பின்பற்றுபவர்கள்

28 அக்டோபர், 2010

மதவாதிகளால் கொலை செய்யப்பட்ட திருநங்கை !

திருநங்கைகள் பற்றி பரவலான புரிந்துணர்வு துவங்கி உள்ள காலகட்டத்தில் இன்னும் கற்காலத்தில் இருந்து கொண்டு அவர்களை கொல்லும் (மத) அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

பால் சார்ந்த உடலமைப்பு மற்றும் மனம் இவை ஒன்றியிராத மனிதப் பிறவிகளே திருநங்கைகள் எனப்படுவர். பருவ வயதை நெருங்கும் முன்பே மனம் சார்ந்து தன்னை எதிர்பாலினம் என்று உணர்ந்து அதில் நாட்டம் கொண்டு அவ்வாறு வாழ முடிவு செய்பவர்கள் திருநங்கைகள். இவை பெற்றோருக்கு அதிர்ச்சி என்றாலும் ஐரோபிய நாகரீகம் சார்ந்த வெளிநாடுகளில் பரவலாக அவர்களின் உணர்வுகள்
புரிந்து கொள்ளப்படுகிறது. திருநங்கைகளும் தற்பால் விரும்பிகளும் ஒன்றல்ல, தற்பால் விரும்பிகள் தங்கள் பாலினத்தை வெறுப்பது இல்லை, தனது பால் உறுப்புகளையும் வெறுப்பதில்லை அதே போன்று பாலியல் நாட்டத்தில் தன்பாலினத்தைச் சேர்ந்தவர்களையே நாடுவார்கள், எதிர்பாலினத்தை அவர்கள் பாலியல் நாட்டத்திற்கு விரும்பிவதில்லை என்றாலும் அவர்களை தனிமனிதனாக வெறுப்பதில்லை. திருநங்கைகளாக உணர்ந்து கொண்ட பின் தங்களது பால் உறுப்பை வெறுத்து முற்றிலுமாக நீக்கிக் கொண்டு பெண்ணாக மாற விழைபவர்களே திருநங்கைகள், இவர்களும் தற்பால் சேர்கையாளர்களும் ஒன்று அல்ல, திருநங்கைகள் பாலியல் ரீதியாக ஆண்கள் மீது நாட்டம் கொண்டிருந்தாலும் மன அடிப்படையில் அவர்கள் தங்களை பெண்ணாகவே நினைப்பவர்கள். தன்னை பெண்ணாக உணர்ந்துள்ள ஆணே திருநங்கை, அதே போன்று ஆணாக உணர்ந்து கொண்ட பெண்களும் உள்ளனர் என்றாலும் அவர்களுக்கு திருநங்கைகளுக்கு இருக்கும் அளவுக்கு சமூகச் சிக்கல் இல்லை, காரணம் ஒரு பெண் தன்னை ஆணாக நினைத்து அதன்படி நடந்து கொண்டாலும் வீட்டை விட்டு துறத்தும் நிலைக்கு சமூகம் அவர்களை தள்ளுவது கிடையாது ஏனெனில் பெண் ஆணாக தன்னை உணர்வதை ஆளுமை என்ற அளவில் மட்டுமே சமூகம் கருதுகிறது. ஆண் பெண்ணாக உணரும் போது
உடலியல் மற்றும் உணர்வியல் தாழ்ச்சி சமூகக் கேடு என்பதாக அவர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏன் உடலும் உள்ளமும் ஏற்றவாறு பொருந்தவில்லை, அதை சரிசெய்ய முடியுமா முடியாதா
என்பதை எந்த ஒரு அறிவியலும் முற்றிலுமாக விளக்கவில்லை மாறாக மனம் மற்றும் உளவியல் என்பதாகவே வகைப்படுத்தி இருக்கிறார்கள்.


படைப்பு படைத்தவன் என்றெல்லாம் புகழ்பாடும் மதவாதிகள் படைப்பு சரி இல்லை என்றால் படைத்தவனை விட்டுவிட்டு படைப்பை சிதைப்பது எந்தவகையில் ஞாயம் என்று தெரியவில்லை, இறைவன் நாடினால் நன்மை கிடைக்கும் என்று ஆசி கூறுவோர், திருநங்கைப் பிறப்புகளை
இறைவன் நாடவே இல்லை என்பதையாவது ஒப்புக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பார்களா ? அவ்வாறு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட ஏன் இவர்களுக்கு மட்டும் இறைவன் குறைவாக நாடினான் என்ற கேள்வியாவது கேட்டுக் கொள்வார்களா ? இந்தியாவில் இந்து மதத்தினாரால் திருநங்கை பிறப்புகள் புரிந்து கொள்ளப்படுகிறது காரணம் மகாபாரதத்திலேயே அர்ஜுனன் திருநங்கையாக மாறிய கதை உண்டு என்று நம்புவோர் இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வியல் நிலையை எண்ணிப் பார்கவும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு வடமாநில எம் எல் ஏ என்பது தவிர்த்து அவர்களில் ஒருவர் கூட அரசு உயர்பதவி வகித்தது கிடையாது. இந்தியாவில் 95 விழுக்காடு திருநங்கைகளுக்கு பாலியல் தான் தொழில் என்பதாக தள்ளப்பட்டுவிட்டனர், பின்னர் இவர்களை இந்து மதத்தினர் மதிக்கின்றனர் என்று கொள்ள முடியும் ?

ஒரு இஸ்லாமிய ஆண் திருநங்கையாக ஆகிப் போனது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளப்பட்டுள்ளார். படிக்கும் போதே பதறியது. சவுதி இளவரசர் (சவுதி மன்னரின் மகளின் மகன் அதாவது மகள் வயிற்றுப் பேரன்) ஒருவர் இங்கிலாந்தில் தன்னுடைய உதவியாளர் (அவர்கள் மொழியில் அடிமையை) அடித்தே கொன்றார், விசாரணையில் அந்த இளவரசர் ஓரின விரும்பி என்று தகவல்கள் தெரியவந்ததாக இங்கிலாந்தின் செய்தி இதழ்கள் குறிப்பிடுகின்றன. மேற்கண்ட குற்றச் சாட்டை வைத்து சவுதி இளவரசரை இம்மத அமைப்புகள் இஸ்லாத்தின் பாலியல் கொள்கைக்கு எதிரானவர் என்று கூறி தூக்கிலடச் சொல்லி போராட்டம் நடத்துமா ? இதெல்லாம் நடக்காது ஏனெனில் சவுதி என்னும் புண்ணிய பூமியில் பிறந்த இளவரசர் அப்படி பட்டவராக இறைவன் படைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே நம்புவார்கள் மற்றும் இவை இஸ்லாத்து எதிராக கிறித்துவ நாடான இங்கிலாந்து இட்டுக்கட்டிப் பரப்பப்படும் செய்தி என்றே நம்புவார்கள்.

ஒருவருக்கு எதிர்பாராமல் நடக்கும் திடீர் விபத்து அல்லது குணப்படுத்த இயலாத திடீர் நோய் என்பது இறைவன் அவரை நாடவில்லை என்பதால் ஏற்பட்டது என்று நம்பவும் பரப்பவும் முடிந்தால் உடல் ஊனம் மன ஊனம் இவைகளும் மற்றும் திருநங்கை பிறப்புகளும் கூட அவ்வாறே ஏற்பட்டது என்று நம்பலாமே, அவர்கள் வழியில் அவர்கள் செல்கிறார்கள் இஸ்லாமிய பெயரை தாங்கி இருந்தார்கள் அல்லது இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த மரண தண்டனை என்றால்
குறையாக படைத்த இறைவனுக்கு என்ன தண்டனையோ ?

எங்கேயோ படித்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது,

ஊனமுற்றோர் கடவுளின் குழந்தைகள் என்றால்
உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டியது
கடவுளுக்குத்தான்
!


தொடர்புடைய செய்தி :

திருநங்கை மின்னல் மீனா கொலையில் 3 பேர் கைது

திருச்செந்தூர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த திருநங்கை சேக் அலி என்கிற மின்னல் மீனா(35), கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி காலையில் காட்டுப்பகுதியில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


பிரேதத்தை கைப்பற்றிய ஆறுமுகநேரி போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர்.

இக்கொலை தொடர்பாக காயல்பட்டணத்தில் புரோட்டா கடை வைத்துள்ள தாஜீதீன்(28), ஆட்டோ டிரைவர்கள் ஜாபர் சதீக்(24), ஹசன்(எ) முகம்மது ஹசன் (32) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ‘எவ்வளவு கண்டித்தும் கேட்காமல், இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு மாறாக, பெண் வேடமிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்ய முடிவெடுத்தோம்.

இதனால் செப்டம்பர் மாதம் 16 ம் தேதி இரவு மின்னல் மீனாவை கம்பால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டோம்’’என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பான உமர் பாரூக் தலைமறைவாகவுள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

சுட்டி : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42072

பின்குறிப்பு : இந்தப் பதிவு எந்த மதத்திற்கு எதிராகவும் எழுதப்படவில்லை, மதவாதிகளின் செயல் மட்டுமே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது என்பதை மதவாதிகள் அல்லோதோர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்

26 அக்டோபர், 2010

எனக்கு வந்த வாசகர் கடிதம் !

எனக்கு வந்த வாசகர் கடிதம் நேரமின்மையால் மொழி பெயர்க்க இயலவில்லை அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.

Dear KANNAN,

I have been in search of someone with this last name KANNAN", so when I saw your name I was pushed to contact you and see how best we can assist each other. I am a Banker here in GHANA. Sorry but for security reasons, i will not tell you my name and the name of my bank until you declare your interest in what i am about to reveal to you. I believe it is the wish of God for me to come across you now. I am having an important business discussion I wish to share with you which I believe will interest you because, it is in connection with your last name and you are going to benefit from it.

One Late Mathew KANNAN a citizen of your country had a fixed deposit with my bank in 2004 for 36 calendar months, valued at US$35,000,000.00. (Thirty Five Million Dollars only) the due date for this deposit contract was the 16th of January 2007. Sadly Mathew was among the death victims in the May 26 2006 Earthquake disaster in Jawa, Indonesia that killed over 5,000 people. He was in Indonesia on a business trip and that was how he met his end. My bank management is yet to know about his death, I knew about it because he was my friend and I am his account officer. Mathew did not mention any Next of Kin/ Heir when the account was opened, and he Mathew was not married and no children. Last week my Bank Management requested that I should give instructions on what to do about his funds, if it’s to renew the contract.

I know this will happen and that is why I have been looking for a means to handle the situation, because if my Bank Directors happens to know that Mathew is dead and do not have any Heir, they will take the funds for their personal use, so I don't want such to happen. That was why when I saw your last name I was happy and I am now seeking your co-operation to present you as Next of Kin/ Heir to the account, since you have the same last name with him and my bank head quarters will release the account to you.

There is no risk involved; the transaction will be executed under a legitimate arrangement that will protect you and I from any breach of law. It is better that we claim the money, than allowing the Bank Directors to take it, they are rich already. I am not a greedy person, so I am suggesting we share the funds equal, 50/50% to both parties, my share will assist me to start my own company which has been my dream.

Let me know your mind on this and please, do treat this information as TOP SECRET. We shall go over the details once I receive your urgent response strictly through my personal Email address:step.abban@gmail.com,we can as well discuss this on phone;+233547477143.Have a nice day and God bless.
Anticipating your communication.

phone;+233547477143
Email:step.abban@gmail.com

*******

என்னது இது வாசகர் கடிதம் இல்லையா ? கடுதாசி அல்லது லெட்டர்னு வச்சிக்குங்களேன் :)

வலையுலக நோய் !

40 இடுகைகளும் 40 பிந்தொடர்வோர்கள் கிடைத்துவிட்டால் எதாவது பிரச்சனையை காரணம் காட்டி நான் வலைப்பதிவில் இருந்து விலகுகிறேன் என்று படம் காட்டுவது வலைப்பதிவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. ஒருவேளை வலைபதிவில் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று நினைத்து காட்சிப் படுத்தும் மனநிலையில் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறியப்பட்ட எழுத்தாளர்கள் சாரு, ஜெமோ மற்றும் ஞானி இவர்கள்தான் இவ்வாறு வார இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்து சிறு பிரச்சனையைக் காரணம் காட்டி நான் இனிமேல் இங்கு எழுதமாட்டேன் என்று ஸ்டண்ட் அடிப்பார்கள். வலைப்பதிவு வார இதழ் கிடையாது, எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம் என்றாலும் 'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' ரேஞ்சுக்கு குற்றச்சாட்டுகளைக் கூறி விலகுவது எழுத்தில் தாங்கள் வைத்திருந்த ஆர்வத்தை தாங்களே குழி தோண்டி புதைப்பதாகும். ஒரு சிலரை காரணம் காட்டி விலகுவது என்பது அந்த ஒருசிலருக்காகத்தான் இவர்கள் எழுதி வந்ததாக பலர் நினைக்கும் படி செய்துவிடுவதை இவர்கள் ஏன் நினைப்பதே இல்லை ?

என்னைக் கேட்டால் வலைப்பதிவில் இருந்து முற்றிலுமோ தற்காலிகமோ விலக கீழ்கண்ட காரணங்கள் மட்டுமே,

1. இணைய வசதி (தொடர்பில்) இல்லாதது
2. வலைப்பதிவில் மூழ்கி மற்றபணிகளில் கவனிமின்றி அன்றாட செயல்பாடுகள் முடக்கம்
3. வலைபதிவில் இல்லாத பிற நண்பர்களிடம் முற்றிலுமாக தொடர்பு அற்றுப் போகுதல்
4. இல்லத்தினரிடம் நேரம் செலவு செய்ய இயலாமை
5. பிற பணிகளுக்கிடையே நேரமின்மை
6. சரக்கு இன்மை

இது தவிர்த்து யாரோ எவருக்கோ பிடிக்கவில்லை அல்லது குற்றம் சுமத்துகிறார்கள் என்று எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று கூறுவதெல்லாம் 'நான் வளர்ந்துவிட்டேன்......என்னைய தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுங்கள்..... இல்லை என்றால் விலகுகிறேன்' என்பது போன்ற வெறும் பாவ்லாக்களே. இது தேவையற்றது எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை. நாம் எழுதுவதா வேண்டாமா தொடரலாமா கூடாதா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நம்முடைய சூழலே அன்றி பிறரின் விருப்பு வெறுப்பு அல்ல. வலைப்பதிவில் இருந்து எத்தனையோ பேர் பல காரணங்களுக்காக எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள்அதை ஒட்டு மொத்த வலையுலகமும் அவர்கள் ஏன் எழுதுவதை நிறுத்தினார்கள் என்று நினைவு வைத்துக் கொள்வதும் இல்லை.

"நான் எழுதுவதை நாலு பேர் படிக்கிறார்கள் என்றாலும் படிக்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளை சேர்த்துவைக்கும் ஒரு நாட்குறிப்பு என்பதாகத்தான் நான் எழுதிவருகிறேன். இவற்றை நானே திரும்பி படிக்கிறேனோ இல்லையோ எனது வாரிசுகள் இவற்றில் ஒரு சிலவற்றைப் படித்து அதிலிருக்கும் நல்லவற்றை தெரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு" என்று நினைப்போர் எவர் பொருட்டும் எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை.

40 இடுகைகள் 40 பிந்தொடர்வோர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பது தன் மீதான உயர்வு மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தால் உடனே அடிபடும் என்பதற்குத்தான் அவ்வாறு குறிப்பபிட்டேன் அந்த எண்ணிக்கை 400 அல்லது அதற்கு மேலும் கூட இருக்கலாம். இதுவும் தனிப்பட்டு எவரையும் கிண்டல் செய்ய எழுதவில்லை. எழுத்தின் மீதான வெறுப்பு பிறர் தூண்டலால் நிகழ்வது சரி இல்லை என்பதற்காக குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்குவது தனிப்பட்ட நேர இழப்பு என்பது உண்மை தான் அதற்காக முற்றிலும் தவிர்பதைவிட நம்மை நண்பர்களாக மதித்தவர்களுக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்பது எனது எண்ணம்.

22 அக்டோபர், 2010

ஒரே புகைச்சல் !

தீபாவளி நெருங்க மழைகாலம் துவங்கி இருக்கும், அதன் பிறகு பனிக் காலம், "எங்கூரு சிங்கையில்", முந்தைய நாள் காலை 7 மணிக்கு அலுவலகம் புறப்பட வெளியே வந்தால் எங்கும் பனிப் படர்ந்தது போல் இருந்தது, ஆனால் குளிருக்கான அறிகுறி இல்லை. மிதமான தீயின் மணம், பிறகு தான் தெரிந்தது சுற்றிலும் அடர்த்தியாக பனி போல் தெரிவது பனி அல்ல, புகை மூட்டம் என்பது. இந்தோனேசியா சுமத்திராவின் அடர்ந்த காட்டுப் பகுதி சிங்கைக்கு மிக அருகில் இருப்பதால் காடுகள் பற்றி எரியும் போது ஏற்படும் புகை சிங்கை மலேசியாவையும் அடையும். சுற்றுச் சூழல் நிலை ஓரளவு கட்டுப்பாடு எண் அளவில் இருப்பதால் அரசு அறிவிப்பாக இன்னும் முகமூடி அணியச் சொல்லி எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை. இன்னும் மூன்று நாளைக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள்.

பார்க்க சூரியன் கண்ணுக்கு குளிர்ச்சியாக சிவப்பு நிலா போல் தெரிகிறது, 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' மறைச் சொல்லுக்கு இந்தோனியா காட்டுத் தீ பழிப்பு காட்டி சூரியன் சுடர்களை மறைத்துவிட்டது.


பின்குறிப்பு : "எங்கூரு சிங்கையில்" - பத்து ஆண்டுகளாக தின்று கொண்டிருக்கிறேன், எங்கூருன்னு சொல்வதால் நான் தேச துரோகி ஆகிவிடமாட்டேன் என்று தேசிய பாகைமாணிகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அதான் கனியன் பூங்குன்றனார் சொல்லிவிட்டாரே யாதும் ஊரே யாவரும் கேளிர்னு.

*****



அலுவலகத்தில் உடன் பணி புரியும் தோழிகள் தான். நிறுவன ஆண்டுவிழாவிற்கு நல்ல அழகாக அலங்காரம் செய்து வந்திருந்தார்கள், 'பேஸ் புக்குல போடனும் போஸ் கொடுங்க' என்றேன் கொடுத்தார்கள். இருவரும் சீன நங்கைகள், ஒருவர் மலேசியர் மற்றொருவர் சிங்கப்பூரார்.

11 அக்டோபர், 2010

அப்துல்கலாம் ஐன்ஸ்டன் ஆனக் கதை !

கடவுள் பற்றிய விவாதங்களில் பல இடங்களில் அப்துல் கலாம் பெயர் தொடர்புபடுத்தி கட்டுரைகள் வரும், அதாவது கடவுளின் இருப்பை கலாம் வரையறுத்துவிட்டார் என்பதாக அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த உரையாடல் என்ற ஒன்றை எடுத்துப் போடுவர்.

உண்மையில் இப்படியான உரையாடல் கலாமுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்ததா என்று எவரும் கேட்டுத் தெரிந்து கொண்டது போலவோ அல்லது கலாம் அவ்வாறு தன் பேச்சுகளில் எங்கும் குறிப்பிட்டதாகவோ தெரியவில்லை. அண்மையில் ஒரு ஆங்கில இணையப் பக்கத்தை திறந்த போது அதிர்ந்தேன் (நான் அப்படியே ஷாக்காயிட்டேன்). ஏனெனில் கலாம் - ஆசிரியர் உரையாடலின் அப்பட்டமான ஆங்கில மொழிப்பெயர்ப்பில் எழுதப்பட்டு முடிவில் அந்த உரையாடல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்திருந்ததாகப் போட்டிருந்தது. அதே போன்ற உரையாடல்கள் இன்னும் பலமொழிகளில் அந்தப் பகுதி அறிஞர்கள் கடவுளை மெய்பித்த கதையாக ஒவ்வொரு நாட்டிலும் வழங்கிவரும் என்று நினைக்கிறேன். இது போன்ற உரையாடல் மலேசிய கிறித்துவ மாணவனுக்கும் அவரது புரொபெசருக்கும் நடந்ததாகவும் எழுதி இருக்கிறார்கள். யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆத்திக மனநிலைக்கு ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருப்பதால், அந்தந்தப் பகுதி இருப்பவர்களை அதில் நுழைத்து எழுதிவிடுகிறார்கள்.

இன்னும் எத்தனை பேரு கிளம்பி இருக்கிறார்களோ.........ஏன் இந்த பொழப்பு.......கடவுள் இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே......காப்பிரைட் இல்லாத கதைகளை கண்டபடி திருத்தி எழுதி என்னை நிருபியுங்கள் என்று எங்கும் கடவுள் மன்றாடியதைப் போல் தெரியவில்லை..... இந்த பொழப்புக்கு மாற்று மதத்துக்காரனை மனிதனாக நினைச்சு மனிதனாக வாழலாமே.

The Atheist Professor vs the Christian Student)


http://malaysianatheist.blogspot.com/2006/11/atheist-professor-vs-christian-student_11.html

(மலேசியா வர்சன்)

http://www.patrish.com/atheist.html
(கிறித்துவ வர்சன்)

http://hasnain.wordpress.com/2006/05/31/a-dialogue-between-an-atheist-professor-and-a-student/
(இஸ்லாம் வர்சன்)


http://pudukai.blogspot.com/2009/07/blog-post.html
(கலாம் வர்சன்)

http://www.religioustolerance.org/culeins.htm
(ஐன்ஸ்டன் வர்சன்)

**************



இனிமே இது கலாம் சொன்னது, கண்ணதாசன் சொன்னது கதை எழுதினால் கண்டபடி கண்டனம் செய்து இந்த சுட்டியை அங்கு சேர்ப்பேன்.

என்ன கொடுமை சார் இது.........!

கூகுளில் "The Student & the Atheist Professor", என்று தேடினால் ஒரு வண்டி குப்பைக்கு மேலாகக் கொட்டுது. இதை நான் கடவுள் ஏற்பு மறுப்பு என்கிற நிலையில் நின்று எழுதவில்லை, திருப்பதி கடிதம் பலவடிவங்களில் வருவது போல் இந்த 'கடவுள் நிருபன' கதைகளும் வெளிவருது என்று காட்டவே எழுதினேன்.

8 அக்டோபர், 2010

ஷங்கர் குழப்பியுள்ள கடவுள் மற்றும் உயிர் !

நாம எதைப் பற்றி மிகுதியான ஆர்வம் கொண்டிருக்கிறோமோ, அது நம்மைக் கடக்கும் போது அதை கண்டிப்பாக தவறவிட்டுவிடமாட்டோம். அது நம் எண்ணத்தில் ஊறிய சமூகம் சார்ந்த கருத்துக்களாக இருந்தாலும் சரி, நாம் விரும்பும் ஒரு பொருளாக இருந்தாலும் சரி.

*****

கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? இது எந்திரன் படத்தில் ரோபோவிடம் கேட்கப்படும் கேள்வி...

இதற்கு ரோபோ சொல்லும் விடை

'என்னைப் படைச்சவர் இவர், இதே போல் ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னால் ஒருவர் இருக்கிறார்......எனவே கடவுள் இருக்கிறார்;

இந்த விடைக்கு திரையரங்கில் பலர் கைத்தட்டினார்கள்.

ரோபோவே சொல்லிவிட்டது எனவே கடவுள் உண்டு என்று கொள்வதா ? அல்லது கடவுளுக்கு ரோபோ சாட்சியா என்பதையெல்லாம் விட ரோபோவுக்கு என்ன (புரோகிராம் வழி) சொல்லப்பட்டு இருக்கிறதோ அதன் படிதான் சொல்லும், எனவே இந்த விடையை ரோபோ சொல்லிய விடை அல்லது ரோபோ கடவுள் இருப்பிற்கு சாட்சி என்றெல்லாம் கொள்ள முடியாது. ரோபோ என்ன ரோபோ நம்ம ஊரில் பாம்பு பால் குடித்துவிட்டு, பிள்ளையார் கழுத்தில் படர்ந்து கடவுள் இருப்பதை நிருபனம் செய்துவிடும். நல்ல பாம்புகள் நிருபனம் செய்யாத வேறொரு கடவுளையா ரோபோ நிருபனம் செய்துவிடப் போகிறது...... ?
நம் நாட்டில் நாகப் பாம்புகள் அதற்காவே புற்றுகளில் குடி இருக்கின்றன. :))))

இது நகைச்சுவைக்கு என்றாலும் கூட, எந்திரன் படத்தில் முதலில் கடவுள் இருப்பை உறுதிப்படுத்தும் ரோபோவை விஞ்ஞானி எந்திரன் குழப்பி இருப்பார். அதாவது ரோபோவுக்கு 'உயிர் மற்றும் உணர்ச்சிகள்' பற்றி விளக்கும் காட்சி, அந்த இடத்தில் ரோபோ உயிர் என்றால் என்ன ? என்று கேட்க....'எப்படிச் சொல்றது......பூமியில் உயிர் என்பதே.....பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எதோ ஒரு (கோள்) மோதலில் ஏற்பட்ட விபத்தினால் ஏற்பட்ட ஒன்று' என்பதாக பரிணாம கோட்பாட்டை விளக்குவார்

இதை படம் பார்க்கும் எத்தனை பேர் உள்வாங்கினார்கள் என்று தெரியவில்லை, ரோபோ விடையாக சொல்லும் கடவுள் உண்டு என்பதற்கு முற்றிலும் மாற்றாக பிற்பகுதியில் உயிர்களின் உருவாக்கம் என்பது தற்செயலாக நடந்த ஒன்று விஞ்ஞானி அறிவியல் (பரிணாமக்) கோட்பாட்டை விளக்கி இருப்பார். பார்வையாளர்கள் எப்படி உள்வாங்கி கொள்ள வேண்டும் ? கடவுள் இருக்கார் ஆனால் எதையும் படைக்கல, மனிதர்கள் எந்திரங்களை படைக்கிறார்கள் எந்திரங்களுக்கு மனிதர்கள் தான் கடவுள். பரிணாமக் கோட்பாட்டின் படி தற்செயலாக நடந்த விபத்தில் யாராலும் படைக்கப்படாத மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ?

இந்த படத்தில் சொல்லும் இந்த 'கடவுள்' மற்றும் 'உயிர்' குறித்த தகவல் ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது என்று நினைக்க ஒன்றும் இல்லை. படத்தில் இடம் பெறும் இந்த இரு சொல்லாடல்கள் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்றவையாகவும் முரண்பாடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மாற்றாக கடவுள் பற்றிய கேள்வியில் தசவதாரம் படத்தில் கமல் 'கடவுள் இல்லைன்னு சொல்லவில்லை, இருந்தா நல்லா இருக்கும்...' என்று தான் சொல்லுகிறேன் என்றது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும் குழப்பமற்ற 'நச்'

6 அக்டோபர், 2010

இணைய விவாதங்களில் விலகும் நட்புகள் ?!

கட்டற்ற இணையவெளி என்ற நம்பிக்கையில் இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் எழுதுகிறோம். கூகுள் பஸ் மற்றும் கூகுள் தனிநபரைச் சார்ந்து இயங்கும் குழுமங்களிலும் எழுதுகிறோம். கட்டற்ற இணையவெளி என்பது சேறுவாரி இரைக்கும் அல்லது அவதூறுகளையும் சுமந்து கொண்டு செல்லும் என்பது அல்ல என் புரிதல். இருந்தாலும் அரசியல் சார்பு அல்லது பொது நபர்கள் குறித்த விமர்சனங்களில் ஓரளவு நடப்புகளையும் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டே விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. அரசியல்வாதி அல்லது பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் ஆபாசம் எதுவும் இல்லை என்றால் அது எதிர்வினை அல்லது ஆதங்கம் என்ற அளவில் தான் எனது புரிதல்.

பொதுவாக அரசியல் தளத்தில் இயங்குபவர்கள் தமக்கென்று கொள்கை இருப்பதாகவும் அதுவே தமது அல்லது தான் சார்ந்த கட்சியின் தனித்துவம் என்று சொல்வர். பெரியாரும் அண்ணாவும் உருவாக்கி வளர்த்த திக மற்றும் திமுக கழகத்தின் இன்றைய கொள்கை என்ன என்பது யாரேக்கேனும் தெரியுமா ? இருந்தாலும் அந்தக் கட்சிகள் தங்கள் கொள்கை சார்ந்து இயங்குவதாகவேச் சொல்லிக் கொள்கின்றன. திமுக தோன்றி பதவியை பிடித்த காலத்தில் தமிழக தேசிய காங்கிரஸ் கட்சி என்பது நேரிடையாகவே எதிர்கட்சி முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய கட்சிகள். இதற்கிடையே இந்திராகாந்திக்கு விதவை பென்சன் வேண்டுமானால் தருகிறேன் என்று வீரவசனம் பேசிய கருணாநிதியை எமெர்ஜென்சியின் போது நன்கு புடைத்தனர் காங்கிரசார். அதைத்தான் பாம்புகள் பல்லிகள் நிறைந்த சிறைச்சாலையில் கழித்தகாலம் என்று கருணாநிதி சொல்லிவந்தார். திமுகவை அழிக்க முயன்று அல்லது ஆட்சியை விட்டு அகற்ற முயன்று தோற்கும் நிலையில் முற்றிலுமாக மறையக் கூடிய சூழலில் அப்போதைய திமுகவிலிருந்து பிரிந்த அதிமுக பின்னால் நின்று திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிக்காட்டியது காங்கிரஸ்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான திமுகவிற்கு இறங்குமுகம் தான். இதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் என்றாலும் காங்கிரசின் கூட்டணி இன்றி இதனை அவர் தனித்து செய்து காட்டிவிடவில்லை. எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகும் ஜெயலலிதாவின் பின்னால் நின்று திமுகவை எதிர்த்து வந்தது, ஜெவின் முதல் ஐந்தாண்டு ஆட்சி ஊழல் மலிந்துவிட பொதுமக்களிடம் செல்வாக்கு இழந்த நிலையில் இனியும் காங்கிரஸ் அதிமுகவின் பின்னால் நின்றால் ஒன்றும் தேராது என்று உணர்ந்த மூப்பனார் போன்றோர் சொல்லியும் கேட்காமல் காங்கிரஸ் அதிமுகவுடன் அடுத்தும் கூட்டணி கண்டது. அந்த தோல்வியில் காங்கிரசும் அதிமுகவும் படுதோல்வி அடைய திமுக ஆட்சி அமைந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் என்னும் நந்தி மூப்பனார் தலைமையில் சிதைய கிடைத்த வாய்ப்பே மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி. அப்போது ஐகே குஜரால் மற்றும் தேவ கவுடாவின் மிகக் குறைந்த காலத்திற்கான மத்திய அரசை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஏற்படுத்தின. அவையும் கவிழ இடையில் இருந்த குழப்பமான சூழலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்தது.

வெறும் 13 மாத ஆட்சியில் சு.சாமியுட்ன ஆன டீ பார்டியில் ஜெ பாஜக ஆட்சியை கவிழ்த்துவிட. அடுத்த பொதுத்தேர்தலில் மதவாதக்கட்சி என்ற விமர்சித்துவந்த பாஜகவுடன் திமுக கூட்டணி கண்டது, இந்நிலையில் மூப்பனார் கழண்டு கொண்டு தாய்கட்சியுடன் சேர ஜெ தலைமையிலான சட்டமன்ற கூட்டணி அமைய ஜெவிற்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெ ஆட்சி முடியும் முன்பே ஜெ சோனியாவை தனிப்பட்ட தாக்குதல்களாக பதிபக்தி இல்லாதவர் என்பதாக விமர்சனம் செய்யவும், பாஜக செல்வாக்கு இழந்து நின்ற நிலையில் மறு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்திய அரசில் இடம் பெற்று, இரண்டாம் முறையாகவும் தொடர்கின்றன. தொடர்ந்து ஐந்து ஆண்டுக்கும் மேலான மத்திய அரசின் தலைமையில் இருப்பதால் காங்கிரஸ் ஆதரவு கொடுத்த விடுதலைபுலிகள் அழித்தொழிப்பு நடவெடிக்கைகளில் ஏராளமான ஈழப் பொதுமக்கள் வீடு இழந்து, இன்றும் முள் வேலியில் வாடும் நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில் தமிழர் நலன் குறித்து எதுவுமே செய்திடாத கருணாநிதி என்று திமுக ஆதரவாளர்களால் தொடர்ந்து குரல் எழுப்பட்டு வருகிறது.

இந்த திமுக எதிர்ப்பு என்பது வெறும் ஈழம் தொடர்புடையது மட்டுமே அல்ல, தரும புரி மாணவிகள் எரிப்பு சம்பவம் போல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டபிறகு, அது குறித்த இரு தரப்பும் கைகுலுக்கிய போது 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்பதாக பேட்டி அளித்து அப்படி ஒரு சம்பவமே தமிழகத்தில் நடக்காது போல் நெகிழ்ந்தார் கருணாநிதி. அப்போது திமுக மற்றும் கருணாநிதி ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விமர்சனக் கத்தியை வீசிக் கொண்டு தான் வந்தனர். என்னுடைய திமுக எதிர்ப்புப் பதிவுகள் என்பது அப்போதே துவங்கிவிட்டன. உச்சமாக அரசு ஆதரவு மற்றும் திமுக ஆதரவு ஊடகங்கள் மூலம் ஈழம் குறித்த நிகழ்வுகள் எதுவுமே வெளியே தெரிந்துவிடாதபடி அமுக்கப்பட்டதும் ஈழ ஆதரவாளர்கள் பலரை சிறையில் அடைத்தது உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்து கருணாநிதி இனி தன்னை தமிழின தலைவர் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர் என்பதாக கட்சி அனுதாபிகள் தவிர்த்து திமுக ஆதரவாளர்கள் அனைவருமே தூற்றினர்.

தமிழர் நலம் மற்றும் கொள்கை அளவிலும் கூட எப்போது காங்கிரஸ்கட்சியை எதிர்த்தே வந்த திமுக ஆதரவாளர்கள் நிலை காங்கிரசுக்கு துதிப்பாடும் திமுகவின் மீதும் கருணாநிதி மீதும் எப்போதோ திரும்பிவிட்டது. துரதிஷ்டவசமாக இவர்களுக்கு மாற்று என்பதாக ஜெவை ஆதரிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட நிலை தான் இன்றைய தமிழர் நலம் சார்ந்து இயங்குபவர்கள் அனைவரின் நிலையும்.

பாம்புகள் பல்லிகள் நிறைந்த பாளையம் கோட்டைச் சிறையில் தான் அடைத்துகிடந்ததை ஹனிபா குரலில் பாடவைத்து காங்கிரசு நிற்கும் தொகுதியில் அந்தப் பாட்டை ஓடவைத்து வாக்குக் கேட்கும் திமுகவினருக்கோ காங்கிரசுக்கோ கொள்கை என்று ஏதேனும் இருக்கிறதா ?

இந்த கண்றாவியெல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால், இணையம் கட்டற்ற ஊடகம் என்பதாக விமர்சனங்களை எழுதிவருகிறோம் அதில் கட்சி ஆதர்வாளர்களின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது. இவ்வாறான கட்சி ஆதரவாளர்கள் பதிவர் நண்பர்கள் என்பதாகத்தான் பழகியும் வந்தனர். அண்மையில் கூகுள் பஸ் விவாதத்தின் போது அத்திவெட்டி ஜோதிபாரதி ஒரு விமர்சனத்தை பஸ்ஸில் ஏற்றினார்

*****

அத்திவெட்டி ஜோதிபாரதி - காங்கிரஸ்காரர்கள் மேல கருணாநிதிக்கு ஒரு மரியாதை உணடு! அவர்களை ஒன்னும் செய்யமாட்டார்! :)))

Govi kannan - விதவை பென்சன் கொடுக்கிறவர் ஆச்சே..

- இது தங்கள் கட்சித்தலைவி சோனியாவைக் குறித்த மிகவும் மோசமான கமெண்ட் என்று அவராகவே கற்பனை செய்து கொண்ட ஒரு காங்கிரஸ் பிரமுகர், 'உங்க வீட்டில் யாரும் விதவை பென்சன் வாங்கி இருக்கிறார்களா ?' என்று என்மீது பாய்ந்தார். இதிலிருந்தே இவர் நண்பர் என்ற போர்வையில் வலைப்பதிவில் நுழைந்த ஒரு கட்சிக்காரர் என்பதாக உணர்ந்து நொந்தேன். பொதுவான விமர்சனத்தை சகிக்க முடியாமல் தனிப்பட்ட தாக்குதல்களாக இவர்கள் சீறும் போது தான் இவர்கள் நண்பர்களாக நாம் நினைத்தது நம் தவறே என்று உணர்ந்தேன். அவரும் சொன்னது தவறு என்று ஒப்புக் கொள்ளாத நிலையில் அவரிடம் தனிப்பட்டு எந்த ஒரு விவாதமும் செய்யாமல் முற்றிலுமாகத் தவிர்த்தேன்.

அடுத்து அபி அப்பா என்கிற திமுக கட்சிக்காரரின் விவாதத்தின் இடையே

அபி அப்பா - \\ நீங்கள் தான் கருணாநிதி பற்றி சொல்லும் இடத்திலெல்லாம் ஜெவைக் கொண்டு வந்து முட்டுக் கொடுக்கிறீர்கள்\\

இல்லை கோவி! நான் அத்தனை அனுபவம் இல்லாதவன் இல்லை.சும்மா சும்மா ஜெயலலிதா பத்தி பேச எனக்கு என்ன வேண்டி கிடக்கு. நீங்கள் தான் எந்த எந்த விஷயம் விவாதத்துக்கு எடுத்து கொண்டாலும் அங்கே கலைஞரை சம்மந்தமே இல்லாமல் கொண்டு வருகின்றீர்கள். அதன் காரணமாகவே நான் ஒரு முறை உங்க பாணிக்கே வந்தேன். அப்போது கூட கீழே டிஸ்கி போட்டு சொன்னேன்.(அப்பாடா நானும் சம்மந்தமில்லாமல் உளற ஆரம்பிச்சுட்டேனே) என்று சொல்லி தான் நானும் ஜெ வை இழுத்தேன். சுந்தர் பஸ்ல கூட குழலி கம்பேரிடிவா ஜெ தான் திமுகவை விட உயர்வு என சொல்லிய போது அதை ஒட்டியே தான் வாதம் செய்தேன்.

இப்பவும் சொல்கிறேன். எதை கொடுக்கிறோமோ அதான் திரும்ப வரும்!

@குழலி! கண்ணதாசன் ஒரு பெயிலியர் ரோல் மாடல் இந்த உலகிற்கு. அதை நீங்கள் பின்பற்றுவதால் எனக்கு பெரிய வருத்தம் என்ன இருக்க போகின்றது. கோ அஹட். (உலகில் கண்ணதாசன் பேரன் பேத்திகள் கூட "நீ வரும் காலத்தில் கண்ணதாசன் மாத்ரி ஆகனும்னு தவறி கூட சொல்ல மாட்டாங்க அப்படி ஒரு நொட்டோரியஸ் அவரு என்பது எல்லாரும் ஒத்து கொண்ட உண்மை)
Govi Kannan - //அப்போது கூட கீழே டிஸ்கி போட்டு சொன்னேன்.(அப்பாடா நானும் சம்மந்தமில்லாமல் உளற ஆரம்பிச்சுட்டேனே) என்று சொல்லி தான் நானும் ஜெ வை இழுத்தேன். //

ஆக கருணாநிதி பற்றிப் பேசும் இடங்களில் ஜெவைக் கொண்டு வந்து ஒப்பிடும் போதே நீங்கள் கருணாநிதிக்கு மாற்று ஜெ தான் என்று ஒப்புக் கொள்வதாகவே இருக்கிறது. நீங்க என்ன உங்க தலைவரும் ஜெவின் பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லிவருவதில் இருந்தே, கருணாநிதி ஜெ வை எந்த் அளவுக்கு நினைக்கிறார் என்பது வெள்ளிடை மலை.

நாங்க கருணாநிதியைத்தான் விமர்சனம் செய்வோம், அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர். ஜெ ஆட்சியில் இல்லை. ஜெ ஊழல் வாதி இல்லைன்னு கோர்ட் சொன்னாலும் நீங்க ஒப்புக் கொள்ளுவிங்களா ?

அபி அப்பா - \\அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர்\\\

அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

\\ஜெ ஊழல் வாதி இல்லைன்னு கோர்ட் சொன்னாலும் நீங்க ஒப்புக் கொள்ளுவிங்களா ?\\ :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) என்ன பதில் எதிர்பார்க்குறீங்க என் கிட்ட இருந்து??? அதையே போட்டுகுங்க கோவி!Sep 29
KRISHNAMOORTHY BASKARAN - // இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

ஜென்மம் 2010 mudivurum.................Sep 29
Govi Kannan - //:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) என்ன பதில் எதிர்பார்க்குறீங்க என் கிட்ட இருந்து??? அதையே போட்டுகுங்க கோவி!//

என்ன பதிலா கருணாநிதியும் ஜெவும் என்னைப் பொருத்த அளவில் ஒன்று தான். நீங்க என்ன தான் கரடியாக கருணாநிதி நல்லவரு வல்லவரு என்றாலும் தீர்ப்பு வழங்கினாலும் நாங்க ஒப்புக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்னும் முள்ளி வாய்க்காலுக்கு விமோசனம் கிடைக்காத நிலையில் கருணாநிதி இருந்தாலும் ஒண்ணு தான் செத்தாலும் ஒண்ணு தான்

Govi Kannan - //அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்! //

கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம்.

அவரு கருணாநிதியை வாழ்த்துவதாக நினைத்து என் ஆயுளை குறைத்து கேவலப்படுத்துறார், கருணாநிதி ஆதரவாளர்களெல்லாம் சிந்திக்கத் தெரியாதவர்கள்.

அபி அப்பா நீங்க வேண்டுமானால் ஆயுள் முழுவதும் கருணாநிதி காலில் விழுந்து கிடங்கன்னு சொல்கிறேன், இது வாழ்த்தா வசவான்னு நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

*****


இந்த உரையாடலின் தொடர்ச்சியில் திமுக பற்றாளர் ஒருவர் (அபி அப்பா அல்ல)

அது எப்படி என் தலைவனை செத்துப் போகச் சொல்லுகிறாய் ? ஒருவர் சாகவேண்டும் என்று நினைக்கும் உன்னை போன்ற ஆட்களுடன் நான் நட்பாக இருக்க விரும்பவில்லை, இதுவே நமக்கு நடக்கும் கடைசி உரையாடல் இனி என்னைப் பார்க்கவேண்டாம் என்பதாக ஒரு உடன் பிறப்பு எகிறிச் சென்றார்.

இவர்களுக்கு முள்ளிவாய்கால் பிணங்களோ, தமிழக மீனவக் காயங்களோ செயல்படும் இடத்தில் இருந்து செயல்படாமல் போன தலைவன் ஒருநாள் போகத்தானே போகிறார் என்று சொன்னதைவிட பெரிதே அல்ல. சாவு என்பது தன் தலைவனுக்கு என்றால் தான் சோகம் மற்றவர்களுக்கு என்றால் அது தீபாவளி நாள்.


கருணாநிதியை 'நன்கு வாசிப்பவர்' என்று சொல்லி சாதிச் சாடல் சாடிய இளங்கோவனும் கருணாநிதி பக்கத்தில் அவ்வப்போது நின்று போஸ் கொடுத்துதான் வருகிறார். ஜெ பக்கத்தில் நின்று கருணாநிதியைத் தூற்றியோர் பிறகு கருணாநிதி பக்கத்தில் நின்று ஜெவைத் தூற்றுகிறார்கள். இவற்றில் ஆபாசப் பேச்சுகளும் அடங்கும். முற்றிலும் எதிர் எதிர் நிலையில் இருந்த திமுகவும் காங்கிரஸும் பத்தாண்டுகளாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, இவர்களின் நிலையும் கொள்கைகள் எதுவும் கூட நிலையானது இல்லை. கருணாநிதிய அடித்து உதைத்து துன்புறுத்தியோர், எதிர்கட்சியில் இருந்து கொண்டு செய்யாத விமர்சனத்தையா நான் செய்துவிட்ட்டேன் ?

ஒரு தமிழர் தலைவன் இருக்கிறானா இல்லையா என்கிற ரீதியில் ஈரண்டுகளுக்கு மேலாக ஊகங்களே நிலவு வரும் வேளையில் 87 வயது முதியவர் ஒருநாள் இறக்கப் போகிறவர் தானே என்பது தூற்றலாம். சூப்பர் ஸ்டார் இறக்கும் படி நடித்தால் ரசிகர் பொங்கிவிடுவார்கள் என்பது போல் கருணாநிதி இறந்துவிடுவார் என்று சொன்னால் கூட இவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாதாம். இந்த உலகத்தில் சாகாவரம் பெற்றவர் யார் ?

*********

ஒருவரிடம் நீ கருணாநிதி தாத்தா வாழும் வரை வாழ வாழ்த்துகிறேன் என்று சொல்வது அவருக்கு வாழ்த்தா ? வசவா ? அபி அப்பா அப்படியான வாழ்த்தை எனக்கு வழங்கினார், அதற்கு பதில் சொன்ன நான் கருணாநிதி செத்துப் போகவேண்டும் என்று விரும்புகிறேனாம். கருணாநிதி ஏற்கனவே 87 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர். பெரியார் 90 வயதுவரை வாழ்ந்தார், அதிகபட்சமாக கருணாநிதியின் வாழ்நாள் என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது கருத்து சொல்வது இயல்பு தானே.

யார் வேண்டுமானாலும் எந்த கொள்கையில் இருக்கட்டும், அதற்காக பழகியவர்களைவிட கொள்கை பெரிது என்று நினைக்க அவர்கள் கொள்கை சார்ந்தவர்களிடம் மட்டும் பழகினால் யாதொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்படியானவர்கள் தங்கள் நிலையை என்றுமே தெரிவித்து இருந்தது இல்லை, ஒருவேளை அப்படித் தெரிவித்திருந்தால் என்போன்றோர் ஏன் பழக்கப் போகிறோம் ? கட்சிகார்ர்களை நண்பர்களாக நினைத்துப் பழகும் கட்சி சார்பற்றவர்கள் சிந்தனைக்கு விடுகிறேன்

வேறொரு பதொவொன்றில் ரஜினி குறித்த விவாதத்தின் முற்றலில் பதிவர் கிரியுடன் கடும் வாக்குவாதம் முடிவில் தனித்தாக்குதலாக தொடரும் வேளையில் 'இதுவரை உங்களை சந்தித்தாத ஒருவருக்காக, இனியும் உங்களை அவர் சந்திப்பாரா என்று எந்த உறுதியும் இல்லாத நிலையில், இதுவரை பழகிய என்னை தனித்தாக்குதல் செய்கின்றீர்களே, ஒருவேளை அவர் தான் முக்கியம் என்றால் நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது ?' என்று கேட்டேன். உடனடியாக அவர் எனக்கு ரஜினி முக்கியம் இல்லை கோவி.கண்ணன் நீங்கள் தான் முக்கியம் என்று அதுகுறித்த பின்னூட்ட கருத்துக்கள் அனைத்தையும் அழித்தார் கிரி, அது எனக்கு பெருமையாகத்தான் இருந்தது.

என்னுடன் பல பார்பனர்கள் நெருங்கிப் பழகுகின்றனர், என்னுடைய சமூகக் கட்டுரைகளில் பார்பனியம், இந்துத்துவம் பற்றிய கடுமையான விமர்சனம் அனைவருமே அறிந்தது தான். நான் அப்படி எழுதுகிறேன் என்பதற்காக இதுவரை என்னுடன் நேரிடையாகப் பழகும் எந்த ஒரு பார்பனரும் நட்பை முறித்துக் கொள்கிறேன் என்று விலகியதோ, தனிப்பட்ட தாக்குதல் தொடுத்ததோ இல்லை.

தங்கமீன் - முதல் சிங்கப்பூர் தமிழ் இணைய இதழ் !

அண்மையில் பதிவர், சிங்கப்பூர் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் பதிப்பக உரிமையாளர், நண்பர் திரு பாலு மணிமாறன் அவர்களின் முயற்சியினால் ஆர்வத்தினால் தங்கமீன் என்கிற இணைய இதழ் அறிமுகவிழாவிற்கு அழைப்பின் பெயரில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சியை கவிஞர் மற்றும் எழுத்தாளர் ந.வீ.விசயபாரதி தொகுத்து வழங்கினார்.


கணிணி தொழில் நுட்பத்தை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துவர்கள் பலர், அதில் அண்ணன் பாலு மணிமாறன் குறிப்பிடத் தக்கவர். புலம்பெயரும் தமிழர்கள் தமிழை தாய்மொழியாக எடுத்துச் சென்று பின்னர் பெற்றோர்களைப் போலவும், பெற்றக் குழந்தையைப் போலவும் பேணி காத்து, சீராட்டுவதால் குறிப்பிட்ட பலநாடுகளில் தமிழ் வளர்ச்சி கண்டுள்ளது, தேசிய அடையாள மொழியாகவும் வளர்ந்துள்ளது. தன் சிந்தனைகள் தோறும் தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதாக முயற்சி எடுப்போர் பலர், அண்ணன் பாலு மணி மாறன் சிங்கப்பூர் வந்த நாட்களாக தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை அமைத்தும், பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூல்களாகப் பதித்தும் கிட்ட தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சேவை ஆற்றிவருகிறார். இவரை நன்கு அறிந்திடாத சிங்கப்பூர் மலேசியா வாழ் எழுத்தாளர்களே இல்லை என்னும் சொல்லும் அளவுக்கு அனைவரிடமும் நல்ல செல்வாக்குப் பெற்றவர்.


சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய எழுத்துச் சேவைகள் பெரும்பாலும் தாள் (பேப்பர்) சார்ந்த திங்கள் (மாத), கிழமை(வார), நாள் வெளியிடுகளாகவே இருக்கிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்காவிட்டால் எழுத்துக்கள் பரவலான தமிழர்களை சென்று அடைய தடை என்னும் நிலை தான் உள்ளன. இன்றைய நாட்களில் கணிணி புழக்கம் பெருவாரியான தமிழர்கள் இடையே இருக்கின்ற காரணத்தில் தமிழ் இலக்கியத்தை கணிணி

சார்ந்து இட்டுச் சென்று சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும் என்று எண்ணுவோர் பலர், அதனை செயலாக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களினால் பின்வாங்குவோர் அதில் பலர், எண்ணத்தை செயலாகி வெற்றிபொருவோர் ஒரு சிலர் தான். இவர்கள் காணும் கனவு அனைத்தும் நிறைவேற்றி முயற்சிகள் வெற்றியடையக் கூடியவை தான் என்பதாக நம்பிக்கையை வளர்ப்பர். சிங்கப்பூரில் பலர் இணைய இதழ் துவங்க எண்ணி இருந்தாலும் அதை செயலாக்கிக் காட்டியுள்ளார் அண்ணன் பாலு மணிமாறன் அவருக்கு நல்வாழ்த்துகள்.

நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கும் தமிழார்வளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மலர்விழி அவர்களால் திரையிசைப் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சி தங்கமீன் பற்றிய அறிமுக நிகழ்வென்றாலும் வாழ்த்திப் பேசவந்தவர்களின் நகைச்சுவைக்கும் இலக்கியச் சுவைக்கும் குறைவில்லாமல் இருந்தது. நிகழ்ச்சியின் நிறைவு மதிய வேலை என்பதால் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் சிறப்பு.

தங்க மீன் :

தங்கமீனை தற்போது திங்கள் (மாத) தொகுப்புகளாக துவங்கி இருக்கிறார், இருந்தாலும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய இலக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது அறிவிப்புகளில் வெளி இடுவதாக குறிப்பிட்டார். பின்னர் பயனர்களைப் பொருத்து திங்கள் இருமுறை அல்லது கிழமை (வார) இதழாக தொகுக்கப் போவதாகவும்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கமீனில் சர்சைப் புக்ழ் திரு சாரு நிவேதிதா மற்றும் திரு மாலன் ஆகியோய் கட்டுரைகள் எழுதித் தொடர்வதாகப் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் மலேசிய இலக்கிய ஆர்வளர்களின் கதை கவிதை மற்றும் கட்டுரைகள் இடம் பெறுவது போலவே தமிழகம் மற்றும் உலகத் தமிழ் ஆர்வலர்களின் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தங்கமீன் சார்பற்ற தகவல் மற்றும் இலக்கிய ஊடகமாகத் திகழும். சிங்கப்பூரில் இருந்து பல்வேறு தமிழ் சார்ந்த இணைய தளங்கள், வலைப்பதிவு திரட்டிகள் மற்றும் வலைப்பதிவுகள் இயங்கி வந்தாலும் முழுமையானதொரு இணைய இதழாக தங்கமீன் தவழ்ந்து வருவது இது தான் முதல் முறை. தங்கள் இலக்கிய கதை, கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை கள், நிகழ்வுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா மேலும் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் இணைய எழுத்தார்வளர்கள் தங்கமீனில் வெளியிட ஆக்கங்களை அனுப்பலாம்.
கணிவுடன் நிகழ்ச்சியில் பங்குபெற அழைத்து உணவும் அளித்த அண்ணன் பாலு மணிமாறன் அவர்களின் இணைய தளம் தங்கமீன் சிங்கப்பூர் மலேசிய எழுத்துலகில் தன்னிகரற்ற தரமான மீனாக வளர்ந்து நிலைக்க வாழ்த்துகிறேன்.

2 அக்டோபர், 2010

எந்திரன் சொல்லும் தீர்ப்பு !

வழக்கமாக காது பிளக்க அடிக்கப்படும் விசில்கள் கூட நான் பார்த்த திரையரங்கில் இல்லை. திரையரங்கில் அத்தனை பேருமே 'டீசண்ட் பீப்பிள்ஸ்' தானா என்று வியக்க வைத்தது. படத்தில் இரஜினி எங்கே என்பதற்கு படம் முடிவதற்கு முன் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. வழக்கமாக ரஜினி செய்யும் ஸ்டைல்கள் படத்தில் இல்லை. ஆனால் அந்த ஒட்டுமொத்த எதிர்ப்பார்பையும் வில்லன் ரோபோவில் சிறப்பாக செய்திருக்கிறார். இவ்வளவு திறமையான நடிகர் ஏன் விசிலடிப்பதற்கு மட்டுமே இதுவரை படங்கள் நடித்தார் ? இரஜினி படங்களில் மாறுபட்ட படம் எந்திரன் என்றால் மிகை அல்ல. வழக்கமான ரஜினியின் அதிரடி கதாநாயகன் எந்திரனில் இல்லை என்பதால் இரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றம் தான். படத்தில் ரோபாக அவரே நடித்திருக்கிறார் என்பதை நம்பும் படி இல்லை அந்த அளவுக்கு இரஜினி ரோபோவாகவே மாறி இருக்கிறார். விஞ்ஞானி ரஜினியும் ரோபோ இரஜினியும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவராக ரஜினி அந்த பாத்திரங்களுக்குள் நுழைந்தே நடித்திருக்கிறார். மற்ற படங்களில் நடித்த போது அவருக்கு கிடைத்த சிறந்த நடிகருக்கான விருது எந்திரனுக்கு கிடைத்தால்/ கொடுத்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இரஜினியின் எந்திரன் அவதாரம் அட்டகாசம். இரஜினிக்குள் இருந்த வில்லன் நடிப்பு அப்படியே தான் இருக்கிறது, இதுவரை அதை வில்லன் பாத்திரங்களுக்கு அறைகூவல் விடும் கதாநாயகனுக்காக மட்டுமே வில்லானாக தெரியும் படி நடித்தார். இந்தப் படத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிருபனம் செய்திருக்கிறார். இவ்வளவு நாட்களாக இவருக்குள் இருந்த வில்லனை தூங்கவைத்தவர்கள் தயாரிப்பாளர்களா இயக்குனர்களா ? அல்லது மாஸ் ஹிரோ என்று இவரே போட்டுக் கொண்ட வேடமா ? தெரியவில்லை. இருந்தாலும் முதல் முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பு அறைகூவல் விடும் வில்லன் பாத்திரத்தில் தன்னாலும் செய்ய முடியும் என்று காட்டி இருப்பது திரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மற்றபடி இது போன்ற நடிப்பு இரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமே. காதல் பாடல்களில் இரஜினி ரசிகர்களுக்கான ஸ்டைல் இருக்கிறது. மற்றபடி சயின்டிஸ்ட் ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளிக் கேரக்டர் என்பதை ரஜினி ரசிகர்களால் ஜீரணிக்க முடியாது. சூப்பர் ஸ்டாரின் நடிப்பு அட்டகாசம், இன்னும் ஒருமுறை பார்க்கக் கூட எனக்கு தோன்றுகிறது. என் மகளுக்கும் எந்திரன் மிகவும் பிடித்திருந்ததாம்.

ஷங்கர் படம் தான் என்பதற்கு கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்தும், ரிச் சீன்ஸ் எனப்படும் செலவு மிக்கக் காட்சிகளைத் தவிர்த்து படத்தில் ஷங்கர் முத்திரைகள் இல்லை. வழக்கமாக ஊழலை ஒழிக்கிறேன். லஞ்சத்தை எதிர்க்கிறேன் என்று காட்சிப்படுத்துபவர் துவக்கத்தில் ரோபோவை இராணுவத்திற்கு பயன்படுத்தப் போவதாக கதையை நகர்த்தி அதையும் இடையில் மீட்டுக்கொண்டார். அவருக்கே அவரது தேசியவா(வியா)தி அவதாரம் போரடித்துவிட்டது போலும், அதனால் கதையை மாற்றும் கட்டாயத்தில் ரோபோ ஐஸ்வர்யாவை (சனா) காதலிக்க எடுக்கும் முயற்சியில் கொள்ளையடிப்பது, அதை விஞ்ஞானி ரஜினி எப்படி முறியடிக்கிறார் என்பதாக ஒரு வித காதல்கதை போல் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஒரு சில நையாண்டி வசனங்கள் சுஜாதா எழுதியவை என்பதாக தெரிகிறது. படத்தில் முழுதுமாக சுஜாதா பணியாற்றி இருந்திருந்தால் படம் கலகலப்பாக நகர்ந்திருக்கும். 2 1/2 மணி நேரத்திற்கும் மேலாக படம் ஓடுவது அயர்ச்சியைத் தருகிறது.

இடைவேளை வரையிலும் கூட ரோபோவை வைத்து ஸ்பைடர் மேன் அவதாரம் போல் எதுவும் பெரிதாக காட்சிகள் வைக்கப் போகிறார்களோ என்பதற்கு ஒரு ட்ரைன் சண்டைக்காட்சியைத் தவிர்த்து எதுவும் இல்லை. பிற்பாதியின் பாதியில் தான் படம் வேகமாக நகர்கிறது. பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார் ஐஸ். விஞ்ஞானி ரஜினியின் ஐஸும் சந்திக்கும் காட்சிகள் ஒருவருக்கொருவர் கோவித்துக் கொள்வதாகவும் அதன் முடிவில் பாடல் என்பதை அமைத்திருக்கிறார்கள், படத்தில் ரஜினிக்கும் ஐஸுக்கும் காதல் எவ்வாறு வந்தது என்பதைக் காட்ட மெனக்கடாமல் அவர்களை காதலர்களாகவே அறிமுகப்படுத்துகிறார் ஷ்ங்கர். பிறகு ரோபோ ரஜினி ஐஸை காதலிக்கக்த் துவங்குவதால் இரண்டுமுறை காதல் உருவாகும் காட்சிகளை அமைப்பது போர் என்று விட்டிருப்பார் போலும். ஐஸுக்கும் ரஜினிக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எதுவும் தெரியவில்லை, காட்சிகளில் சேர்ந்து நடிக்கிறார்கள் அதுவும் ரசிகர்களுக்கு அவர்களின் வயது தெரிந்திருப்பதால், இருவரிடமும் அது போல் பெரிதாக ரொம்பவும் எதிர்பார்க்க முடியவில்லை.

ரஹ்மான் இசைதான் படத்தை முழுதாமாக தூக்கி நிறுத்தி இருக்கிறது. அத்தனை பாடல்களும் ஏற்கனவே கேட்டுச் சென்றதால் படத்தில் காட்சிகளுடன் பார்க்க இன்னும் சிறப்பாகவே இருந்தது.

மனிதர்களைப் போல் சிந்திக்கத் தெரியும், உணர்ச்சிவசப்படும் ரோபாக்களால் மனித இனத்துக்கு பலன் எதுவும் இல்லை, மனித இனத்துக்கு போட்டியாகவும் எதிரியாகவும் அமையும், அதை அழித்துவிட வேண்டும் என்பதாக ஷங்கர் நீதிபதிகள் மூலம் தீர்ப்பு எழுதி இருக்கிறார். வருணாசிரம தருமத்தில் ஊறிய இந்தியாவில் சிந்திக்கத் துவங்கினால் உருவாகும் பிரச்சனையை நன்று அறிந்து, அதனால் தானே சூத்திரன் படிக்கக் கூடாது அவன் உடல் வழியான வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லி சூடுவைத்தார்கள், அதையே சன்குழுமம் ஷங்கரும் இரஜினி என்கிற ரோபோவை வைத்து சொல்லி இருக்கிறார். எந்திரன் ஷங்கரின் மனுதர்மம்.

ரஜினி, ரஹ்மான் இவர்களின் உழைப்பிற்காகவும், தமிழில் இதுவரை வராத கிராபிக்ஸ் முயற்சிக்காக படம் பார்கலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்