8 ஜூலை, 2006

ஆயுள் ரேகை !


ஜோதிடம் உண்மையென்று
அன்று தான்
அறிந்து கொண்டேன் !
அன்று நடந்த
விபத்தில் ஒருவரின்
தலை நசுங்கி,
மூளை சிதறி கிடந்தாலும்,
கையில் இருந்த ஆயுள் ரேகைக்கு
எந்த பாதிப்பும் இல்லை !

26 கருத்துகள்:

  1. கலக்கறீங்க கண்ணன்..

    வெகு அருமை..

    சுகா

    பதிலளிநீக்கு
  2. //Suka said...
    கலக்கறீங்க கண்ணன்..

    வெகு அருமை..

    சுகா
    //
    சுகா, வருகைக்கு நன்றி ... சில சொற்களைப் பார்க்கும் போது ஏதாவது தோன்றி விடுகிறது :-)

    பதிலளிநீக்கு
  3. அவருக்கு ஆயுள் ரேகை (மட்டும்) ஸ்ட்ராங்கு இல்ல ?

    :)

    நக்கலாக
    பச்சோந்தி

    பதிலளிநீக்கு
  4. //Chameleon - பச்சோந்தி said...
    நக்கலாக//
    பச்சோந்தி அவர்களே ! உங்கள் மறுமொழியில் உடனே பார்பது கடைசியில் என்ன சொல்லுகிறீர்கள் என்பதை... அதன் பிறகு மேலே உள்ளதை படிப்பேன்.. ஓவ்வொரு மறுமொழிக்கும் வித்யசமாக ஒன்று சொல்லுகிறீர்கள் ... ம் வெற்றியின் ரகசியம் .. புரிகிறது

    உண்மையாக
    கோவி.கண்ணன்

    பதிலளிநீக்கு
  5. அருமை.. கலக்கிடீங்க..

    பதிலளிநீக்கு
  6. பாரட்ட மறந்துவிட்டேன் என்னுடையெ முந்தைய பின்னூட்டத்தில், இந்தாங்க பிடிங்க பாரட்டெ... அட்டகாசமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  7. //Sivabalan said...
    அருமை.. கலக்கிடீங்க..
    //
    திரு சிவபாலன்...கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. //Thekkikattan said...
    பாரட்ட மறந்துவிட்டேன் என்னுடையெ முந்தைய பின்னூட்டத்தில், இந்தாங்க பிடிங்க பாரட்டெ... அட்டகாசமா இருக்கு!
    //
    தெக ... உங்கள் பாராட்டுகள் நெகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி!

    பதிலளிநீக்கு
  9. கண்ணன்.. இதை தேன்கூடு போட்டிக்கு அனுப்புங்க.. வார்த்தைகள், வடிவங்களை விட சில சமயம் கருத்துக்களுக்கும் மதிப்பு கிடைப்பதுண்டு..

    வாழ்த்துக்கள்
    சுகா

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை, கண்ணன்னாலே கலக்கல்தான்.

    பதிலளிநீக்கு
  11. //Suka said...
    கண்ணன்.. இதை தேன்கூடு போட்டிக்கு அனுப்புங்க.. வார்த்தைகள், வடிவங்களை விட சில சமயம் கருத்துக்களுக்கும் மதிப்பு கிடைப்பதுண்டு..

    வாழ்த்துக்கள்
    சுகா
    //

    சுகா, கருத்துக்களுக்கு நன்றி..
    போட்டிக்கு ஒரு ஆக்கம் ஏற்கனவே அனுப்பியாகிவிட்டது ...
    http://govikannan.blogspot.com/2006/07/blog-post_03.html

    பதிலளிநீக்கு
  12. //JTP said...
    கவிதை அருமை, கண்ணன்னாலே கலக்கல்தான்.
    //
    Jtp, சான்றோர் வியந்த இரண்டு சிறுகதைகளையும் படித்துப் பாருங்கள்
    :)

    பதிலளிநீக்கு
  13. //போட்டிக்கு ஒரு ஆக்கம் ஏற்கனவே அனுப்பியாகிவிட்டது ...//

    இருக்கட்டுமே! ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம் கோவியாரே!

    அனுப்புங்கள்! நிச்சயம் இதுவும் ஒரு சிறந்த கவிதைதான்.

    பதிலளிநீக்கு
  14. //நாமக்கல் சிபி @15516963 said...
    அனுப்புங்கள்! நிச்சயம் இதுவும் ஒரு சிறந்த கவிதைதான். //
    போட்டி ஆக்கங்களில் கருத்து தாக்கங்கள் இருக்கவேண்டும் இந்த கவிதை சொல்வது ஒரு சிறிய செய்தி.

    ம்...நான் மரணத்தை வெல்ல நீங்கள் ஆவலாக உள்ளீர்கள்.

    மரணம் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது என்பது என் எண்ணம்
    :)))

    பதிலளிநீக்கு
  15. கண்ணன்!
    அண்ணன், நீங்களும் உங்க கால கொஞ்சம் காட்டுங்க.
    வாழ்த்துக்கள் கவிதைக்கு! ஏகப்பட்ட பதிவை போட்டு தாக்கி இருக்கீங்க. இப்ப தான் ஒவ்வொன்னா படிச்சுக்கிட்டு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  16. என்னமோ போங்க நீங்க எழுதுறத படிச்சா கருத்து சொல்ல இடமே இருக்கமாட்டேங்குது " ரொம்ப நல்லா எழுதுறிங்களேய்யா............"

    பதிலளிநீக்கு
  17. //
    நாகை சிவா said...
    கண்ணன்!
    நீங்களும் உங்க கால கொஞ்சம் காட்டுங்க//
    கப்பி பய காட்டியிருக்கிறார் அதை முதலில் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  18. //மகேந்திரன்.பெ said...
    என்னமோ போங்க நீங்க எழுதுறத படிச்சா கருத்து சொல்ல இடமே இருக்கமாட்டேங்குது " ரொம்ப நல்லா எழுதுறிங்களேய்யா............"
    //
    கருத்து சொல்ல இடமில்லை என்று மனதை திறந்து அந்த இடத்தை அளித்திருக்கிறீர்கள் ...

    உங்கள் பெரும்தன்மையான பாராட்டு நெகிழ்சியாக இருக்கிறது. நன்றிகள்

    பதிலளிநீக்கு
  19. கலக்கலா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  20. அங்கன பார்த்துட்டு வந்துதான் உங்களையும் காட்ட சொல்னேன். கூப்பிடாமலே ஊருக்கார பயலுக்கு சப்போட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  21. //At 12:23 AM, கலை அரசன் said…

    கலக்கலா இருக்குங்க.
    //
    கலையரசனின் ரசனைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  22. ரோஜா திரைப் படத்தில் ஜனகராஜின் வசனம்.

    (சற்று குரலைத் தாழ்த்தி ) "ஆயுள்ரேகையவே காணமடா!" (பின் சத்தமாக) "லம்பா உமர் ஹை"

    பதிலளிநீக்கு
  23. //கண்ணன்!
    நீங்களும் உங்க கால கொஞ்சம் காட்டுங்க//

    //கப்பி பய காட்டியிருக்கிறார் அதை முதலில் பாருங்கள் //

    ஓஹோ! தங்களிடம் சொன்னால் கப்பியார் செய்வார்! அப்படித்தானே!
    இதிலிருந்தே தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  24. //ஓஹோ! தங்களிடம் சொன்னால் கப்பியார் செய்வார்! அப்படித்தானே!
    இதிலிருந்தே தெரியவில்லை!//

    என்ன தெரியவில்லை ... ? காலைக் காட்டு என்றால் ஷூவைக் காட்டுவதையா ?

    பதிலளிநீக்கு
  25. நல்ல கவிதை கோவி.கண்ணன் ஐயா. :-)

    பதிலளிநீக்கு
  26. //At 11:48 AM, குமரன் (Kumaran) said…

    நல்ல கவிதை கோவி.கண்ணன் ஐயா. :-)
    //
    திரு குமரன்
    பாரட்டுகளுக்கு நன்றிகள் :-)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !