பின்பற்றுபவர்கள்

14 நவம்பர், 2011

சங்கராமன் கொலையாளிகளுக்கும் தூக்கு தண்டனை ?

சங்கராமன் கொலை நிகழ்வை யாரும் மறந்துவிட முடியாது, தாம் அன்றாடம் கணக்கெழுதும் கோவிலுனுள்ளே நரசிம்ம அவதாரத்தால் கொலை செய்யப்பட்ட ஹிரன்யகசிபு போன்று கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலை நடந்து 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, இதனிடையே தமிழக அரசு விசாரித்தால் தங்களுக்கு ஞாயம் கிடைக்காது என்று கூறி வேறு மாநிலமான பாண்டிச்சேரிக்கு வழக்கு இழுத்தடிப்பட்டுவிட்டது. இடை இடையே நீதிபதிகளிடம் பேரம் பேசியதாக ஆடியோக்கள் வெளியாகி பரப்பரப்பானது தான் மிச்சம், கொலையாளிகளுக்கு தண்டனை இன்னும் கிடைத்தபாடு இல்லை.

மறுபடியும் தலைப்பைப் பாருங்க, அப்படியெல்லாம் நடக்கும் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடலாம் என்று நானும் பார்க்கிறேன், மன நலம் குன்றியவன் ஒருவன் செய்த கொலைக்காக தூக்கில் போடுகிறார்களாம், அதனை எதிர்க்க துப்பு இல்லையா என்று கேட்கிறது தினமலர்

சோத்துக்கு தண்டம் பூமிக்குபாரம் மட்டுமில்லாது பிற உயிருக்கும் ஆபத்து என்று இருப்பவனை தூக்கில் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன ? ஆனா சத்தியமாக சங்கராமன் கொலை வழக்கில் ஒரு வேளை பெரியவாளுக்கு தூக்கு தண்டனைக் கிடைத்தால் கண்டிப்பாகப் போராடுவோம். மரண தண்டனைக் கொடுமையானது, அதுவும் பலரும் கடவுளாக நினைப்பவருக்கு மரண தண்டனை கடவுளுக்கே கொடுக்கும் தண்டனையாகும்.

உயிர் கொலைக்காக இன்னோர் உயிரை கொன்று பழிதீர்ப்பது அரசு செய்யும் கொலையே என்று சொல்வதில் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.

*******

எதற்காக இந்தப்பதிவு ?

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

என்ற பெயரில் ஒரு கேவலமான கட்டுரையை வெளி இட்டிருக்கிறது தினமலர், அதில்

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!

-நமது சிறப்பு நிருபர்-

*******

செந்தமிழர்கள் மீது இந்த வந்தே.......







மாதிர தேசியவியாதிகளுக்கு என்ன கோவமோ ?

2 கருத்துகள்:

Anand சொன்னது…

தினமலத்தின் உண்மை முகம் நமக்கு தெரியாததா என்ன?

suvanappiriyan சொன்னது…

தினமலரை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அங்கு வந்த பல பின்னூட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்