பின்பற்றுபவர்கள்

10 ஜூலை, 2007

பயங்கரவாதங்களினால் வளரும் புதிய தொழில் நுட்பங்கள் !

மனித நாகரீகம் வளர்ந்து அறிவு வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதிலும் குறுக்கு வழியில் பயணித்தால் என்ன ? சிந்தித்து அப்படி சிலர் செல்லத் தொடங்கி தீங்கு இழைக்கத் ஆரம்பித்ததும், அபகரித்தல், திருடுதல் என்று பிறர் பொருள்களை கவர்ந்து செல்ல ஆரம்பித்தான். மனிதனின் முதல் காப்புரிமை ஆயுதமாக அவனே செய்து கொண்டதுதான் கதவு, அதற்கு பூட்டு அதற்கான சாவியும்.

பிறர் பொருள்களை அபகரித்தல் என்பது தனிமனித செயலில் தொடங்கி, பின்னர் தன் சமூகத்திற்காக பிற சமூகங்களை அழிக்கலாம் என்று துணிந்த போது வேட்டையாடி வயிற்றுப்பாட்டுக்கு செய்த கருவிகளெல்லாம் போராயுதங்களாக புதிய வடிவம் எடுத்தது. அதன் பிறகு சமூகம் வளர்ந்து மன்னன் மக்கள் என்று ஒரு நாட்டுக்குள் தங்களை அடக்கிக் கொண்டு அரசுகளாக இருந்தவர்கள், பேரரசுகள், சாம்ராஜ்யம் என்ற வளர்ந்த போது போர் கருவிகள் (ஆயுதம்) உற்பத்தி என்ற புதிய தொழில்கள் பன்னெடும் காலத்திற்கு முன்பே உருவாகிவிட்டது. ஆயுதங்கள் அழிவை தருபவை என்றாலும் அதைச் செய்பவர்களுக்கு சோறுபோடும் தொழிலாகவும் அது ஆகியது.

அனுஆயுத கண்டுபிடிப்பிற்கு முன்பாகவே ஐரோப்பிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் முக்கிய தொழிலாக இன்றைக்கும் இருப்பது ஆயுத உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதிகளே. இவையெல்லாம் அமைதியை நிலைநாட்டவோ, மனிதனுக்கு நன்மை அளிப்பவைகளோ இல்லை என்று நேரிடியாக அறியப்பட்டாலும் ஒரு நாட்டின் குறிப்பாக ஆயுத உற்பத்தி அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

இன்றைய கணனி உலகில் எல்லாமே கனனி மயமாகிவிட்டலும், இணைய வைரஸ்கள், ஹேக்கிங் என்னும் எதிர் தொழில் நுட்பம் அவைகளை அழிப்பதற்கு ஏற்பட்டு திணர அடிக்கிறது. இது போன்ற கனனி வைரஸ்களை, மற்றும் ஹேக்கிங் ஆகியவற்றை ப்ரிலான்சர் மூலம் செய்து பெரிய நிறுவனங்கள் தம்மிடம்
போட்டியிடும் நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்துகின்றன விற்பனையை முடக்குதல், உற்பத்தி ரகசியங்களை அறிதல் போன்றவற்றை செய்கின்றன. இவற்றில் ஈடுபடும் பொறியாளர்கள் நல்ல வருமானமும் பார்க்கின்றனர்.

911 - ஈவிள் நம்பர் என்ற அறியப்பட்ட பிறகு கணனிகளின் தகவல் (DATA) பாதுக்கப்பட வேண்டிய அவசியத்தை உலக அளவில் பல நிறுவனங்களுm உணர்ந்தன. அதைத்தொடர்ந்து டேட்டா சென்டர் என்னும் புதிய நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல்வேறு தொழில் நுட்ப செயல்பாடுகளுடன் முளைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் அரசாங்கம் பெரிய பொது நிறுவனங்கள் மற்றும் வங்கி ஆகியவற்றின் டேட்டாக்களை பாதுக்காக்கும் ஒரு சேவையை செய்து வருகின்றன. இதன் மூலம் நில அதிர்வு (பூகம்பம்), கடற்கோள் (சுனாமி), தீவிரவாதிகளின் தாக்குதல் போன்றவற்றால் நிறுவன கட்டிடமே தகர்ந்தாலும் அவர்களுடைய டேட்டா பேஸ் பாதுக்காப்பா வேறு ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்து, அரிய தகவல்களை அழியாமல் காப்பதற்கு துணைபுரிகிறது. அதற்காக மிரர் சைட் எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட டேட்ட சென்டர்களை வேறு வேறு நாடுகளில் வைத்து தீ தடுப்பு போன்று மிகவும் பாதுகாப்புகளில் கவனம் செலுத்தி பல நிறுவனங்கள் மில்லியன் டாலர்கள் லாபத்தில் இயங்கி வருகின்றனர்.

மனிதன் தன் பயங்கர வாதசெயல்களினால் அவனே பாதிக்கப்படும் போது புதிய தொழில் நுட்பங்கள் வளருவது மட்டுமின்றி வேலை வாய்புகளையும் அது அதிகரிக்க வைத்துவிடுகிறது.

நடப்பதெல்லாம் நன்மைக்கே ! நாம் நேரிடையாக பாதிக்கப்படாதவரை ! :))

4 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

Live Free or Die Hard,, விமர்சனம் நல்லா இருந்துச்சுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

இளா,

DIE Hard 4 பார்த்தாச்சு... ஆனால் அதற்கு முன்பே இந்த இடுகை எழுதி கிடப்பில் போட்டு நேற்று முடித்துவைத்தேன். இதை எழுதும் போது DIE Hard 4 ஞாபகம் வரவே இல்லை.

Unknown சொன்னது…

:)
:(
technology sucks

Unknown சொன்னது…

//நடப்பதெல்லாம் நன்மைக்கே !//
எல்லாம் அவன் போட்ட கோடுன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.......!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்