tag:blogger.com,1999:blog-10267267.post777008563855012235..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஆசிய நாடுகளில் பரவிய அவதாரகதைகள்...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10267267.post-38976236646817749732007-09-20T10:14:00.000+08:002007-09-20T10:14:00.000+08:00பாற்கடல் கடையும் காட்சியை கம்போடியாவில் அங்கோர் வா...பாற்கடல் கடையும் காட்சியை கம்போடியாவில் அங்கோர் வாட் ஆலயத்தில் சுவர் சிற்பமாக பார்த்திருக்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59329330067292476602007-09-19T17:08:00.000+08:002007-09-19T17:08:00.000+08:00//குமரன் (Kumaran) said...படங்கள் மிக நன்றாக இருக்...//குமரன் (Kumaran) said...<BR/>படங்கள் மிக நன்றாக இருக்கின்றன கோவி.கண்ணன். நம் நாட்டில் வழங்கும் இந்த பாற்கடல் கடையும் கதை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் தாய்லாந்திலும் வழங்குவது மிக்க வியப்பை அளிக்கிறது. பல வண்ண அசுரர்கள் சிலைகளும் ஒரே வண்ண தேவர்கள் சிலைகளும் புன்சிரிப்பையும் வரவழைத்தன. //<BR/><BR/>குமரன்,<BR/>அசுர - தேவர்களின் நிற வேறுபாடு எனக்கும் பளிச் சென்று கண்ணில் பட்டதும் வியப்பாகவே இருந்தது. புராணம் சிதையாமல் தான் இருக்கிறது :)) நமக்கு புரியும் அளவுக்கு அந்நாட்டுமக்களுக்கு அது புரியுமா என்பது ஐயமே... :)<BR/><BR/>//புத்தரை ஒன்பதாவது அவதாரமாகச் சொல்லும் வைணவக் கதைகளில் சென்று பார்த்தால் அந்தப் புத்தர் கௌதம புத்தர் இல்லை; வேறொரு புத்தர் என்று தெரிகின்றது. புத்த அவதாரக் கதையில் வரும் புத்தர் கௌதம புத்தர் செய்த எதுவும் செய்யவில்லை. தொடக்கத்தில் வேறே ஏதோ ஒரு புத்தரைப் பற்றி அவதாரக் கதைகளில் சொல்லத் தொடங்கி பின்னர் கௌதம புத்தர் தான் வைணவம் அவதாரமாகச் சொல்லும் புத்தர் என்ற கருத்து பரவிவிட்டது என்று தோன்றுகிறது. பொதுவாக அப்படித் தான் கருதுகிறார்கள். ஆனால் வைணவர்கள் கௌதம புத்தரை பெருமாளின் அவதாரமாகக் கருதுவதில்லை. அப்படிச் சொல்லி அவரை வணங்குவதும் இல்லை. இதனை கௌதம புத்தரின் மேல் உள்ள வெறுப்பாகவும் சிலர் திரித்துக் கூறுவதைக் கண்டிருக்கிறேன். //<BR/><BR/>புத்தர் என்பது ஒரு உயர்ந்த நிலையை குறிப்பது, கவுதம புத்தருக்கு முன்பு பலர் அந்நிலையை அடைந்திருந்தாலும் வரலாறு( சரித்திரம்) இருப்பதென்னவோ கவுதம புத்தருக்குத்தான். எதாவது ஒரு புத்தரை விஷ்ணு அவதாரமாக சொல்லி இருந்தாலும் பொதுவாக புத்த தத்துவங்களை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகத்தான் அந்த கருத்து இருக்கிறது.<BR/><BR/>//ஆனால் கோவில்களில் உள்ள ஓவியங்களிலும் பிற்கால நூல்களிலும் கௌதம புத்தரையே ஒன்பதாவது அவதாரமாகக் காட்டியிருக்கிறார்கள். அதனால் காலப்போக்கில் கௌதம புத்தரை வைதிக மதம் உள்வாங்கிவிட்டது என்பது சரி தான்.//<BR/><BR/>சோழர்கால கோவில்களில் குறிப்பாக கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் புத்தருக்கு சிறிய அளவில் உள்ளேயே கோவில் இருக்கிறது. காஞ்சி காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலைகள் இருப்பதாக படித்திருக்கிறேன்.<BR/><BR/>//வைணவத்தில் சொல்லப்பட்ட அவதாரக் கதைகள் தென்கிழக்கு ஆசியாவில் பரவியதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன். பல்பிறப்புக் கதைகளை முதலில் பௌத்தம் சொல்லத் தொடங்கிப் பின்னரே வைதிக மதம் சொல்லத் தொடங்கியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன். புத்தரின் ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் போதிசத்துவர்களின் கதைகள் இப்படி எண்ண வைக்கிறது. ஆனால் உறுதியாகச் சொல்ல எந்த தரவும் இல்லை.//<BR/><BR/>வைதீக ஆகமங்களோ, கோவில்களோ பவுத்த மதம் பரவிய நாடுகளில் இல்லை. கதைகள் மட்டுமே இருக்கிறது. தற்பொழுது அந்நாடுகளில் இருக்கும் இந்து கோவில்கள் 100 - 150 ஆண்டுகளுக்கு முற்பட்டு கட்டப்பட்டவை அல்ல. அவை அங்கு புலம் பெயர்ந்த பெரும்பாலும் தமிழர்களால் கட்டப்பட்டு இருக்கிறது. வேறு வகையில் அதற்கு முன்பு வைதீக தாக்கம் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. எனவே வேறு காரணங்கள் என்று எதையும் என்னால் ஊகிக்க முடியவில்லை. இந்திய இதிகாசங்கள் என்று புத்த மதத்தினர் அவதார கதைகளை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். தமிழக பவுத்தர்களால் அங்கு பவுத்தம் பரவி இருக்க வாய்ப்பு இல்லை அப்படி இருந்தால் ஐம்பெரும் காப்பியங்கள் அங்கு பரவி இருக்கும். அதற்கு முன்பே (தேராவாத) புத்தமதம் அங்கு பரவியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74428131762901030192007-09-19T16:54:00.000+08:002007-09-19T16:54:00.000+08:00//ஆழியூரான். said... நல்ல பதிவு. உள்ளூர் தாண்டியும...//ஆழியூரான். said... <BR/>நல்ல பதிவு. உள்ளூர் தாண்டியும் பரவியிருக்கும் அவதாரங்களையும், அவற்றின் ஆதிக்க மரபுகளையும் எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி..!<BR/>//<BR/><BR/>ஆழியூராரே,<BR/><BR/>ஆதிக்க மரபுகள் வெளி நாடுகளில் வழிபாட்டளவில் பரவி இருப்பது உண்மைதான். ஆனால் அங்கு ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அறுத்துவிடுவார்கள்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41564672375816883562007-09-19T16:50:00.000+08:002007-09-19T16:50:00.000+08:00//ஜெகதீசன் said... பதிவுக்கு நன்றி.. புதிய செய்திக...//ஜெகதீசன் said... <BR/>பதிவுக்கு நன்றி.. புதிய செய்திகள் சில அறிந்து கொண்டேன்...<BR/>//<BR/><BR/>ஜெகதீசன்,<BR/><BR/>வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48466276827272189802007-09-19T16:49:00.000+08:002007-09-19T16:49:00.000+08:00//ஜமாலன் said... நல்ல பதிவு..புதிய செய்தியும்கூட.....//ஜமாலன் said... <BR/>நல்ல பதிவு..<BR/><BR/>புதிய செய்தியும்கூட.. அவதாரக்கதைகள் ஆசிய நாடுகளில் பரவியிரப்பதை இப்பதிவின் மூலமே அறிந்து கொண்டேன்.<BR/>//<BR/><BR/>ஜமாலன்,<BR/>வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24812010583173612332007-09-19T08:12:00.000+08:002007-09-19T08:12:00.000+08:00படங்கள் மிக நன்றாக இருக்கின்றன கோவி.கண்ணன். நம் நா...படங்கள் மிக நன்றாக இருக்கின்றன கோவி.கண்ணன். நம் நாட்டில் வழங்கும் இந்த பாற்கடல் கடையும் கதை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் தாய்லாந்திலும் வழங்குவது மிக்க வியப்பை அளிக்கிறது. பல வண்ண அசுரர்கள் சிலைகளும் ஒரே வண்ண தேவர்கள் சிலைகளும் புன்சிரிப்பையும் வரவழைத்தன. <BR/> <BR/>புத்தரை ஒன்பதாவது அவதாரமாகச் சொல்லும் வைணவக் கதைகளில் சென்று பார்த்தால் அந்தப் புத்தர் கௌதம புத்தர் இல்லை; வேறொரு புத்தர் என்று தெரிகின்றது. புத்த அவதாரக் கதையில் வரும் புத்தர் கௌதம புத்தர் செய்த எதுவும் செய்யவில்லை. தொடக்கத்தில் வேறே ஏதோ ஒரு புத்தரைப் பற்றி அவதாரக் கதைகளில் சொல்லத் தொடங்கி பின்னர் கௌதம புத்தர் தான் வைணவம் அவதாரமாகச் சொல்லும் புத்தர் என்ற கருத்து பரவிவிட்டது என்று தோன்றுகிறது. பொதுவாக அப்படித் தான் கருதுகிறார்கள். ஆனால் வைணவர்கள் கௌதம புத்தரை பெருமாளின் அவதாரமாகக் கருதுவதில்லை. அப்படிச் சொல்லி அவரை வணங்குவதும் இல்லை. இதனை கௌதம புத்தரின் மேல் உள்ள வெறுப்பாகவும் சிலர் திரித்துக் கூறுவதைக் கண்டிருக்கிறேன். <BR/> <BR/>ஆனால் கோவில்களில் உள்ள ஓவியங்களிலும் பிற்கால நூல்களிலும் கௌதம புத்தரையே ஒன்பதாவது அவதாரமாகக் காட்டியிருக்கிறார்கள். அதனால் காலப்போக்கில் கௌதம புத்தரை வைதிக மதம் உள்வாங்கிவிட்டது என்பது சரி தான்.<BR/> <BR/>வைணவத்தில் சொல்லப்பட்ட அவதாரக் கதைகள் தென்கிழக்கு ஆசியாவில் பரவியதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன். பல்பிறப்புக் கதைகளை முதலில் பௌத்தம் சொல்லத் தொடங்கிப் பின்னரே வைதிக மதம் சொல்லத் தொடங்கியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன். புத்தரின் ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் போதிசத்துவர்களின் கதைகள் இப்படி எண்ண வைக்கிறது. ஆனால் உறுதியாகச் சொல்ல எந்த தரவும் இல்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88276709525165338682007-09-18T16:47:00.000+08:002007-09-18T16:47:00.000+08:00நல்ல பதிவு. உள்ளூர் தாண்டியும் பரவியிருக்கும் அவதா...நல்ல பதிவு. உள்ளூர் தாண்டியும் பரவியிருக்கும் அவதாரங்களையும், அவற்றின் ஆதிக்க மரபுகளையும் எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி..!பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87106436107492880002007-09-18T16:13:00.000+08:002007-09-18T16:13:00.000+08:00பதிவுக்கு நன்றி.. புதிய செய்திகள் சில அறிந்து கொண்...பதிவுக்கு நன்றி.. புதிய செய்திகள் சில அறிந்து கொண்டேன்...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25105905049373085642007-09-18T16:07:00.000+08:002007-09-18T16:07:00.000+08:00//நான் படித்த புராணக்கதைகளில் ஆரம்பத்தில் அசுரர்கள...//நான் படித்த புராணக்கதைகளில் ஆரம்பத்தில் அசுரர்கள் அந்தக் கூட்டணியில் இல்லை; வாசுகி பாம்பின் தலைப்பகுதியைப் பிடிக்கும் தைரியம் தேவர்களுக்கு இல்லை என்பதால் அசுரர்களுடன் கூட்டணி அமைக்கவும், வென்ற பிறகு கூட்டணி மந்திரி சபை அமையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ணனே ஐடியா கொடுத்ததாகவும் தான் இருந்தது. தாங்கள் ஆதாரபூர்வமாய் எதையும் எழுதுபவர். என் கருத்து தவறா என்று மட்டும் விளக்குவீர்களா? <BR/><BR/>RATHNESH<BR/>//<BR/><BR/>ரத்னேஷ்,<BR/><BR/>நீங்கள் சொல்வது சரிதான். இந்த படத்திலும் பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்கள் தான் நின்றுகொண்டு இருக்கிறார்கள். நானும் இதை எழுதலாம் என்று இருந்தேன்.<BR/>:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58449444905446680942007-09-18T15:27:00.000+08:002007-09-18T15:27:00.000+08:00நல்ல பதிவு..புதிய செய்தியும்கூட.. அவதாரக்கதைகள் ஆச...நல்ல பதிவு..<BR/><BR/>புதிய செய்தியும்கூட.. அவதாரக்கதைகள் ஆசிய நாடுகளில் பரவியிரப்பதை இப்பதிவின் மூலமே அறிந்து கொண்டேன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67271205042659308932007-09-18T14:54:00.000+08:002007-09-18T14:54:00.000+08:00நண்பரே, படிக்க சுவையாக இருந்த பதிவு. உள்விளக்கங்கள...நண்பரே, படிக்க சுவையாக இருந்த பதிவு. உள்விளக்கங்களும் கிளைக்கதைகளும் கொண்ட நிகழ்வுகளை ரத்தினச் சுருக்கமாக அழகாக விவரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம். <BR/><BR/>//ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் பிறப்பு இறப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள எதாவது வழி இருக்கிறதா ? என்று பரமசிவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும் அதை எடுத்து உண்டால் மரணமில்லாமல் என்றும் இளமையுடன் வாழலாம் என்றும் கூறினாராம். இது சரியான வழி என்று தேவர்களும் அசுரர்களும் முடிவு செய்து கிருஷ்ணனின் உதவியையும் கேட்டனர்.// <BR/><BR/>நான் படித்த புராணக்கதைகளில் ஆரம்பத்தில் அசுரர்கள் அந்தக் கூட்டணியில் இல்லை; வாசுகி பாம்பின் தலைப்பகுதியைப் பிடிக்கும் தைரியம் தேவர்களுக்கு இல்லை என்பதால் அசுரர்களுடன் கூட்டணி அமைக்கவும், வென்ற பிறகு கூட்டணி மந்திரி சபை அமையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ணனே ஐடியா கொடுத்ததாகவும் தான் இருந்தது. தாங்கள் ஆதாரபூர்வமாய் எதையும் எழுதுபவர். என் கருத்து தவறா என்று மட்டும் விளக்குவீர்களா? <BR/><BR/>RATHNESHRATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.com