பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2014

பாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் !

செத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழுது தான் நாமும் அதுபற்றி பேசமுடியும். பாலு மகேந்திரா மறைவை ஒட்டி அவரது அருமை பெருமைகளை கூறி, கூடவே பாலா போன்ற சிறந்த இயக்குனர்களை உருவாக்கி இருக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் எவரும் பாலுமகேந்திராவின் பெண்கள் மீதான பித்தை இலைமறை காய்மறையாக மட்டுமே கூறிவிட்டு வானளவில் புகழ்கிறார்கள். 

சமுக இணைய தளங்கள் இல்லாத பொழுது பொது மக்களின் கருத்து இவை என்று அரசியல்வாதிகளையோ, திரைகலைஞர்களையோ, சாமியார்களையோ, மதவாதிகளையோ, சாதிவெறியர்களையோ போய் சேராது. ஊடகங்கள் பெரிதாக எதையும் கண்டிக்காது, தகவல் என்ற அடிப்படையில் தான் எதையும் அவர்களால் எழுத முடியும். ஆனால் தற்பொழுது நிலைமையே மாறிவிட்டது, இணையத்தை / சமூக இணைய தளங்களை பயன்படுத்துபவர்கள் சில விழுக்காட்டினர்கள் என்றாலும் அவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்களிடமும் அவர்களால் ஒன்றை விவாதம் செய்து பொதுவான பார்வையை மாற்றிவிட முடிகிறது. ஒரு எழுத்தாளரின் கருத்து கதைவழியாக பல வாசகர்களை அடைவதைப் போல் சமூக இணையத் தளங்களில் எழுதுபவர்கள் வெளியில் பலரிடமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எனவே சமூக இணையதளங்கள் என்பவை சக்திமிக்க ஊடகங்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து தான் அரசியல்வாதிகள் உள்ளிட்ட போலி சாமியார் உள்பட அனைவரும் அதன் வழியாகவும் கடைவிரித்திருக்கிறார்கள். 

பாலுமகேந்திரா என்கிற தனிப்பட்ட மனிதன் எப்படி திரைக்கு வெளியே நடந்து கொண்டார் என்பது எனக்கு முக்கியம் இல்லை, அவரது படைப்புகளை தான் நான் ரசிக்கிறேன், புகழ்கிறேன் என்று உங்களால் ஒதுங்க முடிந்தால் தனது படைப்புகளின் மூலம் கிடைத்த புகழ் செல்வாக்கு ஆகியவற்றை பெண்கள் மீது வீசும் வலையாகப் பயன்படுத்தி கொண்டதற்கு நீங்களும் தான் பொறுப்பாகிறீர்கள். நிறை குறை அற்றவர் யார் ? குறைகளைப் பேசவேண்டாமே ? என்று எல்லோரும் மவுனித்தால் பிறகு செத்தால் கூட நம்மை தூற்ற ஆட்கள் உண்டு என்று தவறு செய்யும் முன் எவரும் உணரவே மாட்டார்கள்,

ஒருவரின் மரணித்தின் பிறகு அவரின் இழிசெயல்களை தூற்றுவதன் மூலம் தான், அவரைப் போன்று தவறு செய்ய துணிபவர்களுக்கு நாம் அதை நினைத்துப் பார்த்து தவிர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

பாலுமகேந்திராவால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள்  'என்மகள் ஷோபா' என்று தொடராக ராணி வார இதழில் ஒரு கண்ணீர் காவியமாகவே அதனை எழுதி, சில ஆண்டுகளில் சோகம் தாங்காமல் தற்கொலையும் செய்து கொண்டார் ஷோபாவின் தாயார். ஷோபாவின் மறைவிற்கு பிறகும் பல நடிகைகளின் தொடர்புகள் இருப்பதையும் செய்தி இதழ்கள் எழுதிவந்தன. நடிக்க வரும் பெண்களின் இயலாமையை படுக்கைக்கு பகடையாக பயன்படுத்திக் கொண்டதை அவருடைய தொழில் திறமைகள் அனைத்திற்குமான சன்மானமாக எடுத்து கொண்டு போற்றப்படவேண்டும் ?

தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று இவர் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஒருவர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது, ஆனால் ஏமாற்றி, இயலாமையைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடி அவர்களின் வாழ்க்கையையே கெடுத்தவர் என்ற முறையில் நம்மால் விமர்சனம் செய்யாமல் தூற்றாமல் இருக்க முடியவில்லை. இந்த துறையில் இவரைப் பொன்ற தவறான நபர்களிடம் திறமை இருக்கும் பொழுது பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.  நாலு இயக்குனர்களை உருவாக்கியது சாதனை என்றால், நான்கு நடிகைகளிடம் நடந்து கொண்டவிததை தூற்றவும் தான் வேண்டும். இவரிடம் வாய்ப்பு கேட்க வந்து எத்தனை பெண்கள் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் பெண்மையையும் இழந்து சென்றார்களோ.

திறமையாளனின் பொறுக்கித்தனங்கள் சகித்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற பொதுப் புத்தியில் எனக்கு உடன்பாடு இல்லை.

சிறுவயதில் 'என்மகள் ஷோபா' தொடரை படித்தவன் என்ற முறையில் பாலுமகேந்திராவின் மரணம் என்னைப் பொருத்த அளவில் இன்னும் சில மவுனிகாக்கள் வலையில் வீழும் முன் 'ஒழிஞ்சான்'

மேலும் துப்பியவர்களின் இணைப்பு :
சோபாவை கொன்றது ஏன்? ஒலகப் படைப்பாளி பாலு சேர். 

14 பிப்ரவரி, 2014

பாராளுமன்ற வேட்பாளராக பிரபல பதிவர் !

இந்த இதழ் ஜூவியில் திமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் பெயரில் பிரபல வலைப்பதிவரும், திமுக செயற்குழு உறுப்பினருமான புதுகை அப்துல்லாவின் பெயரும் படமும் இடம் பெற்றுள்ளது. ஜூவி ஓரளவு நம்பிக்கையான செய்திகளைத் தருவதால் கிட்டதட்ட தகவல் 90 விழுக்காடு திமுக தரப்பைப் விசாரித்துவிட்டு எழுதியதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன், தம்பி புதுகை அப்துல்லாவும் 'தலைவர்' அத்தகைய வாய்பை தனக்கு அளித்தால் மகிழ்ச்சி என்று கூகுள் ப்ளஸிலும், முகநூலிலும் கூறியுள்ளார். 

எனக்கு தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்தவித ஆர்வமோ, அனுதாபமோ கிடையாது, இருந்தாலும் நடுநிலையாளர்கள் ஒரு கட்சியில் இருக்கும் பொழுது நல்லதை எடுத்துச் சொல்லி நடைமுறைப்படுத்த முயற்சி செய்வார்கள் என்ற வகையில் தம்பி அப்துல்லாவுக்கு எனதும் மற்றும் எண்ணற்ற கட்சி சாராத வலைப்பதிவர்களின் ஆதரவு எப்போதும் உண்டு.

நடைபெறுப் போகும் நாராளுமன்ற தேர்தலில் கட்சிகளின் கூட்டணிகள் குறித்து இறுதி விவரம் தெரியாத நிலையில், அப்துல்லாவிற்கு 'வெற்றிக்கான' வாழ்த்து என்று வெறும் வாயல் வாழ்த்துவதைவிட, இப்படியான 'வேட்பாளர்' அதுவும் திருச்சி போன்ற பெரிய தொகுதியில் நிற்கும் ஒரு வாய்ப்பு அவரை பலருக்கும் ஏன் தமிழ் நாட்டிற்கே பல்வேறு ஊடகங்களின் வழியாக அறிமுகம் செய்யக் கிடைக்கும் நல்வாய்பாக அமையும் என்பதாலும், எதிர்காலத்தில் நல்லதொரு அரசியல்வாதியாக உருவாகி தமிழ்நாட்டிற்கும், பிறந்த ஊருக்கும் நல்லது செய்து பெருமை சேர்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, ஏனென்றால் பல தொகுதிகளில் எந்த கட்சி நிற்கிறது என்பதைவிட யார் வேட்பாளர் என்று பார்த்தும், தனியாக நிற்பவர்களையும் (சுயேட்சை) வெற்றிபெற வைக்கிறார்கள் மக்கள்.  நான் அறிந்தவரையில் தம்பி புதுகை அப்புதுல்லா நேர்மையான, அன்பானவர், பண்பாளர் குறிப்பாக மதச்சார்பற்றவர் என்ற முறையில் அவரைப் போன்றவர்கள் அரசியலுக்குள் வருவது மிகவும் தேவையான ஒன்றே.

தம்பி அப்துல்லா எல்லா தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று, தமிழகம் தழுவிய செல்வாக்கு பெற்று மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.  

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்