பின்பற்றுபவர்கள்

12 நவம்பர், 2012

சாதிவெறி கிராமத்தில் மட்டும் தானா ?


தலித் ஆடவர் வன்னிய பெண்ணை காதலித்து மணந்து கொண்டார் என்பதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ள அவரது உறவினர்கள் கிளர்ந்தெழுந்த பெரும் கலவரத்தில் தலித் உடமைகள், வீடுகள் எரிக்கப்பட்டு இருக்கிறது. சாதியத்தின், வருணாசிரமத்தின் கொடுமைகளின் கோரமுகங்கள் அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகளில் வழியாக தற்போதும் வெளிப்பட்டு இருக்கிறது, இதைத் தவிர்த்து இதற்கு வேறென்ன முக்கியத்துவம் ?

இருக்கிறது. ஆம் தமிழகத்தில் கலப்பு திருமணங்கள் நடக்காமல் இல்லை, ஆனால் அவை அனைத்தும் தலித்துகளுடன் தொடர்பில்லாமல் பல்வேறு சாதியத் திருமணங்கள் நடந்தேறிவிடுகின்றன, நாடார் மனமகனை முதலியார் பெண் மணந்துவிட்டாள், தேவர் சாதி ஆண் செட்டியார் பெண்ணை மணந்துவிட்டான் என்பதெல்லாம் சாதிப் பிரச்சனையாகுவதோ, கலவரங்களை உருவாக்குவதோ இல்லை, ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்த பிற சாதிய கலப்பு மணங்கள் ஓரளவு சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, எங்கள் உறவினர்களில் பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களுடன் திருமணங்கள் நடந்தேறியுள்ளன, அவையெல்லாம் எந்த ஒரு காலத்திலும் பிரச்சனையாகிப் போனதுமில்லை, இவற்றில் காதல் திருமணங்களும், பார்த்து வைத்த திருமணங்களும் கூட உண்டு, ஆனால் தலித் ஆடவர் ஒருவருடன் ஓடிய உறவுக்காரப் பெண்ணையும் அவரது தாயாரையும் இதுவரை எங்கள் உறவினர்கள் சேர்த்துக் கொண்டதே இல்லை, நான் தலித் சமூகம் சார்ந்தவன் இல்லை என்று வெளிச்சம் போட இதை நான் எழுதவில்லை, இதை எழுதுவதையே கூச்சமாகக் கருதுகிறேன்,  ஒரு நாடாரையும், ஒரு பத்தரையும், ஒரு நாயுடுவையும், தஞ்சாவூர் கள்ளரையும் , ஒரு பார்பனரையும் திருமண சம்பந்ததில் வைத்திருக்கும் எங்கள் உறவினர்கள் தலித்துகளுடன் ஏற்பட்ட திருமண பந்தத்தை மட்டும் அவமானகரமாக நினைக்கிறார்கள்.

காலம் காலமாக தாழ்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் இறந்த விலங்குளை உண்ணுபவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம், அவர்களை சம்பந்தியாக்கிப் பார்பதில் உடன்படுவதில்லை என்பது தவிர்த்து வேற எந்த காரணமும் தெரியவில்லை, ஒரு காலத்தில் தீண்டத்தகாத சமூகமாக கருதப்பட்டு தோள் சீலை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் சமூகங்கள் அந்த நிலையை மிகுந்த ஒற்றுமையுடன், பொருளியல் ரீதியாக முன்னேற அவர்கள் மீதான சாதிய தாழ்வு நிலையை அவர்கள் என்றோ கடந்து வந்துவிட்டார்கள், ஆனால் தலித்துகள் ஏன் அவ்வாறு வளரவில்லை ? சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் நிலை மாறவில்லையா ? கண்டிப்பாக மாறி இருக்கிறது, ஆனால் அவர்களுடைய சாதிப்பிரிவு நான்காம் பிரிவில் வருவதே காரணம். தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிற சாதியினர் குடியானவர்கள், 'சாதி தமிழர்கள்' என்கிற அடைமொழியை தனக்கு தாமே கொடுத்துக் கொண்டு வைசிய, சத்திரிய பிரிவை கிட்டதட்ட பிராமணப் பிரிவுக்கு இணையாக உயர்த்திக் கொண்டார்கள், இதில் பார்பனர்கள் பங்கு என்று எதுவும் கிடையாது, தனக்கு கீழே ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இருந்தால் தன் சாதி தாழ்ந்ததல்ல என்கிற எண்ணத்தில் அனைத்து சாதிகளுமே தலித்துகளின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டதும் இல்லை, அவர்களை அரவணைத்துக் கொண்டதுமில்லை.

எட்டணா காசைக் கீழே வைத்தால் கும்பிடு போட்டு குணிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போவான், இன்னிக்கு பேண்டு போட்டுவந்து சரிக்கு சமமாக நின்னு கூலிய தெனாவெட்டாகக் கேட்கிறான், வெட்டியானுக்கு திமிரைப் பாருங்க என்றெல்லாம் தன் தவறை உணராது கூழைக் கும்பிடு போடாத தலித்துகளை 'திமிர்' தனம் என்று சொல்லும் சுடுகாட்டுக் காட்சிகளை நேரில் பார்த்தே இருக்கிறேன்,  எங்கள் சாதி சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை, பட்டினி சாவை எந்த சாதியாவது தடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, டாஸ்மாக் எச்சில் க்ளாசில் சாராயம் குடிக்கும் பொழுது அதற்கு முன் அதில் குடித்தவன் எந்தசாதி (தற்பொழுது பேப்பர் டம்ப்ளர் வைத்திருக்கிறார்கள்), வேற ? எந்த சாதி பாலியல் தொழிலாளியிடம் செல்லுகிறோம் என்றேல்லாம் அவ்வாறு செல்பவர்கள் ஆராய்ச்சி நடத்துவதும் இல்லை, ஆனால் திருமணம் நீண்டகால பந்தம் என்று நம்புவதால் அதற்கு மட்டும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் சாதி என்றால் முகம் சுளிக்கிறார்கள், 

நாங்கள் சாதிக் கொடுமைகள் எதையும் செய்வதில்லை என்று பார்ப்பனர்கள் மார் தட்டுகிறார்கள், ஆனால் /பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை; என்னும் அவர்களது அறிவிப்பு பலகைகள் அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதாதைக் காட்டுகிறது, பார்பனர்கள் சாதிக் கொடுமை செய்யாததற்கு அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் இதுபோன்ற குழுசார்ந்த கொடுமைகள் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு ஆள் பலம் போதாது என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை, வெளிமாநிலங்களில் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தே வருவாதால் தமிழ் நாட்டு பார்பனர்கள்  திருந்திவிட்டார்கள் என்பது மாற்றம் என்றாலும் அந்த மாற்றத்திற்கு காரணம் எண்ணிக்கை தான், அதையும் ஒப்புக் கொள்ள மனமில்லை என்றால் பெரியாரைத்தான் காரணாமாகச் சொல்ல முடியும், பெரியாரின் பெண் விடுதலையால் முழுக்க முழுக்க பயன்பெற்றவர்கள் பார்பனப் பெண்களே, மொட்டை அடித்துக் கொண்டு காவி புடவையுடன் தென்படும் பார்பனப் பெண்கள் கனிசமாக குறைந்து மறைந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுதியாகிவிட்டார்கள், இது பிறமாநிலங்களை ஒப்பு நோக்க தமிழகத்தில் மிக அதிகம்,

சென்னையிலோ, திருச்சி போன்ற பெருநகரங்களிலோ கலப்பு திருமணங்கள் பெரிய அளவில் கலவரமாக வெடிப்பதில்லை, ஏனெனில் சாதிய பெரும்பான்மையுடன் ஒரு இடத்தில் வசிக்கும் வாய்ப்பு நகரங்களில் குறைவு, கிராமங்களில் சாதி வாரியாக சிறுபான்மை பெரும்பான்மை என்று வசிப்பதால் அங்கு இவை அன்றாடப் பிரச்சனையாகிப் போகிறது. மற்றபடி நகரத்தில் வசிப்பவர்கள் நாகரீகம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.

பிரசன்னவோ அல்லது சினேகாவோ அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் அவர்களுடைய சாதி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருசாதி வழக்கப்படி திருமணம் நடந்திருக்குமா ?

இன்றைய தேதிக்கு பார்பனர்கள் மட்டுமே உயர் சாதியினர் இல்லை, தலித்துகள் அல்லாத அனைத்து சாதிகளுமே தங்களை உயர்சாதியாக நினைத்துக் கொண்டும், அவர்களுக்கு நேர் எதிர் தாழ்ந்த சாதியாக ஒட்டுமொத்த தலித்பிரிவுகளையும் வைத்துள்ளனர், என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும். 

தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ளும் வரையில் தலித் விடுதலை சாத்தியமற்றது, அதைப் பெரும்பான்மை பிறசாதிகள் கொடுத்துவிடவும் மாட்டார்கள்.

*******

அனைவருக்கும் தோழர் நரகாசூரன் நினைவு நன்னாள் வாழ்த்துகள்.

117 கருத்துகள்:

அ. வேல்முருகன் சொன்னது…

இங்கே சாதிய அமைப்புகள் அதை கட்டிக்காக்க ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலித்திய கட்சிகளுக்கு பிழைப்புவாத கட்சியாக மாறிவிட்டது.

தொழில் வளர்ச்சியடைந்த நகரங்கள் தவிர்த்து அனைத்து ஊர்களிலும் சாதிய அடுக்குகள் கட்டி காக்கப்பட்டு வருகின்றன.

அசுர நினைவு நாளை போற்றுவோம்

வவ்வால் சொன்னது…

கோவி,

கொஞ்ச நாளா பதிவே காணோம்னு பார்த்தேன் , நச்சுன்னு ஒரு பதிவோட வந்துட்டிங்க.

கசப்பான உண்மையை உள்ளபடியே சொல்லிட்டிங்க.

பார்ப்பன எதிர்ப்பை காட்டும் தி.க எல்லாம் இதனை பற்றி காட்டுவதே இல்லை.

காடுவெட்டி குரு கலப்பு திருமணம் செய்தால் வெட்டிக்கொல்லுங்கள் என மேடை போட்டு பேசுகிறார், சும்மா இணையத்தில் கருத்து சொல்கிறவங்களை எல்லாம் கைது செய்கிறார்கள் சமூகத்தில் வன்முறையை தூண்டி விடும் ஜாதி அரசியல் வெறியர்களை ஒன்னும் செய்ய மாட்டாங்க.

இதே போன்ற ஜாதிய கருத்தினை தான் சுந்தரப்பாண்டியன் திரைபடமும் சொல்லியது ,மக்கள் அதனை வெற்றிப்படமாக்குகிறார்கள் , இதிலிருந்தே மக்களின் மனக்கூறு விளங்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் கூறியது...
கோவி,

கொஞ்ச நாளா பதிவே காணோம்னு பார்த்தேன் , நச்சுன்னு ஒரு பதிவோட வந்துட்டிங்க.//

அண்மைய நிகழ்வுகளில் விமர்சனம் செய்யும் அளவுக்கு எதுவும் நடைபெறவில்லை, 'பிராமணாள் காபே' பற்றிய சார்வாகன் பதிவைப் படித்தேன், எனக்கும் எழுதத் தோன்றியது.

தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. :(

ஜோதிஜி சொன்னது…

எங்கள் சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை, பட்டினி சாவை எந்த சாதியாவது தடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, டாஸ்மாக் எச்சில் க்ளாசில் சாராயம் குடிக்கும் பொழுது அதற்கு முன் அதில் குடித்தவன் எந்தசாதி (தற்பொழுது பேப்பர் டம்ப்ளர் வைத்திருக்கிறார்கள்), வேற ? எந்த சாதி பாலியல் தொழிலாளிடம் செல்லுகிறோம் என்றேல்லாம் அவ்வாறு செல்பவர்கள் ஆராய்ச்சி நடத்துவதும் இல்லை,

இந்த இரவு நேர வாசிப்பில் கிடைத்த பொக்கிஷ வரிகள்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
அருமையான் பதிவு.நான் எழுத நினைத்த நைத்தும் உங்கள் பதிவில் இருக்கிறது.
தலித் மக்களை குடும்ப உறவு தவிர பிற விடயங்களில் சம் உரிமை கொடுப்பேன் என்பதுதான் பல் ஆதிக்க சாதி புரட்சியாளர்களின் கருத்து. இதில் பல் நாத்திகர் ஆத்திகரும் அடங்கி விடுவர்.

ஆயினும் தலித் மக்களிலும் கல்வி,பதவி கொண்ட ஒரு குழு உருவாகி விட்டதால் ,காதல் திருமனங்கள் நடப்பது அதிகரிக்கும்.பணம் என்னும் போது பிணமும் வாய்திறக்கும். பல தலித் உயர்பதவி வகிப்போருக்கும் பெண் கொடுப்பார்கள். அண்ணல் அம்பேத்காரின் மனைவி மாற்று சாதியை சேர்ந்தவரே.

யார் தடுத்தாலும் கலப்பு திருமணங்கள் நட்ந்தே தீரும்!!!

இன்னும் சரியாக‌ சொன்னீர்கள் மதுக்கடை,விபச்சார விடுதியில் சாதி வராது.
பிச்சைக்காரர்களிடமும் சாதிவராது.

காதலில் சாதி வரும்,கள்ளக் காதலில் வராது!!!

இதோ ப்ளேபாய் விடுதி இந்தியாவில் வருகிறது.இன்னும் பல கிளுகிளு விடயங்களும் சந்தைபடுத்தப்ப‌டும் போது பணம் வேண்டு அனைவரும் சாதி வித்தியாசம் இன்றி இறங்குவார்.

பல் சாதியினரும் மேல் நாடுகளில் குடியுரிமை பெற அநாட்டவரை திருமணம் செய்து சிறிது காலம் கழித்து இரத்து செய்யும் கூத்து நடந்து இருக்கிறது.அதில் சாதி மதம் இனம் வரவே வராது!!

******************
வழக்கம் போல் ஆளும் கட்சிகள் பாரப்ட்சமாக் நடப்ப்து கண்டிக்க தக்கது.காவல்துறையும் கண்ணை மூடிக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.கல்வரத்தில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட வேண்டும்.ஆதிக்க சாதிக் கட்சிகளை புறக்கணிப்பதே நடக்க வேண்டிய செயல் ஆகும்.

நன்றி

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

//தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. :( //

அடடா....கண்ணுக்கு முன்னால் அழகிய மார்க்கம் ஒன்று அரவணைக்க காத்திருக்க தேடி அலைவானேன்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி....

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே....

பாப்பாந்தெரு, ஞாயிக்கர் தெரு, செக்கடித்தெரு, கொல்லன் தெரு, நாப்பாணன் தெரு இவை எல்லாம் எங்கள் கிராமத்தின் தெருக்களின் பெயர்கள். ஆனால் வசிப்பது 99 சதவீதம் இஸ்லாமியர்கள். அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். எங்கள் கிராமத்தின் பழைய வீடுகள் இன்றும் மாடங்கள் வைத்து இந்து முறைப்படி கட்டப்பட்டிருக்கும். எனது உறவினர்களில் தூய வெள்ளை இந்திய கலரான மாநிறம் இரண்டும் கலந்து இருக்கும்.

தாய் வழி சொந்தங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தவர் தந்தை வழி சொந்தங்கள் அனைத்தும் மாநிறத்தவர். இன்று போய் 10000 மக்களுக்கு மேல் உள்ள கிராமத்தில் எவரிடமாவது சென்று உங்களின் பழைய சாதி என்ன என்று கேட்டுப் பாருங்கள். எவருக்குமே தெரியாது. அந்த அளவு மாற்றியுள்ளது இஸ்லாம்.

புதிதாக மாறும் தலித்துகளுக்கு ஒரு தலைமுறை சற்று சிரமமாக இருக்கும். ஒரு தலைமுறை தாண்டி விட்டால் அவர்கள் இஸ்லாமிய குழுமத்துக்குள் ஐக்கியமாகி விடுவார்கள். அதன் பிறகு 'பாய்' என்ற அடை மொழி தானாகவே சேர்ந்து விடும். இழிவாக அவர்களை அழைக்க எவருக்கும் தைரியமும் இருக்காது.பார்ப்பனியம் விதைத்த இந்த சாதியை மற்ற மேல் மட்ட சாதிகளும் நன்றாக அறுவடை செய்கின்றனர். பிரச்னை இல்லாத வன்முறை இல்லாத ஒரே வழி நீங்கள் சொல்வது போல் தலித்கள் மதம் மாறுவது ஒன்றுதான் நிரந்தர தீர்வாகும். அதைத்தான் பெரியாரும் சொல்லி விட்டு போனார்.

கசப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை. மருந்து கசந்தாலும் உடல் உபாதைக்கு நிவாரணியாவதில்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//காதலில் சாதி வரும்,கள்ளக் காதலில் வராது!!!//

இது 1000ல் ஒருவார்த்தை, கள்ளக் காதலர்கள் ஒருவருக்கொருவர் சாதிப் பார்ப்பதில்லை

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அடடா....கண்ணுக்கு முன்னால் அழகிய மார்க்கம் ஒன்று அரவணைக்க காத்திருக்க தேடி அலைவானேன்.//

இமாம் அலி குண்டுகட்டிக் கொண்டு, பின்னர் எண்கவுண்டரால் சுட்டுக் கொள்ளப்பட்டது நினைவுக்கு வருது பாஸ்.

மூளைச் சலவை செய்ய உங்க மதத்தில் நிறைய பேர் உள்ளனர், என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்,பாகியில் அன்றாடம் நடக்கும் தற்கொலை வெடிகுண்டுகள், ஆனால் அது தானே உண்மை.

வழக்கம் போல் மார்க்கம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று கொல்லத்தெரு ஊசி வைக்க வேண்டாம், தவிர இது உங்களுடன் லாவனிப் பாட எழுதப்பட்ட பதிவும் இல்லை, மன்னிக்கவும்.

உங்கள் மதத்தை நான் எந்த விதத்திலும் பிறமதங்களைவிட உயர்வாக நினைக்கவும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//கசப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை. மருந்து கசந்தாலும் உடல் உபாதைக்கு நிவாரணியாவதில்லையா?//

சயனைடு கூட எல்லாவித வலிகளுக்கும் நிரந்தர தீர்வு என்கிறார்கள்,


:)

புதுகை.அப்துல்லா சொன்னது…

// எங்கள் சாதி சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை,

//

WELL SAID.

suvanappiriyan சொன்னது…

//சயனைடு கூட எல்லாவித வலிகளுக்கும் நிரந்தர தீர்வு என்கிறார்கள்,//

சமூகத்தில் அந்தஸ்தோடு வாழ நினைப்பவன் மருந்து சாப்பிட்டு நல்ல நிலைக்கு வர முயங்சிப்பான். எதிர்ப்புகளை சந்திக்க திராணியில்லாத கோழைதான் சயனைடை தேடுவான். நான் சிறப்பாக அவர்கள் வாழ்வதற்கு வழி சொல்கிறேன்.

லட்சக் கணக்கில் மதம் மாறியதில் ஒரு இமாம் அலி தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது. அந்த வழியை இஸ்லாமும் சொல்லவில்லை. மதம் மாறிய பெரும்பான்மையோரின் சிறந்த வாழ்க்கையை பாருங்கள்.

renga சொன்னது…

//அடடா....கண்ணுக்கு முன்னால் அழகிய மார்க்கம் ஒன்று அரவணைக்க காத்திருக்க தேடி அலைவானேன்.//
சாதி கொடுமை என்பது ஹிந்து மதத்தில் மட்டுமல்ல ..
இந்திய முஸ்லிம்ளீடையேயும், ஏன் ஆசியா முழுவதிலும் இருக்கிறது.
Caste system among Muslim என்று கூகுலை கேட்டுப்பாருங்கள்,நீங்கள் இஸ்லாமில் அது கிடையாது என்று சொன்னால், ஹிந்து மதத்திலும் அது கிடையாது.பிறகு சன்னி/ஷியா/அகமதியா பற்றியும் அவர்கள் ஒருவர்க்கொருவர் பள்ளிவாசலில் பாம் வைத்து கொல்வது பற்றியும் மதம் மாறும் தலித்களிடம் கூறினால் நல்லது...

//லட்சக் கணக்கில் மதம் மாறியதில் ஒரு இமாம் அலி தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது. அந்த வழியை இஸ்லாமும் சொல்லவில்லை. மதம் மாறிய பெரும்பான்மையோரின் சிறந்த வாழ்க்கையை பாருங்கள்.//

இந்துக்களுடையே எதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதுக்கு இந்து மதம்தான் காரணம்,உடனியாக இஸ்லாம் மதத்துக்கு மாறவேண்டுமெற்று கூறுவது; அதுவே இஸ்லாமியர்கள் செய்தால் இஸ்லாத்தை சரிவர விளங்காதவர்கள், சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் என்று சப்பை கட்டுவது...போங்கடா நீங்களும் உங்க மதமும்.....த்த்த்தூ

//என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும்//

மதம் மாறினால் மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா?முதலில் அவர்களை பொருளாதார ரீதியாக தூக்கிவிடுங்கள்,முக்கியமாக கல்வியை கற்றுக்கொடுங்கள்.

//தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை//
பெரியார் செய்த அதே முட்டாள்தனதை நீங்களும் செய்யவேண்டாம்.மதம் மாறுங்கள் என்று சொல்வதைவிட மதமே வேண்டாமென்று கூறலாமே?

வேகநரி சொன்னது…

//தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை//
பகுத்தறிவுவாதியான கோபி மத மாற்றம் பற்றி சிந்திப்பது புரியவே முடியல்ல.

பெயரில்லா சொன்னது…

மிகவும் ஆழமான அருமையான பதிவு சகோ. ஆனால் தலித்கள் மதம் மாறினால் விடுதலை பெறுவார்களா என்பது தான் சந்தேகமே ... !

ஏனெனில் கிருத்தவ தலித்கள், இஸ்லாமிய தலித்கள் இன்றளவும் கூட தனித்துத் தான் வைக்கப்பட்டுள்ளனர்.

பேசாமல் மதம் மாறுவதை விட தேசத்தை மாற்றிக் கொள்ளலாம், ஒட்டு மொத்தமாக புலம் பெயர்ந்து சமத்துவமான நாடுகளுக்கு சென்று குடியேறிவிடலாம் ..

தலித்கள் முதலில் கல்வி, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முனைய வேண்டும் என்பேன் .. !

ஆனால் முட்டுக்கட்டை போட ஆதிக்க சாதிய பெருச்சாளிகள் வந்துவிடுவார்களே ... !

தமிழன்பன் சொன்னது…

//பேசாமல் மதம் மாறுவதை விட தேசத்தை மாற்றிக் கொள்ளலாம், ஒட்டு மொத்தமாக புலம் பெயர்ந்து சமத்துவமான நாடுகளுக்கு சென்று குடியேறிவிடலாம் ..//
ஆனால், புலம் பெயர் நாடுகளிலும் சாதியம் தொடர்வதை மறுக்க முடியாது...

இனியா சொன்னது…

"தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. :( "


எல்லா மதத்தின் மீதும் காரித் துப்புவதே சிறந்தது!!!

வருண் சொன்னது…

***மதம் மாறினால் மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா?முதலில் அவர்களை பொருளாதார ரீதியாக தூக்கிவிடுங்கள்,முக்கியமாக கல்வியை கற்றுக்கொடுங்கள்.***

நீர் என்னத்தை புடுங்குறீர்? இந்து மதம் உன் அப்பன் வீட்டு சொத்துத் தானே?

போயி நீரே தலித்கள் வீடு எரியாமல் பார்க்க வேண்டியதுதானே?

வன்னிய முட்டாள்களைப் போயி அறிவுரை சொல்லித் திருத்த வேண்டியதுதானே?

அதெல்லாம் ஒண்ணும் புடுங்க முடியாது. எவன் எவன் தாலியை அத்தாலும் பரவாயில்லை, என் இந்து மதத்தைவிட்டுப் போகக்கூடாது.

வருண் சொன்னது…

***பெரியார் செய்த அதே முட்டாள்தனதை நீங்களும் செய்யவேண்டாம்.மதம் மாறுங்கள் என்று சொல்வதைவிட மதமே வேண்டாமென்று கூறலாமே?****

ஒரு தர சொன்னாப் புரியாதா உனக்கு? தலித் வீடுகள் எரியுது நீ ஏன்யா பெரியார் பொணத்தை தேடி எடுத்துட்டு வர?

ஹையங்கார்னு ஒரு பாப்பாத்தி பீத்திக்கிட்டு இருக்கா, அதை ரசிப்பியே?

இந்த பார்ப்பானுகளைவிட முட்டாள்கள் எங்க இருக்கானுக? அவனுகள விட்டுப்புட்டு பெரியார் பொணத்தை தோணிட் எடுக்கிற உன்ன என்ன செய்யலாம்??

saturn730 சொன்னது…

சு பி

//லட்சக் கணக்கில் மதம் மாறியதில் ஒரு இமாம் அலி தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது. அந்த வழியை இஸ்லாமும் சொல்லவில்லை. மதம் மாறிய பெரும்பான்மையோரின் சிறந்த வாழ்க்கையை பாருங்கள்.//




லட்சக் கணக்கில் மக்கள் இருக்கும் ஒரு மதத்தில ஒரு கூட்டம் தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அதற்கு வன்னியர்களோ/இந்து மதமோ பொறுப்பாகாது. அந்த வழியை வன்னியர்களும்/இந்து மதமும் சொல்லவில்லை. மதம் உள்ள பெரும்பான்மையோரின் சிறந்த வாழ்க்கையை பாருங்கள்.

இவ்வாறு வன்முறையில் ஈடுபடும் இவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல.. ஏன் உண்மையான வன்னியர்கள் கூட கிடையாது..

உங்கள் கூற்று சரியாயின், இதுவும் சரியே..

முட்டாள்தனமான வாதம்..

ஜோ/Joe சொன்னது…

//தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. :(//
இந்த விடயத்தில் இருப்பதில் பெட்டர் இஸ்லாம் தான்.

iTTiAM சொன்னது…

ஆம். ஆனால் நாடார்கள் முன்னேற நினைத்த போது செயலில் காண்பித்தார்கள் - வீண் ஆர்ப்பாட்டம் இல்லை.

ssk சொன்னது…

மதமற்றோர், சாதியற்றோர் என்று ஒரு பிரிவு அரசால் தொடங்கப்பட்டு அதில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று கூறினால் போதும்.
அரசு இதற்கு பல சலுகைகள் அளிக்க வேண்டும், கல்வி, இட ஒதுக்கீடு, இன்ன பிற. சில கட்டுபாடுகளும், முக்கியமாக இதுவரை போற்றிவந்த சாதி, மத அடையாளங்களை முற்றிலும் துறக்க வேண்டும். மீறி கடை பிடித்தால் அணைத்து சலுகைகளும் வட்டியுடன் பறிக்க படும். .. அறிஞர் பலர் இவ்வழியில் சிந்தித்தால் , சமூக மாற்றம் இப்போதே.

பெரியார் வசதி வாய்ப்பில்லாத கிராமத்தில் இருக்காதே என்று சொன்னார். தனித்து இருந்த மக்கள் இப்போது தாக்குதலுக்கு ஆட்பட்டார்.

suvanappiriyan சொன்னது…

//அதெல்லாம் ஒண்ணும் புடுங்க முடியாது. எவன் எவன் தாலியை அத்தாலும் பரவாயில்லை, என் இந்து மதத்தைவிட்டுப் போகக்கூடாது.//

நெத்தியடி.

suvanappiriyan சொன்னது…

//இந்த விடயத்தில் இருப்பதில் பெட்டர் இஸ்லாம் தான்.//

அடுத்த நெத்தியடி.

suvanappiriyan சொன்னது…

//இவ்வாறு வன்முறையில் ஈடுபடும் இவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல.. ஏன் உண்மையான வன்னியர்கள் கூட கிடையாது..//

இது அதற்கு அடுத்த காமெடி!

ஏனெனில் மனு ஸ்ருமிதியில் நான்கு வர்ணத்தவர்களை பிரித்து, அவர்களின் தகுதிகள் என்ன என்று வரையறுத்து விட்டு, அதை இன்று வரை இந்து மத சட்டமாகவும் ஒரு சாராரால் பாவிக்கப்பட்டும் வருகையில் எந்த காலத்தில் நீங்கள் தீண்டாமையை ஒழிக்கப் போகிறீர்கள்?

படித்து விட்டால் தீண்டாமை பொய் விடும் என்கிறோம். ஆனால் இணைய தளத்தில் வரும் வரன் பகுதியில் சாதி உட்பிரிவுகளையும் கூறி மாப்பிள்ளை பெண் தேடுவது படித்தவர்களே!

வேலையில் சேர்ந்து முக்கிய பதவியில் அமர்ந்தாலும் அங்கும் அவரது சாதியை சுட்டிக் காட்டி அவமானப் படுத்தும் நிகழ்வு தினமும் நடக்கிறதே? அதன் சுட்டியை தரட்டுமா?

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா, இஸ்லாத்திலும் ஏகப்பட்ட பிரிவுகள் , அதிலும் சாதி வாரியா தனி தனி பிரிவுன்னு உங்க பதிவிலே ஆதாரத்தோட சொல்லி இருக்கேன் , வழக்கம் போல அவர்கள் எல்லாம் உண்மையான முஸ்லீம்கள் இல்லைனு சொல்லிட்டிங்க, அப்படி பார்த்தால் உண்மையான முஸ்லீம்கள் எண்ணிக்கை ரொம்ப குறைவாக இருக்குமே :-))

அப்புறம் எப்படி சம உரிமை கிடைக்கும்.

முதலில் ஷியா, அகமதியா , ஆஃப்கான் பழங்குடியின முஸ்லீம்களை கொல்லாமல் சம உரிமையுடன் நடத்துங்கல் அப்புறம் இஸ்லாமின் பெருமையை பேசலாம்.

பாட்டு பாடி ,ஆடினதுக்கே கழுத்து அறுத்து கொல்லுற மதத்தில் சேர்ந்து அடிமையா வாழணுமா?

--------
//வேலையில் சேர்ந்து முக்கிய பதவியில் அமர்ந்தாலும் அங்கும் அவரது சாதியை சுட்டிக் காட்டி அவமானப் படுத்தும் நிகழ்வு தினமும் நடக்கிறதே? அதன் சுட்டியை தரட்டுமா?
//

அப்படி சொன்னா செவுள் அவுல் திண்ணுற போல பொளேர்னு ஒன்னு விட்டா வாய மூடிப்பாங்க.

தரும புரியில 300 குடும்ப்ங்களை தாக்கி இருக்காங்க என்றால் ஒரு ஆயிரம் பேராவது திரண்டு போயிருந்தால் தான் முடியும் ,இதெல்லாம் யாரும் தூண்டி, கூட்டம் சேர்க்காமல் நடக்க வாய்ப்பே இல்லை, எனவே இப்படி கூட்டம் சேர்த்து தலைமை தாங்கியவனை புடிச்சு உள்ள போட்டால் எல்லாம் அடங்குவாங்க.

இல்லைனா தலித்துகள் இதே போல கூட்டம் சேர்த்து ஒரு முன்னூறு வன்னிய குடும்பங்களை தாக்கினால் தான் அடுத்த முறை இதே போல செய்யும் துணிவு வராது ,ஒன்று சட்டம் செயல்படணும் ,இல்லை மக்களே செயல் படணும்.

சட்டம் செயல்படவில்லை எனில் ஒரு ரெண்டு தடவை மக்களே திருப்பி அடிச்சா எவனும் இப்படி செய்ய துணிய மாட்டான்.

suvanappiriyan சொன்னது…

//முதலில் ஷியா, அகமதியா , ஆஃப்கான் பழங்குடியின முஸ்லீம்களை கொல்லாமல் சம உரிமையுடன் நடத்துங்கல் அப்புறம் இஸ்லாமின் பெருமையை பேசலாம்.//

தாலிபான்கள் போன்ற மூடர்களை ஏன் உதாரணமாக்க வேண்டும். நம் தமிழகத்தில் என்றாவது சாதி பாகுபாடு இஸ்லாமியருக்குள் பார்க்கப்பட்டுள்ளதா? அல்லது சாதி சம்பந்தமாக வெட்டு குத்து ஏதும் நடந்துள்ளதா? முன்பு மதம் மாறிய தலித்துகள் முஸ்லிம்களால் ஒதுக்கப்பட்டிருக்கிறார்களா? பெண் எடுத்து பெண் கொடுத்திருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் இது சர்வ சாதாரணம். ஒரு தலைமுறைக்கு பிறகு முற்றிலுமாக அவர்கள் அடையாளம் மாற்றப்பட்டு இஸ்லாமிய வட்டத்துக்குள் ஐக்கியமாகி விடுவார்கள்.

------------------------

பெரியார் சொல்வதை கேளுங்கள்!

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள்.

அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும்.

கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை.

அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை.

அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

-பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931

வேகநரி சொன்னது…

//கண்ணுக்கு முன்னால் அழகிய மார்க்கம் ஒன்று அரவணைக்க காத்திருக்க...//
//இந்த விடயத்தில் இருப்பதில் பெட்டர் இஸ்லாம் தான்//
ஒரு பகுத்தறிவுவாதி எந்த மதம் என்று மதத்தை சொல்லி தடுமாறும் போது மேலே உள்ள அபாயகரமான கருத்துக்களே ஆலோசனைகளாக வந்து சேரும்.
-------
saturn730 @
// இவ்வாறு வன்முறையில் ஈடுபடும் இவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல//
சுவர்ன சுவாமிக்கு சரியான பதில்.

சார்வாகன் சொன்னது…

@ சகோ சுவனப்பிரியன்,
இங்கு என்ன பிரச்சினை அகமண முறைகள் கொண்ட இரு வெவ்வேறு இனக்குழுக்கள்(சாதி) நேர்ந்த ஆணும் பெண்ணும் திருமன்ம் செய்து கொண்டதால் அந்த இடத்தின் பெரும்பானமை குழுவினர்,சிறுபான்மை குழிவினர் மீது வன்முறை நிகழ்த்தினர்.மூமின்கள் தமிழகத்தை பொறுத்த்வரை மூமின்கள் என்பவர்களும் ஒரு இனக்குழு மட்டுமே.

இப்போது மூம்ன் அல்லாத ஒரு ஆண், மூமின் பெண்ணை ,மூமின்கள் பெரும்பானமியாக் வாழும் இடட்தில் திருமண‌ம் செய்தால் பிரச்சினையே வராது என சு.பி சொல்கிறாரா? இங்கு அந்தப் பெண் மதம் மாறிவிடுகிறாள்,அல்லது அந்த காஃபிர் ஆண் மதம் முஸ்லிம் ஆக மாறவில்லை.

பிரச்சினை வராது என சொல்வாரா?

சு.பி நீங்கள் மதம் மாறியதாக பதிவுகளில் காட்டுபவர்கள் பலர் தலித் மக்களே,அவர்களின் நிலையும் சில தலைமுறைகளுக்கு பிறகே நிலை சீராகும் என நீங்களே சொல்லி விட்டீர்கள்.

மதங்களில் எல்லாமே குப்பைதான். மனிதனுக்கு மதம் தேவையில்லை.அப்படியும் சாமி கும்பிட வேண்டும் எனில்
ஆதிக்க சாதியினர் நடத்தும் கோயில்களுக்கு செல்லாமல் தலித்கள் தனியாக் கோயில் கட்டி,தாங்களே நிர்வகிக்க்லாம்.

அதே ஊரில் சில உயர் சாதியினர் இஸ்லாமுக்கு மாறீனாலும் என்ன நடக்கும் என்பதையும் அறிவோம்.
இஸ்லாமியர்கள் ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் போதுஎப்படி வாழ்வார்கள், பெரும்பான்மையாக வாழும் போது எப்படி வாழ்வார்கள்? என அறிவோம்.

ஆகவே சும்மா அடித்து விடாதீர்கள்!!!!!!!

மத வியாபாரத்திற்கு இது தருணம் அல்ல!!!
நன்றி

suvanappiriyan சொன்னது…

//அப்படி சொன்னா செவுள் அவுல் திண்ணுற போல பொளேர்னு ஒன்னு விட்டா வாய மூடிப்பாங்க//

கணிணி முன்னால் உட்கார்ந்து இதை விட வீராவேசமாக வசனங்கள் யாராலும் பேச முடியும். நடைமுறை சாத்தியமா? அப்படி எங்கும் நடந்திருக்கிறதா?

//இல்லைனா தலித்துகள் இதே போல கூட்டம் சேர்த்து ஒரு முன்னூறு வன்னிய குடும்பங்களை தாக்கினால் தான் அடுத்த முறை இதே போல செய்யும் துணிவு வராது ,ஒன்று சட்டம் செயல்படணும் ,இல்லை மக்களே செயல் படணும்.

சட்டம் செயல்படவில்லை எனில் ஒரு ரெண்டு தடவை மக்களே திருப்பி அடிச்சா எவனும் இப்படி செய்ய துணிய மாட்டான்.//

இது கொலை கொள்ளைகளை மேலும் அதிகமாக்கும். ரத்த ஆறு தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். இமானுவேல், முத்துராமலிங்க தேவர் குரு பூஜைகளில் இதைத்தானே போன மாதம் பார்த்தோம். வருடா வருடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதை எல்லாம் சீர் தூக்கி பார்துதான் பெரியார் ஒரு அழகிய வன்முறையற்ற வழியை காண்பித்தது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இந்த வார்த்தைகளை அவர் உதிர்க்க வில்லை. உண்மையான அக்கறை இருந்ததால்தான் அப்படி ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்தது. நாத்திகத்தையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்ட அவர் ஏன் இஸ்லாத்துக்கு போகச் சொல்ல வேண்டும். அவருக்கும் தெரிந்திருக்கிறது இன விடுதலைக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்று!

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

தாலிபன்கள் போன்றோர் தான் இந்த சாதி வெறியர்களும்.

தனி மனிதன் சாதிப்பற்றுடன் இருக்கானா ,அது வீட்டோடு இருக்கணும், இருந்துட்டு போகட்டும் ஆனால் அடுத்தவனை இழிவு படுத்த தேவையில்லை.

18 வயதுக்கு மேல் அவரவர் விருப்பம் ,அங்கும் வந்து பழமை வாதம் பேசி வன்முறை செய்ய சாதியை முன்னிருத்துவது கண்டிக்க தக்கது.

பசங்க பேரன் பேத்தி எடுக்கும் வயதான பின்னும் பெற்றோரின் விருப்பப்படியே நடக்கணும் என எதிர்ப்பார்ப்பதும் , அதற்கு சாதி, அந்தஸ்து என துணையாக கொள்வதுமே இந்திய சமூகத்தில் சமத்துவம் நிலவுவதை தடுக்கிறது.

-----------

மதம் மாறினாலும் எல்லாம் மாறிவிடாது ஏன் எனில் எல்லா மதத்திலும் இங்கு இருந்து போனவர்களே இருக்கிறார்கள்.

மதுரை அருகே மீனாட்சிபுரம் என்ற ஊரில் அனைவரும் இஸ்லாம் மாறினார்களாம்,ஆனால் அவர்களுக்கு இன்னும் சமத்துவம் இஸ்லாத்திலும் கொடுக்கப்படவில்லை என சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா சுவாமிகளே?

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

//ஒரு அழகிய வன்முறையற்ற வழியை காண்பித்தது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இந்த வார்த்தைகளை அவர் உதிர்க்க வில்லை//

கணினி முன் உட்கார்ந்து இதே போல இஸ்லாம் வன்முறையற்ற மதம் என யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் உலகத்திலேயே மதத்தின் பேரால் வன்முறை செய்வதாக அறியப்பட்ட மதமே இஸ்லாம் தான் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

ஆனால் அதெல்லாம் செய்பவர்கள் உண்மையான இஸ்லாமியர் அல்லனு ஒரே கீறல் விழுந்த ரெகார்டு தான் உங்கள் பதில் :-))

----------

தேவர் குரு பூஜையோ, இமானுவேல் சேகரன் குரு பூஜையோ நாட்டுக்கு தேவையில்லை, அதனை எல்லாம் அரசு தடை செய்தாலே வன்முறை நின்றுவிடும்.

300 குடும்பத்தினை அடித்து நொறுக்கும் போது சட்டம் காப்பாற்றனும் இல்லையா அவங்களே காப்பாற்றிக்கொள்ள முயல வேண்டும், அப்போ தான் அடுத்த முறை இது போல செய்ய இன்னொரு ஜாதிக்கு பயம் வரும்.

அய்யோ அம்மான்னு அழுது கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் அடிக்கத்தான் செய்வாங்க.

சில நீண்ட நாள் பழமைவாத அடக்கு முறை ஓய வேண்டும் என்றால் கொஞ்சம் கடுமையான செயல்பாடு வேண்டும்.

நீங்களே ஹரியானாவில் தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறை என்றெல்லாம் செய்தி போட்டுள்ளீர்கள் ,ஏன் போட்டீர்கள்?

அரசு கடுமையாக செயல்பட்டிருந்தால் தொடர்ந்து பாலியல் தாக்குதல் நடக்குமா?

இல்லை தலித் சமூகம் திரண்டு பாலியல் வன்முறை செய்தவர்களை போட்டிருந்தால் கூட மீண்டும் பாலியல் வன்முறை செய்ய பயப்படுவார்கள் அல்லவா?

சட்டம் மத்துவமாக செயல்ப்பட்டிருக்க வேண்டும் இல்லையானால் கலகம் நடந்தால் தான் வழி பிறக்கும்.

பார்ப்பனப்பெண் அவதூறாக பேசிவிட்டார்கள் என புகார் கொடுத்த 48 மணி நேரத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் சட்டம் ,பாலியல் வன்முறை, கொலை ,கொள்ளை நடந்தாலும் மெத்தனமாக இருப்பது ஏன்?

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

கோவி.கண்ணன் சொன்னது…

சுபி ஐயா,

உங்க மார்க்கத்தில் மூளைச் சலவைக்காரர்களை 'வெளுத்து' விட்டு உங்கள் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் தடுக்க முயற்சி செய்துவிட்டு பிறகு உங்க மதத்தில் சவ்வாது இருக்கு சந்தனம் இருக்கு, சுவனத்தில் கன்னிக்கை இருக்குன்னு சொல்லவாங்க.

நான் ஏற்கனவே சொன்னது போல் உங்களுடன் லாவனிப் பாட விரும்பவில்லை,

தலித்துகள் பஞ்சாப் சிங்குகளைப் போல் தனக்கு ஏற்ற மார்க்கத்தை உருவாக்கிக் கொள்வது தான் அவர்களுக்கான நல்வழி, அவர்களுடைய வாழ்வியல் முறையில் பெண்கள் முழங்கால் வரையிலும் உடையணிந்து வேலை செய்வது வழக்கம், உங்கள் மார்க்கத்தில் காதைக் கூட மறைக்கனும் என்பீர்கள், உங்கள் மார்க்கம் அவர்களைப் போன்றும் உலகத்தில் எந்த ஒரு உடல் உழைப்பாளிக்களுக்கும் குறிப்பாக உழைக்கும் பெண்களுக்கு ஏற்றது அல்ல, நான் அவர்கள் உடல் உழைப்பைத் தான் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லவரவில்லை, பொருளாதார ரீதியில் மூன்னேறும் வரை அவர்களால் தற்கால நடைமுறைகளை விட்டுவிட்டு வயிற்றில் ஈரத்துணியைப் போர்த்திக் கொள்ள முடியாது, அதற்கான கால அவகாசம் கூட அவர்களுடைய பெண்களுக்கு நீங்கள் தரமாட்டீர்கள். எனவே உங்கள் மார்க்கத்தை அவர்களுக்கு ஏற்ற மார்க்கம் என்று நான் பரிந்துரைக்க முயற்சிக்கவில்லை,


அப்பறம் பெரியார் சொன்னார் அண்ண்ணா சொன்னார் என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள், அவர்கள் காலத்தில் அல்கொய்தா மற்றும் அல் உம்மா , முஜாஹிதின் கோரமுகங்களை அவர்கள் பார்ததில்லை என்பதும் உண்மை தான் என்பதை ஏன் நீங்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீர் என்னத்தை புடுங்குறீர்? இந்து மதம் உன் அப்பன் வீட்டு சொத்துத் தானே? //

வருண்,

அவரை கடிந்து கொண்டு என்ன பயன் ?

இந்திய அரசே இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே கல்வி வேலைவாய்ப்பில் சலுகை என்பதை சட்டமாக்கி வைத்திருந்து இந்துமத எண்ணிக்கையை கட்டிப் பாதுகாக்கிறது, ஒரு தலித் கிறித்துவராகவோ, இஸ்லாமியராகவோ மதமாறினால் அவர்களுக்கு பொருளாதார சமூக அந்தஸ்து கிடைத்துவிடுகிறது என்று அரசே மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது என்பதைத் தானே அதுகாட்டுகிறது.

தலித்துகளுக்கான சலுகை உண்மையில் அவர்களின் நிலமைகளுக்கான சலுகை அல்ல, அவர்கள் இந்து மதத்தில் சகித்துக் கொண்டு தொடர்கிறார்கள் என்பதற்காகக் கொடுக்கப்படும் மானியம் மட்டுமே.

:( இது பற்றி பல முறை எழுதிவிட்டேன்

வருண் சொன்னது…

கோவி: என்னங்க ஒர் மேஜரான பொண்ணு ஒரு பையனை காதலிச்சு கல்யாணம் செய்துகொண்டாள். ரெண்டு பேரும் வேற வேற சாதி. ஒரு சாதாரணமான விசயம்.

எத்தனை விழுக்காடு இதுபோல கல்யாணம் செய்துக்கிறாங்க? இதைப்போயி இப்படி பெருசு படுத்தி வீட்டைக் கொளுத்தி ஆளை அடிச்சு..

வன்னியர்களையோ, முக்குலத்தோரையோ கடுமையாக விமர்சிக்க இந்த ரங்காவுக்கு வக்கில்லை! All he cares is his RELIGION!

இவரால, இதுபோல் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களை காப்பாத்த முடியாது.

இதுபோல் முட்டாள்த்தனமாக நடக்கு வன்னியர்களை கடுமையாக விமர்சிக்கவும் வக்கில்லை!

ஊருக்கு அறிவுரை சொல்றான் இந்தாளு!

***முதலில் அவர்களை பொருளாதார ரீதியாக தூக்கிவிடுங்கள்,முக்கியமாக கல்வியை கற்றுக்கொடுங்கள்***

இவனுக்குத்தானே இவன் மதம் முக்கியம்? இவந்தானே இவன் மதத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்யனும்?

Why cant go and give a lecture to vanniyarkaL? Or why cant he go and save the Dalits?

He can not do any thing. If they have to convert their religion for saving themself. What the FUCK is his problem?? Renga needs to keep his mouth SHUT if he cant do anything!

கோவி.கண்ணன் சொன்னது…

//இவனுக்குத்தானே இவன் மதம் முக்கியம்? இவந்தானே இவன் மதத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்யனும்?//

நீங்கச் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன், தலித்துகள் பொருளாதார நிலையில் கல்வி அறிவில் முன்னேறினாலும் இவர்கள் அவர்களை மதிப்பதில்லை என்பதே உண்மை, ஒரு தலித் கலெக்டர் ஆனாலும் அவனால் மற்ற சாதியில் பெண் கொடுக்க முன்வரமாட்டார்கள். சாதிரீதியில் மட்டம் தட்டி வைக்க பொருளாதார கல்வி ரீதியிலான முன்னேற்றம் கைகொடுக்கவில்லை என்பதே உண்மை, காமராஜர் ஆட்சிக்குவந்திருக்காவிட்டால் நாடார்கள் முன்னேற்றம் கூட சில பத்து ஆண்டுகள் கடந்தே நடந்திருக்கும்.

மாடுதிங்கிற வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்யதாங்க, அதே மட்டை தின்பவனை தீண்டத்தாகவர்கள் என்று சொல்லக் காரணமாகவும் அதே மாடு தின்பதைச் சொல்கிறார்கள்.

சீக்கிய மதம் போல் தலித்துகள் ஒன்றிணைந்து இவர்களைப் புறக்கணிப்பது தான் சிறந்த வழி, நீ யார் எனக்கு விடுதலைக் கொடுப்பது / அடக்கி வைப்பது என்று பொங்கி எழவேண்டும் அவர்கள்

வருண் சொன்னது…

சு பி சொல்றதுக்காக எல்லாம் எவனும் மதம் மாறப்போவதில்லை. அப்படி சு பி அறிவுரையைக்கேட்டு அவர்கள் மாறினாலும், அவர்கள் உயிரை, உடமைகளை, மனைவியை குழந்தைகளை இந்த உயர்சாதி முட்டாள்களிடம் இருந்து காப்பாத்த வேறு மதத்திற்கு ஓடினால் என்ன் பெரிய தப்பு?? I cant save their life. I can't save their houses from burning. If THEY think converting their religion will help them, will save their property, let them do it. I should not worry about it. Renga should not worry about it! "ஹைங்கார்" என்றும் பிதற்றும் பார்ப்பான்கள் ஏன் இதுக்கு துடிக்கிறானுகனு தெரியலை???

பார்ப்பானுகளை, வன்னியரையும், முக்குலத்தோரையும் விமர்சிக்கச் சொல்லுங்க பார்ப்போம்! அதை செய்ய மாட்டானுக. சும்மா உக்காந்துக்கிட்டு வீடு எரிஞ்சா என்ன இந்து மதத்தை கட்டி அழுங்கிறது.. பார்ப்பானுகளை விமர்சிச்சார் என்கிற ஒரே காரணத்துக்காக எதுக்கெடுத்தாலும் பெரியாரை சாடுறது.. இந்த பார்ப்பானுக மாறி ஒரு அறிவுகெட்ட முண்டங்கள் யாருமே இல்லை!

வருண் சொன்னது…

/// renga கூறியது...

//அடடா....கண்ணுக்கு முன்னால் அழகிய மார்க்கம் ஒன்று அரவணைக்க காத்திருக்க தேடி அலைவானேன்.//
சாதி கொடுமை என்பது ஹிந்து மதத்தில் மட்டுமல்ல ..
இந்திய முஸ்லிம்ளீடையேயும், ஏன் ஆசியா முழுவதிலும் இருக்கிறது.
Caste system among Muslim என்று கூகுலை கேட்டுப்பாருங்கள்,நீங்கள் இஸ்லாமில் அது கிடையாது என்று சொன்னால், ஹிந்து மதத்திலும் அது கிடையாது.பிறகு சன்னி/ஷியா/அகமதியா பற்றியும் அவர்கள் ஒருவர்க்கொருவர் பள்ளிவாசலில் பாம் வைத்து கொல்வது பற்றியும் மதம் மாறும் தலித்களிடம் கூறினால் நல்லது...

//லட்சக் கணக்கில் மதம் மாறியதில் ஒரு இமாம் அலி தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது. அந்த வழியை இஸ்லாமும் சொல்லவில்லை. மதம் மாறிய பெரும்பான்மையோரின் சிறந்த வாழ்க்கையை பாருங்கள்.//

இந்துக்களுடையே எதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதுக்கு இந்து மதம்தான் காரணம்,உடனியாக இஸ்லாம் மதத்துக்கு மாறவேண்டுமெற்று கூறுவது; அதுவே இஸ்லாமியர்கள் செய்தால் இஸ்லாத்தை சரிவர விளங்காதவர்கள், சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் என்று சப்பை கட்டுவது...போங்கடா நீங்களும் உங்க மதமும்.....த்த்த்தூ

//என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும்//

மதம் மாறினால் மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா?முதலில் அவர்களை பொருளாதார ரீதியாக தூக்கிவிடுங்கள்,முக்கியமாக கல்வியை கற்றுக்கொடுங்கள்.

//தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை//
பெரியார் செய்த அதே முட்டாள்தனதை நீங்களும் செய்யவேண்டாம்.மதம் மாறுங்கள் என்று சொல்வதைவிட மதமே வேண்டாமென்று கூறலாமே?///

* Renga did not feel sorry for people whose houses were burnt by these brutal vanniyarkaL!

* Renga did not condemn the brutal act of vanniyarkaL?

* Renga ONLY cares about his fucking hindu religion which treats some people unfairly.

Typical closed-minded paarppaan attitude!

R.Puratchimani சொன்னது…

அருமையான பதிவு //
தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. :( //

மத மாற்றத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த உபயோகமும் இல்லை. மதமாற்றத்தால் இவர்கள் சவுதியின் அடிமையாகவோ வாடிகனின் அடிமையாகவோ தான் மாறுவார்கள். ஜாதியைபோல மதமும் ஒரு பிசாசே.ஏன் மதம் ஒரு இரத்த காட்டேரி என்று கூட சொல்லலாம். இன்று நட்பாய் இருப்பவனை மதத்தின் பெயரால் நாளை கொலை கூட செய்வான். பிரிவினையால் மக்களை ஒன்றிணைக்க முடியாது.நாம் அனைவரும் மனிதர்களே ஜாதியும் மதமும் தேவையில்லை,ஏற்றத்தாழ்வு கூடாது என்று நாம் மக்களுக்கு புரியவைக்க வேண்டும். அரசாங்கம் ஜாதியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் மனிதத்தை தழுவ வேண்டும். இதுவே ஜாதி மதத்தை ஒழிக்க ஒரே வழி.
ஜாதியை ஒழிப்பது எப்படி?
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/10/blog-post.html

வருண் சொன்னது…

****ஜாதியை ஒழிப்பது எப்படி?****

இப்படி எதையாவது ஏட்டு சுரைக்காயை இணையத்துல வித்துக்கிட்டு திரிங்க? உங்க வீடு எதுவும் எரியலை இல்லை? அதான் இதுமாதிரி எதையாவது சொல்லிக்கிட்டு இருக்கீங்க.

அந்தாளு காடுவெட்டி குரு வெட்டவெளியில் தலித்களை அடிங்கனு சொல்றான். அதை தட்டிக்கேக்க யாருக்கு வக்கில்லை!

இவரு வந்துட்டாரு சாதியை எப்படி ஒழிக்கிறதுனு வெட்டிப் பேச்சுப் பேச!

தர்மபுரிக்குப் போயி சொல்லுங்க உங்க உபதேசத்தை, புரச்சிமணி!

வருண் சொன்னது…

///சென்னை: கலப்புத் திருமணம் செய்வோரை வெட்டித் தள்ளுங்க என்று பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு கலப்பு திருமணத்தை ஆதரித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் கலப்பு திருமணத்துக்கு இடமுள்ளது. ஆனால் கடந்த 5ம் தேதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு கலப்புத் திருமணத்துக்கு எதிராகப் பேசியுள்ளார்.

"வன்னியர் இனத்து பெண்களை, வேறு சாதியைச் சேர்ந்த ஆண்கள் யாராவது திருமணம் செய்தால் அவர்களை வெட்டித் தள்ளுங்க, நான் சொல்றேன்'' என்று குரு பேசியிருக்கிறார். இவரது பேச்சு இந்திய தண்டனை சட்டத்தின் 504, 505(1)(சி), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியதாகும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் உயிருக்கும் கலப்பு திருமணத்தை ஆதரிப்போரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.?///

இந்தாளப் பிடிச்சு மொதல்ல ஒரு பத்து வருடம் உள்ள போடனும். அப்படி சட்டத்தில் இடமில்லை என்றால், சட்டத்தை திருத்தி எழுதனும்.

இந்த மாரி முட்டாள்களை பேசவிட்டால், நான் பின்னேறிக்கிட்டே போக வேண்டியது.

படித்த வன்னியர்கள் எல்லாம் தலகுனிந்துதான் இனிமேல் நடக்கனும். அல்லது தைரியமாக வந்து இதுபோல் செயல்களை பகிரங்கமாக கண்டிக்கனும்!

R.Puratchimani சொன்னது…

வணக்கம் அருண் ,
உணர்ச்சி வசப்பட்டா இழப்புதான். நடந்த சம்பவத்திற்கு அதுதான் காரணம்.

//இப்படி எதையாவது ஏட்டு சுரைக்காயை இணையத்துல வித்துக்கிட்டு திரிங்க?//
எதையும் விற்கவில்லை. மனிதத்தை வளர்க்க என்னாலான சிறுமுயற்சி.

//அந்தாளு காடுவெட்டி குரு வெட்டவெளியில் தலித்களை அடிங்கனு சொல்றான். அதை தட்டிக்கேக்க யாருக்கு வக்கில்லை!

இவரு வந்துட்டாரு சாதியை எப்படி ஒழிக்கிறதுனு வெட்டிப் பேச்சுப் பேச!//

. இன்று ஜாதி மதம் என்ற என்ற களைகள் சமுதாயத்தில் நிலைத்திருக்க காரணமும் ஏட்டு சுரைக்காய்தான் என்பதுதானே?


யாரும் எந்த விதத்திலும் ஜாதி பெயர்களை உபயோகிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
என்று என்னுடைய பதிவில் கூறி உள்ளேன். அரசாங்கம் தான் இதை செயல்படுத்த வேண்டும். அதை செயல்படுத்த நாம் தான் முயற்சிக்க முயற்சிக்க வேண்டும். எழுதுவதும் சுட்டியை பகிர்வதும் அதற்க்கான சிறு முயற்சி.

//இந்தாளப் பிடிச்சு மொதல்ல ஒரு பத்து வரு டம் உள்ள போடனும். அப்படி சட்டத்தில் இடமில்லை என்றால், சட்டத்தை திருத்தி எழுதனும்.//
இதைத்தான் நான் சொல்றேன். ஜாதியை ஒழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று. ஜாதியையும் மதத்தையும் ஒழிக்க இதுவரை இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது ?

ஜாதியையும் மதத்தையும் அழிக்க மனிதத்தை தழுவ வேண்டியதன் அவசியத்தை நாம் பறைசாற்றியே ஆகவேண்டும்.
மனிதர்களை,உலகை காக்க மனிதம் மட்டுமே ஒரே வழி

suvanappiriyan சொன்னது…

//அப்பறம் பெரியார் சொன்னார் அண்ண்ணா சொன்னார் என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள், அவர்கள் காலத்தில் அல்கொய்தா மற்றும் அல் உம்மா , முஜாஹிதின் கோரமுகங்களை அவர்கள் பார்ததில்லை என்பதும் உண்மை தான் என்பதை ஏன் நீங்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை. //

அடடா...மேலும் தவறான புரிதல்.

இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒரு அமைப்பே இநிதியாவில் கிடையாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் முதல் போன் இந்தியன் முஜாஹிதிடம் இருந்து வரும். இவை எல்லாம் நமது உளவுத் துறை செட்டப் செய்த நாடகங்கள். முன்பு ஆயிஷா என்ற ஒரு பெண் வெடிகுண்டை வயிற்றில் கற்றி கொண்டு வீடு வீடாக வருவதாக படித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த பெண் சில மாதங்கள் முன்பு எந்த தவறும் செய்யவில்லை என்று 20 வருடங்கள் கழித்து விடுதலையாக்கப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் இந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஒன்றுதான். அந்த சகோதரியின் கடந்து போன 20 வருடத்தை யார் திருப்பி கொடுப்பது.

இந்து மக்கள் இஸ்லாத்தை தழுவுவதை தடுப்பதற்கு மேல் சாதியினர் அரசு வேலை பார்க்கும் தனது இந்துத்வ ஆட்களின் துணையோடு செய்த பல செட்டப்புகள் ஒவ்வொன்றாக தற்போது அவிழ்ந்து வருகின்றது. ஏனெனில் வாதங்களை வைத்து அவர்களால் இஸ்லாத்தை கீழிறக்க முடியாது. எனவே தான் இது போன்ற பொய்யான தகவல்களை தினமும் பத்திரிக்கைகள் காவல் துறையினர் மூலம் பரப்பி இஸ்லர்தை கலங்கப் படுத்துகின்றனர். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் வழக்கம் போல் தோல்வியையே தழுவி வருகின்றனர். இர்ஷத் ஜஹான் என்ற இள வயது மங்கை மோடியின் தூண்டுதலில் சுட்டு கொல்லப்பட்டது நமக்கு தெரியும். தற்போது அநத சம்பவத்தின் உண்மையும் வெளி உலகத்துக்கு வந்திருக்கிறது. உண்மையை ரொம்ப நாள் தூங்க வைக்க முடியாது கண்ணன்.

suvanappiriyan சொன்னது…

சகோ சார்வாகன்!

//இப்போது மூம்ன் அல்லாத ஒரு ஆண், மூமின் பெண்ணை ,மூமின்கள் பெரும்பானமியாக் வாழும் இடட்தில் திருமண‌ம் செய்தால் பிரச்சினையே வராது என சு.பி சொல்கிறாரா? இங்கு அந்தப் பெண் மதம் மாறிவிடுகிறாள்,அல்லது அந்த காஃபிர் ஆண் மதம் முஸ்லிம் ஆக மாறவில்லை.

பிரச்சினை வராது என சொல்வாரா?//

எங்கள் கிராமத்திலும் ஒரு பெண் இவ்வாறு ஒரு இந்துவை இழுத்துக் கொண்டு ஓடியது. பெரும்பான்மையாக உள்ள நாங்கள் படை திரட்டிக் கொண்டு அவர்களின் குடில்களை அழிக்கவில்லை. சில காலம் கழித்து அந்த பையனையும் இஸ்லாத்தில் இணைத்து எங்கள் கிராமத்து அந்த பெண் அழைத்து வந்தது பழைய கதை.

ஒரு காதலுக்காக ஒரு கிராமத்தையே அழிப்பதும் கொள்ளையடிப்பதும் எந்த ஊர் நியாயம்? உங்களைப் போன்றவர்களின் சப்போர்ட் இருப்பதால்தான் இவ்வளவு தைரியமாக அவர்களை ஊர் புகுந்து அடிக்கச் சொல்கிறது.

//மத வியாபாரத்திற்கு இது தருணம் அல்ல!!!//

நீங்களோ கண்ணனோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எனக்கு மாத சம்பளத்தில் 2000 ரூபாய் சேர்த்து கிடைத்து விடப் போவதில்லை. :-) உழைத்தால்தான் எனக்கும் காசு.

பார்ப்பான் செய்த சூழ்ச்சி என்று காலத்துக்கும் அவர்கள் மேல் பழியை போட்டுக் கொண்டு காலத்தை விரயமாக்குவதற்கு பதில் இஸ்லாத்தை ஏற்று அவர்களை வெட்கித் தலை குனிய வைக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

ஒரு முறை ஜூனியர் விகடன் ராமநாதபுரத்தில் மதம் மாறிய ஒரு தலித் இளைஞனை பேட்டி எடுத்தனர்.

'நீங்கள் எல்லோரும் மதம் மாறிட்டீங்களே! இனி சமத்துவம் கிடைச்சுருமா?'

'என்னை விட சின்ன பசங்கலெல்லாம் முன்பு என்னை 'டேய் சரவணா' என்று தான் அழைப்பர். இன்று 'ரஹீம் பாய்' என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறேன். இது ஒன்று போதும் எனக்கு'

என்று சொன்னவுடன் எனது கண்களே கலங்கி விட்டது. எந்த அளவு மனதால் காயப்பட்டிருந்தால் அந்த இளைஞனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்திருக்கும். அந்த இளைஞனின் இடத்தில் இருந்து பாருங்கள் சார்வாகன்.

suvanappiriyan சொன்னது…

மேலே பின்னூட்டியிருக்கும் நாசர் என்ற சகோதரர் முன்பு இந்துவாக இருந்தவர். பழைய பெயர் நாகராஜன். இவரை யாராவது இன்று வரை தீவிரவாத செயல்களுக்கோ மற்ற தவறான வழிகளுக்கோ அழைத்திருககிறார்களா என்று அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இன்று சாதி என்ற கோர பிடியிலிருந்து விடுபட்டு உலக முஸ்லிம்களில் ஒருவராக சுதந்திர பறவையாக திரிகிறார். பதிவுகளில் சில நேரம் எனக்கே அட்வைஸ் பண்ணுகிறார். அந்த அளவு குர்ஆன் அவரை சிறந்த முஸ்லிமாக மாற்றியிருக்கிறது.

சார்வாகன் சொன்னது…

சகோ சு.பி,

பெரும்பாலான் சாதி மதக் கல்வரங்களுக்கு காரணம் இப்படி கலப்பு திருமன்ம்,பெண்ணைக் கேலி செய்தல் போன்றவைதான்.

நான் கலப்புத் திருமணம் மட்டுமே சாதிகளை நீக்கும் என்றே கருத்தே உடையவன்.

பிடிப்போர் மத மாறினால் நம்க்கு ஆட்சேபனை இல்லை.

என்னை ஆலோசனை கேட்டல் எந்த மதமும் சரியில்லை என்றே சொல்வேன்.

இஸ்லாமில் சம்த்துவம் என நான் ஏற்பது இல்லை. முஸ்லிம்களுக்கிடையே சம்த்துவம் என் குரான் சொன்னாலும் எந்த அள்வு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அறிவது கடினமே.

ஒரு மூமின் இஸ்லாமில் சாதி இருக்கிறது என்று சொல்லி விட்டு பிழைக்க முடியுமா?

லூத் பற்றிய ஒரு கட்டுரை பகிர்ந்தால் மதத்தில் இருந்து நீக்கம் ,மனைவியை விவாக இரத்து செய் என துராஃப்ஷாவை மிரட்டியது யார் என் அறிவோம்

குரானே மூமின்களுக்குள் சகோதர்த்துவம்,சம்த்தும் என்று சொன்னாலும் காஃப்ரிகளிடம் கடுமையாக் நடக்க சொல்கிறது. ஜிஸ்யா வரி சசூலிக்க சொல்கிறது.

காஃபிர் வீட்டு பெண்களை பாலியல் அடிமைகளாக வைக்க அனுமதி தருகிறது.
போரில் கொள்ளை அடிப்பதை நியாய்ப் படுத்துகிறது.

இப்படிப்பட்ட மதத்திற்கு செல்ல் நான் ஆலோசனை வழங்க மாட்டேன்.

**************
வேண்டுமெனில் நம் தலித் சகோக்க்களுக்கு புதிய மதம்,மத புத்தகம் சிறந்த முறையில் உருவாகி தர நம்மால் இயலும்.

அவதாரம் தூதர் என்று எவரும் கிடையாது. மக்கள் சேவையே மகேசன் சேவை.இயற்கை சார் இனிய வாழ்வு,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்.

உண்மையான் சகோதர்த்துவம்,சம்த்துவம் கொண்ட எங்கள் மதத்திற்கு சகோ சு.பியையும் அழைக்கிறேன். ஆனால் அல்லாஹ் கொடுக்கும் கிளுகிளு சுவனம், 72 கனவுக் கன்னிகள்,சிறுவயது பைய்ன்கள் எல்லாம் கிடைக்காது


நன்றி!!!

வேகநரி சொன்னது…

//நாசர் என்ற சகோதரர் முன்பு இந்துவாக இருந்தவர் //
அவர் தனியாளாக இருந்தால் அதிஷ்டசாலி, தப்பி ஓடிவிடலாம். ஆனா குடும்பகாரனாக இருந்தால் மறுபடியும் இந்துவாக வரவோ, வேறு மதத்திற்க்கு போகவோ, எந்த மதமுமில்லாமல் இருக்கவோ அனுமதிக்கபடமாட்டார். அவரது மனைவி பணயமாக பிடிக்கபடுவார். துராப்ஷாவுக்கு என்ன நடந்திச்சு என்பது எல்லோருக்கும் தெரியும்.
காதலுக்காக,ஜாதிக்காக ஒரு கிராமத்தையே கொள்ளையடிப்பது கொடுமையானது. இங்கு யாரும் இதை ஆதரிக்கவில்லை.அரசு தான் நியாயமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதுமாதிரி கொடுமைகள் சாராசரி குறைந்தது மாதம் ஒன்று பாகிஸ்தானில் சுன்னி இஸ்லாமியர்களால் சியா, சூபி இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தபடுகிறது. அதில் குறைந்தது 10 பேராவது கொல்லபடுவார்கள்.
http://www.bbc.co.uk/news/world-asia-17936651

Robin சொன்னது…

//காமராஜர் ஆட்சிக்குவந்திருக்காவிட்டால் நாடார்கள் முன்னேற்றம் கூட சில பத்து ஆண்டுகள் கடந்தே நடந்திருக்கும்.// காமராஜர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது.

Robin சொன்னது…

//மதமாற்றத்தால் இவர்கள் சவுதியின் அடிமையாகவோ வாடிகனின் அடிமையாகவோ தான் மாறுவார்கள்.// இந்துக்கள் எல்லாரும் காஞ்சி மடத்துக்கு அடிமையாகவா இருக்கிறார்கள்?

Unknown சொன்னது…

மனித நேயம் வளர மதங்களைத் தேர்ந்தெடுப்பதைவிட கலப்பு மணங்களைத் தேர்ந்தெடு...

நன்றி...

Robin சொன்னது…

//வேண்டுமெனில் நம் தலித் சகோக்க்களுக்கு புதிய மதம்,மத புத்தகம் சிறந்த முறையில் உருவாகி தர நம்மால் இயலும்.// சார்வாகன் தனிப் புராணம் எழுதி வருவது எல்லாரும் அறிந்த விஷயம்தான்.

iTTiAM சொன்னது…

உணர்சிவசப்படுவோருக்கு : எப்படி எல்லா ஏற்ற தாழ்வுக்கும் வலிந்து ஒரு சாராரை காரணமாக்க முடியும் என்ற கலையினை கண்டுபிடித்து செழுமைப்படுத்தியவர் திரு. ஈ.வெ.ரா. அதே முறையின் படி அவரது கண்டு பிடிப்பான இந்த கலை தான் இப்போதைய நிகழ்வுகளுக்கு யார் காரணம் மற்றும் தீர்வு யார் கையில் உள்ளது என்று காண தடையாக உள்ளது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவைப்படுகிறது, அவலை நினைத்து உரலை இடிப்பது.
இந்த உணர்ச்சிவசம் தான் மரியாதை குறைவாகவும் ஒருமையிலும் பேச வைக்கிறது, அதே நேரம் பிரச்சினை/கலவரம் செய்த குழுவினரை மரியாதையுடன் அழைக்க வைக்கிறது. "not able to call a spade a spade" பயமோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ தடுக்கிறது.

திரு. கோவி / திரு. வவ்வால் ://கொஞ்ச நாளா பதிவே காணோம்னு பார்த்தேன் , "நச்சுன்னு ஒரு பதிவோட" வந்துட்டிங்க.// இதுவா இந்த பதிவின் நோக்கம்?

மதம் மாறியதால், கொடுமைகளுக்குள்ளானதாக கூறுவோரே,
//அவர் செய்த குற்றம் இந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஒன்றுதான். அந்த சகோதரியின் கடந்து போன 20 வருடத்தை யார் திருப்பி கொடுப்பது.//
இதே இந்து இந்தியாவில் //மேலே பின்னூட்டியிருக்கும் நாசர் என்ற சகோதரர் முன்பு இந்துவாக இருந்தவர். பழைய பெயர் நாகராஜன்.// இவருக்கு ஒன்றும் கொடுமை இழைக்கப்பட்டு விடவில்லையே. முழு சுதந்திரத்தோடு தானே இருக்கிறார். இந்த இரண்டு வகையில் எது மிக அதிகம்?

தாலிபான்களை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினாலோ, அல்லது பெரும்பான்மை இஸ்லாம் மார்க்க ஏற்போடு வாழும் பகுதிகளில் உள்ள ஏற்ற தாழ்வு குறித்து கேட்டாலோ, அதை ஏன் குறிப்பிடுகிறீர்கள், தமிழக நிலை பற்றி மட்டும் பேசுங்கள் என்போர் இங்கு ஏன் இவ்வாறு குறிப்பிட வேண்டும்
//உலக முஸ்லிம்களில் ஒருவராக சுதந்திர பறவையாக திரிகிறார்.//
//இர்ஷத் ஜஹான் என்ற இள வயது மங்கை //
மற்றும், திருமிகு. ஆயிஷா அவர்கள் என்ன தாய்த்திரு தெய்வத்தமிழ் நாட்டிலா உள்ளனர்? - திருமிகு. ஆயிஷா அவர்களின் வசிப்பிட மாநிலம் தெரியாததினால் கேட்கிறேன். மற்றபடி திருமிகு. இர்ஷத் ஜஹான் அவர்கள் குஜராத் வாசி என்பது தங்கள் ஒப்புகை.

//அநத சம்பவத்தின் உண்மையும் வெளி உலகத்துக்கு வந்திருக்கிறது. உண்மையை ரொம்ப நாள் தூங்க வைக்க முடியாது//
கேள்வியும் நானே பதிலும் நானே போல.

//எங்கள் கிராமத்திலும் ஒரு பெண் இவ்வாறு ஒரு இந்துவை "இழுத்துக் கொண்டு ஓடியது".//???!!!

"// /மதமாற்றத்தால் இவர்கள் சவுதியின் அடிமையாகவோ வாடிகனின் அடிமையாகவோ தான் மாறுவார்கள்.// இந்துக்கள் எல்லாரும் காஞ்சி மடத்துக்கு அடிமையாகவா இருக்கிறார்கள்?//"
திரு. ராபின் : கேள்வியிலேயே விடை இருக்கிறதே.

//தமிழகத்தை பொறுத்த்வரை மூமின்கள் என்பவர்களும் ஒரு இனக்குழு மட்டுமே.// எப்பொழுதிலிருந்து? எப்படி?

iTTiAM சொன்னது…

//நீங்கச் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன், தலித்துகள் பொருளாதார நிலையில் கல்வி அறிவில் முன்னேறினாலும் இவர்கள் அவர்களை மதிப்பதில்லை என்பதே உண்மை, ஒரு தலித் கலெக்டர் ஆனாலும் அவனால் மற்ற சாதியில் பெண் கொடுக்க முன்வரமாட்டார்கள். சாதிரீதியில் மட்டம் தட்டி வைக்க பொருளாதார கல்வி ரீதியிலான முன்னேற்றம் கைகொடுக்கவில்லை என்பதே உண்மை//
மிகவும் கசப்பான உண்மை.
ஆனால் அதைவிட மிகவும் கசப்பான உண்மை : //கல்வி அறிவில் முன்னேறினாலும்// //ஒரு தலித் கலெக்டர் ஆனாலும்// இவை இரண்டும் நானே என் சொந்த முனைப்பாலும், மற்றும் முனைப்பால் மட்டுமே செய்தேன் என்று உரிமை பாராட்ட முடியாதது. அவர்களுக்கு வழங்கப்படும் செயற்கையான ஊக்கம் அதிகப்படியானதன் விளைவு அது. தன்முனைப்பை மழுங்கடிக்கக்கூடியது.

அவ்வாறு கூற முடிந்தோர் மதிக்கப்படுதல் உண்மை :
1> https://www.google.co.in/search?client=ubuntu&channel=fs&q=dalit+entrepreneurs&ie=utf-8&oe=utf-8&redir_esc=&ei=DPKhUIO8Ho-zrAfxzYGIAQ
2> https://www.google.co.in/search?client=ubuntu&channel=fs&q=dalit+entrepreneur+saroj&ie=utf-8&oe=utf-8&redir_esc=&ei=T_KhUNv0D8jTrQfFrIH4BA

//தலித்துகள் ஒன்றிணைந்து பொங்கி எழவேண்டும் அவர்கள்// மிகவும் சரி. ஒப்புக்கொள்கிறேன்.

Robin சொன்னது…

//ஆனால் அதைவிட மிகவும் கசப்பான உண்மை : //கல்வி அறிவில் முன்னேறினாலும்// //ஒரு தலித் கலெக்டர் ஆனாலும்// இவை இரண்டும் நானே என் சொந்த முனைப்பாலும், மற்றும் முனைப்பால் மட்டுமே செய்தேன் என்று உரிமை பாராட்ட முடியாதது. அவர்களுக்கு வழங்கப்படும் செயற்கையான ஊக்கம் அதிகப்படியானதன் விளைவு அது. தன்முனைப்பை மழுங்கடிக்கக்கூடியது.// ஆகா எப்படியெல்லாம் தந்திரமாக பேசுகிறார்கள்!

iTTiAM சொன்னது…

என்ன தந்திரம் கண்டீர்களென்று கூறினால் புரிதல் ஏற்பட உதவும்.
மேலும் ஒரு கேள்வி : நான் கூறியதில் உண்மை மற்றும் அது நடைமுறையில் உள்ளதா இல்லையா எனவும் கூறவும்.

வேகநரி சொன்னது…

பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு துபாயில் உள்ள ஹூசைன் பாஷாவால் அனுப்பப்பட்ட எச்சரிக்கை.
இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ தலைவர்களைப் பற்றியோ
நேரடியாகவோ,
மறைமுகமாகவோ,
எதிர்ப்பது,
கருத்து தெரிவிப்பது,
தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும் காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில் உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இது தான் இஸ்லாம்

Robin சொன்னது…

//என்ன தந்திரம் கண்டீர்களென்று கூறினால் புரிதல் ஏற்பட உதவும்.// ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த இனம் இட ஒதுக்கீடு போன்ற ஊக்கத்தால் கொஞ்சம் ஆசுவாசப்பட்டு முன்னேறி வரும்போது தன்முனைப்பு மழுங்கிவிடும் என்று சொல்வது தந்திரம் அல்லாமல் வேறென்ன?

iTTiAM சொன்னது…

முழுதும் கண்டு தங்கள் பதில் கருத்தினை இடவும்.
மேலும் ஒரு கேள்வி : நான் கூறியதில் உண்மை மற்றும் அது நடைமுறையில் உள்ளதா இல்லையா எனவும் கூறவும். உள்ளது எனில் அதன் தீர்வு என்ன?

மற்றும் //ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த இனம்// இது தங்களின் நோக்கு, ஆனால் திரு. கிருஷ்ணசாமி அவர்களோ அல்லது திரு. தொல். திருமா அவர்களோ அடிக்கும் சுவரொட்டிகளில் இதற்கு மாற்றாக அல்லவா கருத்துக்கள் உள்ளது - ஆண்ட பரம்பரை என.

மத மாற்ற பரிந்துரையாளர்களுக்கு : பங்களாதேஷ் ன் சமுக சுமூக நிலவரம் என்ன? மற்றும் பெரும்பான்மை கிருத்துவர்களான வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

கல்வியோ சமூக பின்புலமோ இல்லை, சுயமாக சிந்திக்க முடியாது என்றால் எதன் அடிப்படையில் ஒரு பெரிய, வாழ்க்கைக்கும், பின்வரு தலைமுறைகளுக்குமான முடிவான முடிவாக, மதம் மாறுகிறீர்கள்? இதைப்பற்றி சுயமாக சிந்திக்க முடியுமானால், எந்த அடிப்படையில்? எவ்வாறு?
தங்கள் தலைவர்களாக ஏற்றோர் சொல், சிந்தனை எனில், அவர்களுக்கு எவ்வாறு அது (கல்வி) வாய்த்தது? அதன் பின்புலம் என்ன?

மாறாதீர்கள் என்பதோ / கஷ்டப்படுங்கள் என்பதோ இல்லை என் கருத்து. என்ன கிடைக்கும் என்று எண்ணுகிறீர்கள்? அது எப்படி கிடைக்கும் என்று எண்ணுகிறீர்கள்? என்பதன் தெளிவு இருக்கிறதா? மாற்றுக்கருத்துகள் எவை எவை என்ன என்ன என்று தேடிப்படிக்க முயன்றீர்களா? அதன் பிறகு சீர் தூக்கி பார்த்து எடுக்கப்பட்ட முடிவா?

suvanappiriyan சொன்னது…

//வேண்டுமெனில் நம் தலித் சகோக்க்களுக்கு புதிய மதம்,மத புத்தகம் சிறந்த முறையில் உருவாகி தர நம்மால் இயலும்.//

ஹாஸ்யமாக நிறைய எழுதுகிறீர்கள்.

இந்த முடிவை சார்வாகனும் பின் பற்ற மாட்டார். அவரது குடும்பத்தவரே புறம் தள்ளி விடுவார்கள். நடக்கிற காரியமா ஏதாவது தீர்வு சொல்லுங்க சார்வாகன்.

suvanappiriyan சொன்னது…

வேக நரி!

இந்த செய்தியை படிக்கவும். இந்திய தாலிபான். இதற்காக முழு இந்துக்களையும் தீவிரவாதியாக நான் சொல்ல மாட்டேன்.

ஜபல்பூர்: ராமரை மோசமான கணவர் என்று கூறிய ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்தவர் ராம் ஜெத்மலானி. பிரபல வழக்கறிஞரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் பற்றி குறிப்பிடுகையில், மீனவர்கள் சிலர் பேச்சைக் கேட்டு தன் மனைவி சீதையை தீக்குளிக்கச் சொன்ன ராமர், மிகவும் மோசமான கணவர் என்று குறிப்பிட்டிருந்தார். ராம் ஜெத்மலானியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ம.பி., மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த மகாமண்டலேஸ்வர் சுவாமி ஷ்யாம் தாஸ் மகரான் என்ற சாமியார் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராமரைப்பற்றி தவறாக கூறிய ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ராம் ஜெத்மலானியின் கருத்தால் வெகுண்ட தனது சீடர்கள், இது தொடர்பாக தம்மை போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதையடுத்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாமியாரின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது சீடர்களும் இளைஞர்களும் ராம் ஜெத்மலானி குறித்து அறியவும், அவரது வீட்டு அட்ரசை கண்டுபிடிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள சாமியார், தனது பேச்சு மிரட்டல் விடுக்கும் தொனியில் சொல்லப்பட்டது அல்ல என்றும், வன்முறையற்ற எதிர்ப்பு செயல் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=585198-

வருண் சொன்னது…

****இவை இரண்டும் நானே என் சொந்த முனைப்பாலும், மற்றும் முனைப்பால் மட்டுமே செய்தேன் என்று உரிமை பாராட்ட முடியாதது. அவர்களுக்கு வழங்கப்படும் செயற்கையான ஊக்கம் அதிகப்படியானதன் விளைவு அது. தன்முனைப்பை மழுங்கடிக்கக்கூடியது.***

அட அட அட!!!ஆக, பார்ப்பானுக மட்டும்தான் இயற்கை ஆக்கத்தில் எல்லாத் துறையிலும் வந்தவனுக. அப்புறமும் அவனுக புத்தி மட்டும் ஏன் நாளுக்கு நாள் மழுங்கிக்கிட்டே போகுது???

Robin: Dont waste your time with this "trash"! His brain lacks some capabilities!

I know cases where intelligent SC/ST candidates were selected in open competition but they were filled in SC/ST quota in premier institutes! Even if they have talents, these brahmin bastards are manipulative. Some idiots overlook such things hapenning around too as their brain lacks some capabilities.

iTTiAM சொன்னது…

ஆம். இந்த கேள்விகளுக்கு உண்மையான விடைகளை விருப்பு வெறுப்பின்றி தேடினால் பல கசப்பான உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டி வரலாம்.
சரியாக, முழுதும் இங்குள்ள பின்னூட்டங்களை படித்தீர்களே ஆனால், இந்த கருத்துகளுக்கும் பதில் கிடைக்கும்.
//I know cases where.....//

மறுபடியும் உணர்ச்சி வசப்பட்ட, அவலை நினைத்து உரலை இடித்தல் பயனில்லாதது. இங்கு நான் சொல்வது மற்றும் சுட்டிக் காட்டுவது ஒட்டு மொத்த பெரும்பான்மை சமூக எண்ண நிலை. தாங்கள் சொல்வது.....???

//அப்புறமும் அவனுக புத்தி மட்டும் ஏன் நாளுக்கு நாள் மழுங்கிக்கிட்டே போகுது???// இதனால் என்ன நன்மை? இது எவ்வாறு முன்னேற்றத்திற்கு இட்டு செல்லும்.

ஹ்ம்ம்....மீண்டும் ஒருமுறை : //உணர்சிவசப்படுவோருக்கு : எப்படி எல்லா ஏற்ற தாழ்வுக்கும் வலிந்து ஒரு சாராரை காரணமாக்க முடியும் என்ற கலையினை கண்டுபிடித்து செழுமைப்படுத்தியவர் திரு. ஈ.வெ.ரா. அதே முறையின் படி அவரது கண்டு பிடிப்பான இந்த கலை தான் இப்போதைய நிகழ்வுகளுக்கு யார் காரணம் மற்றும் தீர்வு யார் கையில் உள்ளது என்று காண தடையாக உள்ளது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவைப்படுகிறது, அவலை நினைத்து உரலை இடிப்பது.
இந்த உணர்ச்சிவசம் தான் மரியாதை குறைவாகவும் ஒருமையிலும் பேச வைக்கிறது, அதே நேரம் பிரச்சினை/கலவரம் செய்த குழுவினரை மரியாதையுடன் அழைக்க வைக்கிறது. "not able to call a spade a spade" பயமோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ தடுக்கிறது.//

இது இருக்கும் வரையில், தாங்கள் காரணமாக கூறும் ஒரு சாராரை மொத்தமாக கொண்டு வங்காள விரிகுடாவிலோ / அரபிக்கடலிலோ குடியேற்றினாலும்!! ஒன்றும் மாறப்போவதில்லை.

முடிந்தால் ஒருமுறை முதல் பின்னூட்டத்திலிருந்து படித்துப் பார்க்கவும், சற்று அமைதி கிடைக்கலாம். அல்லது அதன் பிறகு ஒரு முழு கண்ணோட்டத்துடன்
அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து ஒரு பதிலிடலாம்.

வருண் சொன்னது…

***ஆனால் அதைவிட மிகவும் கசப்பான உண்மை : //கல்வி அறிவில் முன்னேறினாலும்// //ஒரு தலித் கலெக்டர் ஆனாலும்// இவை இரண்டும் நானே என் சொந்த முனைப்பாலும், மற்றும் முனைப்பால் மட்டுமே செய்தேன் என்று உரிமை பாராட்ட முடியாதது****

Here you assume something.

* How do you say the collector did not earn the IAS degree with his own talents?

* Why do you assume a collector who is from SC/ST is always came thru "special channel"?

Please answer the question. Thanks!

வருண் சொன்னது…

I know a brahmin guy who is good at theories who practical skills a awful. He cant do anything right in a lab as he lacks skills. But he is a top student. All the brahmin professors just GAVE him 100% for his practicals and "saved" him.

Now, he does not deserve what he got. But he never feels ashamed of the marks he was given.

They manipulate according to their convenience. This one case I have seen with my own eyes. I am sure there are so many is happening like that.

***இவை இரண்டும் நானே என் சொந்த முனைப்பாலும், மற்றும் முனைப்பால் மட்டுமே செய்தேன் என்று உரிமை பாராட்ட முடியாதது***

He fits in very well here. But IDIOTS like you never understand such things also happening bcos of lack of a "proper brain" for you!

வருண் சொன்னது…

iTTiAM : The problem here is your BRAIN which does not have some capabilities. I can SEE that. Not only me, many can see that now. You-all have this problem as you lack rational thinking. It is a "curse" for your community and so you look like an IDIOT for people like me!

வருண் சொன்னது…

இவர்களை தாழ்ந்தவனாகப் பார்க்கும் பார்ப்பனர்களையும், இவர்களை அடித்து துன்புறுத்தும் "உயர்சாதி" இந்துக்களையும், இந்து மதப் பற்றுள்ளவர்கள், இந்துக்கள் எல்லாரும் சமம் என்று நம்பும் இந்துக்கள், ரெங்கா, iTTiAM போன்ரவர்கள் உள்ளே இறங்கி இவர்களுக்காகப் போராடுவார்களா?

மாட்டார்கள்!!!

ஆனால் இங்கே வந்து

* இந்து மதத்தை விட்டுப் போயிடாதீங்க. அடிபட்டு செத்தால் என்ன? நம்ம மதம் தான் முக்கியம் னு பேசுவார்கள்.

* எந்த ஒரு சூழலையும் அவர்கள் வசதிக்கு பெரியாரை விமர்சிப்பார்கள்.

* வீடு எரிந்துகொண்டிருக்கும்போது ரிசெர்வேஷனைக் கொண்டு வருவார்கள்.

ஆனால் தான் யோக்கியமாக, நியாயமாகப் பேசுவதாக நடிப்பார்கள்.

அவன் அவன் பிரிச்சினை அவன் அவனுக்கு, பார்ப்பானுக இவனுக வேலையப் பார்க்க வேண்டியதுதானே?

suvanappiriyan சொன்னது…

//அவன் அவன் பிரிச்சினை அவன் அவனுக்கு, பார்ப்பானுக இவனுக வேலையப் பார்க்க வேண்டியதுதானே?//

என்ன அப்படி சொல்லிட்டீங்க..கண்டுக்காம உட்டாங்கன்னா பார்ப்பணர்களை தவிர மற்ற எல்லோரும் மதம் மாறிடுவாங்க. அப்போ யாரை சூத்திரன் என்று சொல்லி காலத்தை ஓட்டுவது?

ஒரு முஸ்லிமை பார்த்து 'நீ சூத்திரன்' என்று எந்த பாப்பானாவது சொன்னால் அந்த இடத்திலேயே அந்த பார்ப்பனனின் நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவான் அந்த முஸ்லிம். அந்த அளவு சுயமரியாதையை குர்ஆன் கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் இந்து மதத்தில் தனக்கு கீழ் உள்ள சாதியினரை கும்பிடும் கோவிலிலேயே மந்திரங்கள் மூலம் சூத்திர பட்டத்தை தாராளமாக கொடுக்க முடியும். எனவே தான் இஸ்லாம் வளர்வதை அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

வருண் சொன்னது…

இவங்க பிற மதத்தவரை/மதத்தைப் பார்த்து பயப்படவேண்டியதே இல்லை. தன் மதத்தவரை சமமாக நடத்தினாலே போதும். அதை செய்ய முடியாததாலதான இப்படி எல்லாம் செய்றாங்க.

இந்து மதத்தை கட்டிக்காக நினைக்கும் பார்ப்பனர்கள், தங்கள் மகள்களை சக இந்து ஒரு தலித்துக்கு கட்டி கொடுக்கட்டுமே???

ஏன் செய்ய மாட்டேன்கிறாங்க??? இவங்களே எல்லா இந்துக்களும் சமம்னு நினைப்பதில்லை, அதுதான் பச்சையான உண்மை.

உடனே பிறமதங்களிலும் இதே பிரச்சினை இருக்கு என்பார்களேயொழிய தன் மதத்தில் எல்லோரையும் சம்மாக நினைக்க இவர்களால் முடியாது!

சமத்துவத்தைக் கொண்டுவருவதை விட்டுப்புட்டு பகவத்கீதை மண்ணாங்கட்டினு எதையாவது ஒளறிக்கிட்டு திரிவார்கள்.

சரி ஒண்ணால ஒரு மயிரையும் புடுங்க முடியலை, அடி வாங்கிறவன் எப்ப்படியும் போய் தொலையிறான்னு அவனை விட்டாவது தொலையேன்???

வருண் சொன்னது…

****வேண்டுமெனில் நம் தலித் சகோக்க்களுக்கு புதிய மதம்,மத புத்தகம் சிறந்த முறையில் உருவாகி தர நம்மால் இயலும்.***

ஆக, இந்துக்களால் தலித்களை தன் மதத்தில் சமமமாக கருத முடியவே முடியாதுனு ஒரு முடிவுக்கு வந்தாச்சு???

நல்ல முடிவுதான்.. :)))

நீங்க இன்னொரு மதம் தயாரிச்சு அவங்கள காப்பாத்தப் போறீங்களாக்கும்? :))))

ஏங்க எதையாவது அர்த்தம் இல்லாமல்.. அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு வாழ விடுங்க. அவங்களுக்குத் தேவைனா அவங்களே ஒரு மதம் தயாரிச்சுக்குவாங்க. ஏன் அதுவும் உங்களுக்குத்தான் தெரியுமா? அவங்களுக்கு எதுவுமே தெரியாதா??

சும்மா எதையாவது சொல்லாதீங்க, சார்! :)))

Nasar சொன்னது…

** பகுத்தறிவுவாதியான கோபி மத மாற்றம் பற்றி சிந்திப்பது புரியவே முடியல்ல.**
இவரு எப்போங்க தன்னை பகுத்தறிவுவாதி என்று சொன்னாரு ??!!
அப்படியான ஒரு இமேஜ் பிலிம் காட்டுறாரு ....உண்மையிலேயே இவரு
பகுத்தறிவுவாதி என்று இருந்தால், தன்னை "சூத்திரன் " என்று மற்றவர்கள்
விளிப்பதை ஏற்றுக்கொள்வார் அதாவது இந்துவிலிருந்து விலகியவருக்கு "சூத்திரன் ,மூத்திரன் " எல்லாம் எதுவுமில்லை ஒருவேளை அம்மார்கத்திலேயே இருந்தால்தான் சூத்திரன் [பாவப்பட்ட யோனிக்குள் பிறந்தவன் , விபச்சார சந்ததியினர் ] என்று கூப்பிட்டால் கோவம் வரணும் .....இவருக்கு கோவம் வருதே ஏன் ? செருப்பால் அடிப்பேன் என்று சொல்றார் ...!! அதுனாலே இவரு பகுத்தறிவுவாதி அல்ல .வருணாசிரமத்தை தோற்றுவித்தவர் கண்ணன் என்கிற கிருஷ்ணன் தானே ..
கோவியார் தலித்துகளுக்கு மதம் மாற அட்வைஸ் சொல்றார் ....
நாம் இவர் பெயர் மாற்றுவதற்கு அட்வைஸ் சொல்வோம் ......
--

iTTiAM சொன்னது…

//ஒரு சிறு யோசனை (அ) கேள்வி : நீங்கள் ஏன் ஒருமுறை தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காத பார்ப்பனர்களை வரிசையாக நினைவு படுத்திப்பார்க்க முயற்சிக்கக்கூடாது?
அல்லது உங்களுக்கு தெரிந்த தங்களைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்களில் உள்ளவர்களை மற்றும் தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காதவர்களில் உள்ளவர்களை தங்களுடைய மஞ்சள் கண்ணாடி வடிகட்டி வழியாக ஒரு முறை உற்று நோக்கி வரும் விடையை இங்கு பகிரக்கூடாது? //

But he is a top student??!! ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறதே!!!

// Now, he does not deserve what he got. But he never feels ashamed of the marks he was given.
They manipulate according to their convenience. This one case I have seen with my own eyes. I am sure there are so many is happening like that.
***இவை இரண்டும் நானே என் சொந்த முனைப்பாலும், மற்றும் முனைப்பால் மட்டுமே செய்தேன் என்று உரிமை பாராட்ட முடியாதது***//

மிகவும் சரி. ஆம் உரிமை பாராட்ட முடியாது. தாங்கள் கூறும் அந்த ஒரு சாரார் 3% மோ அல்லது அதற்கும் குறைவோ இருக்கும் நிலையில் இந்த 'டாப்பர்' சென்று தலை சொரிந்து கொண்டு நிற்கப்போவது யாரிடம்? இந்த 'டாப்பர்' அவமானப்பட வேண்டும். அதுவே சரி.

//GAVE him 100% for his practicals and "saved" him.// எனவே இந்த கல்லூரியில் / பயிலகத்தில் செயல் முறை தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை தவறு மற்றும் குழு மனப்பான்மை உள்ளது. இது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். மற்றும் விசித்திரமாக ஏனைய சமூக வகுப்பார் எவரும் இன்றி நடத்தப்படும் இந்த பயிலகம் ஒரு மாதிரியாக கொள்ளப்பட்டு இந்த வகுப்பார் சமூக தீங்கானவர் என்ற நிலையில், இவர்களை ஒதுக்குதலே இருப்பதில் சிறந்த தீர்வு. ஆமாம், சொல்லி தண்டனை வாங்கித்தருவதில் என்ன சிக்கல் மற்றும் தடுப்பது எது - ஏதும் குற்ற உணர்ச்சியாக இருக்காது என்று நம்புகிறேன்.

//Why do you assume// //I am sure there are so many is happening like that.//

முடியாதது = முடியாத நிலை இருப்பது. ரைட் ராயலாக சொல்ல எது தடுக்கிறது? அவ்வாறு சொல்ல முடிந்துவிட்டால் அதுவே மகிழ்வான தருணம் - வேறு என்ன வேண்டும் - மற்ற எல்லாம் கைக்கெட்டும் பொருளாகும்.
இதுவும் மேலே உள்ள பின்னூட்டத்தில் உள்ளதுதான்
//அவ்வாறு கூற முடிந்தோர் மதிக்கப்படுதல் உண்மை :
1> https://www.google.co.in/search?client=ubuntu&channel=fs&q=dalit+entrepreneurs&ie=utf-8&oe=utf-8&redir_esc=&ei=DPKhUIO8Ho-zrAfxzYGIAQ
2> https://www.google.co.in/search?client=ubuntu&channel=fs&q=dalit+entrepreneur+saroj&ie=utf-8&oe=utf-8&redir_esc=&ei=T_KhUNv0D8jTrQfFrIH4BA

//தலித்துகள் ஒன்றிணைந்து பொங்கி எழவேண்டும் அவர்கள்// மிகவும் சரி. ஒப்புக்கொள்கிறேன். //

//அந்த அளவு சுயமரியாதையை....// - எது நாக்கை இழுத்து வைத்து அறுப்பதா? - சுய மரியாதைக்கு அருமையான எடுத்துக்காட்டு.

//சமத்துவத்தைக் கொண்டுவருவதை விட்டுப்புட்டு பகவத்கீதை மண்ணாங்கட்டினு எதையாவது ஒளறிக்கிட்டு திரிவார்கள்.//
கொண்டு வந்து அதற்கும் உயர் நிலையாக்கம், வைதீக மயப்படுத்தல் என்று விமர்சனம் வாங்கி கட்டி கொள்ள வேண்டியதுதானே. அதை விட்டு அதிகம் பேசுவானேன்......???!!!

//அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு வாழ விடுங்க. அவங்களுக்குத் தேவைனா அவங்களே ஒரு மதம் தயாரிச்சுக்குவாங்க. ஏன் அதுவும் உங்களுக்குத்தான் தெரியுமா? அவங்களுக்கு எதுவுமே தெரியாதா?? // ..:-) :-)

suvanappiriyan சொன்னது…

//எது நாக்கை இழுத்து வைத்து அறுப்பதா? - சுய மரியாதைக்கு அருமையான எடுத்துக்காட்டு.//

ஹி..ஹி....

சூத்திரன் வேதம் ஓதினால் நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டும் என்று சொல்பவனிடம். அதே முறையில் ஒருவனை சூத்திரன் என்று விளித்தால் அவன் நாக்கையும் இழுத்து வைத்து அறுத்தால் இனி சொல்ல அவனுக்கு மனம் வருமா? இடத்தை காலி செய்து விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி விடுவான்.

புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறேளே! :-)

iTTiAM சொன்னது…

திறமுடைய எந்த நலிவுற்ற பிரிவினரும் பிரச்சினைக்குரிய மேல்நிலை சாராரால் ஒதுக்கப்பட்டு விடவில்லை -:) திரு. அம்பேத்கர் அவர்கள் முதல், முன்னாள் தமிழக முதல் குடும்பம் வரை.:-)


மேலும், இந்த iTTiAM, என்ன பார்த்திருக்ககூடும், அல்லது செய்திருக்ககூடும் என்பதான கேள்வியின் நாயகர்களின் கேள்விகளுக்கு.
இவை கண்டு கேட்டவை மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு புகழ் வாய்ந்த மத்திய அரசு சார் தொழில் நுட்ப கல்லூரிக்கு, வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும் - நல் மதிப்பெண் கொண்ட பொருளாதார நிலையில் வாட்டமுடைய மாணவ மாணவியருக்கான - கல்வி உதவித்தொகைக்கான - நேர்காணல் பொழுதுகளில் - ஒரு 80 முதல் 85 பேர் வரை ஒவ்வோர் ஆண்டும் - கண்டவை.

முன் வந்து, எதிர்த்து அந்த இளம் மாணவர்கள் பதில் கூறுவதை கேட்கையில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை. அதே நேரம் ஒரு சில மாணவர்கள் அங்கு உள்ள பாடத்திட்டத்தில் தேவை எனப்படும், ஒரு தொழில் நுட்ப வல்லுனன் என அழைக்கப்பட தகுதி கொள்ள பயில வேண்டிய பாடத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மட்டுமே கூட படித்து தேர்வெழுதி தேர்ந்து இந்த உலக போட்டிக்காட்டில் ஜீவித்திருக்க முயல வேண்டிய நிலை எண்ணி தோன்றிய பயம், நிச்சயமற்ற தன்மைக்கான பரிதாபம் எல்லாம் கலந்த உணர்வு, எண்ணம் ஏற்படுத்தியவையே இங்கு சொல்ல முயன்றது.

வருண் சொன்னது…

***புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறேளே! :-) ***

அவரிடம், நீர் ஏன் அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்த கலக்டர் தகுயில்லாமல் "கலக்டர்" ஆனார்னு சொல்றீர் ? (அவர் உண்மையிலேயே ஒரு சிறந்த மாணவனாகப் படித்து ஐ ஏ எஸ் பரிட்சையில் தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கலாம்.. )

இன்னைக்கு தாழ்த்தப்பட்டவன் என்பதால அவமானப்படுத்தப் படுகிறார்..னு கேட்டால் ..

He does not accept/admit that his assumption is wrong! :)))

அதற்கு பதில் சொல்ல முடியாமல் எல்லாத்தையும் கலக்கி, குழப்பி ஒரு பதில் கொடுத்துவிட்டார்..

ஆமா, இப்படித்தான் எதையாவது ஒளறி பொழைப்பை ஓட்டுறாங்க esp when they are cornered.

They all fall in the same "category" ! LOL

iTTiAM சொன்னது…

//புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறேளே//
ஆஹா என்னே விளக்கம்.

//ஐக்கியமாகிறவர்களில் மெத்த படித்தவர்கள்.
கைநாட்டு சுப்பனும் , கபாலியும் அல்ல என்பதை நினைவு படுத்துகிறேன்..//
என்னே மரியாதை கைநாட்டு சுப்பருக்கும், கபாலி அவர்களுக்கும்.

அது சரி, மேலே உள்ள பல கேள்விகளுக்கும், பின்னூட்டங்களுக்கும், பதிலளித்துவிட்டீர்களென தோன்றுகிறது. இடம் சுட்டவும்.

iTTiAM சொன்னது…

He does not accept/admit that his assumption is wrong! :))) :-) :-)

அதற்கு பதில் சொல்ல முடியாமல் எல்லாத்தையும் கலக்கி, குழப்பி ஒரு பதில் கொடுத்துவிட்டார்..


They all fall in the same "category"!

Thanks.

வருண் சொன்னது…

iTTiAM:

நீர் ஒரு அடிமுட்டாள்னு உம் பின்னூட்டத்திலேயே தெரியுது பாரு..

நீ என்ன பண்ணுற???

ஒரு தாழ்த்தபட்ட வகுப்பைச் சேர்ந்த கலக்டருக்கு அவன் சாதியால கொடுக்கப் படவேண்டிய மரியாதை கெடைக்கலைனு சொல்றோம்.

மூளையில்லாத நீ, அப்படி வந்த கலக்டர் ரிசெர்வேஷனாலதான் வந்திருப்பான்னு சொல்ற..

எந்த ஆதாரத்தை வச்சு சொல்றடா முண்டம்? னு கேட்டா எதையாவது ஒளரித்தள்ளுற..

அம்பேத்கார் எப்படிடா முண்டம் பெரிய சட்டவள்லுனரா ஆனாரு??

ரிசெர்வேஷன்ல வந்தா இல்லைனா பிறப்பாலேயே அவர் ஒரு அறிவாளி என்பதாலா?

அம்பேத்கார் போல ஒரு சில விழுக்காடுகள், திறமையால் கலக்டர் ஆனாலும், அவர்களை சாதி அடிப்படையில் மட்டமா நடத்துகிரார்கள் என்றால், அது கூட உன்னை மாரி முட்டாப் பயலுகளுக்குப் புரியமாட்டேங்கிது.

உடனே ரிசர்வேஷனாலதான் அவன் கலக்டர் ஆனான்னு ஒளருற. நீ முட்டாள்னு இப்போ தெரியுதா?

பார்ப்பானுகளும் உன்னை மாரித்தான்.. முட்டாப்பயலுக..

நீ ஒரு நல்ல உதாரணம்.. உனக்கு திரந்த மனது கெடையாது. ரிசெர்வேஷனைத் தவிர எதுவுமே உன் கண்னுக்குத் தெரியாத குருட்டுக் கபோதினு!

iTTiAM சொன்னது…

திருமிகு. அருண் அவர்களே,

//உன்னை மாரித்தான்.. முட்டாப்பயலுக..// இதனால் என்ன குடி முழுகிப்போய் விட்டது.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு சாராரிடமிருந்துதான் அங்கீகாரம் தேவைப்படுகிறது இல்லையா??!!!

//ரிசெர்வேஷன்ல வந்தா இல்லைனா பிறப்பாலேயே அவர் ஒரு அறிவாளி என்பதாலா?//
தன் சொந்த திறமையால், மற்றும் பிறப்பாலேயே ஓர் அறிவாளியான, முன்னேற்றம் கண்ட ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட, அந்த உயர்வாக நினைக்கப்படும் ஒரு சாராரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்து ஏங்க வேண்டியிருக்கிறது. பரிதாபம். மேலும் அந்த அங்கீகாரம் என்பது தன் மகளையோ அல்லது மகனையோ அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதிப்படுகிறது.
ஆனால் உண்மை நிலை ஆனது மிகவும் விசித்திரமாக உள்ளது. முதலாவதாக எந்த பெண்ணும், பையனும் முற்று முழுதாக தன் பெற்றோர் சொல் கேட்டு தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில்லை - இன்றைய நிலையில். இரண்டாவதாக, தாங்கள் கூறியுள்ளபடி உள்ள - தன் சொந்த திறமையால், மற்றும் பிறப்பாலேயே ஓர் அறிவாளியான, முன்னேற்றம் கண்ட ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட இந்த ஒரு சாராரால் விட்டு வைக்கப்படுவதில்லை - கொத்திக்கொண்டு போய் விடுகிறார்கள் இந்த கால யுவன் யுவதிகள்.
அப்படி இல்லாத பட்சத்தில் தன் வாழ்வையோ தன் மகன் (அ) மகள் வாழ்வையோ துணை அளிக்க என்ன அவசியம்.
முந்தையதன் ரிசல்ட் : தன்னொடுத்தோரை கைதூக்கிவிட்டுருக்கக்கூடிய ஒரு கை எண்ணிக்கை குறைதல்.
உண்மையான திறமை எந்த தடையையும் உடைக்கும் எந்த காலத்திலும். அப்படியான உண்மையான திறமை, இந்த இந்திய கூத்துகள் ஏதும் தெரியாத வெளி நாட்டாராலும் மதித்து ஏற்கப்படுகிறது.

iTTiAM சொன்னது…

by the way, இன்னொரு ஒரு மணிநேரம் இணைய உலா இன்று, பிறகு bye for now. நாளை முதல் அலுவலக வேலை மறுபடியும் தொடங்குகிறது.

suvanappiriyan சொன்னது…

ஒரு பார்ப்பன சிறுவனை தலித் சேரியில் 10 வருடம் விடுங்கள்: அதே போல் ஒரு தலித் சிறுவனை அக்ரஹாரத்தில் 10 வருடம் விட்டுப் பாருங்கள். பார்ப்பனன் ஒரு தலித் இளைஞனாக உருவெடுப்பான். அதேபோல் அக்ரஹாரத்தில் வளர்ந்த தலித் ஒரு அச்சு அசலான அம்பியாக விஸ்வரூபம் எடுப்பான். எங்கு தங்குகிறோமோ அதன் பாதிப்பு நமது அறிவு வளர்ச்சியிலும் ஏற்படும்.

எனவே பார்ப்பனர்களுக்கு அறிவு அதிகம் உள்ளது என்று யாரும் பீலா விட வேண்டாம். அறிவு அனைத்து மனிதர்களுக்கும் சமமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. சுற்று புற சூழலே ஒரு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகிறது.

எல்லா இனத்தவருக்கும் அவர்களின் விகிதாச்சாரப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை இட ஒதுக்கீடு அவசியம் தேவை.

வருண் சொன்னது…

***இதனால் என்ன குடி முழுகிப்போய் விட்டது.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு சாராரிடமிருந்துதான் அங்கீகாரம் தேவைப்படுகிறது இல்லையா??!!!***

Are you STUPID or something? Or living in your own fucking world as your brain got fucked-up? Who said that paappaan recognition is needed and it is inevitable for ANYBODY??

All you do is "licking your own bottom" in public!!!


***தன் சொந்த திறமையால், மற்றும் பிறப்பாலேயே ஓர் அறிவாளியான, முன்னேற்றம் கண்ட ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட, அந்த உயர்வாக நினைக்கப்படும் ஒரு சாராரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்து ஏங்க வேண்டியிருக்கிறது.***

Who said that???!!! I know you are SICK from the beginning itself. It takes a little while to show the world that you are an IDIOT. Now from your own statement it is very clear you are closed-minded moron pretending to be "neutral" and "care about others".

நீ ஒரு லூசுப்பய மாரி ஒளறிக்கிட்டே திரி.. உன் சின்னப்புத்தி எனக்கு நல்லாவே தெரியும். உன் நடுநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உன் ஈனப்புத்தி வெளிவந்து இருக்கு பாரு.

Nobody needs your fucking recognition moron! Get that in your fucked-up brain before you die!

வேகநரி சொன்னது…

மக்களுக்கு எதிராக ஜாதி வெறிகொண்டு தாக்கியவர்கள் கைது செய்யபட்டு தண்டிக்கபட வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு அரசு வழங்க வேண்டும். இப்படியான சந்தர்பங்களை பயன்படுத்தி அரபு ஆக்கிரமிப்புக்கு ஆள்பிடிக்கும் செயல் செய்வதை அரசு தடைசெய்ய வேண்டும்.

வருண் சொன்னது…

Did Ramadoss condemn that act of burning innocent people's homes? நானும் தேடித் தேடிப் பார்க்கிறேன், இது சம்மந்தமாக வாயையே திறந்தமாரித் தெரியலை!! காடுவெட்டி பேசுவதெல்லாம் சரி என்கிறார்களா வன்னிய இனத்தவரெல்லாம்???

வருண் சொன்னது…

***iTTiAM சொன்னது…

by the way, இன்னொரு ஒரு மணிநேரம் இணைய உலா இன்று, பிறகு bye for now. நாளை முதல் அலுவலக வேலை மறுபடியும் தொடங்குகிறது.***

அப்படியே நிரந்தரமா வேலை நிமித்தமாகப் போயிட்டால் எல்லாருக்கும் நல்லது. உன் பார்ப்பான் ஜால்ரா உளறல் எல்லாம் இங்கே, அதுவும் இப்போத் தேவையே இல்லை! தயவு செய்து திரும்ப வரவேணாம். நன்றி! :)

suvanappiriyan சொன்னது…

//மக்களுக்கு எதிராக ஜாதி வெறிகொண்டு தாக்கியவர்கள் கைது செய்யபட்டு தண்டிக்கபட வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு அரசு வழங்க வேண்டும். இப்படியான சந்தர்பங்களை பயன்படுத்தி அரபு ஆக்கிரமிப்புக்கு ஆள்பிடிக்கும் செயல் செய்வதை அரசு தடைசெய்ய வேண்டும்.//

ஹி...ஹி...பூணூலும் கொண்டையும் அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. மறைத்துக் கொள்ளவும். :-)

iTTiAM சொன்னது…

//எல்லா இனத்தவருக்கும் அவர்களின் விகிதாச்சாரப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை இட ஒதுக்கீடு அவசியம் தேவை//
நன்று. மறுக்கவில்லை. பிறகு ஏன் கல்வித்தகுதியும் இங்கு பேசப்படுகிறது?


//ஒரு தாழ்த்தபட்ட வகுப்பைச் சேர்ந்த கலக்டருக்கு அவன் சாதியால கொடுக்கப் படவேண்டிய மரியாதை கெடைக்கலைனு சொல்றோம்.// யாரிடமிருந்து?

//It takes a little while to show the world....// நான் ஒரு அறிவிலி என்பது எந்த விதத்தில் தங்களின் மற்றும் பாதிக்கப்பட்டோர் அறிதிறனை உயர்த்துகிறது?


இந்த வாதப்பின்னூட்டத்திரி தொடங்கியது, சமூக அங்கீகாரம், மரியாதை என்பதற்கான காரணிகள் பற்றி. அவை எவ்வாறு அந்த நோக்கத்தினை நோக்கி அல்லது வேறு வகையில் பங்கு பணி ஆற்றுகின்றன என்பது குறித்து - நினைவூட்டலுக்காக.

வருண் சொன்னது…

***
//ஒரு தாழ்த்தபட்ட வகுப்பைச் சேர்ந்த கலக்டருக்கு அவன் சாதியால கொடுக்கப் படவேண்டிய மரியாதை கெடைக்கலைனு சொல்றோம்.// யாரிடமிருந்து?***

1) "ஒரு சாரார்"னு நீர் சொல்வது யாரைனு தெளிவாச் சொல்லும். நேரடி பதில் தேவை..

இங்கே பேசுவது முக்குலத்தோர் மற்ரும் வன்னியர்களின் அடாவ்டித் தனத்தை.. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை ஜாதி அடிப்படையில் மதிக்காததை..தாக்குவதை. அதை உமது மண்டையில் ஏற்றும்.

Anyway answer question one!

வருண் சொன்னது…

*** இப்படிப்பட்ட ஒரு சாராரிடமிருந்துதான் அங்கீகாரம் தேவைப்படுகிறது ***

***எப்படி எல்லா ஏற்ற தாழ்வுக்கும் வலிந்து ஒரு சாராரை காரணமாக்க முடியும் என்ற கலையினை கண்டுபிடித்து செழுமைப்படுத்தியவர் திரு. ஈ.வெ.ரா. அதே முறையின் படி அவரது கண்டு பிடிப்பான இந்த கலை தான் இப்போதைய நிகழ்வுகளுக்கு யார் காரணம் மற்றும் தீர்வு யார் கையில் உள்ளது என்று காண தடையாக உள்ளது.***

யார் இந்த ஒருசாரார்????

வருண் சொன்னது…

In a debate, you should learn to answer questions addressed to you and clarify what you are saying..esp when you are being "very vague in wordings" like this saying eg. "ஒரு சாராரிடமிருந்துதான்"

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மையிலேயே இவரு
பகுத்தறிவுவாதி என்று இருந்தால், தன்னை "சூத்திரன் " என்று மற்றவர்கள்
விளிப்பதை ஏற்றுக்கொள்வா//

சாரு லாஜிக் பேசுறாராம் லாஜிக்

உங்கள் லாஜிக் படி இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால் உங்களுக்கு எரியக் கூடாது, வடிவாலு பானியில் அது எதோ தீவிரவாதிங்களைச் சொல்றாய்ங்க நாம் தான் முழுமீன் சாரி மும்மீன் ஆயிற்றே நாம தான் வம்புக்கும் தும்புக்கும் போகலையேன்னு பொத்திக்கிட்டுப் போகனும் ஆகவே அப்படியே போங்களேன்னு எவரேனும் சொன்னால் அப்படியே போய்விடுவீர்களா ?

ஒரு வைதீக பார்பானுக்கு நீங்களும் சூத்திரன் தான் பொத்திண்டு போவேளா ?

iTTiAM சொன்னது…


எந்த கேள்வி என்பதோடல்லாமல், என்ன பதில் சொல்லவேண்டும் என்பதையும் கட்டளை இட எத்தனிக்கிறீர்கள் போல.

// "ஒரு சாரார்"னு நீர் சொல்வது யாரைனு தெளிவாச் சொல்லும்// better late than never "ஒரு சாரார்" = மதியாதோர், முன் முடிவு கொண்டோர், நல்வழி கொண்டு முன்னேறத்துடிப்போர் முன் தடைக்கல்லாக நிற்போர்.

ஹ்ம்ம்....மீண்டும் ஒருமுறை : //உணர்சிவசப்படுவோருக்கு : எப்படி எல்லா ஏற்ற தாழ்வுக்கும் வலிந்து ஒரு சாராரை காரணமாக்க முடியும் என்ற கலையினை கண்டுபிடித்து செழுமைப்படுத்தியவர் திரு. ஈ.வெ.ரா. அதே முறையின் படி அவரது கண்டு பிடிப்பான இந்த கலை தான் இப்போதைய நிகழ்வுகளுக்கு யார் காரணம் மற்றும் தீர்வு யார் கையில் உள்ளது என்று காண தடையாக உள்ளது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவைப்படுகிறது, அவலை நினைத்து உரலை இடிப்பது.
இந்த உணர்ச்சிவசம் தான் மரியாதை குறைவாகவும் ஒருமையிலும் பேச வைக்கிறது, அதே நேரம் பிரச்சினை/கலவரம் செய்த குழுவினரை மரியாதையுடன் அழைக்க வைக்கிறது. "not able to call a spade a spade" பயமோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ தடுக்கிறது.//

இது இருக்கும் வரையில், தாங்கள் காரணமாக கூறும் ஒரு சாராரை மொத்தமாக கொண்டு வங்காள விரிகுடாவிலோ / அரபிக்கடலிலோ குடியேற்றினாலும்!! ஒன்றும் மாறப்போவதில்லை.

முடிந்தால் ஒருமுறை முதல் பின்னூட்டத்திலிருந்து படித்துப் பார்க்கவும், சற்று அமைதி கிடைக்கலாம். அல்லது அதன் பிறகு ஒரு முழு கண்ணோட்டத்துடன் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து ஒரு பதிலிடலாம்.

//இங்கே பேசுவது.....// நன்று.

suvanappiriyan சொன்னது…

//ஒரு வைதீக பார்பானுக்கு நீங்களும் சூத்திரன் தான் பொத்திண்டு போவேளா ? //

ஒரு ராமன் ரஹீமாக மாறியவுடனே அவனது சூத்திர பட்டம் காணாமப் போயிடும் கண்ணன். ரஹீம் பாயாக மாறியவுடன் 'சூத்திரன்' என்று விளிக்க எந்த பார்பனனுக்காவது தைரியம் வருமோ? லோகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாத அப்பாவியா இருக்கேளே. :-)

iTTiAM சொன்னது…

//In a debate, you should learn to answer questions addressed to you and clarify what you are saying..esp when you are being "very vague in wordings" like this saying eg. "ஒரு சாராரிடமிருந்துதான்"//

வசை மொழி இல்லா அறிவுரைக்கு நன்றி.

வருண் சொன்னது…

****// "ஒரு சாரார்"னு நீர் சொல்வது யாரைனு தெளிவாச் சொல்லும்// better late than never "ஒரு சாரார்" = மதியாதோர், முன் முடிவு கொண்டோர், நல்வழி கொண்டு முன்னேறத்துடிப்போர் முன் தடைக்கல்லாக நிற்போர்.***

அட அட அட அட!! நீர் யாரை சொன்னனு என் கேள்வியிலேயே இருக்கு.. ஏன் இப்படி ஏமாத்திக்கிட்டே திரிகிற??? :)))


**எப்படி எல்லா ஏற்ற தாழ்வுக்கும் வலிந்து ஒரு சாராரை காரணமாக்க முடியும் என்ற கலையினை கண்டுபிடித்து செழுமைப்படுத்தியவர் திரு. ஈ.வெ.ரா. ***

Read your fucking words and UNDERSTAND who you meant, moron!

Now you started LYING! LOL

iTTiAM சொன்னது…

//நீர் யாரை சொன்னனு என் கேள்வியிலேயே இருக்கு.//

//எந்த கேள்வி என்பதோடல்லாமல், என்ன பதில் சொல்லவேண்டும் என்பதையும் கட்டளை இட எத்தனிக்கிறீர்கள் போல.//

//Now you started LYING!// எனில் இதற்கு முன் சொன்னவற்றில் உண்மை உள்ளது மற்றும் அது தங்களுக்கு தெரிகிறது.

வருண் சொன்னது…

iTTiAM: You need to understand that you can not fool around here. If you want to LIE, MANIPULATE what you said, go find some other moron in your "intellectual level"! OK?

வருண் சொன்னது…

**எப்படி எல்லா ஏற்ற தாழ்வுக்கும் வலிந்து ஒரு சாராரை காரணமாக்க முடியும் என்ற கலையினை கண்டுபிடித்து செழுமைப்படுத்தியவர் திரு. ஈ.வெ.ரா. ***

நீங்க சொன்ன "ஒரு சாரார்" யாருனு சின்னப் பிள்ளைக்குக்கூடத் தெரியும்..அதை பச்சையா சொலறத விட்டுப்புட்டு.. why are you bullshitting like this???

///"ஒரு சாரார்" = மதியாதோர், முன் முடிவு கொண்டோர், நல்வழி கொண்டு முன்னேறத்துடிப்போர் முன் தடைக்கல்லாக நிற்போர்///

you do it because you are NOT HONEST and you are MANIPULATIVE and a LIAR!

iTTiAM சொன்னது…

அடுத்தவர்களுக்கான முடிவுகளை தாங்கள் எடுக்க முயல்வதன் விளைவு இந்த உணர்வு. தங்கள் கூற்று மட்டுமே இறுதியானதாக இருக்க வேண்டும் போல.
//....your "intellectual level"! OK?// என்னுடைய கருத்துக்கள் தங்களுடைய எண்ண உயரத்திற்கு இல்லை எனில் தாங்கள் போருட்படுத்த தேவை இல்லையே. பொருட்படுத்தப்போவதில்லை எனக் கூறி அறிவித்திருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு ராமன் ரஹீமாக மாறியவுடனே அவனது சூத்திர பட்டம் காணாமப் போயிடும் கண்ணன். ரஹீம் பாயாக மாறியவுடன் 'சூத்திரன்' என்று விளிக்க எந்த பார்பனனுக்காவது தைரியம் வருமோ? லோகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாத அப்பாவியா இருக்கேளே. :-) //

இப்ப இவரு லாஜிக் பேசுறாராம்.

உங்களைப் போன்ற வஹாபிகளுக்கு இஸ்லாமியர் அல்லாதவர் காபீர் என்று அழைக்கும் தைரியம் யார் கொடுத்தார்களோ அதே போல் அவர்களுக்கு யாரேனும் தைரியம் கொடுத்து இருக்கலாம்.

அவா இரண்டு பேர் இவா சூத்திரன் என்று உங்க காதுபடப் பேசினால் பொத்திண்டு தான் போகனும் என்பேளா ? ஏன்னா அவா அவாக்கிட்ட தான் அதைப் பத்திச் சொல்றா, உங்களாண்ட இல்லை. இல்லைன்னா என்னை நேரில் சூத்திரன் என்று சொல்லிப்பார்க்கட்டும் அப்பறம் தெரியும் என்று தொடை தட்டுவீர்களா ?

மத்தவங்க முதுகு அழுக்கு உங்களுக்கு தெரிவது போல் உங்க அழுக்கையும் எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கு.

வருண் சொன்னது…

நீங்க என்னதான் நாகரிகமாக/கன்னியமாக பதில் சொன்னாலும், உங்க கவலை எல்லாம் ஒரே ஒரு விசயம்தான்.. உங்களைப் பற்றிய கவலை..சுய நலம்..உங்க மதம்.. உங்க "ஒரு சாரார்"...

எவன் வீடு எரிஞ்சாலும் அதைப் பத்திக் கவலைப் படாமல், உங்க மதம்.. "ஒரு சாரார்" பத்தித்தான் உங்களுக்கு கவலை..அதைத்தான் உங்க பின்னூடம் காட்டுது..

அதை நீங்க எப்படி மூடி மறைத்தாலும் உங்க "நாற்றம்" உங்க பின்னூட்டத்தில் தெரியுது. நீங்க தொடர்ந்து ந்டிங்க.. என்னால்தான் பார்க்க முடியலை "உங்க விஷ்த்தனம் சுயந்ல எண்ணங்களை" மறைத்து அழகாகப் பேசி நடிப்பதை!

iTTiAM சொன்னது…

//உங்க கவலை எல்லாம் ஒரே ஒரு விசயம்தான்.. உங்களைப் பற்றிய கவலை..சுய நலம்..உங்க மதம்.. உங்க "ஒரு சாரார்"...

எவன் வீடு எரிஞ்சாலும் அதைப் பத்திக் கவலைப் படாமல்,.. "ஒரு சாரார்" பத்தித்தான் உங்களுக்கு கவலை..அதைத்தான் உங்க பின்னூடம் காட்டுது...//

iTTiAM சொன்னது…

புரிதலுக்கு நன்றி.

வருண் சொன்னது…

***iTTiAM கூறியது...

புரிதலுக்கு நன்றி.***

Well, I understood who you are from your very first response here itself. Only you have problem in understanding that YOU CAN NOT fool around here, esp with me. Because I am not an "innocent ignorant dravidian" like others you can easily cheat like a well-wisher of them. I am as venomous as a paappaan! I can easily identify/spot another "venomous paappaan" like you! LOL

It is very easy to "spot " a "venomous paappaan" as they are ALWAYS worried only about themselves and "their fucking religion" and "their caste" and of course reservation. LOL

So, I could spot you EASILY! :)))

suvanappiriyan சொன்னது…


//உங்களைப் போன்ற வஹாபிகளுக்கு இஸ்லாமியர் அல்லாதவர் காபீர் என்று அழைக்கும் தைரியம் யார் கொடுத்தார்களோ அதே போல் அவர்களுக்கு யாரேனும் தைரியம் கொடுத்து இருக்கலாம்.//


காஃபிர்கள் என்றால் நிராகரிப்பவர்கள் என்று தமிழ்ப்படுத்தலாம். இப்பொழுது நான் ஏக இறைவனை மட்டுமே வணங்குவேன். அதனை ஏற்றுக் கொள்ளாது நான் பல கடவுள்களை வணங்குவேன் என்றால் என் பார்வையில் அவர் ஏக இறைவனை நிராகரிப்பவர். இது ஏதோ அவமானகரமான சொல்லாக நீங்களாகவே கற்பனை செய்து கொண்டீர்கள.

நான் இப்பொழுது குர்ஆனின் கூற்று படி ஆதமிலிருந்து பல்கி பெருகியவர்களே நாம் அனைவரும் என்கிறேன். இதன்படி கோவி கண்ணனும் எனது உறவினர் ஆகிறார். இது எனது நம்பிக்கை. ஆனால் கோவி கண்ணன் இதை ஒத்துக் கொள்ள மாட்டார். ஏனெனில் அதனை அவர் நம்பவில்லை. இதனை கோவி கண்ணனிடம் சொல்லி கட்டாயப் படுத்தவும் முடியாது. உங்களை காஃபிர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்றால் ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதே போல் இந்து மதத்தில் இருக்கும் வரை பிராமணர்களை தவிர மற்ற சாதியினர் சூத்திரர்கள் என்ற இடத்திற்கு வருகின்றனர். என்று அவன் நாத்திகனாகவோ அல்லது இஸ்லாமியனாகவோ மாறி விடுகிறானோ இந்து சட்டத்தின் படி சூத்திரன் என்ற கோட்டுக்குள் வர மாட்டான். மனு ஸ்ருமிதியின் சட்டம் ஒரு முஸ்லிமைக் கட்டுப் படுத்தாது. ஆனால் ஒரு இந்துவைக் கட்டுப்படுத்தும். இந்திய அரசியல் சட்டமே இஸ்லாமியர், கிறித்தவர் அல்லாதவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று தெளிவாக சொல்கிறதே!

iTTiAM சொன்னது…

//So, I could spot you EASILY! :))) //

better luck next time.
எப்படித்தான் மண்ணில் தலை புதைத்து ஒளிந்தாலும், நான் கூறியதிலுள்ள உண்மை என்ன என்று பார்க்க முயற்சித்தால் சரி.
ஒரு தலைக்கட்டு எண்ணிக்கை விளையாட்டுக்கு சிந்தனா வாத முகம் கொடுக்கும் தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

என்னுடைய முதல் பின்னூட்டம் என்னவென்று படித்துவிட்டீர்களா?

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

நீங்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் வல்லவர் என மீண்டும் நிருபணம் செய்கிறீர்கள், சூத்திரன் என சொன்னால் செவுளில் ஒன்று கொடுக்கணும் என சொன்னதற்கு கணினி முன் உட்கார்ந்து வீரமாக பேசலாம் என்றீர்கள், அப்புறம் நீங்க எப்படி இஸ்லாமியரை சூத்திரன் என சொன்னால் நாக்கை இழுத்து அறுப்பேன் என சொல்கிறீர்கள் :-))

அப்போ நீங்க இதுக்கு முன்ன அப்படி நாக்கை அறுத்து இருக்கிறீர்களா, இல்லை இதை கணினி முன் உட்காராமல் சொன்னீர்களா :-))

//உங்களை காஃபிர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்றால் ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்.//

ஹி...ஹி இஸ்லாமிய தீவிரவாதிகள் என யாரையாவது குறிப்பிட்டால் அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இஸ்லாமை விட்டு நாத்திகராக மாறிவிடுங்கள் :-))

நீங்க யாருங்க அடுத்தவங்களை காபிர்னு பெயர் வைக்க அப்போ அடுத்தவன் வேற ஒரு பேரை உங்களுக்கு வச்சா நீங்களும் சும்மா இருக்க வேண்டாமா?

//அதே போல் இந்து மதத்தில் இருக்கும் வரை பிராமணர்களை தவிர மற்ற சாதியினர் சூத்திரர்கள் என்ற இடத்திற்கு வருகின்றனர். //

இதை யார் சொன்னார்கள் , இந்து என்பது மதம் அல்ல.

இந்து= இந்தியன்,

இந்துத்வா= இந்தியாவை சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறை.

இந்துயிசம்= இந்திய கலாச்சாரம்.

மனுஷ்ருமிதி, வர்ணாசிரமம் இந்துக்களை கட்டுப்படுத்தாது, ஆனால் அதனை திணிக்கப்பார்ப்பதால் தான் எதிர்க்கிறார்கள். சொல்லப்போனால் கட்டாய மத மாற்றம் செய்வது போல.

மனுஷ்ருமிதி,வர்ணாசிரமம் இருப்பது வேத மதத்தில் , ஆங்கில ஆய்வாளர்கள் இதனை தெளிவாக "Vedic religion" of india என்று தான் குறிப்பிடுவார்கள். அவர்களின் கலாச்சாரம் வேதக்கலாச்சாரம், வேத நாகரீகம் என்றே குறிப்பிடப்படுவது.

பொத்தாம் பொதுவாக எழுதுபவர்கள் தான் இந்து மதம் என ஒட்டு மொத்தமாக எழுதி அதற்கு வேத சாயம் பூசுகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட் இந்து என்பது மதம் அல்ல வாழும் முறை என 1995 இல் ஒரு சரித்திர புகழ்மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது,ஆனால் அதனை இது நாள் வரை வேத கோஷம் போட்டவர்களால் ஏற்க முடியவில்லை, அதே போல மற்ற மதத்தினருக்கு பிடிக்கவில்லை, ஆனால் என்ன செய்ய சொன்னது சுப்ரீம் கோர்ட் ஆச்சேன்னு அதை மறைத்து விட்டு வழக்கம் போல இந்து புராணம் படிக்கிறார்கள்.

//These Constitution Bench decisions, after a detailed discussion, indicate that no precise meaning can be ascribed to the terms Hindu, Hindutva and Hinduism; and no meaning in the abstract can confine it to the narrow limits of religion alone, excluding the content of Indian culture and heritage. It is also indicated that the term Hindutva is related more to the way of life of the people in the subcontinent. //

முழு தீர்ப்பின் விவரம் இங்கே ...

http://www.newsanalysisindia.com/supremcourt.htm

எனவே இந்தியாவில் பிறந்தவர்கள் விருப்பப்பட்டால் இந்து மதம் போட்டுக்கொள்ளலாம், இல்லை எனில் தனி மதம் இருக்குமானால் போட்டுக்கொள்ளலாம். அப்போதும் அவர்கள் இந்து முஸ்லீம், இந்து கிருத்துவர், இந்து சீக்கியர் என்ற வகையிலே உலக அளவில் அடையாளங்காணப்படுவர்.

பார்ப்பனர்கள் சொல்வது வேத மதம் , அது தனி, அதில் நம்பிக்கை இல்லாதவர்களை சூத்திரன் என சொன்னால் செவுளில் ஒன்று விடலாம் தானே.

Jenil சொன்னது…

//இல்லைனா தலித்துகள் இதே போல கூட்டம் சேர்த்து ஒரு முன்னூறு வன்னிய குடும்பங்களை தாக்கினால் தான் அடுத்த முறை இதே போல செய்யும் துணிவு வராது ,ஒன்று சட்டம் செயல்படணும் ,இல்லை மக்களே செயல் படணும்.

சட்டம் செயல்படவில்லை எனில் ஒரு ரெண்டு தடவை மக்களே திருப்பி அடிச்சா எவனும் இப்படி செய்ய துணிய மாட்டான். //

This is exactly the right solution ...My friend who works in a village near madurai has seen this in reality.. He says since nowaday if the higher caste kills a dalit witin a year there will be a revenge becos of this the number of murder has come down.. Even in my place Nagercoil my father told me the NADARS along with their financial growth also did the above thing.. When the upper caste people say "U shud not take water from a Pond" the other caste people will march to that place with weapons and finish their nature's call in that pond if anyone stops then the fight with weapins will start.. After this only the Nair's domination in kanyakumari diminished... THE BEST DEFENSE IS OFFENSE... Words to be marked in GOLD

Jenil சொன்னது…

//அனைவருக்கும் தோழர் நரகாசூரன் நினைவு நன்னாள் வாழ்த்துகள்.///


Pinniteenga... Suuuppperrrr

Unknown சொன்னது…

//சுவனப் பிரியன்// நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.
-தந்தை பெரியார்.

iTTiAM சொன்னது…

திரு. கோவி.கண்ணன் அவர்களே,

இந்த சுட்டியினை பார்க்கவும் : http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html
பிரச்சினையின் அடுத்த பக்கம்.
இந்த பதிவு கண்டுகொள்ளப்படாமல் போவதாக தோன்றியதால் பகிர்கிறேன். மற்றபடி உண்மை மற்றும் எதிர்வாதங்கள் தனி. இதனை இடுகையில் பின்னூட்டமாக அனுமதித்து இடுவதா அல்லது இதன் மேல் தனி பதிவைக இடுவதோ / சாரத்தினை உங்கள் கருத்தாக இடுவதோ என்பது தங்கள் முடிவு.

http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html

// ஆண்டான்டு காலமாய் கல்வி மறுக்கப்பட்டு சமூகத்தின் அடித்தட்டில் உழன்று வந்த தலித் மக்களுக்கு நல்ல கல்வி கொடுத்து சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து தான் வளர வைக்க முடியுமே தவிர, ஆதிக்க சாதி என்று இவர்களால் வர்ணிக்கப்படும் சாதிக்காரர்களின் வீட்டுப் படுக்கை அறைகளில் இவர்கள் விடுதலை ஒளிந்திருக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாவிட்டால், இவர்களின் இன்றைய வெற்றி நாளைய தோல்வியில் முடிந்துவிடும்.//

ராமுடு சொன்னது…

Dear Mr.Kannan,
Its good article. But just read about how brahmin show partiality for not renting out property to others.. I believe somehow you feel its affecting.

I am a brahmin. But I rented out my apartment to other people - bachelors for the same rent, if I get it from family people. In chennai, it is common to increase the rent and calculate based on head count, if they are bachelors. Below issues I faced.

- Only 3 were my tenants and on friday about 15 people gathered. They occupied other's parking space
-My only condition was : No drink - move smoothly with neighbourhood & No Non Veg. Two times they hit other's vehicles (One car & one two wheeler).
-They fought with neighbourhood pregnant lady and used abusive words
- Never kept clean
- I fought for them against my apartment secretary. Finally I came to know that mistake is our side.

After all these incidents, how can other's expect the same treatment? Now I made a point - only rent to family people. So each person has their own view.

Ragavachari B சொன்னது…

"பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை" - நானும் இப்ப வாடகைக்கு வீடு தேடிகிட்டு இருக்கேன். நான் பார்த்த 5 வீடுல 4 வீடு பிராமின்ஸ் ஒன்லி தான் போட்ருக்கு. எதுக்கும் போன் பண்ணி பார்க்கலாம்னு பண்ண எடுத்தவுடனே நீங்க பிராமினா கேட்குறாங்க. இல்லன்ன பதில் கூட சொல்லாம கட் பண்ணிட்ரங்க. இவ்வளவுக்கும் நாங்க சைவம் தான். இத சொல்ல கூட விடவில்லை.

நச்சுன்னு இருக்கு உங்க பதிவு.

iTTiAM சொன்னது…

//"பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை" - ........//.....ஹி ஹி....
4/5 = 80% காலியாக உள்ள வீடுகள் தமிழகத்தில் 2.75%-3.00% உள்ள இவர்களிடம் உள்ளது. எனவே இதனால் ஏற்படும் இவர்களின் கஷ்டங்களை உணர்ந்து, சிரமங்களை போக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும், உதவித்தொகை வழங்க வேண்டும்.

வருண் சொன்னது…

*** iTTiAM கூறியது...

//"பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை" - ........//.....ஹி ஹி....
4/5 = 80% காலியாக உள்ள வீடுகள் தமிழகத்தில் 2.75%-3.00% உள்ள இவர்களிடம் உள்ளது. எனவே இதனால் ஏற்படும் இவர்களின் கஷ்டங்களை உணர்ந்து, சிரமங்களை போக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும், உதவித்தொகை வழங்க வேண்டும்.***

பார்ப்பான் பண்ணுற அயோக்கியத்தனத்தை எவனாவது சொன்னா உடனே ஏன் இத மாரி ஒளற ஆரம்பிச்சுடுற?? சரியான லூசுப்பயலா இருக்கயே!

அப்புறம் பார்ப்பான் அங்கீகாரம் இல்லாமல் மத்தவன் வாழமுடியாதுனு ஒளறுறது.

சரியான முட்டாப் பார்ப்பானா இருக்கியே ஏன்??

iTTiAM சொன்னது…

அவரது விதிமுறை, தேவை மற்றும் எதிர்பார்ப்புகளுக்குட்பட்டு, வீடு வாடைக்கு விட முடியாமல் 5ல் 4பேர், அதாவது 80% பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், நொடித்துப்போய் விடுவார்களே அவர்களுக்கு உதவுவதும் அரசின் கடமை அல்லவா? அதனால் அரசு உதவ வேண்டும் என்கிறேன் நான்.

பூவை பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம், அல்லது நான் சொல்வது போலவும் சொல்லலாம்.

சரியான இடத்துல வைக்கப்படாத தண்ணீர் வாளி சீக்கிரம் நிறையாது.

Unknown சொன்னது…

மரக்காணம் வழியாக சித்திரை பெரு விழாவுக்கு சென்ற என் தம்பி விவேக் க்கை ....தலித் அமைப்பை சேர்ந்த வன்முறை கும்பலால் அடித்து கொள்ள பட்டார் ...



இந்த படத்தில் இருக்கும் இறந்து போன என் தம்பி விவேக் ........ஒரு தலித்தாக இருந்தால் இந்நேரம் இந்தியாவே

ஒரே கூச்சல் மீடியாக்கள் பல நாள் தலைப்பு செய்தியாக வரும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் செய்வார்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வார்கள்

தமிழ்... தேசியம் பேசுபவர்கள் கண்களில் ...தலித் உயிர் மற்றும் ஈழம் தமிழ் மக்கள் உயிர் தான் கண்ணுக்கு தெரியும் ....

தலித் அல்லாத எவன் ஒருவன் செத்தாலும் அவன் ஜாதி வெறியன் அவன் சாக வேண்டியவன் தான் சொல்கிறார்கள் தமிழ் தேசிய வாதிகள் .........அப்ப அவர்களுக்கு தமிழர் என்றால் தலித் மட்டும் தானா ?

சொல்லுங்கள் நாம் தமிழர் என்று சொல்லும் ....தலித் ஆதரவு நாம் தலித் தமிழர் கட்சியே ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்