சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

வைகோவின் நிலைப்பாடு பாராட்டதக்கது !

Tuesday, March 22, 2011

கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கிய வைகோ கருணாநிதியுடன் கூட்டணியில் இணைந்திருந்தார். கருணாநிதியின் தவறுகளால் ஆளுமையால் அதனை எதிர்த்து உருவாகிய அரசியல் கட்சிகள் அதிமுக, மதிமுக. அதிமுக வெற்றிகரமாக ஆட்சியில் அமர்ந்ததால் திராவிடக் கட்சிகளில் மக்கள் பலமிக்கத் தலைவர் தாமே என்பதை எம்ஜிஆர் நிருபனம் செய்தார். ஏற்கனவே உடைந்த திமுக கட்சியில் இருந்து பிரிந்ததால் வைகோவால் ஒரு மாற்று சக்தியாக உருவாக முடியவில்லை, இருந்த போதிலும் 50 தொகுதிகள் வரையிலான வெற்றித் தோல்விகளை முடிவு செய்யும் ஒரு கட்சியாக மதிமுகவை வளர்த்துவந்தார்.

ஜெ தனிப்பட்ட காழ்புணர்வின் மூலமாக பொடோ சட்டத்தில் ஓர் ஆண்டு வைகோவை சிறையில் அடைத்திருந்தாலும் கருணாநிதியை நம்பி அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வைகோ விரும்பவில்லை. காரணம் திமுகவுடன் இணைந்து செயல்படும் மதிமுகவிற்கு கொள்கை என்று எதுவும் தனியாக இருக்காது, கட்சி வளர வாய்ப்பில்லை என்ற முடிவில் அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்றே ஜெவுடன் கூட்டணியில் தொடர்ந்தார்.

இதற்கிடையே இந்தத் தேர்தலுக்கு முன்பே வைகோ கட்சி பெருந்தலைகளை திமுக இழுத்துக் கொள்ள அரசியல் பலமில்லாதா வைகோவின் கட்சியை அதிமுகவும் கைப் பற்றிக் கொள்ள விரும்பவில்லை. அவர்களாகவே வெளியே செல்லட்டும் என்கிற ரீதியில் 8, 7 என எண்களைக் காட்ட இதற்கு மேல் ஜெ கூட்டணியில் தொடர்வது தனக்கு தனிபட்ட அவமானம் என்பதாக வைகோ தேர்தலை புறக்கணித்துள்ளார்.

வைகோ தேர்தலை புறக்கணிப்பதால் மதிமுக தொண்டர்களின் வாக்கு ? தன்னுடைய கட்சி தனித்து தேர்தலில் நின்றால் வாக்குகள் பிரியும் கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றவதற்கு தடையாக அமையும் என்று தெளிவாகச் சொல்லி இருப்பதன் மூலம் மறைமுகமாக மதிமுக தொண்டர்களின் வாக்குகள் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ளமுடிகிறது. வாக்குகள் சிதறாமல் அல்லது பிரியாமல் இருக்க அதிமுக கூட்டணிக்கே வாக்கு அளியுங்கள் என்று சொல்வதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ளமுடியும்.

இதற்கிடையே முன்னால் போயாஸ் தோட்டாத்து பூசாரி வீரமணி வழக்கம் போல் பார்பன சதி, ஆரியமாயை என்றெல்லாம் ஒரு கடிதத்தை வைகோவிற்கு எழுதியுள்ளார். இதன் மூலம் அதிமுகவிற்கு செல்லும் மதிமுகவினரின் வாக்குகளை முடிந்த வரையில் தடுக்க முடியும் என்பது திருவாளர் வீரமணியின் நம்பிக்கை.

ஈழப்படுகொலைக்கு ஆதரவு, இமாலய ஸ்பெக்டரம் ஊழல், சிக்கியவர்களின் தற்கொலைகள் என்று காட்சிகள் நடந்து வரும் வேலையில் திமுக கூட்டணி பக்கம் செல்லாமல் தேர்தலை புறக்கணித்ததுடன் வாக்குகள் சிதறாமல் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லும் வைகோவின் நிலைப்பாடு சரிதான் என்று தோன்றுகிறது.

கட்சித் தொடங்கிய இருபது ஆண்டுகளுக்கு பிறகு வைகோவின் கட்சிக்கு அமைந்திருக்கும் இன்றைய நிலை நாளை தேமுதிகவிற்குக் கூட ஏற்படலாம். ஏனெனில் இந்தக்கட்சிகள் உருவாக வேண்டும், வளரவேண்டும் என்ற மக்கள் தேவை/விருப்பமாக இவை தோன்றாமல் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பங்களினால் தோன்றியுள்ளன.

வைகோ அரசியல்வாதி என்பதைத் தாண்டி நல்ல தமிழ் உணர்வாளர் என்பதால் அவரின் இந்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. வைகோவின் அரசியல் வாழ்க்கை எந்த ஒரு தொண்டனும் ஒரு வாரிசு அரசியல் கட்சியைச் சார்ந்து தானும் தலைவராக வளரமுடியும் என்று நினைத்தால் அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதைக் காட்டுகிறது. அதாவது வைகோ திமுகவின் செயல்பாடுகளுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டே வந்திருந்தால் ஒரு வீரபாண்டியாரைப் போலவே திமுக அமைச்சராக ரிடையர் ஆகி இருக்க முடியும்.

சிரஞ்சிவியைப் போன்று அதிமுகவுடன் மதிமுகவை இணைத்து அரசியல் லாபங்களை அறுவடை செய்திருக்க முடியும், அது தனக்கு மட்டுமே நன்மை என்று நினைத்ததால் அதனை கைவிட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். இன்றைய தமிழகத்திற்குத் தேவை போலி திராவிட எதிர்ப்பு அரசியல் தான். வைகோ சீமானுடன் இணைந்து செயல்படுவது தான் மதிமுகவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். திமுகவும், அதிமுகவும் திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் அருகதையற்றவை. திமுக ஆட்சியில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டிய கட்சி என்பதை இந்த சூழலிலும் வைகோ சுட்டியுள்ளார். அரசியல் தெளிவுகளைப் பெற இந்த தற்காலிக அரசியல் ஓய்வு வைகோவிற்கு பயனளிப்பதாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

5 கருத்துக்கள்:

  • நிகழ்காலத்தில்...
     

    வைகோவின் பின்னால் நின்ற கட்சியினருக்கு யாருக்கு ஓட்டுபோட வேண்டும் என தெளிவு படுத்தாமல் விட்டு விட்டார்.:(

  • நந்தா ஆண்டாள்மகன்
     

    நல்ல பதிவு.

  • ரம்மி
     

    என்ன தான், நல்லவராக இருந்தாலும், சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பதால், இழப்பு மதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் தான்!
    கலிங்கப்பட்டி சிங்கம், சட்டசபையில் முழங்கும் காட்சியை இனி, எப்போது காண்போம்?

  • வேடிக்கை மனிதன்
     

    "இதற்கு மேல் ஜெ கூட்டணியில் தொடர்வது தனக்கு தனிபட்ட அவமானம் என்பதாக வைகோ தேர்தலை புறக்கணித்துள்ளார்."

    annay arasiyalil asingam avamanum endru ethuvum kidaiyathunu ninaikirane, asingam avamanam parthirunthal pona satta sapai therthalil vaiko thaniththu than nindru irukanum. anal arasiyal, matrum katchi athayam karuthi admk vil admk kolkai parapu cheyalalar mathiri nadanthu kondathaiyallam parkum pothu arasiyalil asingam avamanum enpathai thandi eppothum athayam allathu nashtam mattum than parparkalnu thonuthu.

  • சிநேகிதன் அக்பர்
     

    நல்லதொரு அலசல்

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP