tag:blogger.com,1999:blog-10267267.post6306673218959047032..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திரு ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு ... (மட்டுமல்ல)கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10267267.post-91082073726311583732008-04-24T00:49:00.000+08:002008-04-24T00:49:00.000+08:00அன்புமிக்க நண்பர் கோவி. கண்ணன்,நண்பர் நாக. இளங்கோ ...அன்புமிக்க நண்பர் கோவி. கண்ணன்,<BR/><BR/>நண்பர் நாக. இளங்கோ கூறியது தவறு. பதிவுகளில் வந்த என் கட்டுரையில் கவிஞர் புகாரி ஒட்டக் கூத்தரையும், பாரதிதாசனையும் விடச் சிறந்தவர் என்று எந்த இடத்திலும் நான் எழுதவில்லை. ஒட்டக் கூத்தரின் மமதை புகாரிக்கு இல்லை என்று சொல்லி யிருக்கிறேன். பாரதியார் பெயரை வைத்துக் கொண்டு பாரதிதாசன் பாரத நாடு சுதந்திரம் பெறாது என்று நம்பியதாக எழுதினேன்.<BR/><BR/>விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி<BR/><BR/>அன்புடன்,<BR/>சி. ஜெயபாரதன்Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86522015441933776012008-04-23T20:14:00.000+08:002008-04-23T20:14:00.000+08:00நைனா,நீண்ட நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி.நான் ஜெயப...நைனா,<BR/><BR/>நீண்ட நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி.<BR/><BR/>நான் ஜெயபாரதன் ஐயாவின் ஒருபத்தியில் இருப்பதற்கு மட்டும் மாற்றுக் கருத்து எழுதி இருக்கிறேன். மற்றபடி அவர்சொல்லி இருக்கும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. அவர் கருத்தை மறுக்கும் எனது கருத்து அவர் மீது இருக்கும் மதிப்பை எடைபோடாது !<BR/><BR/><BR/>நீங்களும் அதே போன்று தான் சொல்லி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76441675071846521642008-04-21T18:52:00.000+08:002008-04-21T18:52:00.000+08:00திரு. ஜெயபாரதனை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி....திரு. ஜெயபாரதனை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. <BR/>நானும் கண்டேன்,<BR/>பேருவகை கொண்டேன்.<BR/>அவரது <A HREF="http://jayabarathan.wordpress.com/2008/04/19/liberatetamil/" REL="nofollow">இந்த கட்டுரையை</A> கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் உற்றேன்.<BR/><BR/>அவர் கூறுகிறார் "அனைத்து மொழிகளும் மாறிவிட்டது, நாமும் மாற வேண்டும்" என்ன சிந்தனை இது. என்ன கருத்து இது? நாம் நம் சுயத்தை எதற்காக இழக்க வேண்டும். ஆங்கிலத்தில் சித்தப்பா, சித்தி, மாமி, மாமா போன்றவற்றிற்கு தனித்தனியே வார்த்தைகள் கிடையாது அதற்காக நாம் நம் உறவுகளை விட்டு விட முடியுமா?<BR/>அது நம் கலாசாரத்தில் வந்தது. மற்றும் உணவுகளும், உடை முறைகளும் நம் தட்ப-வெப்ப, கால நிலைகளால் நிர்ணயம் செய்யப்பட்டது அதை மாற்றுவது தவறு. சில பேர் வேஷம் போட்டு கொண்டுள்ளார்கள் அவர்களை திருத்த வேண்டும், சொல்லி புரிய வைக்க வேண்டும். <B>(<BR/>"போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !"<BR/>)</B>.அதற்கான உங்கள் ஆதங்கம் சரியானதே, நம் தமிழகத்தில் உள்ள நடைமுறைகள், பாட முறைகள் மாற்றம் செய வேண்டியதே. அதற்கு உங்கள் கருத்துக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.<BR/><BR/>ஒவ்வொரு மொழிச் சொல்லை உச்சரிக்க, ஒவ்வொரு மொழியில் இருந்து நாம் வார்த்தைகளை பெற்று கொண்டே இருந்தால் இறுதியில் தமிழ் சொற்கள் என்று எதுவும் இருக்காது.<BR/>இவ்வாறு செய்தால் பாரதியின் நோக்கமே நிறைவேறாது.<BR/>"மெல்ல தமிழ் இனி சாகும்" - என்பது "நாம் கொல்ல தமிழ் விரைந்து சாகும்" என்றாகும்.<BR/><BR/><B>அண்ணன் திரு.கோவியாரின் கருத்து:<BR/>எந்த ஒரு மொழியிலும் எழுதியது போலவே படிக்க முடியாது, அதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும், ஆங்கிலத்தில் பலுக்குதல் (ப்ரனவுன்சேசன்) என்று உண்டு என்பது தாங்களுக்கு தெரியும். tsunami என்பதை சுனாமி என்று தெளிவாக படிக்கும் போது பாசுகரன் என்று எழுதினால் அதை பாஸ்கரனாகவே படிக்க முடியாது என்பது நமது பயிற்சி இன்மையே காரணம் அது தமிழின் குறையன்று. ஆங்கிலத்தில் பலக்குதலுக்கும் (உச்சரிப்புக்கும்) சொல்லுக்கும் வேறுபாடு இருப்பதை கேள்வி இன்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ள நாம், தமிழ்மட்டுமே பேசுவது போலவே எழுதவேண்டும் என்று நினைப்பது தமிழுக்கு அழகு சேர்க்குமா என்று மனம் திறந்த்து சிந்திக்க வேண்டும். </B><BR/><BR/>நேரான சிந்தனையில், மிகச் சீராக வந்த கருத்து இது.<BR/><BR/><B>திரு.ஜெயா பாரதன் எழுதுகிறார்: <BR/> "வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ?" </B><BR/><BR/>நம் மொழியோ, நம் மொழியின் சிறப்போ தெரியாதவர் பிழை ஏற்படுத்தினால் யார்தான் கோபம் கொள்வார்? ஆனால், நீங்கள் தமிழின் பெருமையோ, சிறப்போ தெரியாதவரா? (அனைவரும் அறிவர், வேற்று மொழி எழுத்து எது? நம் மொழி எழுத்து எது? என்று)<BR/>உங்கள் பெயரில் கலந்திருப்பது வேற்று மொழி எழுத்து.<BR/> (அதை பயன் படுத்தும் உரிமை தங்களுக்கு உள்ளது, நீங்கள் உங்கள் பெயரை எழுதுங்கால்) <BR/>ஆனால் ஜெயபாரதன் என்னும் பெயர் தங்களுக்கு மட்டுமே உரிமை உடையது அல்ல. மேலும், அப்படியல்லாமல் மாற்றி எழுதினால் அது தங்களை குறிக்காது என்று ஒரு அறிக்கை விட்டு விடுங்கள் போதுமானது.<BR/><BR/>நீங்களே சொல்லுங்கள், Huang Suang - <BR/>எப்படி? நம் மொழியில் வேண்டாமையா, உங்களுக்கு தெரிந்த வேற்று மொழியில் அல்லது ஆங்கிலத்தில், அந்த பயனியின் தாய்(சீன)மொழி வடிவில், உச்சரிப்பில் எழுதுவது?<BR/>அந்த, அந்த வட்டாராத்திற்கு எது பொதுவானதோ, எது இயல்போ அது தான் அந்த மக்களுக்கு உரித்தாணது. மாற்ற நினைத்தால் வேடிக்கையாக தான் இருக்கும்.<BR/><BR/>மேற்கொண்டு தகவல் பல அறிய, கீழ்க்கண்ட சுட்டிகளை தொடர்பு கொள்ளவும்:<BR/><BR/>http://www.themillionsblog.com/2006/08/hard-to-pronounce-literary-names.html<BR/><BR/>http://www.bbc.co.uk/wales/whatsinaname/sites/features/pages/howdoisay.shtml<BR/><BR/>http://phoenix.about.com/cs/phoenixfactsfun/ht/indiantribes.htm<BR/><BR/><B><BR/>அண்ணன் திரு.கோவியாரின் கருத்து:<BR/>"'தமிழ்' என்பதை மலையாளம் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து மொழிகளும் எப்படி பலுக்குகிறது, எழுதுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதற்கு அந்த மொழியாளர்கள் அப்படி ஒரு ஒலி (ழ்) உள்ள எழுத்து இல்லையே என்று கவலைப்பட்டு இருக்கிறார்களா ? என சிந்திந்து…தமிழ்மொழியில் சில எழுத்துக்கள் இல்லை, சிலவற்றை அப்படியே எழுதி தமிழின் 'குறையை' நீக்கவேண்டும் என்ற 'தாழ்வு' மனப்பாண்மை வராது." </B><BR/><BR/>மிக தெளிவான சிந்தனையிலும், தமிழ் பற்றினாலும் வந்த கருத்துகள் இவை.<BR/><BR/>சூரிய நாராயண சாஸ்திரிகள் - பரிதிமாற் கலைஞர் என்று ஆக்கியது போல் உங்களையும் மாற்ற சொல்லவில்லை திரு. ஜெயபாரதன் அவர்களே.<BR/><BR/><A HREF="http://naiyaandinaina.blogspot.com" REL="nofollow"> PLEASE VISIT: NAIYANDI-NAINA </A>நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43404922693323144132008-04-21T13:40:00.000+08:002008-04-21T13:40:00.000+08:00திரு நாக.இளங்கோவன் அய்யா,நீங்கள் கொடுத்த சுட்டிகளை...திரு நாக.இளங்கோவன் அய்யா,<BR/><BR/>நீங்கள் கொடுத்த சுட்டிகளைப் படித்தேன். ஒப்பிட்டு அளவில் ஒருவரை புகழ்வதோ பழிப்பதோ தவறுதான்.<BR/><BR/>இந்த இடுகை அது குறித்தது அல்ல, அவர் எழுதிய ஒரு பகுதிக்கான மாற்று கருத்துதான் சொல்லி இருக்கிறேன்.<BR/><BR/>அவர் பெயரை செயபரதன் என்று தாங்கள் குறிப்பிடுவது அவருக்கு பிடிக்கவில்லை என்று அவர் வெளிப்படையாக சொல்லும் போது நீங்கள் அவ்வாறே செய்துவருவதும் கூட தவறாகவே படுகிறது. பெயர்களை தமிழ்படுத்தும் போது மூன்றாம் நபர்களின் பெயரை அர்ஜுனன் என்பதை அர்சுனன் என்று எழுதினால் எவரும் தவறாக கொள்ளமாட்டார்கள், ஒருவர் தனது தந்தையார் இட்டு அழைத்த பெயரை நமது விருப்பத்திற்காகவும், மொழிநடை என்பதற்காகவும், அவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தும் மாற்றுவது ஏற்புடையது அல்லகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31667276527361279442008-04-21T13:26:00.000+08:002008-04-21T13:26:00.000+08:00திரு.செயபரதன், நீங்கள் மேற்கோள் காட்டிய அவரின் கட்...திரு.செயபரதன், நீங்கள் மேற்கோள் காட்டிய அவரின் கட்டுரையை<BR/>ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கும் மேலாகத்<BR/>தூக்கிக் கொண்டு திரிகிறார்.<BR/>பதிவுகள், திண்ணை, அன்புடன் மடற்குழு, தற்போது அவரின் பதிவு என்று இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.<BR/><BR/>இது குறித்து அறிந்து அவருக்கு எழுதிய 4 மடல்கள் கீழே.<BR/><BR/>அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.<BR/><BR/>ஆழ்ந்து பார்த்தால், அவரின் அன்புக்குப் பாத்திரமான புகாரியை<BR/>வானளாவப் புகழ வேண்டும் என்ற நோக்கில் ஒரு விழாவில், ஒட்டக்கூத்தர், பாரதிதாசன் போன்ற கவிஞர்களை விட உயர்ந்த கவிஞர் என்று பாராட்டி உதிர்த்த பல பிழைகளில் முளைத்த கட்டுரை அது என்பது புரியும்.<BR/><BR/>நமக்கு யாரையும் பாராட்டுவதில் தயக்கமே இல்லை. ஆனால், அதற்காக பாரதிதாசனை இழிவு படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. புகாரியைக் கொஞ்சுவதற்காக ஒரு பொதூமேடையில் ஒட்டக்கூத்தரை மட்டந்தட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.<BR/><BR/>இவர் இப்படி தளம் தளமாக இதைப் போட்டுக் கொண்டே போவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.<BR/><BR/>பின்னனி அறிய காணுங்கள் இந்தச் சுட்டிகளை.<BR/><BR/>http://nayanam.blogspot.com/2007/06/4.html<BR/><BR/>http://nayanam.blogspot.com/2007/06/3.html<BR/><BR/>http://nayanam.blogspot.com/2007/06/2.html<BR/><BR/>http://nayanam.blogspot.com/2007/06/1.html<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.com