பின்பற்றுபவர்கள்

27 ஆகஸ்ட், 2010

பிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் !

முதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மற்றும் குட்டிக் கோவியாரின் வணக்கம்.




*****

ஐந்தாண்டுக்கு முன்பு வரை இருந்த இரண்டாம் குழந்தை ஆசை பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனது, காரணம் பெரிதாக இல்லை, ஒரு குழந்தையையே வீட்டில் வைத்து வளர்க்க (வேறு) வழியில்லாமல் பள்ளி முடிந்ததும் மாணவ காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மனைவியோ, நானோ இருவரில் முன்பே செல்லும் ஒருவர் அலுவலகம் முடிந்த பிறகு அழைத்துவரும் நிலையில் இரண்டாவது தேவையா ? என்கிற எண்ணம் தான். பிறகு சென்ற ஆண்டு மகளாகவே கேட்கத் துவங்கினாள், எங்கு சென்றாலும் பல இடங்களில் இரு குழந்தைகளைப் பார்த்துவிட்டு.....'நம்ம வீட்டில் ஏன் இன்னொரு பேபி வரவே இல்லை.......எப்போதான் வருமோ ?' என்று ஒருவித ஏக்கமாக கேட்க்கத் துவங்கினாள். பொருளியல் தேவையை சீராக வைத்திருக்கவும், மகளின் எதிர்காலத்திற்கு நல்லக் கல்வியைக் கொடுக்கவும் எண்ணம் இருப்பதால் உடனடியாக மனைவி வேலையை விட மனதில்லா சூழலில் 'பணிப் பெண்ணை அமர்த்திப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம்.....இரு குழந்தைகளை மாணவ காப்பகத்தில் விடுவதும் பணிப்பெண் வைத்திருப்பதிற்கும் மிகப் பெரிய செலவின வேறுபாடுகள் இல்லை என்பதால் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவாகியது.

இருந்தாலும் எங்களது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடுத்து பெண் குழந்தையாகப் பிறந்தால் அவளுக்கு திருமணம் முடிக்கும் வரை கூட பொறுப்புணர்வு என்கிற டென்சன் இருக்குமே என்கிற டென்சன் இருக்கத்தான் செய்தது. எப்படி இருந்தாலும் நம் குழந்தை தான், அப்படியே பெண்ணாக பிறந்தாலும் ஏற்கனவே இருக்கும் மகளைப் போல் இன்னொரு மகள் தானே பிறப்பாள், அவளை நேசிப்பது உண்மை என்றால், அவள் செயல்களை போற்றுவது உண்மை என்றால் பிறக்கப் போகும் மற்றொரு பெண் குழந்தையையும் அவ்வாறு நேசிக்க முடியாமலோ போய்விடும் ? என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சரி என்ற முடிவில் செயலாற்ற, மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு பள்ளி விடுமுறைக்குச் தமிழகம் சென்ற அந்த திங்களிலேயே அவள் ஆசை நிறைவேறத் துவங்கியது.

என் மகள் தெளிவாக இருந்தாள், தம்பி தங்கச்சி எதுவாகிலும் என்னுடையவர்கள் தானே என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். சிங்கையில் குழந்தை வளர்ச்சியை ஸ்கேனிங்க் செய்து பார்க்கும் போது பாலினம் தெரிய துவங்கும் ஐந்தாம் திங்களில் பெற்றோர்கள் விரும்பினால் குழந்தையின் பாலினம் பற்றிச் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது பெற்றோர்களின் உரிமை என்பதால் சிங்கையில் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி எந்த குற்றமும் இல்லை. ஐந்தாம் மாதத்தில் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள், இருந்தும் குழந்தை பிறக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பது மனைவியின் அடிப்படை பயம் கலந்த கட்டளையாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து இரண்டாம் குழந்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

கடைகுட்டி, மூத்தவ(ள்)ன், நடுவுள்ளவ(ள்)ன் என்கிற செல்லப் பெயர்களெல்லாம் தற்போதான இருகுழந்தை கட்டுப்பாடுகளினால் காணாமல் போய்விட்டது, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா இதில் ஏதோ ஒன்று தான் இரு குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் வாரிசுகளுக்கு கிடைக்கும் உறவுப் பெயர்கள், அதிலும் ஒரே குழந்தையாக வளரும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆனதும் தன்னைப் போன்றே தனித்து பிறந்தவர்களை திருமணம் செய்ய அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உறவு முறைகளில் எதுவுமே கிடைக்காது.

பெண்ணோ ஆணோ எந்த குழந்தையும் சரி என்று முடிவு செய்திருந்தாலும் ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரண்டாவதாக ஆண் குழந்தை என்று அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. மகப்பேறுக்கு முதல் நாள் வரையில் சீனர்கள் அலுவலகம் சென்று வருவார்கள், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பேறு நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார் இன்னும் நாள் இருக்கிறதே என்பதாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தார் மனைவி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க கடந்த 17 ஆம் தேதி அலுவலகம் சென்று திரும்பியதும், அருகில் இருந்த கடைத் தொகுதிக்குச் தன் தாயாருடன் சென்று திரும்பும் நேரத்தில் பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணர்ந்த மனைவி மகிழுந்தில் ஏறி உடனே வீட்டுக்கு வந்தார். பனிக்குடம் முழுதாக உடையாமல் கசிவாக இருந்ததால் சிறுது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வலி ஏற்பட்டதுடன் செல்லலாம் என்று காத்திருந்தோம், மேலும் கசிவு ஏற்பட..உடனடியாக வலி ஏற்பட்டால் பதட்டம் ஆகிவிடும் என்பதால் உடனடியாக இரவு 11:50 வாக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். மருத்துவ மனையில் சோதனை செய்து மகப்பேறு அறையில் உடனடியாக சேர்த்துவிட்டார்கள், நானும் மகப்பேறு அறையில் மகள் பிறக்கும் போது இருந்தது போலவே அருகில் இருந்தேன்.

17 ஆம் தேதி முடிய 18 ஆம் தேதியும் முடிய போகும் நேரம் வரை குறைவாக விட்டு விட்டு வலி ஏற்பட்டது தவிர்த்து பெரிதாக வலி ஏற்படவில்லை, பனிக்குடம் முழுதாக கசிந்தும் குழந்தை சரியான அமைப்பில் இருந்தும் வெளிவர முயற்சிக்காமல் வழக்கம் போல் உதைத்துக் கொண்டு தான் இருந்தது, ஆனால் நாடித் துடிப்பு குறையத் துவங்கியது, பனிக்குடத்தில் தண்ணிர் இல்லை என்றால் தொப்புள் கொடி சுருங்கி குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைய நாடித் துடிப்பு குறையுமாம் , உணர்ந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது தான் தாய்கும் சேய்க்கும் நல்லது என்று சொல்லி, என்னை அனுப்பிவிட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, 18 ஆம் தேதி இரவு 11:55 வாக்கில் அறுவையை துவங்க சரியாக இரவு 12 மணி தாண்டிய சில நிமிடங்களில் ஆங்கில நாள் படி ஆகஸ்ட் 19ல் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் பிரிக்கப்பட்டார்களாம். அறுவை சிகிச்சை அறையில் கணவரை அனுமதிக்கமாட்டார்கள். அறுவை முடிந்து தையல் போடும் நேரத்தில் குழந்தையை குழந்தைகள் வைக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். நல்லிரவுக்கு மேல் என்பதால் அங்கு கண்ணாடி தடுப்பு இருந்ததும் நாங்கள் பார்க்க வசதியாக அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டனர். ஈரம் முற்றிலும் காயாத நிலையில் பிறந்த 10 ஆம் நிமிடத்தில் கழுத்தைத் திருப்பி அனைவரையும் நன்றாகப் பார்த்து பிறகு மெலிதாக சிரித்தான்.

பிறக்கும் குழந்தை பெயரில்லாமல் பிறக்கக் கூடாது என்பது என் விருப்பம் அதனால் மகளுக்கும் பிறக்கும் மூன்று திங்களுக்கு முன்பே பெயரை முடிவு செய்து பிறந்த மறுநாளே பிறப்பு சான்றிதழில் பதிந்துவிட்டேன். அதே போன்று மகனுக்கும் பெயரை முடிவு செய்யும் போது தமிழ் பெயர் தான் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன், கூப்பிட எளிதாக அழகாக இருந்தால் எந்தப் பெயராக இருந்தாலும் சரி என்று சொல்லி இருந்தார் மனைவி. பத்து பெயர்கள் வரை முடிவு செய்து அதில் இரண்டை தெரிவு செய்து மனைவியிடம் சொன்னேன். எல்லோருக்கும் பிடித்தப் பெயராக இருக்க வேண்டும் என்பதாக அதிலிருந்து அவர் தெரிவு செய்து முடிவு செய்தப் பெயர் தான் 'சிவ செங்கதிர்' கூடவே மனைவி பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலொழுத்து சேர்த்து 'GK சிவ செங்கதிர்' என்று மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லும் முன்பே பதிந்து பதிவு சான்றிதழ் பெற்றுவிட்டு சென்ற சனிக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டோம். படுக்கையில் அடிக்கடி மகனின் ஒண்ணுக்கு தீர்த்தம்.....வீட்டில் மகிழ்ச்சி மழை தான்.

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் .

பின்குறிப்பு : பதிவர்களில் பலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் நலம் விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்க நேரமின்மையால் இடுகை வழியாக அறிவிக்க, தெரிவிக்க இப்பதிவை எழுதினேன். மற்றபடி இதைப் பதிவாகவே எழுதுவது எனக்கு தயக்கமான ஒன்று தான்.

17 ஆகஸ்ட், 2010

விரைவாக வளரும் மதங்கள் ஒரு பார்வை !

மனிதர்களில் இனம் என்பது உடல் அமைப்பு மற்றும் நிறங்களினால் தவிர்க்க முடியாத ஒன்று. இன ஆளுமைகளை தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முதன்மையான உத்திகளில் ஒன்று மதம் மற்றொன்றுன்று இனம் சார்ந்த பொருளாதாரம். பொருளாதாரத்தில் மேம்பட்டு தன் இனத்தை முன்னிறுத்துவர்கள் யூதர்களைத் தவிர்த்து தற்போதும் எவருமே இல்லை. மற்ற இனங்கள் தங்கள் ஆளுமைக்கு பக்க பலமாக மதங்களை ஏற்படுத்தி வளர்த்துக் கொண்டன. இன வளர்ச்சி என்பது மக்கள் தொகையைவிட அது கைப் பற்றும் நாடுகளைப் பொருத்ததே என்பது என் எண்ணம். அவ்வாறு இனம் பரவும் பொழுது அங்குள்ள பகுதிகளை ஆளுமைக்குக் கொண்டுவர அது சார்ந்த மதங்களை அப்பகுதியில் பரப்புவது இன ஆளுமை சார்ந்த நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்பதே இனம் சார்ந்த மதங்களின் நம்பிக்கை. மதங்கள் இனங்களைக் கடந்தது என்று மதப் பற்றாளர்கள் கூறிக் கொண்டாலும் எந்த ஒரு மதத்தின் ஆளுமையும் அதை ஆக்கியோர்களின் பிடியில் மட்டுமே இருக்கும் என்பது நடைமுறை கண்கூடு. மதம் என்பதே அதை உருவாக்கிய இனங்களில் பாதுக்காப்பு கவசம் என்றும் சொல்லலாம். மற்றபடி மதத்தில் கூறப்படும் கதைகள், கோட்பாடுகள், வேதங்கள் ஆகியவை அதை பின்பற்றோவோருக்கான இனிப்பு முலாம்கள் மட்டும் தான்.

இன்றைக்கு பெரிய மதங்கள் எனப்படுவை இந்திய மதங்களான இந்து மற்றும் பவுத்தம் மற்றும் வளைகுடா பகுதியில் வளர்ந்த கிறித்துவம் மற்றும் இஸ்லாம். கத்தோலிக்க ரோமன் தலைமையகத்தின் தலைமை ஆளுகைக்குக் கட்டுப்படாதவர்கள் தனியாக பிரிந்ததே பிராட்டஸ்டாண்ட் எனப்படும் கிறித்துவ மதம், இவர்கள் வெளியே தாங்கள் தான் உண்மையான கிறித்துவர்கள் என்பார்கள். அதே போன்று இன அடிப்படையில் இஸ்லாம் சியா சன்னிப் பிரிவாக பிரிந்துகிடக்கிறது. பவுத்த மதத்தில் தலைமைகள் என்று எதுவும் இல்லாவிட்டாலும் பரவிய ஆசிய நாடுகளில் தனித்தனியாக செல்வாக்குடன் அந்தப்பகுதி பழக்கவழக்கங்களை மதக் கொள்ளையாகி வைத்திருக்கிறது. இந்து மதம் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் தவிர்த்து பெரிய அளவிலான செல்வாக்குகளை கத்தோலிக்க கிறித்துவ மதம் பெறவில்லை என்றாலும் கனிசமாக பிராட்டஸ்டாண்ட் கிறித்துவகளும், கத்தோலிக்க கிறித்துவர்களும் உள்ளனர்.

இந்தோனேசியா, மலேசியா, புருனோ ஆகியவை இஸ்லாமியர்கள் மிகுந்த நாடு என்றாலும் கிட்டதட்ட அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரே இனம் சார்ந்தவர்கள், அரசர்கள் அல்லது மக்கள் தலைவனை பின்பற்றி அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மாறி இருக்கக் கூடும். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆளுகையில் இருந்த கீழ் பகுதி நாடுகளில் கிறித்துவமும், மேற்பகுதி நாடுகள் வளைகுடாவை ஒட்டி இருப்பதால் இஸ்லாமும் பரவி இருப்பது இயல்பானது. தென் அமெரிக்காவில் இடம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் என்பதால் அங்கு கிறித்துவம் பரவி இருந்ததும் இயல்பானது. மற்றபடி அமெரிக்க நாடுகளில் இருக்கும் கருப்பர்களில் இஸ்லாம் பரவிய விதம், வெள்ளையர்களின் கருபர் மீதான வெறுப்பினால் கருப்பர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்பதற்கு குத்துச்சண்டை வீரர் முகமதலி உள்ளிட்டோர் சாட்சி. ஒரு கருப்பர் பாதிரியாராக இருக்கும் சர்சுகளில் வழிபட வெள்ளையர் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட கருப்பர்களை வெள்ளையர்கள் என்றுமே மதித்ததில்லை என்பது அன்மைய ஒபாமா வரவுக்கு முன்புவரையிலான வரலாறு. கருப்பர்களை கிறித்துவத்திற்குள் தக்கவைத்துக் கொள்ள ஒபாமாவை வெள்ளையர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது செப் 11 க்கு பிறகான நிலைமை. மற்றபடி வெள்ளையர்கள் சகிப்புத்தன்மையில் வளர்ந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் கருப்பர் ஒரு போப் ஆக முடியுமா என்பது பெரியதொரு விவாதமாக எங்குமே வெள்ளையார்களால் முன்னெடுக்கப் படவில்லை.


இன்றைய சூழலில் உலக மக்கள் தொகையில் கிட்டதட்ட 20 விழுக்காடு என்ற அளவில் மதம்சாராதவர்கள் மற்றும் சிறுமதங்கள் சேரதா தனி அமைப்பு மற்றும் ஒவ்வொரு பெரிய மதங்களின் மக்கள் தொகை இருக்கின்றன. இதில் வேகமாக வளரும் மதங்கள் என்று எதைச் சொல்லுவது ? மதங்கள் வளருவதற்கான சூழல் தற்போதைக்கு எதுவுமே இல்லை. எந்த ஒரு காலத்திலும் மக்கள் விரும்பி பெரிய கூட்டமாக ஒரு மதத்தில் சேர்ந்தது இல்லை. முதலில் மன்னன் மனம் மாறி மதம் மாறுவான், பிறகு மக்கள் அனைவரும் இனி அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று அறிவித்துவிடுவான். இது தான் உலகில் மதங்கள் வளர்ந்த வரலாறு. மற்றபடி இந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒரே நாளில் குறிப்பிட்ட வேதப் புத்தகங்களை கரைத்துக் குடித்து மனம் மாறி மதம் மாறினார்கள் என்ற வரலாறு எதுவும் கிடையாது, சிறு சிறு பகுதிகளில் அந்தப் பகுதி தலைவர்களை பின்பற்றி மதம் மாறினார்கள், இந்தியாவில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்படித்தான் பரவியது. பிற நாடுகளில் மக்கள் தலைவனை பின்பற்றி மாறினார்கள்.

இன்றைய சூழலில் தலைவர்களை பின்பற்றி மதம் மாறுவது என்பது நடைபெற வாய்ப்பில்லை, ஏனென்றால் மதங்கள் என்பது தனிமனித விருப்பம் என்பதை தலைவர்கள் ஓரளவு உணர்ந்தே இருக்கிறார்கள், தான் விரும்பும் மதம் சார்ந்த கொள்கைகளை மாற்றிக் கொண்டு மதம் மாறி தன்னை பின்பற்றுவோரையும் மாற்றும் திறன் மதங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அப்படியும் மதமாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, நலிவடைந்தோரை, நசுக்கப்படுவர்களை அணுகி அத்தகைய மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் அப்படி மாறியவர்கள் பொருளாதார ரீதியிலும் மத ரீதியிலும் நல்ல நிலையை அடையும் நம்பிக்கையை எந்த ஒரு மதமும் தரவில்லை. இன்றைய சூழலில் மதங்களை விட்டும், மத நம்பிக்கைகளை விட்டும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கையே மிகுதி. முன்பெல்லாம் நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றால் எதாவது ஒரு மதத்தைச் சொல்லுவார்கள். தற்பொழுது எனக்கு மதங்களின் மீது பற்று இல்லை, நம்பிக்கை இல்லை என்று சொல்லுவோர் எண்ணிக்கையும் நானறிந்த வகையில் கனிசமாகவே இருக்கிறது.

இவற்றையும் மீறி மதங்கள் வளர்வதாக எண்ணிக்கை அடிப்படையில் காட்டுவது குறிப்பிட்ட மதங்களில் பிறப்பு விழுக்காடு மிகுந்து இருந்தால் (higher birth rates ) மட்டுமே என்பதாக விக்கிபீடியா கூறுகிறது. பிறப்பு விகிதப்படி அனைத்து மதங்களுமே தாங்கள் வளர்வதாகக் கூறிக் கொள்கிறதாம், ஆனால் இஸ்லாம் தவிர்த்து பிறப்புகள் பற்றிய அளவுகோள் எந்த மத்திலும் கட்டுப்பாடாக இல்லை, அப்படியும் எனக்கு தெரிந்து இந்திய அளவில் இந்தகாலத்தில் இருகுழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவே.

16 ஆகஸ்ட், 2010

கலவை 15 ஆகஸ்ட் 2010 !

விடுதலை நாள் : ஆகஸ்ட் 15 1947 க்கு முன்பும் காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவை ஆண்டது, தற்போதும் அப்படியே....இதுல சுதந்திர தினம் நாம கொண்டாடுவதற்கான காரணம் வெள்ளைக்கா'ரன்' ஓடிவிட்டான் என்பது தவிர்த்து வேறு எதுவும் உண்டா ?
இங்கிலாந்திடம் அடிமைப்பட்ட இந்தியா தற்போது இத்தாலிக்கு அடிமை. நல்லவேளை பிரதமர் பதவி வேண்டாம் என்று அந்தம்மா பெரிய மனசு பண்ணி மன்மோகனிடம் ஒப்படைத்துவிட்டார். முள்ளிவாய்கால் முள் வேலிகளுகள் மனிதர்கள் இல்லாத போது தமிழர்கள் அனைவருமே சுதந்திர தினம் கொண்டாடலாம். சொந்த நாட்டுக்குள் அடிமை மக்களை இருத்தி வைப்பதற்கு ஆதரவு கொடுக்கும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு நாம சுதந்திர தினம் கொண்டாடுவது பாதிக்கப்பட்டவர்களின் தீராத சாபத்தையே ஏற்படுத்தும்.

சன்திரன் : சன் டிவியைத் தவிர்த்து தமிழ் வழிச் செய்தி வழிக்கு வேறு வழி இல்லாததால் சன்னைப் பார்க்க வேண்டிய சூழல், தற்போது செய்திகளில் தலைப்புச் செய்தியாக எந்திரன் இசை வெளியீடுகள் செய்தியாகின்றன. எந்திரன் ரோபோவுக்கு பாரிஸில் இருந்து மாவு வாங்கிய விதம் (ப்ளாஸ்டராப் பாரிஸில் எந்திரன் செய்தது எப்படி?) எப்படி என்பதெல்லாம் இனி நிகழ்ச்சியாகும் போல, இன்னும் ஆறுமாதத்திற்கு சன் பக்கம் தலைகாட்டாமல் இருப்பதே நல்லதுன்னு நினைக்கிறேன். எந்திரனில் பணி புரிந்த டெக்னீசியன், டச்சப் பாய் பேட்டிகள் ஒவ்வொன்றாக வரும் போல தெரிகிறது (டெக்னீசியன், டச்சப்பாய்களை குறைத்துச் சொல்லவில்லை, அரைகுறையாக புரிந்து கொள்ள வேண்டாம்).

காங்கிரிட் வீடுகள் : குடிசைகளை அகற்றி காங்கிரிட் வீடுகள் கட்டப்படும் திட்டம் சுதந்திர நாளில் தமிழக அரசால் துவங்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அரசு செலவில் ஓட்டு வங்கியை உருவாக்கும் திட்டம் என்பது தவிர்த்து வேறெதும் சொல்லத் தெரியவில்லை. ஏற்கனவே சமத்துவ புறங்கள் என்ன ஆயின, அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு ? எப்படி இருந்த போதிலும் தரமான வீடுகள் எப்போதும் கட்டித்தரப்படுவதில்லை. அரசு வீடுகள் ஐந்தாண்டுகள் கூட உறுதியாக இருப்பதில்லை. சென்ற முறை கருணாநிதி ஆட்சியில் பணப்புழக்கம் இல்லை என்று எதிர்கட்சிகளினால் குற்றம் சாட்டப்பட்டு ஆட்சி அகற்றப்பட்டது, இந்த முறை பணப்புழக்கம் இருக்கிறது என்றாலும் நடுத்தரவாசிகளின் சொந்த வீட்டுக் கனவு வெறும் கனவு தான். வீட்டு மனைகள் விலை, வீடுகட்டும் பொருள்கள் விலை இவையெல்லாம் கணக்கிட்டால் நகரங்களில் வீடுகட்டுவோம் என்கிற நடுத்தர கனவெல்லாம் என்றுமே நிரைவேறாது போலும். நடுத்தரவாசிகள் சொந்த வீடுகட்ட இனி புறநகரங்களுக்கு, கிராமங்களுக்குச் சென்றால் தான் உண்டு என்னும் நிலை தற்போது இருக்கிறது. புறநகரமாக இருந்தாலும் 25 லட்சத்திற்கு குறைவாக எவரும் ஓரளவு வசதியான வீட்டைக் கட்டிவிட முடியாது என்னும் நிலை தான்.

தனிமனித தாக்குதல் : வலைப்பதிவில் முன்னைப் போல் இல்லாமல் புரிந்துணர்வுகள் குறைந்துவிட்டன. கட்சி ஆதரவாளர்களால் வலைப்பதிவு ஊடகம் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, கட்சிகளையும், கட்சித்தலைவர்களையும் விமர்சனம் செய்தால் அடிப்பொடிகள் அடிக்காத குறையாக மோசமாக அர்சிக்கிறார்கள், முன்பெல்லாம் மதவெறியர்களால் அனானிகளால் அர்சிக்கப்படும் நிலை இருந்தது, தற்போது கட்சி அபிமானிகளால் அந்த நிலை, வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதும் பொதுவானவற்றை, மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பது கூட இயலாது போய்விடும் போல இருக்கிறது, Buzz ல் கூட அதே நிலைதான். வலைப்பதிவுகள் குழுமங்களாக குறிப்பிட்டவர்களுக்குள் செயல்பட்டால் தான் பாதுகாப்பானது என்னும் அடுத்தக் கட்டத்திற்குள் தள்ளிவிடும் வேலையை சிலர் முனைந்து செய்கிறார்கள், பெயர் குறிப்பிட விரும்பவில்லை. நாம பழகுவது கட்சிகாரனிடமா என்பது தெரியாமல் வலைப்பதிவர்களை நண்பர்களாக நினைப்பது என்னைப் பொருத்த அளவில் வீன் வேலை மற்றும் தேவையற்றது. கொள்கை சார்புடையவர்களிடம் தீவிரமாக விவாதம் செய்வது பலனற்றது மேலும் நாம் அவர்களின் எரிச்சலை பெற்றுக் கொள்கிறோம் என்பதை கடந்த ஓராண்டாக கண்டுவந்திருக்கிறேன் :(

இளையர்களுக்கான ஒலிம்பிக் : ஆகஸ்ட் 14ல் யூத் ஒலிம்பிக் 2010 சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கியது, ஆகஸ்ட் 26 வரையில் நடைபெறும். விளையாட்டுகள் மற்றும் நடைபெறும் தேதி, பதக்கபட்டியல் ஆகியவற்றைக் காண இங்கே அழுத்துங்கள்.

13 ஆகஸ்ட், 2010

அப்துல்லாவுக்கு ஆதரவாக நான் பொங்குறேன்...

ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஓடிவந்து தாம் பெண்களுக்கு காவலன் என்று காட்டிக் கொள்வோர் எவரும் அதே (போன்று) பெண்ணால் ஒரு ஆணுக்கு பிரச்சனை என்றால் யாரும் தட்டிக் கேட்பதில்லை. குறைந்த பச்சம் கோரப்பாயாவது கேட்கலாம் இல்லையா. கேளுங்க கேளுங்க என்று பதிவெழுதும் குழுவும் சரி, இந்தியாவை 2020ல் வல்லராசாக்க அப்துல்கலாமுக்கு உதவுகிறேன் என்று எழுதித் தள்ளும் பெருந்தவ அரசரும் வாயைத் திறக்கக் காணும். நர்சிம்முக்கு எதிராக 150+ பதிவுகள் வந்தது (வலைச்சரத்தில் ஒருவாரம் பல்வேறு தரப்பில் எழுதப்பட்ட தொகுப்பாக ஆக்கும் அளவுக்கு எழுதித் தள்ளினார்கள்) அப்துல்லாவுக்கு ஆதரவாக அல்லது திட்டி ஒரு ஐந்து பதிவாவது வரும் என்று பார்த்தால் ஒருவரும் எழுதவில்லை.

ஆண்களைக் குறிப்பிட்டு எதுவும் பேசிவிடலாம் யாரும் கேட்கமாட்டார்கள், ஆனால் பெண்களைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லிவிட முடியாது என்பது நிருபனம் ஆகிவிட்டது. சொம்பு தூக்கிகள் (நாட்டாமைகள் தான்) யாரும் சொம்பு வாங்க வராததால் சேலம் சொம்பு மொத்த வியாபரமும் நொடித்து போய் மூடும் நிலைமைக்குச் சென்றுவிட்டதாம். சொம்பு வியாபாரிகளுக்கு பெருத்த நட்டம். அடிக்கடி பெண்கள் பாதிக்கப்படக் கூடாதா என்ற வேண்டுதல் வைக்க அனைவரும் பழனிக்கு காவடி எடுக்கப் போவதாகக் கேள்வி. அப்துல்லாவுக்கு ஆதரவாக யாருமே பொங்காததால்,

நான் பொங்குறேன்.


10 ஆகஸ்ட், 2010

மாரியம்மன் கோவில் நில மீட்பாம் ! உடல் மீட்பு எப்போது ?

கிறித்துவர்களால் அங்கங்கே நில ஆக்கிரமிப்பு என்கிற செய்தி புறக்கணிக்கக் கூடியது அல்ல, எப்போதும் நடைபெறுவது தான். வேளாங்கன்னி என்கிற கிராமம் தற்போது சிறுநகரம் என்கிற வளர்ச்சியை எட்டியுள்ளது, 90 விழுக்காட்டு இடங்கள் பல்வேறு தரப்பினரிடம் மிருந்து தானமாகவோ, இனாமாகவோ, விலை கொடுத்தோ பெறப்பட்டு வேளாங்கன்னி ஆலய நிர்வாகத்தினரிடம் இருக்கிறது, வேளாங்கன்னியில் நிலங்களை மாதா கோவில் நிர்வாகம் வளைப்பதாக குற்றச்சாட்டுகள் உண்டு. தற்பொழுது 90 விழுக்காட்டு சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் மாத கோவில் நிர்வாகத்திடம் தான் உள்ளது. கிறித்துவர்களோ, இஸ்லாமியர்களோ யாரும் வெளியில் இருந்து வந்து குதித்தவர்கள் அல்ல, அவர்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என்பதால் வழிபாட்டு இடம் அனைவருக்கும் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக வளைத்துப் போடுவது என்பது சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் பல இடற்களை உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கண்டதைக் குறிப்பிட்டேன்.

அதே போல் நாகையில் காயாரோகன - நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான குளத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து அரபு / மதராசா பள்ளிகள் கட்டப்பட்டிருந்தது, அதுகுறித்து 10 ஆண்டுக்கும் மேல் வழக்கு நடைபெற்று பிறகு இடம் கோவிலுக்கு உரிமை உடையது என்பதாக தீர்பளிக்கப்பட்டது, இது குறித்து வழக்கு நடைபெறும் போது அதன் தீர்வுகளை அச்சில் கோர்த்தவன் என்கிற முறையில் எனக்கு முழுவிவரம் தெரியும் என்பதால் நான் இட்டுக்கட்டி எதையும் எழுதவில்லை, சம்பந்தப்பட்ட குளத்தை கோவில் குளம் அல்ல, அதன் பெயர் பேய் குளம் என்றெல்லாம் கூறி முடிந்த மட்டில் அந்தக் குளத்தை ஆக்கிரமிக்கவே முயற்சிகள் நடைபெற்றன. இது போன்ற வழக்குகள் அங்கங்கே நடைபெறுவது தான். இட ஆகிரமிப்பு பொது இடம் அல்லது தனிப்பட்டவர்களின் இடம் என்றால் கூடப் பரவாயில்லை, இந்துக் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தை பிற மதத்தினர் ஆக்கிரமிக்கும் போது அது மதப்பிரச்சனையாகிறது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும், அது பாபர் மசூதி என்று பெரிய அளவிலான பழைய ஆக்கிரமிப்பாக இருந்தாலும் ஈரோட்டு மாரியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பு என்ற சிறு அளவிலான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு எதிர்க்க அதே மத அரசியலைத்தான் எடுக்கும்.

******

அண்மையில் ஈரோட்டில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்ப்பில் இந்துக்களைத் திரட்டி மாரியம்மன் கோவில் நிலத்தை கிறித்துவர்களிடமிருந்து மீட்கும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது என்கிற தகவலை நான் தமிழ் இந்து தளத்தில் இருந்து படித்தேன். இன்றைய இந்துக் கோவில்களில் குறிப்பிடத் தகுந்த அளவு கோவில்கள் குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பழைய கோவில்கள் பவுத்த சமண ஆலங்கள் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டவை தான். அன்றைய மன்னர்களின் ஆணைகளில் அதைச் செய்வது மிகவும் எளிது, பள்ளி என்று முடியும் அனைத்து கிராம நகரங்கள் அனைத்தும் பவுத்த சமண ஆலயங்கள் இருந்த இடம் தான். ஊர் பெயர்கள் (திருச்சிறாப்பள்ளி) தவிர்த்து இன்றைக்கு சமண பவுத்த அடையாளங்களை தமிழகத்தில் பார்க்க முடியாது. மாரியம்மன் கோவில் போன்ற சிறுவழிபாட்டு நாட்டார் தெய்வங்களுக்கான கோவில்கள் சமண / பவுத்த பள்ளிகளை இடித்து ஆக்கி இருக்க வாய்ப்பு இல்லை, இவை சுமார் 300 ஆண்டுகளுக்கு குறைவான வரலாறு கொண்ட கோவில்கள் என்பதால் யாரேனும் தானம் / கொடை செய்த நிலங்களில் பெரும்பாலும் தனியார்களால் கட்டி வைக்கப்பட்டவையே மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டுக் கோவில்கள்.

முழுக்க முழுக்க கோவிலும் கோவிலுக்கும் சொந்தமான நிலமும் கோவில் சார்ந்த சொத்து எனலாம். பிற்காலத்தில் இந்துக் கோவில்களில் வருமானம் உள்ளவற்றை அறநிலையத் துறைக்குள் கொண்டு வந்தது தவிர்த்து அரசுகள் கோவில்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. குறிப்பாக 1000 ஆண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவிலுக்குக் கொண்டாடப்பட்டது என்பதான தகவல்கள் அனைத்தும் வெறும் வரலாற்றுகான குறிப்பு ஏற்படுத்துதல் என்பது தவிர்த்து கோவில்களுக்கு அரசுகள் பெரிதாக எதுவும் செய்வது இல்லை. இந்துகோவில்களை பராமரிக்க போதிய வருமானம் உண்டு முன்பு அதை கோவில் நிர்வாகிகள் உண்டார்கள், தற்பொழுது அரசாங்கமும் கோவில் நிர்வாகமும் சேர்த்து உண்ணுகிறது, அவ்வளவு தான்.

ஈரோட்டு மாரியம்மன் கோவில் நிலம் கிறித்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் அது மீட்கப்படுவதாகவும் போராட்டம் நடைபெறுகிறது. நல்லது நீதி உள்ள பக்கம் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துவோம். அதே சமயத்தில் மாரியம்மனுக்கு பார்பன இந்து மதம் செய்த கொடும் செயல் பற்றி சிறிது குறிப்பிடுகிறேன், அதையும் சரி செய்தால் மாரியம்மனின் அருள் நிலம் மீட்பாளர்களுக்கு கிட்டும். மாரியம்மன் பழந்தமிழ் தெய்வங்களுள் எஞ்சி இருக்கும் பெண் தெய்வத்தின் தொடர்ச்சி, இயற்கை வழிபாடு என்னும் நீட்சியில் மழையை (மாரி) பெண்ணாக நினைத்து வழிபட்டதே மாரியம்மன் வழிபாடு, மாரியம்மன் கிராம தெய்வங்களுல் முதன்மையானது, கோடையில் அம்மை போன்ற நோய்கள் பெருகும் என்பதால் மாரியாம்மன் வழிபாட்டுத் தொடர்ச்சி இன்றும் சிறப்பாகவே நடைபெறுகிறது.

அழிக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற வழிபாட்டையும் அதன் தெய்வங்களையும் பார்பனிய வடமொழிமயமாக்கி, வேத காலத் தெய்வங்கள் என்று காட்டுவது தான் பார்பனிய இந்து மதத்தின் நடைமுறை. மாரியம்மனை முற்றிலுமாக தமிழர்கள் மனதில் அகற்ற முடியாது என்று உணர்ந்து கொண்டோர் அதற்கு வேத வடிவம் கொடுத்த சக்தியின் வடிவம் ஆக்கினர். மாரியம்மனை பலர் வெறும் தலையை மட்டும் வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம், இன்றும் உக்கிரமான மாரியம்மன் சிலைகள் வெறும் தலைகளுடன் இருக்கின்றன. மற்ற தெய்வங்களை முழுதுமாக வழிபடுபவர்கள் மாரியம்மனை தலையை மட்டும் வழிபடும் காரணம் என்ன ? காரணம் மிகவும் அருவெறுப்பும், சமூக சீக்கும் நிறைந்தவை. பரமசிவன் கூப்பிடும் போது குளித்துக் கொண்டிருந்த பார்வதி உடனே வரவில்லையாம், சினமுற்ற பரமசிவன், மகன் பரசு இராமனை கூப்பிட்டு அவள் தலையை கொய்துவா என்றாராம். தந்தைச் சொல் மிக்க மந்திரமில்லை என்று உடனே வேண்டுகோளை நிறைவேற்றினானாம் பரசு இராமன், பிறகு அவசரப்பட்டுவிட்டோமே என்று வருந்திய பரமசிவன் வழி இன்றி உடல் பாகத்தைத் தேட அது கிடைக்காமல் போக அந்த பக்கமாக சென்ற பறைப்(தலித்) பெண் ஒருத்தியின் தலை வெட்டிவிட்டு அந்த உடலை பார்வதியின் தலையுடன் பொருத்து பார்வதியை உயிருடன் எழுப்பினாராம். இந்தப் புதுப்பிறவி மாரியம்மன் எனப்படும் என்பது மாரியம்மன் தோற்றத்திற்கான பார்பனிய வரலாற்றுக் கதை. இந்தக் கதையை இன்றும் நம்பும் பார்பனர்கள் மாரியம்மனின் உடலை பற உடம்பு என்பதாக ஒதுக்கி வைத்து தலையை மட்டும் வழிபடுவது தான் இன்றும் தொடர்கிறது. சாமியை சிலையாக வழிபட்டாலும் அந்த சிலையில் கழுத்துக்கு கீழே இருப்பது பறச்சியின் உடல் அதனை வழிபடக் கூடாது என்பதாக வெறும் தலையை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். மாரியம்மனுக்கு மட்டுமல்ல ஆனைத் தலை பிள்ளையாருக்கும் தலை மட்டும் எப்படி யானை ஆகியது என்பதற்கும் அருவெறுப்பான கதைகள் உண்டு.

முண்டமற்ற வெறும் தலையாக இருக்கும் மாரியம்மன் சிலைகள் இன்னும் பல்வேறு கோவில்களில் வழிபடப் படுகிறது. அங்கெல்லாம் மாரியம்மனை முழுவுடலாக மாற்றி வழிபட இத்தகைய மாரியம்மன் நிலமீட்பு குழுவினர் உடல் மீட்கவும் போராடினார்கள் என்றால் மக்களுக்கு நன்மையோ இல்லையோ மாரியம்மனுக்கு நன்மையாக முடியும். உடல் சிதைக்கப்பட்ட சிலையாக நிற்கும் மாரியம்மன் பழந்தமிழர் தாய் தெய்வ வழிபாட்டின் நீட்சியாகும், அதை முழு உடலாக்கி நிறுத்தி செம்மை படுத்துவதும் தமிழர்கள் கையில் தான் உள்ளது

8 ஆகஸ்ட், 2010

எந்திரனுக்கு உயிர் கொடுக்கும் எஸ்பிபி !

எந்திரனில் அனைத்துப் பாடல்களும் எனக்கு திரும்பக் கேட்டப் போது பிடிக்க துவங்கினாலும், முதல் முறை கேட்ட போதே பிடித்தப் பாடல் 'புதிய மனிதா பூமிக்கு வா'. படத்தில் இந்தப் பாடல் முதல் பாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எந்திரனை வடிவமைக்கும் ரஜினி அதை எழவைக்கும் போது பாடும் பாடல் போன்று வரிகள் இருக்கின்றன.

ரஜினிப் படங்கள் எனக்கு பிடிக்கக்காரணமானது எஸ்பிபி குரலில் படத்தில் ஒரே ஒரு சூப்பர் பாடலாகவது அதில் இருக்கும் என்பதால் தான், ரஜினிக்கு எஸ்பிபி பாடாத படங்கள் மிகக் குறைவு. எஸ்பிபியின் குரல் ரஜினிக்கு மட்டுமல்ல எந்த ஒரு நடிகருக்கும் பொருந்தும் குரல் தான். எம்ஜிஆர் துவங்கி இன்றைய முன்னனி நடிகர்கள் அனைவரும் எஸ்பிபி பாடல்களுக்கு வாயசைத்திருக்கிறார்கள். சர்கரையில் பிசைந்த பலாச்சுளைப் போன்ற எஸ்பிபி குரல் தமிழுக்குக் கிடைத்தது எம்ஜிஆரின் முயற்சி. அன்று துவங்கிய பாடும் நிலா... என்றுமே இசைவானின் முழு நிலவு தான்.

எந்திரனில் எஸ்பிபி பாடலில் குரல் ஏற்றக் இரக்கம் (ஹைப் பிச், லோ பிச்) அடுத்து அடுத்து அமைந்தப் பாடல் 'புதிய மனிதா பூமிக்கு வா'. பல்லவி சரணங்களுக்கு பிறகு எஸ்பிபியின் குரல் பாட்டில் வருகிறது. 'அரிமா...அரிமா' பாடலும் எஸ்பிபி பாடியிருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

கருவில் பிறந்தது எல்லாம் மரிக்கும்,
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை -

என்பதாக எந்திரன் என்னும் ரோபோவினை உருவாக்கும் இறுதியில் அதன் சிறப்புகளைச் ரஜினி சொல்லி சொல்லி எந்திரனை உயிரூட்டுவதாக எழுதப்பட்டப் பாடல். இடையே 'எந்த மொழி அறிந்திருந்தாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா' என்ற வரிகள் ரஜினியைக் குறிப்பதாக வருகின்றன. ரஜினியின் தமிழ் பால் தற்போது அதே வைரமுத்துவினால் 'தந்தை மொழி' ஆகி இருக்கிறது. தந்தை மொழி, தந்தையர் நாடு இவை போன்றவை வலதுசாரி சிந்தனை என்பதாகச் சொல்லுவார்கள். திராவிடர்கள் தாய்நாடு என்றும் ஆரியர்கள் தந்தையர் நாடு என்று சொல்லுவார்கள் (தந்தையர் நாடெனும் போதினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே - பாரதியார்) வைரமுத்து எதை வைத்து அப்படி எழுதினார் என்றே தெரியவில்லை. தமிழர் பண்பாட்டுக்கேற்ப தாய்மொழி என்றே சொல்லி இருக்கலாம்.

'புதிய மனிதா பூமிக்கு வா' பாடல் ஏஆர் ரஹ்மானின் குரலில் பல்லவியாகத் தொடங்குகிறது, தொடர்ந்து ரஹ்மானின் மகள் கதீஜா தொடர்கிறார், பிறகு எஸ்பிபி பாடுகிறார். கதீஜாவின் குரல் கிடதட்ட இந்திராவில் 'நிலா...காய்கிறது ' பாடிய போது இருந்த ஹரினியின் குரல் போன்றே இனிமையாக இருக்கிறது. முழுநேரப் பாடகி ஆகும் குரல் வளம். முதன் முறையாக கதீஜா எஸ்பிபியுடன் இணைந்து பாடும் பாடலாக அமைந்திருப்பதும் அவருக்கும் மற்றொரு சிறப்பு.

எனக்கு எல்லா பாடகர்/பாடகிகளின் குரலும் பாடலுக்கு ஏற்ப பிடிக்கும் என்றால் எஸ்பிபி பாடும் எந்தப் பாடலும் அவரது குரலுக்காவே பிடிக்கும்.

எஸ்பிபி ரஜினிகாகப் பாடிய 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'எம்பேரு படையப்பா', 'தேவுடா தேவுடா' போன்ற படு வேகப் பாடல்கள் போல் அல்லாது எந்திரனில் கொஞ்சம் அதிரடி, கொஞ்சம் அமைதியான பாடலாகத்தான் இருக்கிறது. பின்னரவில் அமைதியான சூழலில் கேட்க சிறப்பாக இருந்தது.

5 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் தமிழக அரசியல் !

மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்., தான். - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மெஜாரிட்டி மைனாரிட்டி பற்றி வகுப்பெடுக்கிறார் இளங்கோவன், சென்ற முறை மத்திய அரசும் கூட இதே மைனாரிட்டி நிலையில் தான் இருந்தது,
இடையில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வுகளுக்கு பிறகு பாஜகவிற்கு குஜராத் தவிர பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைய, காங்கிரஸ் அறுதிப் பெரும்பாண்மை என்ற நிலையை அடைய திணறி கடைசியாக இன்றும் கூட கூட்டணி தயவில் தான் மத்திய அரசே நடைபெறுகிறது. இந்திராவிற்கு பிறகு காங்கிரசின் நிலைமை கூட மைனாரிட்டி தான். மொத்தம் உள்ள 543 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் இவர்களால் 360 தொகுதிகளை எட்டிப் பிடிக்க முடியவில்லை, சென்ற முறை காங் பெற்ற இடங்கள் 262 (அதாவது மொத்தத் தொகுதிகளில் பாதிக்கும் குறைவே) இது 2004 ஆம் ஆண்டு வாக்கு விகிதத்தில் 3.96 விழுக்காடுகளாம் சென்ற முறை அவர்கள் பெற்ற இடம் வெறும் 218 அவரகளை விட பாஜக 37 இடங்கள் குறைவு, உதிரி கட்சிகளின் துணையுடன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆசை காட்டி மைனாரிட்டி ஆட்சியைத்தான் காங்கிரஸ் 2004ல் நடத்தியது, அதையே சற்று கூடுதலான எண்ணிக்கையில் தற்போதும் தொடர்கிறது, இருந்தாலும் காங்கிரஸ் மைனாரிட்டி அரசு தான்.

40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? - இளங்கோவன்

தமிழகத்தின் திராவிடக் கட்சிகள் உடையாவிட்டால் கடந்த 40 ஆண்டுகளுக்குள் காங்கிரஸ் தமிழகத்தில் காணமலேயே போய் இருக்கும், எம்ஜிஆரை ஆதரிப்பதாக அவர் முதுகில் ஏறி கனிசமான இடங்களைப் பெற்றுக் கொண்டு தமக்கு செல்வாக்கு இருப்பாதாகக் காட்டிக் கொண்டு கிட்ட தட்ட பாமக பாணியிலான தேர்தல் காலக் கூட்டணிகளில் தான் காங்கிரஸ் தமிழ் நாட்டில் நிலைத்திருக்கிறது. திமுக, அதிமுக மாறி மாறி கூட்டணிக்குள் நுழைந்தே வந்திருக்கிறகு காங்கிரஸ், மாறி மாறி கூட்டணி அமைக்கிறார் என்பதற்காக மருத்துவர் இராமதாசை பச்சையாக (மாநில)தேர்தல் விபச்சாரி என்று குறிப்பிடுவோர் மறந்தும் கூட அதே நடைமுறையை பின்பற்றும் காங்கிரசை தேசிய தேர்தல் விபச்சாரி என குறைத்துச் சொல்வதில்லை. என்னைப் பொருத்த அளவில் கூட்டணி நடைமுறைகள், கொள்ளைகள் என்ற அளவில் எதிலுமே ஒத்துவராமல் வெறும் லாப நோக்கில் கூட்டணி அமைப்பதில் பாமகவிற்கும் காங்கிரசிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. பாமகவை கூட்டணிக்குள் இழுத்துவராவிடில் அந்தக் கட்சி காணாமல் போகும், கிட்ட தட்ட அதே நிலைமை தான் தமிழக காங்கிரசிற்கும். 40 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் 400 ஆண்டுகள் போனாலும் காங்கிரசிற்கான தனிச் செல்வாக்கு வளர்வதற்கு தமிழகம் இடம் தராது, காரணம் மொழிக்கு முதன்மைத்துவம் கொடுக்க விரும்பாமல் தேசியம் என்ற பெயரில் மாநில மொழிகளை அழித்துவருவதும் மற்றும் மாநில நலன் என்பதில் காங்கிரசின் கொள்கைகள் தென் மாநில மக்களுக்கு ஆதரவான நிலையில் இல்லை. நரசிம்ம இராவ் தவிர்த்து தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் வாய்ப்புகள் கொடுக்கமால் தொடர்ந்து இந்திரா குடும்ப நலன் சார்ந்தே இயங்குவதால் தென் மாநிலங்கலில் காங்கிரஸ் வளர்வது கடினம், அதைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் முடிந்த மட்டில் மாநில கட்சிகளை உடைத்து அவர்களில் ஒருவரின் முதுகில் ஏறி ஆட்சி நடத்தி வருவது தான் தென் மாநிலங்கள் அனைத்திலும் நடைபெறுகிறது, அதுவும் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுமே சமமான பலத்தில் இருப்பதால் காங்கிரசால் ஆட்சி பிடிக்க முடியவில்லை. முடிந்த மட்டில் அவர்களுடன் தயவில் பாராளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றுவதே அவர்களுக்கு லாபமான ஒன்று தான்.

இன்றும் நடைபெறும் இளங்கோவன் போன்றோர் மீனவ படுகொலைக்கு வாய்திறக்காமல் இருப்பது தொடர்ந்து கொண்டு இருக்கிறது, ஈழம் போன்றவற்றில் காங்கிரசின் நடைமுறைகள் வெறுப்பையே ஏற்படுத்தி இருக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட தேர்தல் தோல்வியின் பாடம். கருணாநிதியிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் இளங்கோவன் சென்ற முறை கூட்டணியில் இடம் பெற்ற போது ஜெவிடம் பங்கு கேட்டதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இரண்டு திராவிடக் கட்சிகளுமே காங்கிரசை கழட்டி விடுவது நல்லது. ஆனாலும் கிடைத்த வரையில் லாபம் என்பதான தமிழக அரசியல் சூழலில் அதுவும் நடைபெறாது என்பதால் இளங்கோவன் போன்றோர் தமிழ்நாட்டில் எந்த திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் வாய்ச்சொல் பேசிக் கொண்டு தான் இருப்பார், அது அவர்களின் இருப்பை நிருபனம் செய்யச் பேசும் வெறும் சவடால் தான்.

ஒரு மைனாரிட்டி (மத்திய) அரசைச் சார்ந்தவர் மற்றொரு (மாநில)மைனாரிட்டி ஆட்சியை 'மைனாரிட்டி அரசு' என்று சுட்டுவது சரியான நகை முரண்.

3 ஆகஸ்ட், 2010

திரு சங்கரபாண்டி மற்றும் திரு நைஜீரியா இராகவன்

சென்ற கிழமை வியாழன் பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்த தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவரும், பதிவரும், அன்பு அண்ணனுமான திரு சங்கரபாண்டியை மாலை மங்கிய பின் சிங்கைப் பதிவர்கள் குழுவினர் சந்தித்தோம். முறைப்படியான அறிவிப்புகள் இன்மை மற்றும் வேலை நாள் என்பதால் சிலரால் கலந்து கொள்ள இயலாத சூழலிலும் 12 பதிவர்களாக சங்கரபாண்டியை சந்தித்தோம்.

40 வயதிற்குற்பட்ட பதிவர்கள் முதன் முதலில் இவரைப் பார்க்கும் போது அண்ணன் என்று அழைக்கத் தோன்றும் அளவுக்கு நெருக்கும் உணர்த்தும் முகம். வெகு இயல்பாக அனைவரையும் விசாரித்துப் பழகினார். 'தமிழ்மணம் சேவையை வாசகர்கள் புனிதமாகக் கருதி நிர்வாகிகளை எட்டி நின்று பார்க்க வேண்டும் என்பது போன்ற தமிழ்மண அறிவிப்புகள்' குறித்து முகவை இராம் கேட்டதும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியான ஆதாரமில்லாத (தமிழ் மணம் ஐபி தகவல்களை வெளியிட்டதாக கிளப்பிவிட்ட) குற்றச்சாட்டுகளைக் கூறும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அதுபோன்று எழுதிவிட நேரிட்டது, சேவை என்று வந்துவிட்டால் பிறகு பாராட்டும் தூற்றலும் ஒன்று தான் என்கிற மனநிலைக்கு வந்திருக்க வேண்டும், மாற்றிக் கொள்கிறோம் என்பதாக இசைந்தார்.

வேலை - உணவு - உறக்கம் - இல்லம் இந்த சூழலுடன் சமூகச் சேவை என்பதாக தமிழ் சமூகத்திற்கு தன்னுடைய பங்களிப்பை அளிப்பவர்கள் பலர் அதில் அண்ணன் சங்கரபாண்டியும் குறிப்பிடத்தக்கவர். பெட்னாவிழாவிற்கு தெருக்கூத்து குழுவை அமெரிக்கா அழைத்துச் சென்றதில் ஏற்பட்ட தடைகள் அதனை வெற்றிகரமாகக் கடந்து நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதை சங்கர பாண்டியண்ணன் விவரிக்கும் போது அனைவருக்கும் விழிகள் விரிந்தன. அன்று இரவு அருகே இருந்த அஞ்சப்பர் உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு இரவு 10:30 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம், மறுநாள் வேலை நாள் என்பதால் நெடிய உரையாடல்களுக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. தமிழ் மணத்தில் புதிய பகுதி ஒன்றிற்கான வேண்டுகோள் வைத்தோம். செய்யவதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி இருக்கிறார். திரு சங்கரபாண்டி அண்ணனை சந்தித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

*****

சென்ற கிழமை சனி பொன் மாலை வேளையில் சிங்கைக்கு இல்லத்தினருடன் வந்திருந்த அடுத்த அண்ணன் திரு நைஜிரியா இராகவன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இங்கும் சற்றேறக் குறைய 12 பதிவர்கள் அண்ணனை எதிர்கொண்டார்கள். 'டேய்...... ஒக்காள ஓழி' என்று நெருங்கிய நண்பர்களை உரிமையுடன் கடிமொழியில் அழைத்தே பாசம் காட்டுபவர் அண்ணன் இராகவன். அன்று பகல் முழுவதும் பறவைகள் பூங்காவில் ஜோசப் பால்ராஜ். மற்றும் வெற்றி கதிரவன் ஆகியோருடன் சென்று வந்திருந்தார் இராகவன். அன்று மதியம் சிங்கை நாதன் வீட்டில் உணவாம். நல்ல அலைச்சலில் வந்திருந்தாலும் உற்சாகமாகப் பேசினார் அண்ணன். நைஜிரிய அனுபவங்களைக் கூறினார். 'உங்க ஊரில் மட்டும் ஜனாதிபதி, பிரமதரெல்லாம் வாரிசுகளுக்கு மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை சிக்கலில் வைத்துவிட்டு செத்துப் போய்விடுகிறார்கள் என்று மின் அஞ்சல் வருகிறதே?' என்று யாரோ நகைச்சுவைக்காக மடக்க, அது எங்க ஊரில் இல்லை யூகே அல்லது சோமாலியா போன்ற நாடுகளில் தான் அவ்வாறு வருகிறது என்றார். நைஜிரியாவில் பாதுகாப்பான நகர்களும் இருக்கின்றனவாம், அனைத்து வசதிகளும் கொடுத்து நல்ல ஊதியம் கொடுக்கிறார்கள் என்றார்.

அன்றைய சந்திப்பு பதிவர் ஜோ என்கிற ஜோஸ் பெனிடிக்டும் (லாடு லபக்கு தாஸ் என்ற பெயரில் பதிவு வைத்திருப்பவர்) வந்திருந்தார். ஏனைய பதிவர்களுடன் இரண்டு மணி நேரம் கலகப்பாகப் போனது. மறுநாள் அண்ணன் இராகவன் தங்கிருந்த விடுதிக்கு சென்று சந்தித்து இல்லத்தினருடன் உணவருந்திவிட்டு வந்தேன். வம்பு தும்புகளில் கை வைக்காமல் எழுதும் பதிவர்களின் அண்ணன் நைஜிரியா இராகவனும் ஒருவர். ஒரு இடத்திற்குச் செல்லும் போது நமக்கு அங்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணும் பதிவர்கள் குறைவு தான். பலர் சிங்கை வந்தாலும் யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டு பிறகு சென்றேன் என்று பதிவு எழுதும் போது கொஞ்சம் மனதுக்கு வருத்தமாக இருக்கும், அடடா இவர்களையெல்லாம் பார்க்க எண்ணி இருந்தோமே...ன்னு தோணும். சிங்கைக்குச் சுற்றுலாவிற்கு வந்ததே சிங்கையில் நெருங்கிய பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்களையும் பார்த்து செல்லலாம் என்கிற எண்ணத்தில் தான் அண்ணன் இராகவன் சிங்கைக்கு வந்திருக்கிறார். அவரது எண்ணத்தை ஓரளவு முழுமை செய்தோம் என்று நினைக்கிறேன்.

******
சிங்கைப் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்த இந்த இரண்டு அன்பு உள்ளங்களைச் சந்தித்தது எங்கள் அனைவருக்குமே மிக்க மகிழ்ச்சியாக அமைந்தது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்