பின்பற்றுபவர்கள்

27 ஏப்ரல், 2011

துறவியின் மறுபக்கம் !

அரசியல் ஒன்றும் பொதுச் சொத்து அல்ல வாரிசுகள் வரிந்து கட்டிக் கொள்ள என்று ஒருசாரார் வாரிசு அரசியலைச் சாடுகிறார்கள். இந்த நிலையில் பழைய நேர்காணல் ஒன்றை நினைவு படுத்த....


********

தமிழ்நாட்டு அரசியலின் அழுத்தமான அதிகார மையங்களில் ஒருவர் ராஜாத்தி
கருணாநிதி!

மகள் கனிமொழி, பேரன் ஆதித்தனுடன் வாழும் சி.ஐ.டி. காலனி இல்லம்தான்
கோபாலபுரத்துக்கு அடுத்து கழகத்தினர் காத்திருக்கும் முக்கியத் தலம். நீண்ட
யோசனைக்குப் பிறகு, பேட்டிக்குச் சம்மதித்தார் ராஜாத்தியம்மாள்.

''முன்பெல்லாம் கேமராவைப் பார்த்தாலே ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள், இப்போது
அடிக்கடி விழா மேடைகளில் தலைகாட்டுகிறீர்கள். அரசியல் பிரவேச ஐடியா எதுவும்
இருக்கா?''

''தலைவரின் மனைவி என்பதால் மட்டுமல்ல... கட்சிக்காரர்கள் நிறையப் பேர்
என்னையும் விழாக்களுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தலைவரையும்
குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. அதையும் மீறி
நேரம் கிடைக்கும்போது மட்டுமே விழாக்களில் கலந்துகொள்கிறேன். கனி நடத்தும் விழா
என்றால், எப்படிப் போகாமல் இருக்க முடியும்? 'தலைவரின் பொண்ணு கனி அரசியலில்
இருக்கே... அது போதும் எனக்கு!''

''கலைஞரை நீங்களும் 'தலைவர்' என்றுதான் அழைப்பீர்களா?''

''எல்லோருக்கும் தலைவராக இருக்கும் அவர் எனக்கும் தலைவர்தான்! 'வாங்க... போங்க'
என்று எப்போதாவது அழைப்பேன். ஆனாலும், 'தலைவர்' என்று அழைப்பதில்தான் எனக்குக்
கம்பீரமே இருக்கு.''

''கழகத் தலைவர், குடும்பத் தலைவராக எப்படி?''

''வீட்டில் இருந்தாலும் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார். எதையாவது
எழுதிக்கொண்டு இருப்பார். ஃபைல்களைப் பார்ப்பார். 'அதைச் செய்... இதைச் செய்'
என்று மற்றவர்களையும் வேலை வாங்குவார். இப்போது மோட்டார் நாற்காலியில் அவர்
உட்கார்ந்துகொண்டு வரவேண்டிய நிலையிலும், ஓய்வு எடுக்காமல் வேலை
பார்க்கிறார்!''

''இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் நீங்கள் பொக்கிஷமாக வைத்திருக்கும் பொருள்
என்ன?''

''ஒரு சமயம் பெரியாரைப் பார்ப்பதற்காக நானும் தலைவரும் போயிருந்தோம். அப்போது
கனிக்கு ஒரு வயசு இருக்கும். அவளும் எங்களுடன்தான் வந்தாள். மணியம்மையாரும்
பெரியாரும் விருந்து தந்து எங்களை உபசரித்தார்கள். கிளம்பும்போது பார்சல் ஒன்றை
என்னிடம் நீட்டி 'இந்தாம்மா, இதைப் பரிசா வெச்சுக்க!' என்று சொன்னார் பெரியார்.
அந்த பார்சலில் என்ன இருக்கும் என்று அப்போதே எனக்கு ஆர்வம் பொங்கியது. காரில்
வீட்டுக்குக் கிளம்பும்போது 'சால்வையாகத்தான் இருக்கும்' என்றார் தலைவர்.
'பெரியார் பரிசாக் கொடுத்தது புடவைதான்' என்று சொன்னேன். 'பெரியாருடன் எனக்கு
நெருக்கம் அதிகம். அவரைப்பற்றி எனக்குத் தெரியும். பார்ப்போம் இதில் யார்
ஜெயிக்கிறார்கள்?' என்று தலைவர் சொன்னார். பார்சலைப் பிரித்தால், அழகான புடவை.
பெரியார் கொடுத்த அந்தப் புடவையை இப்போதும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.இதேபோல
பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் கொடுத்த கொடி ஒன்றையும்
பாதுகாத்துவைத்திருக்கிறேன். இரண்டு பேரும் திராவிட இயக்கத்தின் மூத்தவர்கள்.
அவர்கள் எனக்குக் கொடுத்த சொத்து அவை!''

''கனிமொழி இன்று தீவிர அரசியலில் வலம் வருகிறார். அவருடைய ப்ளஸ், மைனஸ் என்ன?''

''கனி நிறையச் சமூக சேவைகள் செய்து வருகிறாள். அது எனக்குப் பிடிக்கும். ஒரு
அம்மாவா எனக்கு இதை நினைத்துப் பெருமையாக இருந்தது. தலைவரின் பிறந்த நாளையட்டி
விருதுநகர், காரியாப்பட்டி பகுதியில் சின்னதா ஆரம்பிச்ச வேலைவாய்ப்பு முகாம்
இன்னிக்குப் பெரிய அளவில் வளர்ந்துக்கிட்டு இருக்கு. நாகர்கோவில், வேலூர்,
ஊட்டி, விருதுநகர், கடலூர்னு நிறைய ஊர்களில் இப்படி முகாம்கள் நடத்தப்பட்டு
இருக்கின்றன. 80 ஆயிரம் பேருக்கு மேல வேலை வாங்கிக் கொடுத்திருக்கு கனி. நாலு
வருஷமா பிரபலமாகி வரும் சென்னை சங்கமம் விழா, பெண்களுக்கு அரசியல் பயிலரங்கம், திருநங்கைகளின் முன்னேற்றம் என்று நிறைய விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் கனியைக் கொஞ்சம் கர்வத்தோடுதான் நான் பார்க்கிறேன். யாருக்குமே தெரியாம
அடிக்கடி ரத்ததானம் செய்வாள். யாருக்குமே தெரியாத விஷயம்... இரண்டு
வருஷத்துக்கு முன்னாடியே தன் உடலை மருத்துவமனைக்குத் தானம் கொடுப்பதா எழுதிக்
கொடுத்திருக்கு. சமீப காலமா தான் ரத்ததானம் கொடுக்கலை. காரணம், அது உடம்புலேயே
ரத்தம் இல்லை. அந்த அளவுக்குச் சாப்பிடாம, உடம்பை வருத்தி உழைச்சுக்கிட்டு
இருக்கு.

எனக்குப் பிடிக்காத விஷயம்... தனக்குன்னு எதுவுமே கனி செஞ்சுக்காது. எந்தப்
பொருள் மீதும் ஆசையோ, பற்றோ இல்லை. கழுத்தில் செயினோ, காதுல நகை நட்டோ
போட்டுக்க விரும்பாது. 'நகை போட்டுக்கம்மா'னு சொன்னா, 'வேண்டாம்'னு சொல்லி
என்கிட்டயே சண்டை போடும். ஒரு துறவி மாதிரிதான் கனி வாழ்ந்துட்டு இருக்கா!''

**********

ஈராண்டுக்கு முன்பு ஏதோ ஒரு வார இதழில் கருணாநிதியின் இணைவி திருமதி இராசாத்தி அம்மாள், தன் மகள் பற்றிக் பெருமையாக கூறியவை அவை.

மே 6 ஆம் தேதி துறவி பாட்டியாலா நீதிமன்றத்தை அலைக்கற்றை ஊழல் தொடர்பில் சந்திக்கிறார்கள்.

அரசியலில் பேரும் பொருளும் அடைவதென்றால் எவ்வளவு பெரிய ரிஸ்க், சும்மா எதையும் அனுபவித்துவிட முடியாது சார். வாரிசு அரசியில் என்று வயிறு எரிபவர்கள் சிந்திக்கவும்.

25 ஏப்ரல், 2011

தமிழ்நாடு பற்றி எரியலாம் - பொது மக்களுக்கான எச்சரிக்கை !

2ஜி வழக்கில் இன்று 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ சார்பில் இன்று 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகள் கனிமொழி, உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனால் அனைவரின் கவனமும் இந்த குற்றப்பத்திரிகையின் மீது திரும்பியுள்ளது.

- இவ்வாறு ஆளும் கட்சியின் ஆதரவு செய்தி இதழான 'புலானாய்வு புலி' நக்கீரனும் செய்தி வெளியிட்டுள்ளது.

********

திமுகவின் பங்காளி சண்டையில் தினகரன் அலுவலர் 3 பேரை பாடையில் ஏற்றப்பட்டது, அதிமுகவினர் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்தது உள்ளிட்ட கடந்த கால உணர்ச்சி கொந்தளிப்புகளை நினைவு கூர்ந்து பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

மேற்கண்ட செய்தியின் படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் முதல்வரின் மனைவி மற்றும் ஸ்டாலின், அழகிரியின் தாயாருமான தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோர் குற்றவாளிகளாக நீதி மன்றத்தில் அறிவிக்கப்படுவர். இது திமுகவினருக்கு மானப் பிரச்சனை, உணர்ச்சி வசப்படும் தொண்டர்கள் திறந்திருக்கும் கடைகளை அடித்து நெறுக்குவதுடன் பொதுச் சொத்தான அரசு பேருந்துகள் தீவைக்கப்படும் அபாயமும் உள்ளது.

மதிய வேளைக்குப் பிறகு வெளியூருக்கு பேருந்து பயணம் மேற்கொள்வோர் தவிர்பது நல்லது, குழந்தைகள் மற்றும் பொது மக்கள் சுற்றுலா சென்றிருந்தால், தங்கி இருக்கும் இடத்தில் இருந்து வெளியே செல்லாமல் இருப்பது. சிறுகடைகள் திறந்து வைத்திருக்கும் தனியார் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பதன் மூலம் நட்டத்தை தவிர்க்கலாம்.

கலவரங்களை தலைவர்கள் தூண்டிவிடாவிட்டாலும் நன்றி செலுத்த நாயாக காத்திருப்பவர்கள் அவர்களாகவே செயல்பட்டு சேதம் விளைவித்துவிடுவார்கள், ப்ளசென்ட் ஹோட்டல் வழக்கில் ஜெ கைது செய்யப்பட்ட போது இவை தானாகவே நடந்தது குறிப்பிடத் தக்கது.

கலவரம் நடக்கலாம் என்பது ஊகம் தான் என்றாலும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆளும் கட்சிக்கு எதிராக நடந்து வருவற்றை தேர்தல் கருதி தொண்டர்கள் அமைதி காத்தார்கள், தேர்தல் முடிந்த நிலையிலும் அவ்வாறு இருப்பார்களா, அதுவும் முதல்வரின் நேரடி உறவுகளை தொடர்பு படுத்திய குற்றச் சாட்டுகளுக்கு அமைதி காப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. ஏற்கனவே காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் முன்பு காங்கிரஸ்காரர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது, யாருமே பாதிக்கப்படக் கூடாது என்பது நம் நோக்கம், அப்படியே நடந்தாலும் தெரியமால் சிக்கிக் கொள்வோர்களிடையே இந்தத் தகவல் தெரிந்தவர்களின் சொந்தங்கள் யாரும் இல்லாமல் இருந்தால் நாம் ஓரளவு அரசியல் நடவடிக்கைப் பற்றிய விழிப்புணர்வுகளில் காப்பாற்றிக் கொண்டோம் என்றாவது இருக்கும். தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை எதையும் எடுத்து போல் தெரியவில்லை.

போலி சாமியார்களின் முன்மாதிரி - சத்திய சாய் பாபா !

முன்குறிப்பு : ஒருவர் இறந்த பிறகு பழிக்கலாமா ? என்ற கேள்விக்கு ஆன விடை, பாராட்டுதல்களைப் போலவே எதிர்ப்புகளும் சமகாலத்தில் பதிய வழிசெய்வது, கருத்துரிமையை மதித்தல் என்கிற புரிந்துணர்வு இருந்தால் இந்தக் கேள்வி பொருளற்றது.

தோற்றம் : அண்மையில் கல்லீரல், மூச்சடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பிரேமானந்தம் என்கிற சாமியார் அவதாரத்தின் (?) சாமியார் ஆசைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தான் சத்திய சாய்பாபா. மக்களின் மனதில் உடனடியாகப் பதியவைக்க போதனைகளை விட உருவமே முதன்மையானது என்ற அடிப்படையில் தலைக்கு மேல் அடர்ந்த காட்டை வளர்த்து வைத்திருந்தவர் சத்திய சாய்பாபா. இது சாமி, ஒண்ணும் செய்யாது, கும்பிட்டுக் கொள் என்று சொல்லாவிடில் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் தோற்றம் தான். ஒரு சாமியாரின் ஆன்மிக வியாபாரத்தில் தோற்றமே விளம்பரத்தின் ப்ளேவர் என்பதை நிருபனம் செய்து காட்டியவர் சத்திய சாய்பாபா. விவேகானந்தர், இராமகிருஷ்ணன் சீரடி சாய்பாபா மற்றும் நம்ம பக்கத்து வள்ளலார் உள்ளிட்டோர் மாறுபட்ட ஒரு தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதன் மூலம் அவர்களது தோற்றங்களும் மனதில் நிற்கிறது. ஆனால் சத்திய சாய்பாபாவை நினைக்க அவரது அடர்ந்த தலையே போதுமானதாகும். இதே யுத்தியைத்தான் பிரேமானந்தம் பயன்படுத்தினார். அதே போன்று முடி வளர்ந்தாலும் கூந்தல் போல தொங்குவதால், பெண் போல தோற்றம் தருவதால் அதை அப்படியே தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தம். ஆக சாமியார் தொழிலுக்கு தலைமுடியோ மூலதனம் என்று செயலில்காட்டி வென்றவர், முன்னோடி சத்திய சாய்பாபாதான்.

ஆன்மிக அதிசயம் என்கிற பெயரிலும், அற்புதம் என்ற பெயரிலும் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, லிங்கம் (வாந்தி எடுத்து) வரவழைப்பது உள்ளிட்ட மாய விளையாட்டுகள் (மேஜிக்) இதை பிரேமானந்தம் உள்ளிட்ட பல சாமியார்கள் பின்பற்றினார்கள், கடவுளால் வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது, இவர்களும் கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று அவர்களின் பக்தர்கள் நம்புகிறார்கள், படத்திலிருந்து விபூதி கொட்டுவது, படத்தில் இருக்கும் மாலையை வளரச் செய்வது போன்ற வித்தைகளை கொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரும் அவரது சக்தி வழிபாட்டு மன்றங்களும் வளர்ந்திருப்பதும் கூட இத்தகைய வித்தைகளினாலே. மாலை வளரும் பின்புலன் என்ன வென்று தெரியாது, ஆனால் முதனாள் மாலை மறுநாள் ஒரு அடியாவது நீளமாக இருக்கும், அதாவது கொஞ்சம் அடர்த்தியாகக் கட்டப்பட்டபட்டு படத்தில் போடப்பட்ட மாலை இழுத்துவிட்டது போல் கொஞ்சம் நீளம் கூடி இருக்கும் பூக்களின் எண்ணிக்கை கூடி இருக்காது, இதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். நூலை அல்லது மாலை கட்டப்பயன்படுத்தும் நாரை குறிப்பிட்ட இரசாயணத்தில் நினைத்து எடுத்து மாலை கட்டினால் நீளும் தன்மை ஏற்படுமா ? அல்லது குறிப்பிட்ட நீளமுள்ள நாரை இராசயணத்தில் நனைப்பதன் மூலம் சுறுங்கி அதன் பிறகு மாலை கட்ட மறுநாள் முதல் நார் தன் ஒரிஜினல் நீளத்தை நோக்கி தளர்ந்து நீளுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் இருப்பது வெறும் இராசயண மாற்றம் தான். இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது. இவர்களில் எந்த சாமியாரும் ஏழை பக்தர்களுக்கு தங்க மோதிரம், தங்கை சங்கிலி வரவழைத்துக் கொடுத்தது இல்லை, அவர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். கோவிலில் அருச்சனை தட்டில் நூறு ரூபாய் போட்டால் உபரியாகக் கொடுக்கப்படும் பிரசாதம் போல ஆசிரமங்களுக்கு வரும்படி தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் அரசு ஆதரவு தருபவர்களுக்கு மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஒருகிராம் தங்கத்தை மணலில் இருந்து பிரிக்க எத்தனை டன் மணல் தேவைபடுகிறது என்பது இந்த சாமியார்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.

செக்ஸ் சர்சை : சத்திய சாய்பாபா சிறுவர்களுடன் செக்ஸ் சில்மிசம் என்கிற சர்சையில் பலகாலம் அடிப்பட்டு வருகிறார், இன்றைய காலத்தைப் போலவே அவர் 50 வயதுவரை இருந்த காலத்தில் உயர் தொழில் நுட்பம் இருந்திருந்தால் நித்தியைப் போல் ஏதேனும் ஒரு விடியோவில் சிக்கி இருக்கக் கூடும், ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது என்று சொல்லிக் கொள்வோரை விட சாமியார்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ? விருப்பதுடன் கூடிய பாலியல் தேவை தவறில்லையே என்று தனிமனித உரிமை பேசுவோர்கள் நிறைய உண்டு. ஆனால் பாபாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுவைத்தவர்கள் பலகாலம் அவருடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் என்பதால் அவர்களது குற்றச் சாட்டை புறம்தள்ளிவிட முடியாது. மாட்டிக் கொள்ளாதவன், ஆதரம் வைக்காதவன் குற்றவாளியே இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் வேண்டுமானால் பாபாவின் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று கூறலாம், ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது, இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது. சத்தியசாய் பாபாவைப் போலவே செக்ஸ் சர்சைகளில் அடிபட்டு தண்டனை பெற்றவர் பிரேமானந்தம், தொடர்ந்து அடிபட்டாலும் இன்னும் தண்டனை பெறாதவர்கள் நித்தி மற்றும் கல்கி, காஞ்சி பெரியவா சாமியார்கள்.

நானே கடவுள் : சத்தியசாய், பிரேமனந்தம், நித்தியானந்தம், கல்கி மற்றும் பங்காரு - இவர்கள் அனைவருமே தானே கடவுள் மற்றும் அவதாரம் என்று கூறிக் கொள்பவர்கள், இவர்களின் மடங்களில், மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. ஏனென்றால் இவர்களெல்லாம் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குள் பொதுவானக் கொள்கை என்று எதுவுமே கிடையாது. மக்களின் அடைப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த ஒற்றுமையும் கிடையாது, ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் அவதாரம் தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளார் பக்தரிடம் சென்று நிதியானந்தம் கடவுளா என்று கேளுங்கள், எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த அவதாரங்களின் (அவ)லட்சணம் அவரவர் பக்தர் என்ற அளவில் தான், ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமாகத் தலைவன் என்று உயர்த்திப் பாடுவது போலவே, மதவாதிகள் எங்களது கடவுளும் இறைத்தூதரும் தான் டாப்பு மற்றதெல்லாம் டூப்பு என்று சொல்வது போன்று உலகுக்கான ஒரே ஒளிவிளக்கு எங்கள் சாமி(யார்) தான் என்று கூவுவார்கள்.

ஒற்றுமை : பணக்காரர்களில் இருவகை தான் உண்டு, ஒன்று பரம்பரை பணக்காரன், மற்றொன்று திடிர் பணக்காரன், இராசாவைப் போன்ற திடிர் பணக்காரர்களில் பெரும்பாலோர் அரசை, மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களில் பலர் இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்தும், மன அமைதிக்காவும் இத்தகைய சாமியார்களை நாட, சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெருக்கம் என்பது அடிப்படை தேவை என்ற அடிப்படையில் இயல்பாகவே ஏற்பட சாமியார்களின் சொத்துக்கள் இமயமலையை ஏளனம் செய்யத் துவங்குகின்றன. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள், ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற்றதே இல்லை, கொள்ளைச் சொத்தில் எனது பங்கு என்பதாகத்தான் அவர்கள் வளர்ந்துள்ளனர். பணக்காரர்களை கொள்ளையடிப்பதில் சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர். இதுவே இவர்களது தொழில் ஒற்றுமை.

தாதா : தாதா என்றால் வள்ளல், தற்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து நாலு பேருக்கு வேலு நாயக்கர் பாணியில் நல்லது செய்தால் அவர்கள் தாதா எனப்படுகின்றனர். பாபா உள்ளிட்ட சாமியார்களும் ஒருவகையில் தாதாக்களே, இவர்களிடமும் ஆள் பலம், பண பலம் எல்லாமும் உண்டு, அதே போன்று பணக்காரர்கள் கொடுக்கும் பங்கு பணத்தில் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். சென்னைக்கு தண்ணீர் கொடுக்க பாபா 200 கோடி தந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டி இருக்கிறார். 200 கோடியும் எந்த எந்த பாவங்களை குறைக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இவர்களிடத்தில் வந்ததோ. யார் யாரோ செய்த பாவத்தின் பரிகாரமாக சென்னைக்குத் தண்ணீர். 200 கோடி கொடுக்க மனது வேண்டுமே ? பில்லியன்களில் சொத்து மதிப்பு, 200 கோடி அவர்களுக்கு பெரிதே இல்லை. பாகிஸ்தான் மக்களுக்கு ரூ 500 கோடி சமூக நலன் நிதி என்று தாவூத் இப்ராஹிம் அறிவித்தால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பாமல் பாகிஸ்தான் தாவூத் இப்ராஜிமை கொண்டாடும் என்று தான் நினைக்கிறேன்.

பொது புத்தி : சாய் பாபா யாராக இருந்தால் என்ன ? மெஜிக் செய்தால் என்ன ? மக்களுக்கு நல்லது செய்கிறார், எனக்கு பிடிச்சிருக்கு.... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லையாம். ஒருவர் எந்த வழியில் வேண்டுமானாலும், பணம், புகழ் ஈட்டலாம் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் அவரது பின்புலன் பேசப்படாது, மக்கள் கொண்டாடுவார்கள். இராசபக்சே கூட சிங்களர்களுக்கு ஹிரோதான், மாவீரன் தான். சிங்களருக்கு நல்லது செய்கிறாரே.

பின்குறிப்பு : எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்

21 ஏப்ரல், 2011

சாய்பாபா செத்துப் போவாரா ?

சாய்பாபா செத்துப் போய்விடுவாரொன்னு பக்தர்கள் பதட்டம் அடைந்துள்ளார்களாம். அவர் தான் அவதாரமாச்சே அவருக்கு ஏது மரணம் என்று இவர்கள் ஒருகால் நினைத்தால் இவ்வாறு பதட்டம் ஆகுமா ?

கவலைப்படாதீர்கள் ஏதோ ஒரு சிறுவன் நான் தான் சாய்பாபா என்று ஓரிரு ஆண்டுகளில் அறிவிக்கக் கூடும், சீரடி சாய்பாபா செத்துப் போன பிறகு தானே அது என்று அறிவித்துக் கொண்டவர் தான் தற்போது மரணத்துடன் போராடிவரும் சத்திய சாய்பாபா.

சாமியார்கள், மடாதிபதிகள், சாய்பாபாக்களும் சாவதில்லை, எப்படியோ அவதாரம் எடுத்துவிடுவார்கள்.

***********

மூப்பு, பிணி மரணம் இவையெல்லாம் சதைப் பிண்டமான உடம்பை உடைய எல்லோருக்கும் வரும் சாமியார்களோ, சாய்பாபாக்களோ விதி விலக்கு இல்லை, புத்தரே செத்துப்போனதாகத்தான் வரலாறு சொல்கின்றன. எந்த ஒரு பிரம்மச்சாரியும் தாய் தந்தை உடலுறவு இல்லாமல் பிறந்திருந்தால் அவர்கள் செத்துப் போகமாட்டார்கள், சாய்பாபா அப்படியாக ஒன்றும் பிறக்கவில்லை.

கடவுள் முகம் காட்டாதவரை இறைத்தூதர்களுக்கும், 'நான் கடவுள்' அவதாரங்களுக்கும் இவ்வுலகில் பஞ்சம் ஏற்படுவதே இல்லை.

13 ஏப்ரல், 2011

இன்னையோட ஆட்டம் க்ளோஸ் !

எந்த விதத்திலும் ஒற்றுமை இல்லாத கட்சிகள் கூட்டணி சேர்ந்து இன்று தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தல் முடிவுக்கு சுமார் ஒருமாதம் இருப்பதால், சேர்ந்த வேலை முடிந்துவிட்டது அடுத்து லாப அரசியலை தக்கவைத்துக் கொள்வதில் முயற்சி செய்வோம் என்ற ரீதியில் தேர்தல் முடிவுக்கு முன்பே கூட்டணிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தி கட்சிகள் வெளியேறும் என்று நினைக்கிறேன். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்த அளவில் வெற்றி பெற்ற வேட்பாளர் கூட்டணி ஆதரவால் வெற்றி பெற்றாரா என்கிற கணக்கெல்லாம் கிடையாது. எனவே தேர்தல் முடிவுக்கு முன்பே கூட்டணிகள் புட்டுக் கொண்டால் மறுதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

திமுக கூட்டணியில் வெளியேறும் கட்சிகள்:

இந்த தேர்தலில் பலத்த அடிவாங்கப் போவது காங்கிரஸ் தான். காங்கிரஸ் தயவில்லாமல் அன்பு மணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்க முடியாது என்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லாமல் வெறும் 120 இடங்களில் போட்டியிட்ட திமுகவுடன் இணைந்திருப்பதில் இராமதாஸின் பாமக பெறப் போவது எதுவும் இல்லை. பாமகவிற்கு சுமார் 15 - 17 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கலாம். தேர்தல் முடிவுக்கு முன்பே திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறும் என்று எதிர்பார்க்கிறேன். ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பில் அடுத்து சிபிஐ எடுக்கும் நடவடிக்கைகளினால் காங்கிரஸ் மீது ஐயுறும் திமுக, காங்கிரடன் உறவு கசந்து காங்கிரசுடன் கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவிக்கும்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சி.
தேர்தல் களத்தில் ஜெவுக்கு பெரும்பான்மை கிடைப்பது அரிது, சுமார் 20 இடங்கள் வரை வெல்லப் போகும் தேமுதிகவின் ஆதரவு ஆட்சி அமைக்கத் தேவைப்படும், கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லும் விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணியில் வைத்திருப்பது அதிமுகவின் வளர்ச்சிக்கு பின்னடைவே. தேர்தல் முடிவிற்கு முன்பே அதிமுக தேமுதிகவை கழட்டிவிட்டு விட்டு மாநில மந்திரிப்பதவி கொடுப்பதாக ஆசைக்காட்டி பாமகவிடம் பேரம் பேசினாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. அதிமுக கூட்டணியில் முதலில் வெளியேறும் கட்சி தேமுதிக தான்.

*********

தமிழக வாக்களர்களிடையே தமிழக கட்சிகளுக்கு தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது, அதனால் தமிழக கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களை பங்கிட்டுக் கொள்ளும் அடிப்படையில் தான் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன, வாக்குப் பதிவோடு அவர்களின் நோக்கம் முடிந்துவிட்டது, அதன் பிறகு முடிவுகளுக்கு முன்பே அவரவர் பாதையில் அவரவர் செல்வர். தேர்தல் முடிவுக்கு 30 நாட்கள் இடைவெளி அதற்கு வாய்ப்பை உடனேயே ஏற்படுத்தித் தந்துள்ளது.

வாழ்க சனநாயகம்.

தனிக்கட்சி ஆட்சிக்கு வாய்ப்பு அமையாமல் மைனாரிட்டி ஆட்சியாகவே அடுத்தும் ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன். அப்படி அமைந்தால் தான் நாட்டுக்கும் நல்லது.

12 ஏப்ரல், 2011

திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தேற்க்கடிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.

1. தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரையில் பிடிபடாமல் இருக்க ஆளும் அரசு காட்டிவரும் அலட்சியம்.
2. மதுரை தினகரன் மூன்று ஊழியர்கள் கொலையில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காண அரசு முயற்சிக்காதது. கொல்லப்பட்டவர்கள் குடும்பம் இழப்பை மறக்கும் முன்பே 'இதயம் இனித்தது கண்கள் பணித்தன" மிகக் கொடுரமான தன்னல டயலாக். 5 முறை முதல்வராக இருந்த ஒருவர் சுயநல, குடும்பநல அரசியலை தோல் உறித்துக்காட்டிய டயலாக். சீ......இந்தப்பழம் எப்போதுமே புளித்தப் பழம் தான், பழத்தின் தோலைப் பார்த்து ஏமாந்துவிட்டதாக நடுநிலை அரசியல் ஆதரவாளர்கள் முகம் சுளித்த டயலாக்
3. தமிழர்களின் தனி நாடாக ஈழம் மலர்வதைத் தடுத்ததுடன், ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும், லட்சக்கணக்கானவர்களின் உடமைகளைப் பறித்த இராஜபக்சேவுக்கு பக்கத் துணையாகவும் இருந்து, இராணுவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தந்த காங்கிரசின் கைக்கூலியாக மந்திரிப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு இனத் துரோகம் செய்ததற்காக
4. பரபரப்புக்காகவும், அரசியல் வெற்றுப் புகழ்ச்சிக்காகவும் வெறும் மூன்றே மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு பெற்றுவிட்டார்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டதற்காக
5. உலக தமிழ் மாநாடு வழிகாட்டுதல்களை மீறி, தனக்கு வரலாறு படைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை செலவு செய்து 'முதல் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மொத்த தன் குடும்பத்தையும் அழைத்து மாபெரும் குடும்பவிழாவை அரசு விழாவாகக் காட்டியது.
6. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ஊழலை ஒரு தமிழன் தான் செய்திருக்கிறான், செய்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்று ஒட்டு மொத்த பிற இந்தியர்களுக்கிடையே தமிழர்களுக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக.
7. திரையுலகத்தை அக்டோபஸ் கைகளால் இறுக்கிப் பிடித்து இருப்பதற்காக
8. இலவச தொலைகாட்சிகளை கொடுப்பதன் மூலம் கேபிள் கட்டணம் அவசியம் ஏழைகள் செலுத்தியாகவேண்டும் என்ற கட்டாயத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருப்பதால் குடும்பத்திற்கு அரசு செலவில் பெரிய வருமானம் ஈட்டிய செயலுக்காக, அதாவது ஒரு கோடி (இலவச) தொலைகாட்சி (கொடுக்கப்பட்டு இருந்தால்) கேபிள் இணைப்பு X 12 மாதம் x 75 ரூபாய் கட்டணம் = ஆண்டுக்கு 900 கோடி - இது தலைவரின் குடும்பத்தின் ஒரு ஆண்டின் கேபிள் வருமானம்)
9. சீமான் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களை காங்கிரசை குஷிப்படுத்த கைது செய்து சிறையில் அடைத்து ரசித்தது
10. மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது மற்றும் கட்சியில் குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.

இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிந்த காரணங்கள், மீடியாவை வைத்துக் கொண்டு ஈழப் போரின் போது பொதுமக்களுக்கு செய்திகளே போய் சேராமல் தடுத்தார்கள்.

இவையெல்லாம் தெரிந்தும் தமிழகத்தின் சிறுபான்மை மதப்பிரிவினர் கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு (இனிமேல்) கிடைக்குமாம். கிறித்துவர்கள் சார்பில் சொல்லுகிறார்கள் ஜெ கட்டாய மதமாற்றம் தடைச் சட்டம் கொண்டு வந்தார். திமுக சிறுபான்மை காவலனாக இருப்பது இப்படித்தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர் இனிமேல் தான் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பாராம். அந்தம்மாவே போட்டு அந்தம்மாவே தூக்கிய கட்டாய மதமாற்றச் சட்டம் இன்னும் கிறித்துவர்களை பயமுறுத்துகிறதாம், அப்படி என்றால் இராமேஷ்வரம் கிறித்துவ மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கட்டுப்படுத்துவதும், காயப்படுத்துவதும், சுட்டுப்போடுவதும் காங்கிரஸ் கூட்டணியின் அங்கமாக இருக்கும் திமுகவை ஆதரிப்பதால் சரி ஆகிவிடுமா ?


திமுக கூட்டணிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவாம். ஏன் என்றால் அந்தம்மா ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியது. என் போன்றோர் கை தட்டி வரவேற்றோம். காரணம் தாம் மக்கள் ஊழியர்கள் என்ற நினைப்பே இல்லாமல் உதவிக்கு விண்ணப்பிக்க வரும் பொது மக்களை நாயிலும் கேவலமாக நடத்தியவர்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அணுப்பிய போது பொதுமக்கள் பெரிதாக எதுவும் போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்து. அரசு வேலை நிரந்தரமானது அல்ல, தவறு செய்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவோம் என்கிற நினைப்பை ஜெ அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தினார், பொதுமக்களால் வரவேற்கத்தக்கது தானே.

சிறுபான்மை காவல் என்ற போர்வையில் ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையை சிறுபான்மையினர் எடுப்பது, நாளை பெரும்பான்மை மதத்தினர் நாமும் ஏன் மத அடிப்படையிலேயே கட்சி ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது என்ற முடிவுக்குத் தள்ளிவிடும். அந்த வாய்ப்புகளுக்காகத்தான் இந்து மதவாத சக்திகளும் கூடக் காத்திருக்கின்றன.

திமுக அரசியல் மூலமாக சம்பாதித்து போதும், அந்தம்மா ஜெ தான் தற்போது பரம ஏழை :). தமிழக அரசியலில் மாற்று சக்திகள் தலையெடுக்காதவரை ஒரே கருமாந்திரத்தை தொடர்ந்து உட்காரவைப்பதைவிட கருமாந்திரத்திற்கு மாற்றான மற்றொரு கருமாந்திரத்தைத் சட்டசபைத் தலைமைக்கு அனுப்புவதன் மூலம் தொடர் கொள்ளையில் ஒரே குடும்பம் ஈடுபடுவதையாவது, சர்வாதிகரிகளாக ஆவதைத் தடுக்கமுடியும் என்கிற காரணமும் நம்பிக்கையும் வெளிப்படையானது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே அறிவார்ந்த மற்றும் தமிழகத்திற்கு ஓரளவு நன்மையாக அமையாவிட்டாலும் கொடுதல்களை ஓரளவு தடை போட முடியும்.

இந்தத் தேர்தலில் என்னுடைய திமுக கூட்டணிக்கான எதிர்ப்பையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான காரணங்களையும் நான் இங்கே பதியவைத்துவிட்டேன்.

சமூக மற்றும் தமிழுணர்வாளர்களின் நல் உணர்வுகள் இந்தத் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

11 ஏப்ரல், 2011

திராவிடத் தாய் குஷ்பு மற்றும் திராவிட புலி வடிவேலு - முதல்வர் புகழாரம் !

நேற்றைய பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட வடிவேலு இரவு 10:30 வாக்கில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். வடிவேலுவை கண்ட நெகிழ்ச்சியில் மிகவும் உயர்வாகப் பாராட்டினார்.

"வாய்யா வடிவேலு....விஜயகாந்துக்கு முன்பே நீ கட்சி ஆரம்பிச்சிருந்தா உன் கூட கூட்டணி வச்சிருந்தாலே திமுக பெரும்பான்மை பெற்றிருக்கும்.....இன்று முதல் உனக்கு 'திராவிட புலி' என்று பட்டம் சூட்டுகிறேன்" என்று மனம் திறந்து பாராட்டினாராம். இதை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட வடிவேலு, எனக்கு இவ்வளவு கூட்டம் கூடும் என்று தெரிந்தால் விஜயகாந்தை எதிர்த்து நின்றிருப்பேன், முதல்வர் ஐயாவும் எனக்க்கு 100 சீட்டு தந்திருப்பார், இம்சை அரசன் இரண்டாம் புலி கேசி என்பதைவிட திராவிடப் புலி பட்டம் தனக்கு பொருத்தமாக இருப்பதாகவும் திமுகவை கரையேற்றுவதில் தனது பங்கு பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது" என்று கூறினார்.

வடிவேலுவைத் தொடர்ந்து குஷ்புவும் கருணாநிதியைச் சந்தித்தார். "பெண்களின் கற்பு குறித்த சிந்தனையில் உன்னிடம் ஒரு பெண் பெரியாரையே பார்க்கிறேன், இன்று முதல் நீ நடிகை குஷ்பு அல்ல, திராவிடர்களின் இளையத் தாய்" என்று மனம் நெகிழ்ந்து பாராட்டினாராம். விஜயகாந்த், வடிவேலுவைப் போலவே தனக்கும் கூட்டம் கூடுவதால் முன்பே கட்சி துவங்கி இருந்தால் திமுகவிடம் 50 சீட்டுகள் வரையிலும் தன்னாலும் பெற்றிருக்க முடியும் என்று குஷ்பு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

7 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையம் காங் ஆசியுடன் ?

கருணாநிதி தேர்தல் பொதுக் கூட்டத்திற்கு கூட்டம் தேர்தல் ஆணையத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். கூடவே ஸ்டாலின் உள்ளிட்ட உடன்பிறப்புகள் தேர்தல் ஆணையத்தை காட்டமாக விமர்சனம் செய்கிறார்கள், போதக் குறைக்கு தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுப்பதாக அஞ்சாநெஞ்சன் வேறு ஆவேசப்பட்டுள்ளார்.

ஆனால் கூட்டணியில் இணைந்த 63 நாயன்மார்களோ, அவர்களுடைய தலைவர்களோ அதாவது காங்கிரசு இது பற்றி வாய்த்திறக்க்கக் காணும். தேர்தல் ஆணையமோ, அமலாக்கத்துறையோ தனியானது என்றாலும் அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் இருக்க முடியாது, ஏனெனில் இதன் உயர் அலுவலர்களை தேர்ந்தெடுத்து அல்லது பரிந்துரைப்பவர்கள் மத்திய அரசை ஆளும் கட்சியினரே. அண்மையில் நீராராடியவை விசாரணை செய்த சிபிஐ நீராராடியாவின் காங்கிரசு பிரமுகர்கள் தொடர்பு குறித்து எதுவும் விசாரணை நடத்தியது போன்றா தகவல் வெளியாகவில்லை,. சிபிஐ தன்னிச்சையானது என்றால் காங்கிரஸ் மற்றும் நீராராடியாவின் தொடர்புகள் அம்பலப்பட்டிருக்கும். தேர்தல் ஆணையமும் தன்னிச்சையானது என்று சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆளும் கட்சியிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுமே பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது தமிழகத்தை ஆளும் கட்சிக்கு மானக்கேடானது, அதாவது ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருந்தால் மட்டுமே அவ்வாறு அறிவிக்க முடியும். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு அந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் மறைமுகமாகச் சுட்டி இருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் எந்தத் தேர்தலிலும் இல்லாத கெடுபிடி மலைப்பாகவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நெருக்கடியில் காங்கிரசும் பாதிக்கப்படுகிறதே என்று கேட்பவர்களிடம், 'என்னமோ திட்டம் இருக்கு' என்கிறார்களாம் தேர்தல் அதிகாரிகள். காங்கிரசுக்கு என்ன பலன் ? அவர்களால் கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணி ஆட்சி ஏற்படுத்துவிடமுடியுமே ? அதை காங்கிரஸ் விரும்பவில்லை, மேலும் சட்டமன்ற தேர்தலுடன் திமுகவை தலைமுழுகவும் காங்கிரஸ் தயார் ஆகிவருகிறதாம் (ஜூவியில் படித்த ஒருசில வரிகள்). 'மாற்றம் ஏற்படுத்த உங்களால் முடியும்' என்கிற வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை அச்சிட்ட தேர்தல் ஆணையம், 'மாற்றம்' என்ற சொல்லை கடுமையாக திமுகவினர் எதிர்க்க பின்னர் அந்தப் பதாகைகளை பயன்படுத்தாமல் கைவிட்டதாம் தேர்தல் ஆணையம்.

தங்கப்பாலு, இளங்கோவன், பசி உள்ளிட்ட காங்கிரசின் நாடறிந்த முகங்கள் திமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றும் தேர்தல் ஆணையத்தின் கெடுப்பிடிகள் தெரிந்திருந்தும், கருணாநிதியைப் போல் புலம்பாமல் இருக்க பின்னனி எதுவும் இல்லை என்பதை நம்பவும் முடியவில்லை. இது எதுவும் தெரியாமல் அல்லது பிடிபடாமல் வடிவேலுவை வைத்து விஜயகாந்தை தரக்குறைவாகப் பேசினால் தேர்தலில் 'வென்று'விடலாம் என்று நினைக்கின்றனர் திமுகவினர். ஸ்டாலினுக்கு ஒருநிமிடம் ஒதுக்கியுள்ள சன் டிவி வடிவேலுக்கு ஐந்து நிமிடமும், குஷ்புவுக்கு மூன்று நிமிடமும் ஒதுக்கியுள்ளது, தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு மூத்திரசந்துகளே இருக்காது என்பது போல் உண்மையான தீப்பொறி திருமுகமாக வடிவேலு பொளந்து கட்டுகிறார். பணப்பட்டுவாடாவில் இவ்வளவு கெடுபிடி செய்யும் தேர்தல் ஆணையம் கள்ள ஓட்டை கண்டுகொள்ளாமல் விடுவார்களா என்பது ஐயத்துக்குரியது.

5 ஏப்ரல், 2011

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும்.......!

இட ஒதுக்கீடு என்பது எதோ தகுதியற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை போல் அவ்வப்போது பேசப்படுகிறது. இட ஒதுக்கீடு என்ற சொல்லே தவறு மாறாக இடப் பங்கீடு என்று தான் சொல்லவேண்டும். சாதி நம்பிக்கைகளை சிதைக்க விரும்பாத வருணாசிரம நம்பிக்கை கொண்ட இந்தியாவில் அனைவரும் சம அளவில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்று ஏற்பாடே இந்த இட ஒதுக்கீடு என்கிற இடப் பங்கீடு.

இட ஒதுக்கீடுகளை யார் யார் பெருகிறார்கள் ?

தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினரே இட ஒதுக்கீட்டின் தகுதியைப் பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு என்பது அந்த பிரிவின் பெயரிலேயே அடங்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட என்றால் ? பிற சாதி சமூகத்தால் தாழ்த்தி வைக்கப்பட்ட, கீழான சமூகத்தவராக அறிவிக்கப்பட்ட அல்லது தீண்டத்தகாத என்ற நிலையில் வைக்கப்பட்டவர்களே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர், அது போன்ற விளக்கங்களே பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். மேலும் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் சமூக பொருளாதார நிலையில் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று முன்னேறியவர்கள். இவை தனிப்பட்ட மனிதர்களை அவர்கள் பிறந்த சாதி இது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. சாதிகள் அவர்களுக்குள் குழவாக இயங்குவதால் தனிமனித பொருளாதார நிலையைப் பார்க்காது ஒட்டுமொத்த சாதியின் ஏற்றம் வளர்ச்சியை கொண்டு அவர்களுக்கு பொதுவான சலுகைகள் வழங்கப்படுவது தான் சாதி சமூகங்களை பொருளாதார சமூக அந்தஸ்துகளில் சமத்துவமாக்க முயலுவதன் ஏற்பாடாகும். தனிப்பட்ட மனிதர்களின் பொருளாதாரத்தைப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்பது என்பது நடைமுறைக்கே ஒத்துவராத ஒன்று. எடுத்துக்காட்டாக ஒரு மாணவன் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து 100க்கு 95 எடுத்து இட ஒதுக்கீடு பிரிவிக்குள் அவனுக்கு தகுதியில்லை என்றால் முதலில் அந்த மாணவன் 95 மதிப் பெண் பெற எடுத்த முயற்சிகள் என்ன என்று பார்க்கையில் வெறும் இயற்கை அறிவினால் அவன் 95 மதிப்பெண்கள் பெற்றானா ? என்ற கேள்வி தான் முதலில் வருகிறது. 95 மதிப்பெண் பெற தனியார் பயிற்சி வகுப்பிற்குச் சென்று இருக்க வேண்டும், மற்றும் படிப்பைத் தவிர்த்து அவனுக்கு வேறு வேலைகளே இல்லாமல் இருந்திருக்க வேண்டும். இங்கு பொருளாதார சுமை என்பது அவன் பெற்றோர் சுமக்கும் சுமையே அன்றி அம்மாணவனுக்கு ஏற்பட்ட நேரடியான அழுத்தம் இல்லை. ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் அல்லது கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளியின் பிற்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மாணவனை எடுத்துக் கொண்டால் அவன் பெற்ற மதிப்பெண் 60 என்றாலும் அவன் தனியார் பயிற்சிக்கு சென்றிருக்காதவனாகவோ, தந்தைக்கு பொருளாதாரம் ஈட்டித்தரும் வேலைக்கு இடையே படித்து அந்த மதிப்பெண்ணைப் பெற்றிருப்பான். பெற்றோர் ஊக்கத்துடன் 95 மதிப்பெண் பெரும் மாணவனும், பெற்றோருக்கு உதவி செய்து கொண்டே படிக்கும் மாணவன் பெரும் 65 மதிப்பெண்களும் போட்டிப் போட்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுதி பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதமான சமூக நீதி. எந்த ஒரு ஊக்கமும் இல்லாமல் தன் முயற்சியால் படித்து 95 விழுக்காடு பெரும் மாணவர்கள் எந்த சாதியிலும் உண்டு ஆனால் அவர்களின் விழுக்காடு குறைவே. மாறாக நன்கு படித்து, விழிப்புணர்வு பெற்றவர்களின் பிள்ளைகளும், அத்தகைய விழிப்புணர்வுகளுக்கு வாய்ப்பில்லாதவர்களும் ஒன்று போலவே மதிப்பெண் எடுக்க முடியுமா ? இதில் மாணவரின் தனித்திறமை என்று எதுவும் இல்லை, அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளே அவர்களை உருவாக்குகிறது. வாய்ப்புகளின் சமச்சீரின்மையை சரி செய்யவே இட ஒதுக்கீடுகள் பயன்படுகிறது. மற்றபடி தேராத மாணவன் தகுதியே இல்லாத மாணவன் இட ஒதுக்கீடுகளால் பலன் பெறுவது இல்லை.

சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களில் எவருமே உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. பின்தங்கிய மற்றும் பிற்பட்ட மாணவர்களை விட உயர்வகுப்பினர் குறைவாகவே மதிப்பெண் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. என்னைக் கேட்டால் இட ஒதுக்கீடுகள் அரசு பள்ளியில் தமிழ் மொழி வழிக் கல்வி பெற்றவர்கள் அனைவருக்கு பொருளாதார ரீதி அடிப்படையில் வழங்கலாம், எந்த சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் ஆங்கில வகுப்பில் படிப்பதற்கான பொருள் உதவி இருக்கும் மாணவன் தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து இடம் பிடிப்பது ஒன்றும் கடினமான செயலே இல்லை.

*****

இவற்றையெல்லாம் பலமுறை பதிவில் எழுதி இருக்கிறேன். இவை இட ஒதுக்கீடு பற்றிய சமூக ரீதியிலான புரிதல் மட்டுமே. ஆனால் இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால் என்ன ஆகும் என்பதை அனைவரும் தெரிந்தே ஆகவேண்டும், குறிப்பாக இந்து மத இடிதாங்கிகள், இட ஒதுக்கீடு இலவசமாக வழங்கபடவில்லை அது கையூட்டே என்று இந்துத்துவாதிகள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். தலித்துகளுக்கு, பிற்பட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் அவர்கள் சென்று சேரும் இடம் மாற்று மதம் தான். ஏனெனில் இந்துமதத்தில் இருப்பதால் இவர்களுக்கு என்ன நன்மை ? சுதந்திர இந்தியாவிற்கு முன்பு மதம்மாறுபவர்களின் விகிதம் ஒப்பிட தற்போதைக்கு மிகவும் கீழே சென்றுள்ளது. அதற்குக்காரணம் இந்துமதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை கிடைப்பது என்பது தான் முக்கிய காரணியாகவும், இதுவும் மறுக்கப்பட்டால் நீங்களே உங்கள் மதங்களைக் கட்டிக் கொண்டு அழுங்கள், எங்களுக்கு பறையன் பள்ளன் என்ற அவப்பெயர் விளிப்புத் தேவை இல்லை என்று ஒட்டு மொத்தமாக இந்துமதத்தைக் கைகழுவிவிட்டு மதம் மாறி இருப்பார்கள், இட ஒதுக்கீடு என்பதே இந்து மக்கள் தொகையை குறிப்பாக தலித் இந்துக்கள் மதம்மாறமல் இருக்கக் கொடுக்கப்படும் கையூட்டு தான். இதைப் புரிந்து கொள்ளாத அதிமேதாவிகள், சமூக நலனை சிந்திப்பதாகவும், ஞாயம் பேசுவதாகக் கூறுவதுடன் தலித்துகளுக்கு இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள் என்ற பரப்புரையை செய்து காழ்புணர்வை வளர்த்துவருகிறார்கள். இந்த திடீர் சமூக ஆர்வலர்கள் உயர்வகுப்பினர் நடத்தும் கல்லூரியில் ஏன் உயர்வகுப்பு ஏழைமாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முன்வருவதில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பவே மாட்டார்கள்.

இட ஒதுக்கீடு என்பது சமூக சமச்சீருக்கு மாற்று ஏற்பாடு என்றாலும் அது இன்று வரை இந்துமக்கள் தொகையை கட்டிக்காக்கும் ஒரு கேடயமாகவே இருக்கிறது என்பதை திடீர் சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும். இது தெரிந்துள்ளதால் இந்துதுவவாதிகள் நேரடியாக இட ஒதுகீட்டை எதிர்ப்பதில்லை ஆனால் மறைமுகமாக உயர்வகுப்பு மாணவர்களை இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காய்வார்கள்.

இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால் இந்துமதம் சிதையும் என்பதே உண்மை. தேசியவியாதிகளே, திடிர் சமூக ஆர்வளர்களே இப்போது சொல்லுங்கள் இட ஒதுக்கீடு யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ வருணாசிரமத்தைக் கட்டிக்காக்கும் ஒரு கேடயமாகவே இருந்துவருகிறதா இல்லையா ? இராமகோபாலன் தலித் கிறித்துவர்களுக்கு இந்து தலித்துகளைப் போல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பது எதற்காக ?

இந்துபறையர்கள் மற்றும் பள்ளர்கள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட சமூகத்தினர் தங்களை அவ்வாறே அழைத்துக் கொள்ள அனுமதிக்கிறோம் என்கிற மறைமுக ஒப்புதலுக்குக் கொடுக்கப்படும் கையூட்டே இட ஒதுக்கீடு. இதை இராமகோபாலன் போன்று இந்துத்துவாக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர், தவறு என்றால் ஒரு கிறித்துவ தலித்துக்கும், இந்து தலித்துக்கும் சமூக மற்றும் பொருளாதார நிலையில் என்ன வேறுபாடு இருக்கிறது என்று சொல்லுஙக்ள் ? இட ஒதுக்கீடு என்பவை மறைமுகமாக உயர்சாதியினர் அல்லாதோர் இந்துவாக தொடரக் கொடுக்க்படும் லஞ்சம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்