பின்பற்றுபவர்கள்

20 ஜூலை, 2006

துன்பம் வரும் நேரத்திலே... :) ங்க...

அப்படி என்ன துன்பம் வந்துவிட்டது ? அந்நியன் இருக்கிறார், பிகே ப்ளாக் இருக்கிறது, நமக்கு தெரியாத குறுக்கு வழியா ? அல்லது கிறுக்கு வழியா ? ... ஆயிரம் கைகள் மறைத்தாலும் வலைப்பூக்கள் மலர்வதையும் மணம்வீசுவதையும் எவர் தடுக்கமுடியும். டிஸ்கி போதும்னு நினைக்கிறேன். எழுதிய விசயம் முகப்பில் வருவதைத் தவிர்க்கத் தான் நீட்டி முழங்குவது.


மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க
கணவன் : ஓ... அதுதான் இங்க இருந்த நீயூஸ் பேப்பரை காணுமா !

ஒருவர்: நீங்க சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வரவில்லையே ?
மற்றொருவர்: நான் சொன்னது டியூப்லைட் ஜோக் லேட்டா தான் சிரிப்பு வரும்.

நண்பர்1 : உங்களை 'டியூப் லைட்டு' சொல்லியும், சிரிக்கிறீர்களே !
நண்பர்2 : இதை கண்டுபிடிக்க உங்களுக்கு இவ்வளவு நாள் ஆனதே என்று நினைத்தேன் அதுதான் சிரித்தேன்

நர்ஸ் : டாக்டர் நீங்க கொடுத்த தூக்க மாத்திரையை சாப்பிட்டும் அந்த பேசன்ட் எழுந்து நடந்து போரார் பாருங்க
டாக்டர் : சீக்கரம் வேகமாக போய் அவரை புடிங்க, அவருக்கு இன்னும் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு மருந்து கொடுக்கவில்லை.

பக்கத்து வீட்டுக்காரார் 1: அவன் ரொம்ப கெட்டப் பையன் சார்
பக்கத்து வீட்டுக்காரார் 2: என்ன பொண்ணுங்க கூட சுத்துரானா, இதெல்லாம் இந்த வயசில் சகஜம் விடுங்க
பக்கத்து வீட்டுக்காரார் 1 : அதுதான் இல்லை, சாமியார் ஆகப்போறானாம்

20 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

துன்பமெல்லாம் இன்னும் ரெண்டுநாள் தான் போலிருக்கு. தடை விலகப்போகிறது தெரியுமில்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Venkataramani said...
துன்பமெல்லாம் இன்னும் ரெண்டுநாள் தான் போலிருக்கு. தடை விலகப்போகிறது தெரியுமில்லையா?
//
வெங்கடரமனி... தெரிகிறது... எப்படியோ நம் காட்டில் பின்னூட்ட மழை பொழிந்தால் சரிதான் :))

பெயரில்லா சொன்னது…

///
மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க
கணவன் : ஓ... அதுதான் இங்க இருந்த நீயூஸ் பேப்பரை காணுமா !
///

தல நீங்க இன்னும் பேச்சு இலர் ஆகலைன்னு நினைக்கிறேன். அதுதான் இது மாதிரி ஜோக்ஸ் எல்லாம் போடுறீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
தல நீங்க இன்னும் பேச்சு இலர் ஆகலைன்னு நினைக்கிறேன். அதுதான் இது மாதிரி ஜோக்ஸ் எல்லாம் போடுறீங்க. //

'பேச்சு இலர்' ஆனாவங்க இப்படித்தான் வெளியில் புலம்பி மனச தேத்திக்கனும் :)

பெயரில்லா சொன்னது…

கண்ணன்,

துன்பம் வரும் நேரத்துல சிரிங்கன்னு போட்டுட்டு நல்லா கடுப்படிக்கற ஜோக்ஸா இருக்கு..

கைப்புள்ளக்கிட்ட சொல்லி கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கிறா மாதிரி போடச் சொல்லுங்க:))

கோவி.கண்ணன் சொன்னது…

//
tbr.joseph said...
நல்லா கடுப்படிக்கற ஜோக்ஸா இருக்கு..//


இதுக்கு 'கடி' என்று மென்மையாக சொல்லியிருக்கலாம் :)))

பெயரில்லா சொன்னது…

:)) - ஹி ஹி ( சிரிப்பான் மட்டும் போட்டா நல்லா இருக்காதுன்னு - ஒரு ஹி ஹி வேற போட்டுட்டேன்)

பெயரில்லா சொன்னது…

மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க

கணவன் : நான் கழுதைதான் கத்துகிறதுனு நீனைத்தேன்... ::))

பெயரில்லா சொன்னது…

சிரிப்பான்களை அள்ளித் தெளிக்கலாம் போல் இருக்கிறது. :))))))

பெயரில்லா சொன்னது…

:))))

//எழுதிய விசயம் முகப்பில் வருவதைத் தவிர்க்கத் தான் நீட்டி முழங்குவது.
//
இப்படி தான் கவிதை எழுதறேன்னு நேற்று ஒரு பதிவைப் போட்டால் கடைசி பத்தி தவிர மொத்தமும் முகப்பில் வந்துடுச்சு :(

பெயரில்லா சொன்னது…

அண்ணாத்த, நான் கொஞ்சம் டியூப் லைட், பதிவை படிச்சுட்டேன். அப்பறமா வந்து சிரிப்பான போட்டுட்டு போறேன்.

பெயரில்லா சொன்னது…

//சாமியார் ஆகப்போறானாம் //

கலக்கிடீங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னுது மின்னல் said...
கணவன் : நான் கழுதைதான் கத்துகிறதுனு நீனைத்தேன்... ::)) //
நேரிடையாக கழுதை என்று சொல்வது பழைய ஜோக் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
சிரிப்பான்களை அள்ளித் தெளிக்கலாம் போல் இருக்கிறது. :))))))
//
ஜோசப் ஐயா வந்து கடின்னு சொல்லிட்டார் என்று இடிந்து போய் உட்கார்ந்திருந்தேன்.. உங்கள் மறுமொழி மருந்து போட்டுவிட்டது :))

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said... இப்படி தான் கவிதை எழுதறேன்னு நேற்று ஒரு பதிவைப் போட்டால் கடைசி பத்தி தவிர மொத்தமும் முகப்பில் வந்துடுச்சு :( //
ஆமாங்க கப்பி... 3 வரி கவிதை எழுதினால் யாரும் பதிவில் சென்றே பார்க்கத் தேவையில்லை முகப்பில் தெரிந்துவிடும் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
//சாமியார் ஆகப்போறானாம் //

கலக்கிடீங்க...
//
இது ஏற்கனவே கேள்விப்பட்ட ஜோக் மாதிரி தெரிகிறது. :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
அண்ணாத்த, நான் கொஞ்சம் டியூப் லைட், பதிவை படிச்சுட்டேன். அப்பறமா வந்து சிரிப்பான போட்டுட்டு போறேன்.
//
மறந்துடாம வந்து போட்டுவிட்டு போங்கள் :))) இல்லையென்றால் உங்கள் பதிவில் வந்து திட்டுவேன் :))

பெயரில்லா சொன்னது…

:)))))
:)))))
:)))))
:)))))
:)))))
:)))))
என்னடா அஞ்சு நகைச்சுவை துணுக்குக்கு இவன் ஆறு சிரிப்பான் போட்டு இருக்கானே பாக்குறீங்களா. அது நீங்க என்ன திட்டுவேன் என்று சொன்னதுக்கு
;)

பெயரில்லா சொன்னது…

//ஜோசப் ஐயா வந்து கடின்னு சொல்லிட்டார் என்று இடிந்து போய் உட்கார்ந்திருந்தேன்.//

கடி தான். ஆனா சிரிப்பும் வந்தது. :-)

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...

கடி தான். ஆனா சிரிப்பும் வந்தது. :-)
//
குமரன் உங்கள் பதிவில் ஒரு மெய்நிகர் புதிர் எழுதினேன்.. என்னவாயிற்று... கேட்டுக்கொண்டால் நானே புதிரை விடுவிக்கிறேன் :)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்