதினீங்க!!!!

//நீர் சொன்னா ஐநா சாகசம் எல்லாம் , முள்ளி வாய்க்காலுக்கு முன்னமே ஏன் நடக்கலை?

ஏன் எனில் புலிகள் இருந்தவரையில் மனித உரிமை மீறல்னுலாம் பேசிட்டு போனாலே , புலிகளின் மனித உரிமை மீறலும் கிளப்பப்ப்படும் என்பதால் மூடிக்கிட்டு இருந்திங்களா?//

நீங்க அறிந்தது அவ்வளவுதான்.
வழக்குப்போட்டோமா நிரூபி!
எதிர்த்து பேசினோமா நிரூபி!
புலிகளை கைவிட்டீங்களே புடுங்கினீங்களா?

என மாறிமாரி மரத்துக்கு மரம் தாவியது யார்?




//இப்போ ஒரு கொலை இயக்கத்தினை விட இன்னொருத்தன் செய்துவிட்டான் என்பதால் ,அவனே பெரிய கொலைகாரன்னு சொல்ல வசதியா இருக்கு!//

கொலைகாரன் வேறு நாட்டு அரசு வேறு !
நாடின் அரசே கொலை செய்தால் என்ன தண்டனை என உலக நடைமுறை தெரியாமல் பேசுவோர் இப்படித்தான் கேள்விகள் கேட்பார்கள்!

//உமக்கு வரலாறு தெரியலைனா சொல்லுறேன், யாசர் அராபத் எல்லாம் இருக்கும் போதே ஐநாவில் போய் பேசி,நோபல் பரிசே வாங்கிட்டார்.

இங்கே எல்லாம் முடிஞ்ச பிறகு தான் ,ஐநாவே பேச ஆரம்பிக்குது!//

ஏனென்றால்...அரசுகளுக்கு இருக்கும் உலக நியதிகலை வைத்து எல்லா அரசுகளும் சேர்ந்து கொலை (கூட்டுக்கொலைகாரர்) செய்தார்கள். திருடனே திருடனைக் காட்டிக்கொடுப்பானா?

//போயா போய் புள்ளக்குட்டிங்கள கவனி,சும்மா கொலைக்காரன் , பொம்பள பொறுக்கியெல்லாம் ஈழத்தமிழன்னு வக்காலத்து வாங்கிட்டு அலைய வேண்டாம்.//

இங்கு யார் வக்காலத்து வாங்கினார்கள்.
நான் கேட்டதெல்லாம் அவன் முகமூடியை கிழி..அவனுக்கு இந்தியா கொடுத்த விருதுகளை மீழப்பெறு....இவன்போன்றவர்களால் ஈழத்தமிழர் மீது பழு விழுவதை தடு என்பதுதான்.
செய்வீர்களா வெளவால்??


//உம்மோடு வெட்டியா பேசிட்டு இருப்பதால் பலனில்லை, நான் ஒரு ஈழம்ப்பற்றி பதிவு போடுறேன், அப்போ தெரியும் உண்மைகள்!//

எப்போ நாளைகேவா?
இப்படித்தான் இன்னொருவர் கிசு கிசு பாணியில் நட்சத்திர இயக்குனர், அரச இசைஅமைப்பாளர் என கதை விட்டார். இப்போது சொந்தப்பதிவையே திருத்தி எழுதி விட்டார். பதிவு போடுகிறேன்....கிழிக்கிறேன் என்றார். இன்னும் இல்லை. போய்ப்பார்த்தால் ..பதிவையே மாற்றிவிட்டார்!
அப்படியேதேன் இதுவுமா?
ஆமா. ...இவர் எழுதுவார்...நாம அழுதிடுவோம் (அப்பாலிக்கா அழக்கூடாது என எச்சரிக்கை வேறு???)

ஊர்சுற்றி சொன்னது…

//என்ன ஒரு மொள்ளமாரித்தனம்!!!கொஞ்சம் கொஞ்சமா வயதை ஏற்றிக் கொண்டு வந்து ஷோபாவை (18 வயதாக்கி) மேஜராக்கி விட்டீராக்கும்?//

சரி...17 எனவே வைப்போமே?
இந்தியாவில் Age of consent 1949 இல் இருந்து 1982 வரை 15 மட்டுமே!
1982 இல்தான் 16 ஆக உயர்த்தப்பட்டது !

பாலுமகேந்திராவுடன் சுற்றும் போது அவருக்கு என்ன வயது?
கூட்டல் கழித்தல் கணக்கு தெரியுமில்ல?

ஊர்சுற்றி சொன்னது…

//I know what you are doing by manipulating the "age" CAREFULLY pretending as if you did that as "carelessly"! You are full of shit!!

You are trying too hard to save your b-in-law, balu-pedophile-mahendhra's ass!

You think everybody here are IDIOTS like you to overlook your "manipulations" when you are wrting Shoba's age???//

ஏனுங்கக இங்கிலீசு எல்லாம். தமிழ் புரியாதவனுக்கு இங்கிலீசில் எழுதி உங்கள் திறமையை காமிக்கவோ?

ஊர்சுற்றி சொன்னது…

//நானும் அட்லாஸ் வெளியிட்ட இலங்கை மேப்பெல்லாம் பார்த்துவிட்டேன் "ஈழம்" என ஒரு பிரதேசத்தையும் குறிக்கவேயில்லை. //

ஏன் ...
//பாலுமகேந்திரா "ஈழத்தமிழர்' அல்ல இந்திய இலங்கை தமிழர் ,அப்படித்தான் நான் படிச்சேன், அங்கே குடியுறிமை பிரச்சினை என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு வந்தார்.//செவ்வாய், 18 பிப்ரவரி, 2014 5:41:00 முற்பகல் GMT+8
சொல்லும்போது தெரியலையா ஈழன்மே ஒண்ணு கிடையாது அட்லஸ் எல்லாம் தேடிப்பாக்கணும்னு தோணல்லியா? அல்லது தலைக்கிழாய் தொங்கி இரவில் தேடியபோது இருந்திச்சு இப்ப “தெளிவு” வந்தப்புறம் தேடும் போது இல்லியா?

வவ்வால் சொன்னது…

ஊர்ச்சுற்றி,

//ஈழத்தமிழர்கள் என இணையத்தில் அறியப்படும் மக்கள்//

அதான் ஈழத்தமிழர்கள் என அறியப்பட்டவர்களை சொன்னேன்ல, நீர் அப்படிலாம் அறியப்படாத அனாமத்துனு அர்த்தம், அதை வேற விளக்கி சொன்னாத்தான் புரியுமா?

எனவே நீர் அப்படி சொன்னக்கருத்துக்கு கவலைப்படவே வேண்டாம் அவ்வ்!

#//என மாறிமாரி மரத்துக்கு மரம் தாவியது யார்?//

யாரு நான் தாவினேன் ,நல்லா இருக்கே கதை?

18 வயசுக்கு முன்னர் கல்யாணம் செய்வது சட்டப்படி குற்றம்னு சட்டத்தை காட்டியதும்,டமால்னு 16 என்பதை 18னு மாற்றிப்பேசியது யாருய்யா?

1962 இல் பொறந்துட்டு 78 இல் எப்படி 18 வயது ஆகும், கணக்கு வழக்கெல்லாம் தெரியாத கைநாட்டா நீர்?

வெட்கமே இல்லாமல் 18 வயதில் திருமணம்னு மரம் விட்டு தாவியது ஏன்?

#//சொல்லும்போது தெரியலையா ஈழன்மே ஒண்ணு கிடையாது அட்லஸ் எல்லாம் தேடிப்பாக்கணும்னு தோணல்லியா? அல்லது தலைக்கிழாய் தொங்கி இரவில் தேடியபோது இருந்திச்சு இப்ப “தெளிவு” வந்தப்புறம் தேடும் போது இல்லியா?//

அப்போவே ,அவர் முகமூடியை ,கிழி ,விருதை திரும்ப வாங்குனு சொல்லிட்டு போயிருக்கலாமே,ஏன் அவ்ளோ மெனக்கெட்டு ,ஈழத்தமிழர்னு வாதிட்டீர் ,அப்போ "ஓசி சரக்கடிச்சு" குழம்பிக்கிடந்தீரா, இப்போ தான் தெளிவு வந்து அப்படி சொல்லணும்னு தோன்றதா?

#//இப்படித்தான் இன்னொருவர் கிசு கிசு பாணியில் நட்சத்திர இயக்குனர், அரச இசைஅமைப்பாளர் என கதை விட்டார். இப்போது சொந்தப்பதிவையே திருத்தி எழுதி விட்டார். பதிவு போடுகிறேன்....கிழிக்கிறேன் என்றார். இன்னும் இல்லை. போய்ப்பார்த்தால் ..பதிவையே மாற்றிவிட்டார்!//

யாரோ அப்படி சொன்னால் அவரிடமே போய் முறையிடும்,ஏன் என்கிட்டே வந்து ஒப்பாரி வைக்கிறீர்.

நாம் சொல்வதை தான் செய்வோம்,செய்வதை தான் சொல்வோம், சற்றே பொருத்திரும் பிள்ளாய்! ஆப்பு ஆன் தி வே!

வருண் சொன்னது…

****ஊர்சுற்றி சொன்னது…

//என்ன ஒரு மொள்ளமாரித்தனம்!!!கொஞ்சம் கொஞ்சமா வயதை ஏற்றிக் கொண்டு வந்து ஷோபாவை (18 வயதாக்கி) மேஜராக்கி விட்டீராக்கும்?//

சரி...17 எனவே வைப்போமே?***

சரிங்க. அப்புறம்????


***இந்தியாவில் Age of consent 1949 இல் இருந்து 1982 வரை 15 மட்டுமே!***

ஆக இப்போ என்ன சொல்ற? ஏர்கனவே மணமான எருமைமாடு 40 பாலு மகேந்திரா 15-17 வயதில் ஷோபாவுடன் உறவு வைத்துக் கொண்டதில் தப்பில்லைனு சொல்றியா?

*** 1982 இல்தான் 16 ஆக உயர்த்தப்பட்டது !***

அப்போத்தான் அவ பொணமாயிட்டாளே, அதைவிடு!

***பாலுமகேந்திராவுடன் சுற்றும் போது அவருக்கு என்ன வயது?
கூட்டல் கழித்தல் கணக்கு தெரியுமில்ல?**

ஆக, உன் சகலை யோக்கியன்னு சொல்ற? அப்படித்தானே? :))))

Unknown சொன்னது…

கண்டி ஈழத்தில்தான் இருக்கிறதென்று சொல்லி விட்டு பின்பு தமிழ்நாட்டில் வெளியான சினிமாவில் அப்படித்தான் கமல் பேசினார் , அதனால் நானும் அப்படி நினைத்து விட்டேன் எனக்கூறி தோப்புக்கரணம் போட்டவர் இனீமேல்தான் ஈழத்தமிழர் பற்றி பதிவெழுதி ஆப்படிக்கப்போகிறாராம் .

சிக்கிரமா பதிவை போடுங்க அண்ணாச்சி

அப்பாலிக்கா பயந்திடுவோம்ல

Unknown சொன்னது…

கண்டி ஈழத்தில்தான் இருக்கிறதென்று சொல்லி விட்டு பின்பு தமிழ்நாட்டில் வெளியான சினிமாவில் அப்படித்தான் கமல் பேசினார் , அதனால் நானும் அப்படி நினைத்து விட்டேன் எனக்கூறி தோப்புக்கரணம் போட்டவர் இனீமேல்தான் ஈழத்தமிழர் பற்றி பதிவெழுதி ஆப்படிக்கப்போகிறாராம் .

சிக்கிரமா பதிவை போடுங்க அண்ணாச்சி

அப்பாலிக்கா பயந்திடுவோம்ல

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

அடி பலமா விழவும் பேர மாத்திட்டீரோ? பாரா.பாலகுமார்,இதுவும் நல்லாத்தான் இருக்கு. :-))

# அர்னால்டு,ஏசலினா ஜூலிலாம் விட்டுப்புட்டீரே அவ்வ்!

# போடுறோம்...போடுறோம்...அடி வாங்க என்னா அவசரம்!

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

கண்டி என்பது இன்றைய கண்டி மாவட்டம் என இலங்கைத் தமிழர்களே கருதுகின்றனர். உண்மையில் கண்டி என்ற பெயர் முன்பு கண்டி ராச்சியம் முழுவதையும் குறித்தது.

கண்டி கதிர்காமத் தெய்யோ என்றே தெற்கில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கதிர்காம முருகனை முன்பு அழைத்தனர்.

அடுத்து கண்டி என்பது ஈழத்தில் அதாவது இலங்கையில் அதாவது சிறிலங்காவில் தான் இருக்கின்றது.

தமிழர்கள் சிலருக்கு இங்கு குழப்பம் வரும், ஈழம் என்றால் வடக்கு கிழக்கு மட்டுந்தானே என்ற மயக்கம் இருக்கின்றது.

அது தவறு ஈழம் என்றால் மொத்த ஹெல தீவு அதாவது இலங்கைத் தீவு அதாவது ஒட்டு மொத்த சிறிலங்காவையும் குறிக்கும். அதனால் தான் தமிழ் போராளிகள் வடக்கு கிழக்கைக் குறிக்கும் போது தமிழ்-ஈழம், தமிழீழம் என்று குறிப்பார்கள், தமிழ் பேசப்படும் ஈழப்பகுதி என்ற பொருளில்.

உங்களுக்கு விளக்கம் கொடுத்தே. சப்பா, முடியல... !

ஊர்சுற்றி சொன்னது…

//***பாலுமகேந்திராவுடன் சுற்றும் போது அவருக்கு என்ன வயது?
கூட்டல் கழித்தல் கணக்கு தெரியுமில்ல?**

ஆக, உன் சகலை யோக்கியன்னு சொல்ற? அப்படித்தானே? :))))//

அது உங்களைப்பொறுத்தது !
நான் சொல்வதெல்லாம் அந்தாளுடைய கெட்ட குணத்தை எல்லாம் ஏன் அவர் சாகும் வரை பொறுத்திருந்து களளத்தனமாய் எழுதெ வேண்டும்?
துணிச்சல் அல்லது கொஞ்சமாவது பாதிக்கப்பட்ட பெண்கள் மீது அனுதாபம் இருக்குமானால் அவர் முகமூடியைக்கிழிங்க, விருதுகலைத் திரும்பப்பெறுங்க!

//அப்போத்தான் அவ பொணமாயிட்டாளே, அதைவிடு! //

பொணமாயிட்டாளே என 25 வருடம் தூங்கியதால்தானே “ஈழச்சகோதரி” இணையத்தில் எழுத வேண்டி வந்தது. முன்னமே சொல்லி இருந்தால் தடுத்திருக்கலாமில்லை. ஒண்னும் காலம் கடந்துவிடவில்லை! ஆரம்பியுங்க...

ஊர்சுற்றி சொன்னது…

//யாரு நான் தாவினேன் ,நல்லா இருக்கே கதை?//

நீங்க சொன்ன் அகருத்துகளை திரும்பப்படியுங்க புரியும்!

கண்டி கதிர்காமம் கமலஹாசனிட்ட இருந்து ஈழம் அரசியல் படிச்சவர் ஈழப்பதிவு போடப்போறாராம். போடுங்க போடுங்க. மறக்காமல் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பழையபூங்காவீதியில் (old park road) இருக்கும் வெளவால் மரத்தைப்பற்றியும் பதிவு போட்டு அப்பாலிக்கா அழப்பண்ணுங்க வெளவாலாரே!!!!

ஊர்சுற்றி சொன்னது…

//உங்களுக்கு விளக்கம் கொடுத்தே. சப்பா, முடியல... !//

உங்க விளக்கத்தை யாரோ ஒருவன் சிங்கள ஆமிக்காரனுக்குச் சொல்லிவிட ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழன் தனக்கென்று கேட்கிறான் என கொழும்பே அல்லோல கல்லோலப்பட...யாழ்மத்திய கல்லூரிக்கு முன்னால் நின்ற 40 பேரை ஆமி தூக்கி யாழ் கோட்டை முகாமில் போட்டு சாத்தோ சாத்தென்று சாத்தி 3 நாள் கழிச்சு வீட்டுக்கு அனுப்பிய கதை தெரியுமோ?
உங்களுக்குத் தெரியாது ஏனென்றால் நீங்கள் “அக்கடமிக்” கதை விடும் ஆட்கள். அப்பப்ப கிசு கிசு பாணி எச்சரிக்கை விட்டு அப்புறமாய் பதைவை அழிக்கும் ஆட்கள்.
ஈழம் பற்றி அக்கடமிக் அனலற்றிக்கல் கதை எல்லாம் விடலாம். ஆனால் ஈழம் என்றால் சிங்களவர்கள் என்ன செய்வார்கள் என உங்கள் அக்கடமிக் கதைகலை ஒருமுரை காலிவீதியில் நின்று கத்திப்பார்த்து விட்டு வந்து சொல்லவும். மரக்காம பெயரில் இருக்கும் “இக்பாலை” கொஞ்சம் உரக்கச் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

ஊர்சுற்றி சொன்னது…

//உங்களுக்கு விளக்கம் கொடுத்தே. சப்பா, முடியல... !//

ஈழத்தமிழர் அக்கடமிக் கதை விடுங்க. அந்த கிசு கிசு ராஜ இசையமைப்பாளர் , நட்சத்திர இயக்குனர் கிசு கிசு போடுறேன்னீங்களே? எப்போ வரும் அது !

ஊர்சுற்றி சொன்னது…

//ஆக இப்போ என்ன சொல்ற? ஏர்கனவே மணமான எருமைமாடு 40 பாலு மகேந்திரா 15-17 வயதில் ஷோபாவுடன் உறவு வைத்துக் கொண்டதில் தப்பில்லைனு சொல்றியா? //

அதை இந்திய சட்ட வல்லுனர்களிடம் கேட்டால் சொல்வார்களே! அதுக்கேன் இந்த ஒப்பாரி. அவர்கள் தவறு எனச் சொன்னால் ஒரு வழக்கைத்தாக்கல் செய்து அவரைக்குற்ரவாளி என தீர்ப்பு வாங்கும் பட்சத்தில் அவரின் தேசிய விருதுகள் தனாலேயே பறிக்கப்படும் நிலைக்கு கொண்டு வாருங்கள். அதைத்தான் நான் கேட்கிறேனே!
அதை விடுத்து எங்கோ ஒருவனை சகலை என சுயதிருப்தி அரிப்புக்கு அழைக்க மட்டுமே முடியும் உங்களால்.

ஊர்சுற்றி சொன்னது…

//வெட்கமே இல்லாமல் 18 வயதில் திருமணம்னு மரம் விட்டு தாவியது ஏன்?//

இதிலென்ன வெட்கம் இருக்கு? ஒரு வருடம் தவறு. அதை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறெனே?
இந்திய சட்டப்படி குற்றம் சாட்டி அவரை குற்ரவாளீ ஆக்கினால் எனக்கு சந்தோசமே!
வருண், வெளவால்...

ஈழத்தில் இருந்து இந்தியா போய் புகழ்பெற்று அந்தப்புகழை அல்லலுறும் ஈழமக்களுக்காய் ஒரு கிஞ்சித்தேனும் பயன்படுத்தாமல் இளம்பெண்களுடன் சல்லாபித்து பின்னர் இவரிலும் 30 வய்து குறைந்த சோமிதரன் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதை ஆவணமாக்க கைகள் நடுங்கின கண்கள் ஒழுகின எனவும் மேலிட உத்தரவால் தான் ஒரு சினிமாகூட எடுக்க முடியாமல் போனது என கதை விட்ட இந்த் ”சகலையின்” முகமூடியைக்கிழித்து விருதுகலை மீழப்பெற்றால் சந்தோசப்படுவேன். செய்வீர்களா வருண்! எனக்காக இல்லாவிட்டாலும் பொணமாயிட்ட சோபாவுக்காக இல்லாமல் விட்டாலும் இன்றும் உயிர் வாழும் ”ஈழச்சகோதரிக்காக” ஆயினும் செய்யமாட்டீர்களா?
ப்ளீஸ் வருண்!
”ரிலாக்ஸ் ப்ளீஸ்” என நீங்களின் உட்கார்ந்து மற்றவர்களையும் சோர்ந்துபோக விடாமல் செய்வீர்களா வருண்?

ஊர்சுற்றி சொன்னது…

ப்ளீஸ் வருண்..
ஆஹா....ஈழத்தமிழன் ஏன் தனித்துவமாய் பிளீஸ் என்பதை ப்ளீஸ் என்கிறான்?
அல்லது சோமிதரன் 81 இல் பிறந்தவர் பாலுமகேந்திரா 39 இல் பிறந்தவர்.
81 - 39 = 42 தானே வருகிறது. பின்னர் எப்படி 30 வயது குறைந்த சோமிதரன் எனச் சொல்ல்லாம்.

இந்த லைனில் பின்னூட்டத்தை ஆரம்பியுங்க..சுப்பராய் போகும்!

ஊர்சுற்றி சொன்னது…

//ஊர்சுற்றி,

அடி பலமா விழவும் பேர மாத்திட்டீரோ? பாரா.பாலகுமார்,இதுவும் நல்லாத்தான் இருக்கு. :-))///


எனக்கு பெயர் மாற்றும் தேவை இல்லை. நான் கடந்த இரண்டு நாட்களாய் ஈழக்கொலைகள் குறித்த ஐநா மனித உரிமை ஆணைய விசாரனைகள் சம்பந்தமான சில வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. அதான்ல்தான் சில வேளைகளில் கால தாமதம். சொல்லப்போனால் கிடைக்கும் இடைவெளியில் இந்த பின்னூட்டம் எழுதுவதே கொஞ்சம் மனதுக்கு விருப்பம் இல்லாமல்தான் இருக்கிறது. பெயரை மாற்றி எழுத வேண்டிய தேவை இல்லை.
“ஈழச்சகோதரி” என அன்பொழுக அழைப்பார்கள் ஆனால் ஒன்றும் செய்யாமல் வெறும் கதை விடுவார்கள். அவை இலகுவானவை. கேட்டால் பொணமாயிட்டா என பதில் வரும்.
ப்ளீஸ் அந்தாளின் முகமூடியைக்கிளிங்க...வழகுப் போடுங்க...விருதுகளை பறிங்க!!!
ப்ளீஸ்..ப்ளீஸ்.. !!!

Unknown சொன்னது…

இக்பால் என்பவர் வாயைத்திறந்தாலே பொய்தான் கொட்டும் .

பாலு மகேந்திரா பற்றி கோடங்கி என்ற தனது வலைப்பதிவில் எழுதி தள்ளியிருக்கிறார் . தவறு புளுகி தள்லியிருக்கிறார் .

அந்த பதிவின் கடைசி பந்தியில் ,நடிகையின் இறந்த உடலுடன் அபோதிருந்த பிரபல நட்சத்திர நடிகர் , பிரபல இசையமைப்பாளர் , இயக்குனர் ஆகியோர் உறவு கொண்டதாக அவரது கழிசடைப்புத்தியில் உதித்த படு பயங்கர கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார் .

இந்த கழிசடை கற்பனை அவருக்கு வருவதற்கு பல வருடங்களிற்கு முன்பு ஒரு தமிழ் வாரப்பத்திரிகயில் வெளிவந்த
நெக்ரோபீலியா பற்றிய கட்டுரை காரணமாக இருந்திருக்கலாம் .
அந்த கட்டுரையில் சில வருடங்களிற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு செத்து போன ஒருநடிகையின் உடல் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் , இரவு வேளைகளில் மார்சுவரியில் உள்ள காவலாளிக்கு பணம் கொடுத்து விட்டு நெக்ரோபீலியாநோய் பிடித்தவர்கள் அந்த இறந்த நடிகையின் இறந்த உடலுடன் உறவு கொண்டதாக குறிப்பிட்டிருந்தது ..

இதைத்தான் அண்ணாச்சி படித்திருக்க வேண்டும் . அந்த நடைகை யார் என்பதை ஒருவாறு ஊகித்தறிந்து கொண்டு , உறவு கொண்டவர்கள் லிஸ்டில் பிரபல நட்சத்திரநடிகர் , இசையமைப்பாளர் , இயக்குனர் என தனது கழிசடை கற்பனையை அடித்து விட்டுள்ளார் .

இவரைப்போன்ற கழிசடைகளால் ஒழுங்காக எழுதும் வலைப்பதிவர்களுக்கும் கெட்ட பெயர் ..

Unknown சொன்னது…

இக்பால் என்பவர் வாயைத்திறந்தாலே பொய்தான் கொட்டும் .

பாலு மகேந்திரா பற்றி கோடங்கி என்ற தனது வலைப்பதிவில் எழுதி தள்ளியிருக்கிறார் . தவறு புளுகி தள்லியிருக்கிறார் .

அந்த பதிவின் கடைசி பந்தியில் ,நடிகையின் இறந்த உடலுடன் அபோதிருந்த பிரபல நட்சத்திர நடிகர் , பிரபல இசையமைப்பாளர் , இயக்குனர் ஆகியோர் உறவு கொண்டதாக அவரது கழிசடைப்புத்தியில் உதித்த படு பயங்கர கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார் .

இந்த கழிசடை கற்பனை அவருக்கு வருவதற்கு பல வருடங்களிற்கு முன்பு ஒரு தமிழ் வாரப்பத்திரிகயில் வெளிவந்த
நெக்ரோபீலியா பற்றிய கட்டுரை காரணமாக இருந்திருக்கலாம் .
அந்த கட்டுரையில் சில வருடங்களிற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு செத்து போன ஒருநடிகையின் உடல் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் , இரவு வேளைகளில் மார்சுவரியில் உள்ள காவலாளிக்கு பணம் கொடுத்து விட்டு நெக்ரோபீலியாநோய் பிடித்தவர்கள் அந்த இறந்த நடிகையின் இறந்த உடலுடன் உறவு கொண்டதாக குறிப்பிட்டிருந்தது ..

இதைத்தான் அண்ணாச்சி படித்திருக்க வேண்டும் . அந்த நடைகை யார் என்பதை ஒருவாறு ஊகித்தறிந்து கொண்டு , உறவு கொண்டவர்கள் லிஸ்டில் பிரபல நட்சத்திரநடிகர் , இசையமைப்பாளர் , இயக்குனர் என தனது கழிசடை கற்பனையை அடித்து விட்டுள்ளார் .

இவரைப்போன்ற கழிசடைகளால் ஒழுங்காக எழுதும் வலைப்பதிவர்களுக்கும் கெட்ட பெயர் ..

ஊர்சுற்றி சொன்னது…

//அந்த பதிவின் கடைசி பந்தியில் ,நடிகையின் இறந்த உடலுடன் அபோதிருந்த பிரபல நட்சத்திர நடிகர் , பிரபல இசையமைப்பாளர் , இயக்குனர் ஆகியோர் உறவு கொண்டதாக அவரது கழிசடைப்புத்தியில் உதித்த படு பயங்கர கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார் .//

முதலில் அரசல் புரசலாக கிசுகிசு பாணியில் பெயர்களை எழுதினார். பின்னர் அதை அழித்து மேம்போக்காக கதை விட்டிருக்கிறார். அது சம்பந்தமாய் நான் இட்ட பீன்னூட்டத்தையும் அழித்திருக்கிறார்.
மாறுவது ஒன்றும் தவறல்ல திருத்தப்பட்டதை பதிவு செய்யமல் விட்டுள்ளார். அந்தளவு பத்திரிகை தர்மம் தெரிந்தவர்.

ஊர்சுற்றி சொன்னது…

//*** 1982 இல்தான் 16 ஆக உயர்த்தப்பட்டது !***

அப்போத்தான் அவ பொணமாயிட்டாளே, அதைவிடு! //

சட்டத்தைத் துருத்திய பின் அச்சட்டம் இருந்த காலத்தில் செய்யப்பட்ட செயல்களுக்கு நீதிமன்றம் போக முடியாது. அதுதான் உண்மை. அவ இறந்தாளா பொணமாயிட்டாளா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

பொணமாயிட்டவளை விட்டுடலாம். ஆனால் அவ பொணமாயிட்டபின் இன்னும் 35 வருசம் (கணக்குப்பிழை பின்னூட்டம் இடலாமே!) உயொரோடிருந்தவனை என்ன செய்தீங்க? அவனும் பொணமாகும் வரை பொறுத்திருந்து வக்கணையாய் கதை பேசுவது கடினமில்லை என்பதாலா?

சரி அதை வுடுங்க. இப்போ உயிருடன் இருக்கும் “ஈழச்சகோதரி” க்காகவேனும் பாலுமகேந்திரா வின் முகமூட்யை கிழிப்பதன் மூலமோ அல்லது விருதுகளை மீழப்பெறுவதன் மூலமோ செயற்படலாம்தானே?
உதவிக்கு இக்பால் செல்வன் வருகிறார். (அவர்தாங்க தனது பதிவையும் பின்னூட்டங்களையும் சொல்லாமல் கொள்ளாமல் திருத்திய புகழ்)

ஏதோ புட்டுப்புடு வைக்கிறேன் என்றார். ஆவலுடன் தேடிப்பார்த்தால் ஆஸ்கர் விருது பற்றி ஏதோ எழுதுகிறார்.

வவ்வால் சொன்னது…

ஊர்சுற்றி,

//நான் கடந்த இரண்டு நாட்களாய் ஈழக்கொலைகள் குறித்த ஐநா மனித உரிமை ஆணைய விசாரனைகள் சம்பந்தமான சில வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. //

எனக்கு ஆனந்தக்கண்ணீரே வருது,ஏன் வருது எதுக்கு வருதுன்னுலாம் கேட்கப்படாது!!!

#//ப்ளீஸ் அந்தாளின் முகமூடியைக்கிளிங்க...வழகுப் போடுங்க...விருதுகளை பறிங்க!!!
ப்ளீஸ்..ப்ளீஸ்.. !!!//

நான் எங்கே அத எல்லாம் செய்றேன்னு சொன்னேன்,ஆள் மாத்தி பேசுற அளவுக்கு எப்பவும் குழம்பித்தான் கிடப்பீரா?

ஆனாலும் , ஈழத்தமிழன் ,பேர்ப்பெற்ற சினிமாக்காரன், ஈழம் பற்றி படம் எடுக்கலையே என்பது மட்டும் தான் உமக்கான வருத்தம்,ஏமாற்றம் மற்றபடி எத்தனைப்பேர சீரழிச்சு சாவடிச்சாலும் "அவன் ஈழத்தமிழன்" என்ற மாமன் என மல்லுக்கட்டிக்கிட்டு நிப்பீர் :-))

# இந்த வருசமே அமேரிக்காவுக்கு கூப்பிட்டு "விழா எடுக்க ஆசைப்பட்டு முடியாம போச்சு,அடுத்த வருசம், "சிலை எடுத்து சிறப்பியுங்கள்" ஈழக்கலிஞனல்லோ!!!
-------------------

ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தளத்தில் பார்த்தது, NGO அமைப்புகளுக்கான மக்கள் தொடர்பாளர்னு(ஆலோசகரா?) "ராதிகா படையாட்சி" என்றப்பெயர் போட்டிருந்தது, ஹி...ஹி என்ன இருந்தாலும் அதெல்லாம் ஜாதினே சொல்லிக்கிறது இல்லை தானே, ஏன் வெளிநாட்டுக்கு போனாலும் நவநீதம் பிள்ளை, ராதிகாபடையாட்சினே பேரு வச்சிக்கிறாங்க, அப்போ வெளிநாட்டில் எல்லாம் ஜாதியே இல்லாம போச்சுனு சொல்றவங்க பேருல சேர்க்காமலே இருக்கலாமே?

Unknown சொன்னது…

"##ராதிகா படையாட்சி" என்றப்பெயர் போட்டிருந்தது, ஹி...ஹி என்ன இருந்தாலும் அதெல்லாம் ஜாதினே சொல்லிக்கிறது இல்லை தானே, ஏன் வெளிநாட்டுக்கு போனாலும் நவநீதம் பிள்ளை, ராதிகாபடையாட்சினே பேரு வச்சிக்கிறாங்க##

கனடா எம்பியான ராதிகா சிற்சபேசனை சொல்கிறீரா ?
அவரது பெயருக்கு பின்னால் படையாட்சி என்ற பெயர் வருவதற்கு சாத்தியமே இல்லை . முதலில் படையாட்சி என்ற ஜாதிப்பெயரோ அல்லது ஜாதியோ ஈழத்தில் இல்லை .

இரண்டாவது ஈழத்தில் தமது பெயருக்கு பின்னால் தமது ஜாதியை போட்டுக்கொள்ளும் வழக்கம் ஈழத்தில் இல்லை .
அந்த வழக்கமெல்லாம் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் தான் இருக்கிறது .
பெயருக்கு , வீதிக்கு ,கட்டிடத்துக்கு , ஊருக்கெல்லாம் ஜாதி பெயரிடும் வழக்கம் அங்குதான் உள்ளது.
அத்தகையா ஜாதி காமாலை கண்ணால் பார்த்ததால் அப்படி தெரிந்துள்ளது போலும்.

Unknown சொன்னது…

##ஆனாலும் , ஈழத்தமிழன் ,பேர்ப்பெற்ற சினிமாக்காரன், ஈழம் பற்றி படம் எடுக்கலையே என்பது மட்டும் தான் உமக்கான வருத்தம்,ஏமாற்றம் மற்றபடி எத்தனைப்பேர சீரழிச்சு சாவடிச்சாலும் "அவன் ஈழத்தமிழன்" என்ற மாமன் என மல்லுக்கட்டிக்கிட்டு நிப்பீர் :-))##

அவரைத்தான் ஈழத்தமிழர்னே நீங்க ஒத்துக்கலையே . இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இந்தியா வந்த இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் என்று அடாவடியா மல்லுக்கட்டி அவரை உங்களோட மாமன் , மச்சன் , சகலை என்றல்லவா உறவு கொண்டாடுகிறீர்கள் ?

வருண் சொன்னது…

வாங்கோ பாரா ராஜாசிங்கம் பாலக்குமார் அண்ணாச்சி!

இக்பால் செல்வன் இங்கே பின்னூட்டமிட்டு ரொம்பக் காலமாச்சு. இங்கே வந்து ஏன் அவரை கரிச்சுக் கொட்டிக்கிட்டு?

இங்கே அவரவர் சொல்லும் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. உங்களமாதிரி ஈழ உறவு என்றால் எல்லாருமே யோக்கியன், சொல்வதெல்லாம் சரி னு வாதாடுவது எங்க ஊர் வழக்கமில்லை. இக்பால் சொன்னது சரினு இங்கே யாரும் அவருக்கு வக்காலத்து வாங்கப்போவதில்லை. அவரை விட்டுடுங்கோ! சரியா? :)

வருண் சொன்னது…

****முதலில் படையாட்சி என்ற ஜாதிப்பெயரோ அல்லது ஜாதியோ ஈழத்தில் இல்லை .****

நம்ம மருத்துவ அரசியல்வாதி ராமதாசு இதையெல்லாம் ஏற்றுக்கொள்வாரானு சந்தேகம்தான். ஈழத்தில் உள்ள ஆதி திராவிடர்களுக்காகவா இந்த சாதிவெறியர் ராமதாசு தமிழன் தமிழன் னு அடிச்சுக்கிறாரு? உங்களுக்கு இதெல்லாம் புரியாது விட்டுடுங்கோ!

Unknown சொன்னது…

## ஈழத்தில் உள்ள ஆதி திராவிடர்களுக்காகவா இந்த சாதிவெறியர் ராமதாசு தமிழன் தமிழன் னு அடிச்சுக்கிறாரு? உங்களுக்கு இதெல்லாம் புரியாது விட்டுடுங்கோ!##

இப்போதும் சொல்கிறேன் ஈழத்தில் வன்னியர் என்றோ அல்லது படையாட்சி என்றோ சாதி கிடையாது .

ஆனால் நீங்கள் ராமதாஸ் பற்றி குறிப்பிடும்போது ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. அவர் பா.ம.காவை ஆரம்பித்த காலத்தில் அவர ஈழப்போராட்டத்துக்கு முழு ஆதரவு தந்தார் .
அப்போது ஒரு பேட்டியில் ஈழத்தமிழரில் 30 % வன்னியர்கள் எனக்குறிப்பிடிருந்தார் . அப்போது நான் எனக்குள் சிரித்துக்கொண்டேன். அது உண்மையல்ல . அவருக்கு யாரோ தவறான தகவல் வழங்கியிருக்கிறார்கள் . அல்லது ஈழத்தில் வன்னி என்றொரு பிரதேசம் இருப்பதால் அவர் அப்படி நினைத்திருக்கலாம் .எது எப்படியோ வலிய வரும் ஒரு ஆதரவை இழப்பானேன் என அப்போது அங்கிருந்த ஈழத்தமிழர்களும் கம்மென்று இருந்து விட்டார்கள் .

உங்களைப்போன்றவர்கள் , தமிழ் நாட்டில் நிலவுன் சாதீய அமைப்பு அதன் வீரியம் , அது செல்வாக்கு செலுத்தும் தளங்கள் போன்றவற்றை அப்படியே ஈழத்திற்கும் அப்ளை செய்து விடும் தவறை செய்து விடுகிறீர்கள் .
அதை சொல்ல வந்தாலும் செவி மடுக்க மாட்டேன் என் கிறீர்கள் .

என்னைப்பொறுத்தவரைக்கும் , தமிழ் நாட்டு சாதீய அமைப்பு , ஈழ தேசத்து சாதீய அமைப்பைநன்ஙு தெரிந்து கொண்டே பேசுகிறேன்.
ஈழத்தின் பரப்பளவு தமிழ் நாட்டுடன் ஒப்பிடுமிடத்து அதன் பரப்பளவு மிகவும் குறைவு . சாதிகளின் எண்ணிக்கையும் குறைவானது , தமிழ் நாட்டில் காணப்படும் அத்தனை சாதிகளும் அங்கு கிடையாது .

தமிழ் நாட்டில் ஒரு சாதிக்கட்சி நடத்தும் ஒரு தலவருக்கே ஈழத்தின் சாதி அமைப்பு பற்றிய அறிவு இந்த இலட்சணத்தில் இருக்கிறதென்றால் , சாதாரண தமிழ் நாட்டு குடிமகனிடம் நாம் அவ்வளவு எதிர்ப்பார்க்க முடியாதுதான் .]
அதற்காக தவறான கருத்துகளை இங்கு சொல்ல முற்படும்போது அதனை திருத்தி விளக்குவதற்கு முயற்சிக்கிறோம் .அதனையும் கேட் க மாட்டேனென்றால் எப்படி ?

இதெல்லாம் உங்களுக்கு புரியாது விட்டுடுங்க என்று நான் சொல்ல வேண்டியதை எனக்கு நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் .

Unknown சொன்னது…

## உங்களமாதிரி ஈழ உறவு என்றால் எல்லாருமே யோக்கியன், சொல்வதெல்லாம் சரி னு வாதாடுவது எங்க ஊர் வழக்கமில்லை.##

இக்பால் அவர்கள் பாலு மகேந்திராவை விமர்சித்து எழுதிய அவரது வலைப்பதிவில் , பாலுவின் ஒரு பெண் சபலிஸ்ட் என்பது ஊருக்கு தெரிந்த விடயமென்றும் , வயதான பின்னர்தான் மனிதர் அடங்கினார் என்றும்தான் பின்னூட்டமிட்டுள்ளேன்.
ஆனால் அவரது கடைசி பந்தியில் , இறந்த நடிகையின் உடலோடு உறவு கொண்டதாக அப்போது திரையுலகில் பிரபலமாக இருந்த ஒரு நட்சத்திரநடிகர் , பிரபல இசையமைப்பாளர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார் .
அதனைத்தான் கண்டித்திருந்தேன்.

அந்த பாடியலில் இருந்தவர்கள் எல்லாம் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் . தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் . ஓருவர் கூட ஈழத்தமிழர் கிடையாது.
அப்படியானால் நான் யோக்கியன் என்று யாருக்காக வாதாடுகிறேன் ???

வவ்வால் சொன்னது…

பாராரா ஜசிங்கம்பா லகுமார்,

என்ன பேருப்பா இது சொல்லி முடிக்கிறதுக்கே நாக்கு தள்ளுது அவ்வ்!

எதாவது மகா வம்சத்து புராணப்பேரா?

அது சரி ,ஊர்ச்சுற்றி விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிச்சு ,இன்னொரு தடவை சுத்தி வர கிளம்பிட்டீரா,இல்லை அவரே தான் இவரா?

# நவநீதம் பிள்ளை, தென் ஆப்ரிக்கா, ராதிகா படையாச்சி எந்த நாடுனு தெரியலை, ஐ.நாவில இருக்காங்க, நான் பொதுவாக வெளிநாட்டிலும் ஜாதி பேரு வச்சிருக்காங்களேனு எதுக்கு சொன்னேன், தமிழ்நாட்டில் மட்டும் இருக்குனு சொல்லுறிங்க, இலங்கையில இல்லைனு சொல்லுறிங்களே, வெளிநாட்டுல இருக்கவங்களும் வச்சிக்கிறாங்கனு சொல்ல?

ஜாதிய அடையாளம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை ,போற இடத்தில எல்லாம் மெயிண்டைன் செய்றாங்கனு புரிய வைக்க,இப்பவாது புரியுதா?

ஒண்ணும் விளங்காமலே கதையடிக்க கிளம்பிட வேண்டியது. உமக்குலாம் இலங்கை விவரமும் தெரியாது, உலக விவரமும் தெரியாது ஆனால் ,தமிழ்நாட்டில் இருக்கவனுக்கு தெரியாதுனு சொல்லிக்கிட்டு கிளம்பிட வேண்டியது.

ராதிகானு பேருல இருந்தா உடனே சிற்சபேசன்னு போட்டு ,ஈழத்து உறவுனு ஆரம்பிச்சுட வேண்டியதா? வேற யாரும் இருக்க மாட்டாங்களா?

#//ஈழத்தின் பரப்பளவு தமிழ் நாட்டுடன் ஒப்பிடுமிடத்து அதன் பரப்பளவு மிகவும் குறைவு . சாதிகளின் எண்ணிக்கையும் குறைவானது , தமிழ் நாட்டில் காணப்படும் அத்தனை சாதிகளும் அங்கு கிடையாது .//

இப்ப என்னதான் சொல்ல வரீர்,கொஞ்சமா மக்கள், கொஞ்சமா ஜாதி,எனவே கொஞ்சமா தான் ஜாதிவெறினா?

# உமக்கு ஒன்றே ஒன்று கேட்கிறேன் செய்ய முடியுமா?

மலையகம் பக்கம் போய், ஈழத்தில இனவெறியால் நாங்கப்பாதிக்கப்பட்டிருக்கோம், நீங்களாம் ஏன் சொரணையே இல்லாம சும்மா இருக்கீங்க ,போராட வாங்கோனு கூப்பிடவும், முழுசா இருந்தால் திரும்ப வந்து பதில் சொல்லவும் :-))

raajsree lkcmb சொன்னது…

ஊர் சுற்றி, நீங்கள் பாட்டுக்கு தனி மனித ஒழுக்கம் இல்லாதவன் பெற்ற விருதை எல்லாம் வழக்குப் போட்டு திருப்பி வாங்கு என்று மல்லுக் கட்டுறீங்க! அப்பறம் ஒரு நாலு சினிமாக்காரன் கிட்டயாவது வாங்கினது மிஞ்சுமா? சும்மா அவர்களை எல்லாம் வம்புல மாட்டி விடாம, உங்களுக்கு தெரிந்த தகவல்களை அசராமல் பின்னூட்டம் இடுகிறீர்களே, அதை தொடர்ந்து செய்யுங்கள்.

வருண் சொன்னது…

பாரா ரா சி பா குமாரு அண்ணாச்சி!

என்ன சொல்றீங்க?

உங்க ஊரில் கொஞ்ச சாதிகள்தான் இருக்குனா?

இதில் உயர் சாதி, தாழ்ந்த சாதினு ஏதாவது இருக்கா? இல்லைனா அல்லாரும் சமமா?

அப்போ சாதி வேறுமை எதுவும் ஈழத்தில் கெடையாது? சரி இருக்கட்டும்.

தமிழர்களை, பூர்வீகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், 50 ஆண்டுகள் முன்னால வந்த்வங்கனு பிரிப்பீர்களா? அதுவும் இல்லையா?

விபரம் சொல்லுங்க! நன்றி

Unknown சொன்னது…

##உங்க ஊரில் கொஞ்ச சாதிகள்தான் இருக்குனா?

இதில் உயர் சாதி, தாழ்ந்த சாதினு ஏதாவது இருக்கா? இல்லைனா அல்லாரும் சமமா?##

சாதி அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டதே ஏற்றத்தாழ்வுகளை வைத்துத்தானே . எல்லோரும் சமம்னா அங்கு சாதிகள் எதற்கு ?

ஆகவே ஈழத்திலும் சாதிகள் இருக்கென்றால் , அங்கும் ஏற்றத்தாழ்வுகள் , ஆதிக்க சாதி , தாழ்ந்த சாதிகள் என்று இருக்கத்தான் செய்கின்றன.
நான் சிறுவனாக இருந்தபோதும் அதற்கு முன்னரும் தீண்டாமையும் இருந்து வந்தது . உதாரணமாக தாழ்ந்த சாதியின்ர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமை போன்ற தீண்டாமை இருந்தது . பின்பு அவர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள் . தீண்டாமை முன்பு போல் இல்லாது குறைந்து வந்தபோதே விடுதலை இயக்கங்களின் போராட்டம் ஆரம்பமானது . அது தீண்டாமையை கிட்டத்தட்ட ஒழித்தே விட்டது .
இருந்தாலும் , திருமண உறவுகள் என்று வரும்போது இப்போதும் சாதி பார்க்துதான் திருமணம் செய்கிறார்கள் .ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் முடிப்பதில்லை . அந்த வகையில் சாதி முறை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் வருவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை.

ஆனால் நான் தமிழ் நாடு , இந்தியாவோடு ஒப்பிட்டு சொல்ல முற்பட்டது என்னவென்றால் . ஈழத்தில் இப்போது பெரும்பாலூம் திருமணம் செய்து கொள்ளும்போது சாதி பார்ப்பார்களே அன்றி எப்போதும் தம்மோடு சாதிய அடையாளங்கள்யோ அல்லது சிந்தனைகளையோ காவித்திரிபவர்கள் அல்ல..
தமது தந்தையின் பெயரையும் , தனது பெயரையும் வைத்துக்கொள்வார்களே தவிர , சாதிப்பெயரை தமது பெயருக்கு முன்போ அல்லது பின்போ அல்லது பக்க வாட்டிலோ வைத்துக்கொள்வதில்லை.
தெருவுக்கு , பரம்பரைக்கு , கட்டடத்துக்கு , ஊருக்கு என்று சாதி பெயர்கள் சூட்டப்பட்டிருக்க மாட்டாது.

##தமிழர்களை, பூர்வீகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், 50 ஆண்டுகள் முன்னால வந்த்வங்கனு பிரிப்பீர்களா? அதுவும் இல்லையா?##
தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமியத்தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று அழைப்பதுபோல் அல்லது கேரளாவிலுள்ள இஸ்லாமியர்கள் தம்மை மலயாளிகள் என்று அடையாளப்படுத்துவதுபோல் , இலங்கையில் உள்ள இஸ்லாமிய தமிழர்கள் தம்மை தமிழர்கள் என கூறிக்கொள்வதில்லை.
அவர்கள் தம்மை முஸ்லிம்கள் அல்லது சோனகர்கள் என்றே அழைத்து கொள்கிறார்கள் .
அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்ட போதும் தம்மை தமிழர்களிடமிருந்து வேறு பட்ட இனமாக காட்டி சிங்களவர்களிடமிருந்து ச்லூகைகள் பெறுவதையே அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகிறார்கள் .

இந்த நிலையில் தமிழர்களாகிய நாம் அவர்களை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.

இலங்கையின் வட கிழக்கு பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கயின் பூர்வீக தமிழர்கள் .பிரித்தானியர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கென இந்தியாவிலிருந்து இலங்கையின் மலயகப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மற்றும் மற்றும் வியாபரத்தின் நிமித்தம் வந்து குடியேறிய இந்திய வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்கள் இந்திய வம்சாவளிதமிழர்கள் என அழைக்க படுகிறார்கள் .
இவர்களில் பெரும்பாலனவர்கள் ஈழப்பகுதியான வட கிழக்குக்கு வெளியே சிங்களப்பிரதேசங்களிலேயே வாழ்கிறாகள் .
ஆனால் 77 , 81 , 83 இல் சிங்கள காடையர்கள் செய்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இலங்கை தமிழர்களின் பூர்வீக பகுதியானா வட கிழக்கில் குடியேறினார்கள் .

பல ஆண்டுகளாக இன்றுவரை அங்குள்ள தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள் . போராட்டத்தில் தம்மை போராளிகளாக இணைதிருக்கிறார்கள் . ஆதரவாளர்களாக வும் இருந்திருகிறர்கள் . வன்னி இறுதி யுத்ததின்போது மாண்டு போன ஈழத்தமிழர்களில் , மலயகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மலையகத்தமிழர்களும் அடக்கம்.

Unknown சொன்னது…

##உங்க ஊரில் கொஞ்ச சாதிகள்தான் இருக்குனா?

இதில் உயர் சாதி, தாழ்ந்த சாதினு ஏதாவது இருக்கா? இல்லைனா அல்லாரும் சமமா?##

சாதி அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டதே ஏற்றத்தாழ்வுகளை வைத்துத்தானே . எல்லோரும் சமம்னா அங்கு சாதிகள் எதற்கு ?

ஆகவே ஈழத்திலும் சாதிகள் இருக்கென்றால் , அங்கும் ஏற்றத்தாழ்வுகள் , ஆதிக்க சாதி , தாழ்ந்த சாதிகள் என்று இருக்கத்தான் செய்கின்றன.
நான் சிறுவனாக இருந்தபோதும் அதற்கு முன்னரும் தீண்டாமையும் இருந்து வந்தது . உதாரணமாக தாழ்ந்த சாதியின்ர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமை போன்ற தீண்டாமை இருந்தது . பின்பு அவர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள் . தீண்டாமை முன்பு போல் இல்லாது குறைந்து வந்தபோதே விடுதலை இயக்கங்களின் போராட்டம் ஆரம்பமானது . அது தீண்டாமையை கிட்டத்தட்ட ஒழித்தே விட்டது .
இருந்தாலும் , திருமண உறவுகள் என்று வரும்போது இப்போதும் சாதி பார்க்துதான் திருமணம் செய்கிறார்கள் .ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் முடிப்பதில்லை . அந்த வகையில் சாதி முறை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் வருவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை.

ஆனால் நான் தமிழ் நாடு , இந்தியாவோடு ஒப்பிட்டு சொல்ல முற்பட்டது என்னவென்றால் . ஈழத்தில் இப்போது பெரும்பாலூம் திருமணம் செய்து கொள்ளும்போது சாதி பார்ப்பார்களே அன்றி எப்போதும் தம்மோடு சாதிய அடையாளங்கள்யோ அல்லது சிந்தனைகளையோ காவித்திரிபவர்கள் அல்ல..
தமது தந்தையின் பெயரையும் , தனது பெயரையும் வைத்துக்கொள்வார்களே தவிர , சாதிப்பெயரை தமது பெயருக்கு முன்போ அல்லது பின்போ அல்லது பக்க வாட்டிலோ வைத்துக்கொள்வதில்லை.
தெருவுக்கு , பரம்பரைக்கு , கட்டடத்துக்கு , ஊருக்கு என்று சாதி பெயர்கள் சூட்டப்பட்டிருக்க மாட்டாது.

##தமிழர்களை, பூர்வீகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், 50 ஆண்டுகள் முன்னால வந்த்வங்கனு பிரிப்பீர்களா? அதுவும் இல்லையா?##
தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமியத்தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று அழைப்பதுபோல் அல்லது கேரளாவிலுள்ள இஸ்லாமியர்கள் தம்மை மலயாளிகள் என்று அடையாளப்படுத்துவதுபோல் , இலங்கையில் உள்ள இஸ்லாமிய தமிழர்கள் தம்மை தமிழர்கள் என கூறிக்கொள்வதில்லை.
அவர்கள் தம்மை முஸ்லிம்கள் அல்லது சோனகர்கள் என்றே அழைத்து கொள்கிறார்கள் .
அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்ட போதும் தம்மை தமிழர்களிடமிருந்து வேறு பட்ட இனமாக காட்டி சிங்களவர்களிடமிருந்து ச்லூகைகள் பெறுவதையே அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகிறார்கள் .

இந்த நிலையில் தமிழர்களாகிய நாம் அவர்களை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.

இலங்கையின் வட கிழக்கு பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கயின் பூர்வீக தமிழர்கள் .பிரித்தானியர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கென இந்தியாவிலிருந்து இலங்கையின் மலயகப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மற்றும் மற்றும் வியாபரத்தின் நிமித்தம் வந்து குடியேறிய இந்திய வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்கள் இந்திய வம்சாவளிதமிழர்கள் என அழைக்க படுகிறார்கள் .
இவர்களில் பெரும்பாலனவர்கள் ஈழப்பகுதியான வட கிழக்குக்கு வெளியே சிங்களப்பிரதேசங்களிலேயே வாழ்கிறாகள் .
ஆனால் 77 , 81 , 83 இல் சிங்கள காடையர்கள் செய்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இலங்கை தமிழர்களின் பூர்வீக பகுதியானா வட கிழக்கில் குடியேறினார்கள் .

பல ஆண்டுகளாக இன்றுவரை அங்குள்ள தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள் . போராட்டத்தில் தம்மை போராளிகளாக இணைதிருக்கிறார்கள் . ஆதரவாளர்களாக வும் இருந்திருகிறர்கள் . வன்னி இறுதி யுத்ததின்போது மாண்டு போன ஈழத்தமிழர்களில் , மலயகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மலையகத்தமிழர்களும் அடக்கம்.

ஊர்சுற்றி சொன்னது…

//எனக்கு ஆனந்தக்கண்ணீரே வருது,ஏன் வருது எதுக்கு வருதுன்னுலாம் கேட்கப்படாது!!!//

சீச்சீ...அதெல்லாம் கேட்பேனா உங்க கிட்ட?
கேட்டால் அப்பாலிக்கா அழப்பண்ணிடுவேன், கண்டி கதிர்காமம் கமலகாசன் சினிமா என தாவி விடுவீங்க. அப்புறமா நாந்தான் அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேனும். அதுக்கப்புரமும் பலமா அடிகொடுத்தேன் என சுய சொறிதல் செய்வீங்க...

//"அவன் ஈழத்தமிழன்" என்ற மாமன் என மல்லுக்கட்டிக்கிட்டு நிப்பீர் :-))///

இந்தியன் ஒர்ய்வெனோ அல்லது அமெரிக்கன் ஒருவனோ அவன் யாராயினும் எப்பேர்ப்பட்ட கீழானவனாயினும் இந்தியன் அமெரிக்கந்தானே!
இதனை கள்ளத்தனமாய் ஏன் மறுத்து குளிர்காயவேண்டும்?
கோட்சே காந்தியைக் கொன்றுவிட்டு பாகிஸ்தானில் குடியுரிமை பெற்ரால் பாகிஸ்தானியனாவானா?
அல்லது பாம்பே மாஃபியா தலைவன் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதால் பாகிஸ்தானியனா?
அதே போல பாலுமகேந்திரா மட்டக்களப்பு அமிர்தகழியைச்சேர்ந்தவர். அவர் சுத்துமாத்துப்ப்பண்ணி இந்திய பிரஜா உரிமை பெற்றிருக்கலாம். மட்டக்களப்பு உலகத்தமிழர்களின் கனவான தமிழீழத்தில் அடக்கம்.
இலங்கைத்தீவில் போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியில் கூட தமிழ்ப்பகுதிகள் தனியாக இருந்தன. ஆங்கிலேயரே தமது நிர்வாக இலகுவாக்கலுக்காக ஒன்றாக்கினர். இது வரலாறு. நீங்கள் தேடும் இன்றைய அட்லஸில் இருக்காது!


//இந்த வருசமே அமேரிக்காவுக்கு கூப்பிட்டு "விழா எடுக்க ஆசைப்பட்டு முடியாம போச்சு,அடுத்த வருசம், "சிலை எடுத்து சிறப்பியுங்கள்" ஈழக்கலிஞனல்லோ!!!//

இவரை அமெரிக்கா அழைத்தவர்கள் தமிழர்கள் சங்கம். இந்த சங்க குடை அமைப்பின் கீழ் இரண்டு சங்கங்களே ஈழத்தமிழ் சங்கங்கள். மிகுதி 26 சங்கங்கள் இந்திய தமிழ்ச் சங்கங்கள்!

ஊர்சுற்றி சொன்னது…

//ராதிகா படையாட்சி" என்றப்பெயர் போட்டிருந்தது, ஹி...ஹி என்ன இருந்தாலும் அதெல்லாம் ஜாதினே சொல்லிக்கிறது இல்லை தானே, ஏன் வெளிநாட்டுக்கு போனாலும் நவநீதம் பிள்ளை, ராதிகாபடையாட்சினே பேரு வச்சிக்கிறாங்க//

ஹி...ஹி..ஹீஈஈஈஈஈ !
அவர் ராதிகா படையாச்சி அல்ல ராதா (ராதாகிருஷ்ண) லெட்சுமண படையாட்சி. தெனாபிரிக்க இனவெறி அர்சுக்கெதிரான போராட்டங்களில் நெல்சன் மண்டேலாவுக்கு தோள் கொடுத்தவர். தென்னாபிரிக்க அமைச்சர். ஈழத்தமிழ் ஆதரவாளர்!
அவரின் மரணச்சடங்கு இரங்கல் கூட்டத்தில் உரையாற்ற தென்னாபிரிக்க அரசால் ஈழத்தமிழர் அரசியல் இயக்கங்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல ஈழத்தமிழ் இயக்கத்துக்கு ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சரிலும் அதீத அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா அரசாலும் குற்ரம் கூறப்பட்டது உங்களுக்கு தெரியவில்லைப்போலும்!

ஊர்சுற்றி சொன்னது…

நவநீதம் பிள்ளை, ராதாகிருஷ்ண படையாட்சி (ராதிகா அல்ல) போன்றவர்கல் தமது சாதிப்பெயரை வைத்திருப்பது தவறல்ல. தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருப்பது சிறு சிறு சாதிக்குழுக்களே.
நெல்சன் மண்டேலாகூட அவரின் சாதிப்பெயெரான மபிபா எனும் பெயராலேயே அழைக்கப்பட்டார். அவரின் இரங்கல் கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அவரை மபிபா எனவே அழைத்தனர்.

நவநீதம் பிள்ளை என்கின்ற பெயரில் பிள்ளை என்பது அவரின் கணவர் பரஞ்சோதி அந்தோனிப்பிள்ளை என்பதில் இருந்து வந்தது.

ராதா படையாட்சி என்பதனை ஒழுங்காக படிக்காமல் நடிகை சிந்தனையில் ”ராதிகா” என்றவர் சாதிபற்றியும், கண்டி கதிர்காமம் ஈழத்தில் இருக்கிறது என நடிகர் கனவில் கமலகாசனிடம் இருந்து ஈழச்சரித்திரம் படித்தவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கு!

அண்னை வெளவால் அடிபலமாய் போட்டிடாதீங்க நம்மளை பெயர் மாறி வந்து பின்னூட்டம் எழுத வச்சிடாதீங்க. இங்கிலீஸ் மொழிபெயர்ப்பு படிக்க வச்சிடாதீங்க.
ஈழப்பதிவு போட்டு அப்பாலிக்கா அழவச்சிடாதீங்க. கெஞ்சிக்கேட்டுக்கிறேன் அண்ணை செய்திடாதீங்க. ராதாகிருஷ்ண படையாட்சியை எம்.ஆர் ராதா மகள் ராதிகாவோட முடிஞ்சு விட்டிடாதீங்க. அப்புறம் சரத்குமார் நாடார் வந்தால் ஏன் ஈழத்தில் நாடார் இல்லியா சாத்யே இல்லியா என அடுத்த மரம் தாவிடாதீங்க!

வருண் சொன்னது…

***ஊர்சுற்றி கூறியது...

நவநீதம் பிள்ளை, ராதாகிருஷ்ண படையாட்சி (ராதிகா அல்ல) போன்றவர்கல் தமது சாதிப்பெயரை வைத்திருப்பது தவறல்ல. தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருப்பது சிறு சிறு சாதிக்குழுக்களே.
நெல்சன் மண்டேலாகூட அவரின் சாதிப்பெயெரான மபிபா எனும் பெயராலேயே அழைக்கப்பட்டார். அவரின் இரங்கல் கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அவரை மபிபா எனவே அழைத்தனர். ***

அப்படியா?

நீ சாதியக் கட்டி அழ நெல்சன் மண்டேலா உனக்கு வக்காலத்துக்கு வர்ராரா?!

உன் பேரென்ன? ஊரு சுத்திப் பிள்ளையா? நீ நாசமாப் போக! :)))

வருண் சொன்னது…

*** Pararajasingham Balakumar கூறியது...

##உங்க ஊரில் கொஞ்ச சாதிகள்தான் இருக்குனா?

இதில் உயர் சாதி, தாழ்ந்த சாதினு ஏதாவது இருக்கா? இல்லைனா அல்லாரும் சமமா?##

சாதி அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டதே ஏற்றத்தாழ்வுகளை வைத்துத்தானே . எல்லோரும் சமம்னா அங்கு சாதிகள் எதற்கு ?***

Thanks for educating me! :)

Unknown சொன்னது…

##அப்படியா?

நீ சாதியக் கட்டி அழ நெல்சன் மண்டேலா உனக்கு வக்காலத்துக்கு வர்ராரா?!##

சாதிக்கெதிராக முழங்கும் உங்க வீரத்தை பார்த்தா , எனக்கு கடவுள் இல்லவே இல்லை எனச்சொல்லும் நாத்திகர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள் .

அதாவது கடவுள் இல்லை எனச்சொல்லும் நாத்திகர்கள்தான் கடவுளைப்பற்றி அதிகமாக இன்னும் சொல்லப்போனால் ஆத்திகர்களையும் விட அதிகமாக நினைத்து கொண்டிருப்பார்கள்.


சாதிகெதிராக பேசுவதாக பாசாங்கு செய்யும் உங்களைப்போன்ரவர்களே சாதி சாக்கடை சகதியில் உழன்று எந்த நேரமும் அதைப்பற்றியே சிந்தித்து , பேசி , மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை சாதி அடிப்படையில் சொல்கிறார்களோ என சந்தேகித்து வம்புக்கிழுப்பது என்று சதா சர்வ காலமும் சாதிப்புத்தியை உங்களைப்போன்றவர்க்ளே காண்பித்து வருகிறீர்கள்

வருண் சொன்னது…

***சாதிக்கெதிராக முழங்கும் உங்க வீரத்தை பார்த்தா , எனக்கு கடவுள் இல்லவே இல்லை எனச்சொல்லும் நாத்திகர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள் .***

கடவுள் இருக்காராக்கும்? எங்கே இருக்காரு? உங்க ஆத்துலயா? :)))

நீர் எத்தனை நாத்திகரைப் பார்த்து இருக்கீர், உன் வாழ்நாளில்? சும்மா எவனாவது வீணாப் போனவனைப் பார்த்துட்டு உலகமெல்லாம் இபப்டித்தான்னு எதையாவது உளறக்கூடாது ஆமா!


***சாதிகெதிராக பேசுவதாக பாசாங்கு செய்யும் உங்களைப்போன்ரவர்களே சாதி சாக்கடை சகதியில் உழன்று எந்த நேரமும் அதைப்பற்றியே சிந்தித்து , பேசி , மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை சாதி அடிப்படையில் சொல்கிறார்களோ என சந்தேகித்து வம்புக்கிழுப்பது என்று சதா சர்வ காலமும் சாதிப்புத்தியை உங்களைப்போன்றவர்க்ளே காண்பித்து வருகிறீர்கள் ***

சும்மா எதையாவது ஒளறித்தள்ளும். உனக்கு என்ன தெரியும் என்னைப் பத்தி? சாதியை கட்டி அழ்கிறேன்னு புருடா விட்டுக்கிட்டு திரிகிறீர்??

இகபால் செல்வன் சொன்னதெல்லாம் பொய்னு சொன்ன வெளக்கெண்ணைதானே நீர்? உமக்கு என்னைப் பத்தி என்ன எழவு தெரியும்? வந்துட்டாரு வியாக்யாணம் பேசு இன்னொரு ஈழப் பண்டாரம்!

«மிகவும் பழையது ‹பழையது   207 இல் 1 – 200   புதியவை› புத்தம் புதியவை›

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்