tag:blogger.com,1999:blog-10267267.post5293391301688685158..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-10267267.post-71099249172196551352015-04-01T15:22:35.380+08:002015-04-01T15:22:35.380+08:00சைவம் உண்ணும் பார்ப்பனர் அல்லாத,சில சமூகத்தினரை கூ...சைவம் உண்ணும் பார்ப்பனர் அல்லாத,சில சமூகத்தினரை கூற முடியுமா...!<br />Anonymoushttps://www.blogger.com/profile/13494494143414123084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84942624192526881792011-08-04T21:00:45.909+08:002011-08-04T21:00:45.909+08:00தமிழக ஊழல் எதிர்ப்பு இயக்கம் - ஊழல்வாதிகளை கடுமையா...தமிழக ஊழல் எதிர்ப்பு இயக்கம் - ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் -- மாபெரும் பேரணி.<br />ஆகஸ்ட் 6 , 2011 , சனிக்கிழமை அன்று மாலை 5 - 6.30 வரை, மரினா கடற்கரை காந்தி சிலை முதல் - அண்ணா சமாதி வரை. சுமார் 20000 மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.<br /><br />லக்சிமிகாந்தன் பாரதி, தமிழருவி மணியன், SM அரசு போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வாருங்கள் தோழர்களே நாமும் கலந்து கொள்வோம்.Venkathttps://www.blogger.com/profile/10551429247277714766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81540483571936910802010-07-01T21:04:09.214+08:002010-07-01T21:04:09.214+08:00//ஆனால் இரண்டும் வெவ்வேறு மனித மேலாதிக்க மனோபாவங்க...//ஆனால் இரண்டும் வெவ்வேறு மனித மேலாதிக்க மனோபாவங்களைக் கொண்டதென்பதால் இரண்டையும் ஒன்றாக இணைப்பது சரியாகப் படவில்லை.//<br /><br />சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதும், சமூகத்திலிருந்து ஒதுங்கிப் போவதும் ஒன்று தான். இரண்டுமே சுற்றிவாழும் மனித இனத்தை நேசிக்காத தன்மையேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19918527954988024812010-07-01T19:34:34.456+08:002010-07-01T19:34:34.456+08:00கோவியாரே!வேர்ட் பிரஸ்க்கு டிஸ்கி போட்டு விட்டு என்...கோவியாரே!வேர்ட் பிரஸ்க்கு டிஸ்கி போட்டு விட்டு என்னை வேர்ட் பிரஸ் மாமி வீட்டுக்கு வழி சொல்லி அனுப்பி விட்டீர்களே:)<br /><br />நோண்டிப்பார்த்தால் வர்ணாசிரமத்தின் வேரில் உங்கள் தலைப்பு பொருந்தி வருவதற்கு சாத்தியம் இருக்கிறது.ஆனாலும் இரண்டையும் தனித்தனியான கண்ணோட்டத்தில் விவாதிப்பதே தற்போதைக்கான மாற்றத்திற்கும் புரிதலுக்கும் வழி வகுக்கும்.<br /><br />இரட்டைக்குவளை நிலையிலிருந்து பிராமின்ஸ் ஒன்லி வரை சாதியம் பரிணாம வளர்ச்சி அடைந்த அறிகுறியே தென்படுகிறது உங்கள் தலைப்பு.ஆனால் இரண்டும் வெவ்வேறு மனித மேலாதிக்க மனோபாவங்களைக் கொண்டதென்பதால் இரண்டையும் ஒன்றாக இணைப்பது சரியாகப் படவில்லை.<br /><br />(உங்களுக்கு இட்ட பின்னூட்டத்தை வெட்டி ஒட்டிக் கொள்கிறேன்)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61382680857542338572010-05-24T23:37:02.483+08:002010-05-24T23:37:02.483+08:00//செந்தழல் இரவி...
மத சம்பிரதாயம் குடுமி பூணூல் அ...<i> //செந்தழல் இரவி...<br /><br />மத சம்பிரதாயம் குடுமி பூணூல் அவா இவா போன்ற பாசை ஆகியவை அவர்கள் தனிப்பட்ட விஷயம் கல்வெட்டு. சிங் கூட டர்பன் அணிந்துள்ளது போல. அதனை லூஸ்ல விட்டுவிட்டு, வருணாசிரம தர்மத்தை கடைப்பிடிப்பவர்களை மட்டும் கலாய்க்கலாமே ?// </i><br /><br />அப்படி இல்லை இரவி.<br /><br />வருணாசிரம தர்மம் என்பதே பிறப்பின் வழி வரும் வர்ண நம்பிக்கை.<br /><br />குடுமி பூணூல் .. இவை அப்பட்டமான சாதி அடையாளங்கள்.<br /><br />டர்பன் அணிவதும், அகலவாக்கில் பட்டை, நீளவாக்கில் கோடு , தொப்பி , கழுத்தில் சிலுவை .....எல்லாம் மத அடையாளங்களே. <br /><br /><b> இவர்கள் வெளிப்படையாக எப்படி தங்களின் மத அடையாளங்களை தெரிந்தே வெளிப்படுத்துகிறார்களோ அதுபோல குடுமி பூணூல் போன்ற அடையாளங்கள் தெரிந்தே / விரும்பியே வெளிக்காட்டிக் கொள்ளும் சாதிய அடையாளங்கள். </b><br /><br />சாதியை இப்படி வெளிப்படுத்துவது மட்டும் இல்லாமல இவர்கள் சாதி ஏணியில் துண்டை முதலில் போட்டு இடம் பிடித்து இன்னும் காஞ்சி மடங்களின் மூலம் வர்ணம் காக்க நினைப்பவர்கள். <br /><br />இதை விமர்சிக்காமல் எப்படி வர்ணத்தைக் கடந்துபோவது ? உண்மையில் தெரியவில்லை இரவி. :-(((கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37335343593879047892010-05-24T14:26:21.240+08:002010-05-24T14:26:21.240+08:00மற்ற ஜாதியில் உள்ள சில பேறும் என் பார்பனர்களுக்கு ...மற்ற ஜாதியில் உள்ள சில பேறும் என் பார்பனர்களுக்கு என்று சொல்கிறார்கள் . அவர்கள் ஜாதியில் உள்ள மக்களுக்கு கொடுக்காமல் அவர்களும் பிராமின்ஸ் ஒன்லி என்று வாடகை விடுவது உங்களுக்கு தெரிந்திருக்குமோ இல்லையோ. நான் உள்ள பகுதியில் உள்ள முஸ்லீம் நண்பர் அவர் கட்டிய வீட்டை பிராமணர்கள் மட்டும் என்று சொல்கிறார். <br /><br />//பார்பனர் கேட்கமாட்டார், ஏனென்றால் ஊருக்கு நாலுபேர் மாவட்டத்துக்கு 40 பேர் மட்டும் தான்னு தெரிந்துவிடும் //<br /><br />பாவம் என்ன பண்ணுவது. உங்களால் இந்த 40 பேரை மாட்டும் தான் திட்ட முடியும். அப்படி என்றால் பிராமணர்கள் சிறுபான்மையினரா. இந்த 40 பேரை பாத்து எவ்வளவு நாள் தான் கூவிகொண்டிருக்க போகிறீர்கள் என்று தெரிய வில்லை <br /><br />நான் கிட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லாமல் பதிலை திரிக்க வேண்டாம். அப்பறம் எதுக்குங்க மக்கள் தொகை கணகெடுபுல ஜாதியை சேக்க சொல்றீங்க. எல்லாத்துலயும் பிராமணர் சொல்றான்னு சொல்றீங்க , இங்க யாரு சொல்றதுன்னு தான் தெரியலை . அதை விட்டுட்டு பிரமனால் நாற்பது பேரு வெங்காயம் கத்திரிக்கா பூண்டு சொல்லாதீங்கKesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17054959705268157612010-05-24T14:11:51.186+08:002010-05-24T14:11:51.186+08:00//ஆமாம் matrimonial எல்லாரும் அவரவர் ஜாதிகளை குறிப...//ஆமாம் matrimonial எல்லாரும் அவரவர் ஜாதிகளை குறிப்பிட்டு அந்த ஜாதியில் தான் பையன் / பொண்ணு வேண்டும் என்று சொல்கிறார்களே . என்ன பண்ணுவது சிலருக்கு செலெக்டிவ் அம்னிஷியா இருக்கும் போல் இருக்கிறது//<br /><br />இந்த அமினிசியா, கிமினிசியா இவையெல்லாம் பார்பனிய வருணாசிரம வழி வகுத்துக் கொண்ட சாதித் தீமையினால் விளைவது என்று தொடர்ந்து கூவி வருகிறோம், உம்ம காதில் தான் விழுவதில்லை.<br /><br />எல்லாத்துக்கு சாதி வேண்டுமென்றால் பார்பனர் நடத்தும் ஓட்டலிலும் 'பிரமனாள் ஒன்லி அலவுடுன்னு' போடலாமே சார். விற்பனை காத்துவாங்கும்.<br /><br />பார்பான் திருமணத்திற்கு மண்டபம் கொடுக்கமாட்டேன் என்று திருமணம் மண்டப சொந்தக்காரன் சொன்னால் விட்டுவிடுவேளா ? மந்திரம் ஓதுரவாளுக்கே இல்லையா ? ன்னு கேட்கமாட்டேளா ?<br /><br />அப்படியே வீட்டை சைவம் சாப்பிடும் பார்பனருக்குத்தான் விடுறா என்று வைத்துக் கொண்டாலும் வீட்டு ஓனரான பார்பனர் வீட்டுக்குள்ளே போய் அவ அசைவம் சமைத்துச் சாப்பிடுறாளா ? இல்ல பார்சலாக மட்டும் வாங்கிவந்து திங்கிறாளான்னு பார்க்கப் போறாளா ?<br /><br /><br />// மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியையும் சேர்க்க வேண்டும் என்று சொல்வது பிரமணர்கள அல்லது மற்றவர்களா என்று தெரிய வில்லை//<br /><br />பார்பனர் கேட்கமாட்டார், ஏனென்றால் ஊருக்கு நாலுபேர் மாவட்டத்துக்கு 40 பேர் மட்டும் தான்னு தெரிந்துவிடும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79499857609949003752010-05-24T14:04:18.461+08:002010-05-24T14:04:18.461+08:00// 'டு லெட் பார் வெஜிடேரியன் ஒன்லி' என்று ...// 'டு லெட் பார் வெஜிடேரியன் ஒன்லி' என்று போடலாமே சார்.//<br /><br />அப்பறம் நீங்க கேப்பீங்க பிரமனால் அசைவம் சாபிடுவதில்லையா. என் இப்படி போட வேண்டும் என்று சொல்வீர்கள் . உங்கள் பிதற்றலை பார்த்தால் பார்த்திபன் , வடிவேலு நகைச்சுவை மட்டுமே ஞாபகம் வருகிறது . ஆமாம் matrimonial எல்லாரும் அவரவர் ஜாதிகளை குறிப்பிட்டு அந்த ஜாதியில் தான் பையன் / பொண்ணு வேண்டும் என்று சொல்கிறார்களே . என்ன பண்ணுவது சிலருக்கு செலெக்டிவ் அம்னிஷியா இருக்கும் போல் இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியையும் சேர்க்க வேண்டும் என்று சொல்வது பிரமணர்கள அல்லது மற்றவர்களா என்று தெரிய வில்லைKesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44843823233081707992010-05-24T14:00:52.804+08:002010-05-24T14:00:52.804+08:00//பித்தனின் வாக்கு has left a new comment on your ...//பித்தனின் வாக்கு has left a new comment on your post "இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !":<br /><br />In this article has proved one thing. //<br /><br />என் பதிவில் நான் என்ன எழுதுகிறேன் என்று முத்திரைக் குத்தி உங்களை நான் தீர்ப்பு எழுதச் சொல்லவில்லை. உங்கள் மட்டமான விமர்சனத்தை நான் நிராகரிக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88699113092241260012010-05-24T13:59:15.806+08:002010-05-24T13:59:15.806+08:00//mathhtavalukku kudi vitta, ava kanda karumathaiy...//mathhtavalukku kudi vitta, ava kanda karumathaiyum smaiththu saappiduva, enru posuvathai kettu ullan.//<br /><br />மத்தவங்களை ஏன் சாமி சொல்றேள், நீங்களே அசைவம் சாப்பிடுவதை 'பிணம் திண்ணுபவர்கள்' என்று தானே பதிவில் எழுதினீர்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83487602890365049172010-05-24T13:57:41.196+08:002010-05-24T13:57:41.196+08:00// பித்தனின் வாக்கு said...
As per my knowled...// பித்தனின் வாக்கு said...<br /><br /> As per my knowledge they let their house to brahmins only for not cooking non veg and clean purpose.<br /> In my chennai house also letting to non vegitarians only. And also a conditions we let home maxmimum 4 persons family only. this is only for convienint and clean. but your point of view also correct to some extent. Some times brahmins speaking like this, mathhtavalukku kudi vitta, ava kanda karumathaiyum smaiththu saappiduva, enru posuvathai kettu ullan.//<br /><br />எதற்கு இந்த சப்பைக் கட்டு ? <br /><br />எனக்கு தெரிந்து அனைத்துப் பார்பனர்களும் சைவம் கிடையாது, பார்பனர்களில் சைவர்கள் உண்டு, வீட்டு உரிமையாளர் தம் வீடுகளில் எதை சமைக்கலாம் என்பதைக் கூட முடிவு செய்து வாடகைக்கு விடுகிறார் என்பதைக் கூட ஞாயம் என்றுக் கொண்டால் 'டு லெட் பார் வெஜிடேரியன் ஒன்லி' என்று போடலாமே சார்.<br /><br />தோல் பொருள்களெல்லாம் சைவமாக மாறிவிட்டதா ? தோல் பொருள்கள் பயன்படுத்தாத பார்பனர்கள் யார் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27764682816788410072010-05-24T13:51:48.395+08:002010-05-24T13:51:48.395+08:00As per my knowledge they let their house to brahmi...As per my knowledge they let their house to brahmins only for not cooking non veg and clean purpose.<br />In my chennai house also letting to non vegitarians only. And also a conditions we let home maxmimum 4 persons family only. this is only for convienint and clean. but your point of view also correct to some extent. Some times brahmins speaking like this, mathhtavalukku kudi vitta, ava kanda karumathaiyum smaiththu saappiduva, enru posuvathai kettu ullan.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61179641961318386302010-05-21T05:54:21.527+08:002010-05-21T05:54:21.527+08:00//அப்படிச் செய்து , வெளிப்படையாய் தெர்ரியும் குடும...//அப்படிச் செய்து , வெளிப்படையாய் தெர்ரியும் குடுமி, பூணூல் போன்ற சாதி அடையாளங்களை, சம்பிரதாயங்களை விட்டால் அவர்கள் பார்ப்பனர்கள் இல்லை என்று சொல்லலாம்.///<br /><br />மத சம்பிரதாயம் குடுமி பூணூல் அவா இவா போன்ற பாசை ஆகியவை அவர்கள் தனிப்பட்ட விஷயம் கல்வெட்டு. சிங் கூட டர்பன் அணிந்துள்ளது போல. அதனை லூஸ்ல விட்டுவிட்டு, வருணாசிரம தர்மத்தை கடைப்பிடிப்பவர்களை மட்டும் கலாய்க்கலாமே ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44548162048363566562010-05-21T05:52:17.646+08:002010-05-21T05:52:17.646+08:00/// யாரும் வீட்டில் சமைத்து உண்பதில்லை . ///
மிஸ்.../// யாரும் வீட்டில் சமைத்து உண்பதில்லை . ///<br /><br />மிஸ்டர் கேசவன். காபி வித் அணு என்ற லேடி உம்மவா தானே ? கடந்தவாரம் ஜேப்பனீஸ் சூசி பிஷ் பச்சையாக தின்றதை பார்த்தேன். ப்ரொக்க்ராம் பெயர் என் சமயலறையில்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59814354881756251132010-05-19T15:06:44.862+08:002010-05-19T15:06:44.862+08:00//இந்தியன் மட்டும் கோவி கண்ணன்,
முத்தாலிக் அல்லது...//இந்தியன் மட்டும் கோவி கண்ணன்,<br /><br />முத்தாலிக் அல்லது காஞ்சி மடம் அல்லது நீங்கள் சொல்கிற இந்துத்வா காவலர்கள் யாருமே ஒட்டு மொத்த இந்துக்களைப் பிரதிநிதிப் படுத்துகிற அல்ளது பேச்சாளர்கள் அல்ல. அப்படி நினைக்கிற உங்களுடைய லாஜிக் மிகவும் விநோதமாக இருக்கிறது.//<br /><br /><br />இதே கருத்துக்களைத்தான் இஸ்லாமியரும், கிறித்தவர்களும் சொல்கிறார்கள்.<br /><br />யாரோ சிலர் செய்யும் செயலுக்கு எங்கள் மதத்தை குற்றம் சொல்லாதீர்கள் என்று. <br /><br />//<br />கல்லாலடித்துக் கொள்வது,கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று காட்டுமிரண்டித்தனமாக நடந்துகொள்வது எல்லாம் ஆப்ரஹாமைட் மதங்களில் மட்டுமே மதக்கடமையாகவும், அவர்கள் நம்புகிற கடவுளுக்குப் பிரியமானதாகவும் போதிக்கப் பட்டு வருகிறது. இங்கே சகித்துக் கொண்டு பெரும்பாலான மக்கள் போவதால் தான், உங்களை மாதிரி நிறையப் பேர் தொடர்ந்து எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருக்க முடிகிறது.<br /><br />சகித்துக் கொள்ள முடியாத சில கிறுக்குத்தனங்கள் முத்தாலிக் மாதிரி, கர சேவகர்கள் மாதிரிக் கொஞ்சம் வருகிறதென்பதற்காக எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்?// <br /><br />இந்து மதத்தில் சிலர் மாத்திரமே <br />கிறுக்கர்களாக இருக்கிறார்கள். <br /><br />மற்ற மதங்களில் மதமே தன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரையும் கிறுக்குத்தனமாக செயல்படச் சொல்கிறதா? <br /><br />மாமியார் ஒடச்சா மண்குடம். மருமகள் ஒடச்சா பொன் குடமா? <br /><br />இது இந்து மத ஆதரவாளர்களுக்கும், எந்த மத ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73538313301784974762010-05-18T17:01:30.689+08:002010-05-18T17:01:30.689+08:00//எதிர்கருத்துக்களைச் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் எ...//எதிர்கருத்துக்களைச் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் எதிரி ஆக்கிடாதிங்க//<br /><br />நீரு கருத்து சொன்னாலே எல்லாம் தலை தெறிச்சி ஓடும்போது எப்படிய்யா உம்மை எதிரியா பார்ப்பாங்க :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11566660283091804572010-05-18T11:25:47.497+08:002010-05-18T11:25:47.497+08:00//எந்த ஒரு மத நம்பிக்கையும், அதன் ஆரம்ப காலங்களில்...//எந்த ஒரு மத நம்பிக்கையும், அதன் ஆரம்ப காலங்களில், அன்பையும் சமாதானத்தையும் போதிக்கிற நல்லெண்ணங்களோடு தான் தோன்றுகிறது. காலப் போக்கில் வெறும் சடங்குகளாக, அல்லது வெறும் வசனங்களாகக் குறுகித் திரிந்து, முந்தைய நோக்கத்திற்கு எதிரானதாகவே மாறிவிடுகிறது.//<br /><br />திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா,<br /><br />இதே பதிவில் உங்கள் முந்தைய பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள், இந்து மதம் மட்டும் அமைதியை போதிப்பதாகவும், அடுத்த மதங்கள் கத்தி கப்படா என்று அலைவதாகவும், கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று எழுதி இருக்கிறீர்கள், அதை மறுத்து தான் நான் பகவத் கீதையே போர் செய்யத் தூண்டும் நூல் தானே என்றேன். <br /><br />//நிறுவனப்படுத்தப்படும் எதுவானாலும், அதன் கதி, பரிணாமம் இது தான்! இதை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே, மதம், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முயற்சிப்பவன் என்ற வகையில், உங்களுடைய வாதம், அதில் இருக்கும் முரண்பாடுகளையும் கவனிக்கிறேன்.//<br /><br />நான் முரண்பாடுகளாகப் பேசுவதில்லை.<br />எந்த ஒரு கொள்கையும் தேவையைப் பொருத்து ஏற்படும் தேவை இல்லை என்றால் அழியும் என்பதை நான் அவ்வப்போது சொல்லிவருவது உண்டு, நீங்கள் தான் "இந்துத்துவம் என்று நீங்கள் கற்பிக்கும் அர்த்தம் ஒன்றாகவும், இந்த மண்ணில்பரந்துவிரிந்த ஞான மரபை நான் புரிந்துகொண்டது வேறாகவும் இருக்கிறது." - என்னமோ நான் இந்துத்துவத்தை கற்பிப்பது போலவும் இந்து மதம் ஞான இடிதாங்கியாக உள்ளது போல எழுதி இருக்கிறீர்கள். இந்து மதம் ஞானத் தாங்கி என்றால் அதைத் தாங்கிக் கொண்டு இருப்பவர் யார் ? தன்னைத் தானே தாங்கிக் கொண்டு தாக்கு பிடிகிறதா ? எதோ ஒரு சாமியார் அல்லது மடத்து தலைமை சாமியார்களின் கைகளில் தானே இவை இருக்கின்றன.<br /><br />//எனக்குத் தெரிந்த இது தான் உலகம், இதுதான் ஞானம்,பகுத்தறிவு என்று என்னை எப்படிக் குறுக்கிக் கொள்ளவில்லையோ,அதே மாதிரித் திறந்த மனதுடன் விவாதத்தைத் தொடர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.//<br /><br />இந்து மதம், ஞானமரபு என்றெல்லாம் (ஜெமோ பதிவின் சாரத்தைமட்டுமே) வைத்துக் கொண்டு நீங்கள் குறுக்கிக் கொள்ளவில்லை என்று சொல்வதும் நகைமுரணே.<br /><br /><br />// இல்லையென்றால் விதண்டாவாதமாகக் குறுகி மனவருத்தங்கள் தான் மிஞ்சும்!//<br /><br />மனவருத்தமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை, உங்களுக்கான பதில் உங்கள் கருத்துக்கான பதில், நீங்கள் எவ்வளவு அழுத்தமாக வாதம் வைக்கிறீர்களோ, அதைவிட அழுத்தத்தில் என்னுடைய பதில் வரும். அவ்வளவு தான். இவற்றில் நான் நமது தனிப்பட்ட நட்பை அளவுகோளாக்கிக் கொள்வதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.<br /><br />திறந்த மனதுடன் பேசுவதால் தான் உங்கள் கருத்துகளில் பார்பனிய வாசனை அடித்தால் அதை நேரடியாகவே தாக்குகிறேன். நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று நினைத்துப் பார்த்தால் நம்க்குள் விவாதமே வராது. <br /><br />அதையும் மீறி வருத்தப்பட்டால் பட்டுக்கொள்ளுங்கள். :)<br /><br />எதிர்கருத்துக்களைச் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் எதிரி ஆக்கிடாதிங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12319506880001285922010-05-18T11:04:10.314+08:002010-05-18T11:04:10.314+08:00/எல்லா மதக் குப்பைகளிலும் பேருக்கு அமைதி, சாந்தி எ.../எல்லா மதக் குப்பைகளிலும் பேருக்கு அமைதி, சாந்தி என்கிற போதனைகள் இருக்கும் அவ்வளவு தான், உங்களுக்கு தெரிந்தது/<br /><br />இந்த இடத்தில் இருந்து தான் பிறழ ஆரம்பிக்கிறீர்கள் என்பது புரிகிறதா, கோவி.கண்ணன்!<br /><br />எந்த ஒரு மத நம்பிக்கையும், அதன் ஆரம்ப காலங்களில், அன்பையும் சமாதானத்தையும் போதிக்கிற நல்லெண்ணங்களோடு தான் தோன்றுகிறது. காலப் போக்கில் வெறும் சடங்குகளாக, அல்லது வெறும் வசனங்களாகக் குறுகித் திரிந்து, முந்தைய நோக்கத்திற்கு எதிரானதாகவே மாறிவிடுகிறது.<br /><br />நிறுவனப்படுத்தப்படும் எதுவானாலும், அதன் கதி, பரிணாமம் இது தான்! இதை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே, மதம், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முயற்சிப்பவன் என்ற வகையில், உங்களுடைய வாதம், அதில் இருக்கும் முரண்பாடுகளையும் கவனிக்கிறேன்.<br /><br />எனக்குத் தெரிந்த இது தான் உலகம், இதுதான் ஞானம்,பகுத்தறிவு என்று என்னை எப்படிக் குறுக்கிக் கொள்ளவில்லையோ,அதே மாதிரித் திறந்த மனதுடன் விவாதத்தைத் தொடர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால் விதண்டாவாதமாகக் குறுகி மனவருத்தங்கள் தான் மிஞ்சும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24593200589303365212010-05-18T08:27:25.633+08:002010-05-18T08:27:25.633+08:00//ஆப்ரஹாமைட் மதங்களைப் பற்றிப் பேசும்போது, பல்லுக்...//ஆப்ரஹாமைட் மதங்களைப் பற்றிப் பேசும்போது, பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண் என்ற கொடூரமான போதனையை இன்றைக்கும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இயல்பைக் கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தாலே போதும்! அதே நேரம்,//<br /><br />போர் செய்வதே அறம், தருமம் எனப்படும் போர்களத்தில் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் கீதையை புனித நூலாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இப்படிப் பேசுவது சரியான நகை முரண்.<br /><br />எல்லா மதக் குப்பைகளிலும் பேருக்கு அமைதி, சாந்தி என்கிற போதனைகள் இருக்கும் அவ்வளவு தான், உங்களுக்கு தெரிந்தது உங்களைச் சார்ந்த மதத்தின் புனிதத் தன்மையும் பிற மதத்தின் அழுக்குகளும் மட்டும் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35420359306259987012010-05-18T01:54:00.563+08:002010-05-18T01:54:00.563+08:00ஒரு வேலை பிராமிணர்கள் வாடகை வீட்டை "வாடகை&quo...ஒரு வேலை பிராமிணர்கள் வாடகை வீட்டை "வாடகை" வீடாக மட்டுமே கருதுவதனாலும் மற்றவர்கள் வாடகை வீட்டை "சொந்த" வீடாக கருதுவதனாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74820877148773667732010-05-17T22:07:42.150+08:002010-05-17T22:07:42.150+08:00/உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவப்.../உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவப் பூனை அவ்வப்போது எழுந்து பாலும் முட்டையும் குடிச்சுட்டு தூங்குவது போல் உங்கப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்/<br /><br />பிரச்சினையே இப்படி நீங்களாகவே முன்கூட்டி ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்கப்புறம் அதற்குச் சாதகமாகவே வாதங்களை நீட்டிக் கொண்டு போவதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது கோவி கண்ணன்!<br /><br />இந்துத்துவம் என்று நீங்கள் கற்பிக்கும் அர்த்தம் ஒன்றாகவும், இந்த மண்ணில்பரந்துவிரிந்த ஞான மரபை நான் புரிந்துகொண்டது வேறாகவும் இருக்கிறது. ஒரு மதவாதியாக, மதம்பிடித்துத்தனக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கிற போக்கை நான் எப்போதுமே ஆதரித்ததுமில்லை. நான் மதவாதியுமில்லை. மதவாதியாக இருப்பது வேறு, சில அடிப்படைத் தத்துவங்களை ஏற்றுக் கொள்கிற நிலை வேறு.<br /><br />ஹிந்து தர்மம் எப்போதுமே வன்முறையை, வலுக்கட்டாயமாகக் கருத்தைத் திணிப்பதில் இறங்கியதே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை அது. வேற்றுமைகள் எல்லாமே ஒரு பொதுவான ஒற்றுமைக்கு இட்டுச் செல்வதைத்தெளிவாகப் புரிந்து கொண்ட செழுமையான பண்பாடும், மரபும் உடையது. இப்படிச் சொல்லும்போது, ஒவ்வொரு நம்பிக்கையும் ஆரம்ப நிலைகளில் மிகவும் நல்ல எண்ணத்தோடு தான் தொடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறவன்.<br /><br />ஆப்ரஹாமைட் மதங்களைப் பற்றிப் பேசும்போது, பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண் என்ற கொடூரமான போதனையை இன்றைக்கும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இயல்பைக் கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தாலே போதும்! அதே நேரம், அங்கேயும் அன்பை விதைத்த, நல்ல எண்ணங்களுடன் தொண்டு செய்த நிறையப் பேரை நான் அறிவேன். சுஃபி ஞானியர் பலரைத் தேடிப் படித்ததும், சுஃபி கவிஞன் ரூமியின் கவிதைகளை மொழியாக்கம் செய்து எனது பதிவில் இடுகைகளாக எழுதியிருப்பதும் என்னுடைய பதிவுகளில் எல்லோரும் காணக் கிடைப்பது தான்.. பழைய பதிவுகளைத் தேடிப் படித்திருந்தீர்களானால், என்னுடைய பிரார்த்தனைகளுள் ஒன்றாக Lead Kindly Light என்ற கிறித்தவப் பிரார்த்தனையும், God grant me the serenity முதலானவையும் இருப்பதைப் பார்த்திருக்க முடியும். நல்லவைகளைத் தேடிப் படிக்கிற ஏற்றுக் கொள்கிற இயல்பை இறைவன் எனக்கு சிறுவயதிலிருந்தே அருளியிருக்கிறான்.<br /><br />மதங்களின் தேவை முடிந்துவிட்டது, இனிமேல் ஆன்மீகச் சிந்தனை ஒன்றே மனிதனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்ற ஸ்ரீ அரவிந்த அன்னையின் கூற்றை தொடர்ந்து எனது பல பதிவுகளில் எழுதி வருவதும் கொஞ்சம் பொறுமையாகப் பார்த்தால் தெரிந்திருக்குமே!<br /><br />எனக்குள்ளும் சரி, உங்களுக்குள்ளும் சரி ஒளிந்திருப்பது பூனைக் குட்டியாக இருந்துவிட்டால் கூடப் பரவாயில்லை! பெரிய சேதம் வராது.ஆனால், பழக்கங்களின் அடிமையாகவே, மனித வடிவில் மிருகத்தன்மையோடு இருந்துவிடுவது தான் மிகவும் ஆபத்தானது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29189361630158419732010-05-17T10:58:46.320+08:002010-05-17T10:58:46.320+08:00//அவ்வாறு செய்தால் அதுவும் வணிகச் சட்டப்படி குற்றம...//அவ்வாறு செய்தால் அதுவும் வணிகச் சட்டப்படி குற்றமே. <br />//வணிக நிறுவனங்களை தனிப்பட்டவர் வீடுகளையும் போட்டு குழப்பிக் கொள்வது நீங்கள்தான்.////<br /><br />வாடகைக்குவிடும், விற்பனை செய்யும் இவை எல்லாமே வணிக நோக்கம் தானே சார். பணப் பரிமாற்றம் எப்படி நடந்தாலும் அதன் பெயர் வணிகம். <br /><br />நான் குழப்பவில்லை, நீங்கள் தான் சப்பைக் கட்டாகக் கூறுகிறீர்கள். Renting House(s) also Business.<br /><br />ஒரு செட்டியார் திருமண மண்டபம் திறந்து 'பார்பனர்களின் திருமணத்திற்கு கிடையாது' என்று சொன்னாலும் என் பதில் இதே தான். அதுவும் வாடகைக்கு விடும் பிஸ்னஸ் தான்.<br /><br />//இதுதான் இப்பதிவில் எனது கடைசி பின்னூட்டம். செஸ் ஆட்டத்தில் ஸ்டேல்மேட் என்ற நிலை வந்தால் ஆட்டம் மேற்கொண்டு கண்டியூ செய்யவியலாது, அதுபோலத்தான் நீங்கள் என்னையோ நான் உங்களையோ கன்வின்ஸ் செய்ய முடியாது.<br />// <br /><br />இதில் உங்களால் சப்பைக் கட்டுகளையும், குழப்படியையும் தவிர்த்து உங்களுக்கு பதில் சொல்ல வழியில்லை என்று தெரிவதால் நான் அதை வரவேற்கிறேன்.<br /><br />நீங்கள் மேலே என் நண்பர்/தம்பி கேசவனைப் போல 'மாமிசம் சாப்பிடாதவர்கள் வேண்டாம்' என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு சப்பைக் கட்ட முயற்சிக்கவில்லை, அப்படிச் சொல்லி இருந்தால் 'வெஜிடேரியன் ஒன்லி' என்று சொல்லி இருக்கலாமே என்று நான் கூறுவேன். சோ.....'பிராமன்ஸ் ஒன்லி' என்பது 100 விழுக்காடு பார்பனர்களால் நடத்தப்படும் சுயசாதி மோகம், பிறச்சாதி பகிஷ்கரிப்பு, புறக்கணிப்பு, சாதிதுவேசம் என்ற வகையில் அடங்கும் மற்றொரு நவீன நகரத்து தீண்டாமை. இதற்கு உரிமை என்று முலாம் பூசும் உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு ஏற்புடையது அல்ல. இருந்தாலும் உங்கள் கருத்து என்ற அளவில் அதை ஒரு கருத்தாக கொள்கிறேன்.<br /><br />//பை தி வே உங்கள் சென்னை வீட்டை வாடகைக்குத்தானே விட்டுள்ளீர்கள்?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்//<br /><br />ஆமாம், போர்டுகள் எதுவும் இல்லாமல்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52602923985038603292010-05-17T10:46:38.355+08:002010-05-17T10:46:38.355+08:00//மாமாக்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் இல்லாததால...//மாமாக்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் இல்லாததால் அதை உரிமை என்கிறேள்.//<br />மாமாக்களுக்கு எதிராக மட்டுமல்ல, மற்ற சாதிகளைச் சேர்ந்த இதே மாதிரி பாகுபாடு பார்க்கும் வீட்டுக்காரர்களுக்கும் கூடத்தான் எதிராக இல்லை.<br /><br />//ஒரு செட்டியார் காய்கறிகடை திறந்து வைத்துவிட்டு 'பார்பனர்களுக்கு விற்பது கிடையாது' என்று போர்டு போட்டால் அது புறக்கணிப்பு தானே சார்.//<br />அவ்வாறு செய்தால் அதுவும் வணிகச் சட்டப்படி குற்றமே.<br /><br />வணிக நிறுவனங்களை தனிப்பட்டவர் வீடுகளையும் போட்டு குழப்பிக் கொள்வது நீங்கள்தான்.<br /><br />இதுதான் இப்பதிவில் எனது கடைசி பின்னூட்டம். செஸ் ஆட்டத்தில் ஸ்டேல்மேட் என்ற நிலை வந்தால் ஆட்டம் மேற்கொண்டு கண்டியூ செய்யவியலாது, அதுபோலத்தான் நீங்கள் என்னையோ நான் உங்களையோ கன்வின்ஸ் செய்ய முடியாது. <br /><br />பை தி வே உங்கள் சென்னை வீட்டை வாடகைக்குத்தானே விட்டுள்ளீர்கள்?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78271695361540329272010-05-17T10:32:20.531+08:002010-05-17T10:32:20.531+08:00//வன்கொடுமை என்பதே வேறு ரேஞ்சில் இருக்கிறது.//
கி...//வன்கொடுமை என்பதே வேறு ரேஞ்சில் இருக்கிறது.//<br /><br />கிள்ளி எடுத்து சாப்பிட்டாலும் அள்ளிச் சாப்பிட்டாலும் மலம் மலம் தான். அங்கு வாழும் பெரும்பான்மை பொருத்து ரேஞ்சு மாறும், அவற்றிற்கு சாட்சிதான் பழைய அக்ரகாரங்கள்.<br /><br />//தலித்துகள் செருப்பே போட்டுக் கொள்ளக்கூடாது சில குறிப்பிட்ட தெருக்களில் சைக்கிளை உருட்டித்தான் செல்ல வேண்டும், பொதுக்கிணறுக்கு வந்து தண்ணீர் எடுக்கலாகாது,//<br /><br />இவையெல்லாம் ஒருகாலத்தில் அக்கிரகார அக்கிரமங்களாக இன்றும் தொடர்கிறது. பார்பனர்களால் அவை நடத்தபடவில்லை என்பதற்கு பார்பனர்கள் அங்கு வசிக்காமல் இடம் பெயர்ந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை. அவைதான் நகரத்து நவீன தீண்டாமைகளாக 'என் வீட்டுக்குள் நுழைய வேறு சாதிக்காரனுக்கு அனுமதி இல்லை' என்பதாக 'பிராமின்ஸ் ஒன்லி' போர்டுகளாக தொடர்கிறது.<br /><br />//தங்கள் குழந்தைகளுக்கு பெயர் கூட மண்ணாங்கட்டி, முனியன் என்றெல்லாம்தான் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, //<br /><br />இப்படியெல்லாம் யாரும் கட்டாயப்படுதுவது கிடையாது. எஸ்வீசேகர் நாடகங்களில் ஒருவேளை இப்படியான அபத்தங்கள் தொடர்கிறதோ என்னவோ, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி ஆகிய பெயர்களைப் போல் பழைய பெயர்களான பார்பனப் பெயர்கள், குஞ்சிதபாதம், அபிதகுஜலாம்பாள் ஆகியவற்றையும் யாரும் வைக்கக் கட்டாயப்படுத்துவதில்லை என்பதால் அவை மறைந்துவிட்டன என்று கூறுவீர்களா ?<br /><br />//யாராவது செத்தால் அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தப்படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆகியவைதான். அவற்றைத் தவிர்க்கவே இயலாது. அவ்வாறு செய்யும் வன்னியர்/முதலியார்/தேவர்/பிள்ளைமார் சாதி வெறியர்களின் வன்கொடுமைகள் எல்லாம் இருக்க,//<br /><br />இந்த எல்லா எழவையும் அடியேன் கண்டித்துவருகிறேன். நான் டோண்டு இராகவன் இல்லை, இவற்றிற்கு சப்பைக் கட்ட.<br /><br />//இங்கு வந்து பார்ப்பனர் வாடகைக்கு ஆள் தேர்ந்தெடுக்கும் முறையை மெனக்கெட்டு கொண்டு வந்து அவற்றுக்கு ஈடாக பார்க்க வைக்க எண்ணுவது உங்களது பார்ப்பன வெறுப்பைத்தான் காட்டுகிறது.//<br /><br />நகரத்து நவீனத் தீண்டாமைகள் பேசப்படாதவைகளாக இருக்கின்றன, இவற்றையெல்லாம் கண்டிக்கத் துப்பு இல்லாதவர்கள் பிற கொடுமைகளை மட்டும் கண்டிப்பது தன் முதுகு அழுக்கை புணுகு என்று புழுகி மொழுகி மறைப்பதாகும் என்பது என் குற்றச் சாட்டு.<br /><br />//மறுபடியும் கூறுவேன். எந்த ஒரு வீட்டு சொந்தக்காரருக்கும் தன் வீட்டை யாருக்கு வாடகைக்குத் தருவது என்று முடிவு செய்ய முழு உரிமையும் உண்டு. அதைத்தான் அவர்கள் - எந்த சாதியினராக இருந்தாலும் - கடைபிடிக்கின்றனர்.//<br /><br />இதே ஞாயம் தான் இரட்டை குவளை வைத்திருக்கிறவனும் சொல்கிறான். என் கடைக்கு டீ குடிக்க நான் எவனையும் அழைக்கவில்லை, வந்தால் என்னால் இப்படித்தான் நடத்த முடியும் என்று. அதற்கும்/அவனுக்கும் எதிராக சட்டம் இருக்கிறது என்பதால் அவன் குற்றவாளிங்கிறேள், மாமாக்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் இல்லாததால் அதை உரிமை என்கிறேள்.<br /><br />ஒரு செட்டியார் காய்கறிகடை திறந்து வைத்துவிட்டு 'பார்பனர்களுக்கு விற்கப்பது கிடையாது' என்று போர்டு போட்டால் அது புறக்கணிப்பு தானே சார். அதை அவர் விருப்பம், ஞாயம் என்பீரோ. தினமலருக்கு / துக்ளக்கிற்கு கடிதம் எழுதமாட்டீர்கள் ?<br /><br />பாய்களின் கறிக்கடைகளில் கூட 'பார்பனர்களுக்கு விற்பது கிடையாது' என்று போர்டுகள் கிடையாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80080466026398513422010-05-17T10:31:33.720+08:002010-05-17T10:31:33.720+08:00//வீட்டை யாருக்கு வாடகைக்கு விடுவது என்பது சட்டத்த...//வீட்டை யாருக்கு வாடகைக்கு விடுவது என்பது சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவேயில்லை. அது குற்றமே அல்ல.<br /><br />சாட்சியம் இருந்து நிரூபித்தாலும் கேசே கோர்ட்டுக்கு வரவியலாது. ஆனால் இரட்டைக் குவளைக் கொடுமை டீஃபால்ட்டாக சட்டப்படி குற்றம். இரண்டையும் எப்படி ஒரே தராசில் வைத்து பார்க்கவியலும்?//<br /><br />சட்டம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட இவை எல்லாம் குற்றம் என்ற வகைப்படுத்தலில் மட்டுமே குற்றம் என்பது இல்லை. சட்டத்தின் கண்களுக்கு சென்றவை செல்லாதவை என்று மட்டுமே சொல்ல முடியும்.<br />குற்றம் செய்தவன் என்றாலும் கோர்ட் நிருபனம் செய்தால் மட்டுமே குற்றவாளி என்று கருதப்படவேண்டும் என்பது நடைமுறை. ஆகவே 100 கொலை செய்தாலும், கொலையாளிக்கு நீதிமன்ற அறிவுறுத்தலின் படி தண்டனைக் கிடைத்தால் மட்டுமே அவன் குற்றவாளி என்பது சமூகவியல் சட்டம். இதனடிப்படையில் 100 கொலை செய்த ஒருவன் குற்றவாளி இல்லை என்று பொதுப் புத்திப் பார்வையால் சொல்லிவிட முடியுமா ? ஆனாலும் அப்படித்தானே சொல்கிறோம்.<br /><br />//மற்ற சாதியினர் கூடத்தான் வாடகைக்கு வருபவரின் சாதியை கேட்டு அதன்படித்தான் முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி ஒரு எதிர்வினையும் காணோமே. அதை பற்றி ஏன் இந்தக் கள்ள மௌனம்?//<br /><br />நான் பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன் 'செட்டியார் ஒன்லி', 'பிள்ளைமார் ஒன்லி' என்று எங்கும் போர்டுகள் பார்க்கவில்லை, நீங்கள் பார்த்திருந்தால் படம் பிடித்துப் போடுங்கள். நீங்கள் சொல்வது படி பார்த்தால் கூட சென்னையில் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் சொந்த வீட்டில் தான் வசிக்கிறார்கள், அல்லது அவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களின் வாடகைவீட்டில் வசிக்கிறார்கள் என்று சொல்லலாமா ?<br />நான் சென்னையில் 10 ஆண்டுகள் வாடகை வீடுகளில் தான் வசித்தேன். <br />'பிராமின்ஸ் ஒன்லி' போர்டு போடாதவர்களின் வீட்டில் தான் வசித்தேன். எனக்கு அவர்களின் சாதி தெரியாது. இங்கே நான் சொல்லி இருப்பது போர்டு மாட்டும் பார்பனர்கள் பற்றி தான். போர்டு மாட்டாத பார்பனர்கள் உட்பட பிற சாதியினர் குறித்து அல்ல. இதுல கள்ள மவுனமும் இல்லை ஒரு எழவும் இல்லை. சென்னையில் என் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் என்ன சாதி என்று தெரியாது, ஆனால் இந்து அல்ல என்பதை அவர் பெயரை வைத்துத் தெரிந்து கொண்டேன். வாடகை சரியாக வந்து சேருது, வீட்டையும் நன்றாக வைத்துக் கொள்கிறார்கள். எனக்கு அது போதும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com