tag:blogger.com,1999:blog-10267267.post4798387952049738891..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சிங்கப்பூர் கோவில்கள் தானே எழுந்தவையா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-10267267.post-46937958298540071332013-11-04T23:57:27.656+08:002013-11-04T23:57:27.656+08:00அருமையானதோர் பதிவுஅருமையானதோர் பதிவுDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5179827549581022772013-10-27T17:12:23.180+08:002013-10-27T17:12:23.180+08:00கோவி,
உங்களை வருத்தமடைய செய்ய வேண்டும் என்பதும் எ...கோவி,<br /><br />உங்களை வருத்தமடைய செய்ய வேண்டும் என்பதும் எனது நோக்கமல்ல.<br /><br />பிராம்மணர் என சொல்லிவிட்டாலே , பிராமணியத்துக்கு ஆதரவாளனா என நீங்க கேட்கும் முன்னர் ,இப்போ எனக்கு சொன்ன விளக்கத்தை எல்லாம் நீங்க நினைச்சுப்பார்த்திருக்கலாம் அவ்வ்!<br /><br />நான் பிராமணர்னுலாம் சொல்ல மாட்டேன் என்பதில் பெருமிதம் கொள்பவராயின், "சப்பைக்கட்டு" கட்டி பெரியார் குன்றக்குடியடிகள் காலில் விழுந்தார் என்று எல்லாம் சொல்வதன் மூலம் சொல்ல வருவது என்னனு தான் புரியவில்லை. குன்றக்குடி அடிகள் பார்ப்ப்பனர்ன்னு நினைச்சுக்கிட்டு நீங்க பேசுறிங்களோனு டவுட்டாகுது அவ்வ்!<br /><br /># //அவரின் ஆலய நுழைவு போராட்டம் பொருளதற்றதாகவே இருந்திருக்கும், அவர் போராட்டம் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைக்கானது, //<br /><br />உரிமை மறுக்கப்படும் பொழுது அவ்வாறு செய்தாரே ஒழிய காவடி தூக்கு,அலகு குத்துனு,தீமிதினு புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கவில்லை!<br /><br />இப்போ நீங்க சிதம்பரம் கோயிலில் போய் தேவாரம் பாடினால் அதுவேறு ,ஆனால் சிதம்பரம் கோயிலில் தள்ளி நின்னு கன்னத்துல போட்டுக்கிட்டு வந்தால் அது வேறு,அப்படி போட்டுக்கொள்வதே சிறப்புனு பெருமையாக பேசினால் அதெல்லாம் "பகுத்தறிவா"?<br /><br /># //நம்ம ஊரில் 'போட்டுக் கொடுப்பது, அல்லது அதற்கான முயற்சி' என்பதாகத்தான் நான் பார்க்கிறேன், //<br /><br />உங்களைக்கேள்விக்கேட்டுப்புட்டேன் என்பதால் உணர்ச்சிவசப்படுறிங்கனு நினைக்கிறேன்... உங்களுக்கு தெரியாம இன்னொருத்தருக்கிட்டே போய் சொன்னால் தான் அது நீங்க சொல்றாப்போல, ஆனால் சம்பந்தப்பட்டவங்கக்கிட்டேயே நேரடியாக விமர்சனத்தினை முன் வைப்பது "நேர்ப்பட பேசுவது" ஆகும்.<br /><br />#// ஏனெனில் என்னுடைய இஸ்லாமிய விமர்சனங்கள், என்னுடைய இருப்பு ஆகியவை வெளிப்படையானவையே,//<br /><br />இந்துத்வாக்களின் இஸ்லாமிய விமர்சனங்களும் ,அவர்களின் இருப்பும் கூட வெளிப்படையாக நடக்குது, அதனால் அவர்கள் எல்லாம் மதச்சார்பற்றவர்களாகிடுவாங்களா அவ்வ்!<br /><br />நாம ஒரு சாக்கடையில் இருந்துக்கொண்டு ,இன்னொருத்தன் சாக்கடையில் நிக்கிறான்னு சொன்னால் சிரிக்கவே செய்வார்கள்!<br /><br />கறையேறிவிட்டு ..சாக்கடைய பத்தி பேசினால் தான் சரியா வரும்..நான் கறையேறிட்டேன் ..நீங்க இன்னும் உள்ளப்போறிங்க அவ்வ்!<br /><br /># நீங்க ஏதோ சொல்லிட்டோம்னு அதை வலிந்து நிறுபிக்க மிகவும் முயற்சி செய்வது நன்றாகவே தெரிகிறது, சிங்கையில் கல்விக்கட்டணம் கூடுதல் என சொல்லிவிட்டு அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு மருத்துவக்கல்விக்கட்டணத்தினை ஒப்பிட்டு பேசும் போதே புரிந்தது அவ்வ்!<br /><br />நீங்க சொல்வது போலஒரு வேளைக்கல்விக்கட்டணம் கூடுதல் என்றால் குறைவான மக்கள் தொகைக்கொண்ட ஒரு நாட்டிலேயே அனைவருக்கும் மலிவாக கல்வி வழங்க முடியாத அரசை அல்லவா குறை சொல்லி இருக்க வேண்டும்(தமிழ்நாட்டில கக்கூஸ் இல்லை,சிங்கப்பூர பாருங்க சூப்பருனு சொல்லிப்பீங்க அவ்வ்), உண்மையில் அது அரசின் இயலாமை அல்லவா?<br /><br />இதெல்லாம் இல்லாமல் வழக்கம் போல நடுநிலையான பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன்!<br /><br />பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41354414328945610452013-10-27T12:09:16.052+08:002013-10-27T12:09:16.052+08:00வவ்வால்,
பகுத்தறிவு, கடவுள் மறுப்பு மற்று பார்பனி...வவ்வால்,<br /><br />பகுத்தறிவு, கடவுள் மறுப்பு மற்று பார்பனியம் குறித்து உங்கள் புரிதலை வைத்து அதன் தொடர்பில் பேசுபவர்களும் உங்கள் புரிதல்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்புடன் மறுமொழி இட்டுள்ளதாகவே நான் புரிந்து கொண்டுள்ளேன். என்னைப் பொருத்தளவில் பெரியார் என்ன சொன்னார் என்னபதைவிட எதற்காக சொன்னார் என்பதை பல்வேறு பதிவுகளில் வெளிப்படையாக எழுதியுள்ளேன், அதில் குறிப்பாக சுயமரியாதையை மூச்சாக கொண்ட பெரியார் குன்றக்குடியடிகளார் காலில் விழுந்தது, பெரியார் தம் தொண்டர்களை திருவிக மறைவின் போது திருமுறை ஓதச் சொன்னது உள்ளிட்டவை இருக்கிறது, பதிவில் தேடிப்பார்த்தால் அவைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும், கடவுள் மறுப்பு பெரியார் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியது முரண்பாடு என்பது போல் கூட உங்களால் விளங்கிக் கொண்டு பெரியாரின் செயலை கொச்சைப்படுத்திப்பார்க்க முடியும், பெரியார் ஒதுக்கப்பட்டவகளின் இறைநம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் அவரின் ஆலய நுழைவு போராட்டம் பொருளதற்றதாகவே இருந்திருக்கும், அவர் போராட்டம் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைக்கானது, நீங்கள் கூறுவது போல்பார்பனியம் ஒழிக்க கோவில்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் ஒற்றைப் புரிதலில் பெரியார் இருந்திருந்தால் அவருடைய போராட்டங்களினால் பார்பனர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குமிடையே கொலைகளைத் தான் விழுந்திருக்கும், வழிபாட்டு உரிமையைக்காக போராடுங்கள், குலதெய்வ வழிபாடு, இறைநம்பிக்கை ஆகியவற்றில் பார்பனர்களை முன்னிறுத்தாதீர்கள் என்று தான் அவர் கூறிவந்தார்.<br /><br />நீங்கள் திரும்ப திரும்ப வழியுறுத்திய ஒன்று 'இஸ்லாமியர்களை இனி எப்படி விமர்சனம் செய்வீர்கள் ?' என்கிற ஆதங்கம், அதன் நோக்கம் இதைப்பற்றி ஒன்றும் சொல்லிக் கொள்வதற்கு இல்லை, நம்ம ஊரில் 'போட்டுக் கொடுப்பது, அல்லது அதற்கான முயற்சி' என்பதாகத்தான் நான் பார்க்கிறேன், இதை பின்னூட்ட கருத்து என்ற பெயரில் வைத்துள்ளீர்கள், அதற்காக நான் வருத்தமடையவில்லை, ஏனெனில் என்னுடைய இஸ்லாமிய விமர்சனங்கள், என்னுடைய இருப்பு ஆகியவை வெளிப்படையானவையே, இதை நீங்கள் சொல்லித்தான் பிறர் அறிந்து கொள்ள ஒன்றும் இல்லை என்பதே எனது பதில். பெட்டர் லக் நெக்ஸ்டைம். உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்துவது எனக்கு நோக்கமில்லை, நேரடிக் குற்றச்சாட்டாக அரைகுறை புரிந்துணர்வுடன் நீங்கள் சொல்வது மற்றவர்களையும் புண்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளவும்.<br />கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65263601117026797972013-10-24T01:10:43.497+08:002013-10-24T01:10:43.497+08:00கோவி,
//பிராமணன் இருக்கும் வரை சூத்திரன் பட்டத்தை...கோவி,<br /><br />//பிராமணன் இருக்கும் வரை சூத்திரன் பட்டத்தை யார் சுமப்பது ? நீங்கள் சுமக்க தயாரா ? புரட்சி வெங்காயம் இருக்கா இல்லையான்னு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். //<br /><br />என்ன இப்படி ஆகிட்டிங்களே அவ்வ்! <br /><br />அப்போ பிராமணர்களை எல்லாம் கொல்ல சொல்றிங்களோ அவ்வ்!<br /><br />இப்போ பார்ப்பனர் சொல்லிட்டால் சூத்திர நிலை மாறிடுமா? மேலும் பார்ப்பணர் என்ற பெயர் நீங்க நினைக்கிறாப்போல இல்லைனும் சொல்லிட்டேன், அப்படி சொல்வதால் மட்டும் நிலை மாறிடுச்சா என்ன?<br /><br />உண்மையில் பிராமணியம் தான் நீக்கப்பட வேன்டும், அந்த மனிதர்கள் அல்ல, கோயில் ,கும்பிடுனு இருக்கும் வரையில் பிராமணியம்/பார்ப்பணியம் நீங்காது ,மனசிலாயி!<br /><br />அதனால் தான் பெரியார் கடவுள் மறுப்பு பிரச்சாரம்ம் செய்தார், நீங்க சிங்கையில் சிலாகிச்சு தீமிதிச்சு ,அலகுக்குத்தி கூழ் ஊத்திக்கிட்டு இருந்தால் என்னிக்கும் பெரியார் சொன்னது நடக்காது, சூத்திரன் நிலை தொடரவே செய்யும் அவ்வ்!<br /><br />கோயிலுக்கு போயிட்டு இருக்க வரையில் நீங்க சூத்திரன் பட்டத்தினை சுமந்து தான் ஆகனும் !!!<br /><br />//பிறநாடுகளை ஒப்பிட ஐஐடி படிப்புக்கும், காசு கொடுத்து இடம் வாங்கும் கல்லூரிப்படிப்பும் ஆகும் செலவும் பலமடங்கு குறைவே. //<br /><br />சிங்கப்பூர் கல்வி கட்டணம் பத்தி சொல்லும் போது சிங்கப்பூர் கடைநிலை ஊழியனுக்கு கல்வி கட்டணம் சாத்தியமில்லைனு சொல்றீங்க, இந்திய கல்விக்கட்டணம் பத்தி பேசினால் "பிறநாடுகளை ஒப்பிடனு" சர்வதேசம் பேச ஆரம்பிக்கிறிங்க" அவ்வ்.<br /><br />இந்தியாவிலும் கடைநிலை ஊழியனுக்கு கல்விக்கட்டணம் எட்டாக்கனி,இந்திய கடை நிலை ஊழியன் என்ன டாலரிலா சம்பாதிக்கிறான்,அவன் வாங்கும் 10,000 ரூ மாத சம்பளத்துக்கு எல்.கேஜி கூட சேர்க்க முடிவதில்லை ,எங்கே இருந்து பொறியியல் சேர்க்க?<br /><br />ஆமாம் தமிழ்நாட்டு நிலவரம் என்னனே தெரியாது போல தெரியுதே அவ்வ்!<br /><br />//எனவே குறைந்தகட்டணத்தில் படித்தவர்கள் பார்பனர்கள் என்று குறிபிட்டு சொல்ல ஒன்றும் இல்லை.//<br /><br />ஆஹா கண்ண மூடிக்கிட்டு கம்பு சுத்த ஆரம்ம்பிச்சுட்டாரே, நானும் பிராமணர்கள்/பார்ப்பணர்களை மட்டும் சொல்லவில்லை முற்பட்ட வகுப்பினர்னும் சேர்த்து தான் சொல்லி இருக்கேன், நீங்க எதுக்கு பாதிய மட்டும் சொல்லிக்கிட்டு.<br /><br />சிங்கப்பூர் கல்விக்கட்டணம் என நீங்கள் சொல்லி இருப்பது,<br /><br />//? இங்கு கல்லூரியில் ஒரு செமஸ்டர் கட்டணம் 25,000 வெள்ளிகள், ஆனால் அவர்கள் பெறும் மாத ஊதியம் 1500 வெள்ளிக்கு குறைவே,//<br /><br />இந்த சுட்டி சிங்கை தேசிய பல்கலையினது,<br /><br />https://share.nus.edu.sg/registrar/info/ug/UGTuitionCurrent.pdf<br /><br />டுயூஷன் ஃபீஸ்,<br />இதில் மருத்துவப்படிப்புக்கு ஆண்டுக்கு அதாவது இரு செமஸ்டருக்கு <br /><br /> சிட்டிசன் - 20,510 ,நிரந்தரக்குடிமகன் -25,850 வெள்ளினு போட்டிருக்கு.<br /><br />பொறியியலுக்கு ஆண்டுக்கு- 7,170 & 9,040 வெள்ளி(கலை கல்விக்கும் இதே தான்)<br /><br />கூட ஸ்பெஷம் டெர்ம் ஃபீஸ் என சுமார் 700-1000 வெள்ளி எல்லா படிப்புக்கும்னு போட்டிருக்கு.<br /><br />மேற் சொன்ன கட்டணம் எல்லா சிங்கை குடிமக்களுக்கும் கல்ல்வி மாநியத்தின் அடிப்படையில் சேர்ர எல்லாருக்கும் கொடுப்பாங்க போல.<br /><br />நீங்க படிக்க கட்டணம் அதிகம்னு நிருபிக்க மருத்துவ படிப்பை மட்டும் ஏன் எடுத்துக்கணும், மத்தப்படிப்புலாம் படிப்பில்லையா?<br /><br />இந்தியாவில் மருத்துவப்படிப்பு உயர்வகுப்பு வருவாய் பிரிவுக்கே கஷ்டம் தான்.<br /><br /># நீங்க சொன்னது என்னனு உங்களுக்கு தான் தெரியும் என்பதை ஏற்கிறேன்,ஆனால் பொதுவெளியில் வெளியிடும் போது படிப்பவர்கள் நீங்க நினைச்சாப்போலவே நினைக்க வேண்டும் என நினைப்பது என்ன நியாயம்னே தெரியலை.<br /><br />நீங்க மற்ற சமூக கேடுகள்,பத்திரிக்கையில் வரும் செய்தினு அல்லது ஏதேனும் இஸ்லாமியப்பதிவர் ஏதோ எழுதினாக்கூட விமர்சனம் செய்றிங்க,அப்போலாம் அது அவங்களுக்கு தான் உங்களை விட நல்லா புரியும்னு சும்மா இருந்திருக்கலாம் :-))<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7531182588989349652013-10-23T23:24:51.021+08:002013-10-23T23:24:51.021+08:00//எனக்குத் தெரிந்தவரையிலும் எந்த காலத்திலும் கண்ணன...//எனக்குத் தெரிந்தவரையிலும் எந்த காலத்திலும் கண்ணன் நீங்க சொல்ற பாதைக்கு போற ஆளா எனக்குத் தெரியல.//<br /><br />ஜோதிஜி, 100 விழுக்காடு வழிமொழிகிறேன்.<br /><br />:)<br /><br />நான் முற்போக்காளன் என்று தெரிந்தே என்னுடன் பழகும் பழுத்த ஆன்மீகவாதிகள் நிறைய உண்டு, நட்புவேறு கொள்கைவேறு என்பதை புரிந்து கொள்பவர்களுக்கு குழப்பம் இல்லை, நம்ம பலூன் மாமா கூட கொஞ்ச நாளைக்கு முன்பு தான் தெளிவடைந்தார். அதுக்கு முன் நிங்க எப்படி ஓம்காருடன் பழகமுடிகிறது ? என்று கேள்வி எழுப்பிவந்தார்.<br /><br />நம்ம ஊரில் அதிமுக தொண்டனும் திமுக தொண்டனும், கமல் ரசிகனும் ரஜினி ரசிகனும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்தால் அரிவாளால் வெட்டிக் கொள்வார்கள் என்று பலமாக நம்புகிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85358354405414359992013-10-23T23:20:34.046+08:002013-10-23T23:20:34.046+08:00//பொதுவாக கோவி கண்ணன் பதிவுகளில் இப்படிப்பட்ட கீழ்...//பொதுவாக கோவி கண்ணன் பதிவுகளில் இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்துக்கள் வாரா. எனவேதான் இவர்தான் எழுதினாரா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிற்து..//<br /><br />பதிவின் தொடர்பில் பின்னூட்டங்களை வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லி இருக்கலாம், எனது பதிவின் எழுத்துப் பிழைகளைப் போல் நீங்கள் அரைகுறையாக புரிந்து கொண்டு கருத்திட்டுள்ளீர்கள் கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47623805484969317022013-10-23T23:18:34.650+08:002013-10-23T23:18:34.650+08:00//பிளாகர் Alien A கூறியது...
கோவி,
நீங்கள் இந்த பத...//பிளாகர் Alien A கூறியது...<br />கோவி,<br />நீங்கள் இந்த பதிவை கொஞ்சம் சொதப்பி விட்ட மாதிரி தான் தெரிகிறது. வவ்வால் கூறியது போல, ஆன்மிக வாசம் கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. உங்களை பற்றி தெரியாத அல்லது முதல் முறையாக இந்த பதிவை படிப்பவர்கள், உங்களை வேறு விதமாக (நீங்கள் இருப்பதை விட) எண்ணிக்கொள்ள வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.//<br /><br />என்பதிவில் பெரியார் படமும் உண்டு, வள்ளலார் படமும் உண்டு, எனவே படிப்பவர்கள் என்னைப்பற்றி என்ன பிம்பம் கொள்கிறார்கள் என்பது பற்றி நான் நினைப்பது கிடையாது.<br /><br />//இந்த முயற்சிகளெல்லாம் எல்லா நாட்டிலும் எல்லா குடியேறிகளும் அவங்க அவங்க கடவுளுடைய கோவிலை கஷ்டப்பட்டு தான் நிறுவியிருப்பார்கள். (இந்தியாவில் வெள்ளையர்கள் கட்டாத கிறிஸ்தவ ஆலயங்களை விடவா?). இதில் சிங்கபூர் முன்னோர்களை மட்டும் ஸ்பெசலாக பாராட்ட என்ன இருக்கிறது.//<br /><br />மதம்பரப்ப பிறவழிபாட்டு தளங்களை இடித்துவிட்டு தன்னுடையதை கட்டிக் கொள்ளவதும், பிறநாடுகளின் தத்தமது பயன்பாட்டிற்காக பண்பாட்டின் தொடர்ச்சியாக வழிபாட்டு அமைப்பதும் ஒன்றா ? பல்வேறு பிரிவுகளாக கிடக்கும் சமூகத்தில் அனைவரும் பொதுவாக கூடும் இடம் என்பதற்காக கோவில்கள் ஏற்பட்டன, அதை பார்பனர்கள் பின்னர் தங்கள் சொந்த நலனுக்காக மாற்றிக் கொண்டார்கள், ஆனால் கோவில்களின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படும் இடங்களில் அவை இருப்பதால் நட்டம் யாருக்கும் இல்லை.<br /><br />என்னைப் பொருத்த அளவில் ஒருவரின் பூசை அறை நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் தகுதி எனக்கு இல்லை. ஆனால் பொது இடத்தில் எம்மதமே உயர்ந்தது பிற மதம் மூடநம்பிக்கை சார்ந்தது என்று முழக்கம் செயவர்களை விமர்சனம் செய்வேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74246413498365551732013-10-23T23:10:57.355+08:002013-10-23T23:10:57.355+08:00//பிராமணர்கள் எனப்பொதுவாக அழைக்கபடும் மக்களில் அவர...//பிராமணர்கள் எனப்பொதுவாக அழைக்கபடும் மக்களில் அவர்கள் செய்யும் வேலையைப்பொறுத்து பலப்பெயர்கள் உண்டு ,அது போல ஒரு பெயரே பார்ப்பணர் என்பதும்,எனவே அவ்வாறு சொல்லிவிடுவதில் பெரிய புரட்சி வெங்காயம் எதுவுமில்லை :-))//<br /><br />வவ்ஸ்,<br /><br />பிராமணன் இருக்கும் வரை சூத்திரன் பட்டத்தை யார் சுமப்பது ? நீங்கள் சுமக்க தயாரா ? புரட்சி வெங்காயம் இருக்கா இல்லையான்னு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். <br /><br />//# சிங்கப்பூரில் கல்விக்கட்டணம் அதிகம் என்கிறீர்கள் அதே போல ஊதியமும் அதிகம் தானே எனவே வருந்த என்ன இருக்கு?//<br /><br />நல்ல நகைச்சுவை, சிங்கப்பூர் வெள்ளி 1 க்கு ரூ 50 என்றால் ஒரு சிங்கப்பூரை 50 இந்தியாவுடன் ஒப்பிட முடியுமா ? அவ்வ்வ்வ்வ்<br />மேலே உள்ள பின்னூட்டத்தில் ஊதியம் பற்றி சொல்லி இருக்கிறேன்.<br /><br />//இந்தியாவில் இருந்து குறைவான கல்விக்கட்டணத்தில் படித்து வந்தவர்கள் என்றால் அது யார்? ஏன் முற்பட்ட வகுப்பினர், அல்லது பார்ப்பணர் என சொல்ல கூட மனசு இல்லை, இட ஒதுக்கீட்டில் படித்து வந்தவர்கள் என சொன்னால் அவர்கள் பார்ப்பணர்/முற்பட்ட வகுப்பு அல்லாதவர் என தெளிவான தோற்றம் கிடைக்குது//<br /><br />பிறநாடுகளை ஒப்பிட ஐஐடி படிப்புக்கும், காசு கொடுத்து இடம் வாங்கும் கல்லூரிப்படிப்பும் ஆகும் செலவும் பலமடங்கு குறைவே. இட ஒதுக்கீட்டில் வராத பிரிவில் பார்பணர்கள் மட்டுமே இருந்திருந்தால் நான் குறிப்பிட்டே சொல்லி இருப்பேன், இந்தியாவில் கிறித்துவ தலித்தும், இந்து தலித்தும் வேறு வேறு இட ஒதுகீட்டுபிரிவில் வருவார்கள், ஆனால் அவர்கள் நிலமையும் பொருளாதாரத்திலும் எந்த மாற்றமும் இருக்காது, தமிழக இஸ்லாமியர்களில் ஒரு பிரிவும் கூட OC பிரிவில் வருகிறது. செட்டியார்களில் சில பிரிவும் அவ்வாறே உள்ளது. எனவே குறைந்தகட்டணத்தில் படித்தவர்கள் பார்பனர்கள் என்று குறிபிட்டு சொல்ல ஒன்றும் இல்லை.<br /><br />//சென்னையில் குடியேறியவர்கள் என்ன கிள்ளிப்போட்டார்கள் என்பது இருக்கட்டும்,சிங்கையில் குடியேறியவர்கள் கிள்ளி போட்டது கோயில் கட்டி ,தீமிதிக்கிறது மட்டும் தானா அவ்வ்!//<br /><br />http://en.wikipedia.org/wiki/Indians_in_Singapore - பார்க்கவும்.<br /><br /><br />//தீமிதிக்கிறத எல்லாம் அருமையா பாராட்டிக்கிட்டு அப்புறமும் நீங்க பகுத்தறிவா பேசுவது எந்த வகையில் சேர்த்தினே தெரியலை, அதுலவும் இஸ்லாமிய மதத்தை வேற அபாரமா விமர்சனம் செய்வீங்க, இனிமேல் அப்படி செய்தால் சரியா வருமா?//<br /><br />நான் ஏற்கனவே எங்க ஊர்கோவில் திருவிழாவில் காவடி ஆடியதையும், எங்கள் வீட்டு தீபாவளி பலகாரம், பொங்கல், பூசை அறை வரை படம் போட்டு எழுதியுள்ளேன், நான் புதிதாக எதையும் இங்கு சொல்லவில்லை. <br /><br />//இப்படி தீமிதி, இட ஒதுக்கீடுல படிச்சவங்கனு பதிவ எழுதி இருக்கீங்களேனு தான், மற்றபடி உங்கள் கருத்து உங்களுக்கே!//<br /><br />நான் என்ன எழுதினேன் என்பதற்கு விளக்கம் கொடுத்தாகிவிட்டது, ஆனால் நீ இதைத்தான் எழுதி இருப்பாய் என்ற உங்கள் ஊகம், விளக்கம் இவற்றை எல்லாம் நான் 'ஆமாம்' போட ஒன்றுமே இல்லை, நான் என்ன எழுதினேன் என்பது உங்களை விட எனக்குத்தான் நன்றாகத் தெரியும் என்பதையாவது நம்புங்கள்.<br />கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82690143168751733842013-10-23T22:54:24.580+08:002013-10-23T22:54:24.580+08:00//ஆனால் நான் சொல்ல வருவது இதுதான், "கல்வி கற்...//ஆனால் நான் சொல்ல வருவது இதுதான், "கல்வி கற்ற முறைக்கும் எளிய மக்களை ஏளனமாக பார்ப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே!"<br /><br />:))) //<br /><br />கல்வி நமக்கு எப்படி கிடைத்தது, இங்கு சிங்கைவாழ் தமிழர்களில் பெரும்பாலோர் ஏன் கல்வியை தொடராமல் கடைநிலை ஊழியம் செய்கிறார்கள் என்று சிந்துத்துப் பார்க்கும் அறிவின்மையை சாடித்தான் நான் இட ஒதுக்கீடு ஒன்றை அங்கே குறிப்பிட்டேன்.<br /><br />நான் கல்லூரிப்படிப்பை முடிக்க செலவிட்டதைக் காட்டிலும் குழந்தைகளின் எல்கேஜி கட்டணங்கள் குறைவு. எனக்கு அது பெரும் சுமை அல்ல, ஆனால் கல்வி தகுதியின்றி கடைநிலை ஊழியம் செய்பவர்களால் தங்கள் குழந்தைகளை கல்லூரி வரை படிக்க வைக்க முடியாத நிலமை இங்குள்ளதுது. பணமாற்றில் சிங்கைபணம் இந்திய பணத்தைவிட 50 மடங்கு பெரிதாக தெரிவது நமக்கு தான், ஆனால் சிங்கை தமிழர்கள் எங்கு போய் பணமாற்றம் செய்யப் போகிறார்கள் ? இங்கு கல்லூரியில் ஒரு செமஸ்டர் கட்டணம் 25,000 வெள்ளிகள், ஆனால் அவர்கள் பெறும் மாத ஊதியம் 1500 வெள்ளிக்கு குறைவே, அதில் வீட்டுக்கடனுக்கு பாதிக்கு மேலும், சேமநிதிக்கு (சிபிஎப்) 25 விழுக்காடும் போக குடும்பச் செலவுக்கு சில நூறு வெள்ளிகளே மிஞ்சும். கல்லூரி படிப்பு வங்கிகடன் கொடுக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், சிறந்த கல்விக் கிடைக்கும் வாய்ப்புக்கான போட்டித் தன்மையில் கடைநிலை ஊழியம் செய்பவர்களின் குழந்தைகள் பகுதிநேரமாக வேலை செய்து கொண்டே கல்லூரிவரை படிப்பை தொடர்வதே மிகப் பெரிய அறைகூவல். அதன் பிறகு தான் வங்கிக்கடனெல்லாம். ஏற்கனவே குடும்பம் வயிற்றுக்கும் வாயிக்கும் சரியான வருமானத்துடன் இருக்கும் பொழுது அந்த சுமையைக் குறைக்கலாம் என்று பத்தாம் வகுப்பு வரை படிப்பைத் தொடராமல் வேலைக்கு செல்லத்துவங்குபவர்கள் பலர்.<br /><br />தமிழகத்தில் இருந்து இங்கு வேலைக்கு தகுதி கல்வி மற்றும் முன்னனுபவ அடைப்படையில் தான் எடுக்கிறார்கள், அவ்வாறு வருபவர்களுக்கு ஓரளவு போதிய வருமானம் இருக்கும், வேலைவாய்ப்பு குறைவான நாட்டில் இருந்து இங்கு வந்து நல்லவேலையில் நம்மால் இருக்க முடிகிற பொழுது இங்கேயே வாழ்பவர்களால் இதே வேலைவாய்ப்பை பெற முடியாமல் ஏன் கடைநிலை ஊழியம் செய்கிறார்கள், ஒருவேலை அவர்களுக்கு நாம படிச்ச மெத்த படிப்பு ஏறாதோ என்கிற உயர்வு மனப்பான்மையால் இங்குள்ள சிங்கைத்தமிழர்களை ஏளனமாகப் பார்க்கிறார்கள். ஒரு காலை இழந்தவர் யார் உதவியுடனோ ஜெய்பூர் காலை வைத்துக் கொண்டு அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவரின் இயலாமையைப் பார்த்து முடம் என்று சொல்லமாட்டார்கள் என்று தான் நாம் நம்புகிறோம், ஆனால் அவ்வாறு சிலர் சொல்லுவதைப் பார்க்கும் நம்மால் நீ எப்படி இருந்தாய், நீ காணும் அவனுக்க்கு அவ்வாறு உதவயாரும் இல்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68647665273444113352013-10-23T20:46:29.230+08:002013-10-23T20:46:29.230+08:00கோவி,
நீங்கள் இந்த பதிவை கொஞ்சம் சொதப்பி விட்ட மாத...கோவி,<br />நீங்கள் இந்த பதிவை கொஞ்சம் சொதப்பி விட்ட மாதிரி தான் தெரிகிறது. வவ்வால் கூறியது போல, ஆன்மிக வாசம் கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. உங்களை பற்றி தெரியாத அல்லது முதல் முறையாக இந்த பதிவை படிப்பவர்கள், உங்களை வேறு விதமாக (நீங்கள் இருப்பதை விட) எண்ணிக்கொள்ள வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />//இங்கு குடியேறியவர்கள் எத்தகைய முயற்சிகளையெல்லாம் எடுத்திருக்கக் கூடும் என்று நினைக்க அவர்களை பாராட்டவும், பெருமை கொள்ளவும் நேர்கிறது, //<br /><br />இந்த முயற்சிகளெல்லாம் எல்லா நாட்டிலும் எல்லா குடியேறிகளும் அவங்க அவங்க கடவுளுடைய கோவிலை கஷ்டப்பட்டு தான் நிறுவியிருப்பார்கள். (இந்தியாவில் வெள்ளையர்கள் கட்டாத கிறிஸ்தவ ஆலயங்களை விடவா?). இதில் சிங்கபூர் முன்னோர்களை மட்டும் ஸ்பெசலாக பாராட்ட என்ன இருக்கிறது. இதெல்லாம் தன் கடவுள் அங்கேயும் இருக்கவேண்டும் என்ற சுயலமேயன்றி வேறொன்றுமில்லை என்று தான் நான் நினைக்கிறேன். பொது நலத்தோடு ஏதாவது செய்திருந்தால் சொல்லுங்கள் எல்லோரும் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் கோவிலையோ, ஆலயத்தையோ மசூதியையோ கட்டியதற்காக நாம் பாராட்ட தேவையில்லை என்று நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27312476583855547572013-10-23T19:39:14.339+08:002013-10-23T19:39:14.339+08:00பகுத்தறிவிலிருந்து பக்திமார்க்கம் பயணமோ :-))
பகுத...பகுத்தறிவிலிருந்து பக்திமார்க்கம் பயணமோ :-))<br /><br />பகுத்து அறியும் போது பல உண்மைகள் தெரியும். அது சில சமயம் ஆன்மீகத்தை தேவையில்லை என்று விலகியிருக்கச் செய்யும். அது மீண்டும் தேவை என்று அருகே வர வைக்கும். மீண்டும் விலகச் செய்யும். இது அவரவர் வாழ்க்கையின் தனிப்பட்ட அனுபவங்கள் தரும் உண்மை. எனக்குத் தெரிந்தவரையிலும் எந்த காலத்திலும் கண்ணன் நீங்க சொல்ற பாதைக்கு போற ஆளா எனக்குத் தெரியல.<br /><br />அவருக்கு பில்டிங்கும் ஸ்ட்ராங்.<br />பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54015055855548138792013-10-23T19:36:01.304+08:002013-10-23T19:36:01.304+08:00வவ்வால்
புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் த...வவ்வால்<br /><br />புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதே இந்த ஆன்மீகம் தான். அதன் வடிவம் வெவ்வேறாக இருக்கலாம். அவரவருக்கு ஏதோ ஒரு திருப்தி கிடைப்பதை கண்ணன் குறிப்பிட்டுள்ளார். உடனே உங்க பாணியில் அவரை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டீங்க. நமக்கு ஒரு விசயம் பிடிக்கலைன்னா ஊரே இப்படித்தான் இருக்கனும்ன்னு சொல்றது எந்த ஊரூ நியாமோ? கண்ணன் என்ன தந்தை பெரியாரா? அவர் கொள்கை அவரோட. சிங்கப்பூர் தமிழர்களின் கொள்கை அவரவர்களுக்கு?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7335966411734962252013-10-23T16:53:14.508+08:002013-10-23T16:53:14.508+08:00கோவி,
//வவ்வாலு நான் என்றைக்குமே பார்பனர்களை பிரா...கோவி,<br /><br />//வவ்வாலு நான் என்றைக்குமே பார்பனர்களை பிராமணர்கள் என்று குறிப்பிட்டது கிடையாது. :) உங்களுக்கு பிராமணர்கள் வேண்டும் போல !<br />:)//<br /><br />பார்ப்பணர்கள் என சொல்லிவிடுதாலோ, பிராமணர்கள் ஆக இல்லாமல் போய்விடுவதில்லை எல்லாமே ஒன்று தான், ஆனால் பார்ப்பணியம்/பிராம்மணியத்தின் மீது பற்று இருக்கா என்று தான் பார்க்க வேண்டும், சமீபகாலமாக உங்கள் எழுத்தில் (சிந்தனையில்) ஆன்மீக வாசம் தூக்கலாக அடிக்க ஆரம்பித்துவிட்டது, பகுத்தறிவிலிருந்து பக்திமார்க்கம் பயணமோ :-))<br /><br />உங்கள் தகவலுக்காக, <br /><br />பார்ப்பணர்கள் என்பவர்கள், பஞ்சாங்கம், ஜாதகம் பார்க்கும் வேலை செய்யும்(காலம் கணிப்பவர்கள்- காலத்தினை முன்னரே பார்ப்பவர்கள்= பார்ப்பணர்) பிராமனர்கள் அவ்வளவே.<br /><br />பிராமணர்கள் எனப்பொதுவாக அழைக்கபடும் மக்களில் அவர்கள் செய்யும் வேலையைப்பொறுத்து பலப்பெயர்கள் உண்டு ,அது போல ஒரு பெயரே பார்ப்பணர் என்பதும்,எனவே அவ்வாறு சொல்லிவிடுவதில் பெரிய புரட்சி வெங்காயம் எதுவுமில்லை :-))<br /><br /># சிங்கப்பூரில் கல்விக்கட்டணம் அதிகம் என்கிறீர்கள் அதே போல ஊதியமும் அதிகம் தானே எனவே வருந்த என்ன இருக்கு?<br /><br />இந்தியாவில் இருந்து குறைவான கல்விக்கட்டணத்தில் படித்து வந்தவர்கள் என்றால் அது யார்? ஏன் முற்பட்ட வகுப்பினர், அல்லது பார்ப்பணர் என சொல்ல கூட மனசு இல்லை, இட ஒதுக்கீட்டில் படித்து வந்தவர்கள் என சொன்னால் அவர்கள் பார்ப்பணர்/முற்பட்ட வகுப்பு அல்லாதவர் என தெளிவான தோற்றம் கிடைக்குது.<br /><br />குறைவான கல்விக்கட்டணம் என்பது ,இங்குள்ள குறைவான ஊதியம் பொறுத்து அதிகமான ஒன்றே. மேலும் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தாலும் வருமான வரி சான்று குறைவாக கொடுக்கவில்லை எனில் வழக்கமான கல்விக்கட்டணமே, எனவே இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களும் "நீங்க சொன்ன குறைவான கட்டணத்தில் கல்விகற்றவர்களாக இருக்க வாய்ப்புண்டு.<br /><br />எனவே நீங்க யாரை சொன்னீர்கள் என்பதே தெளிவில்லாமல் தான் இதுவரையில் இருக்கு, ஒரு வேளை உங்களுக்கு மேட்டுக்குடியினரை நேரடியாக சொல்ல மனசு வரலையோ என்னவோ :-))<br /><br /><br />உங்களுக்கும் பார்ப்பணர்கள் தேவைப்பட்டிருக்கும் போல :-))<br />------------<br /><br />சென்னையில் குடியேறியவர்கள் என்ன கிள்ளிப்போட்டார்கள் என்பது இருக்கட்டும்,சிங்கையில் குடியேறியவர்கள் கிள்ளி போட்டது கோயில் கட்டி ,தீமிதிக்கிறது மட்டும் தானா அவ்வ்!<br /><br />தீமிதிக்கிறத எல்லாம் அருமையா பாராட்டிக்கிட்டு அப்புறமும் நீங்க பகுத்தறிவா பேசுவது எந்த வகையில் சேர்த்தினே தெரியலை, அதுலவும் இஸ்லாமிய மதத்தை வேற அபாரமா விமர்சனம் செய்வீங்க, இனிமேல் அப்படி செய்தால் சரியா வருமா?<br /><br /># இந்தப்பதிவில் உங்களோடு விவாதம் செய்வதே உங்களை பகுத்தறிவுவாதிப்போல முற்போக்காக காட்டிக்கொண்டு வந்தவர் , இப்படி தீமிதி, இட ஒதுக்கீடுல படிச்சவங்கனு பதிவ எழுதி இருக்கீங்களேனு தான், மற்றபடி உங்கள் கருத்து உங்களுக்கே!<br /><br />வருங்காலத்தில் நிறைய ஆன்மீக கருத்து பிரசங்கங்கள் உங்களிடம் இருந்து வரும்னு நினைக்கிறேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46642053816971578802013-10-23T13:30:35.641+08:002013-10-23T13:30:35.641+08:00//சிங்கப்பூரில் பொறியில் படிக்க எவ்வளவு செலவு ஆகும...//சிங்கப்பூரில் பொறியில் படிக்க எவ்வளவு செலவு ஆகும், சிங்கப்பூரில் வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்கள் எத்தனை ஆண்டுகள் அதை கட்டுகிறார்கள் என்று ஒப்பிட்டுபார்த்துவிட்டு நீங்கள் கூறலாம். எல்லா படிப்பும் ஒண்ணு தான் என்றால் ஒரு கல்லூரியின் மதிப்பு எதை வைத்து சொல்லப்படுகிறது, குறிப்பிட்ட கல்லூரியில் சேர பலரும் விரும்புவது ஏன் என்று எனக்கு ஒண்ணும் விளங்கவில்லை. :) ///<br /><br />இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன் <br /><br />நான் கல்வி முறைகளை ஒப்பிடவில்லை, என் கேள்வி இட ஓதிக்கீட்டிற்கும் மக்களிடம் பழகுவதற்கும் என்ன தொடர்பு என்பதே?<br /><br />எத்தனையோ மேலை நாடுகளில் எந்த இட ஓதிக்கீடும் இன்றி அதிக பணம் செலவழித்து படித்தவர்கள்தான் இன்றும் கூட இன/மத மற்றும் பொருளாதார வேறுபாடுகளை அதிகமாக பாவிக்கிறார்கள் இது உங்களுக்கும் தெரியும்.<br /><br />ஆனாலும் இது சம்பந்தமாக ஒரு சிறு விளக்கம்:<br /><br />ஒரு வளர்ந்த நாட்டின் குடிமகன் சந்திக்கும் கல்வி/பொருளாதார ரீதியான போட்டிகளை ஒரு வளரும் நாட்டின் குடிமகன் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை,<br />ஆனால் வளரும் நாட்டிற்கே உரிய சவால்களை அவன் சந்தித்து இருப்பான். <br /><br />என் கேள்வி இன்னும் பதிலளிக்கப் படாமலேயே உள்ளது ;))) <br /><br />பரவாயில்லை இது ஏதோ தவறி வந்த வாக்கியமாக எடுத்துகொள்கிறேன்.<br /><br />காரணம் இட ஒதிக்கீடு பற்றிய உங்களின் இந்த கட்டுரையில்<br />(http://govikannan.blogspot.sg/2007/05/blog-post_30.html) உங்களுடைய நிலையை சற்று அனுமானிக்க முடிகிறது. <br /><br />ஆனால் நான் சொல்ல வருவது இதுதான், "கல்வி கற்ற முறைக்கும் எளிய மக்களை ஏளனமாக பார்ப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே!"<br /><br />:))) <br /><br />இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66256987404212287182013-10-23T13:17:57.860+08:002013-10-23T13:17:57.860+08:00//கல்வி கற்பதற்கான இருதரப்பினருக்கான (சிங்கை தமிழர...//கல்வி கற்பதற்கான இருதரப்பினருக்கான (சிங்கை தமிழர்கள். மற்றும் அண்மையில் குடியேறிய இந்தியர்கள்) வாய்ப்பு என்ற அளவில் இதனை குறிப்பிட வேண்டியதாயிற்று//<br /><br />மீண்டும் தாங்கள் அதையேதான் கூறுகிறீர்கள் என்னுடைய வாதம் இட ஓதிக்கீட்டிற்கும் இங்கு வந்து ஏளனமாய் பார்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான்<br /><br />//சிங்கப்பூரில் இலவச கல்வியும் இல்லை, இட ஒதுக்கீடும் இல்லை, இந்தியாவில் குறைந்த கட்டணக் கல்வி என்று நான் குறிப்பிட்டதும் கூட இட ஒதுக்கீட்டில் படிக்காதவர்களையும் சேர்த்தே குறிப்பிடத்தான், எனவே இட ஒதுக்கீட்டை வன்மாக இழுக்கிறேன் என்கிற உங்கள் அனுமானத்தை நான் புறக்கணிக்கிறேன். //<br /><br />நான் சிங்கை கல்வியையும் இந்திய கல்வியையும் ஒப்பிடவில்லை <br />நான் கேட்கும் கேள்வி மிக எளிமையானது, <br /><br />இங்கு வந்து அடுத்தவர்களுடன் திமிருடன் பழகுவதற்கும் இட ஓதிக்கீட்டிற்கும் என்ன தொடர்பு என்பதே?<br /><br /><br />//நானும் இட ஒதுக்கீட்டு கல்வி கற்று வந்தவன் என்ற அளவில் இங்குள்ளவர்களுக்கு கல்வி வாய்ப்பு எமக்கு வாய்தது போல் வாய்க்கவில்லை என்கிற புரிதல் எனக்கு உண்டு, எனவே கழிவறையில் வேலை செய்பவர்கள் எவராக இருந்தாலும் ஏளனமாகப் பார்பது இல்லை, தோழமையுடன் தான் அவர்களுடன் பழகுகிறேன்.//<br /><br />இது முற்றிலும் உங்களுக்கே உங்களுக்கான புரிதல், <br />இங்கு இந்திய சமுதாயத்தைச் சார்ந்த நன்கு கல்வி கற்ற நடுத்தர வயது(30-40) தலைமுறையும் உள்ளது, அந்த வயதில் உள்ளவர்கள் அடிமட்டத்தொழில் செய்வது அவர்களின் தெரிவே தவிர வாய்ப்பு மறுக்கப்பட்டோ அல்லது வாய்ப்பு இல்லாமலோ அல்ல <br /><br />நீங்கள் சொல்வது 30 வருடத்திற்கு முன் கல்வி கற்றிருக்க வேண்டிய முதியவர்கள்(50 வயது மற்றும் அதற்கு மேல்)<br /><br />இது மலாய் மற்றும் சீன மக்களுக்கும் பொருந்தும், எத்தனையோ சீன முதியவர்கள் பூட் கோர்ட் - ல் துப்புரவு பணியாளர்களாய் இருகிறார்கள்<br /><br />காரணம் 30 வருடங்களுக்கு முன் இங்கு சரியான கல்வி வாய்ப்புகள் இல்லை என்பதே.இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89810712827898508622013-10-23T06:29:33.131+08:002013-10-23T06:29:33.131+08:00குலசேகரன்,
நன்றி. ஒரு சின்னவிஷயம். பிஜித்தீவு பயண...குலசேகரன்,<br /><br />நன்றி. ஒரு சின்னவிஷயம். பிஜித்தீவு பயணக்கட்டுரைகள் இல்லை. அங்கே ஆறு ஆண்டுகள் குப்பை கொட்டி அனுமானித்தவைகளே:-)<br /><br />சந்தியா பதிப்பகத்தின் வெளியீடு.<br /><br />ஜோதிஜி,<br /><br />குலசேகரன் உங்களுக்குப் பதில் சொல்லிட்டார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31418829035684064712013-10-23T00:48:26.321+08:002013-10-23T00:48:26.321+08:00ஆசிரியை பிஜித் தீவு பயண அனுபவத்தை நூலாகப்போட்டிருக...ஆசிரியை பிஜித் தீவு பயண அனுபவத்தை நூலாகப்போட்டிருக்கிறார். நியூ செஞ்சுரி போட்டதாக புத்தகக்கண்காட்சியில் பார்த்ததாக நினைவு. பிஜீத்தீவு மக்களுக்கு தன் தாய் நாட்டை தாய் மொழியையும் இழந்தோம் என்ற பரிதாப ஏக்கம் மிகையாகவுண்டு. அதற்குப்பல காரணங்கள் உண்டு. அவை இங்கே தேவையில்லை. சில: அடிமைகளாக இழுத்துச்செல்லப்பட்டார்கள்; ஒபபந்தத் தொழிலாளர்களாக குழந்தை குட்டிகளோடு கப்பல் ஏற்றப்பட்டார்கள்; ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டார்கள். அவர்கள பட்ட அடிமை வாழ்க்கைத் துயரங்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களைத்தவிர வேறெவரும் பட்டதாக யான் படிக்கவில்லை. வெகு தூரம் நிலமே தெரியா கடல் வெளி. கற்பழிக்கப்பட்டு தமிழ்ப்பெண்கள் கடலில் எறியப்பட்டார்கள். திரும்பி வரமுடியாமல் ஒப்பந்தம் தடுத்துவிட்டது. இவற்றைப் பற்றி பாரதியார் எழுதிய துயரமான பாடலைப்படிக்கவும். இன்னும் எவ்வளவோ சொல்லலாம். <br /><br />கோவி கண்ணன் கட்டுரையில் பல எழுத்துப்பிழைகள். இவர்தான் எழுதினாரா அல்லது வேறுநபரா?<br /><br />இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் துப்புரவு தொழிலில் ஈடுபடுகிறார்கள்; அதைக்கண்டு நம்மவர்களே முகஞ்சுழிக்கிறார்கள் என்பதில் இருமனோ விஹாரங்கள் வெளிப்படுகின்றன:<br /><br />1. இட ஒதுக்கீட்டில் படிக்காதவர்கள் உயர்ந்தோர்.<br /><br />2. துப்புரவுத் தொழில் இழிவானது.<br /><br />பொதுவாக கோவி கண்ணன் பதிவுகளில் இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்துக்கள் வாரா. எனவேதான் இவர்தான் எழுதினாரா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிற்து..<br /><br />தமிழர்களின் சாதனை எங்கு சென்றாலும் கோயில்களையும் மசூதிகளையும் தேவாலயங்களையும் கட்டுவதாகவும், அவை வருந்தலைமுறைகளுக்கு தரும் கொடையாகவும் இறும்பூதெய்கிறார். அதே வேளையில் சீனர்களைப்போல முன்னேறவில்லையே என்ற கழிவிரக்கத்தையும் வெளிப்ப்டுத்துகிறார். நகைமுரண்! <br /><br />மிகையான மதவுணர்வு முன்னேற்றத்தைத் தடுக்கும். மூளைச்சோம்பேறித்தனத்தையும் பயத்தையும் உருவாக்கும். Religious feelings should also be rational. They can be. சிங்கையில் தீமிதிவிழாவும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கலும் மூடத்தனமான வகை மதமே.<br /><br />சிங்கையில் பிறகாலத்தில் ஒரு பெரியார் தோன்றுவார் என நம்பலாம்.<br /><br />- குலசேகரன்.குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3729574464225324482013-10-23T00:14:35.565+08:002013-10-23T00:14:35.565+08:00//நான் சொல்கிறேன் இன்ஜினியரிங் படித்துவிட்டு இங்கு...//நான் சொல்கிறேன் இன்ஜினியரிங் படித்துவிட்டு இங்கு வரும் ஆட்கள் தான் அதிகம் எத்தனை அரசு கல்லூரிகள் அய்யா இருக்கிறது இங்கு வரும் அனைவருக்கும் பொறியியலை இலவசமாக/இட ஓதிக்கீட்டில் சொல்லிக் கொடுக்க?//<br /><br />சிங்கப்பூரில் பொறியில் படிக்க எவ்வளவு செலவு ஆகும், சிங்கப்பூரில் வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்கள் எத்தனை ஆண்டுகள் அதை கட்டுகிறார்கள் என்று ஒப்பிட்டுபார்த்துவிட்டு நீங்கள் கூறலாம். எல்லா படிப்பும் ஒண்ணு தான் என்றால் ஒரு கல்லூரியின் மதிப்பு எதை வைத்து சொல்லப்படுகிறது, குறிப்பிட்ட கல்லூரியில் சேர பலரும் விரும்புவது ஏன் என்று எனக்கு ஒண்ணும் விளங்கவில்லை. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89460226639694891492013-10-23T00:10:41.537+08:002013-10-23T00:10:41.537+08:00//பிராமணர்கள் எல்லாம் அப்படி நினைக்காத நல்லவங்கனு ...//பிராமணர்கள் எல்லாம் அப்படி நினைக்காத நல்லவங்கனு சொல்ல வர்ராரா ஒன்னியுமே புரியலை அவ்வ்!//<br /><br />வவ்வாலு நான் என்றைக்குமே பார்பனர்களை பிராமணர்கள் என்று குறிப்பிட்டது கிடையாது. :) உங்களுக்கு பிராமணர்கள் வேண்டும் போல !<br />:)<br /><br />மேலே உள்ள பின்னூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9140117603462794582013-10-23T00:08:36.795+08:002013-10-23T00:08:36.795+08:00// ஏன் இடஓதுக்கீட்டையும் இலவச கல்வியையும் இழுக்கிற...// ஏன் இடஓதுக்கீட்டையும் இலவச கல்வியையும் இழுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி?//<br /><br />கல்வி கற்பதற்கான இருதரப்பினருக்கான (சிங்கை தமிழர்கள். மற்றும் அண்மையில் குடியேறிய இந்தியர்கள்) வாய்ப்பு என்ற அளவில் இதனை குறிப்பிட வேண்டியதாயிற்று, சிங்கப்பூரில் இலவச கல்வியும் இல்லை, இட ஒதுக்கீடும் இல்லை, இந்தியாவில் குறைந்த கட்டணக் கல்வி என்று நான் குறிப்பிட்டதும் கூட இட ஒதுக்கீட்டில் படிக்காதவர்களையும் சேர்த்தே குறிப்பிடத்தான், எனவே இட ஒதுக்கீட்டை வன்மாக இழுக்கிறேன் என்கிற உங்கள் அனுமானத்தை நான் புறக்கணிக்கிறேன். நானும் இட ஒதுக்கீட்டு கல்வி கற்று வந்தவன் என்ற அளவில் இங்குள்ளவர்களுக்கு கல்வி வாய்ப்பு எமக்கு வாய்தது போல் வாய்க்கவில்லை என்கிற புரிதல் எனக்கு உண்டு, எனவே கழிவறையில் வேலை செய்பவர்கள் எவராக இருந்தாலும் ஏளனமாகப் பார்பது இல்லை, தோழமையுடன் தான் அவர்களுடன் பழகுகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21033797049585726962013-10-22T23:03:27.611+08:002013-10-22T23:03:27.611+08:00தாய்மண்ணைச் சேர்ந்தவர்களென்றால் அங்கே உள்ள ஃபிஜி இ...தாய்மண்ணைச் சேர்ந்தவர்களென்றால் அங்கே உள்ள ஃபிஜி இந்தியர்களுக்கு ஏகப்பட்ட மதிப்பு.<br /><br />டீச்சர் இது குறித்து ஏதும் நீங்க எழுதியிருக்கீங்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50217471229043710752013-10-22T23:02:28.427+08:002013-10-22T23:02:28.427+08:00இரவு பறவை
என்ன இப்படி கேட்டுட்டீங்க.
வளர்த்தவர...இரவு பறவை<br /><br />என்ன இப்படி கேட்டுட்டீங்க. <br /><br />வளர்த்தவர்களையும் வாழ்த்தியவர்களையும் மறப்பது தகுமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4135688864089769172013-10-22T20:52:28.681+08:002013-10-22T20:52:28.681+08:00@ஜோதிஜி திருப்பூர்
நல்ல இருக்கேங்க! நீங்க நல்ல இரு...@ஜோதிஜி திருப்பூர்<br />நல்ல இருக்கேங்க! நீங்க நல்ல இருக்கீங்களா? ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி!! :)))இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22787251349393749132013-10-22T15:57:37.529+08:002013-10-22T15:57:37.529+08:00ஆமாங்க! அதே இரவுப்பறவை தான் :))))
சொகமா இருக்கீக...ஆமாங்க! அதே இரவுப்பறவை தான் :))))<br /><br /><br />சொகமா இருக்கீகளா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73300994936454564602013-10-22T13:27:12.520+08:002013-10-22T13:27:12.520+08:00முதல் இரண்டு பத்தி அருமையாக இருக்கு.முதல் இரண்டு பத்தி அருமையாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com