பின்பற்றுபவர்கள்

16 ஜூலை, 2010

ஆண்டி மடமும் தமிழக காங்கிரசும் !

ஆண்டுக்கு ஒரு முறை காமராசர் பிறந்த நாளின் போதும், தமிழக, பாராளுமன்ற தேர்தலின் போதும் தமிழகத்தில் காங்கிரசு என்கிற ஒரு பழம்பெருமை பண்ணையார் கட்சி ஒன்று இருப்பது அறிய வரும், ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் குழும அளவுப்படி குறிப்பிட்ட நாளில் பல்வேறு வேளைகளில் காமராசர் கழுத்தில் மாலைகள் விழும், எல்லோரும் சேர்ந்து வந்து மாலை அணிவித்திருந்தால் காமராசருக்கு ஒரே ஒரு மாலை தான் கிடைத்திருக்கும், ஆக காமாராசர் கழுத்தில் விழுந்த மலைபோல் மாலைகள் விழுந்திருந்தால் அவ்வளவு குழுமங்கள் காங்கிரசில் இருக்கிறது என்பது பொருள். வழக்கமாக காமராசருக்கும் கிடைக்கும் மாலைகளின் எண்ணிக்கைகள் வெகுவாக குறைந்திருக்கிறது இந்த ஆண்டு, காரணம் வாசன், இளங்கோவன், தங்கபாலு ஒன்றாக இணைந்து காமராசருக்கு மாலை அணிவித்தார்களாம், அப்போ காமராசருக்கு ஒரு மாலை தானோ என்னவோ ?

தமிழத்தில் தோன்றிய கட்சிகள் என்று எதுவும் இல்லாத நிலையில் பெரியார் போன்றோர் தேசிய கட்சியான காங்கிரசை சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், சூழல்களால் பின்பும் ஆதரித்த நிலையில் காமராசர் காலத்தில் தமிழகத்தில் காங்கிரசு இருந்தது. தமிழக காங்கிரசின் தலைவராக தந்தைப் பெரியாரும் இருந்திருக்கிறார் என்பதை காங்கிரசின் இணையத்தளத்தில் இருக்கும் பட்டியல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் இருந்த ஒரே கட்சி என்பதாக திராவிடக் கழகங்களுக்கு முன்பு வேறு வழியில்லாமல் காங்கிரசின் வசம் தமிழ்நாட்டைக் கொடுத்து இருந்தனர் தமிழக மக்கள், காமராசர் போன்ற தலைவர்கள் இருந்தும் தமிழர்கள் நலனை முற்றிலுமாக புறக்கணித்து தமிழர் மொழி அடையாளங்களை முற்றிலுமாக புறக்கணித்த சூழலில் இந்தி எதிர்ப்பு என்னும் போராட்டத்திற்கு பிறகு தமிழகத்திற்கு பண்ணையார் முறை ஆட்சியாளர்கள் தேவை இல்லை என்பதாக தமிழக மக்களால் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டது, தமிழர் நலனை முன்னிறுத்தியும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் மூலமாக மக்கள் செல்வாக்கு பெற்ற அண்ணாவும் அவருக்கு பிறகு திராவிடக் கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் தேசியவாத சக்திகளை முற்றிலுமாக துடைத்த நிலையில், இடையில் திமுக - அதிமுக பிளவிற்கு பிறகு தற்போது பாமக எடுக்கும் தேர்தல்காலக் கூட்டணிகளாக இந்தக் கட்சிகளின் முதுகில் மாறி மாறி சவாரி செய்தது காங்கிரஸ். இன்று வரை அதே நிலைதான். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு இன்று வரை தமிழக காங்கிரசில் மக்கள் செல்வாக்கு எந்த விதத்திலும் கூடவில்லை, ஒரே ஒரு முறை திமுக தனியாக நிற்க, ஜெ, ஜா அணிகள் தனித்தனியாக நிற்க, மூப்பனாரின் தலைமையில் காங்கிரசும் தனித்தனியாக நிற்க, 30, 25,20, 25 என்ற வாக்காள விழுக்காடுகளில் காங்கிரஸ் 25 இடங்களை பெற்றது, காங்கிரசின் குறைந்த பட்ச அதிகப்பட்ச அளவுகள் தமிழகத்தைப் பொறுத்த அளவில் 25 இடங்களே, அது கூடி இருக்கிறதா என்று பார்க்க அதன் பிறகு எந்த வித தற்கொலை முடிவுகளும் எடுக்கப்பட்டவில்லை, குதிரை சவாரி மட்டுமே.

தற்போதைய தமிழகத்தில் கொள்கையளவிலும், செயல்பாட்டு அளவிலும் திராவிடக்கட்சிகள் நீர்த்துப் போனப்படியால் திராவிடக் கட்சிகள் தனித்தனியாக நின்றால் வெற்றிபெறமுடியாது, கூட்டணியாக நின்றாலும் கூட பலமான கூட்டணி என்கிற நிலையில் தான் வெற்றி பெற முடியும் என்பதே கடந்த 15 ஆண்டுகளாக தமிழக தேர்தல் நிலை, இதற்கிடையே தமிழக வாக்களர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து பாமக, தேமுதிக என பிரிந்துவிட்டப்படியால் கூட்டணி என்பதில் இவர்களுடன் ஆன பலமான கூட்டணி வெற்றிபெரும் என்ற நிலையில் தான் தேர்தல்கள் நடந்துவருகிறது, இது தமிழக வாக்களர் சூழல், பாமக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளின் ஆதரவாளர்கள் அனைவருமே திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது, அதில் குறிப்பிட்ட அளவு காங்கிரசு ஆதரவாளர்களும் உண்டு, அதிலும் சாதிக்கட்சியான பாமகவிலும், சாதிகட்சி என்று மறைமுகமாகச் சொல்லப்படுகின்ற தேமுதிகவிலும் அதை ஆதரிக்கும் குறிப்பிட்ட அளவு சாதிய வாக்களர்கள் அவர்கள் முன்பு காங்கிரசை ஆதரத்தவர்களாக இருக்கக் கூடும், அதாவது காங்கிரசில் மட்டுமே சாதி உணர்வாளர்கள் அற்ற கட்சி என்று சொல்லிவிடமுடியாது. இந்த நிலையில் காங்கின் தனிச் செல்வாக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு கனிசமாக குறைந்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். காங் தனித்து தேர்தலில் நின்றால் இவை வெட்ட வெளிச்சமாகிவிடும். அவர்களுக்குத் தேவை மத்திய அரசு ஆதரவு என்பதால் அத்தகைய தற்கொலை முயற்சியில் அவ்ர்கள் ஈடுபடவும் மாட்டார்கள்.

இவையெல்லாம் வாசனுக்கோ, தங்கபாலுவுக்கோ, இளங்கோவனுக்கோ தெரியாதா என்ன ? பிரிந்தவர் கூடினால் பேசவும் வருமோ என்பதைப் போல இவர்கள் ஒன்றாக சேரும் போது பொதுவாகப் பேசிக் கொள்ள மூன்றே பெயர்கள் தான் உள்ளன, அன்னை சோனியா, இராகுல் காந்தி, காமராசர். ஆண்டிகள் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவில் சத்திரத்தில் கூடும் போது
நாம இப்படியே கண்ட இடத்திலும் படுப்பது சரி இல்லை, நமக்கென்று ஒரு இடம் வேண்டும், நாம எல்லோரும் சேர்ந்து தனி இடம் கட்டிக் கொள்வோம் என்று உறுதி எடுப்பார்களாம், மறுநாள் வழக்கம் போல் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிடுவார்களாம்.

2 கருத்துகள்:

Kesavan சொன்னது…

//காங் தனித்து தேர்தலில் நின்றால் இவை வெட்ட வெளிச்சமாகிவிடும் //
மற்ற கட்சிகளுக்கும் அதே நிலை தான் :)

//அதன் பிறகு எந்த வித தற்கொலை முடிவுகளும் எடுக்கப்பட்டவில்லை, குதிரை சவாரி மட்டுமே.//
இவங்க மட்டும் தான் குதிரை சவாரியா ? இன்று ஆளும் கட்சியான திமுக காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சொல்லட்டுமே . அம்மா இன்று வரை காங்கிரஸ் கூட்டணிக்காக காத்து கொண்டிருக்கிறார். எல்லா கட்சிகளும் குதிரை சவாரிதான் .

ஜோதிஜி சொன்னது…

ஆண்டிகள் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவில் சத்திரத்தில் கூடும் போது
நாம இப்படியே கண்ட இடத்திலும் படுப்பது சரி இல்லை, நமக்கென்று ஒரு இடம் வேண்டும், நாம எல்லோரும் சேர்ந்து தனி இடம் கட்டிக் கொள்வோம் என்று உறுதி எடுப்பார்களாம், மறுநாள் வழக்கம் போல் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிடுவார்களாம்.

எதார்த்தம் சிரிக்க வைத்து விட்டது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்