பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2007

தாய்லாந்தில் விநாயகர் சதுர்த்தி !

விநாயக சதுர்த்தி அன்று தாய்லாந்து பேங்காக்கில் இருக்கும் பேறு பெற்றேன். நானும் எனது நண்பரும் தங்கியிருந்த சிலோம் வில்லேஜ் என்ற நகர பகுதியின் அருகிலேயே மாரியம்மன் ஆலயம் இருந்தது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நல்ல கூட்டம். இந்திய தலைகள் மிக்கவையாக காணப்படவில்லை. தாய்லாந்து இன மக்களும், சீன மக்களுமே மிக்கவர்களாக (அதிகமாக) இருந்தனர். 30 மீட்டர் நீள அகலத்தில் சிரிய கோவில் அதில் நாட்டார் சிறு தெய்வங்கள் காத்தவராயன் உட்பட அனைத்தும் இடம்பிடித்து இருந்தனர். பொன்னிர புத்த சிலைகள் பல்வேறு தோற்றத்தில் மூல சன்னதியில் இடதுபக்கம் இருந்தது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் எடுக்க முடியவில்லை.

தாய்லாந்து அரசு சார்பில் பவுத்த நாடு ? என்பது தெரியவில்லை. ஆனால் 32,000 க்கும் மிக்கவையான பவுத்த கோவில்கள் இருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். தடுக்கி விழுந்தால் எதாவது புத்தர் சிலைமேல் விழும் அளவுக்கும் எங்கும் புத்தர் பல்வேறு கோலங்களில் காட்சி தருகிறார். கூடவே அரசமரத்தடி புத்தரின் வைதீக வடிமான அதே அரசமரத்தடி சிறிய பிள்ளையாரையும் தாய்லாந்து மக்கள் போற்றுகின்றனர்.

விநாயக சதுர்த்தியன்று இந்தியாவில் நடப்பது போன்றே சிறப்பாக (விஷேசமாக) வழிபாடு நடந்தேறியது. ஆராதனை (அர்சனை) தட்டுகளுடன் தாய்லாந்து மக்களும், சீனர்களும் கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்து சென்றனர். இதைப் பார்க்கும் போது இந்து மதம் வெளிநாட்டில் வளர்ந்திருக்கிறது என்பது போல் தோன்றினாலும் பவுத்தம் இந்துதத்துவங்களுக்கு உரிய இடம் தந்து அரவணைத்து வளர்வது போன்று தான் எனக்கு தெரிந்தது.

பூனூல் அணிந்த வேதியர்களின் ( அவர்கள் பிரமணர்களா ? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை... ஆனால் தமிழ் பேசுபவர்கள் என்று தெரிந்தது) தேவபாசை மந்திரத்துடன் மேளதாளம் விண்ணைப் பிளந்தது. குறைந்த அளவு தமிழர்கள் அங்கு இருப்பதால் தமிழிலும் அர்சனை பதாகைகளுக்கு தேவை இல்லை என்ற நிலை இருந்தது. கோவில் ஆராதனைக்காக தாய்லாந்து மக்களுக்கு தமிழென்றாலும் வே(ற்)று மொழி என்றாலும் ஒன்றுதான். கோவிலில் எல்லா விளங்கங்களும் தாய் மொழியிலும் (பாஷா தாய்) சில இடங்களில் ஆங்கிலத்துடனும் இருந்தது.

தாய்லாந்து மக்கள் மங்கோலிய இன நிற அடையாளத்தைக் கொண்டவர்கள் (மங்கோலியர் அல்ல) என்றாலும் 'தாய்' மொழியின் எழுத்துருவடிவம் பிரம்மி எழுத்துருவகையைச் சார்ந்ததும்... அதில் சில எழுத்துக்கள் பாலி மற்றும் வடமொழி சொற்களை எழுதுவதற்கென்றே ( தமிழ் ஹ், ஜ, ஷ இன்னும் பிற போன்று ) பயன்ப்படுத்தப்படுவதாக குறிப்புக்கள் இருக்கிறது.

தாய்லாந்தின் சூரியன் கோவில் (WAT ARUN) பற்றிய சுவையான தகவல்களையும், இந்து மத இதிகாசமான இராமயணம் சில ஆசிய நாடுகளில் போற்றப்படுவதற்கான சில காராணங்களையும் வேறு ஒரு இடுகையில் பகிர்வேன்.

1 கருத்து:

சிவபாலன் சொன்னது…

ஜிகே,

நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.

பகிர்வுக்கு நன்றி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்