tag:blogger.com,1999:blog-10267267.post4201290851890436784..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இறைவன் படைக்கிறானா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-10267267.post-62090546396176156042008-10-08T11:54:00.000+08:002008-10-08T11:54:00.000+08:00தருமி அவர்களின் கேள்விக்கான பதில்..பழிதீர்த்தலும் ...தருமி அவர்களின் கேள்விக்கான பதில்..<A HREF="http://salahuddin.blogspot.com/2008/10/blog-post.html/" REL="nofollow">பழிதீர்த்தலும் மன்னித்தலும்</A>Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86585885754510970832008-10-07T20:47:00.000+08:002008-10-07T20:47:00.000+08:00கோவியாரே! இந்த பதிவின் பின்னூட்டத்தொடரும்... படைப்...கோவியாரே! இந்த பதிவின் பின்னூட்டத்தொடரும்... படைப்புத் தொழிலும் ஒன்று என்று நினைத்துதான் ஆணுறையின் அவசியத்தைப் பற்றி எழுதினீர்களா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70807730575879681542008-10-07T20:09:00.000+08:002008-10-07T20:09:00.000+08:00தருமி ஐயா, நண்பர்கள் ஜலாலுதின், நல்லடியார் மற்றும்...தருமி ஐயா, நண்பர்கள் ஜலாலுதின், நல்லடியார் மற்றும் பின்னூட்டமிட்ட அனைவர்களுக்கும்,<BR/><BR/>நான் இதை மதவிவாதம் செய்ய எழுதவில்லை, நான் தொட்டு இருப்பது பெளதீகப் பொருள்கள் சூனியத்திலிருந்து தோன்ற சாத்தியமா இல்லையா என்பது பற்றிதான். ஆனால் விவாதம் மத நம்பிக்கையைக் குறித்த (குறிப்பாக இஸ்லாம் தொடர்பான) கேள்வியாகவும் பதிலாகவும் செல்வதால் மேலும் இதைப் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை. மதம் தொடர்புடன் கூறப்பட்டுள்ளவைகள் முழுக்க முழுக்க நம்பிக்கைச் சார்ந்தவைகள். சொல்லப்படுபவை நம்பிக்கை என்ற அளவில் எடுத்துக் கொண்டு செல்லவேண்டி இருக்கிறது. நம்பிக்கை குறித்து விவாதம் செய்யும் போது அவை முடிவுக்கு வராது.<BR/><BR/>இதுவரை நடந்த விவாதங்கள் கருத்துப்பரிமாற்றம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அனைவரும் உணருவோம்.<BR/><BR/>புரிந்துணர்வோடு அடுத்த சிந்தனை பதிவுகளில் தொடர்வோம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37291985798279647362008-10-07T18:21:00.000+08:002008-10-07T18:21:00.000+08:00பின்னூட்டங்கள் மிக நீளமாகச் சென்று விட்டன. கோவி.க...பின்னூட்டங்கள் மிக நீளமாகச் சென்று விட்டன. கோவி.கண்ணன் பொறுத்துக் கொள்வாராக :)<BR/>தருமி அவர்களின் கேள்விகளுக்கு என் பதிவிலேயே விரைவில் பதில் அளிக்கிறேன்.Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46125713362205180262008-10-07T17:50:00.000+08:002008-10-07T17:50:00.000+08:00//14 நூற்றாண்டுகள் ஆன போதிலும் இஸ்லாமிய வழிகாட்டுத...//14 நூற்றாண்டுகள் ஆன போதிலும் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருந்துவனவாகவே இருக்கின்றன.//<BR/><BR/>இதை மறுத்து ஏற்கெனவே நான் சொன்னதை மீண்டும் இங்கு தருகிறேன்" <A HREF="http://dharumi.blogspot.com/2007/04/210.html" REL="nofollow"> அதோடு சிறுநீர் கழிப்பதைப் பற்றிக்கூட நபிகள் மூலமாகக் கடவுள் நிபந்தனைகள் விதித்துள்ளார் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உட்கார்ந்துதான் சிறு நீர் கழிக்க வேண்டும் என்பதுவும், ஒரே ஒரு முறை நபிகள் நின்று கொண்டே சிறுநீர் கழித்து ஒரு exceptional clause ஏற்படுத்தியதையும் கேள்விப்பட்டதுண்டு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அன்றைய அராபியர் அணிந்திருந்த லூசான ஆடை, அங்கே திறந்த வெளியில் அடிக்கக் கூடிய வலுவான காற்று - இவையெல்லாமே உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை புத்திசாலித்தனமான ஒரு விஷயமாக ஆக்கியிருக்கும். ஆனால் இன்று இருக்கும் public water closet-களில் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க அமைக்கப் பட்டிருக்கும் கழிப்பறைகளில், நாம் அணியும் இறுக்கமான உள்ளாடையும், அதற்கு மேலணியும் ஜீன்ஸும் நம்மை உட்கார அனுமதிக்குமா என்று யோசியுங்கள். இப்படி அந்தக் காலத்துக்குப் பொருந்திய அப்போதைய நடைமுறைகளைக் காலாகாலத்துக்கும் பொருத்தமானதாகவும் எங்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டு விட்டதால் அதைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதும் முறையா என்ற கேள்வி எனக்கு. அதோடு ஏதோ ஒரு காலகட்டத்துக்கும், ஒரு நாட்டின் அப்போதைய பழக்க வழக்கங்களுக்கும் சரியாக இருந்த விஷயங்களை பொதுவாக எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஆக்குவதாலுமே no religion is universal என்ற விவாதத்தை என் பதிவு 68; பத்தி: 9-ல் வைத்துள்ளேன்.</A>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89290101561925435262008-10-07T17:45:00.000+08:002008-10-07T17:45:00.000+08:00//குழந்தை பிறப்பு இருக்காது என்று நினைக்கிறேன். உட...//குழந்தை பிறப்பு இருக்காது என்று நினைக்கிறேன். உடலுறவு ??? தெரியவில்லை.//<BR/><BR/>எனக்குத் தெரிந்தது; அது சரியா என்று நீங்கள்தான் சொல்லணும்: <BR/><A HREF="http://dharumi.blogspot.com/2005/09/67-6.html" REL="nofollow"><BR/>//இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி 'நல்ல வேளை' எதுவும் சொல்லப்படவில்லை!//</A>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69938050951891394542008-10-07T17:35:00.000+08:002008-10-07T17:35:00.000+08:00//அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் ...//அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது://<BR/><BR/>இந்த வாக்கியத்தின் முதல் பகுதியைத் தான் நான் கேள்விக்குட்படுத்துகிறேன். எந்த ஒரு மதத்திலும் பழிதீர்ப்பதையோ, கொலை செய்வதையோ நியாயப்படுத்துதல் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.<BR/><BR/>//இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;//<BR/><BR/>இன்னா செய்தாரையும் ஒறுத்தல் பற்றிப் பேசினால்தானே அது நல்வழிப்படுத்தும் வழியாக இருக்க முடியும். பழிக்குப் பழி என்று போதிப்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?<BR/><BR/><BR/>//அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)<BR/>எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)//<BR/><BR/>மேற்கண்ட இரு வாசகங்களும் தனிமனித நீதிபற்றிதான் கூறுகிறதாகத் தெரிகிறதேயொழிய நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்வதுபோல்- //<BR/>குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை.// அரசாங்களுக்கு உரிய கட்டளைகளாகத் தெரியவில்லையே ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39260665013564157612008-10-07T17:10:00.000+08:002008-10-07T17:10:00.000+08:00//சலாஹுதீன்,இதையும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்க...//சலாஹுதீன்,<BR/><BR/>இதையும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள், எல்லாம் நிரந்தரம் என்றால் அலுப்புதான் வரும். தானே நிரந்தர முதல்மந்திரி ஆகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அது மகிழ்ச்சியானதாகவே இருக்க முடியாது. அயற்சி அலுப்பு எல்லாமும் இருந்துவிடும், அது தொடராது என்னும் பொழுது தான் அது அவசியம் என்றே மனம் உணரும். ஆயுள் முழுவதும் கைதியாக இல்லாவிட்டாலும் ஜெயில் வார்டனாகவே இருப்பவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லிவிடமுடியுமா ?//<BR/><BR/>நல்ல காரியங்களைச் செய்தவர்கள் சுவர்க்கத்தில் மகிழ்விக்கப் படுவார்கள் என்றும் அவர்கள் மனம் விரும்பியதெல்லாம் அங்கு இருக்கும் என்றும் சொல்கிறது குர்ஆன். ஆக, என்ன மாதிரி சூழலும் வசதிகளும் இருந்தால் நம் மனம் மகிழ்ச்சியடையுமோ அவ்வகையான வசதிகள் சுவர்க்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதில் ஒருவேளை நாம் சலிப்படைந்து வேறோரு மாறுதலை விரும்பினால் அதுவும் கூட அங்கு நாம் பெற்றுக் கொள்ளக்கூடும். யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வகையான நல்லவைகளும் அங்கு உண்டு என்றும் குர்ஆன் சொல்கிறது.<BR/><BR/>அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (அல்-குர்ஆன் 76:20)<BR/><BR/>அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (அல்-குர்ஆன் 32:17)<BR/><BR/><BR/>//சொர்கத்தில் மனிதராக பிறப்பெடுத்தவர்களின் வயது நிலை பற்றி தெளிவு இல்லை, குழந்தையாகவே இறந்தவன் குழந்தையாகவே சொர்கத்திலும் தொடர்ந்தால் அது சொர்கம் என்று சொல்லமுடியாது.//<BR/><BR/>சொர்க்கத்தில் பிரவேசிப்பவர்கள் இளம் வயதுடையவராக இருப்பார்கள் என்ற நபிமொழி ஒன்று இருக்கிறது. <BR/><BR/>//சொர்கத்தில் உடலுறவு, குழந்தை பெறுவதெல்லாம் இஸ்லாம் நம்பிக்கைப்படி இருக்கிறதா ? மற்றதையெல்லாம் பிறகு கேட்கிறேன்.//<BR/><BR/>குழந்தை பிறப்பு இருக்காது என்று நினைக்கிறேன். உடலுறவு ??? தெரியவில்லை.<BR/><BR/>//சகமனிதருக்கு இரக்க உணர்வு வரவேண்டும் என்பதற்க்காக ஒருவரை பிறவி குருடராக படைத்து அவர் பிறரிடம் உதவி பெற்றே வாழவேண்டும் என்பது என்ன நியதி ? அவர்கள் கண்ணில்லாமல் இருப்பதை மகிழ்ச்சியாகவே ஏற்று கொள்கிறாரர்களா ? //Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52041513134307013602008-10-07T16:50:00.000+08:002008-10-07T16:50:00.000+08:00//எந்த ஒரு செயலுக்கும் தூண்டல் அல்லது எதோ ஒரு காரண...//எந்த ஒரு செயலுக்கும் தூண்டல் அல்லது எதோ ஒரு காரணம் இருக்க வேண்டும், இறைவனுக்கு இவற்றைப் படைக்க என்ன காரணம் ஏற்பட்டு இருக்க வேண்டும்?//<BR/> <BR/>காரணமின்றி தான் எதையும் படைக்கவில்லை என்றுதான் இறைவனும் சொல்கிறான். உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற உலகைப்படைத்த இறைவனே அவ்வுயிரினங்களுக்குத் தீங்கு செய்யும் ஜீவராசிகளையும் படைத்துள்ளான். என்ன சார் இது அநியாயம்? உலகில் குறிப்பிட்டக் காலம் வாழ்ந்து என்னைப் பற்றி அறிந்து கொண்டு மீண்டும் என்னிடம் வா, வினைகளுக்கேற்ப சுவர்க்கம்/நரகம் தருகிறேன் என்று சொல்லி மனிதர்களைப் படைத்ததோடு தேள்,பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களையும் சேர்த்தே படைத்திருக்கும் இறைவன், பிறர் துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்டா? அறிவற்ற படைப்பாளனா? என்ற கேள்விகளும் நியாயமானதே!<BR/> <BR/>அதேபோல், மனிதன் உயிர்வாழ பூமியும் பகலிரவிற்கு சூரியனும் சந்திரனும் போதுமானதாயிருக்க இன்னபிற கோள்களும், நட்சத்திரங்களும் ஏன் தேவையற்று படைக்கப்பட்டிருக்கின்றன? அவற்றைப் படைத்து பயனற்று?! இருப்பதற்குப் பதிலாக பூமியை இன்னும் சிறப்பாக படைத்திருக்கலாமே? என்று சாதாரண மனிதனுக்கிருக்கும் அறிவுகூட இறைவனுக்கு இல்லையே? பிறகு எப்படி படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாளனாகத் தன்னைச் சொல்லிக் கொள்கிறான்?<BR/> <BR/>சரி, படைத்ததுதான் படைத்தான் மனிதர்களிலாவது ஊனமின்றி, அங்க குறைபாடின்றி, ஒழுங்கற்ற உருவமைப்பின்றி எல்லோரையும் ஆரோக்கியமாகப் படைத்துத் தொலைத்திருக்கலாமே. சிலருக்கு எல்லா வசதிகளையும் கொடுத்தும்,சிலரைப் பஞ்சப்பரதேசியாக,ஊனமுற்றவராக,பிறவிக் கோளாறுடன் தப்பும் தவறுமாகப் படைத்து விட்டு, அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன் என்பது 'லொள்ளு'தானே என்றுக் கேட்கலாம்!<BR/> <BR/>ஆக, ஒழுங்காகவோ ஊனமாகவோ, பயனுடனோ பயனின்றியோ அனைத்தும் படைக்கப்பட்டு உள்ளன என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது என்று நினைக்கிறேன்.சரி, இவை/இவர்கள் ஏன் படைக்கப்பட வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? என்று பார்ப்போம்.<BR/> <BR/>எல்லாம் அவன் செயல் என்று இறைநம்பிக்கையாளர்களும், எல்லாம் இயற்கை/அறிவியல் என்று இறை மறுப்பாளர்களும் சொல்லிக் கொள்கிறார்கள். இதில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்? எல்லாம் அவன் செயலென்றால் நரகத்திற்கு இட்டுச் செல்லும் கெட்டவனாக என்னைப் படைத்ததும் அவன் செயல்தானே? அதற்கு ஏன் என்னைப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் கேட்கலாம்!அதே போல், எல்லாமே இயற்கை/அறிவியல் நிகழ்தகவு என்றாலும் இதுபோன்ற எதிர்கேள்விகள் எழும்!<BR/> <BR/>எல்லாமே இயற்கை என்பவர்கள்கூட இயற்கைக்கு முரணாக உடலை ஆடையிட்டு மறைக்கிறார்கள்! இயற்கையான வாய் துர்?நாற்றத்தை டூத் பேஸ்ட் கொண்டு அழிக்கிறார்கள்! இயற்கையான உணவை நெருப்பிலிட்டு வேக வைத்துப் புசிக்கிறார்கள்! இயற்கையாக ஏற்பட்ட சுனாமிக்கு இறைவனை நொந்து கொள்கிறார்கள்! இயற்கையாக எதற்கு சுனாமி ஏற்பட வேண்டும்? ஏன் டிசம்பர் 26,2004 அன்று ஏற்பட வேண்டும் என்றெல்லாம் எதிர் கேள்விகளும் எழும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாக்கியானங்களைச் சொல்வார்கள். கடவுள் நம்பிக்கையாளர்கள் இதுவும் அவன் செயல் என்பார்கள்! நாத்திகர்கள் அறிவியல் தியரியை துணைக்கழைத்துக் கொண்டு பூமியின் டெக்டானிக் தட்டுகள் இடம்பெயர்ந்ததால் சுனாமி ஏற்பட்டது என்று சொல்லி நழுவுவார்கள்! ஏன்சார் அந்த ஆட்டம் கண்ட டெக்டானிக் பிளேட்டை ஆடாமல் நிறுத்துவதற்கு உங்கள் விஞ்ஞானிகள் முயற்சி செய்யக்கூடாதா? என்றும் கேட்கலாம்!<BR/> <BR/>மொத்தத்தில், நல்லவை நடந்து கொண்டிருக்கும்போது இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள்கூட கெட்டது நடக்கும்போது இறைவனைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.மனிதர்களில் இப்படியும் இருப்பார்கள் என்பதை அறிந்திருப்பதானோ என்னவோ இத்தகையச் சமநிலையற்ற படைப்புகளும், படைப்பினங்களின் சுழற்சியும் தற்காலிகமானவையே; நீண்ட நெடிய வாழ்க்கைக்குத் தயார் செய்யவே இவ்வுலகில் சொற்பகாலம் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான். இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற நம்பிக்கை வலுப்பெறும்போது இறைவனைப் பற்றிய அனாவசியக் கேள்விகள் எழாது.<BR/> <BR/>இறைநம்பிக்கை விசயத்தில் தர்க்க ரீதியிலான கேள்விகளுக்குப் பெரும்பாலும் மனிதர்களிடம் பதில் இருக்காது. ஏனென்றால் சொல்லப்பட்டவை குறித்து மட்டுமே விளக்க முடியும். அறிவியல் குறித்து பேசுபவர்களுக்கும் இது பொருந்தும். அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளிருப்பதாக யாரேனும் சொல்லி விட்டு, இறைவனைப் பற்றிய கேள்விகளை வைத்தால் நியாயமிருக்கும்.<BR/> <BR/>நட்புடன்,<BR/>நல்லடியார்நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74038918989620493302008-10-07T15:59:00.000+08:002008-10-07T15:59:00.000+08:00// KARMA said... உங்கள் கருத்துப்படி மக்கள் தொகை அ...// KARMA said... <BR/><BR/>உங்கள் கருத்துப்படி <BR/>மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கை வழிகாட்டல்கள் மாறுதலாகவேண்டும் என்று இறைவன் கருதியே பல நபிமார்களும், வேதப்புத்தகங்களையும் அனுப்பி வைத்துள்ளான்.<BR/><BR/>மக்கள் தொகை இன்னும் அதிகரித்து கொண்டுதானுள்ளது, காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கையும் மாறிக்கொண்டேயுள்ளது.<BR/><BR/>இதன்படி பார்த்தால் நபி(ஸ்ல்) இறுதி தூதர் மற்றும் குரான் இறுதி வேதம் என்பதிலேயே பெரிய முரண்பாடு தோன்றுகிறதே?//<BR/><BR/>14 நூற்றாண்டுகள் ஆன போதிலும் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருந்துவனவாகவே இருக்கின்றன. இஸ்லாமின் எந்த ஒரு கொள்கையும் இன்று சாத்தியமில்லாமல் போய்விட்டதாக நாம் அறியவில்லை. இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய கோட்பாடுகளின் முழுப்பரிமாணமும் இன்னும் வெளிப்படவில்லை என்றே நான் கருதுகிறேன். இஸ்லாமிய வங்கியியல், இஸ்லாமியப் பொருளியல் போன்ற துறைகள் இப்போதுதான் வளர்ச்சி பெற்று வருகின்றன. <BR/><BR/>தவிர, சகோதரர் கோவி.கண்ணன் சொன்னது போல, இஸ்லாமுக்குப் பிறகு இன்னொரு தூதரோ இன்னொரு வேதமோ வரவில்லை என்பதால் இறுதித் தூதர், இறுதி வேதம் என்பதில் முரண்பாடு எதுவும் இல்லையே!Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82218804328141673042008-10-07T15:48:00.000+08:002008-10-07T15:48:00.000+08:00//தருமி said... சலாஹுத்தீன்,//இறைத்தூதர்கள் மூலமாக...//தருமி said... <BR/>சலாஹுத்தீன்,<BR/><BR/>//இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன.//<BR/><BR/>மாறுதலடைவதற்கு கடவுளின் கட்டளைகளுக்கு என்ன தேவை? ஏன் பல்லுக்குப் பல் (பழைய ஏற்பாடு), அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு (புதிய ஏற்பாடு),<BR/>குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே (குரான்) என்பது போன்ற மாற்றங்கள் ஏன்?//<BR/><BR/>தருமி அய்யா, பிற மதக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு கருத்து சொல்லும் அளவிற்கு நான் அறிந்தவன் அல்ல என்றாலும் முயல்கிறேன்.<BR/><BR/>'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41 <BR/><BR/>பைபிளின் மேற்கண்ட வசனம் 'உன்னை தாக்குபவர்களைக் கூட நீ எதிர்க்காதே. மாறாக அவர்கள் உன்னை மேலும் தாக்கும் வகையில் அடிபணிந்து போ!' என்கிறது. நியாயவானாகிய இயேசுபிரான் இவ்வாறு போதித்திருப்பாரா என்ற சந்தேகத்தையே இது எழுப்புகிறது. தவிர, இது நடைமுறையில் சாத்தியமில்லாததாகவும், கிருஸ்துவ நாடுகளால் கூட செயல்படுத்தப்படாத ஒன்றாகவும் இருக்கிறது. நடைமுறைப் படுத்தப்பட்டால் கூட அது நியாயமாக இருக்காது. <BR/><BR/>இயேசுவின் காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகே தொகுக்கப்பட்ட பைபிளில் இறை போதனைகளுடன் தீர்க்கதரிசிகளின் உபதேசங்கள் தொகுப்பாளர்களின் அபிப்ராயங்கள் ஆகியவையும் கலந்திருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இயேசுபிரானின் உண்மையான போதனை ஒன்று இவ்வாறு திரிந்து போய் இருக்கலாம் என்பது என் கருத்து.<BR/><BR/>குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை. இந்தச் சட்டத்தை தனிநபர்கள் கையிலெடுத்துக் கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது. <BR/><BR/>அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது:<BR/><BR/>அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)<BR/><BR/>அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)<BR/><BR/>இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (42:40)<BR/><BR/>எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)<BR/><BR/>ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43)Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5233596030682298872008-10-07T14:54:00.000+08:002008-10-07T14:54:00.000+08:00// Dharan said... //பொய் சொல்வது, திருடுவது தப்பு'...// Dharan said... <BR/><BR/>//பொய் சொல்வது, திருடுவது தப்பு' போன்ற உள்ளுணர்வுகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே pre-recorded செய்யப் பட்டுத்தான் குழந்தைகள் பிறக்கிறார்கள்//<BR/>இது சூழ்நிலையைப் பொறுத்த விடயமாக இருக்கத்தான் வாய்ப்பு.<BR/>PRE-RECORDED ஆக இருக்க வாய்ப்பில்லை.//<BR/><BR/>உதாரணமாக, ஒரு விளையாட்டு சாமானை கீழே போட்டு உடைத்து விட்ட இரண்டு வயது குழந்தையிடம் 'இதை யார் உடைத்தது?' என்று கேட்டால், 'எனக்குத் தெரியாது' என்று சொல்லும்போதே அக்குழந்தையின் கண்களில் ஒரு குற்ற உணர்வு தெரியும். அதன் மனதில் கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் 'பொய் சொல்வது தப்பு' என்ற உள்ளுணர்வு மட்டுமே இருக்கும் சூழலில்தான் இது நிகழும். அதைத்தான் pre-recorded message என்றேன். <BR/><BR/>//கடவுள் என்கிற விடயம் பிறக்கும் போதே pre-recorded ஆக வருவது என்பதை ஒரு போதும் ஒப்புக்கொள்ள முடியாது. இஸ்லாமியருக்கு பிறந்த குழந்தையை பிராமனர் வீட்டில் வளர்க்கும் போது பிராமணக் கடவுள் பற்றுள்ளதாகவும், கிறித்துவர் வீட்டில் வளர்ந்தால் கிறித்துவ கடவுள் சிந்தனையுடனும் வளரும்,//<BR/><BR/>பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே 'படைத்தவன் ஒருவன் இருக்கிறான்' என்ற உள்ளுணர்வுடனே பிறக்கிறார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. அவர்களுக்கு படைத்தவன் யார் என்பதையோ அல்லது அப்படி யாரும் இல்லை என்றோ கற்பிப்பது பெற்றோரும் அவர்கள் வளரும் சூழ்நிலையும்.<BR/><BR/>//சிந்தனை என்பது வரையறைக்குள் வரக்கூடாது. மத நூல்கள் அனைத்தும் சிந்தனையை ஒரு வரையறைக்கிள் கட்டுப்படுத்துகிறது.//<BR/><BR/>சிந்தனை என்பது வரையறைக்குள் வரக்கூடாது என்பது சரிதான். வரையறையாக இல்லாமல் வழிகாட்டலாக இருக்கும் கருத்துக்களை, சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம்தானே?Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67091041896108067962008-10-07T14:39:00.000+08:002008-10-07T14:39:00.000+08:00//இல்லை. நிரந்தர மறுமை வாழ்வு என்பது அடிபட்டுப் போ...//இல்லை. நிரந்தர மறுமை வாழ்வு என்பது அடிபட்டுப் போகவில்லை. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகு இன்னொரு பூமி படைக்கப்பட்டால் இந்த முறை பூமியில் வாழ்ந்து மரணித்தவர்கள் மற்றொருமுறை பூமிக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அவர்களின் நிரந்தர மறுமை வாழ்வு தொடரவே செய்யும்.//<BR/><BR/>சலாஹுதீன்,<BR/><BR/>இதையும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள், எல்லாம் நிரந்தரம் என்றால் அலுப்புதான் வரும். தானே நிரந்தர முதல்மந்திரி ஆகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அது மகிழ்ச்சியானதாகவே இருக்க முடியாது. அயற்சி அலுப்பு எல்லாமும் இருந்துவிடும், அது தொடராது என்னும் பொழுது தான் அது அவசியம் என்றே மனம் உணரும். ஆயுள் முழுவதும் கைதியாக இல்லாவிட்டாலும் ஜெயில் வார்டனாகவே இருப்பவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லிவிடமுடியுமா ?<BR/><BR/>சொர்கத்தில் மனிதராக பிறப்பெடுத்தவர்களின் வயது நிலை பற்றி தெளிவு இல்லை, குழந்தையாகவே இறந்தவன் குழந்தையாகவே சொர்கத்திலும் தொடர்ந்தால் அது சொர்கம் என்று சொல்லமுடியாது.<BR/>மகிழ்ச்சிக்கான காரணமே நாம் ஒன்றை தேடி அடைவது தான். எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை நினைத்து மகிழ்வு ஏற்படும், அது மகிழ்சியான வாழ்கை என்றால் அது உளவியல் ரீதியான சரியான கருத்தும் இல்லை. சொர்கத்தில் உடலுறவு, குழந்தை பெறுவதெல்லாம் இஸ்லாம் நம்பிக்கைப்படி இருக்கிறதா ? மற்றதையெல்லாம் பிறகு கேட்கிறேன்.<BR/><BR/>//இந்த நியதிகளை படைத்த அதே இறைவன்தான் மனிதர்கள் மனதில் இரக்க உணர்வையும், சக மனிதர்களுக்கு உதவி புரியும் மனப்பான்மையும் விதைத்திருக்கிறான். //<BR/><BR/>சகமனிதருக்கு இரக்க உணர்வு வரவேண்டும் என்பதற்க்காக ஒருவரை பிறவி குருடராக படைத்து அவர் பிறரிடம் உதவி பெற்றே வாழவேண்டும் என்பது என்ன நியதி ? அவர்கள் கண்ணில்லாமல் இருப்பதை மகிழ்ச்சியாகவே ஏற்று கொள்கிறாரர்களா ? தனக்கு எல்லாமே சரியாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி கூறும் வேளையில் இன்னொருவர் பிறரை நம்பித்தான் வாழ்கையை ஓட்டவேண்டும் என்பதைப் பார்க்கும் போது இரக்கம் மட்டும் போதாது. மூளை வளர்ச்சியற்ற ஒருவர் ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தால் அதை யாரும் கடவுளின் வரம் என்று நினைக்கமாட்டார்கள், மாறாக எனக்கும் இந்த குழந்தைக்கு ஏன் இந்த நரக வேதனை என்றே நினைப்பர். கணவன் மனைவி இருவருமே நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்து, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளும் சரியாக பிறந்து ஒரு குழந்தை மட்டும் மூளை வளர்ச்சி குறைவாக பிறந்தால் அதையெல்லாம் பெற்றவர்கள் தவறான மருந்தை உட்கொண்டதால் பிறக்க நேரிட்டது என்று சொன்னால் மருத்துவ உலகம் கூட அதை நிராகரிக்கும். எதோ ஒரு இயற்கைக் காரணம் தான். கண்டிப்பாக பெற்றோர்களின் தவறே அல்ல. <BR/><BR/>//ஒவ்வொரு முறையும் ஆண்டிற்கு 365 1/2 நாட்கள் மட்டுமே என்பதுதான் ஒழுங்குமுறை. அப்படி இல்லாமல் ஒரு வருடம் 365, அடுத்த வருடம் 212, அதற்கடுத்த வருடம் 486 நாட்கள் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு எண்ணிக்கை மாறிக் கொண்டே இருந்தால் அதை ஒழுங்குமுறை என்று சொல்ல முடியாதே?//<BR/><BR/>:) மைக்ரோ செகண்ட் துல்லியத்தில் அப்படி நிகழ்கிறதா என்று யாரும் சொல்ல முடியாதே என்றே நினைக்கிறேன். ஒரு நாள் காலை சூரியன் அடுத்த நாளும் அதே நேரத்தில் இல்லை. மேலும் நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால் சுழற்சியின் வேகத்திலும் கூட மாறுதல்கள் இருக்கும் நமக்குத் தெரிவதில்லை. 365 1/2 நாளே பூமி மறையும் வரை இருக்குமா என்று சொல்ல முடியாது, சுழற்சியின் விசை தளர்ந்ததால் புளோட்டோ விலகிச் சென்றி இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8584787670513535502008-10-07T13:10:00.000+08:002008-10-07T13:10:00.000+08:00//இதில் இன்னொன்றையும் விட்டுச் செல்கிறீர்கள், இதே ...//இதில் இன்னொன்றையும் விட்டுச் செல்கிறீர்கள், இதே போன்று படைப்பின் தேவை மீண்டும் ஒரு முறை (தீர்ப்பு நாளுக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும்) ஏற்படலாம் என்ற கருத்தையும் மறைமுகமாகச் சொல்கிறது, நிரந்தர சொர்கம் என்ற கருத்தும் அடிப்பட்டு போய்விடுகிறது. - கோவி.கண்ணன் //<BR/><BR/>இல்லை. நிரந்தர மறுமை வாழ்வு என்பது அடிபட்டுப் போகவில்லை. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகு இன்னொரு பூமி படைக்கப்பட்டால் இந்த முறை பூமியில் வாழ்ந்து மரணித்தவர்கள் மற்றொருமுறை பூமிக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அவர்களின் நிரந்தர மறுமை வாழ்வு தொடரவே செய்யும்.<BR/><BR/>//மனிதனே இல்லாதா மற்ற கோள்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் உண்டு. :)//<BR/><BR/>உண்மைதான். ஆனால் நம் கண்களுக்கு புலப்படுவதை மட்டுமே அத்தாட்சிகளாக குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.<BR/><BR/>//நான் ஏன் படைக்கப்பட்டேன் என்ற கேள்வியில் உங்களுக்கு குழப்பமே வரவில்லையா ?//<BR/><BR/>'நான் ஏன் படைக்கப் பட்டேன்? எனது வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?' போன்ற கேள்விகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் 'இறைவன் என்னை ஏன் படைத்தான்?' என்ற கேள்வியை, அதாவது 'இறைவனின் நோக்கம் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வியை நான் கேட்டுக் கொண்டதில்லை. <BR/><BR/>//சுவனப்பிரியன் கண் இல்லாமல் குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு பெற்றோர்கள் தவறான மருந்தை உட்கொண்டது தான் என்று (ப்ளைண்டாக!!!) சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா ? சுனாமிக்கு காரணம் மரத்தை வெட்டியது என்றும் சொல்கிறார். சுனாமி ஏற்பட்டது எதோ 4 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல, எங்கும் காடுகளாக இருந்த போதும் சுனாமியால் குமரிகண்டம், துவாரகை மற்றும் காவெரிபூம்பட்டினமெல்லாம் அழிந்திருக்கிறது. அனைத்தும் அவன் செயல் என்பதை முழுமையாக நம்பும் நீங்கள், இயற்கைச் சீரழிவுகளின் போது இரக்கப்படுவதே இல்லையா ?//<BR/><BR/>சுவனப்பிரியன் சரியான கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். பொருள்களையும் அவற்றின் தன்மைகளையும் படைத்தவன் இறைவன். நெருப்பு ஒளியாகவும் இருக்கும், எரிக்கவும் செய்யும். கத்தி பழத்தையும் அறுக்கும், கழுத்தையும் அறுக்கும். அது போல சில மருந்துகளை உட்கொண்டால் அவற்றிற்கான பக்க விளைவுகள் ஏற்படவே செய்யும். இவையெல்லாம் நியதிகள். தக்க சூழல் இருந்தால் விதை மரமாகும் என்று சொன்னீர்கள். அந்த சூழலிலோ விதையிலோ குறைபாடு இருந்தால் அது அந்த மரம் வளரும்போது வெளிப்படும் அல்லவா? சுனாமி ஏற்பட்டதற்கு காடுகள் அழிக்கப்பட்டது ஒரு காரணம்.. அதற்கு மற்ற காரணங்களும் இருக்கலாம். அனைத்தும் அவன் செயல் என்றால், பொருள்களின் தன்மைகளையும் நியதிகளையும் ஏற்படுத்தியவன் அவன் என்றே பொருள்படும். ஆற்றுப் பாதைகளை ஆக்ரமித்து குடியிருப்புகளை அமைத்துக் கொண்டால் வெள்ளம் ஊருக்குள் வரத்தானே செய்யும்? இந்த நியதிகளை படைத்த அதே இறைவன்தான் மனிதர்கள் மனதில் இரக்க உணர்வையும், சக மனிதர்களுக்கு உதவி புரியும் மனப்பான்மையும் விதைத்திருக்கிறான். <BR/><BR/>//ஒழுங்கே இல்லாவிட்டாலும் ஒழுங்குமுறைக்கு மாற்றிக் கொள்வோம், பூமி முழுச்சூரியனைச் சுற்ற 365 1/2 நாள் என்பது என்ன கணக்கு ? ஆனால் அதை ஒரு ஆண்டு கணக்காக ஒழுங்குபடுத்திக் கொண்டுள்ளோம். எல்லாவற்றிலும் சிஸ்டம் இருக்கிறது என்று சொல்வது சரிதான என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.//<BR/><BR/>ஒவ்வொரு முறையும் ஆண்டிற்கு 365 1/2 நாட்கள் மட்டுமே என்பதுதான் ஒழுங்குமுறை. அப்படி இல்லாமல் ஒரு வருடம் 365, அடுத்த வருடம் 212, அதற்கடுத்த வருடம் 486 நாட்கள் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு எண்ணிக்கை மாறிக் கொண்டே இருந்தால் அதை ஒழுங்குமுறை என்று சொல்ல முடியாதே?<BR/><BR/>//நான் இறைமறுப்புக்காக இதனை எழுதவில்லை, படைப்பு என்கிற சித்தாந்த மறுப்புக்காகத்தான் எழுதி இருக்கிறேன். நம்பிக்கை உடையவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்பதை அனைவருமே அறிவோம். எனது கருத்துக்கு எதிர்கருத்துக்கள் சொல்வதையெல்லாம் மறுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் உங்களுடன் விவாதம் செய்யவில்லை.//<BR/><BR/>நானும் இதை ஒரு கருத்துப் பரிமாற்றமாகத்தான் பார்க்கிறேன். விவாதமாக அல்ல. இது போன்ற மனம் திறந்த கருத்துப் பரிமாற்றத்திற்கு உங்கள் பதிவில் தளம் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி.Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23399764543312846442008-10-07T08:28:00.000+08:002008-10-07T08:28:00.000+08:00//KARMA said... உங்கள் கருத்துப்படி மக்கள் தொகை அத...//KARMA said... உங்கள் கருத்துப்படி <BR/>மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கை வழிகாட்டல்கள் மாறுதலாகவேண்டும் என்று இறைவன் கருதியே பல நபிமார்களும், வேதப்புத்தகங்களையும் அனுப்பி வைத்துள்ளான்.<BR/><BR/>மக்கள் தொகை இன்னும் அதிகரித்து கொண்டுதானுள்ளது, காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கையும் மாறிக்கொண்டேயுள்ளது.<BR/><BR/>இதன்படி பார்த்தால் நபி(ஸ்ல்) இறுதி தூதர் மற்றும் குரான் இறுதி வேதம் என்பதிலேயே பெரிய முரண்பாடு தோன்றுகிறதே? //<BR/><BR/>கர்மா,<BR/><BR/>சலாஹூதின் சொல்வது குரான் வசனங்களை வைத்துதான், தனிப்பட்டக் கருத்தாகச் சொல்லவில்லை.<BR/><BR/>இஸ்லாமுக்கு பிறகு உலக அளவில் பெரிய மதங்கள் தோன்றவில்லை என்பதால், மதங்களை இறைவன் தோற்றுவித்தான் என்று நம்பும் ஆன்மிகவாதிகள் அந்தக் கூற்றை ஏன் சரி என்று கொள்ளக் கூடாது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24738400945275736012008-10-07T05:24:00.000+08:002008-10-07T05:24:00.000+08:00சகோதரர் சலாஹுத்தீன்,//உலகத்தில் தோன்றிய முதல் மனித...சகோதரர் சலாஹுத்தீன்,<BR/><BR/><BR/>//உலகத்தில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் ஒரு இறைத்தூதரும் கூட. அவருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இலட்சக் கணக்கான இறைத்தூதர்கள் தோன்றியிருப்பதாக இஸ்லாம் சொல்கிறது.<BR/><BR/>ஆனால் வாழ்க்கை வழிகாட்டல்கள் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப மாறுதலடைந்து வந்திருக்கின்றன. ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் உலகில் வசித்தவர்கள் அவரும் அவரது குடும்பத்தினர் மட்டும்தான். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது.<BR/><BR/>மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது தோன்றிய இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன. அதில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்).<BR/>//<BR/><BR/>உங்கள் கருத்துப்படி <BR/>மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கை வழிகாட்டல்கள் மாறுதலாகவேண்டும் என்று இறைவன் கருதியே பல நபிமார்களும், வேதப்புத்தகங்களையும் அனுப்பி வைத்துள்ளான்.<BR/><BR/>மக்கள் தொகை இன்னும் அதிகரித்து கொண்டுதானுள்ளது, காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கையும் மாறிக்கொண்டேயுள்ளது.<BR/><BR/>இதன்படி பார்த்தால் நபி(ஸ்ல்) இறுதி தூதர் மற்றும் குரான் இறுதி வேதம் என்பதிலேயே பெரிய முரண்பாடு தோன்றுகிறதே?KARMAhttps://www.blogger.com/profile/09279641758059637698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84898332386936176602008-10-06T20:07:00.000+08:002008-10-06T20:07:00.000+08:00சலாஹுத்தீன்,//இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களு...சலாஹுத்தீன்,<BR/><BR/>//இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் <B>மாறுதலடைந்து </B>வந்திருக்கின்றன.//<BR/><BR/>மாறுதலடைவதற்கு கடவுளின் கட்டளைகளுக்கு என்ன தேவை? ஏன் பல்லுக்குப் பல் (பழைய ஏற்பாடு), அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு (புதிய ஏற்பாடு),<BR/>குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே (குரான்) என்பது போன்ற மாற்றங்கள் ஏன்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-188686823719914692008-10-06T17:10:00.000+08:002008-10-06T17:10:00.000+08:00சலாஹுத்தீன்,//மீண்டும் நெடிய பின்னூட்டத்திற்கு நன்...சலாஹுத்தீன்,<BR/><BR/>//மீண்டும் நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி ! <BR/><BR/>உங்களின் இந்தக் கேள்விக்கும் குர்ஆன் துணை கொண்டு பதில் சொல்ல முயல்கிறேன்.<BR/><BR/>ஆதி மனிதர் ஆதமை படைக்குமுன் இறைவன் வானவர்களை நோக்கி பூமியில் மனித வர்க்கத்தை தனது பிரதிநிதியாக படைக்கப் போவதாக அறிவித்தான். அதற்கு அவர்கள் 'பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா படைக்கப் போகிறாய்?' என்று கேட்டார்கள் (குர்ஆன் 2:30) <BR/><BR/>ஆதம் இன்னும் படைக்கப்படவேயில்லை. அதற்குள்ளாகவே, மனித வர்க்கம் என்றால் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவர்கள் என்று வானவர்களுக்கு எப்படி தெரிந்திருந்தது? அப்படியானால், ஆதமுக்கு முன்பாகவே ஒரு மனித குலம் தோன்றி வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று பொருள் படுகிறது. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகும் இன்னொரு பூமி படைக்கப்பட்டு இன்னொரு மனித குலம் கூட தோற்றுவிக்கப் படலாம். நீங்கள் சொன்னதுபோலவே 'தொடர் இயக்கத்தில் எதோ ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்' என்பதும் உண்மையாக இருக்கலாம். //<BR/><BR/>புதிய செய்திதான் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, இதில் இன்னொன்றையும் விட்டுச் செல்கிறீர்கள், இதே போன்று படைப்பின் தேவை மீண்டும் ஒரு முறை (தீர்ப்பு நாளுக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும்) ஏற்படலாம் என்ற கருத்தையும் மறைமுகமாகச் சொல்கிறது, நிரந்தர சொர்கம் என்ற கருத்தும் அடிப்பட்டு போய்விடுகிறது.<BR/><BR/><BR/><BR/>//இதையெல்லாம் இறைவன் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் குர்ஆனில் பதில் இருக்கலாம். <BR/><BR/>"அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (குர்ஆன் 10:5)//<BR/><BR/>மனிதனே இல்லாதா மற்ற கோள்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் உண்டு. :)<BR/><BR/>//என்னைப் பொறுத்தவரை, 'இறைவன் ஏன் படைக்கிறான்?' என்ற கேள்வியை நான் கேட்டுக் கொண்டதில்லை. அதற்குப்பதிலாக, 'நான் ஏன் படைக்கப் பட்டேன்? எனது வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?' போன்ற கேள்விகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கான தேடல்கள், அதற்குக் கிடைக்கும் விளக்கங்கள் என் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள உதவும் என்ற 'சுயநலம்'தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.//<BR/><BR/>அப்படியா ? ஏன் படைக்கப்பட்டேன் என்ற கேள்வியில் உங்களுக்கு குழப்பமே வரவில்லையா ? 'அப்பாவின் சோதனைகளையெல்லாம் பக்தர்களோடு நிறுத்துக் கொள்ளக் கூடாதா ? என்னிடமும் காட்ட வேண்டுமா ?' என்ற திருவிளையாடல் வசனம் போல் ஆயாசமாக இல்லையா ? நம்மை ஏன் படைக்கனும், கூண்டில் அடைத்தது போல் கட்டுப்பாடுகளை விதிக்கனும், சொர்கம் என்ற ஆசையைக் காட்டனும் ? பிறக்காமல் கண்களுக்கு முன் காட்டி இதையெல்லாம் செய்யாதே என்று கட்டுபாடு விதித்து, அதை நாம் மீற அதற்கு தண்டனை, இதற்கு பதிலாக படைக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்திருக்கிறீர்களா ?<BR/><BR/>சுவனப்பிரியன் கண் இல்லாமல் குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு பெற்றோர்கள் தவறான மருந்தை உட்கொண்டது தான் என்று (ப்ளைண்டாக!!!) சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா ? சுனாமிக்கு காரணம் மரத்தை வெட்டியது என்றும் சொல்கிறார். சுனாமி ஏற்பட்டது எதோ 4 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல, எங்கும் காடுகளாக இருந்த போதும் சுனாமியால் குமரிகண்டம், துவாரகை மற்றும் காவெரிபூம்பட்டினமெல்லாம் அழிந்திருக்கிறது. அனைத்தும் அவன் செயல் என்பதை முழுமையாக நம்பும் நீங்கள், இயற்கைச் சீரழிவுகளின் போது இரக்கப்படுவதே இல்லையா ?<BR/><BR/>//புளூட்டோ விலகிப்போனதும் எரிகற்கள் பூமியின் சந்திரனின் மீது விழுவதும் அவற்றிற்கான நியதிகளாக கூட இருக்கலாம். நான் சொல்ல வந்தது, கோளங்களின் செயல்பாட்டில் ஒரு system இருக்கிறது என்பதைத்தான். //<BR/><BR/>சிஸ்டம் என்பது, நம் நம்பர் சிஸ்டத்தை வகுத்ததால் தான் தெரிகிறது, இல்லை என்றால் அப்படி ஒன்றும் இல்லை என்றே சொல்லுவோம், காலத்தை அளக்க நம்மால் முடியவில்லை என்றால் சிஸ்டம் இருப்பதெல்லாம் தெரியாது. மிகவும் குழப்பமான கணக்கு முறைகள் நம்மிடம் இருந்தால் மேகங்களின் ஒவ்வொரு வடிவமும் கூட சிஸ்டமாக இருப்பதாகத்தான் தெரியும். முன்பே சொன்னது போல் ஒழுங்கே இல்லாவிட்டாலும் ஒழுங்குமுறைக்கு மாற்றிக் கொள்வோம், பூமி முழுச்சூரியனைச் சுற்ற 365 1/2 நாள் என்பது என்ன கணக்கு ? ஆனால் அதை ஒரு ஆண்டு கணக்காக ஒழுங்குபடுத்திக் கொண்டுள்ளோம். எல்லாவற்றிலும் சிஸ்டம் இருக்கிறது என்று சொல்வது சரிதான என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.<BR/><BR/>//இங்கும் நான் சொல்ல வந்தது system பற்றித்தான். ஒரு மரத்தின் தன்மை முழுவதும் ஒரு சிறிய விதைக்குள் அடைக்கப் பட்டிருப்பது தற்செயலாகவோ தானாகவோ நிகழும் ஒன்று என்பதைவிட, இது மாபெரும் சக்தி கொண்ட படைப்பாளனின் செயல் என்று நம்புவதே எனது அறிவுக்கு பொருத்தமானதாக தோன்றுகிறது.//<BR/><BR/>அப்படி பார்த்தால் கூட முதலில் விதையைப் போட்டார்களா ? மரத்தையே நட்டார்களா என்ற கேள்வியெல்லாம் எழுமே :) சின்னப்புள்ளைக்குச் சொல்வது போல் கடைசிநாள் அல்லது படைப்பின் முதல் நாள் புறாவில் இரண்டு மனிதர்களில் இருவர் என ஒவ்வொரு விலங்கிலும் ஒரு ஜோடி என்று சொல்லப்படுவதை நம்பமுடியவில்லை. ஏனென்றால் சிங்கத்திற்கு உணவே மான் தான், இரண்டு சிங்கத்தையும், இரண்டு மானையும் மட்டும் படைத்திருந்தால் அன்றே மான்களை சிங்கம் சுவாக செய்திருக்கும். :)<BR/><BR/>//கேள்விகள் தாராளமாகக் கேட்கலாம். கர்ப்பத்தில் என்ன நடக்கிறது என்று கேள்விகள் எழுப்பப்பட வாய்ப்பே இல்லாத, எக்ஸ்ரே, சிஸேரியன் போன்ற தொழில்நுட்பங்கள் தோன்றியிருக்காத காலத்திலேயே குர்ஆன் கரு வளர்ச்சி பற்றி விளக்குகிறது. (23:14). இவையெல்லாம் கேள்வி கேட்கப்படக்கூடாத புனிதங்கள் அல்ல.//<BR/><BR/>நான் நிராகரிக்கவில்லை, அதே போன்ற தகவல்கள் தமிழில் திருமந்திரம், கந்தபுராணத்திலும், சித்தர் பாடல்களிலும் உண்டு.<BR/><BR/>//மனிதர்கள் அனைவருமே ஆதமின் மக்கள்தான் என்கிறது இஸ்லாம். மனிதர்கள் ஆதியில் நூற்றாண்டுக் கணக்கில் வாழ்நாள் உடையவர்களாக இருந்தார்கள். கடல் போக்குவரத்து இல்லாத காலங்களில் இணைந்திருந்த நிலப்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் கால்நடையாகவே பயணித்து குடியிருப்புகளை அமைத்திருக்கலாம். //<BR/><BR/>மனித இனம் 5 வகையாக இருக்கிறது ஒவ்வொருவரும் நிறம் மட்டும் தோற்றம் முற்றிலும் மாறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் தோற்றம் வரலாற்றுக்கு முந்தயை நிகழ்வாகவே கருதப்படுகிறது, நீங்கள் சொல்லும் அனைவரும் ஆதாம் மக்கள் ஒரு தியரி என்ற அளவில் தான் கொள்ள முடியும்.<BR/><BR/>//இறைத்தூதர் நூஹ் (அலை) (நோவா) கப்பல் கட்டியதும், பிரளயம் ஏற்பட்டு அக்கப்பலில் இருந்தவர்களைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் அழிந்து போனதையும் பைபிளும் குர்ஆனும் விளக்குகின்றன. அதன் பிறகு பல்கிப் பெருகிய சந்ததியினர் கப்பல் போக்குவரத்தையும் பயன்படுத்தியிருப்பார்கள்.//<BR/><BR/>மேலே நான் குறிப்பிட்டுள்ள இரு ஜோடிகள் சேர்ப்பு கதை பற்றி தானே சொல்கிறீர்கள்? <BR/><BR/>//ஒரு தரப்பில் 'படைப்பாளன் இருக்கிறான்' என்ற நம்பிக்கை. இன்னொரு தரப்பில் 'படைப்பாளன் என யாரும் இல்லை' என்ற நம்பிக்கை. இரண்டுமே நம்பிக்கைகள்தானே? மறு தரப்பினரின் நம்பிக்கைகளைப் பற்றி கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வது தவறு ஒன்றுமில்லையே! //<BR/><BR/>தவறாக எண்ணாதீர்கள், நான் இறைமறுப்புக்காக இதனை எழுதவில்லை, படைப்பு என்கிற சித்தாந்த மறுப்புக்காகத்தான் எழுதி இருக்கிறேன். நம்பிக்கை உடையவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்பதை அனைவருமே அறிவோம். எனது கருத்துக்கு எதிர்கருத்துக்கள் சொல்வதையெல்லாம் மறுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் உங்களுடன் விவாதம் செய்யவில்லை.<BR/><BR/>முதல் பாராவில் நீங்கள் சொல்லி இருப்பது புதிய செய்திதான் மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9875569603628737422008-10-06T16:19:00.000+08:002008-10-06T16:19:00.000+08:00//படைப்பிற்கு முன்பு இறைவன் வேலையற்றவனாக என்ன செய்...//படைப்பிற்கு முன்பு இறைவன் வேலையற்றவனாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தானா ? எவ்வளவு காலம் அப்படியே இருந்தான் ? ஏன் பூமியைப் படைப்போம், அதில் மனிதர்களையும் விலங்குகளையும் படைப்போம், அவர்களின் விருப்பத்திற்கு விடுவோம், எதாவது தப்பு செய்தால் நரகம் கொடுப்போம், நல்லது செய்தால் சொர்கம் கொடுப்போம் என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தானா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதே ? //<BR/><BR/><BR/>உங்களின் இந்தக் கேள்விக்கும் குர்ஆன் துணை கொண்டு பதில் சொல்ல முயல்கிறேன்.<BR/><BR/>ஆதி மனிதர் ஆதமை படைக்குமுன் இறைவன் வானவர்களை நோக்கி பூமியில் மனித வர்க்கத்தை தனது பிரதிநிதியாக படைக்கப் போவதாக அறிவித்தான். அதற்கு அவர்கள் 'பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா படைக்கப் போகிறாய்?' என்று கேட்டார்கள் (குர்ஆன் 2:30) <BR/><BR/>ஆதம் இன்னும் படைக்கப்படவேயில்லை. அதற்குள்ளாகவே, மனித வர்க்கம் என்றால் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவர்கள் என்று வானவர்களுக்கு எப்படி தெரிந்திருந்தது? அப்படியானால், ஆதமுக்கு முன்பாகவே ஒரு மனித குலம் தோன்றி வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று பொருள் படுகிறது. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகும் இன்னொரு பூமி படைக்கப்பட்டு இன்னொரு மனித குலம் கூட தோற்றுவிக்கப் படலாம். நீங்கள் சொன்னதுபோலவே 'தொடர் இயக்கத்தில் எதோ ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்' என்பதும் உண்மையாக இருக்கலாம்.<BR/><BR/>இதையெல்லாம் இறைவன் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் குர்ஆனில் பதில் இருக்கலாம். <BR/><BR/>"அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (குர்ஆன் 10:5)<BR/><BR/>என்னைப் பொறுத்தவரை, 'இறைவன் ஏன் படைக்கிறான்?' என்ற கேள்வியை நான் கேட்டுக் கொண்டதில்லை. அதற்குப்பதிலாக, 'நான் ஏன் படைக்கப் பட்டேன்? எனது வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?' போன்ற கேள்விகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கான தேடல்கள், அதற்குக் கிடைக்கும் விளக்கங்கள் என் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள உதவும் என்ற 'சுயநலம்'தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>//புளோட்ட்டோ விலகிப் போனது, எரிகற்கள் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து பூமியின் அல்லது சந்திரன் மீது விழுவது ஏன் ?//<BR/><BR/>புளூட்டோ விலகிப்போனதும் எரிகற்கள் பூமியின் சந்திரனின் மீது விழுவதும் அவற்றிற்கான நியதிகளாக கூட இருக்கலாம். நான் சொல்ல வந்தது, கோளங்களின் செயல்பாட்டில் ஒரு system இருக்கிறது என்பதைத்தான். <BR/><BR/>//ஒரு மதத்தின் முழுவிரிவும் விதைக்குள் ஒடுங்கி இருக்கிறது, மரத்தின் பெருக்கம் இலைகள் கனிகள் இவை சுற்றுப் புறச்சூழலைப் பொருத்தது. ஒரு மரத்தின் தன்மை முழுவதும் விதையுனுள் அடக்கம், சரியான சூழல் இல்லாதவரை விதை ஒடுங்கியே இருக்கும், சூழல் அமையும் போது முளைத்து மரமாகும், இது எந்த விதைக்கும் பொருத்தம்.//<BR/><BR/>இங்கும் நான் சொல்ல வந்தது system பற்றித்தான். ஒரு மரத்தின் தன்மை முழுவதும் ஒரு சிறிய விதைக்குள் அடைக்கப் பட்டிருப்பது தற்செயலாகவோ தானாகவோ நிகழும் ஒன்று என்பதைவிட, இது மாபெரும் சக்தி கொண்ட படைப்பாளனின் செயல் என்று நம்புவதே எனது அறிவுக்கு பொருத்தமானதாக தோன்றுகிறது.<BR/><BR/>//உங்களுக்கு இருப்பது நம்பிக்கை, குழந்தையாக இருந்த போது வயித்தை கிழித்து பிறந்தாகத்தான் நம்பிவருவோம், பருவம் அடைந்தவுடம் அதுபற்றி ஏன் எப்படி என்றெல்லாம் கேள்வி எழும், சேர்ந்தால் - குழந்தை பிறக்கும் அதுபற்றி கேள்வியே கேட்கக் கூடாது அது புனிதம் என்று சொல்வதை என்னாலும் பலராலும் ஏற்கமுடியாது.//<BR/><BR/>கேள்விகள் தாராளமாகக் கேட்கலாம். கர்ப்பத்தில் என்ன நடக்கிறது என்று கேள்விகள் எழுப்பப்பட வாய்ப்பே இல்லாத, எக்ஸ்ரே, சிஸேரியன் போன்ற தொழில்நுட்பங்கள் தோன்றியிருக்காத காலத்திலேயே குர்ஆன் கரு வளர்ச்சி பற்றி விளக்குகிறது. (23:14). இவையெல்லாம் கேள்வி கேட்கப்படக்கூடாத புனிதங்கள் அல்ல.<BR/><BR/>//உலகம் தோன்றியது என்பதற்கு ஆண்டுக்கணக்கில் சுமார் இவ்வளவு ஆண்டுகள் என எதாவது ஆதாரம் இருக்கிறதா ? நமக்குத் தெரிந்து எகிப்தியர்கள், சுமேரியர்கள், சிந்துசமவெளியினர் தான் மூத்த குடிகளாக இருக்கிறார்கள். பல்வேறு கண்டங்களில் கடல் போக்குவரத்தே இல்லாத காலங்களில் இருந்து காட்டுவாசிகள் வசித்து வருகின்றனர், அவர்களெல்லாம் ஆதாமின் மக்களா ? //<BR/><BR/>மனிதர்கள் அனைவருமே ஆதமின் மக்கள்தான் என்கிறது இஸ்லாம். மனிதர்கள் ஆதியில் நூற்றாண்டுக் கணக்கில் வாழ்நாள் உடையவர்களாக இருந்தார்கள். கடல் போக்குவரத்து இல்லாத காலங்களில் இணைந்திருந்த நிலப்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் கால்நடையாகவே பயணித்து குடியிருப்புகளை அமைத்திருக்கலாம். <BR/><BR/>இறைத்தூதர் நூஹ் (அலை) (நோவா) கப்பல் கட்டியதும், பிரளயம் ஏற்பட்டு அக்கப்பலில் இருந்தவர்களைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் அழிந்து போனதையும் பைபிளும் குர்ஆனும் விளக்குகின்றன. அதன் பிறகு பல்கிப் பெருகிய சந்ததியினர் கப்பல் போக்குவரத்தையும் பயன்படுத்தியிருப்பார்கள்.<BR/><BR/>//நேர்மையாகச் சொல்லிவிட்டீர்கள். அதனால் தான் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேள்வி கேட்க எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்//<BR/><BR/>ஒரு தரப்பில் 'படைப்பாளன் இருக்கிறான்' என்ற நம்பிக்கை. இன்னொரு தரப்பில் 'படைப்பாளன் என யாரும் இல்லை' என்ற நம்பிக்கை. இரண்டுமே நம்பிக்கைகள்தானே? மறு தரப்பினரின் நம்பிக்கைகளைப் பற்றி கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வது தவறு ஒன்றுமில்லையே!Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43786567572408204012008-10-06T13:20:00.000+08:002008-10-06T13:20:00.000+08:00//சலாஹுத்தீன் said... நம் புலன்களையும் உணர்வுகளையு...//சலாஹுத்தீன் said... <BR/><BR/>நம் புலன்களையும் உணர்வுகளையும் மட்டுமே நம்பியிராமல் 'உண்மை எது?' என பகுத்து ஆராய்ந்து அறிவதுதானே பகுத்தறிவு? //<BR/><BR/>உண்மை. இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் சொல்லியிருந்ததற்கான(நம் புலன்களால் உணரமுடியவில்லை என்றால் இல்லை என்று அர்த்தமா என்று கேட்டிருந்தார்) பதிலைத்தான் நான் அவ்வாறாக சொல்லியிருந்தேன்.<BR/><BR/><BR/>//பிறக்கும் குழந்தைகள் அனைவரும் இது போன்ற நிறைய pre-recorded விஷயங்களுடன்தான் பிறக்கிறார்கள். தாயிடம் பாலருந்துவது, குப்புறப் புரள்வது, தவழ்வது போன்ற புறச் செயல்களும், '//<BR/><BR/>இதை வேண்டுமானல் சற்று ஆய்விற்கு பிறகு ஒப்புக்கொள்ளும் வாய்பிருக்கிறது.<BR/><BR/>//ய் சொல்வது, திருடுவது தப்பு' போன்ற உள்ளுணர்வுகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே pre-recorded செய்யப் பட்டுத்தான் குழந்தைகள் பிறக்கிறார்கள்//<BR/><BR/>இது சூழ்நிலையைப் பொறுத்த விடயமாக இருக்கத்தான் வாய்ப்பு.<BR/><BR/>PRE-RECORDED ஆக இருக்க வாய்ப்பில்லை.<BR/><BR/>//போலத்தான் கடவுள் விஷயமும் என்கிறது இஸ்லாம்//<BR/><BR/>கடவுள் என்கிற விடயம் பிறக்கும் போதே pre-recorded ஆக வருவது என்பதை ஒரு போதும் ஒப்புக்கொள்ள முடியாது. இஸ்லாமியருக்கு பிறந்த குழந்தையை பிராமனர் வீட்டில் வளர்க்கும் போது பிராமணக் கடவுள் பற்றுள்ளதாகவும், கிறித்துவர் வீட்டில் வளர்ந்தால் கிறித்துவ கடவுள் சிந்தனையுடனும் வளரும், ஏனென்றால் குழந்தைகளின் மூளைகளில் கடவுள் என்கிற விசயம் அவர்கள் மூளை சிந்திக்கும் முன்னரே திணிக்கப்படுகிறது( MIND RAPE). பெற்றோரால் குழந்தையின் கடவுள் சிந்தனையும் கடவுளும் தேர்ந்தேடுக்கப்படுகிறதே ஒழிய குழந்தையின் மூளையால் அல்ல.<BR/>பகுத்தறிவாளன் வீட்டில் வளரும் குழந்தை சுய சிந்தனையுடன் வளருகிறது.<BR/><BR/><BR/>//ல் 'குர்ஆனில் சொல்லி விட்டதால் அது பற்றி கேள்வி கேட்க கூடாது!' என்று எந்தத் தடையும் இல்லை. குர்ஆனில் பல வசனங்கள் "இது பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?" என்றுதான் வினவுகிறது//<BR/><BR/>நேர்மையான பதில். சிந்தனை என்பது வரையறைக்குள் வரக்கூடாது. மத நூல்கள் அனைத்தும் சிந்தனையை ஒரு வரையறைக்கிள் கட்டுப்படுத்துகிறது.<BR/><BR/>பெரியார் சொல்லுவார்,<BR/><BR/>அறிவியலை பற்றித் அலச அறிவியல் நூல்களில் தேடுங்கள் அதை விடுத்து அறிவியலை மத நூல்களில் தேடுவது என்பது மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது என்று.<BR/><BR/>பெரியார் சொல்லிவிட்டால் கேட்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல அவர் அப்படி வற்புறுத்துவது கிடையாது. நம் மூளையை கொண்டு சிந்தித்து செயல்படுவதே பகுத்தறிவு. பெரியார் சொல்வதை அப்படியே ஆமாம் போடுவதல்ல பகுத்தறிவு.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38915999437994262802008-10-06T11:56:00.000+08:002008-10-06T11:56:00.000+08:00// Dharan said... மனிதனால் உணரமுடியாத ஒன்றை எதற்கு...// Dharan said... <BR/>மனிதனால் உணரமுடியாத ஒன்றை எதற்கு தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடவேண்டும்.இருக்கிறதா இல்லையா என்பதுதான் உங்கள் கேள்வி என்றால், உங்கள் காதுகளால் உணரமுடியாத ஒலிகளின் அளவை ஆதாரத்தோடு நாங்கள் சொன்ன பிறகுதானேஉங்களுக்கு தெரிந்தது, நம் காதுகளால் உணரமுடியாத ஒலி ஒன்று இருக்கிறது என்று.<BR/><BR/>பகுத்தறிவாளன் அனைத்தையும் நிருபிக்காவது முயல்கிறான் ஆனால் மற்றவர்கள்????//<BR/><BR/>நமது புலனுணர்வுகள் சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை. ஐந்தறிவு படைத்த ஒரு வவ்வாலினால் உணர்ந்து கொள்ள முடிந்த ஒலியைக்கூட தன்னிச்சையாக உணர்ந்து கொள்ள முடியாத குறைபாடுகளைக் கொண்டவை நம் காதுகள். ஆனால் நாம் நமது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி இக்குறைபாடுகளை களைகிறோம். கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் விட தீர விசாரித்து பெறும் அறிவு மதிப்பு மிக்கது. குறைபாடுடைய நம் புலன்களையும் உணர்வுகளையும் மட்டுமே நம்பியிராமல் 'உண்மை எது?' என பகுத்து ஆராய்ந்து அறிவதுதானே பகுத்தறிவு? <BR/><BR/>//பிராமணர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறித்தூவ குழந்தைகளின் மூளைகளில் கடவுள் என்கிற விசயம் PRE-RECORDED விடயமாக சிறு வயதிலேயே பதிப்பிக்கப்பட்டு விடுவதினால் மூளையின் சிந்தனை பெரும்பாலும் கடவுள் என்கிற விசயத்தை ஆராய முயலுவதில்லை.//<BR/><BR/>உண்மைதான். பிறக்கும் குழந்தைகள் அனைவரும் இது போன்ற நிறைய pre-recorded விஷயங்களுடன்தான் பிறக்கிறார்கள். தாயிடம் பாலருந்துவது, குப்புறப் புரள்வது, தவழ்வது போன்ற புறச் செயல்களும், 'பொய் சொல்வது, திருடுவது தப்பு' போன்ற உள்ளுணர்வுகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே pre-recorded செய்யப் பட்டுத்தான் குழந்தைகள் பிறக்கிறார்கள். அதுபோலத்தான் கடவுள் விஷயமும் என்கிறது இஸ்லாம். ஆனால் 'குர்ஆனில் சொல்லி விட்டதால் அது பற்றி கேள்வி கேட்க கூடாது!' என்று எந்தத் தடையும் இல்லை. குர்ஆனில் பல வசனங்கள் "இது பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?" என்றுதான் வினவுகிறது.Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7663558241158758282008-10-06T11:48:00.000+08:002008-10-06T11:48:00.000+08:00சலாஹுத்தீன்,விடாது அலுப்பில்லாது தொடர்ந்து கருத்து...சலாஹுத்தீன்,<BR/><BR/>விடாது அலுப்பில்லாது தொடர்ந்து கருத்துச் சொல்லுவதற்கு முதலில் நன்றி. <BR/><BR/>//உங்களின் இந்தக் கருத்து ஒரு தீர்மானமான முடிவு என்பதைவிட ஒரு அனுமானம் என்பதாகவே நான் நினைக்கிறேன். அதனால்தான் 'படைப்பு ஏன்? அதற்கான காரணம் என்ன?' என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கிறது. படைப்பாளன் என ஒருவன் இல்லவே இல்லை என்றால், படைப்பிற்கான காரணம் பற்றிய கேள்வியே எழாதே?//<BR/><BR/>நீங்கள் சொல்வதாக வைத்துக் கொண்டாலும், படைப்பிற்கு முன்பு இறைவன் வேலையற்றவனாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தானா ? எவ்வளவு காலம் அப்படியே இருந்தான் ? ஏன் பூமியைப் படைப்போம், அதில் மனிதர்களையும் விலங்குகளையும் படைப்போம், அவர்களின் விருப்பத்திற்கு விடுவோம், எதாவது தப்பு செய்தால் நரகம் கொடுப்போம், நல்லது செய்தால் சொர்கம் கொடுப்போம் என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தானா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதே ? - என்னால் கண்மூடித்தனமாக இவற்றை நம்ப முடியவில்லை. பிரபஞ்சத்திற்கு தோற்றமோ முடிவோ இருக்க முடியாது, தொடர் இயக்கத்தில் எதோ ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம் என்று மட்டுமே நினைக்க முடிகிறது.<BR/><BR/>பதிவர் கையேட்டிற்கு ஒரு மறுமொழி போட்டு இருந்தேன்.<BR/><BR/>பிரபஞ்சப் பொருள்களில் ஒரு ஒழுங்கு இருப்பதாக நினைப்பது நம் மனம் தான், எதையும் ஒழுங்கான வடிவமாக இருந்தால் மட்டுமே நம்மால் அதை புரிந்து கொள்ள முடியும், ஒழுங்கற்றதாக இருந்தாலும் அதற்கு ஒழுங்கை கற்பித்துக் கொள்வது தான் நம் மனம். எல்லாம் சரியான பாதையில் சுற்றுகிறது என்றால் புளோட்ட்டோ விலகிப் போனது, எரிகற்கள் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து பூமியின் அல்லது சந்திரன் மீது விழுவது ஏன் ?<BR/><BR/>//ஒரு விதை முளைக்க சரியான சூழல் மட்டும்தான் காரணமா? ஒரே விதமான சூழலில் ஒரே குழியில் மாங்கொட்டையும் பனங்கொட்டையும் விதைத்தால், பனை மரத்தில் மாங்காய் காய்ப்பதில்லை. //<BR/><BR/>தவறாகவே புரிந்து கொண்டு விளக்கி இருக்கிறீர்கள், ஒரு மதத்தின் முழுவிரிவும் விதைக்குள் ஒடுங்கி இருக்கிறது, மரத்தின் பெருக்கம் இலைகள் கனிகள் இவை சுற்றுப் புறச்சூழலைப் பொருத்தது. ஒரு மரத்தின் தன்மை முழுவதும் விதையுனுள் அடக்கம், சரியான சூழல் இல்லாதவரை விதை ஒடுங்கியே இருக்கும், சூழல் அமையும் போது முளைத்து மரமாகும், இது எந்த விதைக்கும் பொருத்தம்.<BR/>பனைமரத்தன்மை பனங்கொட்டையிலும், மாமரம் மாவிதையிலும் தான் இருக்கும், மாற்றி இருக்க வாய்பில்லாவிட்டாலும் ஒட்டுமாங்காயை இலுப்பை மற்றும் மாகிளை மூலம் உருவாக்குகிறார்கள். அம்மரம் விளைந்து அதன் மாங்கொட்டை மாமரத்தைத் தான் தருமேயன்றி இலுப்பை வேரைத் தராது. நானும் மாமரத்தில் பனங்காய் காய்க்கும் என்று சொல்லவில்லை. இப்போதெல்லாம் வீரியமற்ற முட்டைகளை இடும் ஒயிட்லகான் கோழிகளெல்லாம் வந்துவிட்டது. படைப்புக் கருத்து என்பதைவிட பெளதீக மாற்றத்தினால் பொருளுக்கு புதிய வடிவம் கொடுக்க முடியும் என்கிற கருத்து வலுத்துவிட்டதை ஒப்புக் கொள்கிறீர்களா ?<BR/><BR/>//பிரபஞ்சம் தோன்றி கோடானுகோடி ஆண்டுகள் ஆன போதிலும் பூமி தன் பாதையைவிட்டு ஒரு நாளேனும் விலகிச் சென்றதாகவோ, சந்திரன் 14 நாட்கள் விடுப்பு எடுத்து வேறொரு கிரகத்திற்கு சென்றதாகவோ நாம் அறிந்திருக்கவில்லை. இவற்றிற்கான விதிகளை நிர்ணயித்தது யார்? இந்தப் படைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தால் படைப்பாளனைப் பற்றி அறியலாம் என்பதைத்தான் குர்ஆன் சொல்கிறது.//<BR/><BR/>புளூட்டோ எஸ்கேப் ஆகிவிட்டது நண்பரே, பூமி ஏன் 22.5 கோணம் சாய்தே சுற்றிவருகிறது.<BR/><BR/>//"பரிட்சைக்கு படிக்க முக்கியமான கேள்விகளை குறித்துக் கொடுங்கள் சார்" என்று பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை தொந்தரவு செய்திருக்கிறோம். 'அவர் சொன்னா பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும்' என்று சில ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்போம். காரணம் அவரது அனுபவம் அப்படி. அந்தக் கேள்வித்தாளே அவர் கைவசம் இருக்கிறது என்று நமக்கு நிச்சயமாகத் தெரிந்தால், அவரது ஒவ்வொரு வார்த்தையையும் மறு கேள்வி கேட்காது மிக கவனமாகக் குறித்துக் கொள்வோம். அக்கேள்விகளில் எதையும் விட்டுவிடாமல் படிப்போம். குர்ஆன் விஷயத்தில் முஸ்லிம்களின் நிலையும் இதுதான். அதன் Origin-ஐப் பற்றி சந்தேகமில்லை என்பதால் அது சொல்லும் விஷயங்களில் மறு கேள்வி கேட்கத் தேவை ஏற்படாது. ஆனால், கேள்விகள் கேட்கக் கூடாது என்பதல்ல. //<BR/><BR/>உங்களுக்கு இருப்பது நம்பிக்கை, குழந்தையாக இருந்த போது வயித்தை கிழித்து பிறந்தாகத்தான் நம்பிவருவோம், பருவம் அடைந்தவுடம் அதுபற்றி ஏன் எப்படி என்றெல்லாம் கேள்வி எழும், சேர்ந்தால் - குழந்தை பிறக்கும் அதுபற்றி கேள்வியே கேட்கக் கூடாது அது புனிதம் என்று சொல்வதை என்னாலும் பலராலும் ஏற்கமுடியாது.<BR/><BR/>//உலகத்தில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் ஒரு இறைத்தூதரும் கூட. அவருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இலட்சக் கணக்கான இறைத்தூதர்கள் தோன்றியிருப்பதாக இஸ்லாம் சொல்கிறது. இவர்கள் அனைவரும் போதித்த அடிப்படை விஷயம் ஒன்றுதான்.. 'வணங்கத் தகுதியான இறைவன் ஒரே ஒருவன்தான்' என்பதுதான் அது. ஆனால் வாழ்க்கை வழிகாட்டல்கள் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப மாறுதலடைந்து வந்திருக்கின்றன. ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் உலகில் வசித்தவர்கள் அவரும் அவரது குடும்பத்தினர் மட்டும்தான். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது தோன்றிய இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன. அதில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்).//<BR/><BR/>உலகம் தோன்றியது என்பதற்கு ஆண்டுக்கணக்கில் சுமார் இவ்வளவு ஆண்டுகள் என எதாவது ஆதாரம் இருக்கிறதா ? நமக்குத் தெரிந்து எகிப்தியர்கள், சுமேரியர்கள், சிந்துசமவெளியினர் தான் மூத்த குடிகளாக இருக்கிறார்கள். பல்வேறு கண்டங்களில் கடல் போக்குவரத்தே இல்லாத காலங்களில் இருந்து காட்டுவாசிகள் வசித்து வருகின்றனர், அவர்களெல்லாம் ஆதாமின் மக்களா ? <BR/><BR/>//நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சில உபரியான கேள்விகள் தோன்றுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பவர்களுக்கு குர்ஆனில் பதில் இருக்கிறது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பது வேறு விஷயம். //<BR/><BR/>நேர்மையாகச் சொல்லிவிட்டீர்கள். அதனால் தான் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேள்வி கேட்க எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46716336349873065072008-10-06T11:21:00.000+08:002008-10-06T11:21:00.000+08:00//என்னைப் பொருத்து படைப்பு ஒன்று கிடையாது பின்பு எ...//என்னைப் பொருத்து படைப்பு ஒன்று கிடையாது பின்பு எப்படி படைத்தவனைப் பற்றி பேச முடியும் ?//<BR/><BR/>உங்களின் இந்தக் கருத்து ஒரு தீர்மானமான முடிவு என்பதைவிட ஒரு அனுமானம் என்பதாகவே நான் நினைக்கிறேன். அதனால்தான் 'படைப்பு ஏன்? அதற்கான காரணம் என்ன?' என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கிறது. படைப்பாளன் என ஒருவன் இல்லவே இல்லை என்றால், படைப்பிற்கான காரணம் பற்றிய கேள்வியே எழாதே?<BR/><BR/>//ஒரு விதை முளைக்க அதற்கான தேவை என்னவாக இருக்கும் ? ஒன்றுமே இல்லை, சரியான சூழல் இருந்தால் முளைக்கும்.//<BR/><BR/>ஒரு விதை முளைக்க சரியான சூழல் மட்டும்தான் காரணமா? ஒரே விதமான சூழலில் ஒரே குழியில் மாங்கொட்டையும் பனங்கொட்டையும் விதைத்தால், பனை மரத்தில் மாங்காய் காய்ப்பதில்லை. பிரபஞ்சம் தோன்றி கோடானுகோடி ஆண்டுகள் ஆன போதிலும் பூமி தன் பாதையைவிட்டு ஒரு நாளேனும் விலகிச் சென்றதாகவோ, சந்திரன் 14 நாட்கள் விடுப்பு எடுத்து வேறொரு கிரகத்திற்கு சென்றதாகவோ நாம் அறிந்திருக்கவில்லை. இவற்றிற்கான விதிகளை நிர்ணயித்தது யார்? இந்தப் படைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தால் படைப்பாளனைப் பற்றி அறியலாம் என்பதைத்தான் குர்ஆன் சொல்கிறது. <BR/><BR/>//முகமது நபி காலத்தில் குரானில் சொல்லி இருப்பதை அப்படியே நம்பிக் கொள்பவர்கள் இருந்திருப்பார்கள். அந்த காலத்தில் நமக்கு இருப்பது போல் கேள்வி ஞானம் இருப்பதற்கும் வாய்ப்புகள் இருந்திருக்காது. அறிவின் வளர்ச்சி அந்த காலத்துடன் ஒப்பிட முடியாது, எனவே எதாவது காரணம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.//<BR/><BR/>"பரிட்சைக்கு படிக்க முக்கியமான கேள்விகளை குறித்துக் கொடுங்கள் சார்" என்று பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை தொந்தரவு செய்திருக்கிறோம். 'அவர் சொன்னா பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும்' என்று சில ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்போம். காரணம் அவரது அனுபவம் அப்படி. அந்தக் கேள்வித்தாளே அவர் கைவசம் இருக்கிறது என்று நமக்கு நிச்சயமாகத் தெரிந்தால், அவரது ஒவ்வொரு வார்த்தையையும் மறு கேள்வி கேட்காது மிக கவனமாகக் குறித்துக் கொள்வோம். அக்கேள்விகளில் எதையும் விட்டுவிடாமல் படிப்போம். குர்ஆன் விஷயத்தில் முஸ்லிம்களின் நிலையும் இதுதான். அதன் Origin-ஐப் பற்றி சந்தேகமில்லை என்பதால் அது சொல்லும் விஷயங்களில் மறு கேள்வி கேட்கத் தேவை ஏற்படாது. ஆனால், கேள்விகள் கேட்கக் கூடாது என்பதல்ல. <BR/><BR/>//உலகம் தோன்றியது என்று என்றே சரியாக அறியப்படாத நிலையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் தான் இறைவன் படைப்பை சரிசெய்ய நினைத்தான், அதற்கு முன்பு அவன் அனுப்பிய தூதர்கள் திறம்பட நடந்து கொள்ளவில்லை, இறைவன் சரியான நபரை தூதராக தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லுவீர்களா ? சரி குரானில் அரேபிய நாடுகளைத் தவிர பிற நாடுகளைப் பற்றி எதும் செய்தி இருக்கிறதா ? 'நம்பிக்கை' என்று சென்றுவிட்டால் இது போன்ற கேள்விகள் எழுந்தாலும் அப்படியே அடக்கிக் கொள்வீர்களா ? கேள்வியே எழாதா ? //<BR/><BR/>உலகத்தில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் ஒரு இறைத்தூதரும் கூட. அவருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இலட்சக் கணக்கான இறைத்தூதர்கள் தோன்றியிருப்பதாக இஸ்லாம் சொல்கிறது. இவர்கள் அனைவரும் போதித்த அடிப்படை விஷயம் ஒன்றுதான்.. 'வணங்கத் தகுதியான இறைவன் ஒரே ஒருவன்தான்' என்பதுதான் அது. ஆனால் வாழ்க்கை வழிகாட்டல்கள் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப மாறுதலடைந்து வந்திருக்கின்றன. ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் உலகில் வசித்தவர்கள் அவரும் அவரது குடும்பத்தினர் மட்டும்தான். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது தோன்றிய இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன. அதில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்).<BR/><BR/>//தத்துவ ரீதியான கேள்விகளுக்கு மத நூல்கள் ஒருக்காலமும் விடை சொல்ல முடியாது, அதனால் நான் அவற்றை கணக்கில் கொள்வதில்லை, நான் மட்டுமல்ல 'இறைவன்' என்ற ஒன்றைப் பற்றி அறிய முற்படுபவர்கள், உணர முற்படுபவர்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விதான் இவைகள். நீங்கள் மதம் அதைச் சார்ந்த நம்பிக்கை என்று சொன்றிவிடுவதால் உங்களுக்கு இவை தோன்றாமல் இருக்கும். //<BR/><BR/>நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சில உபரியான கேள்விகள் தோன்றுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பவர்களுக்கு குர்ஆனில் பதில் இருக்கிறது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பது வேறு விஷயம்.Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25203514839601821872008-10-06T11:20:00.000+08:002008-10-06T11:20:00.000+08:00//Thiruthondan said... ஏதுமில்லா வெற்றிடத்தில் இரு...//Thiruthondan said... <BR/>ஏதுமில்லா வெற்றிடத்தில் இருந்தே அவ்வப்போது பொருளும் எதிர்ப்பொருளும் தோன்றிமறைகின்றன; சில சமயங்களில் ஆற்றலாகவும் வெளிப்பட்டு மறைகின்றன என்று Quantum Theory சொல்கிறது. இதனையே சூனிய ஆற்றல் (vacuum energy) என்கிறார்கள். ஹாக்கிங் இக்கருத்தை அவரது தத்துவத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். மற்றபடி கருந்துளையும் எதிர்ப்பொருளும் இருந்தால்தான் பொருள் உருவாகும் என்று ஹாக்கிங் கதிர்வீச்சுக்கு அர்த்தமில்லை.<BR/><BR/>9:52 AM, October 06, 2008<BR/>//<BR/>பிரபஞ்சம் பற்றிய கருத்து காலத்திற்கு அப்பாற்பட்டது, உறுதியாக எதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால்<BR/>நமது கண்களுக்கு தெரிந்த அல்லது நம் பிறப்புகள் எதுவுமே சூனியத்தில் இருந்து வரவில்லையே, சேர்க்கை மற்றும் ஐம்பூதக் கலப்பு தானே பிறப்புகள் அனைத்துமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65683554310087073232008-10-06T09:52:00.000+08:002008-10-06T09:52:00.000+08:00//சூனியம் என்பது ஏதுமற்ற தன்மை, நீங்கள் சொல்லும் ப...//சூனியம் என்பது ஏதுமற்ற தன்மை, நீங்கள் சொல்லும் ப்ளாக் ஹோலும் அதற்கு எதிர்பொருளும் இல்லாத தன்மை. //<BR/>ஏதுமில்லா வெற்றிடத்தில் இருந்தே அவ்வப்போது பொருளும் எதிர்ப்பொருளும் தோன்றிமறைகின்றன; சில சமயங்களில் ஆற்றலாகவும் வெளிப்பட்டு மறைகின்றன என்று Quantum Theory சொல்கிறது. இதனையே சூனிய ஆற்றல் (vacuum energy) என்கிறார்கள். ஹாக்கிங் இக்கருத்தை அவரது தத்துவத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். மற்றபடி கருந்துளையும் எதிர்ப்பொருளும் இருந்தால்தான் பொருள் உருவாகும் என்று ஹாக்கிங் கதிர்வீச்சுக்கு அர்த்தமில்லை.Thiruthondanhttps://www.blogger.com/profile/11317526559290571359noreply@blogger.com