பின்பற்றுபவர்கள்

16 நவம்பர், 2011

அந்நியன் படத்து அம்பிகளும் தீவிரவாதிகளும் !

பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் தீவிரவாதி என்கிற சொல்லுக்கு வடிவம் கொடுத்து வைத்திருப்பது ஊடகங்களும், அரசுகளும் தான், தீவிரவாதிகள் என்பவர் யார் ? தீவட்டிக் கொள்ளைக்காரர்களா ? தீவிராவதிகளுக்கு அரசு தண்டனைக் கொடுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ட்விட்டர் நண்பர் ஒருவர். பொதுவாக பொதுப் புத்தியில் ஊறிப் போனவர்களுக்கு எதையும் விளக்கினாலும் புரியாது, சிந்தாந்தங்கள் பேசும் அளவுக்கு நான் இசங்களைக் கரைத்துக் குடித்து இருக்காவிட்டாலும், கொஞ்சமேனும் பொதுப் புத்தியை தாண்டி சிந்திக்கும் ஆற்றல் உண்டு, அது வலையுலகினால் வாய்க்கப் பெற்றது என்று கூறுவேன். காரணம் வலைப்பதிவுகள் சொந்த அரசியல் தாண்டியும் பலவற்றை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவை என்பதால் பல்வேறு தரப்பினரின் கருத்தைக் கேட்டு நமது எண்ணத்தை சீர் செய்து கொள்ள முடியும் என்பது என் கருத்து. திரும்ப தீவிரவாதிக்கு வருவோம்.

தீவிரவாதம் என்பது பலவகை உண்டு மதத்தீவிரவாதம், மொழித் தீவிரவாதம், இனத் தீவிரவாதம் மற்றும் பிற உரிமை மீட்புக்கான தீவிரவாதம், ஆனாலும் அரசுக்கு எதிரானக் கருத்துக் கொண்டவை, பொது மக்களுக்கு ஊறு விளைக்கத் தக்கவை என்று அறியப்படும் போது இவ் அமைப்புகளுக்கு தீவிரவாத என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது, அதற்கு குறிப்பிட்ட குழுவின் செயல்பாடுகள் காரணமாகக் கூட இருக்கலாம், ஆனாலும் ஒரு நாட்டில் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களில் 99 விழுக்காட்டினர் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகத் தான் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது, எனவே தீவிரவாதிகள் என்பவர்கள் பிற நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து பயமுறுத்துபவர்களோ, வானத்தில் இருந்து குதித்த ஏலியன்களோ இல்லை, தங்களின் குறிக்கோள் என்று எதோ ஒன்றை வைத்துக் கொண்டு அது நிறைவேற வாய்ப்பில்லாத போது அரசுகளைப் பணிய வைக்க பொது மக்களின் வாழ்க்கை சிதரடித்துப் பார்ப்பவர்கள் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளை ஒப்பிட இவர்களால் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பு மிகுதி :)

தீவிரவாதம், சரி தவறு என்று நான் கூற வரவில்லை, இன்னும் சொல்லப் போனால் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யும் உரிமை எவருக்குமே கிடையாது என்ற கொள்கை கொண்டவன். தீவிரவாதி என்பவன் யார் ? சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தண்டனைக் கொடுப்பவர்கள், தங்கள் ஆளுமைக்கு பணிய வைப்பவர்கள், மிரட்டிப் பார்ப்பவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். இவர்கள் தானே ?

அப்படிப் பார்த்தால் இந்தியன் படத்தில் வரும் இந்தியன் தாத்தாவும், அந்நியன் படத்தின் அம்பியும் கூட தீவிரவாதிதான். ஆனாலும் தீவிரவாதி என்றால் தாடி வைத்து பார்க்க நடுக்கம் ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒருவனின் தோற்றத்தை மனதில் நிறுத்தி இருப்பவர்கள் ஒப்புக் கொள்வார்களா ?

ஒரு அரசை அகற்ற அதற்கு எதிராக வாக்களிக்கும் போது பொதுமக்கள் கூட அப்போதைய அரசுக்கு எதிரானவர்கள் தான், என்ன அவர்கள் கையில் ஆயுதம் இருக்காது என்பதால் பொதுமக்கள் திவிரவாதிகளாக அறியப்படுவதில்லை :)

ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்களால் தீவிரவாதி அடையாளப்படுத்தப்பட்ட நாடு கடந்த சுபாஸ் சந்திர போஸ் ஒரு தீவிரவாதி என்பதை நம்ப மறுக்கும் மனம் தீவிரவாதம் பற்றிய பொது புத்திகளை மட்டும் அகற்றிக் கொள்ளாமல் அவர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முழக்கம் இடுவது ஏன் ?

*******

பொதுவாகவே மரண தண்டனைப் பற்றிய எனது தனிப்பட்டக் கருத்து கூடாது என்பதே, இது வரை நாம் கண்ட மரண தண்டனைகளெல்லாம் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேரடி அல்லது மறைமுக தொடர்ப்பில்லாததால் தான் வழங்கப்பட்டு இருக்கிறது, நாம் அன்றாடம் படிக்கிறோமே குடும்ப உறவுக்குள் வெட்டுக் குத்து கொலை பாலியல் வண்புணர்வு, கள்ளக் காதல் அதன் தொடர்பில் கொலை, இவற்றிற்கெல்லாம் பாதிக்கப்பட்ட உறவினர்களால் மரண தண்டனை வழங்கும் படி கேட்கப்பட்டுள்ளதா ? அண்மையில் ஒரு தந்தை தன் மகளை 200 பேர்களுக்கும் மேலானவர்களிடம் பாலியல் தொழில் ஈடுபடுத்தி இருக்கிறார், அந்த பெண் உயிரோடு இருக்கிறாள் மேலும் குற்றத்துக்கு தூண்டியவன் அவளுடைய தந்தை தான் என்பதால் அவனை மன்னித்து விட்டு விட முடியுமா ? அவள் மைனாராக இல்லாமல் இருந்து தன் தந்தை மீது கொடுத்த புகாரை திரும்மப் பெற்றால் அவனுக்கு தண்டனைக் கிடைக்காது, அவ்வாறு நடந்திருந்தால் நீதி நிலை நாட்டப்பட்டதாகக் கூறுவீர்களா ? இது பாலியல் வழக்கு தான், ஆனாலும் குடும்பத்தினுள் நடக்கும் கொலைகள் அதற்கான தண்டனைகள் என்னும் போது வெறும் ஆயுள் தண்டனையுடன் முடிந்து விடுகிறது.

உறவுக்குள் குற்றம் செய்தவர்களை தூக்கில் போட உறவினர்கள் கூட வேண்டுகோள் வைப்பது இல்லை, குற்றம் அதற்குக் கடுமையான தண்டனை எல்லாம் குற்றம் செய்த நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே யான உறவு அல்லது உறவின்மையைப் பொருத்தே அமைகிறது. எந்த ஒரு தூக்குத் தண்டனையும் நேர்மையாக குற்றம் தொடர்ப்பில் மட்டும் தான் கொடுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை, அப்சல் போன்ற தீவிரவாதிகளுக்கான மரண தண்டனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கும் போது நான் மேலே முதல் பத்தியில் இருந்தவற்றைத் தான் கூறினேன். அப்சல் தன் தீவிரவாதக் குழுவினருக்குள் ஒரு 10 பேரைக் கொன்று இருந்தால் அவனுக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டு இருக்குமா ? தீவிரவாதிகளைக் கூட இருந்தே அழித்தான் என்று மெடல் குத்தப்பட்டு இருக்கலாம்.

சட்டத்தைக் கையில் எடுக்கும் அந்நியன்களுக்கும், இந்தியன் தாத்தாக்களுக்கும் தூக்கு மேடைகள் கூடாது என்போர் தீவிரவாதிகளுக்கான தண்டனைகள் மட்டும் ஞாயம் என்பதும் அவை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் என்ன நியாயம் ?

அந்நியனுக்கும் அப்சல்குருவுக்கும் என்ன வேறுபாடு அந்நியன் அரசு அதிகாரிகளை கொலை செய்கிறான், அப்சல்குரு அரசை எதிர்ப்பதாக நினைத்து குண்டு வைக்கிறான். ஒருத்தனுக்கு கைத்தட்டாம் மற்றவனுக்கு கெடா வெட்டாம்.

பொது புத்தியின் ஊறிய மனங்கள் தங்களை நீதிபதிகளாக நினைத்துக்கொள்ளும் போது இவைபற்றியெல்லாம் சிந்திக்க மறுக்கின்றன

3 கருத்துகள்:

Robin சொன்னது…

தீவிரவாதி (extremist) என்பதைவிட பயங்கரவாதி (terrorist) என்ற சொல்தான் பொருத்தமாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// தீவிரவாதி (extremist) என்பதைவிட பயங்கரவாதி (terrorist) என்ற சொல்தான் பொருத்தமாக இருக்கும்.//

அப்படிப் பார்த்தால் சாமிகள் பல ஆயுதங்களோடு பார்க்க பயங்கரமாகத்தான் இருக்கு, அந்த ஆயுதங்கள் தற்காப்புக்கும் அல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா has left a new comment on your post "அந்நியன் படத்து அம்பிகளும் தீவிரவாதிகளும் !":

தீவிரவாதின்னா பொதுவா நீண்ட தாடி வைச்சிருப்பாரு, தலையில் கண்டிப்பா தொப்பியோ தலப்பாவோ இருக்கும் :) //

:) தலப்பா காவி கலர்ல இருக்காதா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்