பின்பற்றுபவர்கள்

10 நவம்பர், 2013

சந்தானம் நடிக்கும் படங்களில் 'சரக்கு' இருக்கு !

இன்னிக்கு (தட்ஸ் தமிழ்) செய்திகளில் "ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்" என்ற செய்தியும் இடம் பெற்றிருந்தது.

அதைப் படித்துக் கொண்டு வரும் பொழுது வாசகர் 'கருத்தில்' படுமோசமாக ராதிகாவின் திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி விமர்சித்திருந்தனர். ஒரு பெண் திருமணம் ஆகாமலேயே இருந்தால் அவளையும் சமூகம் நல்ல பார்வையில் / விமர்சனத்தில் வைப்பதில்லை, விதவைகளையும் நிம்மதியாக இருக்கவிடுவதில்லை, மறுமணம் செய்துக் கொள்பவர்களையும் பாராட்டாவிட்டாலும் தூற்றாமல் இருப்பதில்லை. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தால் அவளுடைய தொழிலைவிட கேவலமாக அவளை சொல்லித் தூற்ற ஏதேனும் உண்டா என்று ஆராய்ச்சி நடத்தும் நம் சமுகம். ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை (ஆண்) சமூகம் முடிவு செய்வதும், தீர்ப்பு சொல்வதுமாக இருக்கும் வரை பெண் விடுதலை பெற்றுவிற்றாள் என்று சொல்ல எதுவும் இல்லை. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது கூட சமூக இழிவு என்பது போல் சித்தரிக்கும் கும்பல் செய்தி ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் எழுதுவது இன்றைய அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் 21ஆம் நூற்றாண்டின் இழிந்த நிலை என்று தான் சொல்ல முடியும்.

சரி ராதிகா சொன்ன கருத்திற்கு வருகிறேன், ராதிகா எந்த நடிகர் குறித்து அந்த கருத்தை சொன்னார் என்று தெரியவில்லை, அவரது ஆஸ்தான திமுக இளைஞர் அணி தலைவர் முக.ஸ்டாலின் அவருடைய புதல்வர் நடித்த ஒ.க.ஒ.க படத்திலும் கூட மேற்கண்ட காட்சிகள் உண்டு, எனவே பொதுவாக இப்போது வரும் படங்களில் 'சரக்கு' இல்லாத படங்கள் வெகு அரிது.






குறிப்பாக சந்தானம் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகளில் பாரும் (குடியகம்), பீரும் இல்லாத படங்களே சொற்பம் தான். செண்டி'மண்டுகள்' நிறைந்த  திரை உலகில் சந்தானம் ஹீரோவுடன் தண்ணி அடிக்கும் காட்சி வைத்தால் படம் 'சூப்பர் ஹிட்' என்கிற நம்பிக்கை உலவும் போல, தொடர்ந்து அவர் நடித்து வெளி வந்த படங்களில் 'தண்ணி அடிக்கும்' காட்சிகள் இடம் பெற்றே வருகின்றன.

மக்களுக்கு கட்டுபாடுகள் இல்லாத நாடுகளில் சட்டம் போட்டு தான் கட்டுப்படுத்துவார்கள். புகைப்பிடிப்பதை காட்சியாக வைக்கும் பொழுது தன்னை மானசீக தலைவனாக நினைக்கும் ரசிகர்கள் அதே பாதையில் சென்றுவிடுவார்கள் / பொது இடத்தில் புகைப்பதை பற்றி சற்றும் கவலைப்படமாட்டார்கள் என்பதை நடிகர் ஒப்புக் கொள்வதில்லை, அரசு தடைகாரணமாக இப்பொழுது (ஸ்டைலாக) புகைப்பிடிக்கும் காட்சிகள் படங்களில் வருவதில்லை, அதனால் தான் அடுத்தவங்க மூக்கில் நேராக புகையை விட்டு முகம் சுளிக்க வைக்கும் பொது இடப் புகைப்பழக்கம் குறைந்தும் வருகிறது.

திரையுலகின் ஓவ்வொரு அசைவும் சமூகத்தில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்ததான் செய்கின்றன, இல்லை என்றால் நமக்கு திரையுலகை சார்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகுவதற்கான வாய்ப்பே இல்லை. 

அந்த பொறுப்பை உணர்ந்தால் இயக்குனர்கள் மக்களை தவறான பாதைக்கு திருப்ப மாட்டார்கள், நடிகர்களும் தம்மை வைத்து இத்தகைய காட்சி வேண்டாம் என்று கூறுவார்கள். 

ரசிகர்கள் பார்வைக்கு பாரில் வைக்கும் காட்சிகளைப் பற்றி சந்தானம் போன்ற வளரும் நடிகர்கள் சிந்திக்க வேண்டும். ராதிகா சொல்வதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்