tag:blogger.com,1999:blog-10267267.post8524765838733283145..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-10267267.post-92010826809753421392010-02-04T14:50:37.956+08:002010-02-04T14:50:37.956+08:00ஹிந்தியை பற்றிய உம்முடைய ஆராய்ச்சி நன்றாக இருந்தது...ஹிந்தியை பற்றிய உம்முடைய ஆராய்ச்சி நன்றாக இருந்தது.Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3177624966730644612009-08-28T21:09:50.624+08:002009-08-28T21:09:50.624+08:00நல்ல கருத்துக்கள் தான், இருந்தாலும் ஆங்கிலத்தையாவத...நல்ல கருத்துக்கள் தான், இருந்தாலும் ஆங்கிலத்தையாவது எல்லோரும் பயன் படுத்தும்படி ச்செய்ய வேண்டும்.snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76081453319357957782009-08-26T20:33:28.567+08:002009-08-26T20:33:28.567+08:00ஒரு சூப்பர் பதிவுங்க :))ஒரு சூப்பர் பதிவுங்க :))SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83742981463474535702008-04-14T03:12:00.000+08:002008-04-14T03:12:00.000+08:00/////பெங்களூரு பற்றி பதிவர் மோகன் கந்தசாமி எழுதி இ.../////பெங்களூரு பற்றி பதிவர் மோகன் கந்தசாமி எழுதி இருப்பதைப் படிங்க, படிக்க சிரிப்பாக இருந்தாலும் அவர் சொல்வது உண்மை ! உண்மை ! <BR/><BR/>வயுறுவலி கேரண்டி !<BR/>:)//////<BR/>இன்னாபா இது! இத ட்டமாசுன்ட்டியே, ரொம்ப கஷ்டமாக்குதுபா!<BR/>மோகன் கந்தசாமிமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74705306982183092292008-04-13T02:51:00.000+08:002008-04-13T02:51:00.000+08:00//Indian said... ஞாயிறு, தாங்கள் பல புதிய கருத்துக...//Indian said... <BR/>ஞாயிறு, தாங்கள் பல புதிய கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இந்தக் கருத்துக்களில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், இது இந்தியா தேசிய ஒற்றுமைக்கு எதிரான சதி எனக் குரல்கள் எழக்கூடும். இந்தியா மாதிரி ஒரு பல்தேசிய நாடு எங்காவது இருக்கிறதா என்று கேட்டிருந்தீர்கள். இருந்தது. அதுதான் யுகோஸ்லேவியா. இந்தியாவிற்காவது 300 ஆண்டு 'பாரம்பரியம்' (கோவி ஐயா, பாரம்பரியத்துக்கு சரியான தமிழ்ச்சொல் இன்னாங்கோ?) <BR/>...//<BR/><BR/>இந்தியன்,<BR/>உங்கள் பின்னூட்டமும் அருமை.<BR/><BR/>பாரம்பரியம் - இதற்கு முன்னோர்வழி, வழிவழியாக, குலவழக்கு, தலைமுறை, பழம்பெருமை ஆகிய தமிழ் சொற்களை இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்,<BR/><BR/>எங்கள் இல்லம் பாரம்பரியமிக்கது என்று சொல்வதை எங்கள் இல்லம் பழம்பெருமை வாய்ந்தது என்று சொல்லலாம்.<BR/><BR/>எங்கள் பாரம்பரியத்தில் இதெல்லாம் கிடையாது இதை எங்கள் குலவழக்கில் இதெல்லாம் கிடையாது என்று சொல்லலாம்<BR/><BR/>எங்கள் பாரம்பரியத்தில் இப்படித்தான் என்று சொல்வதை எங்கள் தலைமுறைகளெல்லாம் இப்படித்தான் என்று சொல்லலாம்.<BR/><BR/>நான்கும் மேற்பட்ட தமிழ்சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பயன்படுத்தலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60700037660710309042008-04-13T02:44:00.000+08:002008-04-13T02:44:00.000+08:00ஞாயிறு,உங்கள் கருத்துக்கள் முதல் இரண்டு பின்னூட்டத...ஞாயிறு,<BR/><BR/>உங்கள் கருத்துக்கள் முதல் இரண்டு பின்னூட்டத்தில் அவ்வளவு தெளிவாகவில்லை, அதன் பிறகு நீங்கள் விளக்கியது தான் புரிந்து கொண்டேன், திரும்ப அவைகளைப் படித்த போது மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள் என்று புரிந்துவிட்டது, மேலும் பலவற்றை சிறப்பாகவே அடுத்து அடுத்த பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறீர்கள், நம்மீது திணிக்கப்படுபவை எவையும் நம்விருப்பத்தற்கானது அல்ல, ஒட்டவைக்கப்படுபவையே அவற்றினால் என்றுமே இடற்தான். நீங்கள் சொல்வது போல் பிகாரியுடன் நான் பேசவேண்டும் அதற்காக நான் இந்திபடிக்க வேண்டும் என்று சொல்வதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது, ஆங்கிலேயர்களுக்கு பிறகு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது இந்தியா, இதில் பல மொழிகள் பேசுபவர்கள் இருக்கிறார்கள், அவர்களை ஒரே மொழியால் ஒன்றிணைப்பதுதான் தேசியம், தேசபக்தி என்று சொல்வதெல்லாம் பம்மாத்தே.<BR/><BR/>வேற்றுமையில் ஒற்றுமை என்பது வேற்றுமையை ஏற்றுக் கொண்டு வாழ்வது குறித்தது, வேற்றுமைகளை களைவது பற்றியல்ல என்பதே.<BR/><BR/>உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.<BR/><BR/>எனது மூன்று இடுகைகளில் தொடர்ச்சியாக இதுபற்றியே பேசியாகிவிட்டது, நீங்கள் உங்கள் பின்னூட்டங்களை தொகுத்து, எனது இடுகையில் இருப்பவற்றிலும், பின்னூட்டங்களிலுள்ளதில் செரிவு மிக்கதை எடுத்து தனிப்பதிவாக இடுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26474029920442069172008-04-13T02:31:00.000+08:002008-04-13T02:31:00.000+08:00இந்தியன், நன்றி. ( இந்தியன் என்ற பெயர் ரொம்பப் பொர...இந்தியன், நன்றி. ( இந்தியன் என்ற பெயர் ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது.)<BR/><BR/>கோவி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இது வரை விவாதித்த கருத்துக்களை உங்கள் பார்வையில் தொகுத்து ஒரு தனிப்பதிவு தேவைப்பட்டால் போடவும். எனக்கு உங்களைப் போல கோர்வையாக, எளிமையாக எழுத வருவதில்லை :(சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandamhttps://www.blogger.com/profile/09421049774111610034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61664185348285231072008-04-12T15:15:00.000+08:002008-04-12T15:15:00.000+08:00ஞாயிறு, தாங்கள் பல புதிய கருத்துக்களை குறிப்பிட்டி...ஞாயிறு, தாங்கள் பல புதிய கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இந்தக் கருத்துக்களில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், இது இந்தியா தேசிய ஒற்றுமைக்கு எதிரான சதி எனக் குரல்கள் எழக்கூடும். இந்தியா மாதிரி ஒரு பல்தேசிய நாடு எங்காவது இருக்கிறதா என்று கேட்டிருந்தீர்கள். இருந்தது. அதுதான் யுகோஸ்லேவியா. இந்தியாவிற்காவது 300 ஆண்டு 'பாரம்பரியம்' (கோவி ஐயா, பாரம்பரியத்துக்கு சரியான தமிழ்ச்சொல் <B>இன்னாங்கோ?</B>) இருந்தது. ஆனால் யுகோஸ்லேவியா முதலாம் உலகப்போருக்குப் பின்னால் 'உருவாக்கப்பட்ட' நாடு. அப்படி உருவாக்கப்பட்டதன் பலனை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அது இப்போது செர்பியா, க்ரோவெஷியா, போஸ்னியா,மேசிடோனியா, ஸ்லொவேனியா, கொசவோ, எனப் பலவாறாக உடைந்துவிட்டது. யுகோஸ்லேவியாவிடமிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.<BR/><BR/>//ஆனால், தாய் மொழியில் மேல் படிப்பு, சிந்தனை இல்லாமல் இருப்பது நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செல்ல இயலாமல் செய்கிறது என்றே நினைக்கிறேன். தமிழில் இருக்கும் புத்தகத்தை என்னால் களைப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. ஆங்கிலப் புத்தகம் தூக்கத்தைத்தான் தருகிறது. முதல் தலை முறையில் ஆங்கிலம் படிப்பவர்கள் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் :)<BR/><BR/>இதற்கு தீர்வு என்ன?<BR/><BR/>எனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்கச் செய்வதன் மூலம், செயற்கையாக அவனை ஒரு ஆங்கிலேயனாக மாற்றி விடுவதா ( எனக்குத் தெரிந்த பல இரண்டாம் தலைமுறை ஆங்கிலப் படிப்பாளர்கள் செயற்கை ஆங்கிலேயனாக இருக்கிறார்கள். அவர்களால் இந்த மண்ணின் மீது நின்று மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.)<BR/><BR/>அல்லது, ஜப்பானியர்களை, சீனர்களை, கொரியர்களை, பிரஞ்சுக்காரர்களை, ஆங்கிலேயர்களை, ஜெர்மானியர்களை, ( தெற்காசிய முன்னாள் காலனி நாடுகளைத் தவித்து அனைவரும்?) பின்பற்றி எல்லாமும் தாய் மொழியில்தான் என்ற திசையில் நகர்வதா?<BR/>இரண்டாவதுதான் சரி என்றாலும், முதலாவதுதான் நடக்கப் போகிறது :)//<BR/><BR/>Well said!! ;)Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48091481140980777912008-04-12T02:39:00.000+08:002008-04-12T02:39:00.000+08:00//தமிழ் மொழியின் வளர்ச்சியின்மைக்கு இது போன்ற பழம்...//தமிழ் மொழியின் வளர்ச்சியின்மைக்கு இது போன்ற பழம்பெருமை ஜல்லிகளே காரணம் என்று நினைக்கிறேன்.//<BR/>ரத்னேஷ்,<BR/>தமிழ் மொழியின், தமிழனின் வளர்ச்சியின்மைக்குக் காரணம் அவனது நிலத்தின் அரசதிகாரம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதே என்று நினைக்கிறேன். ஜப்பான் ஒருவேளை இந்தியாவின் ஒரு மானிலமாக இருந்திருந்தால் அது இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியுமா? ( உங்களின் கவனத்துக்கு: ஜப்பானின் மொழியை ஜப்பானுக்கு வெளியே யாரும் பேசுவதில்லை. அதற்காக அவர்கள் வளரவில்லை என்பீர்களா என்ன?) மொழியின் வளர்ச்சி என்பதை எவ்வளவு நிலப்பரப்பில் அது "பரப்பப் பட்டிருக்கிறது" என்று அளப்பது தவறு. எவ்வளவு கலை, அறிவியல், பிற துறை சார்ந்த பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது என்றுதான் அதை அளக்க முடியும். இன்று தமிழ் கலை, இலக்கிய, அரசியல் துறைகளில் பயன்பாட்டில் உள்ளது. அறிவியலில், தொழில் நுட்ப துறைகளில் பின் தங்கி உள்ளது. சீன, கொரிய, ஆங்கில, ஜப்பானிய மொழிகள் இத்துறைகளில் முன்னனியில் உள்ளன.<BR/><BR/>கோவி,<BR/> //ஆங்கிலத்தின் பயனும் உலக அளவில் அதன் வீச்சும் கற்றுக் கொண்டால் இந்தியர்களுக்கு உலக அளவில் செயல்படும் தகுதிகளும் பலன்களும் கிட்டும். சீனா நம்மிடம் போட்டியிட திணறுவதற்கு முதன்மை காரணமே சீனர்களுக்கு ஆங்கிலம் வராது அவர்கள் ஆங்கில காலனியாக இருந்தது இல்லை.//<BR/><BR/> உடன்படுகிறேன். ஆனால், சீனர்களிடமும், ஜப்பானியர்களிடமும் நாம் திணறுவதற்குக் காரணம் நாம் நமது மொழியில் அறிவியல், தொழில் நுட்ப படிப்புகளை செய்வதில்லை. ( நாம் திணறவேயில்லையே என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.)<BR/><BR/> ஆனால், தாய் மொழியில் மேல் படிப்பு, சிந்தனை இல்லாமல் இருப்பது நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செல்ல இயலாமல் செய்கிறது என்றே நினைக்கிறேன். தமிழில் இருக்கும் புத்தகத்தை என்னால் களைப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. ஆங்கிலப் புத்தகம் தூக்கத்தைத்தான் தருகிறது. முதல் தலை முறையில் ஆங்கிலம் படிப்பவர்கள் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் :)<BR/><BR/> இதற்கு தீர்வு என்ன?<BR/><BR/> எனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்கச் செய்வதன் மூலம், செயற்கையாக அவனை ஒரு ஆங்கிலேயனாக மாற்றி விடுவதா ( எனக்குத் தெரிந்த பல இரண்டாம் தலைமுறை ஆங்கிலப் படிப்பாளர்கள் செயற்கை ஆங்கிலேயனாக இருக்கிறார்கள். அவர்களால் இந்த மண்ணின் மீது நின்று மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.)<BR/><BR/> அல்லது, ஜப்பானியர்களை, சீனர்களை, கொரியர்களை, பிரஞ்சுக்காரர்களை, ஆங்கிலேயர்களை, ஜெர்மானியர்களை, ( தெற்காசிய முன்னாள் காலனி நாடுகளைத் தவித்து அனைவரும்?) பின்பற்றி எல்லாமும் தாய் மொழியில்தான் என்ற திசையில் நகர்வதா?<BR/> இரண்டாவதுதான் சரி என்றாலும், முதலாவதுதான் நடக்கப் போகிறது :)சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandamhttps://www.blogger.com/profile/09421049774111610034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13543003038828529372008-04-12T00:21:00.000+08:002008-04-12T00:21:00.000+08:00கோவி, எனது எழுத்து நடை குழப்படியாக இருக்கிறதா என்ன...கோவி,<BR/> எனது எழுத்து நடை குழப்படியாக இருக்கிறதா என்ன? :)<BR/><BR/>கடைசியா நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்...<BR/> இப்பொழுது உள்ள கூட்டாட்சியில் உள்ள பிரச்சினைகளில் இரண்டு முக்கியமானதாக கருதுகிறேன்.<BR/><BR/> 1) மத்திய அரசு ஒரு மானில அரசுடன் ஒத்துழைக்காமல் ஒரு மானிலத்தை வஞ்சிப்பதற்கான சாத்தியக்கூறு.<BR/><BR/> 2) மக்களால் பிரச்சினைகளை மானில அரசாலா, மத்திய அரசாலா என்று புரிந்து தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை. எ.கா. விலைவாசி உயர்வு மத்திய அரசின் பங்குதான் அதிகம், ஆனால், இன்று தமிழ்னாட்டில் தேர்தல் நடந்தால், மக்கள் இப்பிரச்சினைக்காக மானில அரசைத் தண்டிப்பார்கள், மானில அரசு உண்மையிலேடயே தனது பங்கை நன்கு செய்திருந்தாலும். அதாவது மத்திய மானில ஆளுங்கட்சிகள் அவை செய்யாத தவறுக்கு தண்டிக்கப் படுவதற்கான சாத்தியக்கூறு.<BR/><BR/>என்னால முடிஞ்ச அளவு சொல்லிட்டேம்பா.. :)சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandamhttps://www.blogger.com/profile/09421049774111610034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-514333838540742312008-04-12T00:05:00.000+08:002008-04-12T00:05:00.000+08:00//ஞாயிறு said...கோவி,நான் சொல்ல வந்தது என்னவெனில்,...//ஞாயிறு said...<BR/><BR/>கோவி,<BR/>நான் சொல்ல வந்தது என்னவெனில், //<BR/><BR/>ஞாயிறு அவர்களே,<BR/><BR/>நான் சரியாக புரிந்து கொள்ளாமல் மறுமொழி அளித்ததும் நல்லதாகவே போகுது.<BR/><BR/>பலகருத்துக்கள் உங்களிடம் இருந்து வந்திருப்பதற்கு அதுவே காரணாமாக இருக்கிறது.<BR/><BR/>ஆமாம், கடைசியாக என்ன சொன்னிங்க ? புரியவில்லை<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46472837467231580372008-04-12T00:02:00.000+08:002008-04-12T00:02:00.000+08:00// திராவிடக் கழகமெல்லாம் வழிதவறி போய்விட்டதா என்று...// திராவிடக் கழகமெல்லாம் வழிதவறி போய்விட்டதா என்று தெரியவில்லை, தலித்துகளுக்கு எதிராக வன்முறை செய்து அவர்களை மதிப்பவர்களில் பார்பனர்கள் எவரும் இல்லை.<BR/><BR/>தலித்துகளுக்கு ஆதாரவான இயக்கம் தான் இந்தியா முழுவதும் ஒரே இயக்கமாக உருவாகவேண்டும், மக்கள் தொகையில் 50 விழுக்காடுகள் அளவுக்கு இருக்கும் தலித் பெருமக்கள் விடுதலை அடைந்தால் இந்தியா மிளிரும்.<BR/><BR/>பழங்குடி மண்ணின் மைந்தர்கள் பிறரின் மலத்தை அள்ளும் அவல வேலை செய்வது இன்னும் கூட வட இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கிறது, சுதந்திர இந்தியா என்று பெருமைபடுபவர்கள் வெட்கப்படலாம்.<BR/><BR/>யாருக்கு சுதந்திரம் கிடைத்தது ? ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் வெள்ளைக்காரனிடம் வீழ்ந்தார்கள் அவர்களுக்குத்தானே சுதந்திரம் கிடைத்தது. //<BR/>கோவி,<BR/> நான் சொல்ல வந்தது என்னவெனில், இந்தியா முழுவதும் கருத்துப்பரவல் என்பது சாத்தியமில்லை; அதற்கான ஒற்றை கலை, இலக்கிய மேடை இந்தியாவில் இல்லை. அதனால், எந்த ஒரு அரசியல் சமூக இயக்கமும் இந்திய அளவில் தோன்ற இயலாது. ( விதிவிலக்கு: இந்துத்துவம் மட்டுமே, என்னைப் பொருத்தவரையில் இந்து என்ற அடையாளமும் செயற்கையானது, பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்டது. நமது பெரும்பாண்மை மக்களை மதமற்றவர்கள், எளிய சடங்குகளைக் கொண்டவர்கள் என்றே குறித்திருக்கவேண்டும். )<BR/> <BR/> இரண்டு தீர்வுகள்தான் உள்ளன. பிராந்திய அடையாளங்களை ஒழித்துவிட்டு ஒற்றை தேசியத்தை நோக்கி நகர்வது ( நானும் பீகாரியும் இந்தி பேசுவோம். ஒரே சினிமாவை பார்ப்போம். இந்துத்துவ, வேதகால பெருமிதம் பேசுவோம்.)<BR/> <BR/> அல்லது, மானிலங்களுக்கான அதிகாரங்களை மெல்ல, மெல்ல அதிகரித்து மத்திய அரசின் பங்கை இராணுவத்துக்கானதாக மட்டும் சுருக்குவது. அப்பொழுது பொது மொழிக்கான தேவையோ, மத்திய அரசுக்கான தேர்தலோ இருக்காது. மானிலங்கள் சேர்ந்து இராணுவ சேவையை ஒரு மைய அமைப்பிடம் அவுட்சோர்ஸ் செய்ததைப் போல.<BR/> (பார்ப்பனிய, திராவிட அரசியலை நான் இங்கு பேசவில்லை. ஒரு எடுத்துக்காட்டுக்காக சொன்னேன்.)<BR/><BR/> ஆனால், இப்பொழுதுள்ள கூட்டாட்சி என்பது குழப்படி ஆட்சியாகத்தான் இருக்கிறது,.. எடுத்துக்காட்டாக: ஒகேனக்கல் பிரச்சினையில், தமிழ்னாட்டு நா.உ.(எம்.பி) களைச் சார்ந்து இருப்பதால் தமிழ்னாட்டுக்கெதிராக மத்திய அரசு செயல் பட முடியாத நிலை. ஒருவேளை, இந்த சார்பு இல்லையென்றால் அல்லது மத்திய அரசில் உள்ள கட்சி ஒரு மானிலத்தை வெறுப்பதாக இருந்தால் அதற்கான தீர்வு இந்த அமைப்பில் இல்லை.<BR/> எ.கா. 2: விலைவாசி உயர்ந்து விட்டது. இதற்கு மக்கள் யாரைக் குற்றம் சொல்வது = மானில அரசையா? மத்திய அரசையா? யாருக்கும் தெரியாது... அதனால்தான் மக்கள் அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் ஆளுங்கட்சிக்கெதிராக வாக்களித்து ஏதாவது "மாறும்" என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandamhttps://www.blogger.com/profile/09421049774111610034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5515332063780389002008-04-11T23:33:00.000+08:002008-04-11T23:33:00.000+08:00//ஞாயிறு said... திராவிடர் கழகம் போன்ற ஒரு அரசியல்...//ஞாயிறு said... திராவிடர் கழகம் போன்ற ஒரு அரசியல் இயக்கம் இந்திய அளவில் தோண்றுவது சாத்தியமா?<BR/><BR/>10:44 PM, April 11, 2008<BR/>//<BR/><BR/>திராவிடக் கழகமெல்லாம் வழிதவறி போய்விட்டதா என்று தெரியவில்லை, தலித்துகளுக்கு எதிராக வன்முறை செய்து அவர்களை மதிப்பவர்களில் பார்பனர்கள் எவரும் இல்லை.<BR/><BR/>தலித்துகளுக்கு ஆதாரவான இயக்கம் தான் இந்தியா முழுவதும் ஒரே இயக்கமாக உருவாகவேண்டும், மக்கள் தொகையில் 50 விழுக்காடுகள் அளவுக்கு இருக்கும் தலித் பெருமக்கள் விடுதலை அடைந்தால் இந்தியா மிளிரும்.<BR/><BR/>பழங்குடி மண்ணின் மைந்தர்கள் பிறரின் மலத்தை அள்ளும் அவல வேலை செய்வது இன்னும் கூட வட இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கிறது, சுதந்திர இந்தியா என்று பெருமைபடுபவர்கள் வெட்கப்படலாம்.<BR/><BR/>யாருக்கு சுதந்திரம் கிடைத்தது ? ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் வெள்ளைக்காரனிடம் வீழ்ந்தார்கள் அவர்களுக்குத்தானே சுதந்திரம் கிடைத்தது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36565488388798030132008-04-11T23:25:00.000+08:002008-04-11T23:25:00.000+08:00தெகா,பயன்மிகு நீண்ட பின்னூட்ட அன்பளிப்புக்கு மி(க்...தெகா,<BR/><BR/>பயன்மிகு நீண்ட பின்னூட்ட அன்பளிப்புக்கு மி(க்)க மி(க்)க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72843018183009284682008-04-11T23:24:00.000+08:002008-04-11T23:24:00.000+08:00//பிரபு ராஜதுரை said... நீங்கள் கூறுவது சரிதான். ந...//பிரபு ராஜதுரை said... <BR/>நீங்கள் கூறுவது சரிதான். நான் எழுதியதை பாருங்களேன்<BR/><BR/>"இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன்"<BR/><BR/>"ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையா"<BR/><BR/>இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II <BR/>http://marchoflaw.blogspot.com/2008/03/ii.html<BR/>//<BR/><BR/>வழக்கறிஞர் ஐயா,<BR/><BR/>அந்த கட்டுரையை பலமுறை படித்து இருக்கிறேன். அதை அவ்வப்போது சுட்டியாக இணைக்கவும் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். அண்மையில் கூட உங்கள் இடுகையை ஒரு பதிவர் இடுகையில் சுட்டி இருந்தார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62741966425722277132008-04-11T23:22:00.000+08:002008-04-11T23:22:00.000+08:00//பாச மலர் said... நம் பொது மொழி என்று சொல்ல அதிகம...//பாச மலர் said... <BR/>நம் பொது மொழி என்று சொல்ல அதிகம் தகுதி ஆங்கிலத்துக்கே உள்ளது..அதிகம் பேசப்படுகிறது என்பதால் இந்தியை தேசிய மொழி என்று முத்திரை குத்துகிறார்களே..மேண்டரின் அதிகம் உலக அளவில் பேசப்படுகிறதே..அதை உலக் மொழி எனக் கொள்ள முடியுமா..<BR/><BR/>11:15 PM, April 11, 2008<BR/>//<BR/><BR/>பாச மலர் மேடம்,<BR/><BR/>சரியாச் சொன்னிங்க உலகில் 5 பேரில் 1.5 சீனர்கள் தான் இருக்காங்க.<BR/>அவர்களின் மக்கள் தொகைப்படி சீன மொழியே உலகில் நிறைய (அதிக) மக்களால் பேசப்படும் மொழி, உலக மக்களும் ஒரே மொழிக் கொள்கை கொண்டு சீன மொழியைப் பேசச் சொன்னால் எல்லோரும் அம்பேல் தான். உலகில் மக்கள் தொகை நிறைய (அதிக ) மக்களால் பேசப்படும் மொழியே பொது மொழி என்பது சொத்தை வாதம்<BR/><BR/>கூடுதலாக பேசப் படும் மொழிக்கு பொதுத் தகுதி என்பதைவிட கூடுதல் பயன் தரும் மொழியே பொது மொழி.<BR/>:)<BR/><BR/>டிப்ஸ்க்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50399998024260868482008-04-11T23:15:00.000+08:002008-04-11T23:15:00.000+08:00நம் பொது மொழி என்று சொல்ல அதிகம் தகுதி ஆங்கிலத்துக...நம் பொது மொழி என்று சொல்ல அதிகம் தகுதி ஆங்கிலத்துக்கே உள்ளது..அதிகம் பேசப்படுகிறது என்பதால் இந்தியை தேசிய மொழி என்று முத்திரை குத்துகிறார்களே..மேண்டரின் அதிகம் உலக அளவில் பேசப்படுகிறதே..அதை உலக் மொழி எனக் கொள்ள முடியுமா..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52683990620939441052008-04-11T22:44:00.000+08:002008-04-11T22:44:00.000+08:00// தெற்காசிய நாடுகளெல்லாம் பல இன, பல மொழி பேசும் ம...// தெற்காசிய நாடுகளெல்லாம் பல இன, பல மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள், //<BR/><BR/>யாராவது உருப்படியாக முன்னேறியிருக்கிறார்களா? அவையும் நம்மைப் போல காலனியாதிக்கத்தினால் செயற்கையாகத் தோன்றியவையே?<BR/><BR/>ஐரோப்பாவில் ஒவ்வொரு மொழி பேசுவோரும், தத்தம் அரசைக் கொண்டிருக்கிறார்களே?<BR/>இந்தியா போன்ற நாடுகளில் ஜனனாயகம் என்பது எந்த அளவுக்கு சாத்தியம்? ஒருவர் இந்தியா முழுவதும் உள்ள மக்களை தனது கருத்துக்களால் கவருவது சாத்தியம்தானா?<BR/><BR/>எடுத்துக்காட்டாக இந்தியாவில் இரண்டே இரண்டு தேசிய கட்சிகள்தான் ஐம்பது வருடங்களில் தோன்றியுள்ளன.<BR/>காங்கிரஸ்: பிரிட்டிஷ் என்ற பொது எதிரிக்காக உருவாக்கப்பட்டது<BR/>பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்): இந்தியா முழுவதும் இருக்கும் "ஒரே" இனமான பார்ப்பனர்களால், பார்ப்பனியக் கனவு, பெருமிதம் சார்ந்து உருவானது.<BR/><BR/>திராவிடர் கழகம் போன்ற ஒரு அரசியல் இயக்கம் இந்திய அளவில் தோண்றுவது சாத்தியமா?சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandamhttps://www.blogger.com/profile/09421049774111610034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7099624188036588002008-04-11T22:37:00.000+08:002008-04-11T22:37:00.000+08:00குறிப்பாக இளைஞர்கள் தத்தம் மொழி, பண்பாடு, ஆடைப் பழ...குறிப்பாக இளைஞர்கள் தத்தம் மொழி, பண்பாடு, ஆடைப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. உலகின் செல்வாக்குமிக்க மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் மாறும் நிலை உருவாகி வருகிறது. அது இன்றைய உலகின் பன்மொழிப் போக்கிற்கு எதிரான நிலை. <BR/><BR/>மொழிகளின் அழிவைத் தடுக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள யுனெஸ்கோ நிறுவனம், அதற்கான ஒரு திட்டமாக, ஒவ்வொரு மொழிக் குடும்பத்தாரும் தத்தம் மொழியை - தாய்மொழியாம் முதல் மொழியை - தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. <BR/><BR/>தாய்மொழியை அனைத்து மக்களும் கற்றுப் பயன்படுத்துவதுடன் தேசிய மொழி ஒன்றையும், பன்னாட்டு மொழி ஒன்றையும் கூடக் கற்றுக் கொள்வது நல்லதே என்கிறார் தலைமை இயக்குநர். <BR/><BR/>பன்மொழிப் புலமை என்பது ஒருவருக்குச் செல்லும் இடமெல்லாம் நல்லதே விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. "கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பது பழந்தமிழ் வாக்கு. <BR/><BR/>உலகமயமாகும் இக்காலச் சூழலில், பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும்தான். <BR/><BR/>ஐ.நா. அமைப்பு, உலக நாடுகள் அனைத்துக்கும் உரிய ஒரு பொது நிறுவனம். அது இந்த ஆயிரமாம் ஆண்டுகளுக்கென சில இலக்குகளை (ஙண்ப்ப்ங்ய்ய்ண்ன்ம் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற் எர்ஹப்ள்) நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வறுமை, பசி ஒழிப்பு (ஙஈஎ 1), அனைவருக்கும் ஆரம்பக்கல்வி (ஙஈஎ 2), மலேரியா, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கெதிரான நடவடிக்கை (ஙஈஎ 6), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (ஙஈஎ 7) என்று பல்வேறு வகையான திட்டங்களையும் இலக்குகளையும் அமைத்துக் கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது. <BR/><BR/>திட்டங்களின் வெற்றி, அனைத்து மக்களின் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஒத்துழைப்பைப்பெற அந்தந்தப் பகுதி மக்களை நாட வேண்டும். அவ்வாறு அவர்களை நாட, அந்தந்தப் பகுதி மொழிகளின் துணை வேண்டும். ஆகவே பல மொழிகள் முக்கியமானவைதான். <BR/><BR/>"வேற்றுமையில் ஒற்றுமை காண்பது' என்பது உயர்நெறி. அந்த நெறியில் நின்று, பல மொழிகளையும் மதித்து வாழ வேண்டும் என்னும் உண்மையை உலகத்தார் அனைவரும் ஏற்றுக்கொள்வது மேன்மை. <BR/><BR/>சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும் என்பார்கள். அதற்கிணங்க ஐ.நா. தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ஸ்பானிஷ், ரஷியன், அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல், அனைத்தையும் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டும் என்றும், தம் அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் உடனடியாக வெளியிடுவதோடு, ஆறு மொழிப்புலங்களுக்குமான வளங்களையும் வாய்ப்புகளையும் சமமாகத் தருவதென்றும் முடிவு செய்து, முனைப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. <BR/><BR/>உலக நிறுவனத்தின் செயல்பாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு, நாடுகள் பலவும் தத்தமது மொழிகள் பலவற்றுக்கும் சமமான மதிப்பும் வளமும் வழங்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் மக்கள் சமுதாயம் சந்திக்க இருக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளப் பல்வேறு மொழிகளும் முக்கியமானவையே ஆகும். <BR/><BR/>(கட்டுரையாளர்: சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன்னாள் உதவி இயக்குநர்.)<BR/><BR/><B>நன்றி: திணமணி</B>Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40071850380623897562008-04-11T22:36:00.000+08:002008-04-11T22:36:00.000+08:00அவரது கருத்தை எதிரொலிப்பதுபோல் மேலும் இருவர் "இருவ...அவரது கருத்தை எதிரொலிப்பதுபோல் மேலும் இருவர் "இருவாரங்களுக்கு ஒரு மொழி' என்ற வீதத்தில் மொழிகள் பல அழியும் ஆபத்து உள்ளது என்றும், அந்த உண்மை ஆஸ்திரேலியாவில் தொடங்கி சைபீரியா வரையிலும், ஏன் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலம் வரையிலும் கூடப் பொருந்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அப்படிக் கூறுவோர் ஹாரிசன், கிரிகோரி ஆண்டர்சன் என்னும் இரு அமெரிக்க மொழியியல் அறிஞர்கள். <BR/><BR/>மொழிகள் அழிந்தால் அது மொத்த மனித குலத்துக்குமே நஷ்டம் என்கிறார்கள் மொழி வல்லார். மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால், சிந்தனைகள் குறையும் என்கிறார் ரோஸ்மேரி ஆஸ்ட்லர். <BR/><BR/>மொழிகளின் அழிவு மனித உடல் நலத்துக்கே கூட அழிவு என்கிறார் ஸ்டீபன் ஊர்ம். தம் கூற்றுக்கு ஆதாரமாக, ஆஸ்திரேலிய அனுபவம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார் ஸ்டீபன். <BR/><BR/>ஒருவகைத் தோல் புற்றுநோய், வட ஆஸ்திரேலியாவில் மாபெரும் தொற்று நோயாகப் பரவி வந்த காலத்தில் மேற்கத்திய மருத்துவ முறைகளில் பயின்று வந்த செவிலியப் பெண்மணி அங்கு மருத்துவப் பணியாற்றினார். அவரை மலைவாசிகள் சிலர் சந்தித்தனர். <BR/><BR/>ஒருவகை மூலிகைச் செடியின் சாறு அந்தப் புற்றுநோயைக் குணமாக்க வல்லது என்று குறிப்பிட்டனர். அவர்கள் தந்த தகவலை அந்தச் செவிலியர் உதாசீனப்படுத்தாமல் அப்படியே பின்பற்றினார். <BR/><BR/>வடஆஸ்திரேலிய மக்கள் தொற்று நோயாகப் பரவிய தோல் புற்றுநோயிலிருந்து தப்பினார்கள். அந்த மலைவாசிகளின் மொழி இல்லாது போயிருக்குமானால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்டீபன். <BR/><BR/>மலைவாழ் மக்களின் மொழிகளுக்கு மட்டுமல்ல, செல்வாக்கில்லாத வேறுபிற சிறுபான்மையினரின் மொழிகளுக்கும்கூட, அழிவு ஆபத்திருப்பதை உணர்வது நல்லது. <BR/><BR/>இன்று "உலகமயமாக்கல்' என்ற புதியதோர் அலை வேகமாக வீசி வருகிறது. அத்துடன், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அகிலம் எங்கும் தழைக்கிறது. அவற்றின் விளைவாகப் பல சமுதாயங்கள் மாறுதல்களைச் சந்தித்து வருகின்றன. <BR/><BR/>...தொடருது இன்னும்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87928991489397690162008-04-11T22:34:00.001+08:002008-04-11T22:34:00.001+08:00நீங்கள் கூறுவது சரிதான். நான் எழுதியதை பாருங்களேன்...நீங்கள் கூறுவது சரிதான். நான் எழுதியதை பாருங்களேன்<BR/><BR/>"இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன்"<BR/><BR/>"ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையா"<BR/><BR/>இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II <BR/>http://marchoflaw.blogspot.com/2008/03/ii.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35671308881346725472008-04-11T22:34:00.000+08:002008-04-11T22:34:00.000+08:00கோவியாரே,சில அன்பர்களின் மொழி பேணலின் அவசியம் குறி...கோவியாரே,<BR/><BR/>சில அன்பர்களின் மொழி பேணலின் அவசியம் குறித்த ஐயக் கேள்விகளுக்கு "திணமணியில்" நான் கட்டுரையை இங்கு ஒட்டுகிறேன்...<BR/><BR/><B>மொழிகள் முக்கியமானவை</B><BR/><BR/>By வெ. நல்லதம்பி<BR/><BR/>தாய்மொழிகளின் அருமைபெருமைகளை உணர்ந்த ஐ.நா. நிறுவனம், 2000-வது ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி 21-ஆம் நாளை "உலகத் தாய்மொழி நாளாக' அறிவித்து வந்துள்ளது. <BR/><BR/>இந் நிலையில், 2008-ஆம் ஆண்டை "உலகமொழிகளின் ஆண்டாகவே' தற்போது அறிவித்துள்ளது. <BR/><BR/>இந்த ஆண்டில் முன்வைக்கப்பட்டுள்ள மையக்கருத்து "மொழிகள் முக்கியமானவை' என்பதாகும். அதற்குக் காரணங்கள் பல. மொழிகள் இனங்களை அடையாளம் காட்டுவன, அந்தந்த இனமக்களின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன, தத்தமது சமுதாய ஒருமைப்பாட்டுக்கு உதவுவன. நிலையான வளர்ச்சிக்கு வழிவகுப்பன, பசியையும் பிணிகளையும் உலகிலிருந்து அகற்ற முன் நிற்பன. பண்பாட்டின் சின்னமாகப் பரிணமிப்பன; அனைத்துக்கும் மேலாக, அறியாமையை அகற்ற உதவும் கல்வியை அனைவர்க்கும் வழங்கும் ஆற்றல் மிக்க கருவிகளாக விளங்குவன. <BR/><BR/>தற்போது உலகெங்கும் 7000 மொழிகள் வரை பேச்சு வழக்கிலும், மேலும் பல்லாயிரக்கணக்கானவை ஏட்டில் இடம்பெறாத நிலையிலும் உள்ளன. <BR/><BR/>ஏட்டில் இடம்பெற்று பேச்சில் இடம்பெறாத மொழிகள், ஏட்டிலும் பேச்சிலும் இடம்பெற்று இலக்கிய வளம் பெறாத மொழிகள், இலக்கிய வளம் பெற்று ஆட்சியில் இடம் பெறாத மொழிகள் என்று பலதரத்து மொழிகளின் நிகழ்காலம், வருங்காலம் அனைவரின் கவனத்துக்கும் உரியவை ஆகின்றன. <BR/><BR/>வளமான மொழிகளிலேயேகூட ஆயிரக்கணக்கான மொழிகள், இன்னும் கல்வி மொழியாக, ஊடக மொழியாக, கணினி மொழியாக, மக்கள் தொடர்பு மொழியாக ஆக்கப்படவில்லை. இதனைக் குறிப்பிடுபவர் ஐ.நா.வின் உறுப்பு நிறுவனமான யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் கோய்ச்சிரோ மட்சுரா. <BR/><BR/>அவரது அடுத்த கூற்று, நம்மில் பலருக்குச் சற்று அச்சமூட்டுவதாகக்கூட இருக்கலாம். இப்போது பேச்சு வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகளில் சரிபாதி, அடுத்த சில தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்கிறார் அவர்.<BR/><BR/>... தொடருது....Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64294553060994950572008-04-11T21:16:00.000+08:002008-04-11T21:16:00.000+08:00//ஞாயிறு said... கோவி,நான் சொல்ல வந்ததை சரியாக சொல...//ஞாயிறு said... <BR/>கோவி,<BR/>நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். எனது பார்வையில் இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை இந்தியாதான் என்று நினைக்கிறேன். அன்னியன் ஒருவன் சேர்த்து வைத்து ஆண்டான் என்பதைத் தவிர எனக்கும் பீகாரிக்கும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.<BR/>அதோடு இந்திய மக்களுக்கு என்று ஒரு கூட்டு மனம் இல்லை என்பதால் பொதுவான அரசியல், கலை, இலக்கியப் போக்குகள் நிகழச் சாத்தியமில்லை; ஆகவே, இந்த அரசு, தேர்தல் எல்லாமே பொருளற்றதாக வெளியிலிருந்து திணிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அந்தப் பொருளற்ற அரசுக்கு பொது மொழி எதுவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசுகிறீர்கள்?<BR/>இது போல பல மொழி பேசும் மக்கள் கொண்ட நாடுகள் எத்தனை? அரசாட்சியில் எவ்வளவு தூரம் அவை வென்றுள்ளன?<BR/>//<BR/><BR/>நீங்கள் சொல்வதும் சரிதான், மொழியும் மதமும் கூட வேறு என்பதால் பாகிஸ்தான் தனியாக சென்றது. நாம் எல்லோரும் இந்தியர் என்று சொல்கிறோம், இந்தியரா தேச ஒற்றுமை வேண்டும் அதற்காக நான் பேசுவதை படி என்கிறார்கள் வடநாட்டினர் :) தென்னக மொழிகளில் பரவாலாகப் பேசப்படும் தெலுங்கை ஏன் அவர்கள் கற்றுக் கொண்டு தேசியம் காக்கக் கூடாது என்று தெரியவில்லை. அப்படி செய்தால் தென்னக மக்களும் வடநாட்டு மொழி ஒன்றை கற்றுக் கொள்வார்கள்.<BR/>:)<BR/><BR/>பலமொழிகள், பல இனமக்கள் வசிக்கும் நாடுகள் பல உள்ளன, தெற்காசிய நாடுகளெல்லாம் பல இன, பல மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள், இருந்தாலும் பெரும்பான்மை இனமே ஆதிக்கம் செலுத்துவது என்பது உலகமரபு.<BR/>:)<BR/><BR/>பெங்களூரு பற்றி பதிவர் மோகன் கந்தசாமி எழுதி இருப்பதைப் படிங்க, <A HREF="http://mohankandasami.blogspot.com/2007/12/blog-post_24.html" REL="nofollow">படிக்க சிரிப்பாக இருந்தாலும் அவர் சொல்வது உண்மை ! உண்மை ! </A><BR/><BR/>வயுறுவலி கேரண்டி !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2903974845302051472008-04-11T20:26:00.000+08:002008-04-11T20:26:00.000+08:00கோவி, நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று ந...கோவி,<BR/> நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். எனது பார்வையில் இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை இந்தியாதான் என்று நினைக்கிறேன். அன்னியன் ஒருவன் சேர்த்து வைத்து ஆண்டான் என்பதைத் தவிர எனக்கும் பீகாரிக்கும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.<BR/> அதோடு இந்திய மக்களுக்கு என்று ஒரு கூட்டு மனம் இல்லை என்பதால் பொதுவான அரசியல், கலை, இலக்கியப் போக்குகள் நிகழச் சாத்தியமில்லை; ஆகவே, இந்த அரசு, தேர்தல் எல்லாமே பொருளற்றதாக வெளியிலிருந்து திணிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அந்தப் பொருளற்ற அரசுக்கு பொது மொழி எதுவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசுகிறீர்கள்?<BR/> இது போல பல மொழி பேசும் மக்கள் கொண்ட நாடுகள் எத்தனை? அரசாட்சியில் எவ்வளவு தூரம் அவை வென்றுள்ளன?சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandamhttps://www.blogger.com/profile/09421049774111610034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9009241973300893742008-04-11T20:02:00.000+08:002008-04-11T20:02:00.000+08:00//ஞாயிறு said... ( பேசு பொருளுடமிருந்து விலகி இருந...//ஞாயிறு said... <BR/>( பேசு பொருளுடமிருந்து விலகி இருந்தால் மன்னிக்கவும்.)<BR/>பொதுவாக ஒரு மொழி கூட இல்லாமல் அன்னியன் ஒருவன் மொத்தமாக ஆண்டான் என்ற ஒரே காரணத்துக்காக உலகில் எந்தெந்த நாடுகள் உள்ளன? அவை எவ்வளவு சிறப்பாக நிர்வாகத்திறனை, வளர்ச்சியைப் பெற்றுள்ளன.<BR/>//<BR/><BR/>ஞாயிறு,<BR/>மொழிகள் இல்லை என்பதற்காக ஒரு நாட்டை பிறநாட்டவர் போரிட்டு வெற்றி அடைந்து ஆளவில்லை, அந்த நாடுகளில் இருக்கும் இயற்கைச் செல்வங்களும், வளங்களுமே காரணம், பொருளே இல்லாத நாட்டிற்கு யாரும் படையெடுத்துச் சென்றதில்லை, அடிமைகளை பிடித்து வருவதற்கோ, அடிமைகளாக ஆக்கிக் கொள்வதற்க்காக அவ்வாறு செய்யப்பட்டிருந்தாலும் அந்த இடங்களிலெல்லாம் வெற்றிபெற்றவர்கள் ஆட்சி நடத்தியது போல் தெரியவில்லை. நாகரீகம், மொழி ஆகியவற்றில் வளர்ந்த்திருந்து சமூகமாக மாறி இருந்து ஒரு இனக் குழுவாக மக்கள் வாழும் பகுதிகளே நாடுகள் ஆகின, அப்படி வெல்லப்படும் நாடுகளில் நிர்வாகத்திற்காக வென்ற மன்னர்களின் மொழிகள் அங்கு பயன்படுத்தப்பட்டு அவ்வட்டார மொழிகளில் கலந்தது அல்லது முடக்கியது என்று சொல்லலாம். அப்படி இந்தியாவில் பரவிய இரு மொழிகள் ஆங்கிலம், இந்திகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com