பின்பற்றுபவர்கள்

13 மே, 2009

40 க்கு 40 ! :)

கற்பனைக்கு காசா / பணமா ? எக்சிட் போல் காத்திருப்பில்......சும்மா டைம் பாஸ்,

*******

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து பெரு மகிழ்ச்சி தெரிவித்த விஜயகாந்த், மனைவி பிரமலதா விஜயகாந்தின் அனுமதி பெற்று "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, கடவுளுக்கு கிடைத்த வெற்றி, இனி பாகிஸ்தான் பார்டரை தாண்டி ஒரு தீவிரவாதியும் வரமுடியாது"
(எல்லையில் அகழி வெட்டுவாங்களோ ?)

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து மற்றற்ற மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, "மீண்டும் வெற்றிக்கனியை பெற்றுத்தந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன், சூழ்ச்சிக்காரர்கள் பேச்சற்று வீழ்ந்துவிட்டார்கள், ஏச்சுக்காரர்கள் மூச்சற்று சாய்ந்துவிட்டார்கள், கூச்சல்காரர்கள் ஓய்ந்து மாய்ந்துவிட்டார்கள், இனி தமிழக ஏழைகளுக்கு போனசாக 50 ரூபாய் மளிகை சாமான்களுடன் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான குச்சிமிட்டாய்களையும் இலவசமாகத் தருவோம்"
(ஆரம்பிச்சிட்டாங்கய்யா)

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து கருத்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, "என்னுடைய தலைமைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல,கருணாநிதியின் சிறுபான்மை மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வெற்றி, இதை தனது ஆட்சியின் தோல்வியாக ஏற்றுக் கொண்டு கருணாநிதி பதவியையும் ஆட்சியையும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும், அதிமுக தலைமைக்கு துணை பிரதமர் பதவி கொடுக்கும் தேசிய கட்சிக்கே அதிமுக பிரதமர் வாக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்கும்... அந்த வகையில் காங்கிரசுக்கு..."
(அடக் கொடுமையே ! )

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி - சமக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது,
(போட்டி இட்டதே 30க்கும் குறைவான இடம் தானே ? இவங்க 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மற்ற 10 இடங்களில் வெற்றிப் பெற்றவர்கள் இவங்க கூட்டணியை ஆதரிக்கப் போறாங்களாம் அதான்)

இது குறித்து சபதம் மேற்கொண்ட இல.கனேசன், "போலி மதச்சார்பின்மை தோற்றுவிட்டது, ஹிந்து தேசிய உணர்வு வெற்றி பெற்றுவிட்டது, அத்வானிஜி தலைமையில் அகண்ட பாரத வல்லரசை உருவாக்குவோம். என்றார்
(கிழிஞ்சிடும் !வல் அரசு வாழ்க !)

2 கருத்துகள்:

பீர் | Peer சொன்னது…

நான்கில் ஏதாவதொன்று நடந்துவிட்டால்...

சும்மா டைம் பாஸ்,

seik mohamed சொன்னது…

நாடாளும் மக்கள் கட்சி???/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்