பின்பற்றுபவர்கள்

12 ஜூன், 2007

வாங்க மூனுக்கு போகலாம் !


உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !


உலக மக்களை உயர்த்தும் நாள் !

சரித்திரத்தில் சரித்திரம் படைக்கும் நாள் !

நாளைய பிரதமரின் இன்றைய வெளியீடு !

சிங்கத் தமிழன் சினந்து எழுகிறான் !

எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !

உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் !

இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !

இறைவன் இன்று உலகமக்கள் அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார் !

இன்று ஒரு புதிய உலகம் பிறக்கிறது !

நெப்போலியனுக்கு பிறகு உலகம் பார்க்கப் போகும் ஒரே வீரன்

தலைவனின் தலைமை நாடுவோம், அவன் பாதம் போற்றுவோம்.

சி வா ஜி

:))))))))))))



நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிவாஜி வெளியீட்டு நாள் வாசகத்தை பகிர்ந்து கொண்டு ரஜினி ரசிகர்களுக்கு உதவுங்கள்.

என்னது ... தமிழ்நாட்டு மேல் ஏன் இன்னும் எவனும் குண்டு போடலையா ?

ன்னு கேட்கிறிங்களா ?

ஆளைவிடுங்க சாமி !!!

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !//

ஸ்பெல்லிங் மிஸ்டேக்? உலக "மூடர்களுக்கு உப்பற்ற நாள் "

பெயரில்லா சொன்னது…

//எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !//

ஏன் மறுபடியும் இமய மலைக்கு வந்து என்னை பாக்கனுமா?

பெயரில்லா சொன்னது…

//இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !//


ஏன் இதுதான் அவருக்கு கடைசி படமா?

பெயரில்லா சொன்னது…

//உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் //

ஆமா ஒலகத்திலயே ஒரே நாள்ள அதிகம் பேர் மெண்டலானது இன்னைக்குத்தான்

பெயரில்லா சொன்னது…

நீ உறுப்படுவியா?

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைத்து அமுகவினருக்கும் நன்றி !

VSK சொன்னது…

சிவாஜி பற்றிய இந்தப் பதிவுக்கு அனைத்துலக ரஜினி ரசிகர்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

:))

VSK சொன்னது…

கலையுலகத் தந்தை இன்று கலைதெய்வத்துடன் படத்தைப் பார்த்துக் களித்தாராமே!

:))))

ILA (a) இளா சொன்னது…

நல்ல பதிவு..ஹ்ஹஹ்ஹஹஹஹாஹஹ்ஹ

சதுர் சொன்னது…

மூனுக்கு போறதுக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம் கோவி.கண்ணன் அவர்களே?

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுர்வேதி said...
மூனுக்கு போறதுக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம் கோவி.கண்ணன் அவர்களே?
//

பிடிக்கவில்லை என்றால் 'சிவாஜி பார்த்துட்டு முன்னுக்கு போங்க' ன்னு டைட்டில் மாத்திடலாமா ?

மிஸ்டர் சதுர்வேதி ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்