பின்பற்றுபவர்கள்

8 ஜூன், 2011

கனிமொழி தின்ற உப்பு !

மக்களாட்சி அரசியலும், அரசு பதவிகளும் குடும்பச் சொத்தாக மாற்றி கையகப்படுத்தும் முயற்சியின் குறுக்கு வழிகள் எவ்வளவு பேராபத்தானவை என்பதை இந்தியாவிற்கு பாடமாக வைக்கும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் பற்றி இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டுவருகிறது. திராவிட அரசியலில் வெற்றிகரமாக 5 முறை முதல்வர் பதவியையும், பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளை தன் கட்சியினருக்குப் பெற்றுத் தந்த கருணாநிதி இன்று வேதனையில் இருக்கிறார், இந்த சூழலில் அவரது நாக்கும், எழுத்து இலக்கிய நடையின் சுவை மாறாது அந்த வேதனையை 'திகார் சிறையின் கடும் வெப்பம் பறித்து வைக்கும் அன்றைய மலர்களைக் கூட 10 நிமிடத்தில் கறுக்கி விடும்' என்று பேச முடிகிறது.

கருணாநிதி நான்கு முறை முதல்வராக இருந்தும் கூட (இரண்டாம்) துணைவி திருமதி ராசாத்தி அம்மாளும் அவரது மகளும் அரசியல் சார்ந்த பதவிகளுக்கு உரிமை கோர கருணாநிதி அனுமதித்து இருக்கவில்லை அல்லது அவர்களே ஆசைப்படவில்லை. கருணாநிதியின் வயோதிகம் மற்றும் தனக்கன எதிர்காலப் பாதுகாப்பு என்ற வகையில் கருணாநிதியின் அரசியல் (சொத்துக்களின்) வாரிசுகளில் ஒருவராக தன்னையோ தன் மகளையோ ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் காரணமாக ராசாத்தி அம்மாளின் தூண்டுதல் மூலமாகவோ கனிமொழி அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது. 'என்னால் தானே இத்தனையும் ?' என்று கனிமொழியிடம் சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்த போது இராசாத்தி அம்மாள் வேதனையுடன் அழுது கொண்டே கூறினாராம் (ஜூவி) இது கற்பனையென்றாலும் கூட மெய்பிக்கும் வண்ணம் தேர்தலுக்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு முன்பே, கருணாநிதி ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் இராசாத்தி அம்மாளின் கட் அவுட்டுகள் இருந்ததை மறுப்பதற்கில்லை.

கருணாநிதியின் வழிகளில் ஒன்றாக இலக்கியம், கவிதை என்ற ரீதியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இலக்கிய வட்டத்தில் வளர்ந்த கனிமொழி, கருணாநிதியின் அரசியல் வாரிசாக மாற்றிக் கொண்டு வளர்ந்தவிதம் முழுக்க முழுக்க இராசாத்தி அம்மாளின் நச்சரிப்பினால் தான் நடந்திருக்க வேண்டும். தயாளு அம்மாவின் ஆண் வாரிசுகள் (ஸ்டாலின், அழகிரி) அரசியலில் கொடி கட்டிப் பறப்பதைப் பார்க்கும் போது இராசாத்தி அம்மாள் தான் பெற்ற ஒரே ஒரு வாரிசு அவ்வாறு உச்சத்தை அடைய நினைத்தது அவரது எண்ணப்படி தவறு இல்லை, ஆனால் கனிமொழி மீதான அவரது அரசியல் திணிப்பு அவரை நீராராடியாவின் நெருக்கம் அளவிற்கு செல்ல வைத்து, குறுக்கு வழியில்ர ( அன்பு மணி / இராமதாஸ் ஆசைப்படும்) மேலவை உறுப்பினர் ஆக்கி, ஊழலில் முகாந்திரம் இருந்து விசாரணைக்கு சிறையில் அடைக்கும் அளவுக்கு ஆக்கியுள்ளது.

என்ன தான் மாட மாளிகை தங்கத்தில் இழைத்த வீடு என்றாலும் ஒருவர் அதில் தனியாக இருப்பது கொடுமையான ஒன்று தான், அதே நிலையை சற்று எதிராக திகார் சிறை பற்றி நினைத்துப்பாருங்கள், பத்து - பத்து சதுர அடியில் ஒற்றை கழிவரை, இவ்வளவு நாள் குடும்பம், கட்சியினர், மகன் என்று தன்னைச் சுற்றிலும் யாராவது இருந்து கொண்டே இருந்த ஒருவர் சிறையில், எப்போதும் எதிர்கால அரசியல் வளர்ச்சி பற்றி சிந்தனையில் இருந்த ஒருவர் இரவுப் பொழுதை தனிச்சிறையில் கழிப்பதென்பது எவ்வளவு கொடுமையான ஒன்று.

இதை எழுதும் போது எனக்கு கருணாநிதியின் ஈழம் குறித்த செயல்பாடுகள் கூட நினைவுக்கு வரவில்லை, நான் இதை திமுக எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலையில் இருந்து கூட எழுதவில்லை. இன்று கனிமொழிக்கும், கலைஞர் தொலைகாட்சி இயக்குனர் சரத் குமாருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாம். இதன்படி மீண்டும் திகாருக்குச் செல்கிறார்கள், இனி எப்போது கனிமொழி வழக்கில் இருந்து மீண்டுவருவாரா அல்லது தண்டனையின் தொடர்ச்சியாக தொடர்வாரா என்பது கேள்விக்குறி ? கனிமொழியின் இன்றைய நிலைக்கு திருமதி ராசாத்தி அம்மாளின் பேராசையும், அதற்கு தடை போட வக்கிலாமல் இன்றும் இலக்கிய சுவை மாறாது பேசும் கருணாநிதியும் தான் காரணம். கனிமொழியும் தெரிந்தே தவறு செய்திருக்கிறார் காரணம், அரசியல் அதிகாரம் தன் தந்தையின் கட்டுப்பாட்டை மீறிவிடாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம். இதில் பரிதாப்பபட வேண்டிய இருவர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் அவர்களது வாரிசு ஆதித்யா தான், வேறு எவரையும் விட கனிமொழியின் அன்பும் அரவணைப்பம் இவர்கள் இருவருக்குத்தான் தேவைப்படும். இவர்களுக்காக கனிமொழி மீதான அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

தாயார் இராசாத்தி அம்மாள் காய்ச்சியை உப்பை, தந்தை கருணாநிதியிடம் கொடுத்து ஊட்டிவிடச் சொல்ல கனிமொழியும் ஆசை ஆசையாக தின்றுவிட்டார்.

கூடா நட்பு ? அது காங்கிரசா ? அல்லது இராசாத்தி அம்மாளுடன் மத்திய அமைச்சர் பேரத்திற்காக பேசிய நீரா ராடியாவா ? சொன்ன கருணாநிதிக்கே வெளிச்சம்.

9 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இடியாப்ப சிக்கலில் திமுக..
மீள்கிறதா பார்ப்போம்..

ரிஷி சொன்னது…

//இதில் பரிதாப்பபட வேண்டிய இருவர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் அவர்களது வாரிசு ஆதித்யா தான், வேறு எவரையும் விட கனிமொழியின் அன்பும் அரவணைப்பம் இவர்கள் இருவருக்குத்தான் தேவைப்படும். இவர்களுக்காக கனிமொழி மீதான அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்//

வருத்தப்படத் தேவையில்லை. ஒரு நல்ல கணவர் தன் மனைவி செல்லும் போக்கை அவதானித்து அவரை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். "அரசியலும் வேண்டாம் வேறு ஒன்றும் வேண்டாம். காலம் பூராவும் உனைக் காப்பாற்ற நானிருக்கிறேன். உன் இலக்கிய வட்டத்தை மட்டும் மேம்படுத்திக்கொள். நாம் சிறப்பாக வாழ்வோம்" என்றல்லவா வழிகாட்டியிருக்கவேண்டும். அவரும் போகிறதென்று விட்டதால்தானே கனிமொழிக்கு இவ்வளவு பிரச்சினையும்!! அதனால் வருத்தப்படவேண்டியதில்லை. தவறான முடிவெடுப்பது மட்டும் குற்றமல்ல; சரியான நேரத்தில் முடிவே எடுக்காமல் இருப்பதும் குற்றமே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இதில் பரிதாப்பபட வேண்டிய இருவர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் //மற்றும் அவர்களது வாரிசு ஆதித்யா தான், வேறு எவரையும் விட கனிமொழியின் அன்பும் அரவணைப்பம் இவர்கள் இருவருக்குத்தான் தேவைப்படும். இவர்களுக்காக கனிமொழி மீதான அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்//

இவர்கள் என்றல்ல! எந்தச் சிறையில் இருப்போர் உறவுகளுக்கும் இது துன்பமே!; ஆனால் இவர்கள் போல் மேட்டுக்குடியாகி, எடுபிடிக்கே ஆயிரம் பேருடன் வாழும் இவர்களுக்கு இவை துன்பமா? யோசிக்க வேண்டும்.
நீரா ராடியாவின் ஒலிப்பதிவுகள் கனிமொழிக்கு இதில் பங்கில்லை போல் தெரியவில்லை. என்ன?, மத்திய
அரசே அப்பா கையில் எனப் பிள்ளை கொஞ்சம் அசட்டையீனமாக இருந்துவிட்டது.
சிறையில் வசதியோடு இருக்கும் மகள் வாடிவிடுமென கவலைப்படுகிறார்; ஆனால் வன்னி வெளிச் சிறைக்கு
கடிதமெழுதிக்காலம் கழித்தார்.
தெய்வம் நின்றறுக்கிறது.
மாறன் அன் கோ வும் களி தின்ன வேண்டும். இதையெல்லாம் தெரிந்தும் பார்த்துக் கொண்டு -மானாட மயிராட பார்த்ததுக்கு , முன்னாள் முதல்வருக்கும் சிறையில் ஒரு ஒடம் ஒதுக்கப்பட்டால், அந்நாள்
ஒரு பொன்னாள்.
உப்புத் தின்றால் எல்லோரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கனிமொழி தின்றது வெறும் உப்பாக மட்டும் இருந்திருந்தால், அனுதாபமோ, பெண்ணென்று பரிதாபமோ படுவதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கும். பேராசை, எல்லை கடந்த பேராசை, எங்களை எவரும் அசைக்க முடியாது என்ற இறுமாப்பு, இந்த அளவுக்குக் கொண்டுவந்து தள்ளியிருக்கிறது என்ற நிலையில் என்ன சொல்வது?

இப்போதுதானே ஆரம்பமாகி இருக்கிறது! அதற்குள்ளாகவே அவசரப்பட்டால் எப்படி? இன்னும் எத்தனை எத்தனை டிராமா, கதை வசனம், உளியின் ஓசை எல்லாம் பாக்கியிருக்கிறது?

மாறனை உள்ளே வைத்து, கனிமொழியும் ராசாவும் வெளியே வருவார்களா அல்லது, கூண்டோடு திஹாரிலா என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Unknown சொன்னது…

நல்ல அலசல்!

//கூடா நட்பு ? அது காங்கிரசா ? அல்லது இராசாத்தி அம்மாளுடன் மத்திய அமைச்சர் பேரத்திற்காக பேசிய நீரா ராடியாவா ? சொன்ன கருணாநிதிக்கே வெளிச்சம்.//

;-))))

Unknown சொன்னது…

follow up

ஜோதிஜி சொன்னது…

கனிமொழினு பேர் வச்சவங்களுக்கெல்லாம் ஜா-மீன் மட்டுமில்ல எந்த மீனும் கொடுக்கிரதில்லையாம். கடைக்காரங்க சொல்லிட்டாங்க

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு .. சகோ.. வாரிசுப் போட்டியும், முதிர்ச்சியில்லாதோரை உள்ளே விட்டதன் வினையே இன்று திமுகவை ஆட்டிப் போட்டுள்ளது.. ஆனால் சைலண்டாக சேது சமுத்திரத் திட்டத்தில் கொள்ளையடித்த டி.ஆர்.பாலு மட்டும் தப்பியது எவ்வண்ணமோ?

அவரும் சிக்குவாரா? இல்லை அவர் தன் அனைவரையும் சிக்க வைக்கின்றாரா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் சைலண்டாக சேது சமுத்திரத் திட்டத்தில் கொள்ளையடித்த டி.ஆர்.பாலு மட்டும் தப்பியது எவ்வண்ணமோ?//

இக்பால், டி ஆர் பாலுவுக்கும் 'நாளை உனது நாள்' என்று மண்டைக்குள் மணி அடிக்காமல் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்